– ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு.கடந்த முப்பது ஆண்டுகளில் 4094 நான்கு (கணக்கு வைத்திருக்கிறேன் என்கிறார்) பாம்புகளைப் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார் பழனியில் வசித்து வரும் நடராஜன். எங்கேனும் வீடுகளில், கடைகளில், அலுவலகங்களில் ஏதேனும் ஒரு பாம்பு வந்து புகுந்து விட்டால் போதும். பழனி நகர மக்கள், "கூப்பிடுங்க அந்த ஹலோ டெய்லர் நடராஜனை" என்று தான் பேசிக் கொள்வார்கள். உடனே போன் கால் அவருக்குப் பறக்கும். குறிப்பிட்ட இடத்துக்கு இரண்டு மஞ்சள் பையுடன் வந்து விடுவார் நடராஜன். அவருக்கு வயது ஐம்பத்தியெட்டு..அடிப்படையில் நீங்க ஒரு டெய்லரா?.ஆம். என் வாழ்க்கையை ஒரு டெய்லராகத்தான் தொடங்கினேன். முப்பது ஆண்டுகள் பழனியில் "ஹலோ டெய்லர்" என்கிற பெயரில் ஒரு தையல் கடை வைத்து நடத்தினேன். பதினைந்து ஆண்டுகளாக அந்தத் தொழிலில் நான் இல்லை. பதினைந்து ஆண்டுகளாக நான் ரியல் எஸ்டேட் தொழிலில் இருந்து வருகிறேன். பழனி நகராட்சியில் முப்பத்தி மூன்றாவது வார்டு நகரமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறேன். எப்படி இருந்தாலும் நான் கடந்த முப்பது ஆண்டுகளாக பொது மக்கள் பார்த்து பயப்படும் பாம்புகள் பிடித்து அப்படியே வனத்துறையினரிடம் ஒப்படைத்து வருகிறேன். இதற்கென சம்பந்தப்பட்ட வீடுகளிலோ கடைகளிலோ ஆபீஸ்சிலோ கடைசியாகக் கொண்டு போய் விடும் வனத்துறையிடமோ பணம் காசு எதுவுமே நான் பெற்றுக் கொள்வதில்லை. இதனை ஒரு தொண்டூழியமாகவே செய்து வருகிறேன்..பாம்பு பிடிக்க எங்கே கற்றுக் கொண்டீர்கள்? யார் கற்றுத் தந்தார்கள்?.எனக்கு இருபது வயதாக இருக்கும் போது, கேரளாவில் இருந்து ஒருவர் பழனி மலையடிவாரத்தில் தங்கியிருந்தார். அவரிடம் அவ்வப்போது சென்று பேசிக் கொண்டிருப்பேன். பாம்புகளை அடிக்காமலும் அவைகள் நம்மைக் கொத்தாமலும் பிடிப்பது எப்படி என்று ஒரு ரகசியக் காப்புப் பிரமாணமாக அவர் தான் எனக்குக் கற்றுத் தந்தார். ஒரு வீட்டிலோ கடையிலோ பாம்பு புகுந்து விட்டால் உடனே எல்லோரும் வெளியே ஓடி வந்து விடுவார்கள். அந்தச் சூழ்நிலையில் நான் துணிந்து உள்ளே சென்று பார்ப்பேன். நான் அங்கு போனதுமே அந்த இடத்துக்குள் பாம்பு எந்தத் திசையில் பதுங்கி உள்ளது என்பது எனக்குத் தெரிந்துவிடும். இங்கு நான் பிடிக்கும் பாம்புகளை பழனி வனத்துறையிடம் ஒப்படைத்து விடுவேன். அவர்கள் இங்கிருந்து அறுபது கிலோ மீட்டர் தூரத்தில் கொடைக்கானல் மலைப்பகுதியில் விட்டு விடுவார்கள்..பாம்பு பிடிக்க மஞ்சள் துணிப்பை எதுக்குங்க?.பாம்புகளுக்கு வெள்ளை வண்ணத் துணியும் கறுப்புக் கலர்த் துணியும் வெறுப்பினைத் தரும். அருகிலே கொண்டு சென்றால் சீற்றம் கொள்ளும். மஞ்சள் துணிப்பையினை பாம்புகளின் மிக அருகே கொண்டு செல்வேன். அப்படியே அதன் கழுத்துப் பகுதியினைப் பிடித்து விடுவேன். உடனே பாம்பின் வால் பகுதியையும் பிடித்து விடுவேன். எத்தனை நீளமான எத்தனைப் பருமனான பாம்புகள் என்றாலும் பிடித்து விடுவேன்..இதுவரையில் நீங்கள் பிடித்த பாம்புகளில் உங்களால் மறக்க முடியாதது எது?.பழனி மலைக்கு மேலே அன்னதானக் கூடத்துக்குக் கீழே ஒரு மலைப்பாம்பு வந்து புகுந்து கொண்டது. எனக்குத் தகவல் வந்தது. துணைக்கு இருவரை கூப்பிட்டேன். அவர்கள் யோசித்தார்கள். மலைத்தார்கள். பின்னர் நான் ஒரு ஆளே சென்று அந்த மலைப் பாம்பினைப் பிடித்து விட்டேன்..அது பதினைத்து அடி நீள மலைப்பாம்பு ஆகும். அந்த மலைப்பாம்பினை மக்கள் நிறைய பேர் வேடிக்கை பார்த்தனர். பழனி தேவஸ்தான அலுவலகம் அதனை வனத்துறையிடம் சேர்ப்பித்தனர். வழக்கம் போல் கொடைக்கானல் மலைப் பகுதியில் கொண்டு சென்று விட்டு விட்டனர்..பாம்பு கடித்து விட்டால் அவருக்கு முதலுதவி என்ன? அவரை எப்படி காப்பாற்றுவது?.கட்டுவிரியன் பாம்புகளில் இரண்டு வகை இருக்கு. சாரைப்பாம்புகளில் நான்கு வகை இருக்கு. நல்ல பாம்புகளில் மூன்று வகை இருக்கு. பொதுவாக கட்டுவிரியன் பாம்பு கடித்தால் ஆள் ஸ்பாட் அவுட். ஒன்னும் செய்ய முடியாது. குப்பைகளில் கட்டுவிரியன் பாம்புகள் இருக்கும். அதே நேரத்தில் நல்ல பாம்பு ஒருவரைக் கடித்து விட்டால் அவருக்கு முதலுதவி சிகிச்சை செய்து ஒரு மணி நேரத்துக்குள் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டால் போதும். அவர் உயிரைக் காப்பாற்றி விடலாம். நம்முடைய அரசு மருத்துவமனைகளில் நல்ல பாம்பு விஷ முறிவு ஊசி மருந்துகள் உள்ளன. எந்த வகை பாம்பு ஒருவரைக் கடித்து விட்டாலும் நாம் உடனே செய்ய வேண்டிய முதலுதவிகள் இரண்டு உள்ளன. முதலாவது, தோட்டத்தில் உள்ள வாழை மரத்தின் துணைக் கன்றினை வெட்டி பாம்பு கடி வாயில் அதனை வைத்து அழுத்திக் கொண்டிருக்க வேண்டும். அந்த வாழை துணைக் கன்றானது பாம்பு கடி வாயில் உள்ள விஷத்தை உறிஞ்சிக் கொண்டே இருக்கும். பாம்பு விஷம் உடலுக்குள் பரவாமல் தடுக்கும். மருத்துவமனைக்கு வந்தவுடன் அந்த வாழைக் கன்றினை எடுத்து விட்டு சிகிச்சை செய்யலாம்..அடுத்து இரண்டாவது முதலுதவி, கோழியின் ஆசன வாயினை வெட்டி (அப்போது கோழி இறந்து விடும்), அதனை பாம்பு கடி வாயில் வைத்துக் கொண்டிருக்க வேண்டும். அதுவும் பாம்பு விஷத்தினை உறிஞ்சும். அரசு மருத்துவமனைக்குச் சென்றவுடன் அதனை நீக்கி விடலாம். மேற்கண்ட இரண்டு வகையான முதலுதவிகளும் பாம்பு கடித்த ஒரு நபரை உடனடி ஆபத்தில் இருந்து காப்பாற்றி கை கொடுக்கும்..பாம்புகள் ஒரு வீட்டுக்குள்ளோ ஒரு குறிப்பிட்ட இடத்துக்குள்ளோ உள்ளே வராமல் இருக்க இயற்கை தெளிப்பான் எதுவும் இல்லையா?.இயற்கை தெளிப்பான் உண்டு. அதனை நாம் தான் தயாரித்துக் கொள்ள வேண்டும். கேட்பவர்களுக்கு நானே தயாரித்தும் அனுப்பி வைக்கிறேன். கத்திரி மஞ்சள் பூலாங்கிழங்கு பவுடர் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) நூறு கிராம், கற்பூரவள்ளி, வெற்றிலை கால் கிலோ, வெள்ளைப் பூண்டு கால் கிலோ, பெருங்காயத்தூள் நூறு கிராம் இவைகளை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். இவைகளை ஐம்பது லிட்டர் தண்ணீரில் கரைக்க வேண்டும். நூறு கிராம் கற்பூரப் பவுடரினை அதனுள் விட்டு நன்கு கலக்க வேண்டும். இந்த ஐந்தும் சேர்ந்த கலவை தான் பாம்புகளை அந்தக் குறிப்பிட்ட இடத்துக்குள்ளே வர விடாமல் தடுக்கும் இயற்கை தெளிப்பான் ஆகும். இந்த அளவினை சுமார் மூவாயிரம் சதுர அடி வீட்டுக்கு வெளியே சுற்றிலும் மண் தரையில் தெளித்து விட வேண்டும். இதனைத் தெளித்து விட்ட இடத்தின் உள்ளே எந்தப் பாம்புகளும் உள்ளே வராது. வெயில் மழை எந்தக் காலமாக இருந்தாலும் இந்த இயற்கை தெளிப்பான் குறைந்தபட்சமாக ஆறு மாதங்களுக்கு அதன் தன்மை மாறாது. பாம்புகளை அடிக்காதீர்கள். அவைகளைப் பிடித்து வனத்துறையிடம் உடனே ஒப்படைத்து விடுங்கள்.
– ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு.கடந்த முப்பது ஆண்டுகளில் 4094 நான்கு (கணக்கு வைத்திருக்கிறேன் என்கிறார்) பாம்புகளைப் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார் பழனியில் வசித்து வரும் நடராஜன். எங்கேனும் வீடுகளில், கடைகளில், அலுவலகங்களில் ஏதேனும் ஒரு பாம்பு வந்து புகுந்து விட்டால் போதும். பழனி நகர மக்கள், "கூப்பிடுங்க அந்த ஹலோ டெய்லர் நடராஜனை" என்று தான் பேசிக் கொள்வார்கள். உடனே போன் கால் அவருக்குப் பறக்கும். குறிப்பிட்ட இடத்துக்கு இரண்டு மஞ்சள் பையுடன் வந்து விடுவார் நடராஜன். அவருக்கு வயது ஐம்பத்தியெட்டு..அடிப்படையில் நீங்க ஒரு டெய்லரா?.ஆம். என் வாழ்க்கையை ஒரு டெய்லராகத்தான் தொடங்கினேன். முப்பது ஆண்டுகள் பழனியில் "ஹலோ டெய்லர்" என்கிற பெயரில் ஒரு தையல் கடை வைத்து நடத்தினேன். பதினைந்து ஆண்டுகளாக அந்தத் தொழிலில் நான் இல்லை. பதினைந்து ஆண்டுகளாக நான் ரியல் எஸ்டேட் தொழிலில் இருந்து வருகிறேன். பழனி நகராட்சியில் முப்பத்தி மூன்றாவது வார்டு நகரமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறேன். எப்படி இருந்தாலும் நான் கடந்த முப்பது ஆண்டுகளாக பொது மக்கள் பார்த்து பயப்படும் பாம்புகள் பிடித்து அப்படியே வனத்துறையினரிடம் ஒப்படைத்து வருகிறேன். இதற்கென சம்பந்தப்பட்ட வீடுகளிலோ கடைகளிலோ ஆபீஸ்சிலோ கடைசியாகக் கொண்டு போய் விடும் வனத்துறையிடமோ பணம் காசு எதுவுமே நான் பெற்றுக் கொள்வதில்லை. இதனை ஒரு தொண்டூழியமாகவே செய்து வருகிறேன்..பாம்பு பிடிக்க எங்கே கற்றுக் கொண்டீர்கள்? யார் கற்றுத் தந்தார்கள்?.எனக்கு இருபது வயதாக இருக்கும் போது, கேரளாவில் இருந்து ஒருவர் பழனி மலையடிவாரத்தில் தங்கியிருந்தார். அவரிடம் அவ்வப்போது சென்று பேசிக் கொண்டிருப்பேன். பாம்புகளை அடிக்காமலும் அவைகள் நம்மைக் கொத்தாமலும் பிடிப்பது எப்படி என்று ஒரு ரகசியக் காப்புப் பிரமாணமாக அவர் தான் எனக்குக் கற்றுத் தந்தார். ஒரு வீட்டிலோ கடையிலோ பாம்பு புகுந்து விட்டால் உடனே எல்லோரும் வெளியே ஓடி வந்து விடுவார்கள். அந்தச் சூழ்நிலையில் நான் துணிந்து உள்ளே சென்று பார்ப்பேன். நான் அங்கு போனதுமே அந்த இடத்துக்குள் பாம்பு எந்தத் திசையில் பதுங்கி உள்ளது என்பது எனக்குத் தெரிந்துவிடும். இங்கு நான் பிடிக்கும் பாம்புகளை பழனி வனத்துறையிடம் ஒப்படைத்து விடுவேன். அவர்கள் இங்கிருந்து அறுபது கிலோ மீட்டர் தூரத்தில் கொடைக்கானல் மலைப்பகுதியில் விட்டு விடுவார்கள்..பாம்பு பிடிக்க மஞ்சள் துணிப்பை எதுக்குங்க?.பாம்புகளுக்கு வெள்ளை வண்ணத் துணியும் கறுப்புக் கலர்த் துணியும் வெறுப்பினைத் தரும். அருகிலே கொண்டு சென்றால் சீற்றம் கொள்ளும். மஞ்சள் துணிப்பையினை பாம்புகளின் மிக அருகே கொண்டு செல்வேன். அப்படியே அதன் கழுத்துப் பகுதியினைப் பிடித்து விடுவேன். உடனே பாம்பின் வால் பகுதியையும் பிடித்து விடுவேன். எத்தனை நீளமான எத்தனைப் பருமனான பாம்புகள் என்றாலும் பிடித்து விடுவேன்..இதுவரையில் நீங்கள் பிடித்த பாம்புகளில் உங்களால் மறக்க முடியாதது எது?.பழனி மலைக்கு மேலே அன்னதானக் கூடத்துக்குக் கீழே ஒரு மலைப்பாம்பு வந்து புகுந்து கொண்டது. எனக்குத் தகவல் வந்தது. துணைக்கு இருவரை கூப்பிட்டேன். அவர்கள் யோசித்தார்கள். மலைத்தார்கள். பின்னர் நான் ஒரு ஆளே சென்று அந்த மலைப் பாம்பினைப் பிடித்து விட்டேன்..அது பதினைத்து அடி நீள மலைப்பாம்பு ஆகும். அந்த மலைப்பாம்பினை மக்கள் நிறைய பேர் வேடிக்கை பார்த்தனர். பழனி தேவஸ்தான அலுவலகம் அதனை வனத்துறையிடம் சேர்ப்பித்தனர். வழக்கம் போல் கொடைக்கானல் மலைப் பகுதியில் கொண்டு சென்று விட்டு விட்டனர்..பாம்பு கடித்து விட்டால் அவருக்கு முதலுதவி என்ன? அவரை எப்படி காப்பாற்றுவது?.கட்டுவிரியன் பாம்புகளில் இரண்டு வகை இருக்கு. சாரைப்பாம்புகளில் நான்கு வகை இருக்கு. நல்ல பாம்புகளில் மூன்று வகை இருக்கு. பொதுவாக கட்டுவிரியன் பாம்பு கடித்தால் ஆள் ஸ்பாட் அவுட். ஒன்னும் செய்ய முடியாது. குப்பைகளில் கட்டுவிரியன் பாம்புகள் இருக்கும். அதே நேரத்தில் நல்ல பாம்பு ஒருவரைக் கடித்து விட்டால் அவருக்கு முதலுதவி சிகிச்சை செய்து ஒரு மணி நேரத்துக்குள் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டால் போதும். அவர் உயிரைக் காப்பாற்றி விடலாம். நம்முடைய அரசு மருத்துவமனைகளில் நல்ல பாம்பு விஷ முறிவு ஊசி மருந்துகள் உள்ளன. எந்த வகை பாம்பு ஒருவரைக் கடித்து விட்டாலும் நாம் உடனே செய்ய வேண்டிய முதலுதவிகள் இரண்டு உள்ளன. முதலாவது, தோட்டத்தில் உள்ள வாழை மரத்தின் துணைக் கன்றினை வெட்டி பாம்பு கடி வாயில் அதனை வைத்து அழுத்திக் கொண்டிருக்க வேண்டும். அந்த வாழை துணைக் கன்றானது பாம்பு கடி வாயில் உள்ள விஷத்தை உறிஞ்சிக் கொண்டே இருக்கும். பாம்பு விஷம் உடலுக்குள் பரவாமல் தடுக்கும். மருத்துவமனைக்கு வந்தவுடன் அந்த வாழைக் கன்றினை எடுத்து விட்டு சிகிச்சை செய்யலாம்..அடுத்து இரண்டாவது முதலுதவி, கோழியின் ஆசன வாயினை வெட்டி (அப்போது கோழி இறந்து விடும்), அதனை பாம்பு கடி வாயில் வைத்துக் கொண்டிருக்க வேண்டும். அதுவும் பாம்பு விஷத்தினை உறிஞ்சும். அரசு மருத்துவமனைக்குச் சென்றவுடன் அதனை நீக்கி விடலாம். மேற்கண்ட இரண்டு வகையான முதலுதவிகளும் பாம்பு கடித்த ஒரு நபரை உடனடி ஆபத்தில் இருந்து காப்பாற்றி கை கொடுக்கும்..பாம்புகள் ஒரு வீட்டுக்குள்ளோ ஒரு குறிப்பிட்ட இடத்துக்குள்ளோ உள்ளே வராமல் இருக்க இயற்கை தெளிப்பான் எதுவும் இல்லையா?.இயற்கை தெளிப்பான் உண்டு. அதனை நாம் தான் தயாரித்துக் கொள்ள வேண்டும். கேட்பவர்களுக்கு நானே தயாரித்தும் அனுப்பி வைக்கிறேன். கத்திரி மஞ்சள் பூலாங்கிழங்கு பவுடர் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) நூறு கிராம், கற்பூரவள்ளி, வெற்றிலை கால் கிலோ, வெள்ளைப் பூண்டு கால் கிலோ, பெருங்காயத்தூள் நூறு கிராம் இவைகளை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். இவைகளை ஐம்பது லிட்டர் தண்ணீரில் கரைக்க வேண்டும். நூறு கிராம் கற்பூரப் பவுடரினை அதனுள் விட்டு நன்கு கலக்க வேண்டும். இந்த ஐந்தும் சேர்ந்த கலவை தான் பாம்புகளை அந்தக் குறிப்பிட்ட இடத்துக்குள்ளே வர விடாமல் தடுக்கும் இயற்கை தெளிப்பான் ஆகும். இந்த அளவினை சுமார் மூவாயிரம் சதுர அடி வீட்டுக்கு வெளியே சுற்றிலும் மண் தரையில் தெளித்து விட வேண்டும். இதனைத் தெளித்து விட்ட இடத்தின் உள்ளே எந்தப் பாம்புகளும் உள்ளே வராது. வெயில் மழை எந்தக் காலமாக இருந்தாலும் இந்த இயற்கை தெளிப்பான் குறைந்தபட்சமாக ஆறு மாதங்களுக்கு அதன் தன்மை மாறாது. பாம்புகளை அடிக்காதீர்கள். அவைகளைப் பிடித்து வனத்துறையிடம் உடனே ஒப்படைத்து விடுங்கள்.