– நா.கண்ணன்.பள்ளிக் காலத்தில் எலெக்டிவ் பாடம் தேர்வு செய்வதில் ஏற்பட்ட குழப்பத்தை விளக்கியிருந்தேன். பின் கல்லூரிக் காலத்தில் எளிதாக இருக்க வேண்டிய விலங்கியல் பாடம் புதிய அறிவியல் வளர்ச்சியால் செல்லியல், ஜெனிடிக்ஸ் மற்றும் மரபியல் தொழில்நுட்பமாக மாறியபோது பாடம் சொல்லித்தரும் ஆசிரியருக்கும் குழப்பம், மாணவர்களுக்கும் குழப்பம் என்றொரு நிலை. இருவருக்குமே இப்புதிய வழித்தடங்கள் இன்னும் பிடிபடாத நிலை. இதிலெனக்குப் பிடித்த சூழலியல் 'ஈகாலஜி' என்று அழைக்கப்பட்டது. அதிலும் நிறையப் புதிய பாடங்கள். புதிய தடங்கள் உருவாக்கப்படும்போது வழிப்பயணம் எளிதாக இருக்காது என்பதைப் புரிந்துக்கொண்டேன்.மொழிப்பயிற்சியிலும் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நான் எடுத்த இளங்கலை பி.எஸ்.ஸி (ஸ்பெஷல்) என அழைக்கப்பட்டது. தமிழ் இலக்கியம் என எல்லோரும் கம்பனையும், வள்ளுவரையும் படித்தபோது பி.எஸ்ஸி (ஸ்பெஷல்) மாணவர்கள் அறிவியல் தமிழ் எனும் புதிய பாடத்தைப் படித்தனர். இதுவும் புதிது. தமிழாசிரியர் பொன்.தினகரன் இதை உற்சாகமாக எடுத்துக்கொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தினார். அதாவது நாம் படிக்கும் அறிவியலைத் தமிழில் எழுத வேண்டும். அதிவேகமாக வளரும் அறிவியலுக்கு ஈடுகொடுக்கும் அளவில் தமிழில் அறிவியல் சொற்கள் கிடையாது. அறிவியல் சொற்களஞ்சியமெல்லாம் உருவாகாத நிலை. ஆயினும் கற்ற கல்வி பாமரனுக்கும் போய்ச் சேர வேண்டும். அதற்குத்தான் அறிவியல் தமிழ். இம்முயற்சி புதிது. எனக்குத்தான் புதிய புதிய முயற்சிகள் பிடிக்குமே, எனவே, அதையொரு சவாலாக எடுத்துக்கொண்டு முயன்றேன். ஆசிரியர் பொன்.தினகரனுக்குப் பிடித்திருந்தது. நான் முன்னமே சொல்லியது போல் இளங்கலை தமிழ்ப் பாடத்தில் எனக்கு ஏ பிளஸ் கிடைத்தது. எல்லோரும் அதிசயமாகப் பார்த்தனர்..இந்த முன் முயற்சிகளுக்கு பின்னால் பலன் கிடைத்தது. 'அறிவியலைத் தமிழில் சொல்ல வேண்டும்' என்ற ஆசையும், 'சொல்ல முடியும்' எனும் தன்னம்பிக்கையும் என்னுள் பிறந்தது. இவையெல்லாம் ஏதோ எனக்காக ஏற்பட்டது போல் தோன்றுகிறது. திருப்பூவணப் பள்ளியில் எலெக்டிவ் நான் படித்த பின் எடுக்கப்பட்டு விட்டது. கல்லூரியிலும் பி.எஸ்ஸி (ஸ்பெஷல்) எங்களோடு போச்சு. அறிவியல் தமிழ் தொடரப்படவில்லை. ஆனால், அது என்னுள் ஆழமாகப் பதிந்தது. நான் பல்கலைக்கழகம் போன புதிதில் அகில இந்திய வானொலி நிலையம் எனக்கு அறிமுகமானது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நான் அறிவியலைத் தமிழில் சொல்லத் தொடங்கினேன். சூழலியலின் முக்கியத்துவம் பற்றி 70களில் பேசிய முதல் ஆள் நானாக இருந்திருப்பேன். இன்றும் பேசுகிறேன். அன்றைக்கும் இன்றைக்கும் வேறுபாடு உள்ளது. மனித அக்கறையின்மை 'எத்தகையப் பாதகங்களை விளைவிக்கும்' என்று அன்று நான் சொன்ன கருத்துக்களை இன்று நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். ஆயினும், இன்னும் இத்தொடர்புகளைத் தமிழன் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. இதற்கென பண்பாட்டு சூழலியல் எனும் புதிய துறையையே உருவாக்கி வருகிறேன். இது பற்றி பின்னால் பேசுவோம்..நமது ஆர்வத்தைப் புரிந்துகொள்ளும் நிகழ்ச்சிப் பொறுப்பாளர் அமைவது அதிசயம். எனக்கு அப்படியொருவர் திருச்சி வானொலி நிலையத்தில் கிடைத்தார். அவர்தான் ஸ்ரீநிவாச ராகவன். அவர் தொடர்ந்து எனக்கு நிகழ்ச்சிகள் தந்தார். என் ஆர்வத்தை வளர்த்தார். அவரின் இசைவிற்கு உறுதுணையாக இயக்குநர் திருவேங்கடம் அப்போது இருந்தது கூடுதல் அதிர்ஷ்டம். காலம் யந்திரம் ஒன்று உருவாக்கி அதில் பயணப்பட்டு தமிழின் சரிதம் புரிந்து கொள்வது போல் ஓர் நிகழ்ச்சியை ஐன்ஸ்டைன் நூற்றாண்டு விழாவில் செய்தேன். முதன் முறையாக அறிவியல் நிகழ்ச்சியில் இசை, பி.ஜி.எம் உருவாக்கினேன். பச்சையப்பா கல்லூரி முதல்வராக இருந்து ஓய்வு பெற்றிருக்கும் பேராசிரியர் வி.வி.சுப்பிரமணியன், அன்னை தெரசா பல்கலைக்கழக துணை வேந்தராக இருந்து ஓய்வு பெற்றிருக்கும் முனைவர் ஆனந்தவல்லி, சென்னை பாரதி கல்லூரி மேனாள் பேராசிரியை நா.செல்லம்மாள் போன்றோர் என் நிகழ்ச்சியில், என் இயக்கத்தில் அன்று நடித்தனர். நான் உருவாக்கிய தமிழ் அறிவியல் நிகழ்ச்சி ஆங்கிலத்தில் மொழியாக்கம் பெற்று அகில இந்திய அளவில் புகழ்பெற்ற நிகழ்ச்சியாக மாறிப்போனது. இதற்கெல்லாம் காரணம் பள்ளி இறுதிவரை தமிழில் பாடம் கற்றதும், பின்னால் கல்லூரியில் அறிவியல் தமிழ் கற்றதும் எனச் சொன்னால் மிகை இல்லை..தமிழ் இணையம் என்ற ஒன்று உருவானவுடன் இதே ஆர்வம் என்னை அங்கு ஈடுபடுத்தியது. இது விரிவாகப் பேச வேண்டிய விஷயம். இதை என் ஜெர்மன் வாழ்வு பற்றிப் பேசும்போது விவரிக்கிறேன். அடிப்படையாக மின்தமிழை ஆறாம்திணை என்று வரைவிலக்கணம் செய்தது, தமிழை கணனித் திரையில் காண வைத்தது, முதன் முறையாக தமிழின் இயல், இசை, நாடக வடிவங்களை "என்றுமுள தமிழ்" என இலக்கப்பதிவாக்கம் செய்தது, ஆழ்வார்களின் வண்தமிழை புதிய கோணத்தில் அறிமுகம் செய்தது, தமிழாக்கம் தமிழ் வளர்ச்சியின் மறந்துபோன பக்கங்களைக் காட்டியது, தொடர்ந்து தமிழ் சொல்லாக்கத்தில் ஈடுபடுவது போன்ற என் செயல்களுக்கும் நான் முன் சொன்ன காரணங்களே அடிப்படை..எனக்கிருந்த தமிழ் ஆர்வம் ஜே.சி.பிக்குப் புரியவில்லை. அவர்கள் எல்லாம் ஆங்கில வழியிலேயே சிந்திக்க வேண்டுமென நினைப்பவர்கள். ஆங்கிலக் கல்வியின் முக்கியத்தை எனக்குப் புகட்டிய அதே அமெரிக்கன் கல்லூரி என தமிழ் வேர்களையும் எனக்குக் காட்டத் தவறவில்லை. பிரணதார்த்திஹரன் எனும் தமிழ் ஆசான், சாலமன் பாப்பையா எனும் பல்கலை வித்தகர், பொன்.தினகரன் எனும் அன்பான தமிழாசிரியர் இவர்கள் என்னுள் ஆழமாகத் தமிழ் விதையை விதைத்தனர். ஆங்கிலத்துறை என்றாலும் ஆசிரியர் நெடுமாறன் அவர்களின் தமிழ்ப்பணி கவனம் கொள்ள வேண்டியது..உண்மையில் தமிழில் அறிவியலைச் சொல்ல முடியும் என்று உயர் கல்வி மட்டத்தில் எடுக்கப்பட்ட ஓர் முயற்சி மேனாள் துணைவேந்தர் வ.சுப.மாணிக்கம் காலத்தில் மதுரைப் பல்கலைக்கழகத்தில் நடந்தது. இதற்கென ஓர் ஆய்விதழ் உருவானது. அதன் முதல் இதழில் என் முனைவர் பட்டப்படிப்பு ஆய்வைத் தமிழில் சொல்லுமாறு மேனாள் துறைத்தலைவர், பின்னால் பல்கலைக்கழகத் துணைவேந்தார் கிருஷ்ணசாமி அவர்கள் பணித்தனர். நான் மேற்படிப்பிற்குச் சென்ற ஜப்பான், கொரியா, ஜெர்மனி போன்ற நாடுகளில் அறிவியல் அவரவர் தாய்மொழியில்தான் நடைபெறுகிறது. ஆனால், முன்னாள் ஆங்கிலக் காலனியான இந்தியாவில் தாய்மொழிக் கல்வி பற்றி வலிந்து பேச வேண்டியுள்ளது. அறிவியல் உயர்க் கல்வி மொழி என்பது ஆங்கிலம் மட்டுமே என்பதே இன்றுவரை நிலைமை. அதற்காக அறிவியல் தமிழ் மண்ணில் என்றுமே இருந்ததில்லை என்று பொருளில்லை. எழுத்தாளர் சுஜாதா சொல்லுவார் ஓர் மாட்டு வண்டியின் பாகங்களை எப்படி எளிதாகத் தமிழில் சொல்ல முடியுமோ அது போல் அதே கலைச்சொற்களைப் பயன்படுத்தி பறக்கும் விமானத்தை விளக்க முடியும் என்று. சித்தர்கள் பயன்படுத்திய சொல்லாடல் நவீன ஜினோமிக்ஸ் அறிவியலுக்கும் பயன்படும். ஆனால் அதில் தமிழனுக்கு ஆர்வமில்லை, நம்பிக்கை இல்லை..புதிய தடங்கள் உருவாக்கும் சவால்களைத் தாங்கி முன்னேற வேண்டிய ஓர் சூழல் எனக்கு. வீட்டில் இரண்டு அக்காமார்கள் கல்யாணத்திற்குக் காத்திருக்கும்போது பேசாமல் வேலை பார்த்துக் கொண்டு செட்டிலாகி இருக்க வேண்டியவன். அப்படியொரு வாய்ப்பை பேராசிரியர் ஜே.சி.பி உருவாக்கித் தந்தார். ஆம்! நான் முதுகலை அறிவியல் முடித்தவுடன் வேறு எங்கும் போய்விடுவோனோ என்ற பயத்திலும், நான் குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்தலாகவும் நான் படித்த கல்லூரியிலேயே எனக்கு இளம் விரிவுரையாளராக ஓர் வேலையை உருவாக்கி என்னை அமர்த்தினார் ஜே.சி.பி. விதி என்னை உலகக் குடிமகனாக ஆக்கத் திட்டமிட்டிருக்கும்போது இச் சிறு முயற்சி எங்கு நிற்கும் அதன் முன்னால்?.ஒரு வருடம்தான் என்னால் விரிவுரையாளராக அங்கு வேலை பார்க்க முடிந்தது. ஏன் என்று சொல்கிறேன். ஆனால் முதன் முறையாக கைநிறையக் காசு பார்க்க முடிந்தது. 1970 களில் மாதம் 600 ரூபாய் கைநிறையக்காசுதான். எனவே என்னால் இஷ்டம் போல் ஹேட்டல்களில் சிற்றுண்டி, காப்பி அருந்த முடிந்தது. மாதாமாதம் சம்பளம் வாங்கியவுடன் வீட்டிற்கு ஆர்ய பவன் ஸ்வீட்ஸ் வாங்கிக் கொடுக்க முடிந்தது. அப்போது என் இரு சகோதரிகளும் வேலையில் இருந்தனர். நானும் வேலைக்குப் போனேன். என் சம்பளத்தின் முதல் 10% புத்தகங்களுக்குப் போக வேண்டும் என்பது ஜே.சி.பியின் அறிவுரை. நிறைய அறிவியல் புத்தகங்கள் வாங்கி வாசித்தேன். அதே நேரத்தில் திரு.நெடுமாறன் அவர்களின் புத்தகங்களை ஓசி வாங்கிப் படிப்பது பிடிக்கவில்லை. நானே தமிழ்க் கவிதை நூல்களை வாங்கினேன். மீரா அவர்கள் உருவாக்கிய அன்னம் பதிப்பகத்தின் ஆயுள் சந்தாதாரர் ஆனேன். கி.ராஜநாராயணன் மற்றும் கரிசல்காட்டு இலக்கியவாதிகள் எனக்கு அறிமுகமாயினர். நானும் தாமரையும் தொடர்ந்து எழுதிய கடிதங்களைத் தொகுத்து வைத்தேன். ஊஞ்சல் இலக்கியத்தின் முக்கிய ஒரு காலப்பதிவாக இருக்கட்டுமென்று. ஆனால் அது இன்றுவரை இன்னும் பதிப்பாகவில்லை. பின்னால் கி.ரா.வைச் சந்தித்தபோது இதுபற்றிச் சொன்னேன். அனுப்புங்கள் வெளியிடுவோம் என்றார். நூலை அனுப்பினேன், ஆனால் அது அவருக்குப் போய்ச் சேரவில்லை. நல்ல வேலையாக அதை வருடி மின்னூலாக வைத்திருக்கிறேன். ஏதாவது பதிப்பகத்தார் முன் வந்தால் அது அச்சேறலாம்..(தொடரும்)
– நா.கண்ணன்.பள்ளிக் காலத்தில் எலெக்டிவ் பாடம் தேர்வு செய்வதில் ஏற்பட்ட குழப்பத்தை விளக்கியிருந்தேன். பின் கல்லூரிக் காலத்தில் எளிதாக இருக்க வேண்டிய விலங்கியல் பாடம் புதிய அறிவியல் வளர்ச்சியால் செல்லியல், ஜெனிடிக்ஸ் மற்றும் மரபியல் தொழில்நுட்பமாக மாறியபோது பாடம் சொல்லித்தரும் ஆசிரியருக்கும் குழப்பம், மாணவர்களுக்கும் குழப்பம் என்றொரு நிலை. இருவருக்குமே இப்புதிய வழித்தடங்கள் இன்னும் பிடிபடாத நிலை. இதிலெனக்குப் பிடித்த சூழலியல் 'ஈகாலஜி' என்று அழைக்கப்பட்டது. அதிலும் நிறையப் புதிய பாடங்கள். புதிய தடங்கள் உருவாக்கப்படும்போது வழிப்பயணம் எளிதாக இருக்காது என்பதைப் புரிந்துக்கொண்டேன்.மொழிப்பயிற்சியிலும் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நான் எடுத்த இளங்கலை பி.எஸ்.ஸி (ஸ்பெஷல்) என அழைக்கப்பட்டது. தமிழ் இலக்கியம் என எல்லோரும் கம்பனையும், வள்ளுவரையும் படித்தபோது பி.எஸ்ஸி (ஸ்பெஷல்) மாணவர்கள் அறிவியல் தமிழ் எனும் புதிய பாடத்தைப் படித்தனர். இதுவும் புதிது. தமிழாசிரியர் பொன்.தினகரன் இதை உற்சாகமாக எடுத்துக்கொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தினார். அதாவது நாம் படிக்கும் அறிவியலைத் தமிழில் எழுத வேண்டும். அதிவேகமாக வளரும் அறிவியலுக்கு ஈடுகொடுக்கும் அளவில் தமிழில் அறிவியல் சொற்கள் கிடையாது. அறிவியல் சொற்களஞ்சியமெல்லாம் உருவாகாத நிலை. ஆயினும் கற்ற கல்வி பாமரனுக்கும் போய்ச் சேர வேண்டும். அதற்குத்தான் அறிவியல் தமிழ். இம்முயற்சி புதிது. எனக்குத்தான் புதிய புதிய முயற்சிகள் பிடிக்குமே, எனவே, அதையொரு சவாலாக எடுத்துக்கொண்டு முயன்றேன். ஆசிரியர் பொன்.தினகரனுக்குப் பிடித்திருந்தது. நான் முன்னமே சொல்லியது போல் இளங்கலை தமிழ்ப் பாடத்தில் எனக்கு ஏ பிளஸ் கிடைத்தது. எல்லோரும் அதிசயமாகப் பார்த்தனர்..இந்த முன் முயற்சிகளுக்கு பின்னால் பலன் கிடைத்தது. 'அறிவியலைத் தமிழில் சொல்ல வேண்டும்' என்ற ஆசையும், 'சொல்ல முடியும்' எனும் தன்னம்பிக்கையும் என்னுள் பிறந்தது. இவையெல்லாம் ஏதோ எனக்காக ஏற்பட்டது போல் தோன்றுகிறது. திருப்பூவணப் பள்ளியில் எலெக்டிவ் நான் படித்த பின் எடுக்கப்பட்டு விட்டது. கல்லூரியிலும் பி.எஸ்ஸி (ஸ்பெஷல்) எங்களோடு போச்சு. அறிவியல் தமிழ் தொடரப்படவில்லை. ஆனால், அது என்னுள் ஆழமாகப் பதிந்தது. நான் பல்கலைக்கழகம் போன புதிதில் அகில இந்திய வானொலி நிலையம் எனக்கு அறிமுகமானது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நான் அறிவியலைத் தமிழில் சொல்லத் தொடங்கினேன். சூழலியலின் முக்கியத்துவம் பற்றி 70களில் பேசிய முதல் ஆள் நானாக இருந்திருப்பேன். இன்றும் பேசுகிறேன். அன்றைக்கும் இன்றைக்கும் வேறுபாடு உள்ளது. மனித அக்கறையின்மை 'எத்தகையப் பாதகங்களை விளைவிக்கும்' என்று அன்று நான் சொன்ன கருத்துக்களை இன்று நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். ஆயினும், இன்னும் இத்தொடர்புகளைத் தமிழன் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. இதற்கென பண்பாட்டு சூழலியல் எனும் புதிய துறையையே உருவாக்கி வருகிறேன். இது பற்றி பின்னால் பேசுவோம்..நமது ஆர்வத்தைப் புரிந்துகொள்ளும் நிகழ்ச்சிப் பொறுப்பாளர் அமைவது அதிசயம். எனக்கு அப்படியொருவர் திருச்சி வானொலி நிலையத்தில் கிடைத்தார். அவர்தான் ஸ்ரீநிவாச ராகவன். அவர் தொடர்ந்து எனக்கு நிகழ்ச்சிகள் தந்தார். என் ஆர்வத்தை வளர்த்தார். அவரின் இசைவிற்கு உறுதுணையாக இயக்குநர் திருவேங்கடம் அப்போது இருந்தது கூடுதல் அதிர்ஷ்டம். காலம் யந்திரம் ஒன்று உருவாக்கி அதில் பயணப்பட்டு தமிழின் சரிதம் புரிந்து கொள்வது போல் ஓர் நிகழ்ச்சியை ஐன்ஸ்டைன் நூற்றாண்டு விழாவில் செய்தேன். முதன் முறையாக அறிவியல் நிகழ்ச்சியில் இசை, பி.ஜி.எம் உருவாக்கினேன். பச்சையப்பா கல்லூரி முதல்வராக இருந்து ஓய்வு பெற்றிருக்கும் பேராசிரியர் வி.வி.சுப்பிரமணியன், அன்னை தெரசா பல்கலைக்கழக துணை வேந்தராக இருந்து ஓய்வு பெற்றிருக்கும் முனைவர் ஆனந்தவல்லி, சென்னை பாரதி கல்லூரி மேனாள் பேராசிரியை நா.செல்லம்மாள் போன்றோர் என் நிகழ்ச்சியில், என் இயக்கத்தில் அன்று நடித்தனர். நான் உருவாக்கிய தமிழ் அறிவியல் நிகழ்ச்சி ஆங்கிலத்தில் மொழியாக்கம் பெற்று அகில இந்திய அளவில் புகழ்பெற்ற நிகழ்ச்சியாக மாறிப்போனது. இதற்கெல்லாம் காரணம் பள்ளி இறுதிவரை தமிழில் பாடம் கற்றதும், பின்னால் கல்லூரியில் அறிவியல் தமிழ் கற்றதும் எனச் சொன்னால் மிகை இல்லை..தமிழ் இணையம் என்ற ஒன்று உருவானவுடன் இதே ஆர்வம் என்னை அங்கு ஈடுபடுத்தியது. இது விரிவாகப் பேச வேண்டிய விஷயம். இதை என் ஜெர்மன் வாழ்வு பற்றிப் பேசும்போது விவரிக்கிறேன். அடிப்படையாக மின்தமிழை ஆறாம்திணை என்று வரைவிலக்கணம் செய்தது, தமிழை கணனித் திரையில் காண வைத்தது, முதன் முறையாக தமிழின் இயல், இசை, நாடக வடிவங்களை "என்றுமுள தமிழ்" என இலக்கப்பதிவாக்கம் செய்தது, ஆழ்வார்களின் வண்தமிழை புதிய கோணத்தில் அறிமுகம் செய்தது, தமிழாக்கம் தமிழ் வளர்ச்சியின் மறந்துபோன பக்கங்களைக் காட்டியது, தொடர்ந்து தமிழ் சொல்லாக்கத்தில் ஈடுபடுவது போன்ற என் செயல்களுக்கும் நான் முன் சொன்ன காரணங்களே அடிப்படை..எனக்கிருந்த தமிழ் ஆர்வம் ஜே.சி.பிக்குப் புரியவில்லை. அவர்கள் எல்லாம் ஆங்கில வழியிலேயே சிந்திக்க வேண்டுமென நினைப்பவர்கள். ஆங்கிலக் கல்வியின் முக்கியத்தை எனக்குப் புகட்டிய அதே அமெரிக்கன் கல்லூரி என தமிழ் வேர்களையும் எனக்குக் காட்டத் தவறவில்லை. பிரணதார்த்திஹரன் எனும் தமிழ் ஆசான், சாலமன் பாப்பையா எனும் பல்கலை வித்தகர், பொன்.தினகரன் எனும் அன்பான தமிழாசிரியர் இவர்கள் என்னுள் ஆழமாகத் தமிழ் விதையை விதைத்தனர். ஆங்கிலத்துறை என்றாலும் ஆசிரியர் நெடுமாறன் அவர்களின் தமிழ்ப்பணி கவனம் கொள்ள வேண்டியது..உண்மையில் தமிழில் அறிவியலைச் சொல்ல முடியும் என்று உயர் கல்வி மட்டத்தில் எடுக்கப்பட்ட ஓர் முயற்சி மேனாள் துணைவேந்தர் வ.சுப.மாணிக்கம் காலத்தில் மதுரைப் பல்கலைக்கழகத்தில் நடந்தது. இதற்கென ஓர் ஆய்விதழ் உருவானது. அதன் முதல் இதழில் என் முனைவர் பட்டப்படிப்பு ஆய்வைத் தமிழில் சொல்லுமாறு மேனாள் துறைத்தலைவர், பின்னால் பல்கலைக்கழகத் துணைவேந்தார் கிருஷ்ணசாமி அவர்கள் பணித்தனர். நான் மேற்படிப்பிற்குச் சென்ற ஜப்பான், கொரியா, ஜெர்மனி போன்ற நாடுகளில் அறிவியல் அவரவர் தாய்மொழியில்தான் நடைபெறுகிறது. ஆனால், முன்னாள் ஆங்கிலக் காலனியான இந்தியாவில் தாய்மொழிக் கல்வி பற்றி வலிந்து பேச வேண்டியுள்ளது. அறிவியல் உயர்க் கல்வி மொழி என்பது ஆங்கிலம் மட்டுமே என்பதே இன்றுவரை நிலைமை. அதற்காக அறிவியல் தமிழ் மண்ணில் என்றுமே இருந்ததில்லை என்று பொருளில்லை. எழுத்தாளர் சுஜாதா சொல்லுவார் ஓர் மாட்டு வண்டியின் பாகங்களை எப்படி எளிதாகத் தமிழில் சொல்ல முடியுமோ அது போல் அதே கலைச்சொற்களைப் பயன்படுத்தி பறக்கும் விமானத்தை விளக்க முடியும் என்று. சித்தர்கள் பயன்படுத்திய சொல்லாடல் நவீன ஜினோமிக்ஸ் அறிவியலுக்கும் பயன்படும். ஆனால் அதில் தமிழனுக்கு ஆர்வமில்லை, நம்பிக்கை இல்லை..புதிய தடங்கள் உருவாக்கும் சவால்களைத் தாங்கி முன்னேற வேண்டிய ஓர் சூழல் எனக்கு. வீட்டில் இரண்டு அக்காமார்கள் கல்யாணத்திற்குக் காத்திருக்கும்போது பேசாமல் வேலை பார்த்துக் கொண்டு செட்டிலாகி இருக்க வேண்டியவன். அப்படியொரு வாய்ப்பை பேராசிரியர் ஜே.சி.பி உருவாக்கித் தந்தார். ஆம்! நான் முதுகலை அறிவியல் முடித்தவுடன் வேறு எங்கும் போய்விடுவோனோ என்ற பயத்திலும், நான் குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்தலாகவும் நான் படித்த கல்லூரியிலேயே எனக்கு இளம் விரிவுரையாளராக ஓர் வேலையை உருவாக்கி என்னை அமர்த்தினார் ஜே.சி.பி. விதி என்னை உலகக் குடிமகனாக ஆக்கத் திட்டமிட்டிருக்கும்போது இச் சிறு முயற்சி எங்கு நிற்கும் அதன் முன்னால்?.ஒரு வருடம்தான் என்னால் விரிவுரையாளராக அங்கு வேலை பார்க்க முடிந்தது. ஏன் என்று சொல்கிறேன். ஆனால் முதன் முறையாக கைநிறையக் காசு பார்க்க முடிந்தது. 1970 களில் மாதம் 600 ரூபாய் கைநிறையக்காசுதான். எனவே என்னால் இஷ்டம் போல் ஹேட்டல்களில் சிற்றுண்டி, காப்பி அருந்த முடிந்தது. மாதாமாதம் சம்பளம் வாங்கியவுடன் வீட்டிற்கு ஆர்ய பவன் ஸ்வீட்ஸ் வாங்கிக் கொடுக்க முடிந்தது. அப்போது என் இரு சகோதரிகளும் வேலையில் இருந்தனர். நானும் வேலைக்குப் போனேன். என் சம்பளத்தின் முதல் 10% புத்தகங்களுக்குப் போக வேண்டும் என்பது ஜே.சி.பியின் அறிவுரை. நிறைய அறிவியல் புத்தகங்கள் வாங்கி வாசித்தேன். அதே நேரத்தில் திரு.நெடுமாறன் அவர்களின் புத்தகங்களை ஓசி வாங்கிப் படிப்பது பிடிக்கவில்லை. நானே தமிழ்க் கவிதை நூல்களை வாங்கினேன். மீரா அவர்கள் உருவாக்கிய அன்னம் பதிப்பகத்தின் ஆயுள் சந்தாதாரர் ஆனேன். கி.ராஜநாராயணன் மற்றும் கரிசல்காட்டு இலக்கியவாதிகள் எனக்கு அறிமுகமாயினர். நானும் தாமரையும் தொடர்ந்து எழுதிய கடிதங்களைத் தொகுத்து வைத்தேன். ஊஞ்சல் இலக்கியத்தின் முக்கிய ஒரு காலப்பதிவாக இருக்கட்டுமென்று. ஆனால் அது இன்றுவரை இன்னும் பதிப்பாகவில்லை. பின்னால் கி.ரா.வைச் சந்தித்தபோது இதுபற்றிச் சொன்னேன். அனுப்புங்கள் வெளியிடுவோம் என்றார். நூலை அனுப்பினேன், ஆனால் அது அவருக்குப் போய்ச் சேரவில்லை. நல்ல வேலையாக அதை வருடி மின்னூலாக வைத்திருக்கிறேன். ஏதாவது பதிப்பகத்தார் முன் வந்தால் அது அச்சேறலாம்..(தொடரும்)