கடைசிப் பக்கம்.சுஜாதா தேசிகன்.சில நாட்களுக்கு முன் சால் மரத்திலிருந்து விழும் விதைகளின் காணொளி ஒன்று கண்ணில் பட்டது. குட்டி டிரோன் மாதிரி அவைகள் விழும் காட்சியைப் பார்க்கும்போது தற்போது பெங்களூருவில் பிங்க் நிறப் பூக்கள் விழுவது நினைவுக்கு வந்தது..இந்தப் பிங்க் பூக்களின் தாவரப் பெயர் Tabebuia impetiginosa.ஸ்விட்ச் போட்ட மாதிரி வருடத்துக்கு இரண்டு முறை ஒரே நேரத்தில் பூத்து, மரமே 'ஜான்சன் பேபி சோப்' வண்ணத்தில் குளித்திருக்கும். எல்லா மரத்திலும் குறைந்தபட்சம் இரண்டு பறவைகளின் கூட்டைப் பார்க்கலாம். எல்லாப் பூக்களிலும் தேனீக்கள் சுற்றிக்கொண்டு இருக்கும். மெல்லிய காற்றில் பூக்கள் மரத்திலிருந்து உதிரும்போது சுழன்றுகொண்டு விழுவதை ஐ.பி.எல். யுகத்தில் கவனித்திருக்க மாட்டோம். இயற்கை நமக்கு அளித்திருக்கும் இலவச சுகங்களை என்றோ நிராகரித்துவிட்டோம்..பூக்கள் சுழல்வதைப் பார்க்கும்போது சின்ன வயசில் ஐஸ்கிரீம் குச்சியில் செய்த விசிறியும், மூன்று காகிதத்தைக் கொண்டு பின்னிய காத்தாடியும் ஞாபகத்துக்கு வந்தன. வீட்டுக்கு வந்த ஓர் ஓசி பத்திரிகையில் இதை எப்படிச் செய்வது என்று விவரித்திருந்தார்கள்..ஐஸ்க்ரீம் குச்சி விசிறி செய்வது மிகச் சுலபம். (முன்னெல்லாம் ஐஸ்க்ரீம் குச்சி மூங்கிலில் இருக்கும்.) மூங்கில் குச்சியைக் குறுக்குவாட்டில் பாதி வரை பிளந்துவிட்டு, காகிதத்தை அதில் சொருகி மாடியிலிருந்து விட்டால் சுற்றிக்கொண்டு கீழே போகும். காத்தாடி கொஞ்சம் கஷ்டம், மூன்று தென்னை ஓலைப் போன்ற காகிதத்தை ஒன்றுக்கு ஒன்று ஆதாரமாக வைத்துப் பின்ன வேண்டும். அதுவும் மிக அழகாகச் சுற்றிக்கொண்டு போகும். இவை ஏன் சுற்றுகிறது என்று தெரிந்துகொள்ளப் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தைப் படிக்க வேண்டும்..சால் விதைகள் எப்படி இருக்கும் என்று அஞ்சலிதேவியைக் கேட்டபோது, படங்களை உடனே காட்டியது. அவை காற்றாலை விசிறியைப் போலச் சற்று வளைந்து இருந்ததைக் கவனிக்க முடிந்தது..சென்ற வாரம் புத்தகக் கண்காட்சிக்கு சென்னை – பெங்களூரு காரில் பயணம் செய்யும் போது ராக்ஷச காற்றாலை இறக்கைகள் லாரிகளில் ஏற்றிக்கொண்டு போவதைப் பார்த்தேன். அவை விமானத்தின் இறக்கைப் போல வடிவத்தில் சால் விதைகள் போல வளைந்து இருந்தன. காற்றின் ஆற்றலை முழுமையாகக் கைப்பற்ற இந்த வடிவமைப்பு..காற்றில் இயங்கு சக்தி (kinetic energy in wind) என்று தனியாக இதில் டாக்டரேட் பட்டமே வாங்கலாம். இவற்றை நம் பள்ளியில் ஒழுங்காகச் சொல்லிக் கொடுக்கிறார்களா என்பது சந்தேகமே. 'காற்று எப்படி வருகிறது?' என்று கேட்டால் பலர் விழிப்பார்கள்!.காற்றிலேயே பலவிதங்கள் இருக்கிறது. காற்றின் வேகம் (velocity), அதன் அடர்த்தி (density), அதன் அளவு (volume ) எல்லாம் சேர்ந்து காற்றின் ஆற்றலை, அது எப்படிப் பாய்கிறது என்பதை நிர்ணயிக்கிறது..'The Boy Who Harnessed the Wind' என்ற படத்தையும் இந்த வாரம் பார்க்க திட்டமிட்டுள்ளேன். அதில் 13 வயதுச் சிறுவன், அவனது குடும்பம் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் அவன் விரும்பும் பள்ளியிலிருந்து தூக்கி எறியப்பட்டு, அவன் நூலகத்திற்குள் நுழைந்து தனது கிராமத்தைப் பஞ்சத்திலிருந்து காப்பாற்றக் காற்றாலை கட்டுவது எப்படி என்று கற்றுக்கொள்கிறார்..1888ல்தான் முதல் முதலில் காற்றாலை கண்டுபிடிக்கப்பட்டது. சில வருடங்கள் முன் பண்டரிபுரத்திலிருந்து பெங்களூர் வரும் வழியில் ஓடும் காற்றாலை ஒன்றைப் படம்பிடித்தேன்..பிகு: 'காற்று வெளியிடைக் கண்ணம்மா' என்பது பாரதியின் கவிதை வரிகள் இதன் பொருளைக் கொஞ்சம் யோசியுங்கள் (தெரியவில்லை என்றால் கவிஞர் மகுடேசுவரன் இதைக் குறித்து விரிவாக எழுதியுள்ளார்)..அஞ்சலிதேவி யார் என்று யோசித்தவர்களுக்கு – கூகுள் சுந்தர் பிச்சையின் மனைவி பெயர்!
கடைசிப் பக்கம்.சுஜாதா தேசிகன்.சில நாட்களுக்கு முன் சால் மரத்திலிருந்து விழும் விதைகளின் காணொளி ஒன்று கண்ணில் பட்டது. குட்டி டிரோன் மாதிரி அவைகள் விழும் காட்சியைப் பார்க்கும்போது தற்போது பெங்களூருவில் பிங்க் நிறப் பூக்கள் விழுவது நினைவுக்கு வந்தது..இந்தப் பிங்க் பூக்களின் தாவரப் பெயர் Tabebuia impetiginosa.ஸ்விட்ச் போட்ட மாதிரி வருடத்துக்கு இரண்டு முறை ஒரே நேரத்தில் பூத்து, மரமே 'ஜான்சன் பேபி சோப்' வண்ணத்தில் குளித்திருக்கும். எல்லா மரத்திலும் குறைந்தபட்சம் இரண்டு பறவைகளின் கூட்டைப் பார்க்கலாம். எல்லாப் பூக்களிலும் தேனீக்கள் சுற்றிக்கொண்டு இருக்கும். மெல்லிய காற்றில் பூக்கள் மரத்திலிருந்து உதிரும்போது சுழன்றுகொண்டு விழுவதை ஐ.பி.எல். யுகத்தில் கவனித்திருக்க மாட்டோம். இயற்கை நமக்கு அளித்திருக்கும் இலவச சுகங்களை என்றோ நிராகரித்துவிட்டோம்..பூக்கள் சுழல்வதைப் பார்க்கும்போது சின்ன வயசில் ஐஸ்கிரீம் குச்சியில் செய்த விசிறியும், மூன்று காகிதத்தைக் கொண்டு பின்னிய காத்தாடியும் ஞாபகத்துக்கு வந்தன. வீட்டுக்கு வந்த ஓர் ஓசி பத்திரிகையில் இதை எப்படிச் செய்வது என்று விவரித்திருந்தார்கள்..ஐஸ்க்ரீம் குச்சி விசிறி செய்வது மிகச் சுலபம். (முன்னெல்லாம் ஐஸ்க்ரீம் குச்சி மூங்கிலில் இருக்கும்.) மூங்கில் குச்சியைக் குறுக்குவாட்டில் பாதி வரை பிளந்துவிட்டு, காகிதத்தை அதில் சொருகி மாடியிலிருந்து விட்டால் சுற்றிக்கொண்டு கீழே போகும். காத்தாடி கொஞ்சம் கஷ்டம், மூன்று தென்னை ஓலைப் போன்ற காகிதத்தை ஒன்றுக்கு ஒன்று ஆதாரமாக வைத்துப் பின்ன வேண்டும். அதுவும் மிக அழகாகச் சுற்றிக்கொண்டு போகும். இவை ஏன் சுற்றுகிறது என்று தெரிந்துகொள்ளப் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தைப் படிக்க வேண்டும்..சால் விதைகள் எப்படி இருக்கும் என்று அஞ்சலிதேவியைக் கேட்டபோது, படங்களை உடனே காட்டியது. அவை காற்றாலை விசிறியைப் போலச் சற்று வளைந்து இருந்ததைக் கவனிக்க முடிந்தது..சென்ற வாரம் புத்தகக் கண்காட்சிக்கு சென்னை – பெங்களூரு காரில் பயணம் செய்யும் போது ராக்ஷச காற்றாலை இறக்கைகள் லாரிகளில் ஏற்றிக்கொண்டு போவதைப் பார்த்தேன். அவை விமானத்தின் இறக்கைப் போல வடிவத்தில் சால் விதைகள் போல வளைந்து இருந்தன. காற்றின் ஆற்றலை முழுமையாகக் கைப்பற்ற இந்த வடிவமைப்பு..காற்றில் இயங்கு சக்தி (kinetic energy in wind) என்று தனியாக இதில் டாக்டரேட் பட்டமே வாங்கலாம். இவற்றை நம் பள்ளியில் ஒழுங்காகச் சொல்லிக் கொடுக்கிறார்களா என்பது சந்தேகமே. 'காற்று எப்படி வருகிறது?' என்று கேட்டால் பலர் விழிப்பார்கள்!.காற்றிலேயே பலவிதங்கள் இருக்கிறது. காற்றின் வேகம் (velocity), அதன் அடர்த்தி (density), அதன் அளவு (volume ) எல்லாம் சேர்ந்து காற்றின் ஆற்றலை, அது எப்படிப் பாய்கிறது என்பதை நிர்ணயிக்கிறது..'The Boy Who Harnessed the Wind' என்ற படத்தையும் இந்த வாரம் பார்க்க திட்டமிட்டுள்ளேன். அதில் 13 வயதுச் சிறுவன், அவனது குடும்பம் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் அவன் விரும்பும் பள்ளியிலிருந்து தூக்கி எறியப்பட்டு, அவன் நூலகத்திற்குள் நுழைந்து தனது கிராமத்தைப் பஞ்சத்திலிருந்து காப்பாற்றக் காற்றாலை கட்டுவது எப்படி என்று கற்றுக்கொள்கிறார்..1888ல்தான் முதல் முதலில் காற்றாலை கண்டுபிடிக்கப்பட்டது. சில வருடங்கள் முன் பண்டரிபுரத்திலிருந்து பெங்களூர் வரும் வழியில் ஓடும் காற்றாலை ஒன்றைப் படம்பிடித்தேன்..பிகு: 'காற்று வெளியிடைக் கண்ணம்மா' என்பது பாரதியின் கவிதை வரிகள் இதன் பொருளைக் கொஞ்சம் யோசியுங்கள் (தெரியவில்லை என்றால் கவிஞர் மகுடேசுவரன் இதைக் குறித்து விரிவாக எழுதியுள்ளார்)..அஞ்சலிதேவி யார் என்று யோசித்தவர்களுக்கு – கூகுள் சுந்தர் பிச்சையின் மனைவி பெயர்!