விமர்சனம்.– லதானந்த்.சில பல காரணங்களால் சிறு வயதில் இருந்தே (கார்த்தி) விருமனுக்குத் தந்தை பிரகாஷ்ராஜ் மீது வெறுப்பு. கார்த்தியின் அண்ணன்களும் தந்தை பிரகாஷ்ராஜின் அடக்குமுறைகளைத் தட்டிக்கேட்க முடியாமல் தவிக்கும் சூழலில், கார்த்தி எப்படி பிரகாஷ் ராஜை வழிக்குக் கொண்டுவருகிறார் என்பதே விருமனின் ஒன்லைன் எனலாம்..அவங்கவங்க ராக்கெட் பத்தியும், பான் இந்தியா வரிசையிலும் படங்களை எடுத்துத் தள்ளும் அதி நவீன திரைப்பட யுகத்தில் இன்னும் ஊர்ப் பஞ்சாயத்து, ஓட்டல், கடை, பொது ஏலம் என்று கற்காலத்துச் சம்பவங்களைக் குழப்பியடித்திருக்கிறார்கள். சுமார் 50 ஆண்டுக்கு முன் வந்த படத்தைப் பார்ப்பதைப்போலத்தான் இருக்கிறது..படத்தில் சில பாத்திரங்களுக்கு வெள்ளாடு, குழவிக்கல்லு, பதினெட்டாம் படியான், செம்படையான், பூதம், குத்தாலம் என்றெல்லாம் புதுமையாகப் பெயர் வைத்திருக்கிறார்கள். எல்லாம் சரிதான்… அந்தப் புதுமைக் கண்ணோட்டத்தைக் கதைக்கும் திரைக்கும் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்..கதையின் நாயகி இயக்குநர் சங்கரின் மகள் அதிதி. அவருக்குப் பின்னணி கொடுத்திருக்கும் குரலில் சற்றும் பெண்மையில்லை; கரடுமுரடாக இருக்கிறது. சாமுத்ரிகா லட்சணத்தில் 'Socket eyes' என்ற வரையறை ஒன்று உண்டு. அதிதியின் கண்கள் அப்படித்தான் இருக்கின்றன. அவருக்கு ரோபோ ஷங்கரின் மகள்தான் கூட்டுக்காரி..யதார்த்தத்துக்கு வெகு தொலைவில் சண்டைக் காட்சிகள் இருக்கின்றன. ஆயுதங்களோடு வரும் பல அடியாட்களையும் ஒற்றை ஆளாய் கார்த்தி அடித்துத் துவைக்கும் காட்சிகள் மிகையோ மிகை. அதிலும் ஒரு காட்சியில் இரண்டு கைகளையும் பின்னால் கட்டிக்கொண்டு தனது நெஞ்சாலேயே ஆயுதம் தாங்கிய எதிரிகளை விழ வைப்பார் பருங்கள்…..ஏற்கெனவே உடையும் பொருட்டுத் தயார் நிலையில் இருக்கும் பெஞ்சுகளிலும், மேசைகளிலும், சுவர்களில் எதிரிகளைக் கார்த்தி சவட்டி எடுக்கும் காட்சிகள் சலிப்பூட்டுகின்றன..படம் நெடுக யாராவது யாரையாவது கன்னத்தில் அறைந்துகொண்டே இருக்கிறார்கள்..'கஞ்சாப் பூ' பாடல் ரசிகர்களை அரங்கில் நடனமாட வைக்கிறது. 'வானம் கிடுகிடுங்குது' வைகை நதி நடுநடுங்குது' பாடலும் ஆடலும் ஜோர்!.கிராமத்துக் காட்சிகள் சிறப்பாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன. மதுரை மண்ணின் 'ஸ்லாங்' மிகக் கவனமாகவும் பொருத்தமாகவும் கையாளப்பட்டிருக்கின்றன..இடைவேளைக்குப் பிறகு படம் எங்கெங்கோ அலைகிறது. எப்பொழுது படம் முடியும் என்றாகிவிடுகிறது..எம்.எல்.ஏ.விடம் பணம் கொடுத்து வேலை வாங்குவதை எந்தக் கூச்ச நாச்சமும் இன்றி நியாப்படுத்தியிருக்கிறார்கள். ஐயோ!.கார்த்தியின் ஒவ்வொரு வசனத்திலும் ஒரு சொலவடை வந்து விழுகிறது. ஏறக்குறைய எல்லாப் பாத்திரங்களுமே பஞ்ச் வசனம் அல்லது பழமொழி பேசிப் பேசித் தாளித்து விடுகிறார்கள்..உதாரணத்துக்கு அல்லக்கை சூரி பேசும் வசனம் ஒன்று: "கத்திப் பேசுறதோ கத்தி காட்டிப் பேசுறதோ விருமனுக்குப் பிடிக்காது".படம் முழுக்க. 'உன்னை என்ன செய்யப் போகிறேன் பார்' என்ற வெற்றுச் சவடால்களும் வீம்புக் கூப்பாடுகள் எல்லாம் மலிந்திருக்கின்றன.."பொண்ணுன்னா பூமா தேவி போல இருக்கணும்; இவ பூலான் தேவி மாதிரி இருக்கா" என்று கார்த்தி பேசும் வசனத்துக்குப் பெண்ணியவாதிகளின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்று அறிய ஆவல் ஏற்படுகிறது..ஃப்ளாஷ் பேக் காட்சிகளைக் கருப்பு வெள்ளையில் காட்டுகிறார்கள். ஐயா, சாமி, எந்தக் காலத்து உத்தி இது! இப்போது காட்டுறீங்களே!.மொத்தத்தில் விருமன் : சோதிக்கிறான்!.அட்டைப்படம் : அதிதி ஷங்கர்
விமர்சனம்.– லதானந்த்.சில பல காரணங்களால் சிறு வயதில் இருந்தே (கார்த்தி) விருமனுக்குத் தந்தை பிரகாஷ்ராஜ் மீது வெறுப்பு. கார்த்தியின் அண்ணன்களும் தந்தை பிரகாஷ்ராஜின் அடக்குமுறைகளைத் தட்டிக்கேட்க முடியாமல் தவிக்கும் சூழலில், கார்த்தி எப்படி பிரகாஷ் ராஜை வழிக்குக் கொண்டுவருகிறார் என்பதே விருமனின் ஒன்லைன் எனலாம்..அவங்கவங்க ராக்கெட் பத்தியும், பான் இந்தியா வரிசையிலும் படங்களை எடுத்துத் தள்ளும் அதி நவீன திரைப்பட யுகத்தில் இன்னும் ஊர்ப் பஞ்சாயத்து, ஓட்டல், கடை, பொது ஏலம் என்று கற்காலத்துச் சம்பவங்களைக் குழப்பியடித்திருக்கிறார்கள். சுமார் 50 ஆண்டுக்கு முன் வந்த படத்தைப் பார்ப்பதைப்போலத்தான் இருக்கிறது..படத்தில் சில பாத்திரங்களுக்கு வெள்ளாடு, குழவிக்கல்லு, பதினெட்டாம் படியான், செம்படையான், பூதம், குத்தாலம் என்றெல்லாம் புதுமையாகப் பெயர் வைத்திருக்கிறார்கள். எல்லாம் சரிதான்… அந்தப் புதுமைக் கண்ணோட்டத்தைக் கதைக்கும் திரைக்கும் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்..கதையின் நாயகி இயக்குநர் சங்கரின் மகள் அதிதி. அவருக்குப் பின்னணி கொடுத்திருக்கும் குரலில் சற்றும் பெண்மையில்லை; கரடுமுரடாக இருக்கிறது. சாமுத்ரிகா லட்சணத்தில் 'Socket eyes' என்ற வரையறை ஒன்று உண்டு. அதிதியின் கண்கள் அப்படித்தான் இருக்கின்றன. அவருக்கு ரோபோ ஷங்கரின் மகள்தான் கூட்டுக்காரி..யதார்த்தத்துக்கு வெகு தொலைவில் சண்டைக் காட்சிகள் இருக்கின்றன. ஆயுதங்களோடு வரும் பல அடியாட்களையும் ஒற்றை ஆளாய் கார்த்தி அடித்துத் துவைக்கும் காட்சிகள் மிகையோ மிகை. அதிலும் ஒரு காட்சியில் இரண்டு கைகளையும் பின்னால் கட்டிக்கொண்டு தனது நெஞ்சாலேயே ஆயுதம் தாங்கிய எதிரிகளை விழ வைப்பார் பருங்கள்…..ஏற்கெனவே உடையும் பொருட்டுத் தயார் நிலையில் இருக்கும் பெஞ்சுகளிலும், மேசைகளிலும், சுவர்களில் எதிரிகளைக் கார்த்தி சவட்டி எடுக்கும் காட்சிகள் சலிப்பூட்டுகின்றன..படம் நெடுக யாராவது யாரையாவது கன்னத்தில் அறைந்துகொண்டே இருக்கிறார்கள்..'கஞ்சாப் பூ' பாடல் ரசிகர்களை அரங்கில் நடனமாட வைக்கிறது. 'வானம் கிடுகிடுங்குது' வைகை நதி நடுநடுங்குது' பாடலும் ஆடலும் ஜோர்!.கிராமத்துக் காட்சிகள் சிறப்பாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன. மதுரை மண்ணின் 'ஸ்லாங்' மிகக் கவனமாகவும் பொருத்தமாகவும் கையாளப்பட்டிருக்கின்றன..இடைவேளைக்குப் பிறகு படம் எங்கெங்கோ அலைகிறது. எப்பொழுது படம் முடியும் என்றாகிவிடுகிறது..எம்.எல்.ஏ.விடம் பணம் கொடுத்து வேலை வாங்குவதை எந்தக் கூச்ச நாச்சமும் இன்றி நியாப்படுத்தியிருக்கிறார்கள். ஐயோ!.கார்த்தியின் ஒவ்வொரு வசனத்திலும் ஒரு சொலவடை வந்து விழுகிறது. ஏறக்குறைய எல்லாப் பாத்திரங்களுமே பஞ்ச் வசனம் அல்லது பழமொழி பேசிப் பேசித் தாளித்து விடுகிறார்கள்..உதாரணத்துக்கு அல்லக்கை சூரி பேசும் வசனம் ஒன்று: "கத்திப் பேசுறதோ கத்தி காட்டிப் பேசுறதோ விருமனுக்குப் பிடிக்காது".படம் முழுக்க. 'உன்னை என்ன செய்யப் போகிறேன் பார்' என்ற வெற்றுச் சவடால்களும் வீம்புக் கூப்பாடுகள் எல்லாம் மலிந்திருக்கின்றன.."பொண்ணுன்னா பூமா தேவி போல இருக்கணும்; இவ பூலான் தேவி மாதிரி இருக்கா" என்று கார்த்தி பேசும் வசனத்துக்குப் பெண்ணியவாதிகளின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்று அறிய ஆவல் ஏற்படுகிறது..ஃப்ளாஷ் பேக் காட்சிகளைக் கருப்பு வெள்ளையில் காட்டுகிறார்கள். ஐயா, சாமி, எந்தக் காலத்து உத்தி இது! இப்போது காட்டுறீங்களே!.மொத்தத்தில் விருமன் : சோதிக்கிறான்!.அட்டைப்படம் : அதிதி ஷங்கர்