ஒரு நிருபரின் டைரி – 34.எஸ். சந்திரமௌலி.தமிழ்ப் பத்திரிகையுலகம் மிகச்சிறந்த ஓவியர்கள் சிலரை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு வாசகர்களை மகிழ்வித்திருக்கிறது. அந்த சிறிய பட்டியலில் இடம்பெறும் மிக முக்கியமான ஓவியர் கோபுலு. அவரது இயர்பெயர் கோபாலன். தஞ்சாவூர்காரர். இந்தத் தொடரில் டாக்டர் கலாம் குறித்த அத்தியாயத்தில் அவரை சந்திக்கச் சென்றபோது ஓவியர் கோபுலுவிடமிருந்து கலாமை ஒரு கார்டூனாக வரைந்து எடுத்துச் சென்றதையும், அதன் பிரதியில் கலாமிடம் ஆட்டோகிராஃப் வாங்கி அதை கோபுலுவிடம் கொண்டு வந்து கொடுத்தபோது அவர் ஒரு குழந்தை போலக் குதூகலப்பட்டது பற்றியும் பகிர்ந்துகொண்டிருந்தேன். ஆனால், அவரைப் பற்றி தனியாக அத்தியாயமே எழுதவேண்டியது எனது கடமை என்று நினைக்கிறேன்.."கோபுலுவின் வாழ்க்கை அனுபவங்களை ஒரு தொடராக எழுதலாமே!" என்று நான் ஐடியாவை சொன்னதும், அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார் என்றால் அது மிகையில்லை. அவருக்கு அத்தனை சந்தோஷம். அடுத்த சில நாட்களில் கோபுலுவைச் சந்தித்து, அவரது வாழ்க்கை அனுபவங்களை தொடராக எழுத விரும்புவதாக அவரிடம் சொன்னதும் அவர் சொன்னது இன்றைக்கும் எனக்கு மிக நன்றாக நினைவில் உள்ளது: "அந்தக் காலத்தில் கிராமங்களில் பழ வியாபாரி ஒரு பெரிய கூடை நிறைய மாம்பழங்களை தெருத் தெருவாகச் சென்று கூவிக் கூவி மாம்பழம் விற்பார். அத்தனைப் பழங்களும் விற்றுத் தீர்ந்தவுடன், அந்த ஊருக்கு வெளியில் ஒரு மரத்தடியில், காலி பழக்கூடையையே தலைக்கு வைத்துக் கொண்டு ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பார், நானும் அந்தப் பழ வியாபாரியைப் போலத்தான். எனக்குத் தெரிந்த ஓவியக்கலையை வைத்துக் கொண்டு 60 வருடங்களுக்கு சுறுசுறுப்பாக ஓடியாடி வியாபாரம் செய்துவிட்டு, இப்போது வீட்டில் ஈஸி சேரில் சாய்ந்தபடி ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறேன். அந்த சமயத்தில், புல் மேய்ந்த பசு மாடு, நிதானமாக மரத்தடியில் படுத்துக் கொண்டு அசைபோடுவது போல, என் வாழ்க்கை அனுபவங்களை அசைபோட ஒரு வாய்ப்பு இது".அமுதசுரபியில், மாதமாதம், கோபுலு வரைந்த பலவிதமான ஓவியங்களுடன் வெளியான அந்தத் தொடர், பின்னர் " கோடுகளால் ஒரு வாழ்க்கை" என்ற பெயரில் புத்தகமாகவும் வெளியாகி, வாசகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது. வயதானாலும் அவருக்கு நல்ல நினைவாற்றல் இருந்ததால், சின்ன வயசு லூட்டிகள் தொடங்கி அத்தனை விஷயங்களையும் மிகுந்த ஆர்வத்துடன் அசைபோட்டார். அவர் சாதாரணமாகப் பேசும்போதே நகைச்சுவை தெறிக்கும். நாட்டு நடப்பு, உலக நடப்பு பற்றி அவருக்கு அத்துப்படி. அரசியல் விஷயங்கள் பேசும்போது, பளீரென்று சில கமெண்ட்ஸ் வரும்! அவருக்குள்ளே இன்னமும் கார்டூனிஸ்ட் கோபுலு உயிர்ப்புடன் இருக்கிறார் என்பதை அவை உணர்த்தும்..கோபுலுவுக்கும், அவரது வாசகர்களுக்கும் இடையிலான நெருக்கத்தைப் போலவே, கோபுலுவுக்கும், எழுத்தாளர்களுக்கும் இடையிலான நெருக்கமும் ஆழமானது. லட்சுமி, சாண்டில்யன், நா.பார்த்தசாரதி, ஜெயகாந்தன், கலைஞர் கருணாநிதி போன்றவர்களின் எழுத்துக்களுக்கு கோபுலு படம் என்றால் அது வாசகர்களுக்கு பெரும் கொண்டாட்டம்தான்..விகடனில், எழுத்தாளர் தேவனின் மறைவுக்குப் பிறகு, எஸ்.எஸ். வாசன் விகடன் ஆபீசுக்கு தினமும் வந்து, ஆசிரியர் இலாக்காவை கவனித்துக் கொண்டார். அப்போது விகடனுக்குப் புது மெருகூட்டும் நோக்கத்தோடு சில காரியங்கள் செய்தார். அவற்றில் ஒன்று ஜெமினியில் இருந்த 'கலைமணி' என்ற எழுத்தாளரை ஒரு பிரமாதமான தொடர்கதை எழுதச் செய்தார். கலைமணியின் தொடர்கதை ஆரம்பத்திலேயே சூடு பிடித்து, கதையின் ஹீரோ ஷண்முகசுந்தரமும், ஹீரோயின் மோகனாம்பாளும் வாராவாரம் வாசகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள்; வாசகர்கள் மத்தியில் அந்தத் தொடர் அமோக வரவேற்பைப் பெற்றது. அந்த கலைமணி வேறு யாருமில்லை; கொத்தமங்கலம் சுப்புதான். அந்தத் தொடர்கதைதான் 'தில்லானா மோகனாம்பாள்' என திரைப்படமாக எடுக்கப்பட்டது. வாராவாரம் கொத்தமங்கலம் சுப்பு அத்தியாயத்தை எழுதிக் கொடுத்ததும், அது வாசன் பார்வைக்குப் போகும். அவர் அதை எடிட் செய்து அனுப்புவார். அதற்கு நான் படங்கள் போடுவேன். ஷண்முக சுந்தரம்-மோகனாம்பாள் கல்யாண அத்தியாயம் வெளியான விகடன் இதழின் அட்டையில் அவர்கள் கல்யாணக் காட்சியை வண்ண ஓவியமாக நான் வரைந்திருந்தேன். தில்லானா மோகனாம்பாள் கதையினால் சுப்புவுக்கும், படங்களால் எனக்கும் நல்ல பெயர் கிடைத்தது. இன்றும் கூட சிலர் அதைப் பற்றி சிலாகித்துச் சொல்வார்கள்" என்று பழைய நினைவுகளில் அவ்வப்போது மூழ்கிப் போவார் கோபுலு..சாவியும், கோபுலுவும் நெருங்கிய நண்பர்கள். விகடன் காலத்தில் துவங்கிய அவர்களது நட்பு, கல்கி, தினமணி கதிர், குங்குமம், சாவி என தொடர்ந்தது. விகடனில் இருந்தபோது, ஒரு நாள், "நான் நகைச்சுவைத் தொடருக்காக ஒரு புதுமையான ஐடியா வைத்திருக்கிறேன். நம் பாரம்பரிய திருமணம் ஒன்று அமெரிக்காவில் வாஷிங்டன் நகரத்தில் நடந்தால் எப்படி இருக்கும்? அதில் என்னென்ன கலாட்டாக்கள், குழப்பங்கள் நடக்கும்? அவற்றை வைத்து எழுதப் போகும் அந்தத் தொடருக்குத் தலைப்பு "வாஷிங்டன்னில் திருமணம்". அந்தத் தொடர்கதைக்கு நான் படம் போட வேண்டும் என்று சாவி கேட்டார். சாவியின் கற்பனைக்கு ஈடுகொடுக்கும் வண்ணம் வாஷிங்டன்னில் திருமணம் தொடருக்கு படம் வரைந்து கொடுத்தது மறக்க முடியாத அனுபவம்..அஜந்தா, எல்லோரா, ஜெய்ப்பூர் உள்ளிட்ட பல ஊர்களுக்கும் அவரோடு கூடவே சென்று சாவியின் பயணக் கட்டுரைகளுக்கு புதுப் பரிமாணம் கொடுத்தவர் கோபுலு. சாவி தினமணி கதிரில் இருந்தபோது, கோபுலு ஆர்வத்துடன் நிறைய சித்திரங்கள் வரைந்து கொடுத்தார் என்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அன்றைய காலகட்டத்தில் மற்ற தமிழ் பத்திரிகைகளைவிட தினமணி கதிரின் சைஸ் பெரிசு. எனவே, சாவி, ஓவியர்களிடமிருந்து தொடர்கதைகளுக்கு பெரிசு, பெரிசாக படங்களை வரையச் செய்து, வாங்கி வெளியிடுவார்..டாக்டர் திரிபுரசுந்தரி என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் லட்சுமி தன் தொடர்களுக்கு கோபுலு படம் வரையப்போகிறார் என்றால், தொடர் கதை ஆரம்பிக்கும் முன்பாக அவரைச் சந்தித்து, கதையைச் சொல்லிவிடுவது வழக்கம். சில சமயங்களில் எழுத்தாளர் சாண்டில்யன், தன் அத்தியாயத்தோடு அவரை வந்து சந்தித்து, கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருப்பார். நா. பார்த்தசாரதி கதைகளுக்கு அவர் படம் போட்டு அனுப்பி வைத்தால், பல சமயங்களில் போன் செய்து நெகிழ்ச்சியோடு பாராட்டி இருக்கிறார். கலைஞரின் பொன்னர்-சங்கர் உள்ளிட்ட தொடர்கதைகளாகட்டும், குறளோவியம் போன்ற இலக்கிய சமாசாரங்கள் ஆகட்டும் ஓவியம் வரைவது கோபுலுதான்..மற்ற எழுத்தாளர்கள் போல, தொடர்கதைகளை அத்தியாயம், அத்தியாயமாக அனுப்பாமல், முதலிலேயே ஒட்டு மொத்தமாக எழுதிக் கொடுத்துவிடுவது எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனுன் வழக்கம். தினமணி கதிருக்கு, மண்ணகத்துப் பூக்கள் என்ற தலைப்பில் தொடர் ஒன்றை அவர் எழுதிக் கொடுத்தபோது, "எனது படைப்புகள் எதற்கும் கோபுலு படம் போட்டதில்லை; இந்த தொடருக்கு அவர் சித்திரங்கள் வரைந்தால் நான் பெரிதும் மகிழ்வேன்" என்று சொன்னார். இது பற்றி கோபுலுவிடம் சொன்னபோது, "நான் அவரது எழுத்துக்களின் ரசிகனாயிற்றே! அவரது உயரிய படைப்புக்களுக்கு சித்திரம் வரைய எனக்கு வாய்ப்பு அமைந்ததே இல்லை; அவரது எழுத்துக்கு சித்திரம் வரைவது எனக்கு பெரிய கௌரவம்!" என்றார் பெருமையோடு. ராஜம் கிருஷ்ணன் விரும்பியது போலவே கோபுலுவின் சித்திரங்கள் அவரது தொடருக்கு பெருமை சேர்த்தன.."தமிழின் கிரேட் எழுத்தாளர் கல்கி. அவர் கதைகள் எழுதினபோது நான் படங்கள் வரைய வாய்ப்பு கிடைக்கவில்லையே என்கிற என்னுடைய குறையை, கல்கி தீபாவளி மலர்களில் மறு பிரசுரம் செய்யப்பட்ட அவரது கதைகளுக்கு படம் வரைந்து தீர்த்துக் கொண்டேன்" என்று சொல்லுவார். கல்கி பதிப்பகம் 'சிவகாமியின் சபதம்', 'பார்த்திபன் கனவு' போன்றவற்றை செம்பதிப்பாக வெளியிட்டபோது வண்ணப்படங்கள் வரைந்து மெருகூட்டியவர் கோபுலுதான்..ஓவியர் மணியம் மறைந்தபோது, அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தினமணி கதிரில் ஒரு கட்டுரை எழுதினார் கோபுலு. அந்தக் கட்டுரையை அவர் இப்படி முடித்திருந்தார்: "மணியம் எங்கும் போகவில்லை, மேல் உலகில் இருக்கும் கல்கி, சரித்திரக் கதை எழுத ஆரம்பித்துவிட்டார் போலிருக்கிறது. அதற்கு சித்திரம் போட அவரை அழைத்துக் கொண்டார்".1963ல் முழு நேர பத்திரிகைதுறைப் பணியில் இருந்து கோபுலு விளம்பரத்துறைக்கு மாறினார். 1972ல் சொந்தமாக "அட்வேவ்" என்ற விளம்பர நிறுவனத்தைத் துவக்கினார். அதென்ன அட்வேவ்? அந்த சமயம் சென்னையில் கடும் வெயில் சுட்டெரித்தது. பேப்பர்களில் 'ஹீட் வேவ்" பற்றிய செய்திகள் வந்தன. அதைப் பார்த்து, விளம்பர உலகில் புதிய அலையை ஏற்படுத்தும் நோக்கத்தோடு தன் புது விளம்பர நிறுவனத்துக்கு அட் வேவ் என்று பெயர் வைத்தார் கோபுலு..அட் வேவின் ஆரம்ப கால கிளையன்ட்களில் முக்கியமானது காளிமார்க் குளிர்பான நிறுவனம். இதற்கு கோபுலு உருவாக்கிய தீம்தான்: ஜனங்க காளி மார்க் விளம்பரங்களை படிச்சு ரசிக்கணும்; காளி மார்க் குளிர் பானங்களை ரசிச்சுக் குடிக்கணும். அதன்படி, ஏராளமான கோபுலு டிடேட் மார்க் நகைச்சுவை கார்ட்டூன்கள் மூலமாக காளிமார்க் குளிபானங்கள் விளம்பரப்படுத்தப்பட்டன.."பத்தாண்டுகளுக்கு ஒரு தடவை என்னை நான் புதுப்பித்துக் கொள்வேன். இல்லையென்றால், டிசோனர் மாதிரி மியூசியத்துக்குப் போய்விட வேண்டியதுதான்" என்று சொல்லுவார் அவர். புது விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் அவருக்கு அபாரமான ஆர்வம் இருந்தது. அமுதசுரபியில் அவரது அனுபவத் தொடரை எழுதியபோது, அவருடனான உரையாடல்களை பதிவு செய்வதற்காக சில சமயங்களில் மைக்ரோ டேப் ரெக்கார்டரைக் கொண்டு போவேன். சில சமயங்களில் டிஜிட்டல் வாய்ஸ் ரெக்கார்டரைக் கொண்டு போவேன். அவரசத்துக்கு, என் மொபைல் ஃபோனிலேயே அவர் சொன்னவற்றை பதிவு செய்ததும் உண்டு. வாய்ஸ் ரெக்கார்டர், மொபைல் ரெக்கார்டிங் சமயங்களில் அவற்றைப் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்வார்..ஒருநாள், பத்திரிக்கைக்கான மேட்டர்களையெல்லாம் நான் பேனாவால், பேப்பரில் எழுதிக் கொடுத்து பல வருடங்களாகிவிட்டன. தமிழ் டைப்பிங் தெரியாதுபோனாலும், அழகி என்ற மொழி மென்பொருளைப் பயன்படுத்தி, ஆங்கிலத்தில் டைப் செய்தால், அது தமிழில் வரும் என்றபோது, அதைக் கற்றுக் கொண்டு பயன்படுத்த ஆர்வம் காட்டினார் அந்த முதிய இளைஞர். அவரது கம்ப்யூட்டரில் அந்த தமிழ் சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்து கொடுத்துவிட்டு, இனி நீங்கள் தமிழிலேயே ஈ மெயில் அனுப்ப முடியும் என்றபோது, தானே முயன்று அவர் முதல் ஈ மெயிலை அனுப்பியது ஹிந்து நாளிதழின் கார்டூனிஸ்டான கேசவுக்கு..2002 பிப்ரவரியில் ஓர் இரவில் அவருக்கு ஸ்டிரோக் வந்து நடு இரவில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இடது பக்க மூளையில் ரத்தம் கிளாட் ஆகி, உடலின் வலது பக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. ஐ.சி.யூ.வில் தீவிர சிகிச்சைக்குப் பின், உடல் நலம் தேறி, வார்டுக்கு வந்த பிறகு, டாக்டர் செரியனின் ஆலோசனையின்பேரில், இடது கையால் ஓவியம் வரையப் பழகினார். அவர் தன் இடது கையால் வரைந்த ஓவியங்கள் பல. இது குறித்து கோபுலு "உங்கள் மூளைதான் உண்மையான ஆர்டிஸ்ட். மூளையின் உத்தரவுப்படி, இத்தனை நாள் உங்களது வலது கை ஓவியங்கள் வரைந்துகொண்டிருந்தது; இப்போது அது செயல் இழந்துவிட்ட நிலையில் அந்த வேலையினை உங்கள் இடது கை செய்யப்போகிறது. எனவே இடது கையால் உங்களால் நன்றாக ஓவியம் வரைய முடியும்" என்று டாக்டர் செரியன் ஊக்குவித்ததை சொல்லிவிட்டு, உடனே, நகைச்சுவையோடு, "பொதுவாக என் பாணிகோடுகளை "கோபுலு ஸ்டிரோக்ஸ்" என்று சொல்லுவார்கள்; ஆனால் விதியின் விளையாட்டால், கோபுலுவுக்கே ஸ்டிரோக்ஸ்" என்றும் அவர் சொன்னார்..(தொடரும்)
ஒரு நிருபரின் டைரி – 34.எஸ். சந்திரமௌலி.தமிழ்ப் பத்திரிகையுலகம் மிகச்சிறந்த ஓவியர்கள் சிலரை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு வாசகர்களை மகிழ்வித்திருக்கிறது. அந்த சிறிய பட்டியலில் இடம்பெறும் மிக முக்கியமான ஓவியர் கோபுலு. அவரது இயர்பெயர் கோபாலன். தஞ்சாவூர்காரர். இந்தத் தொடரில் டாக்டர் கலாம் குறித்த அத்தியாயத்தில் அவரை சந்திக்கச் சென்றபோது ஓவியர் கோபுலுவிடமிருந்து கலாமை ஒரு கார்டூனாக வரைந்து எடுத்துச் சென்றதையும், அதன் பிரதியில் கலாமிடம் ஆட்டோகிராஃப் வாங்கி அதை கோபுலுவிடம் கொண்டு வந்து கொடுத்தபோது அவர் ஒரு குழந்தை போலக் குதூகலப்பட்டது பற்றியும் பகிர்ந்துகொண்டிருந்தேன். ஆனால், அவரைப் பற்றி தனியாக அத்தியாயமே எழுதவேண்டியது எனது கடமை என்று நினைக்கிறேன்.."கோபுலுவின் வாழ்க்கை அனுபவங்களை ஒரு தொடராக எழுதலாமே!" என்று நான் ஐடியாவை சொன்னதும், அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார் என்றால் அது மிகையில்லை. அவருக்கு அத்தனை சந்தோஷம். அடுத்த சில நாட்களில் கோபுலுவைச் சந்தித்து, அவரது வாழ்க்கை அனுபவங்களை தொடராக எழுத விரும்புவதாக அவரிடம் சொன்னதும் அவர் சொன்னது இன்றைக்கும் எனக்கு மிக நன்றாக நினைவில் உள்ளது: "அந்தக் காலத்தில் கிராமங்களில் பழ வியாபாரி ஒரு பெரிய கூடை நிறைய மாம்பழங்களை தெருத் தெருவாகச் சென்று கூவிக் கூவி மாம்பழம் விற்பார். அத்தனைப் பழங்களும் விற்றுத் தீர்ந்தவுடன், அந்த ஊருக்கு வெளியில் ஒரு மரத்தடியில், காலி பழக்கூடையையே தலைக்கு வைத்துக் கொண்டு ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பார், நானும் அந்தப் பழ வியாபாரியைப் போலத்தான். எனக்குத் தெரிந்த ஓவியக்கலையை வைத்துக் கொண்டு 60 வருடங்களுக்கு சுறுசுறுப்பாக ஓடியாடி வியாபாரம் செய்துவிட்டு, இப்போது வீட்டில் ஈஸி சேரில் சாய்ந்தபடி ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறேன். அந்த சமயத்தில், புல் மேய்ந்த பசு மாடு, நிதானமாக மரத்தடியில் படுத்துக் கொண்டு அசைபோடுவது போல, என் வாழ்க்கை அனுபவங்களை அசைபோட ஒரு வாய்ப்பு இது".அமுதசுரபியில், மாதமாதம், கோபுலு வரைந்த பலவிதமான ஓவியங்களுடன் வெளியான அந்தத் தொடர், பின்னர் " கோடுகளால் ஒரு வாழ்க்கை" என்ற பெயரில் புத்தகமாகவும் வெளியாகி, வாசகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது. வயதானாலும் அவருக்கு நல்ல நினைவாற்றல் இருந்ததால், சின்ன வயசு லூட்டிகள் தொடங்கி அத்தனை விஷயங்களையும் மிகுந்த ஆர்வத்துடன் அசைபோட்டார். அவர் சாதாரணமாகப் பேசும்போதே நகைச்சுவை தெறிக்கும். நாட்டு நடப்பு, உலக நடப்பு பற்றி அவருக்கு அத்துப்படி. அரசியல் விஷயங்கள் பேசும்போது, பளீரென்று சில கமெண்ட்ஸ் வரும்! அவருக்குள்ளே இன்னமும் கார்டூனிஸ்ட் கோபுலு உயிர்ப்புடன் இருக்கிறார் என்பதை அவை உணர்த்தும்..கோபுலுவுக்கும், அவரது வாசகர்களுக்கும் இடையிலான நெருக்கத்தைப் போலவே, கோபுலுவுக்கும், எழுத்தாளர்களுக்கும் இடையிலான நெருக்கமும் ஆழமானது. லட்சுமி, சாண்டில்யன், நா.பார்த்தசாரதி, ஜெயகாந்தன், கலைஞர் கருணாநிதி போன்றவர்களின் எழுத்துக்களுக்கு கோபுலு படம் என்றால் அது வாசகர்களுக்கு பெரும் கொண்டாட்டம்தான்..விகடனில், எழுத்தாளர் தேவனின் மறைவுக்குப் பிறகு, எஸ்.எஸ். வாசன் விகடன் ஆபீசுக்கு தினமும் வந்து, ஆசிரியர் இலாக்காவை கவனித்துக் கொண்டார். அப்போது விகடனுக்குப் புது மெருகூட்டும் நோக்கத்தோடு சில காரியங்கள் செய்தார். அவற்றில் ஒன்று ஜெமினியில் இருந்த 'கலைமணி' என்ற எழுத்தாளரை ஒரு பிரமாதமான தொடர்கதை எழுதச் செய்தார். கலைமணியின் தொடர்கதை ஆரம்பத்திலேயே சூடு பிடித்து, கதையின் ஹீரோ ஷண்முகசுந்தரமும், ஹீரோயின் மோகனாம்பாளும் வாராவாரம் வாசகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள்; வாசகர்கள் மத்தியில் அந்தத் தொடர் அமோக வரவேற்பைப் பெற்றது. அந்த கலைமணி வேறு யாருமில்லை; கொத்தமங்கலம் சுப்புதான். அந்தத் தொடர்கதைதான் 'தில்லானா மோகனாம்பாள்' என திரைப்படமாக எடுக்கப்பட்டது. வாராவாரம் கொத்தமங்கலம் சுப்பு அத்தியாயத்தை எழுதிக் கொடுத்ததும், அது வாசன் பார்வைக்குப் போகும். அவர் அதை எடிட் செய்து அனுப்புவார். அதற்கு நான் படங்கள் போடுவேன். ஷண்முக சுந்தரம்-மோகனாம்பாள் கல்யாண அத்தியாயம் வெளியான விகடன் இதழின் அட்டையில் அவர்கள் கல்யாணக் காட்சியை வண்ண ஓவியமாக நான் வரைந்திருந்தேன். தில்லானா மோகனாம்பாள் கதையினால் சுப்புவுக்கும், படங்களால் எனக்கும் நல்ல பெயர் கிடைத்தது. இன்றும் கூட சிலர் அதைப் பற்றி சிலாகித்துச் சொல்வார்கள்" என்று பழைய நினைவுகளில் அவ்வப்போது மூழ்கிப் போவார் கோபுலு..சாவியும், கோபுலுவும் நெருங்கிய நண்பர்கள். விகடன் காலத்தில் துவங்கிய அவர்களது நட்பு, கல்கி, தினமணி கதிர், குங்குமம், சாவி என தொடர்ந்தது. விகடனில் இருந்தபோது, ஒரு நாள், "நான் நகைச்சுவைத் தொடருக்காக ஒரு புதுமையான ஐடியா வைத்திருக்கிறேன். நம் பாரம்பரிய திருமணம் ஒன்று அமெரிக்காவில் வாஷிங்டன் நகரத்தில் நடந்தால் எப்படி இருக்கும்? அதில் என்னென்ன கலாட்டாக்கள், குழப்பங்கள் நடக்கும்? அவற்றை வைத்து எழுதப் போகும் அந்தத் தொடருக்குத் தலைப்பு "வாஷிங்டன்னில் திருமணம்". அந்தத் தொடர்கதைக்கு நான் படம் போட வேண்டும் என்று சாவி கேட்டார். சாவியின் கற்பனைக்கு ஈடுகொடுக்கும் வண்ணம் வாஷிங்டன்னில் திருமணம் தொடருக்கு படம் வரைந்து கொடுத்தது மறக்க முடியாத அனுபவம்..அஜந்தா, எல்லோரா, ஜெய்ப்பூர் உள்ளிட்ட பல ஊர்களுக்கும் அவரோடு கூடவே சென்று சாவியின் பயணக் கட்டுரைகளுக்கு புதுப் பரிமாணம் கொடுத்தவர் கோபுலு. சாவி தினமணி கதிரில் இருந்தபோது, கோபுலு ஆர்வத்துடன் நிறைய சித்திரங்கள் வரைந்து கொடுத்தார் என்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அன்றைய காலகட்டத்தில் மற்ற தமிழ் பத்திரிகைகளைவிட தினமணி கதிரின் சைஸ் பெரிசு. எனவே, சாவி, ஓவியர்களிடமிருந்து தொடர்கதைகளுக்கு பெரிசு, பெரிசாக படங்களை வரையச் செய்து, வாங்கி வெளியிடுவார்..டாக்டர் திரிபுரசுந்தரி என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் லட்சுமி தன் தொடர்களுக்கு கோபுலு படம் வரையப்போகிறார் என்றால், தொடர் கதை ஆரம்பிக்கும் முன்பாக அவரைச் சந்தித்து, கதையைச் சொல்லிவிடுவது வழக்கம். சில சமயங்களில் எழுத்தாளர் சாண்டில்யன், தன் அத்தியாயத்தோடு அவரை வந்து சந்தித்து, கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருப்பார். நா. பார்த்தசாரதி கதைகளுக்கு அவர் படம் போட்டு அனுப்பி வைத்தால், பல சமயங்களில் போன் செய்து நெகிழ்ச்சியோடு பாராட்டி இருக்கிறார். கலைஞரின் பொன்னர்-சங்கர் உள்ளிட்ட தொடர்கதைகளாகட்டும், குறளோவியம் போன்ற இலக்கிய சமாசாரங்கள் ஆகட்டும் ஓவியம் வரைவது கோபுலுதான்..மற்ற எழுத்தாளர்கள் போல, தொடர்கதைகளை அத்தியாயம், அத்தியாயமாக அனுப்பாமல், முதலிலேயே ஒட்டு மொத்தமாக எழுதிக் கொடுத்துவிடுவது எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனுன் வழக்கம். தினமணி கதிருக்கு, மண்ணகத்துப் பூக்கள் என்ற தலைப்பில் தொடர் ஒன்றை அவர் எழுதிக் கொடுத்தபோது, "எனது படைப்புகள் எதற்கும் கோபுலு படம் போட்டதில்லை; இந்த தொடருக்கு அவர் சித்திரங்கள் வரைந்தால் நான் பெரிதும் மகிழ்வேன்" என்று சொன்னார். இது பற்றி கோபுலுவிடம் சொன்னபோது, "நான் அவரது எழுத்துக்களின் ரசிகனாயிற்றே! அவரது உயரிய படைப்புக்களுக்கு சித்திரம் வரைய எனக்கு வாய்ப்பு அமைந்ததே இல்லை; அவரது எழுத்துக்கு சித்திரம் வரைவது எனக்கு பெரிய கௌரவம்!" என்றார் பெருமையோடு. ராஜம் கிருஷ்ணன் விரும்பியது போலவே கோபுலுவின் சித்திரங்கள் அவரது தொடருக்கு பெருமை சேர்த்தன.."தமிழின் கிரேட் எழுத்தாளர் கல்கி. அவர் கதைகள் எழுதினபோது நான் படங்கள் வரைய வாய்ப்பு கிடைக்கவில்லையே என்கிற என்னுடைய குறையை, கல்கி தீபாவளி மலர்களில் மறு பிரசுரம் செய்யப்பட்ட அவரது கதைகளுக்கு படம் வரைந்து தீர்த்துக் கொண்டேன்" என்று சொல்லுவார். கல்கி பதிப்பகம் 'சிவகாமியின் சபதம்', 'பார்த்திபன் கனவு' போன்றவற்றை செம்பதிப்பாக வெளியிட்டபோது வண்ணப்படங்கள் வரைந்து மெருகூட்டியவர் கோபுலுதான்..ஓவியர் மணியம் மறைந்தபோது, அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தினமணி கதிரில் ஒரு கட்டுரை எழுதினார் கோபுலு. அந்தக் கட்டுரையை அவர் இப்படி முடித்திருந்தார்: "மணியம் எங்கும் போகவில்லை, மேல் உலகில் இருக்கும் கல்கி, சரித்திரக் கதை எழுத ஆரம்பித்துவிட்டார் போலிருக்கிறது. அதற்கு சித்திரம் போட அவரை அழைத்துக் கொண்டார்".1963ல் முழு நேர பத்திரிகைதுறைப் பணியில் இருந்து கோபுலு விளம்பரத்துறைக்கு மாறினார். 1972ல் சொந்தமாக "அட்வேவ்" என்ற விளம்பர நிறுவனத்தைத் துவக்கினார். அதென்ன அட்வேவ்? அந்த சமயம் சென்னையில் கடும் வெயில் சுட்டெரித்தது. பேப்பர்களில் 'ஹீட் வேவ்" பற்றிய செய்திகள் வந்தன. அதைப் பார்த்து, விளம்பர உலகில் புதிய அலையை ஏற்படுத்தும் நோக்கத்தோடு தன் புது விளம்பர நிறுவனத்துக்கு அட் வேவ் என்று பெயர் வைத்தார் கோபுலு..அட் வேவின் ஆரம்ப கால கிளையன்ட்களில் முக்கியமானது காளிமார்க் குளிர்பான நிறுவனம். இதற்கு கோபுலு உருவாக்கிய தீம்தான்: ஜனங்க காளி மார்க் விளம்பரங்களை படிச்சு ரசிக்கணும்; காளி மார்க் குளிர் பானங்களை ரசிச்சுக் குடிக்கணும். அதன்படி, ஏராளமான கோபுலு டிடேட் மார்க் நகைச்சுவை கார்ட்டூன்கள் மூலமாக காளிமார்க் குளிபானங்கள் விளம்பரப்படுத்தப்பட்டன.."பத்தாண்டுகளுக்கு ஒரு தடவை என்னை நான் புதுப்பித்துக் கொள்வேன். இல்லையென்றால், டிசோனர் மாதிரி மியூசியத்துக்குப் போய்விட வேண்டியதுதான்" என்று சொல்லுவார் அவர். புது விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் அவருக்கு அபாரமான ஆர்வம் இருந்தது. அமுதசுரபியில் அவரது அனுபவத் தொடரை எழுதியபோது, அவருடனான உரையாடல்களை பதிவு செய்வதற்காக சில சமயங்களில் மைக்ரோ டேப் ரெக்கார்டரைக் கொண்டு போவேன். சில சமயங்களில் டிஜிட்டல் வாய்ஸ் ரெக்கார்டரைக் கொண்டு போவேன். அவரசத்துக்கு, என் மொபைல் ஃபோனிலேயே அவர் சொன்னவற்றை பதிவு செய்ததும் உண்டு. வாய்ஸ் ரெக்கார்டர், மொபைல் ரெக்கார்டிங் சமயங்களில் அவற்றைப் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்வார்..ஒருநாள், பத்திரிக்கைக்கான மேட்டர்களையெல்லாம் நான் பேனாவால், பேப்பரில் எழுதிக் கொடுத்து பல வருடங்களாகிவிட்டன. தமிழ் டைப்பிங் தெரியாதுபோனாலும், அழகி என்ற மொழி மென்பொருளைப் பயன்படுத்தி, ஆங்கிலத்தில் டைப் செய்தால், அது தமிழில் வரும் என்றபோது, அதைக் கற்றுக் கொண்டு பயன்படுத்த ஆர்வம் காட்டினார் அந்த முதிய இளைஞர். அவரது கம்ப்யூட்டரில் அந்த தமிழ் சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்து கொடுத்துவிட்டு, இனி நீங்கள் தமிழிலேயே ஈ மெயில் அனுப்ப முடியும் என்றபோது, தானே முயன்று அவர் முதல் ஈ மெயிலை அனுப்பியது ஹிந்து நாளிதழின் கார்டூனிஸ்டான கேசவுக்கு..2002 பிப்ரவரியில் ஓர் இரவில் அவருக்கு ஸ்டிரோக் வந்து நடு இரவில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இடது பக்க மூளையில் ரத்தம் கிளாட் ஆகி, உடலின் வலது பக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. ஐ.சி.யூ.வில் தீவிர சிகிச்சைக்குப் பின், உடல் நலம் தேறி, வார்டுக்கு வந்த பிறகு, டாக்டர் செரியனின் ஆலோசனையின்பேரில், இடது கையால் ஓவியம் வரையப் பழகினார். அவர் தன் இடது கையால் வரைந்த ஓவியங்கள் பல. இது குறித்து கோபுலு "உங்கள் மூளைதான் உண்மையான ஆர்டிஸ்ட். மூளையின் உத்தரவுப்படி, இத்தனை நாள் உங்களது வலது கை ஓவியங்கள் வரைந்துகொண்டிருந்தது; இப்போது அது செயல் இழந்துவிட்ட நிலையில் அந்த வேலையினை உங்கள் இடது கை செய்யப்போகிறது. எனவே இடது கையால் உங்களால் நன்றாக ஓவியம் வரைய முடியும்" என்று டாக்டர் செரியன் ஊக்குவித்ததை சொல்லிவிட்டு, உடனே, நகைச்சுவையோடு, "பொதுவாக என் பாணிகோடுகளை "கோபுலு ஸ்டிரோக்ஸ்" என்று சொல்லுவார்கள்; ஆனால் விதியின் விளையாட்டால், கோபுலுவுக்கே ஸ்டிரோக்ஸ்" என்றும் அவர் சொன்னார்..(தொடரும்)