உலகக் குடிமகன் – 33.நா.கண்ணன்.கொரியாவிற்கும் இந்தியாவிற்கும் பல ஒற்றுமைகளுண்டு. இவையிரண்டும் தீபகற்ப நாடுகள். இந்த நாடுகள் அந்நிய ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகியிருக்கின்றன. ஆனால், வம்படியாக பிற நாடுகளை ஆக்கிரமித்ததில்லை. சாம்சுங், எல்.ஜி, ஹுயுந்தே (ஹுண்டாய் அல்ல) இவை இந்தியாவில் நிலைபெற்றபின்தான் நமக்கெல்லாம் கொரியா பற்றித் தெரியும். ஆனால், கொரியாவின் ஆரம்பமே இந்துத் தொன்மங்களிலிருந்து வருகிறது என்பதை நாமறியோம். 'சக்கிரோன்' எனும் இந்திரனின் மகன் ஹுவான்யுங் புவிக்கு வந்து வாழ ஆசைப்பட்டு கொரிய நாட்டில் தேபேக் மலையைத் தேர்தெடுக்கிறான் என்கிறது கொரிய விவிலியம். அவனுக்கு பக்கபலமாக இருக்கட்டும் என்று மூவாயிரம் தேவர்களையும், வாயு, காற்று, மேகமெனும் நான்கு மந்திரிகளையும் சக்கிரோ தேவேந்திரன் அனுப்பி வைத்தான் என "சம்யுக் உசா" எனும் கொரிய பைபிள் விவரிக்கிறது. அவன் ஒரு சந்தன மரத்தின் அடியில் தோன்றினான் என்றும் சொல்கிறது! சந்தனமரம் பொதிகை சார்ந்தது. கொரியா சார்ந்தது அல்ல..இதை அறிந்தோ அறியாமலோ ரவீந்திரநாத் தாகூர் கொரியாவைப் பற்றிப் பாடி வைத்துவிட்டார். "ஆசியாவின் பொற்காலத்தில் கொரியாவே திருவிளக்கு ஏற்றி நின்றது. அந்த விளக்கு மீண்டும் எரியக் காத்திருக்கிறது. அவ்விளக்கு எரியும் போது கிழக்கு முழுவதும் பிரகாசமாகும்" என்று 1929 லேயே எழுதி வைத்துவிட்டார். அப்போது கஞ்சிக்கு அலைந்து கொண்டிருந்தது கொரியா. உலகின் ஏழை நாடுகளில் ஒன்றாக இருந்த கொரியா 1960 களுக்குப் பிறகு அதீத வளர்ச்சி கண்டது. இதை 'ஹான் நதி அதிசயம்' என சரித்திரம் சொல்கிறது. நான் கொரியாவில் கால் வைத்த போது உலகின் பணக்கார நாடுகளில் 13 இடத்தைக் கொரியா பிடித்திருந்தது. நான் எட்டு ஆண்டுகள் அங்கு வாழ்ந்து விடைபெறும் போது உலகின் 11வது பணக்கார நாடாக உயர்ந்திருந்தது. எல்லோருக்கும் கல்வி, திட்டமிட்ட வளர்ச்சி, கடின உழைப்பு, உலகத்தரம் என இவைகளைக் கொண்டு இந்த அதிசயத்தைக் கொரியா செய்து காட்டியது!.ஆசியா பசிபிக் பொருளாதாரக் கூட்டமைபிற்கு கொரியா தாராளமாக நிதி வழங்கியது. அதைப் பயன்படுத்திக் கொண்டு எங்கள் பயிற்சி நடந்தது. மாணவர்கள் மேற்கே பாகிஸ்தான் கிழக்கே பிஜித்தீவு வரையென வந்த வண்ணம் இருந்தனர். வருடம் ஒருமுறை என்றாலும் சில நேரம் இருமுறை கூட பயிற்சி முகாம் அமைந்தது. ஆப்பிரிக்கர்களை தோற்கடிக்கும் கருமை கொண்ட பபுவா நியூகினி, பெரு, பிரேசில் போன்ற நாடுகளின் வெள்ளை லத்தினோ, சீனா, மங்கோலிய மஞ்சள், ஸ்ரீலங்கா, இந்தோனீசிய பளுப்பு நிறமென மிக வித்தியாசமான மாணவர்களுக்குப் பாடம் போதித்தது எனக்கொரு புது அனுபவம். இப்பதவியினால் எனக்கு ஆசியாவின் பல நாடுகளுக்குப் பயணப்படும் வாய்ப்புக் கிட்டியது. அப்போதுதான் இந்தியர்களுக்கு போட்டி தரும் பிலிப்பினோக்கள், ஆசியாவின் உச்சாணிக் கொப்பிற்கு பயணமிடும் வியட்நாமியர் போன்ற மக்களை அறிந்து கொண்டேன். ஆசியாவில் மிக வேகமாக முன்னேறும் இன்னொரு பொருளாதாரம் இந்தோனீசியா. இவர்களோடு பழகும் போதும், இந்நாடுகளுக்குப் பயணப்படும் போதும் நமது பண்டைய உறவுகளை கண்ணுறாமல் இருக்க முடியவில்லை..ராஜராஜன் இங்கு ஆட்சி செய்யும் போது கம்போடிய, தாய்லாந்து நாடுகளை இந்து கெமிர் ஆண்டு கொண்டு இருந்தனர். இவர்களது தாக்கம் வியட்நாம் வரை இருந்தது. அதே நேரத்தில் இந்தோனீசியா, பிலிபைன்ஸ், மலேசியா நாடுகளில் ஸ்ரீவிஜயா இந்துக்கள் ஆண்டு கொண்டிருந்தனர். உலகின் மிகப்பெரிய விஷ்ணு ஆலயம் அங்கோர்வாட்டில் (கம்போடியா) அமைந்திருக்கிறது. அதேபோல் உலகின் மிகப்பெரிய புத்தர் கோயில் இந்தோனீசிய புரபடூர் நகரில் அமைந்துள்ளது. பாலித்தீவு முழுக்க இந்துக்களே வசிக்கின்றனர். இப்படி நம் வேர்கள் தென்கிழக்கு, தூரக்கிழக்கில் கிளைத்து பரவிக்கிடக்கும் போது நாம் ஆங்கிலத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு மேற்கு நோக்கிய மயக்கத்தில் இருக்கிறோம். எந்த இந்தியத் தலைமையும் "கிழக்கே நோக்கு" என சூளுரைத்து உறவு கொண்டாடவில்லை. எனவேதான் நான் கொரியாவிற்கும் தமிழகத்திற்குமான பண்டைய உறவுகளை ஆராய்ந்து "கொரியாவின் தமிழ் ராணி" என்றொரு நூலை 2017ல் வெளியிட்டேன். தமிழர்களுக்கு கொரியா மீதான ஈர்ப்பு கேபாப் போன்ற கலாசார உந்துதலால் ஏற்படுகிறது. எனது நூல் ஆழி பதிப்பகத்தின் பெஸ்ட் செல்லராக இன்றுவரை இருந்து வருவது இதனால்தான் போலும்..பயிற்சி முகாம் ஒருபுறமிருக்க எனது சூழலியல் ஆய்வு ஆரோக்கியமாக அங்கு தொடர்ந்து கொண்டிருந்தது. நிறைய ஆய்வுக்கட்டுரைகள் வெளியிட்டோம். உலக அரங்கில் கவனம் பெற்றோம். அப்போதுதான் கொரியாவின் மிகப்பெரிய எண்ணெய்க் கசிவு (விபத்து) 'தேஅன்' எனுமிடத்தில் நடந்தது. இதை ஆராய்ந்து சூழல் எவ்வளவு பாதிப்புற்று இருக்கிறது எனச் சொல்லும் பொறுப்பு எங்களுக்கு வந்தது. இதுவொரு புதிய சவால். நீண்ட கடற்கரை கருப்பு எண்ணெய்க் கசடால் பூசப்பட்டுவிடும் போது அங்குள்ளோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அங்கு கடல்வாழ் உயிரினங்கள் செயல் இழக்கின்றன, காற்று மாசடைகிறது, நீர் அசுத்தமாகிறது. இத்தகைய விபத்துகள் நடந்தால் என்ன செய்ய வேண்டுமென்ற ஆரம்பப்பாடம் கூட பல நாடுகளுக்குத் தெரிவதில்லை. இது கொரியாவின் முதல் விபத்து என்பதால் நாங்களும் கற்றுக் கொண்டிருந்தோம். அமெரிக்க, ஐரோப்பிய, கனடா நாட்டு விற்பன்னர்கள் வந்து ஆலோசனை சொல்லினர். இதை வைத்து சர்வதேசப் பயிற்சி முகாம் செய்தோம். எப்படி? விபத்து ஏற்பட்ட பின் என்ன செய்வதென ஆலோசித்துக் கொண்டிராமல் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டுமென நாங்கள் பெற்ற பாடத்தை சொல்லிக் கொடுத்தோம். பிழைகள்தானே நல்ல ஆசான்கள்..ஜப்பான் இரண்டாம் உலகப் போரில் சீனாவையும், கொரியாவையும் 'நாட்சிகள் ஜெர்மனியில் செய்தது' போன்று கொடுமைப்படுத்தி ஆக்கிரமித்து வளங்களைச் சுரண்டி அந்நாடுகளின் முன்னேற்றத்தைக் குறைந்தது 30 ஆண்டுகள் பின் தள்ளிவிட்டுச் சென்றது. எனவேதான் இந்நாடுகள் இக்காலத்தாழ்வை சரிகட்ட பெருமுயற்சி எடுக்க வேண்டியதாகிவிட்டது. முதலில் ஜப்பான், பின் கொரியா, பின் சீனா என இந்நாடுகள் வளர்ச்சியில் உலகக் கவனம் பெற்றன. நான் கொரிய, சீன வளர்ச்சியை நேரில் கண்டவன். சீனாவின் வளர்ச்சியை படிப்படியாக ஒவ்வொருமுறை போகும் போதும் கண்டேன். அங்கு கம்யூனிச ஆட்சிதான் இன்றும். எனவே திட்டமிட்டு வளர்ச்சியைக் கொண்டு செல்ல முடிகிறது. இன்று உலகப் பொருளாதாரம் சீனாவின் கையில். உலகில் எங்கு சென்றாலும் எலெக்ட்ரானிக்ஸ் என்றால் அது சீனா, தைவான், கொரியாவின் கையில்தான் இருக்கும். அத்தகைய ஆளுமை..இந்த நாடுகளுக்குள் உள்நாட்டுப் பிரச்னைகள் இருந்து கொண்டே இருக்கும். பழைய பகை உணர்வில் சீனா வடகொரியாவை கையில் போட்டுக் கொண்டு ஜப்பானை சீண்டிக் கொண்டே இருக்கும். ஒரு காலத்தில் சீன மொழியே அந்தப் பிரதேசத்தில் கோலோட்சியதால் கொரியாவின் சரிதம் என்பதைச் சீன மொழியறியாமல் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் கொரியர்கள் மங்கோலிய வம்சத்தினர் எனச் சொல்லி சீன பாரம்பரியத்தை மறைக்க முயல்கின்றனர். ஆனால் சீனாவோ கொரியாவே ஒரு காலத்தில் சீனாவாகத்தான் இருந்தது என்கிறது. இதற்கிடையில் வடகொரியா அவ்வப்போது எரிகணை எறிந்து எல்லோரையும் பயமுறுத்துகிறது..இந்தக் குழப்பத்தில் நான் கொரியாவில் தமிழ் ரத்தம் இருக்கிறது எனச் சொல்வது செவிடன் காதில் ஊதிய சங்குதான்! அங்குள்ள சரித்திரவியலர் இத்தொன்மங்கள் சரிதமாகாது என்கின்றனர். ஆனால் சீன, ஜப்பானிய, கொரிய சரிதம் தொன்மையானது எனும்போது இந்த நாட்டார் கதைகளை சேர்த்துக் கொண்டுதான் அவர்கள் எழுத வேண்டியுள்ளது. ஆனால் நாம் இன்னும் மேக்ஸ்முல்லர் சொல்லிய காலக் கணக்கையே சொல்லிக் கொண்டிருக்கிறோம். இராமாயண, மகாபாரத, புராணங்கள் எல்லாம் கட்டுக்கதைகள் என்று சொல்லி நம் சரிதத்தில் சேர்ப்பதில்லை. நாட்டார் கதைகளுக்கு எந்த மதிப்பும் கொடுப்பதில்லை. ஆனால் கிழக்கே இக்கதைகள் நடந்த காலத்தைக் குறிப்பெடுத்துச் சொல்கின்றனர். உதாரணமாக பண்டைய தமிழகத்திலிருந்து செம்பவளம் எனும் இளவரசி கொரியாவிற்குச் சென்றது கிபி 47 என்கிறது சம்யுக் உசா!.உலகிலேயே பல்லினக் கூட்டுதான் இந்தியா என்று பெருமையாகச் சொல்லும் ஒரே நாடு அமெரிக்காவிற்குப் பின் இந்தியாவாகத்தான் இருக்க முடியும். ஆனால் ஜப்பானியர் சூரிய வம்சமென்றும், கொரியர்கள் மங்கோலிய வம்சமென்றும், சுத்தமான இனம் என்று சொல்லி வருகின்றனர். உண்மையான சரிதத்தை ஆராய்ந்தால் ஏகப்பட்ட இனக்கலப்பு இருப்பது தெரியும். சோல் தேசிய பல்கலைக் கழக ஆய்வு கொரியா சென்ற ராணி தென்னாசியாவைச் சேர்ந்தவள் என டி.என்.ஏ ஜினோகிம்ஸ் மூலம் கண்டு பிடித்துள்ளனர். ஆக, நாட்டார் கதை என்பது வெறும் கதையல்ல, அது மறக்கப்பட்ட சரிதம் என்பதை அடிக்கடி நினைவுறுத்த வேண்டியுள்ளது..(தொடரும்)
உலகக் குடிமகன் – 33.நா.கண்ணன்.கொரியாவிற்கும் இந்தியாவிற்கும் பல ஒற்றுமைகளுண்டு. இவையிரண்டும் தீபகற்ப நாடுகள். இந்த நாடுகள் அந்நிய ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகியிருக்கின்றன. ஆனால், வம்படியாக பிற நாடுகளை ஆக்கிரமித்ததில்லை. சாம்சுங், எல்.ஜி, ஹுயுந்தே (ஹுண்டாய் அல்ல) இவை இந்தியாவில் நிலைபெற்றபின்தான் நமக்கெல்லாம் கொரியா பற்றித் தெரியும். ஆனால், கொரியாவின் ஆரம்பமே இந்துத் தொன்மங்களிலிருந்து வருகிறது என்பதை நாமறியோம். 'சக்கிரோன்' எனும் இந்திரனின் மகன் ஹுவான்யுங் புவிக்கு வந்து வாழ ஆசைப்பட்டு கொரிய நாட்டில் தேபேக் மலையைத் தேர்தெடுக்கிறான் என்கிறது கொரிய விவிலியம். அவனுக்கு பக்கபலமாக இருக்கட்டும் என்று மூவாயிரம் தேவர்களையும், வாயு, காற்று, மேகமெனும் நான்கு மந்திரிகளையும் சக்கிரோ தேவேந்திரன் அனுப்பி வைத்தான் என "சம்யுக் உசா" எனும் கொரிய பைபிள் விவரிக்கிறது. அவன் ஒரு சந்தன மரத்தின் அடியில் தோன்றினான் என்றும் சொல்கிறது! சந்தனமரம் பொதிகை சார்ந்தது. கொரியா சார்ந்தது அல்ல..இதை அறிந்தோ அறியாமலோ ரவீந்திரநாத் தாகூர் கொரியாவைப் பற்றிப் பாடி வைத்துவிட்டார். "ஆசியாவின் பொற்காலத்தில் கொரியாவே திருவிளக்கு ஏற்றி நின்றது. அந்த விளக்கு மீண்டும் எரியக் காத்திருக்கிறது. அவ்விளக்கு எரியும் போது கிழக்கு முழுவதும் பிரகாசமாகும்" என்று 1929 லேயே எழுதி வைத்துவிட்டார். அப்போது கஞ்சிக்கு அலைந்து கொண்டிருந்தது கொரியா. உலகின் ஏழை நாடுகளில் ஒன்றாக இருந்த கொரியா 1960 களுக்குப் பிறகு அதீத வளர்ச்சி கண்டது. இதை 'ஹான் நதி அதிசயம்' என சரித்திரம் சொல்கிறது. நான் கொரியாவில் கால் வைத்த போது உலகின் பணக்கார நாடுகளில் 13 இடத்தைக் கொரியா பிடித்திருந்தது. நான் எட்டு ஆண்டுகள் அங்கு வாழ்ந்து விடைபெறும் போது உலகின் 11வது பணக்கார நாடாக உயர்ந்திருந்தது. எல்லோருக்கும் கல்வி, திட்டமிட்ட வளர்ச்சி, கடின உழைப்பு, உலகத்தரம் என இவைகளைக் கொண்டு இந்த அதிசயத்தைக் கொரியா செய்து காட்டியது!.ஆசியா பசிபிக் பொருளாதாரக் கூட்டமைபிற்கு கொரியா தாராளமாக நிதி வழங்கியது. அதைப் பயன்படுத்திக் கொண்டு எங்கள் பயிற்சி நடந்தது. மாணவர்கள் மேற்கே பாகிஸ்தான் கிழக்கே பிஜித்தீவு வரையென வந்த வண்ணம் இருந்தனர். வருடம் ஒருமுறை என்றாலும் சில நேரம் இருமுறை கூட பயிற்சி முகாம் அமைந்தது. ஆப்பிரிக்கர்களை தோற்கடிக்கும் கருமை கொண்ட பபுவா நியூகினி, பெரு, பிரேசில் போன்ற நாடுகளின் வெள்ளை லத்தினோ, சீனா, மங்கோலிய மஞ்சள், ஸ்ரீலங்கா, இந்தோனீசிய பளுப்பு நிறமென மிக வித்தியாசமான மாணவர்களுக்குப் பாடம் போதித்தது எனக்கொரு புது அனுபவம். இப்பதவியினால் எனக்கு ஆசியாவின் பல நாடுகளுக்குப் பயணப்படும் வாய்ப்புக் கிட்டியது. அப்போதுதான் இந்தியர்களுக்கு போட்டி தரும் பிலிப்பினோக்கள், ஆசியாவின் உச்சாணிக் கொப்பிற்கு பயணமிடும் வியட்நாமியர் போன்ற மக்களை அறிந்து கொண்டேன். ஆசியாவில் மிக வேகமாக முன்னேறும் இன்னொரு பொருளாதாரம் இந்தோனீசியா. இவர்களோடு பழகும் போதும், இந்நாடுகளுக்குப் பயணப்படும் போதும் நமது பண்டைய உறவுகளை கண்ணுறாமல் இருக்க முடியவில்லை..ராஜராஜன் இங்கு ஆட்சி செய்யும் போது கம்போடிய, தாய்லாந்து நாடுகளை இந்து கெமிர் ஆண்டு கொண்டு இருந்தனர். இவர்களது தாக்கம் வியட்நாம் வரை இருந்தது. அதே நேரத்தில் இந்தோனீசியா, பிலிபைன்ஸ், மலேசியா நாடுகளில் ஸ்ரீவிஜயா இந்துக்கள் ஆண்டு கொண்டிருந்தனர். உலகின் மிகப்பெரிய விஷ்ணு ஆலயம் அங்கோர்வாட்டில் (கம்போடியா) அமைந்திருக்கிறது. அதேபோல் உலகின் மிகப்பெரிய புத்தர் கோயில் இந்தோனீசிய புரபடூர் நகரில் அமைந்துள்ளது. பாலித்தீவு முழுக்க இந்துக்களே வசிக்கின்றனர். இப்படி நம் வேர்கள் தென்கிழக்கு, தூரக்கிழக்கில் கிளைத்து பரவிக்கிடக்கும் போது நாம் ஆங்கிலத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு மேற்கு நோக்கிய மயக்கத்தில் இருக்கிறோம். எந்த இந்தியத் தலைமையும் "கிழக்கே நோக்கு" என சூளுரைத்து உறவு கொண்டாடவில்லை. எனவேதான் நான் கொரியாவிற்கும் தமிழகத்திற்குமான பண்டைய உறவுகளை ஆராய்ந்து "கொரியாவின் தமிழ் ராணி" என்றொரு நூலை 2017ல் வெளியிட்டேன். தமிழர்களுக்கு கொரியா மீதான ஈர்ப்பு கேபாப் போன்ற கலாசார உந்துதலால் ஏற்படுகிறது. எனது நூல் ஆழி பதிப்பகத்தின் பெஸ்ட் செல்லராக இன்றுவரை இருந்து வருவது இதனால்தான் போலும்..பயிற்சி முகாம் ஒருபுறமிருக்க எனது சூழலியல் ஆய்வு ஆரோக்கியமாக அங்கு தொடர்ந்து கொண்டிருந்தது. நிறைய ஆய்வுக்கட்டுரைகள் வெளியிட்டோம். உலக அரங்கில் கவனம் பெற்றோம். அப்போதுதான் கொரியாவின் மிகப்பெரிய எண்ணெய்க் கசிவு (விபத்து) 'தேஅன்' எனுமிடத்தில் நடந்தது. இதை ஆராய்ந்து சூழல் எவ்வளவு பாதிப்புற்று இருக்கிறது எனச் சொல்லும் பொறுப்பு எங்களுக்கு வந்தது. இதுவொரு புதிய சவால். நீண்ட கடற்கரை கருப்பு எண்ணெய்க் கசடால் பூசப்பட்டுவிடும் போது அங்குள்ளோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அங்கு கடல்வாழ் உயிரினங்கள் செயல் இழக்கின்றன, காற்று மாசடைகிறது, நீர் அசுத்தமாகிறது. இத்தகைய விபத்துகள் நடந்தால் என்ன செய்ய வேண்டுமென்ற ஆரம்பப்பாடம் கூட பல நாடுகளுக்குத் தெரிவதில்லை. இது கொரியாவின் முதல் விபத்து என்பதால் நாங்களும் கற்றுக் கொண்டிருந்தோம். அமெரிக்க, ஐரோப்பிய, கனடா நாட்டு விற்பன்னர்கள் வந்து ஆலோசனை சொல்லினர். இதை வைத்து சர்வதேசப் பயிற்சி முகாம் செய்தோம். எப்படி? விபத்து ஏற்பட்ட பின் என்ன செய்வதென ஆலோசித்துக் கொண்டிராமல் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டுமென நாங்கள் பெற்ற பாடத்தை சொல்லிக் கொடுத்தோம். பிழைகள்தானே நல்ல ஆசான்கள்..ஜப்பான் இரண்டாம் உலகப் போரில் சீனாவையும், கொரியாவையும் 'நாட்சிகள் ஜெர்மனியில் செய்தது' போன்று கொடுமைப்படுத்தி ஆக்கிரமித்து வளங்களைச் சுரண்டி அந்நாடுகளின் முன்னேற்றத்தைக் குறைந்தது 30 ஆண்டுகள் பின் தள்ளிவிட்டுச் சென்றது. எனவேதான் இந்நாடுகள் இக்காலத்தாழ்வை சரிகட்ட பெருமுயற்சி எடுக்க வேண்டியதாகிவிட்டது. முதலில் ஜப்பான், பின் கொரியா, பின் சீனா என இந்நாடுகள் வளர்ச்சியில் உலகக் கவனம் பெற்றன. நான் கொரிய, சீன வளர்ச்சியை நேரில் கண்டவன். சீனாவின் வளர்ச்சியை படிப்படியாக ஒவ்வொருமுறை போகும் போதும் கண்டேன். அங்கு கம்யூனிச ஆட்சிதான் இன்றும். எனவே திட்டமிட்டு வளர்ச்சியைக் கொண்டு செல்ல முடிகிறது. இன்று உலகப் பொருளாதாரம் சீனாவின் கையில். உலகில் எங்கு சென்றாலும் எலெக்ட்ரானிக்ஸ் என்றால் அது சீனா, தைவான், கொரியாவின் கையில்தான் இருக்கும். அத்தகைய ஆளுமை..இந்த நாடுகளுக்குள் உள்நாட்டுப் பிரச்னைகள் இருந்து கொண்டே இருக்கும். பழைய பகை உணர்வில் சீனா வடகொரியாவை கையில் போட்டுக் கொண்டு ஜப்பானை சீண்டிக் கொண்டே இருக்கும். ஒரு காலத்தில் சீன மொழியே அந்தப் பிரதேசத்தில் கோலோட்சியதால் கொரியாவின் சரிதம் என்பதைச் சீன மொழியறியாமல் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் கொரியர்கள் மங்கோலிய வம்சத்தினர் எனச் சொல்லி சீன பாரம்பரியத்தை மறைக்க முயல்கின்றனர். ஆனால் சீனாவோ கொரியாவே ஒரு காலத்தில் சீனாவாகத்தான் இருந்தது என்கிறது. இதற்கிடையில் வடகொரியா அவ்வப்போது எரிகணை எறிந்து எல்லோரையும் பயமுறுத்துகிறது..இந்தக் குழப்பத்தில் நான் கொரியாவில் தமிழ் ரத்தம் இருக்கிறது எனச் சொல்வது செவிடன் காதில் ஊதிய சங்குதான்! அங்குள்ள சரித்திரவியலர் இத்தொன்மங்கள் சரிதமாகாது என்கின்றனர். ஆனால் சீன, ஜப்பானிய, கொரிய சரிதம் தொன்மையானது எனும்போது இந்த நாட்டார் கதைகளை சேர்த்துக் கொண்டுதான் அவர்கள் எழுத வேண்டியுள்ளது. ஆனால் நாம் இன்னும் மேக்ஸ்முல்லர் சொல்லிய காலக் கணக்கையே சொல்லிக் கொண்டிருக்கிறோம். இராமாயண, மகாபாரத, புராணங்கள் எல்லாம் கட்டுக்கதைகள் என்று சொல்லி நம் சரிதத்தில் சேர்ப்பதில்லை. நாட்டார் கதைகளுக்கு எந்த மதிப்பும் கொடுப்பதில்லை. ஆனால் கிழக்கே இக்கதைகள் நடந்த காலத்தைக் குறிப்பெடுத்துச் சொல்கின்றனர். உதாரணமாக பண்டைய தமிழகத்திலிருந்து செம்பவளம் எனும் இளவரசி கொரியாவிற்குச் சென்றது கிபி 47 என்கிறது சம்யுக் உசா!.உலகிலேயே பல்லினக் கூட்டுதான் இந்தியா என்று பெருமையாகச் சொல்லும் ஒரே நாடு அமெரிக்காவிற்குப் பின் இந்தியாவாகத்தான் இருக்க முடியும். ஆனால் ஜப்பானியர் சூரிய வம்சமென்றும், கொரியர்கள் மங்கோலிய வம்சமென்றும், சுத்தமான இனம் என்று சொல்லி வருகின்றனர். உண்மையான சரிதத்தை ஆராய்ந்தால் ஏகப்பட்ட இனக்கலப்பு இருப்பது தெரியும். சோல் தேசிய பல்கலைக் கழக ஆய்வு கொரியா சென்ற ராணி தென்னாசியாவைச் சேர்ந்தவள் என டி.என்.ஏ ஜினோகிம்ஸ் மூலம் கண்டு பிடித்துள்ளனர். ஆக, நாட்டார் கதை என்பது வெறும் கதையல்ல, அது மறக்கப்பட்ட சரிதம் என்பதை அடிக்கடி நினைவுறுத்த வேண்டியுள்ளது..(தொடரும்)