அண்ணாத்தே வந்த பாதை – 6.எஸ்.பி.முத்துராமன் எழுத்து வடிவம் : எஸ்.சந்திரமெளலி.ஏவி.எம்.தயாரித்த 'நல்லவனுக்கு நல்லவன்' படத்தில் ரஜினிக்கு இரண்டு கதாபாத்திரங்கள். முதல் பாதியில், சதா அடிதடியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அடியாள் கேரக்டர். இரண்டாவது பாதியில் பணக்காரர். இரண்டு கேரக்டர்களும் ஒன்றுக்கொன்று முற்றிலும் நேரெதிரானவை. அடியாளாக இருக்கும் ஒரு மனிதனை, அவரது மனைவி எப்படித் திருத்தி, வாழ்க்கையில் உயர்ந்த ஒரு நிலையை அடைவதற்கு உதவுகிறார் என்பதுதான் படத்தின் கதை. ரஜினிக்கு ஜோடி ராதிகா..ஒரு காட்சியில், 'இனிமேல், நீ நல்லவனா மாறணும். யாரையும் சகட்டு மேனிக்கு அடிச்சு நொறுக்கக் கூடாது…' என்று ரஜினிக்கு ராதிகா அட்வைஸ் பண்ணுவார். ரஜினியும் அமைதியாகக் கேட்டுக் கொள்ளுவார். வீட்டை விட்டு வெளியில் போகும் ரஜினி, அடிபட்டு, ரத்தம் சொட்டத் திரும்பி வருவார். இதைப் பார்க்கிற ராதிகாவுக்கு அதிர்ச்சியாக இருக்கும். "என்ன ஆச்சு?" என்று கேட்பார். அதற்கு ரஜினி, "என்னுடைய பழைய சகாக்கள் சிலபேர், 'என்னடா திடீர்னு நல்லவனா மாறிட்டியா?' என்று கேலி பேசி, வம்புக்கு இழுத்தார்கள். நீதான் யாரையும் அடிக்கக் கூடாதுன்னு சொல்லிட்டியே! அதனால்தான் நான் அமைதியா இருந்தேன். ஆனா, அவங்க என்னை அடிச்சிட்டாங்க. நான் அவங்களைத் திருப்பி அடிக்காம, அவங்க கொடுத்த அடியை வாங்கிட்டு வந்து நிக்கிறேன்" என்று சொல்லுவார்..அதற்கு, ராதிகா, "நான் சொன்னதை சரியா புரிஞ்சிக்காம, இப்படிஅடி வாங்கிட்டு வந்து நிக்கறீங்களே! உங்களை வீண் வம்பு, சண்டைக்கு போகக் கூடாதுன்னுதானே சொன்னேன்; நியாயத்தைத் தட்டிக் கேட்கக்கூடாதுன்னோ, மத்தவங்க அடிச்சா, பேசாம வாங்கிக்கிட்டு வரணும்னோ சொல்லலையே?" என்று ஆவேசமாகக் கேட்பார். "போங்க! உங்களுக்கு அவங்க கொடுத்ததை எல்லாம், அவங்க கிட்டயே திருப்பிக் கொடுத்துவிட்டு வாங்க! அப்போதான் நீங்க வாங்கிட்டு வந்த மல்லிகைப் பூவை நான் தலையில வெச்சுப்பேன்" என்று சொல்லுவார்..அடுத்த வினாடி மின்னலாகப் புறப்படும் ரஜினி, தன்னை அடித்தவர்களைத் துவம்சம் செய்துவிட்டு வருவார். கதையில், ரஜினியை மற்றவர்கள் ரத்தம் சொட்ட அடிப்பதும், ரஜினி திருப்பி ஒரு அடி கூடத் தராமல், அடிகளை வாங்கிக்கொள்ளுவது போலவும் ஒரு காட்சியை 'ரசிகர்கள் எப்படி ஏற்றுக்கொள்ளுவார்கள்' என்று முதலில் கொஞ்சம் சந்தேகம் இருந்தாலும், அதன் பிறகு 'அடித்தவர்களைத் திருப்பி அடிக்கும் காட்சி இருப்பதால், ரஜினி ரசிகர்கள் ஏமாறமாட்டார்கள்' என்று முடிவு செய்தோம்..அந்த சண்டைக் காட்சியில் கூட முதலில் விரலைச் சுண்டி, சுண்டி ரவுடிகள் ரஜினியை அடிப்பார்கள். ரஜினி, வாங்கியதைத் திருப்பிக்கொடுக்கும்போது, சுண்டி, சுண்டி பதிலடி கொடுப்பார். நாங்கள் எதிர்பார்த்தபடியே, அந்தக் காட்சியின்போது, தியேட்டரில் ரசிகர்களின் கைத்தட்டல் விண்ணைத் தொட்டது. முதல் பாதியில் ஆக்ஷன் ஹீரோவாக இருக்கும் ரஜினி, அடுத்த பாதியில்,பெரும் பணக்காரராக ஆனவுடன், நடிப்பில் அதிரடி ஆக்ஷனை அப்படியே குறைத்துக் கொண்டு, பணக்காரர்களுக்கே உரிய ஸ்டைல்களை அதிகப்படுத்திக் காட்டினார்..'நல்லவனுக்கு நல்லவன்' படத்தில் வில்லனாக கார்த்திக்கை நடிக்க வைத்தது கூட ஒரு புதுமைதான். முதலில் ரசிகர்களுக்கு கார்த்திக்கைப் பார்க்கிறபோது, அவர் நல்லவர் போலத் தோன்றும். ஆனால், கதையின் பின் பகுதியில் வில்லத்தனமாக நடந்துகொள்ளும்போது, கதைக்கு விறுவிறுப்பு அதிகமாகும், எனவேதான், அதுவரை ஹீரோவாகவே நடித்துக் கொண்டிருந்த கார்த்திக்கை "நீங்கள் ரஜினி படத்தில் வில்லனாக நடிக்க வேண்டும்" என கேட்டோம். அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை. "இந்தப் படத்தில் வில்லன் ரோலில் நடியுங்கள். வில்லன் ரோலாக இருந்தாலும், நடிப்புக்கு நிறைய வாய்ப்பு இருக்கும்" என்று சொன்னபோதும் அவர் முழுமையாக கன்வின்ஸ் ஆகாததால், "நீங்கள் இந்தப் படத்தில் வில்லானாக நடியுங்கள்; அடுத்து உங்களை ஹீரோவாகப் போட்டு, நாங்கள் ஒரு படம் தயாரிக்கிறோம்" என்று சரவணன் சார் சொன்ன பிறகுதான், கடைசியாகச் சம்மதித்தார். கார்த்திக்கிற்கு கொடுத்த வாக்குறுதியின்படி, அவரை கதாநாயகனாகப் போட்டு ஏவி.எம். தயாரித்த படம்தான் 'நல்ல தம்பி'..படத்தில், ரஜினியின் மகள், கார்த்திக்கை காதலிப்பார். ரஜினிக்கு அதில் விருப்பம் இருக்காது. ஆனாலும், மகளின் ஆசையை நிறைவேற்றி வைக்கும் நோக்கத்தில், ரஜினியும், ராதிகாவும் அந்தத் திருமணத்துக்குச் செல்வார்கள். ஆனால், அவரை அங்கே அவமானப்படுத்தி அனுப்பி விடுவார்கள். அந்த இடத்தில், பெற்று வளர்த்து, ஆளாக்கிய அன்பு மகளை பறந்து போன பச்சைக் கிளியாக உருவகப்படுத்தி, 'சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது' என்று மிகவும் எமோஷனலான ஒரு பாடல் காட்சி வரும். ரஜினியின் நடிப்பு அந்த இடத்திலும் மிக உருக்கமாக இருக்கும். ஒரே படத்தில் இரண்டுவிதமான மாறுபட்ட கேரக்டர்களில் ரஜினி சிறப்பாக நடித்த 'நல்லவனுக்கு நல்லவன்' படம், ஏவி.எம். தயாரித்து, நான் இயக்கிய ரஜினி படங்களில் குறிப்பிடத்தக்க ஒன்று. அந்தப் படத்தின் வெற்றிக்குத் தோள்கொடுத்தவர் படத்திற்கு ஸ்கிரிப்ட் எழுதிய விசு. அவர், அந்தப் படத்தில் ஒரு ரோலில் நடித்தும் இருக்கிறார்..அந்தப் படத்தில் கிளைமேக்ஸ் கூட மிகவும் கவித்துவமாக எடுக்கப்பட்டது. மனைவி இறந்துவிட, பற்றற்ற நிலையில் சொத்து முழுவதையும் தம் மகளுக்குக் கொடுத்து விடுவார் ரஜினி. "நான் ஒண்ணே ஒண்ணை மட்டும் இங்கே இருந்து எடுத்துக்கொண்டு போக அனுமதிக்கணும்" என்று கேட்டுவிட்டு, தன் மனைவியின் படத்தை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு மெதுவாக நடந்துப் போவார். அத்துடன் படம் முடியும்..என்ன ரசிகர்களே! 'நல்லவனுக்கு நல்லவன்' படத்தை நாம் பார்த்தபோது, இந்தக் கிளைமேக்ஸ் காட்சி இல்லையே! ரஜினியின் தூள் கிளப்பும் சண்டைக் காட்சியைத்தானே பார்த்தோம்' என்று உங்களுடைய மனதில் ஒரு கேள்வி எழலாம். உங்கள் சந்தேகம் நியாயமானதுதான். நான் இப்போது கூறிய கிளைமேக்ஸ் காட்சியையும் எடுத்து முடித்து விட்டோம். படத்தின் தயாரிப்பாளரான சரவணன் சார், படத்தில் ஆக்ஷன், எமோஷன், சென்டிமென்ட், காமெடி என்று எல்லாம் இருக்கிறது. ஆனாலும், ரஜினி படத்தின் உச்ச கட்டத்தில் ஒரு சண்டைக் காட்சி இல்லாமல் இப்படி கவித்துவமாக இருக்கிறதே! 'அதிரடி ஆக்ஷன் இருந்தால்தான், ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளுவார்கள்' என்று அபிப்ராயப் பட்டார். அதன் பிறகு கேரளாவில் கள்ளிக்கோட்டைக்குச் சென்று ஒரு சண்டைக் காட்சியை படம்பிடித்துக்கொண்டு வந்து, முதலில் எடுத்த கிளைமேக்ஸ் காட்சிக்குப் பதிலாக சண்டைக் காட்சியை இடம்பெறச் செய்தோம். அந்த ஆக்ஷன் நிறைந்த கிளைமேக்ஸ் படத்தின் வெற்றிக்குக்கைகொடுத்தது.."ஆக்ஷன் படத்துக்கு ஆக்ஷன் முடிவுதான் சரியாக இருக்கும். அழுத்தமான கதை கொண்ட படத்துக்குத்தான் கவித்துவமான முடிவு சரியாக இருக்கும்" என்று கற்றுக்கொண்டோம். சரவணன் சார் நல்ல தயாரிப்பாளர் மட்டுமில்லை; கதைகளில் நல்ல திருப்பங்களைக் கூறும் மறைமுகக் கதாசிரியரும்கூட!.(தொடரும்)
அண்ணாத்தே வந்த பாதை – 6.எஸ்.பி.முத்துராமன் எழுத்து வடிவம் : எஸ்.சந்திரமெளலி.ஏவி.எம்.தயாரித்த 'நல்லவனுக்கு நல்லவன்' படத்தில் ரஜினிக்கு இரண்டு கதாபாத்திரங்கள். முதல் பாதியில், சதா அடிதடியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அடியாள் கேரக்டர். இரண்டாவது பாதியில் பணக்காரர். இரண்டு கேரக்டர்களும் ஒன்றுக்கொன்று முற்றிலும் நேரெதிரானவை. அடியாளாக இருக்கும் ஒரு மனிதனை, அவரது மனைவி எப்படித் திருத்தி, வாழ்க்கையில் உயர்ந்த ஒரு நிலையை அடைவதற்கு உதவுகிறார் என்பதுதான் படத்தின் கதை. ரஜினிக்கு ஜோடி ராதிகா..ஒரு காட்சியில், 'இனிமேல், நீ நல்லவனா மாறணும். யாரையும் சகட்டு மேனிக்கு அடிச்சு நொறுக்கக் கூடாது…' என்று ரஜினிக்கு ராதிகா அட்வைஸ் பண்ணுவார். ரஜினியும் அமைதியாகக் கேட்டுக் கொள்ளுவார். வீட்டை விட்டு வெளியில் போகும் ரஜினி, அடிபட்டு, ரத்தம் சொட்டத் திரும்பி வருவார். இதைப் பார்க்கிற ராதிகாவுக்கு அதிர்ச்சியாக இருக்கும். "என்ன ஆச்சு?" என்று கேட்பார். அதற்கு ரஜினி, "என்னுடைய பழைய சகாக்கள் சிலபேர், 'என்னடா திடீர்னு நல்லவனா மாறிட்டியா?' என்று கேலி பேசி, வம்புக்கு இழுத்தார்கள். நீதான் யாரையும் அடிக்கக் கூடாதுன்னு சொல்லிட்டியே! அதனால்தான் நான் அமைதியா இருந்தேன். ஆனா, அவங்க என்னை அடிச்சிட்டாங்க. நான் அவங்களைத் திருப்பி அடிக்காம, அவங்க கொடுத்த அடியை வாங்கிட்டு வந்து நிக்கிறேன்" என்று சொல்லுவார்..அதற்கு, ராதிகா, "நான் சொன்னதை சரியா புரிஞ்சிக்காம, இப்படிஅடி வாங்கிட்டு வந்து நிக்கறீங்களே! உங்களை வீண் வம்பு, சண்டைக்கு போகக் கூடாதுன்னுதானே சொன்னேன்; நியாயத்தைத் தட்டிக் கேட்கக்கூடாதுன்னோ, மத்தவங்க அடிச்சா, பேசாம வாங்கிக்கிட்டு வரணும்னோ சொல்லலையே?" என்று ஆவேசமாகக் கேட்பார். "போங்க! உங்களுக்கு அவங்க கொடுத்ததை எல்லாம், அவங்க கிட்டயே திருப்பிக் கொடுத்துவிட்டு வாங்க! அப்போதான் நீங்க வாங்கிட்டு வந்த மல்லிகைப் பூவை நான் தலையில வெச்சுப்பேன்" என்று சொல்லுவார்..அடுத்த வினாடி மின்னலாகப் புறப்படும் ரஜினி, தன்னை அடித்தவர்களைத் துவம்சம் செய்துவிட்டு வருவார். கதையில், ரஜினியை மற்றவர்கள் ரத்தம் சொட்ட அடிப்பதும், ரஜினி திருப்பி ஒரு அடி கூடத் தராமல், அடிகளை வாங்கிக்கொள்ளுவது போலவும் ஒரு காட்சியை 'ரசிகர்கள் எப்படி ஏற்றுக்கொள்ளுவார்கள்' என்று முதலில் கொஞ்சம் சந்தேகம் இருந்தாலும், அதன் பிறகு 'அடித்தவர்களைத் திருப்பி அடிக்கும் காட்சி இருப்பதால், ரஜினி ரசிகர்கள் ஏமாறமாட்டார்கள்' என்று முடிவு செய்தோம்..அந்த சண்டைக் காட்சியில் கூட முதலில் விரலைச் சுண்டி, சுண்டி ரவுடிகள் ரஜினியை அடிப்பார்கள். ரஜினி, வாங்கியதைத் திருப்பிக்கொடுக்கும்போது, சுண்டி, சுண்டி பதிலடி கொடுப்பார். நாங்கள் எதிர்பார்த்தபடியே, அந்தக் காட்சியின்போது, தியேட்டரில் ரசிகர்களின் கைத்தட்டல் விண்ணைத் தொட்டது. முதல் பாதியில் ஆக்ஷன் ஹீரோவாக இருக்கும் ரஜினி, அடுத்த பாதியில்,பெரும் பணக்காரராக ஆனவுடன், நடிப்பில் அதிரடி ஆக்ஷனை அப்படியே குறைத்துக் கொண்டு, பணக்காரர்களுக்கே உரிய ஸ்டைல்களை அதிகப்படுத்திக் காட்டினார்..'நல்லவனுக்கு நல்லவன்' படத்தில் வில்லனாக கார்த்திக்கை நடிக்க வைத்தது கூட ஒரு புதுமைதான். முதலில் ரசிகர்களுக்கு கார்த்திக்கைப் பார்க்கிறபோது, அவர் நல்லவர் போலத் தோன்றும். ஆனால், கதையின் பின் பகுதியில் வில்லத்தனமாக நடந்துகொள்ளும்போது, கதைக்கு விறுவிறுப்பு அதிகமாகும், எனவேதான், அதுவரை ஹீரோவாகவே நடித்துக் கொண்டிருந்த கார்த்திக்கை "நீங்கள் ரஜினி படத்தில் வில்லனாக நடிக்க வேண்டும்" என கேட்டோம். அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை. "இந்தப் படத்தில் வில்லன் ரோலில் நடியுங்கள். வில்லன் ரோலாக இருந்தாலும், நடிப்புக்கு நிறைய வாய்ப்பு இருக்கும்" என்று சொன்னபோதும் அவர் முழுமையாக கன்வின்ஸ் ஆகாததால், "நீங்கள் இந்தப் படத்தில் வில்லானாக நடியுங்கள்; அடுத்து உங்களை ஹீரோவாகப் போட்டு, நாங்கள் ஒரு படம் தயாரிக்கிறோம்" என்று சரவணன் சார் சொன்ன பிறகுதான், கடைசியாகச் சம்மதித்தார். கார்த்திக்கிற்கு கொடுத்த வாக்குறுதியின்படி, அவரை கதாநாயகனாகப் போட்டு ஏவி.எம். தயாரித்த படம்தான் 'நல்ல தம்பி'..படத்தில், ரஜினியின் மகள், கார்த்திக்கை காதலிப்பார். ரஜினிக்கு அதில் விருப்பம் இருக்காது. ஆனாலும், மகளின் ஆசையை நிறைவேற்றி வைக்கும் நோக்கத்தில், ரஜினியும், ராதிகாவும் அந்தத் திருமணத்துக்குச் செல்வார்கள். ஆனால், அவரை அங்கே அவமானப்படுத்தி அனுப்பி விடுவார்கள். அந்த இடத்தில், பெற்று வளர்த்து, ஆளாக்கிய அன்பு மகளை பறந்து போன பச்சைக் கிளியாக உருவகப்படுத்தி, 'சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது' என்று மிகவும் எமோஷனலான ஒரு பாடல் காட்சி வரும். ரஜினியின் நடிப்பு அந்த இடத்திலும் மிக உருக்கமாக இருக்கும். ஒரே படத்தில் இரண்டுவிதமான மாறுபட்ட கேரக்டர்களில் ரஜினி சிறப்பாக நடித்த 'நல்லவனுக்கு நல்லவன்' படம், ஏவி.எம். தயாரித்து, நான் இயக்கிய ரஜினி படங்களில் குறிப்பிடத்தக்க ஒன்று. அந்தப் படத்தின் வெற்றிக்குத் தோள்கொடுத்தவர் படத்திற்கு ஸ்கிரிப்ட் எழுதிய விசு. அவர், அந்தப் படத்தில் ஒரு ரோலில் நடித்தும் இருக்கிறார்..அந்தப் படத்தில் கிளைமேக்ஸ் கூட மிகவும் கவித்துவமாக எடுக்கப்பட்டது. மனைவி இறந்துவிட, பற்றற்ற நிலையில் சொத்து முழுவதையும் தம் மகளுக்குக் கொடுத்து விடுவார் ரஜினி. "நான் ஒண்ணே ஒண்ணை மட்டும் இங்கே இருந்து எடுத்துக்கொண்டு போக அனுமதிக்கணும்" என்று கேட்டுவிட்டு, தன் மனைவியின் படத்தை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு மெதுவாக நடந்துப் போவார். அத்துடன் படம் முடியும்..என்ன ரசிகர்களே! 'நல்லவனுக்கு நல்லவன்' படத்தை நாம் பார்த்தபோது, இந்தக் கிளைமேக்ஸ் காட்சி இல்லையே! ரஜினியின் தூள் கிளப்பும் சண்டைக் காட்சியைத்தானே பார்த்தோம்' என்று உங்களுடைய மனதில் ஒரு கேள்வி எழலாம். உங்கள் சந்தேகம் நியாயமானதுதான். நான் இப்போது கூறிய கிளைமேக்ஸ் காட்சியையும் எடுத்து முடித்து விட்டோம். படத்தின் தயாரிப்பாளரான சரவணன் சார், படத்தில் ஆக்ஷன், எமோஷன், சென்டிமென்ட், காமெடி என்று எல்லாம் இருக்கிறது. ஆனாலும், ரஜினி படத்தின் உச்ச கட்டத்தில் ஒரு சண்டைக் காட்சி இல்லாமல் இப்படி கவித்துவமாக இருக்கிறதே! 'அதிரடி ஆக்ஷன் இருந்தால்தான், ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளுவார்கள்' என்று அபிப்ராயப் பட்டார். அதன் பிறகு கேரளாவில் கள்ளிக்கோட்டைக்குச் சென்று ஒரு சண்டைக் காட்சியை படம்பிடித்துக்கொண்டு வந்து, முதலில் எடுத்த கிளைமேக்ஸ் காட்சிக்குப் பதிலாக சண்டைக் காட்சியை இடம்பெறச் செய்தோம். அந்த ஆக்ஷன் நிறைந்த கிளைமேக்ஸ் படத்தின் வெற்றிக்குக்கைகொடுத்தது.."ஆக்ஷன் படத்துக்கு ஆக்ஷன் முடிவுதான் சரியாக இருக்கும். அழுத்தமான கதை கொண்ட படத்துக்குத்தான் கவித்துவமான முடிவு சரியாக இருக்கும்" என்று கற்றுக்கொண்டோம். சரவணன் சார் நல்ல தயாரிப்பாளர் மட்டுமில்லை; கதைகளில் நல்ல திருப்பங்களைக் கூறும் மறைமுகக் கதாசிரியரும்கூட!.(தொடரும்)