கச்சத் தீவு பிரச்னை – தீர்வுக்கு இதுவே சரியான தருணம்.சந்திப்பு : ரமணன்.கச்சத்தீவு விவகாரத்தில் இரு அரசுகளும் ஒப்பந்தம் செய்து கொண்டுவிட்ட நிலையில் நாம் இப்போது அதைத் திரும்பக் கோர முடியுமா?.இந்தத் தீவு, இந்த ஒப்பந்தம் குறித்த வரலாற்றுப் பின்னணியை நீங்கள் முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும். கச்சத் தீவு – மன்னர் சேதுபதியின் சொந்த மண்; உரிமை மண். சமஸ்தானங்கள் இணைக்கப்பட்டபோது, கச்சத் தீவு இந்தியாவின் ஒரு பகுதியானது. இந்திய மீனவர்கள் குறிப்பாக, தமிழ்நாட்டு மீனவர்கள் ஆழ்கடல் சென்று மீன் பிடித்து, கச்சத் தீவை சொந்தம் கொண்டாடிய அந்த பாரம்பரிய உரிமை தற்போது இல்லை..1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தங்களின் அடிப்படையில் அந்த உரிமை மறுக்கப்படுகிறது. கச்சத் தீவு தற்போது இலங்கைக்குச் சொந்தமானதாகக் கருதப்படுகிறது. ஆனால், போடப்பட்டிருக்கும் அந்த ஒப்பந்தம் "செல்லுமா?" என்ற அடிப்படைக் கேள்விக்கு இன்றுவரை விடையில்லை..இது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. வழக்கின் அடிப்படைக்கு மிக முக்கியமான காரணம், "ஒரு நாட்டின் எந்த ஒரு பகுதியையும், இன்னொரு நாட்டிற்கு விட்டுக் கொடுக்கும்போது, அற்கான உடன்பாடு, சம்பந்தப்பட்ட இருநாடுகளின் நாடாளுமன்றங்களில் ஒப்புதல் பெறப்பட்டு, மேற்படி இருநாடுகளும் அவற்றை பரிமாற்றம் செய்து கொண்டால் மட்டுமே அந்த ஒப்பந்தம் செல்லும்.".இதை இந்தியாவுக்கும், வங்கதேசத்திற்கும் இடையே ஏற்பட்ட, குறிப்பிட்ட நிலப்பரப்பு பரிவர்த்தனை தொடர்பான பிரச்னையில் நமது உச்ச நீதிமன்றம் 1960-ம் ஆண்டில் 'பெருபாரி' வழக்கில் (Berubari Union case) அளித்த தீர்ப்பில் தெளிவுபடுத்தியிருக்கிறது..அப்படியானால் நாம் செய்துகொண்டிருக்கும் ஒப்பந்தம் செல்லாதா?.ஆம்… அதுதான் உண்மை. உச்ச நீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்பு இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்தியா, கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்த விவகாரத்தில் இன்றுவரை நாடாளுமன்றங்களின் ஒப்புதல், சட்டப்படியான பரிவர்த்தனை இல்லாதபோது, 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளின் ஒப்பந்தங்கள் செல்லாது என்பதுதான் நமது நிலைப்பாடு. 1974 ஆண்டில் இருநாட்டு தலைமை அமைச்சர்கள் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தில், "இருநாட்டு மீனவர்களும், இருநாட்டு கடல்பகுதிகளிலும் மீன் பிடிக்கும் பாரம்பரிய உரிமையை தொடர்ந்து அனுபவிக்கலாம்" என்று சொல்லப்பட்டு, கச்சத் தீவு சார்ந்த கடல் பகுதியில் நம்முடைய மீனவர்கள் மீன்பிடிக்கும் பாரம்பரிய உரிமை மற்றும் வலைகளை உலர்த்தவும், ஓய்வு எடுக்கவும் கச்சத் தீவின் மீதான அனுபவ உரிமைகள், அந்தோணியார் ஆலயத்தில் நடைபெறும் திருவிழாவில் பங்கேற்று வழிபாடு செய்யும் உரிமை ஆகியவை உறுதிசெய்யப்பட்டிருந்தது.ஆனால், எவருக்கும் புரியாத மர்மமாக 1976 ஆம் ஆண்டில் இருநாட்டு அரசுச் செயலாளர்கள் இடையே போட்ட ஒப்பந்தத்தில் அந்த உரிமைகள் நீக்கப்பட்டது இருநாட்டு தலைமை அமைச்சர்களால் போடப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில், அரசு செயலாளர்களால் மாற்றம் செய்துவிட முடியுமா? அதுவும் எல்லைக் கோட்டை மாற்றம் செய்யும் அளவிற்கு அதிகாரம் செயலர்களுக்கு உண்டா? என்ற கேள்வியும் எழுகிறது..இந்த ஒப்பந்தத்தை செல்லாது என இந்திய அரசால் இப்போது அறிவிக்க முடியாதா?.ஒப்பந்தம் செய்து கொண்ட இரு நாடுகளும் சேர்ந்துதான் அப்படி அறிவிக்க முடியும். அதற்கு அடிப்படையாக நம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று அமைந்தால் இந்த முன்னெடுப்பு சாத்தியமாகலாம் என்பதை கருத்தில் கொண்டுதான், 1991-ம் ஆண்டில் அப்போது முதலமைச்சராக இருந்த புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சட்டமன்றத்தில் கச்சத் தீவைத் திரும்பப் பெற மத்திய அரசை வற்புறுத்தி தீர்மானம் கொண்டு வந்தும், மத்திய அரசு அதற்கு செவி சாய்க்காத நிலையில், பின்னர் தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு, எதிர்க்கட்சியாக இருந்தபோதே, தாமாக முன் வந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தும், பின்னிட்டு ஆட்சிக்கு வந்தவுடன், அரசுத் துறையான வருவாய்த் துறையை வழக்கில் இணைத்தும், சட்டப் போராட்டம் நடத்தி வந்தார். அவரது மறைவுக்குப் பிறகு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் அந்த வழக்கில் Implead Petition தாக்கல் செய்து, வழக்கை தொடர்ந்து நடத்த வழிவகை செய்தார். வழக்கு தற்போதும் நிலுவையில் இருக்கிறது..அப்படியே இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் "இப்படி ஒப்பந்தம் செய்தது தவறானது" என்று தீர்ப்பளித்தால் அது இலங்கையைக் கட்டுப்படுத்துமா?.இது சரியான விடை இல்லாத வினாவாகத்தான் இருக்கும். இலங்கை அரசு அந்தத் தீர்ப்பை ஏற்று நடைமுறைப்படுத்த முடியாமல் போகும் வாய்ப்புகள் தான் அதிகம். ஆனால், செய்து கொண்டிருக்கும் ஓர் ஒப்பந்தம் தவறானது என்பது சட்டப்பூர்வமாக பதிவாகும். இது நமது உரிமையை மீட்டெடுக்கும் முயற்சிகளுக்கு உதவும்..இதை சர்வதேச நீதிமன்றத்துக்கு எடுத்துச்செல்ல முடியாதா?.முடியும். ஆனால், இரு நாடுகளுக்குமான இந்தப் பிரச்னையை சர்வதேச நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றாலும் என்ன முடிவு ஏற்படும் என்பதையும் சிந்திக்க வேண்டும். "வியன்னா ஒப்பந்தம் (Vienna Convention on the Law of Treaties 1969) மற்றும் கத்தார் – பக்ரைன் (Qatar – Bahrain) இடையேயான கடல் எல்லை மறுவரையறை வழக்கில் சர்வதேச நீதிமன்றம் (International Court of Justice) வழங்கிய தீர்ப்புகளின்படி இம்மாதிரி ஒப்பந்தங்களுக்கு நாடாளுமன்ற ஒப்புதல் தேவையில்லை" என்று சொல்லப்பட்டிருக்கிறது..இந்த நிலையில், "இந்திய – இலங்கை ஒப்பந்தம் செல்லாது" என்று சொல்வதற்குமான வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. அப்படியே சர்வதேச நீதிமன்றத்தில் "கச்சத் தீவின் உரிமை யாருக்கு" என்று முடிவு செய்யப்பட்டாலும்கூட, அந்த முடிவை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறை என்ன? யாரால்? எப்படி? அதுவும் கேள்விக்குறியே!.அப்படியானால் என்னதான் தீர்வு?.இந்த விஷயத்தில் மத்திய அரசு அமைதி காப்பதும், ஒரு வகையில் இலங்கைக்கு சாதகமாகவே இருக்கிறது. இந்த நிலையில், "இந்திய சட்டப்படியும், சர்வதேச சட்டப்படியும் கச்சத் தீவை மீட்பது என்பது நடைமுறைக்கு சாத்தியமா" என்ற ஐயப்பாடு எழுகிற சூழ்நிலையில், மேலும் அதற்கு நீண்ட காலம் ஆகலாம் என்பதால், சாத்தியப்படக் கூடிய மாற்று வழியை இருநாடுகளின் கௌரவம் பாதிக்காத வகையில், இருநாட்டு மீனவர்களின் நலன் கருதி யோசிப்பது இரு நாடுகளுக்குமே நன்மை பயக்கக்கூடியதாக இருக்கும்..1974-ல் இரு நாட்டுத் தலைவர்கள் மட்டத்தில் போடப்பட்ட ஒப்பந்தமானது, 1976-ல் இரு நாட்டு அதிகாரிகள் மட்டத்தில் மாற்றியமைக்கப்பட்டதன் விளைவாக எழுந்திருக்கும் ஒரு குறிப்பிட்ட பிரச்னையை நாம் கவனிக்க வேண்டும்..கடற்பகுதியில், நீதிமன்ற அதிகார எல்லையை வரையறுக்கிறபோது, இந்தியாவுக்கு 24 நாட்டிக்கல் மைல்கள் (Nautical miles) தூரத்திற்கு கடல் பகுதியில் உரிமை கொண்டாட (Maritime Zones Act) கடல் சார் சட்டம் வழி வகுக்கிறது. அப்படி இருக்கும்போது, 18 நாட்டிக்கல் மைல்கள் (Nautical miles) தூரத்தில் உள்ள கச்சத்தீவின் மீதுள்ள நமது உரிமை உறுதியாகிறது. இருந்தாலும், இதன் அடிப்படையில் இருநாடுகளின் பாதுகாப்பு மற்றும் இருநாட்டு மீனவர்களின் நலன் கருதியும், இரு நாடுகளுக்குமிடையே ஓர் புதிய உடன்பாடு உடனடியாக ஏற்படுவது அவசியமாகிறது..எந்த மாதிரியான உடன்பாடு செய்து கொள்ளவேண்டும்?.இந்தியாவுக்கு உரிமையான கச்சத் தீவு இன்றைய நிலையில் இலங்கையின் வசம் உள்ளதால், ஒரு நாட்டின் ஒருதரப்பான நடவடிக்கை எந்தப் பலனையும் தரப்போவதில்லை. வீண் காலவிரயம்தான் ஏற்படும். அப்படிப்பட்ட நிலையைத் தவிர்க்க இரு நாட்டுத் தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து, அதன் வாயிலாக ஒரு சுமுகமான முடிவுக்கு வந்து, கச்சத் தீவை இரு நாடுகளுக்குமான பொதுச் சொத்தாகவும் அதில், இரு நாடுகளுமே தங்கள் உரிமைகளைத் தக்க வைத்துக்கொள்ளும் வகையில், அமைய வேண்டும்..இன்று வரை உள்ள இருநாட்டு மீனவர்களின் தீராத பிரச்னைக்குத் தீர்வு கண்டு, குறிப்பாக தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஏற்படுகிற உயிரிழிப்பு, பொருட்சேதம் ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க இப்படி ஒரு உடன்பாடு மேற்கொள்வது ஒன்றே சிறந்த வழி. அதற்கான முன்னெடுப்புகளை முன்னெடுக்க இதுதான் சரியான தருணம்..இந்தியாவைப் பொறுத்தவரை இலங்கை அதன் நட்புநாடு. நட்பு நாட்டோடு நல்லுறவு கொள்வதற்கு இத்தகைய முயற்சி மேலும் வலு சேர்க்கும். மாநில அரசின் வழக்கு நிலுவையில் இருந்தாலும், மத்திய அரசு இந்த புதிய உடன்பாடு குறித்த, வழிமுறைகளை நன்றாக ஆராய்ந்து, அதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளைத் துவக்க வேண்டும்..இப்போது அத்தகைய முயற்சி நிச்சயமாக பலன் அளிக்கும். ஏனென்றால் இதுதான் சரியான தருணம்...இரண்டு நாடுகளுக்குமான பொது சொத்து என்ற நிலைப்பாட்டை இலங்கை அரசு ஏற்கா விட்டால்?.சீனாவின் பிடியில் சிக்கியுள்ள இலங்கை, அந்த நாட்டிடம் வாங்கிய கடனுக்காக 'ஹம்பன் டாட்டா' (Hambantota) துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டுள்ளதை முன்னுதாரணமாகக் கொண்டு, தாரை வார்க்கப்பட்ட கச்சத் தீவை மீட்டெடுக்கும் முயற்சியின் தொடர் நடவடிக்கையாக புரட்சித் தலைவி அம்மா அவர்களால், 9-6-2011-ல் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது, அதன் அடிப்படையில் நிரந்தரக் குத்தகை (Lease in Perpetuity) அல்லது , நீண்ட கால குத்தகை என்ற அடிப்படையில், அத்தீவைப் மத்திய அரசால் பெற்றுத்தர முடியும்..அதற்கு இன்றைய மாநில அரசு உச்ச நீதிமன்றதில் தற்போது நிலுவையில் இருந்துவரும் வழக்கை விரைவுப்படுத்தி, நமக்குச் சாதகமான தீர்ப்பைப் பெற சட்டரீதியான நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்..உடனடி தீர்வாக கச்சத் தீவை நிரந்தரக் குத்தகைக்கு எடுக்க வலியுறுத்தி புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தீர்க்கதரிசனமாக அன்று சொன்ன கருத்து, இன்றைய சூழலுக்கு மிகவும் ஏற்றதாகயிருக்கிறது..இப்படியொரு புதிய ஒப்பந்தத்தின் மூலம் தமிழக மீனவர்கள் நலன் மட்டுமில்லாமல், நாட்டின் தெற்கு எல்லைகளின் பாதுகாப்பையும் உறுதி செய்துக்கொள்ள முடியும். திரிகோணமலையைப்போல, கச்சத் தீவும் நம் நாட்டின் பாதுகாப்புக்கு கவசம் போன்றது என்பதை மத்திய அரசு உணர வேண்டும். வீட்டின் முன்பக்கக் கதவைப் பூட்டிவிட்டு, பின்புற புழக்கடைக் கதவு திறந்த நிலையில், "வீடு பாதுகாப்பாகத்தான் இருக்கிறது" என்று எண்ணாமல், மத்திய அரசு, வெளிநாட்டு அச்சுறுத்தலையும் நாட்டின் பாதுகாப்பையும் கருத்தில்கொண்டு, வடக்கு எல்லையில் மட்டும் கவனம் செலுத்தாமல், நாட்டின் தெற்கு எல்லையிலும் கவனம் செலுத்த வேண்டும். நாட்டின் பாதுகாப்பு, தமிழக மீனவர் நலன், நம் மண்ணின் உரிமை எல்லாவற்றையும் ஒன்று சேர செய்துகொள்ள இதுவே பொன்னான தருணம்.
கச்சத் தீவு பிரச்னை – தீர்வுக்கு இதுவே சரியான தருணம்.சந்திப்பு : ரமணன்.கச்சத்தீவு விவகாரத்தில் இரு அரசுகளும் ஒப்பந்தம் செய்து கொண்டுவிட்ட நிலையில் நாம் இப்போது அதைத் திரும்பக் கோர முடியுமா?.இந்தத் தீவு, இந்த ஒப்பந்தம் குறித்த வரலாற்றுப் பின்னணியை நீங்கள் முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும். கச்சத் தீவு – மன்னர் சேதுபதியின் சொந்த மண்; உரிமை மண். சமஸ்தானங்கள் இணைக்கப்பட்டபோது, கச்சத் தீவு இந்தியாவின் ஒரு பகுதியானது. இந்திய மீனவர்கள் குறிப்பாக, தமிழ்நாட்டு மீனவர்கள் ஆழ்கடல் சென்று மீன் பிடித்து, கச்சத் தீவை சொந்தம் கொண்டாடிய அந்த பாரம்பரிய உரிமை தற்போது இல்லை..1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தங்களின் அடிப்படையில் அந்த உரிமை மறுக்கப்படுகிறது. கச்சத் தீவு தற்போது இலங்கைக்குச் சொந்தமானதாகக் கருதப்படுகிறது. ஆனால், போடப்பட்டிருக்கும் அந்த ஒப்பந்தம் "செல்லுமா?" என்ற அடிப்படைக் கேள்விக்கு இன்றுவரை விடையில்லை..இது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. வழக்கின் அடிப்படைக்கு மிக முக்கியமான காரணம், "ஒரு நாட்டின் எந்த ஒரு பகுதியையும், இன்னொரு நாட்டிற்கு விட்டுக் கொடுக்கும்போது, அற்கான உடன்பாடு, சம்பந்தப்பட்ட இருநாடுகளின் நாடாளுமன்றங்களில் ஒப்புதல் பெறப்பட்டு, மேற்படி இருநாடுகளும் அவற்றை பரிமாற்றம் செய்து கொண்டால் மட்டுமே அந்த ஒப்பந்தம் செல்லும்.".இதை இந்தியாவுக்கும், வங்கதேசத்திற்கும் இடையே ஏற்பட்ட, குறிப்பிட்ட நிலப்பரப்பு பரிவர்த்தனை தொடர்பான பிரச்னையில் நமது உச்ச நீதிமன்றம் 1960-ம் ஆண்டில் 'பெருபாரி' வழக்கில் (Berubari Union case) அளித்த தீர்ப்பில் தெளிவுபடுத்தியிருக்கிறது..அப்படியானால் நாம் செய்துகொண்டிருக்கும் ஒப்பந்தம் செல்லாதா?.ஆம்… அதுதான் உண்மை. உச்ச நீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்பு இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்தியா, கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்த விவகாரத்தில் இன்றுவரை நாடாளுமன்றங்களின் ஒப்புதல், சட்டப்படியான பரிவர்த்தனை இல்லாதபோது, 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளின் ஒப்பந்தங்கள் செல்லாது என்பதுதான் நமது நிலைப்பாடு. 1974 ஆண்டில் இருநாட்டு தலைமை அமைச்சர்கள் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தில், "இருநாட்டு மீனவர்களும், இருநாட்டு கடல்பகுதிகளிலும் மீன் பிடிக்கும் பாரம்பரிய உரிமையை தொடர்ந்து அனுபவிக்கலாம்" என்று சொல்லப்பட்டு, கச்சத் தீவு சார்ந்த கடல் பகுதியில் நம்முடைய மீனவர்கள் மீன்பிடிக்கும் பாரம்பரிய உரிமை மற்றும் வலைகளை உலர்த்தவும், ஓய்வு எடுக்கவும் கச்சத் தீவின் மீதான அனுபவ உரிமைகள், அந்தோணியார் ஆலயத்தில் நடைபெறும் திருவிழாவில் பங்கேற்று வழிபாடு செய்யும் உரிமை ஆகியவை உறுதிசெய்யப்பட்டிருந்தது.ஆனால், எவருக்கும் புரியாத மர்மமாக 1976 ஆம் ஆண்டில் இருநாட்டு அரசுச் செயலாளர்கள் இடையே போட்ட ஒப்பந்தத்தில் அந்த உரிமைகள் நீக்கப்பட்டது இருநாட்டு தலைமை அமைச்சர்களால் போடப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில், அரசு செயலாளர்களால் மாற்றம் செய்துவிட முடியுமா? அதுவும் எல்லைக் கோட்டை மாற்றம் செய்யும் அளவிற்கு அதிகாரம் செயலர்களுக்கு உண்டா? என்ற கேள்வியும் எழுகிறது..இந்த ஒப்பந்தத்தை செல்லாது என இந்திய அரசால் இப்போது அறிவிக்க முடியாதா?.ஒப்பந்தம் செய்து கொண்ட இரு நாடுகளும் சேர்ந்துதான் அப்படி அறிவிக்க முடியும். அதற்கு அடிப்படையாக நம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று அமைந்தால் இந்த முன்னெடுப்பு சாத்தியமாகலாம் என்பதை கருத்தில் கொண்டுதான், 1991-ம் ஆண்டில் அப்போது முதலமைச்சராக இருந்த புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சட்டமன்றத்தில் கச்சத் தீவைத் திரும்பப் பெற மத்திய அரசை வற்புறுத்தி தீர்மானம் கொண்டு வந்தும், மத்திய அரசு அதற்கு செவி சாய்க்காத நிலையில், பின்னர் தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு, எதிர்க்கட்சியாக இருந்தபோதே, தாமாக முன் வந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தும், பின்னிட்டு ஆட்சிக்கு வந்தவுடன், அரசுத் துறையான வருவாய்த் துறையை வழக்கில் இணைத்தும், சட்டப் போராட்டம் நடத்தி வந்தார். அவரது மறைவுக்குப் பிறகு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் அந்த வழக்கில் Implead Petition தாக்கல் செய்து, வழக்கை தொடர்ந்து நடத்த வழிவகை செய்தார். வழக்கு தற்போதும் நிலுவையில் இருக்கிறது..அப்படியே இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் "இப்படி ஒப்பந்தம் செய்தது தவறானது" என்று தீர்ப்பளித்தால் அது இலங்கையைக் கட்டுப்படுத்துமா?.இது சரியான விடை இல்லாத வினாவாகத்தான் இருக்கும். இலங்கை அரசு அந்தத் தீர்ப்பை ஏற்று நடைமுறைப்படுத்த முடியாமல் போகும் வாய்ப்புகள் தான் அதிகம். ஆனால், செய்து கொண்டிருக்கும் ஓர் ஒப்பந்தம் தவறானது என்பது சட்டப்பூர்வமாக பதிவாகும். இது நமது உரிமையை மீட்டெடுக்கும் முயற்சிகளுக்கு உதவும்..இதை சர்வதேச நீதிமன்றத்துக்கு எடுத்துச்செல்ல முடியாதா?.முடியும். ஆனால், இரு நாடுகளுக்குமான இந்தப் பிரச்னையை சர்வதேச நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றாலும் என்ன முடிவு ஏற்படும் என்பதையும் சிந்திக்க வேண்டும். "வியன்னா ஒப்பந்தம் (Vienna Convention on the Law of Treaties 1969) மற்றும் கத்தார் – பக்ரைன் (Qatar – Bahrain) இடையேயான கடல் எல்லை மறுவரையறை வழக்கில் சர்வதேச நீதிமன்றம் (International Court of Justice) வழங்கிய தீர்ப்புகளின்படி இம்மாதிரி ஒப்பந்தங்களுக்கு நாடாளுமன்ற ஒப்புதல் தேவையில்லை" என்று சொல்லப்பட்டிருக்கிறது..இந்த நிலையில், "இந்திய – இலங்கை ஒப்பந்தம் செல்லாது" என்று சொல்வதற்குமான வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. அப்படியே சர்வதேச நீதிமன்றத்தில் "கச்சத் தீவின் உரிமை யாருக்கு" என்று முடிவு செய்யப்பட்டாலும்கூட, அந்த முடிவை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறை என்ன? யாரால்? எப்படி? அதுவும் கேள்விக்குறியே!.அப்படியானால் என்னதான் தீர்வு?.இந்த விஷயத்தில் மத்திய அரசு அமைதி காப்பதும், ஒரு வகையில் இலங்கைக்கு சாதகமாகவே இருக்கிறது. இந்த நிலையில், "இந்திய சட்டப்படியும், சர்வதேச சட்டப்படியும் கச்சத் தீவை மீட்பது என்பது நடைமுறைக்கு சாத்தியமா" என்ற ஐயப்பாடு எழுகிற சூழ்நிலையில், மேலும் அதற்கு நீண்ட காலம் ஆகலாம் என்பதால், சாத்தியப்படக் கூடிய மாற்று வழியை இருநாடுகளின் கௌரவம் பாதிக்காத வகையில், இருநாட்டு மீனவர்களின் நலன் கருதி யோசிப்பது இரு நாடுகளுக்குமே நன்மை பயக்கக்கூடியதாக இருக்கும்..1974-ல் இரு நாட்டுத் தலைவர்கள் மட்டத்தில் போடப்பட்ட ஒப்பந்தமானது, 1976-ல் இரு நாட்டு அதிகாரிகள் மட்டத்தில் மாற்றியமைக்கப்பட்டதன் விளைவாக எழுந்திருக்கும் ஒரு குறிப்பிட்ட பிரச்னையை நாம் கவனிக்க வேண்டும்..கடற்பகுதியில், நீதிமன்ற அதிகார எல்லையை வரையறுக்கிறபோது, இந்தியாவுக்கு 24 நாட்டிக்கல் மைல்கள் (Nautical miles) தூரத்திற்கு கடல் பகுதியில் உரிமை கொண்டாட (Maritime Zones Act) கடல் சார் சட்டம் வழி வகுக்கிறது. அப்படி இருக்கும்போது, 18 நாட்டிக்கல் மைல்கள் (Nautical miles) தூரத்தில் உள்ள கச்சத்தீவின் மீதுள்ள நமது உரிமை உறுதியாகிறது. இருந்தாலும், இதன் அடிப்படையில் இருநாடுகளின் பாதுகாப்பு மற்றும் இருநாட்டு மீனவர்களின் நலன் கருதியும், இரு நாடுகளுக்குமிடையே ஓர் புதிய உடன்பாடு உடனடியாக ஏற்படுவது அவசியமாகிறது..எந்த மாதிரியான உடன்பாடு செய்து கொள்ளவேண்டும்?.இந்தியாவுக்கு உரிமையான கச்சத் தீவு இன்றைய நிலையில் இலங்கையின் வசம் உள்ளதால், ஒரு நாட்டின் ஒருதரப்பான நடவடிக்கை எந்தப் பலனையும் தரப்போவதில்லை. வீண் காலவிரயம்தான் ஏற்படும். அப்படிப்பட்ட நிலையைத் தவிர்க்க இரு நாட்டுத் தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து, அதன் வாயிலாக ஒரு சுமுகமான முடிவுக்கு வந்து, கச்சத் தீவை இரு நாடுகளுக்குமான பொதுச் சொத்தாகவும் அதில், இரு நாடுகளுமே தங்கள் உரிமைகளைத் தக்க வைத்துக்கொள்ளும் வகையில், அமைய வேண்டும்..இன்று வரை உள்ள இருநாட்டு மீனவர்களின் தீராத பிரச்னைக்குத் தீர்வு கண்டு, குறிப்பாக தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஏற்படுகிற உயிரிழிப்பு, பொருட்சேதம் ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க இப்படி ஒரு உடன்பாடு மேற்கொள்வது ஒன்றே சிறந்த வழி. அதற்கான முன்னெடுப்புகளை முன்னெடுக்க இதுதான் சரியான தருணம்..இந்தியாவைப் பொறுத்தவரை இலங்கை அதன் நட்புநாடு. நட்பு நாட்டோடு நல்லுறவு கொள்வதற்கு இத்தகைய முயற்சி மேலும் வலு சேர்க்கும். மாநில அரசின் வழக்கு நிலுவையில் இருந்தாலும், மத்திய அரசு இந்த புதிய உடன்பாடு குறித்த, வழிமுறைகளை நன்றாக ஆராய்ந்து, அதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளைத் துவக்க வேண்டும்..இப்போது அத்தகைய முயற்சி நிச்சயமாக பலன் அளிக்கும். ஏனென்றால் இதுதான் சரியான தருணம்...இரண்டு நாடுகளுக்குமான பொது சொத்து என்ற நிலைப்பாட்டை இலங்கை அரசு ஏற்கா விட்டால்?.சீனாவின் பிடியில் சிக்கியுள்ள இலங்கை, அந்த நாட்டிடம் வாங்கிய கடனுக்காக 'ஹம்பன் டாட்டா' (Hambantota) துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டுள்ளதை முன்னுதாரணமாகக் கொண்டு, தாரை வார்க்கப்பட்ட கச்சத் தீவை மீட்டெடுக்கும் முயற்சியின் தொடர் நடவடிக்கையாக புரட்சித் தலைவி அம்மா அவர்களால், 9-6-2011-ல் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது, அதன் அடிப்படையில் நிரந்தரக் குத்தகை (Lease in Perpetuity) அல்லது , நீண்ட கால குத்தகை என்ற அடிப்படையில், அத்தீவைப் மத்திய அரசால் பெற்றுத்தர முடியும்..அதற்கு இன்றைய மாநில அரசு உச்ச நீதிமன்றதில் தற்போது நிலுவையில் இருந்துவரும் வழக்கை விரைவுப்படுத்தி, நமக்குச் சாதகமான தீர்ப்பைப் பெற சட்டரீதியான நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்..உடனடி தீர்வாக கச்சத் தீவை நிரந்தரக் குத்தகைக்கு எடுக்க வலியுறுத்தி புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தீர்க்கதரிசனமாக அன்று சொன்ன கருத்து, இன்றைய சூழலுக்கு மிகவும் ஏற்றதாகயிருக்கிறது..இப்படியொரு புதிய ஒப்பந்தத்தின் மூலம் தமிழக மீனவர்கள் நலன் மட்டுமில்லாமல், நாட்டின் தெற்கு எல்லைகளின் பாதுகாப்பையும் உறுதி செய்துக்கொள்ள முடியும். திரிகோணமலையைப்போல, கச்சத் தீவும் நம் நாட்டின் பாதுகாப்புக்கு கவசம் போன்றது என்பதை மத்திய அரசு உணர வேண்டும். வீட்டின் முன்பக்கக் கதவைப் பூட்டிவிட்டு, பின்புற புழக்கடைக் கதவு திறந்த நிலையில், "வீடு பாதுகாப்பாகத்தான் இருக்கிறது" என்று எண்ணாமல், மத்திய அரசு, வெளிநாட்டு அச்சுறுத்தலையும் நாட்டின் பாதுகாப்பையும் கருத்தில்கொண்டு, வடக்கு எல்லையில் மட்டும் கவனம் செலுத்தாமல், நாட்டின் தெற்கு எல்லையிலும் கவனம் செலுத்த வேண்டும். நாட்டின் பாதுகாப்பு, தமிழக மீனவர் நலன், நம் மண்ணின் உரிமை எல்லாவற்றையும் ஒன்று சேர செய்துகொள்ள இதுவே பொன்னான தருணம்.