– தனுஜா ஜெயராமன் படங்கள் ஶ்ரீஹரி .கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் 'கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு நாள் சொற்பொழிவு' நிகழ்ச்சி அண்மையில் சென்னை, மயிலாப்பூரில் உள்ள ராகசுதா அரங்கத்தில் நடைபெற்றது. அன்றைய நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றியவர் பேராசிரியர்ஆ. இரா.வேங்கடாசலபதி. இவர் ஒரு பன்னோக்கு திறமையாளர். இவர் இலக்கியங்களை ஆய்வு நோக்கிலும் வரலாற்றுப் பின்னணியிலும் ஆய்வுகள் செய்துக்கொண்டிருப்பவர். அன்றைய விழாவில் அமரர் கல்கியின் பல்வேறு படைப்புகளைத் தொகுத்துத் தந்திருக்கும் மூத்த எழுத்தாளர் சுப்ர.பாலன் அவர்களும் மற்றும் அவற்றைப் பதிப்பித்திருக்கும் வானதி பதிப்பகம் வானதி ராமநாதன் அவர்களும் கௌரவிக்கப்பட்டனர்..பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதியின் அன்றைய உரை ஒரு சிறப்பான ஆய்வுக் கட்டுரையாகவே அமைந்திருந்தது.அந்த உரையின் சில முக்கிய பகுதிகள் இவை:. "கல்கி என்றாலே 'பொன்னியின் செல்வன்', 'சிவகாமியின் சபதம்' போன்ற வரலாற்று நூல்களைப் பற்றித்தான் பலரும் பேசுகிறார்கள். ஆனால் கல்கியின் புனைவு சாராத எழுத்துகள் மிக முக்கியமானவை. ஒரு வரலாற்று ஆய்வாளரான எனக்கு எப்போதும் உதவுவது கல்கியின் எழுத்துகளின் தொகுப்புகள்தான்..கல்கி அவர்கள் விகடனில் எழுதிய பல முக்கியமான கட்டுரைகள் நீண்ட நாட்கள் புத்தகமாக வெளிவரவில்லை. அவர் மறைந்து 10 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் அதற்கான பதிப்புரிமை கல்கி ராஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது. அதிலிருந்து அவ்வப்போது சில தொகுப்புகள் வெளியாயின..ஆனால், 90களின் இறுதியில் கல்கியின் எழுத்துகளை சுப்ர.பாலன் தேடித்தேடி கல்கியை ஒரு புதிய பார்வையில் பார்க்கும் வாய்ப்பாக தொகுத்தளித்தார். ஒரு அழகான மாலையைத் தொடுப்பதில் மலர்களைப் போலவே அதை இணைக்கும் நாரும் மிக முக்கியமானது. அந்த நாராக கல்கியின் எழுத்துகளை அழகாகக் கட்டி தந்திருக்கிறார் சுப்ர.பாலன். அமரர் கல்கியின் முப்பதாண்டுக்கால படைப்புக்களை அகழ்ந்தாராய்ந்து சேகரித்து 28 புத்தகங்களாக , மிகுந்த ஆர்வத்தோடும் ஈடுபாட்டோடும் தொகுத்திருக்கிறார்..90களின் இறுதியிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5 கல்கி நினைவு தினத்தன்று ஒரு தொகுப்பு வெளியானது. ஒவ்வொரு ஆண்டும் வெளியான தொகுப்புகள் முக்கியமானவை. அதிலும் குறிப்பாக 2001ல் வெளியான 'வாழ்க சுதந்திரம்… வாழ்க நிரந்தரம்' என்ற கல்கி தலையங்கங்களின் தொகுப்பு, வரலாற்று ஆய்வாளர்களுக்கு உதவும் ஓர் அரிய ஆவணம்.ஒரு ஆய்வாளன் தான் ஆய்வு செய்யும் காலத்தைப் புரிந்துக்கொள்ள உதவும் காலத்தைக் காட்டும் கண்ணாடி கல்கியின் தலையங்கங்கள். 'வெட்டு ஒன்று துண்டு இரண்டு' என்ற வகையில் தன் திடமான கருத்துகளைத் துணிவுடன் எழுதியவர் கல்கி. ராஜாஜியின் மனசாட்சி 'கல்கி' என்று சொல்லும் அளவுக்கு ராஜாஜியின் கருத்துகளை, எண்ணங்களைத் தெளிவாக எடுத்துச் சொன்னவர் கல்கி..கல்கி போன்றவர்களின் எழுத்துகளை காலவரிசைப்படி சரியாக, நேர்மையாக, மூலத்தைச் சிதைத்து விடாமல் தொகுத்து ஆவணப்படுத்த தனித்திறமை வேண்டும். அதைப் பெற்றிருக்கும் சுப்ர.பாலன் அந்தப் பணியை செவ்வனே செய்திருக்கிறார். "20ஆம் நூற்றாண்டின் இன்றைய நிகழ்காலத்தைக் கடந்த காலம்தான் தீர்மானித்திருக்கிறது" என்று நம்பும் எவருக்கும் உதவும் ஒரு கைவிளக்கு கல்கியின் எழுத்துகள். அப்படி உதவி பெறுபவர்கள் சுப்ர.பாலனைப் போற்றுவார்கள் அவருக்கு என் பாராட்டுகள்..பின்னர், தொகுப்பாசிரியர் சுப்ர.பாலன் அவர்கள் பேசுகையில்…."கல்கியின் படைப்புகள் சமூகத்திற்கு எவ்வளவு முக்கியமானது, அதனை ஆவணப்படுத்துவது ஏன் அவசியமானது" என்றும், "பெருமைக்குரிய அந்தப் பணியைச் செய்ய கல்கி ராஜேந்திரன் தனக்கு வாய்ப்பு வழங்கியதற்காக அவருக்கு நன்றி" என்றும் ரத்தினச் சுருக்கமாக தன் ஏற்புரையில் கூறினார்..கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளையின் அறங்காவலர்களில் ஒருவரான மூத்த பத்திரிகையாளர் சந்திரமௌலி, விருந்தினர்களை அறிமுகப்படுத்தி வரவேற்றார்.அறங்காவலர் சீதா ரவி நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தார்..அறக்கட்டளையின் சார்பில் வந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கு கல்கியின் பல்வேறு புத்தகங்களும் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், கல்கி இதழை அலங்கரித்த 'அலை ஓசை' ஓவியமும் (அதில் அமரர் கல்கியின் உருவமும் இடம் பெற்றிருக்கும்) , 'காற்றினிலே வரும் கீதம்' ஓவியமும் பரிசாக வழங்கப்பட்டது..விழாவின் இறுதியில் முனைவர் காயத்ரி கிரீஷ் அவர்களின் இன்னிசைக் கச்சேரி நடைப்பெற்றது. அமரர் கல்கி அவர்கள் சிறந்த தேசபக்தர். விடுதலை போராட்டங்களில் ஈடுபட்டு சிறைவாசம் அனுபவித்தவர். அவரது நினைவினையும் தேசப்பற்றையும் போற்றத்தக்க வகையில் அன்றைய இசை நிகழ்ச்சி முழுவதும் தேசபக்தி பாடல்களாக அமைந்திருந்தது ஒரு தனிச்சிறப்பு. பொதுவாக இசை நிகழ்ச்சிகளில் ஒன்றிரண்டு தேசபக்திப் பாடல்கள் இருக்கும். ஆனால் அன்று காயத்ரியின் முழு கச்சேரியும் கல்கியின் இரண்டு பாடல்கள் உட்பட 9 தேசபக்தி பாடல்களால்தான் இன்னிசைக் கச்சேரி நடைப்பெற்றது. அதுவும் பாரம்பரியபாணிக் கச்சேரிகள் போல் இல்லாமல் 7 இந்திய மொழிகளில் அந்தந்த மொழி உச்சரிப்புகளில், அந்தந்த தொனியில், மலையாளம், தெலுங்கு, சமஸ்கிருதம், உருது, கன்னடம், பெங்காலி எனப் பல மொழிகளிலும் பல்வேறு ராகங்களில் தேசபக்தி பாடல்களைப் பாடி அசத்தினார் காயத்ரி கிரீஷ். இதற்காக அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள், பயிற்சிகள் ஒவ்வொரு பாடலிலும் தெளிவாகத் தெரிந்தது. இந்த நிகழ்ச்சி காயத்ரியின் இசைக் கச்சேரிகளில் ஒரு புதிய மைல் கல் எனலாம்..அன்று அவரின் பக்க வாத்தியங்களாக அனந்த கிருஷ்ணன் வயலினை இசைக்க, கணபதி மிருதங்கம் மற்றும் தபலா வாசிக்க ,அனந்த நாராயணன் வீணை மீட்ட , வைத்தியநாதன் அவர்கள் தம்பூராவை மீட்டினார்கள். ஒரு மாறுபட்ட கச்சேரியின் கட்டமைப்பை இந்தக் கூட்டணி நன்கு புரிந்து கொண்டிருந்ததும் இசை நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஒரு காரணம்..வானதி பதிப்பகம் பதிப்பித்த சுப்ர.பாலன் எழுதிய அனைத்து நூல்களையும் விழா மேடை அருகிலேயே காட்சிப்படுத்தியிருந்தார்கள். அன்றைய விழா கல்கியின் எழுத்துகளோடு நல்ல இசையையும் நேசிக்கும் வாசகர்களுக்கும் நீண்ட நாள் நினைவில் நிற்கப்போகும் ஓர் இனிய மாலையாகயிருந்தது.
– தனுஜா ஜெயராமன் படங்கள் ஶ்ரீஹரி .கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் 'கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு நாள் சொற்பொழிவு' நிகழ்ச்சி அண்மையில் சென்னை, மயிலாப்பூரில் உள்ள ராகசுதா அரங்கத்தில் நடைபெற்றது. அன்றைய நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றியவர் பேராசிரியர்ஆ. இரா.வேங்கடாசலபதி. இவர் ஒரு பன்னோக்கு திறமையாளர். இவர் இலக்கியங்களை ஆய்வு நோக்கிலும் வரலாற்றுப் பின்னணியிலும் ஆய்வுகள் செய்துக்கொண்டிருப்பவர். அன்றைய விழாவில் அமரர் கல்கியின் பல்வேறு படைப்புகளைத் தொகுத்துத் தந்திருக்கும் மூத்த எழுத்தாளர் சுப்ர.பாலன் அவர்களும் மற்றும் அவற்றைப் பதிப்பித்திருக்கும் வானதி பதிப்பகம் வானதி ராமநாதன் அவர்களும் கௌரவிக்கப்பட்டனர்..பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதியின் அன்றைய உரை ஒரு சிறப்பான ஆய்வுக் கட்டுரையாகவே அமைந்திருந்தது.அந்த உரையின் சில முக்கிய பகுதிகள் இவை:. "கல்கி என்றாலே 'பொன்னியின் செல்வன்', 'சிவகாமியின் சபதம்' போன்ற வரலாற்று நூல்களைப் பற்றித்தான் பலரும் பேசுகிறார்கள். ஆனால் கல்கியின் புனைவு சாராத எழுத்துகள் மிக முக்கியமானவை. ஒரு வரலாற்று ஆய்வாளரான எனக்கு எப்போதும் உதவுவது கல்கியின் எழுத்துகளின் தொகுப்புகள்தான்..கல்கி அவர்கள் விகடனில் எழுதிய பல முக்கியமான கட்டுரைகள் நீண்ட நாட்கள் புத்தகமாக வெளிவரவில்லை. அவர் மறைந்து 10 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் அதற்கான பதிப்புரிமை கல்கி ராஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது. அதிலிருந்து அவ்வப்போது சில தொகுப்புகள் வெளியாயின..ஆனால், 90களின் இறுதியில் கல்கியின் எழுத்துகளை சுப்ர.பாலன் தேடித்தேடி கல்கியை ஒரு புதிய பார்வையில் பார்க்கும் வாய்ப்பாக தொகுத்தளித்தார். ஒரு அழகான மாலையைத் தொடுப்பதில் மலர்களைப் போலவே அதை இணைக்கும் நாரும் மிக முக்கியமானது. அந்த நாராக கல்கியின் எழுத்துகளை அழகாகக் கட்டி தந்திருக்கிறார் சுப்ர.பாலன். அமரர் கல்கியின் முப்பதாண்டுக்கால படைப்புக்களை அகழ்ந்தாராய்ந்து சேகரித்து 28 புத்தகங்களாக , மிகுந்த ஆர்வத்தோடும் ஈடுபாட்டோடும் தொகுத்திருக்கிறார்..90களின் இறுதியிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5 கல்கி நினைவு தினத்தன்று ஒரு தொகுப்பு வெளியானது. ஒவ்வொரு ஆண்டும் வெளியான தொகுப்புகள் முக்கியமானவை. அதிலும் குறிப்பாக 2001ல் வெளியான 'வாழ்க சுதந்திரம்… வாழ்க நிரந்தரம்' என்ற கல்கி தலையங்கங்களின் தொகுப்பு, வரலாற்று ஆய்வாளர்களுக்கு உதவும் ஓர் அரிய ஆவணம்.ஒரு ஆய்வாளன் தான் ஆய்வு செய்யும் காலத்தைப் புரிந்துக்கொள்ள உதவும் காலத்தைக் காட்டும் கண்ணாடி கல்கியின் தலையங்கங்கள். 'வெட்டு ஒன்று துண்டு இரண்டு' என்ற வகையில் தன் திடமான கருத்துகளைத் துணிவுடன் எழுதியவர் கல்கி. ராஜாஜியின் மனசாட்சி 'கல்கி' என்று சொல்லும் அளவுக்கு ராஜாஜியின் கருத்துகளை, எண்ணங்களைத் தெளிவாக எடுத்துச் சொன்னவர் கல்கி..கல்கி போன்றவர்களின் எழுத்துகளை காலவரிசைப்படி சரியாக, நேர்மையாக, மூலத்தைச் சிதைத்து விடாமல் தொகுத்து ஆவணப்படுத்த தனித்திறமை வேண்டும். அதைப் பெற்றிருக்கும் சுப்ர.பாலன் அந்தப் பணியை செவ்வனே செய்திருக்கிறார். "20ஆம் நூற்றாண்டின் இன்றைய நிகழ்காலத்தைக் கடந்த காலம்தான் தீர்மானித்திருக்கிறது" என்று நம்பும் எவருக்கும் உதவும் ஒரு கைவிளக்கு கல்கியின் எழுத்துகள். அப்படி உதவி பெறுபவர்கள் சுப்ர.பாலனைப் போற்றுவார்கள் அவருக்கு என் பாராட்டுகள்..பின்னர், தொகுப்பாசிரியர் சுப்ர.பாலன் அவர்கள் பேசுகையில்…."கல்கியின் படைப்புகள் சமூகத்திற்கு எவ்வளவு முக்கியமானது, அதனை ஆவணப்படுத்துவது ஏன் அவசியமானது" என்றும், "பெருமைக்குரிய அந்தப் பணியைச் செய்ய கல்கி ராஜேந்திரன் தனக்கு வாய்ப்பு வழங்கியதற்காக அவருக்கு நன்றி" என்றும் ரத்தினச் சுருக்கமாக தன் ஏற்புரையில் கூறினார்..கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளையின் அறங்காவலர்களில் ஒருவரான மூத்த பத்திரிகையாளர் சந்திரமௌலி, விருந்தினர்களை அறிமுகப்படுத்தி வரவேற்றார்.அறங்காவலர் சீதா ரவி நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தார்..அறக்கட்டளையின் சார்பில் வந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கு கல்கியின் பல்வேறு புத்தகங்களும் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், கல்கி இதழை அலங்கரித்த 'அலை ஓசை' ஓவியமும் (அதில் அமரர் கல்கியின் உருவமும் இடம் பெற்றிருக்கும்) , 'காற்றினிலே வரும் கீதம்' ஓவியமும் பரிசாக வழங்கப்பட்டது..விழாவின் இறுதியில் முனைவர் காயத்ரி கிரீஷ் அவர்களின் இன்னிசைக் கச்சேரி நடைப்பெற்றது. அமரர் கல்கி அவர்கள் சிறந்த தேசபக்தர். விடுதலை போராட்டங்களில் ஈடுபட்டு சிறைவாசம் அனுபவித்தவர். அவரது நினைவினையும் தேசப்பற்றையும் போற்றத்தக்க வகையில் அன்றைய இசை நிகழ்ச்சி முழுவதும் தேசபக்தி பாடல்களாக அமைந்திருந்தது ஒரு தனிச்சிறப்பு. பொதுவாக இசை நிகழ்ச்சிகளில் ஒன்றிரண்டு தேசபக்திப் பாடல்கள் இருக்கும். ஆனால் அன்று காயத்ரியின் முழு கச்சேரியும் கல்கியின் இரண்டு பாடல்கள் உட்பட 9 தேசபக்தி பாடல்களால்தான் இன்னிசைக் கச்சேரி நடைப்பெற்றது. அதுவும் பாரம்பரியபாணிக் கச்சேரிகள் போல் இல்லாமல் 7 இந்திய மொழிகளில் அந்தந்த மொழி உச்சரிப்புகளில், அந்தந்த தொனியில், மலையாளம், தெலுங்கு, சமஸ்கிருதம், உருது, கன்னடம், பெங்காலி எனப் பல மொழிகளிலும் பல்வேறு ராகங்களில் தேசபக்தி பாடல்களைப் பாடி அசத்தினார் காயத்ரி கிரீஷ். இதற்காக அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள், பயிற்சிகள் ஒவ்வொரு பாடலிலும் தெளிவாகத் தெரிந்தது. இந்த நிகழ்ச்சி காயத்ரியின் இசைக் கச்சேரிகளில் ஒரு புதிய மைல் கல் எனலாம்..அன்று அவரின் பக்க வாத்தியங்களாக அனந்த கிருஷ்ணன் வயலினை இசைக்க, கணபதி மிருதங்கம் மற்றும் தபலா வாசிக்க ,அனந்த நாராயணன் வீணை மீட்ட , வைத்தியநாதன் அவர்கள் தம்பூராவை மீட்டினார்கள். ஒரு மாறுபட்ட கச்சேரியின் கட்டமைப்பை இந்தக் கூட்டணி நன்கு புரிந்து கொண்டிருந்ததும் இசை நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஒரு காரணம்..வானதி பதிப்பகம் பதிப்பித்த சுப்ர.பாலன் எழுதிய அனைத்து நூல்களையும் விழா மேடை அருகிலேயே காட்சிப்படுத்தியிருந்தார்கள். அன்றைய விழா கல்கியின் எழுத்துகளோடு நல்ல இசையையும் நேசிக்கும் வாசகர்களுக்கும் நீண்ட நாள் நினைவில் நிற்கப்போகும் ஓர் இனிய மாலையாகயிருந்தது.