ஒரு நிருபரின் டைரி – 30.– எஸ். சந்திரமெளலி.வரிகள் போட்டால் யாருக்குத்தான் கஷ்டமாக இருக்காது? அதுவும் மத்திய, மாநில நிதி அமைச்சர்கள் போல பட்ஜெட்டின்போது ஆண்டுக்கு ஒரு தடவை மட்டுமில்லாமல், வாராவாரம் வரிகள் போட்டால்? ஆனால், நகைச்சுவை எழுத்தாளர் ஜே.எஸ். ராகவன் தனது நகைச்சுவை மூலமாக பல்லாண்டுகளாக வாரந்தோறும் போட்ட "தமாஷா வரிகளை மாம்பலம் டைம்ஸ் மற்றும் அண்ணாநகர் டைம்ஸ் வாசகர்கள் மிகவும் ரசித்துப் படித்து சிரித்து மகிழ்ந்தார்கள் என்றால் அது துளியும் மிகை இல்லை.".அவர் இன்று நம்மிடையே இல்லை. கொரோனா தாக்குதலுக்குள்ளானபோது ஆஸ்பத்திரிக்குப் போனவர் கோவிட் வைரசுக்கே கிச்சுகிச்சு மூட்டிவிட்டு, பத்திரமாக வீட்டுக்கு வந்துவிட்டார். ஆனால், பாவம் அதன்பின் அடிக்கடி உடல்நலம் குன்றி ஆஸ்பத்திரிக்கு போய் வந்துகொண்டிருந்தார். இந்த முறை போனபோது கூட, வழக்கம் போல திரும்பி வந்துவிடுவார் என்றுதான் குடும்பத்தினர் நம்பினார்கள். ஆனால், நம்மை எல்லாம் ஏமாற்றிவிட்டு, "சொர்க்கம் டைம்ஸ்' இதழில் எழுத அங்கே புறப்பட்டுப் போய்விட்டார். போகிறபோது, எம தர்ம ராஜனிடம் கூட ஜாலியாக ஜோக் அடித்துக் கொண்டே போகிற மனுஷர்தான் அவர். நமக்கெல்லாம் ரத்தத்தில் சிவப்பணு, வெள்ளையணு எல்லாம் இருந்தால், அவருக்கு உபரியாக நகைச்சுவையும் கலந்திருந்தது..கடைசிவரை நகைச்சுவை அவருடன் கூடவே இருந்தது என்பதற்கு அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்ற அன்று காலையில், ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் போர் மூண்ட நிலையில் அவர் முகநூலில் பகிர்ந்துகொண்ட கொண்ட ஜோக் இது:'.'ஏம்மா, இன்னிக்கு கறிகாயெல்லாம் ஏக விலை சொல்றே?'.'தெரியாதா சாமி, காலிலே ரஷ்யாவுக்கும் யூக்ரேனுக்கும் சண்டை ஆரம்பிச்சுடுத்தாமே..நம் ஊரில், தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதக் கூடிய எழுத்தாளர்கள் மிகச் சிலர்தான். அதுவும் இரண்டு மொழிகளிலும் நகைச்சுவையை வெகு யதார்த்தமாகக் கையாண்டு, படிக்கிறவர்களை வாய்விட்டு சிரிக்கவைக்கும் எழுத்தாளர்கள் மிக, மிக அபூர்வம். அத்தகைய வெகு சிலரில் குறிப்பிடத்தக்கவர் ஜே.எஸ்.ராகவன். ஆங்கிலத்தில் இவரது நகைச்சுவைக் கட்டுரைகள் ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா, ரீடர்ஸ் டைஜஸ்ட் போன்றவற்றில் பிரசுரமாகி உள்ளன. தமிழில் கல்கி, ஆனந்த விகடன், சாவி, அமுதசுரபி, கலைமகள் உள்ளிட்ட பல பத்திரிகைகளில் இவர் எழுதி இருக்கிறார். ஆனால், அவரது அசுர சாதனை என்பது மாம்பலம் டைம்ஸ், அண்ணாநகர் டைம்ஸ்களின் பல்வேறு பதிப்புகளில் அவர் எழுதிய "தமாஷா வரிகள்" என்ற நகைச்சுவை பத்திகள்தான். ஆயிரமாவது வாரத்தை நோக்கி வெற்றி நடை போட்டுக் கொண்டிருந்த வேளையில், ஆயிரத்தை தொட்டுவிட வேண்டும் என மிகுந்த ஆர்வமாக இருந்தார். நாம் கொடுத்து வைக்கவில்லை..அவரது தமாஷா வரிகள் 500 வது வாரங்கள் வெளியான நிலையில் மேற்கு மாம்பலத்திலேயே ஒரு மினி ஹாலில் சின்னதாக ஒரு பாராட்டுவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்ட அந்த ஆத்மார்த்தமான விழாவில் அவர் "தான் எழுதத் தொடங்கியது எப்படி" என்ற கதையைப் பகிர்ந்துகொண்டார். "அறுபதுகளில் கொல்கத்தாவில் இருந்த என்னுடைய மைத்துனர் கிருஷ்ணனுக்கு நான் நிறைய கடிதங்கள் எழுதுவேன். அவை வழக்கமான "நாங்கள் இங்கே நலம்; நீங்கள் நலமா?" ரகமாக இல்லாமல், சென்னையில் நடக்கும் விஷயங்கள், திரைப்படங்கள், கச்சேரிகள், இதர விஷயங்களைப் பற்றி என்னுடைய கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களாக இருக்கும். அதில் நகைச்சுவைக்கும் பஞ்சமிருக்காது. அவர், "உங்கள் கடிதங்களில் அன்புள்ள… இப்படிக்கு போன்ற வார்த்தைகளை எடுத்துவிட்டால், பத்திரிகையில் வெளியாகிற கட்டுரைகளைப் படிக்கும் உணர்வைக் கொடுக்கின்றது. உங்களுக்கு எதையும் சுவாரசியமாக எழுதத்தெரிகிறது. நீங்கள் ஏன் பத்திரிகைகளில் எழுதக்கூடாது?" என்று அடிக்கடி கேட்பார். அவர் கொடுத்த ஊக்கத்தினால் உந்தப்பட்டு, நானும் ஒரு நாள் ஒரு கட்டுரை எழுதி ஹிந்து பத்திரிகைக்கு அனுப்பி வைத்தேன். சுமார் ஒரு வாரம் கழித்து, ஒரு நாள் மதிய இடைவேளையின்போது, நான் வேலை பார்த்த அலுவலகத்தில் சக ஆங்கிலோ இந்திய ஊழியர்கள் சிலர் படித்து, ரசித்து, சிரித்துக் கொண்டிருந்தது ஹிந்துவில் வெளியான என் கட்டுரையைத்தான் என அறிந்தபோது எனக்கு ஒரே ஆச்சரியம்" என்று சொன்னார் ஜே.எஸ்.ஆர்..அந்தக் கட்டுரை வெளியான சில நாட்கள் கழித்து ராகவன் நேரே ஹிந்து அலுவலகத்துக்குச் சென்றார். ஆசிரியர் இலாக்காவில் கிருஷ்ணமூர்த்தி என்பவர், இவரை விசாரித்தார். இவர் அந்தக் குறிப்பிட்ட கட்டுரையைப் பற்றி சொன்னதும், "நீதான் அதை எழுதினியா?" என்று அவர் கேட்டார். ராகவன் பட்டென்று, " இல்லை" என்று சொன்னார். கிருஷ்ணமூர்த்திக்கு ஒன்றும் புரியவில்லை. சிரித்துக் கொண்டே, "நான் எழுதலை; டைப்ரைட்டரில் டைப் பண்ணினேன்" என்று ராகவன் சொன்னதும், அந்த ஸ்பாண்டேனியஸ் நகைச்சுவையை ரொம்ப ரசித்துவிட்டு, " நன்னா எழுதறே! நிறைய எழுது" என்று சொன்னார். கிருஷ்ணமூர்த்தியின் வாய் முகூர்த்தம் பலித்து, தமிழின் குறிப்பிடத்தக்க நகைச்சுவை எழுத்தாளர்களில் ஒருவரானார் ஜே.எஸ்.ராகவன்..ஒருமுறை அவரிடம், "எப்படி சார் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் உங்களால் இப்படி சரளமான நகைச்சுவையுடன் எழுத முடிகிறது?" என்று கேட்டபோது, அவர் சொன்னார்:."பூந்தமல்லியில்தான் என் பள்ளிப் படிப்பு. பள்ளிக்கூடத்தில் தமிழ் மீடியத்தில்தான் படித்தேன். ஸ்கூலில் படிக்கிற காலத்தில் என்னால் சேர்ந்தாற்போல இரண்டு வரிகள் ஆங்கிலத்தில் பேச முடியாது. ஆனாலும், நன்றாக இங்கிலீஷ் பேசவேண்டும் என்று எனக்கு ரொம்ப ஆசை. அதன், காரணமாக ஜேம்ஸ் ஹார்ட்லி சேஸ் நாவல்களைப் படிக்க ஆரம்பித்தேன். அதன்பின் பல ஆங்கில நாவலாசிரியர்களின் நாவல்களைப் படித்தேன். அதுதான் எனக்குள்ளே எழுதுகிற திறமைக்கு வித்திட்டது".அவர் தான் எழுதிய ஆங்கில நகைச்சுவைக் கட்டுரைகளைத் தொகுத்து தொகுத்து 'லாஃபிங் டேப்லட்ஸ்' என்று புத்தகமாக வெளியிட்டார். அது என்ன லாஃபிங் டேப்லட்ஸ்? தூக்கம் வராவிட்டால் தூக்க மாத்திரை போட்டுக் கொள்கிறோமில்லையா? அது ஸ்லீப்பிங் டேப்லட்ஸ். அதுபோல மனிதர்களுக்கு சிரிப்பு வரவழைக்கு நகைச்சுவைக் கட்டுரைகளின் தொகுப்புக்கு 'லாஃபிங் டேப்லட்ஸ்' என்று தலைப்பு வைத்தார். இதுவரை அந்தப் புத்தகம் எட்டாயிரம் பிரதிகளுக்கு மேல் விற்பனை ஆகி இருக்கிறது..நகைச்சுவை தவிர அவ்வப்போது சில சீரியஸ் கதைகளையும் எழுதி இருக்கிறார் ராகவன். ஆனால், அவருடைய நண்பர்களும், பத்திரிகை ஆசிரியர்களும் "சீரியஸ் கதைகள் எழுத நிறைய பேர் இருக்காங்க! நீ ஹியூமர் மட்டும் எழுது! அது உங்களுக்கு ரொம்ப நன்றாக வருது!" என்று சொல்ல, இவர் நகைச்சுவை எழுத்தில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார்..ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருந்தவர், தமிழுக்குப் பிரவேசித்த கதையும் சுவாரசியமானதுதான். ஒரு சமயம், இதுபற்றிக் கேட்டபோது, "ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருந்தாலும், தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு குறிப்பாக இலக்கிய சிந்தனைக் கூட்டங்களுக்கு தவறாமல் போவேன். அப்போது என்னை சந்தித்த பி.சு.கைலாசம் என் ஆங்கில எழுத்துக்களைப் பாராட்டியதோடு, "தமிழில் நீங்கள் ஏன் எழுதக்கூடாது?" என்று கேட்டார். "தமிழில் நிறைய பேர் ஹியூமர் எழுதுகிறார்கள்; அதுவுமில்லாமல், எனக்கு தமிழில் இலக்கண சுத்தமாக எழுதத் தெரியாது" என்றேன். "எழுதறது எப்படிங்கிறது உங்களுக்குத் தெரிஞ்சிருக்கு! உங்க தாய் மொழி தமிழ்தானே? அதுவுமில்லாம, நீங்க 'வெண்பாவா' எழுதப் போறீங்க? பேசறா மாதிரியே எழுதுங்க! அது ஒண்ணும் கஷ்டமில்லை! முயற்சி பண்ணுங்க!" என்றார். உடனே சுறுசுறுப்பாக உட்கார்ந்து நான் தமிழில் எழுதின கட்டுரைக்குத் தலைப்பு: ராகம்; தானம்; பல்வலி" இது நடந்தது 1980ல். கதை கல்கியில் வெளியானது.."மாம்பலம் டைம்ஸ் பத்திரிகையில் தமாஷா வரிகள் எழுத வாய்ப்பு கிடைத்தது பற்றி அடிக்கடி சிலாகித்து நினைவு கூறிருக்கிறார் ராகவன். ".ஆசிரியர் கே.எஸ்.ராமகிருஷ்ணன் என் ஆங்கில, தமிழ் எழுத்துக்களை ரசித்துப் படித்தவர். அவர், "மாம்பலம் டைம்சில் எழுத முடியுமா?" என்று கேட்டபோது, எனக்கு அது பெரிய சவாலாகப்பட்டது. "வாராவாரம் ஒரு குறிப்பிட்ட கெடுவுக்குள் நம்மால் எழுதுவது சாத்தியமா?" என்று தயங்கினேன். "எழுத ஆரம்பியுங்கள்! தானாக ஐடியா வரும்?" என்று சொன்னார். அவர் சொன்னது ரொம்ப வாஸ்தவமான வார்த்தை. ஆண்டவன் அருளால், இன்று வரை ஐடியாக்கள் ஊற்றாகப் பெருக்கெடுத்துக் கொண்டிருக்கின்றன. நாட்டு நடப்புகளை கூர்ந்து கவனித்து, அவற்றை நகைச்சுவைக் கண்ணோட்டத்தில் எழுதுவது இப்போது சுலபமாக இருக்கிறது. யார் மனமும் புண்படும்படியாக கேலி செய்து எழுதக் கூடாது. உடல் ஊனமுற்றவர்களை கிண்டல் செய்யக்கூடாது. அமங்கலமான "ஐயோ! எழவு, செத்தேன்" போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது. இப்படியாக எழுத்தில் எனக்கு நானே மூன்று கட்டுப்பாடுகள் விதித்துக் கொண்டிருக்கிறேன்." என்றார்..அவரது கட்டுரைகளுக்கு படம் போடுவதற்கு அவர் முதலில் ஹிந்து கார்டூனிஸ்ட் கேசவ்வைத்தான் அணுகினார். ஆனால், ஹிந்துவில் அதிகாரப்பூர்வமாக அனுமதி கிடைப்பதில் சில சிக்கல்கள் இருந்தது. அடுத்து ஓவியர் நடனத்தைக் கேட்டபோது அவர் சந்தோஷமாகச் சம்மதித்தார். நடனம் மறைவுக்குப் பின் ஓவியர் அரஸ் ஜமாய்த்துக் கொண்டிருந்தார்..அவ்வப்போது ராகவனை சந்திக்கும்போதெல்லாம், தனது எழுத்துக்கு வாசகர்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பு பற்றி சந்தோஷமான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வார். அவருடைய பழைய வீட்டை விற்றுவிட்டு, புது வீடு வாங்கினபோது, பத்திரப் பதிவுக்காக ரெஜிஸ்டிரார் அலுவலகத்துக்குச் சென்றாராம். அங்கே இருந்த ராகவனின் ரசிகரான அதிகாரி இவர் பெயரைக் கேட்டதும், பர்சனலாக அறிமுகமில்லாதவர் ஆனாலும், , "மாம்பலம் டைம்ஸில் எழுதுவது நீங்கள்தானே?" என்று கேட்டுவிட்டு, இவரது எழுத்தை பாராட்டி, உடனடியாக பதிவு வேலையை முடித்துக் கொடுத்தாராம்.."நான் கணக்கு வைத்திருக்கும் மாம்பலம் வங்கிக் கிளை ஒன்றுக்குச் சென்றிருந்தபோது, அங்கே சந்தித்த ஒரு பெண் வங்கி அதிகாரி தானே முன்வந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, என் கணவரை இழந்த சோகத்திலிருந்து மீள வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தபோது, எங்கள் கிளை மேனேஜர், உங்கள் புத்தகங்களைக் கொடுத்து என்னைப் படிக்கச் சொன்னார். உங்களின் நகைச்சுவை எழுத்துக்கள் என் சோகத்தின் பாரத்தை அகற்றிவிட்டன. துரதிருஷ்டவசமாக, என் மகளால் இன்னமும் சோகத்திலிருந்து மீள முடியவில்லை. காரணம் அவளுக்கு தமிழ் படிக்கத் தெரியாது" என்று நாத்தழுதழுக்க நன்றி கூறினார். அவருக்கு இப்படியும் ஒரு அனுபவம். இதுபோல நிறைய அனுபவங்களைச் சொல்லி இருக்கிறார்..அப்புசாமி சீதா பாட்டியை சிருஷ்டித்த பாக்கியம் ராமசாமி என்கிற ஜ.ர.சுந்தரேசன், ஜே.எஸ்.ராகவன். ராணி மைந்தன் மூவரும் முனைந்து செயல்பட்டு உருவாக்கிய "அக்கரை" அமைப்பின் கணக்கு வழக்குகளை கவனித்துக் கொண்டவர் ராகவன்தான்.."ஸார்! மேற்கு மாம்பலத்தில் வார்டு கவுன்சிலருக்கு நீங்க நின்னா, நிச்சயம் ஜெயிச்சிடுவீங்க! " என்று நான் ராகவனிடம் பல முறை சொல்லி இருக்கிறேன். அவர் அதனை ரசித்துச் சிரிப்பார்..(தொடரும்)
ஒரு நிருபரின் டைரி – 30.– எஸ். சந்திரமெளலி.வரிகள் போட்டால் யாருக்குத்தான் கஷ்டமாக இருக்காது? அதுவும் மத்திய, மாநில நிதி அமைச்சர்கள் போல பட்ஜெட்டின்போது ஆண்டுக்கு ஒரு தடவை மட்டுமில்லாமல், வாராவாரம் வரிகள் போட்டால்? ஆனால், நகைச்சுவை எழுத்தாளர் ஜே.எஸ். ராகவன் தனது நகைச்சுவை மூலமாக பல்லாண்டுகளாக வாரந்தோறும் போட்ட "தமாஷா வரிகளை மாம்பலம் டைம்ஸ் மற்றும் அண்ணாநகர் டைம்ஸ் வாசகர்கள் மிகவும் ரசித்துப் படித்து சிரித்து மகிழ்ந்தார்கள் என்றால் அது துளியும் மிகை இல்லை.".அவர் இன்று நம்மிடையே இல்லை. கொரோனா தாக்குதலுக்குள்ளானபோது ஆஸ்பத்திரிக்குப் போனவர் கோவிட் வைரசுக்கே கிச்சுகிச்சு மூட்டிவிட்டு, பத்திரமாக வீட்டுக்கு வந்துவிட்டார். ஆனால், பாவம் அதன்பின் அடிக்கடி உடல்நலம் குன்றி ஆஸ்பத்திரிக்கு போய் வந்துகொண்டிருந்தார். இந்த முறை போனபோது கூட, வழக்கம் போல திரும்பி வந்துவிடுவார் என்றுதான் குடும்பத்தினர் நம்பினார்கள். ஆனால், நம்மை எல்லாம் ஏமாற்றிவிட்டு, "சொர்க்கம் டைம்ஸ்' இதழில் எழுத அங்கே புறப்பட்டுப் போய்விட்டார். போகிறபோது, எம தர்ம ராஜனிடம் கூட ஜாலியாக ஜோக் அடித்துக் கொண்டே போகிற மனுஷர்தான் அவர். நமக்கெல்லாம் ரத்தத்தில் சிவப்பணு, வெள்ளையணு எல்லாம் இருந்தால், அவருக்கு உபரியாக நகைச்சுவையும் கலந்திருந்தது..கடைசிவரை நகைச்சுவை அவருடன் கூடவே இருந்தது என்பதற்கு அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்ற அன்று காலையில், ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் போர் மூண்ட நிலையில் அவர் முகநூலில் பகிர்ந்துகொண்ட கொண்ட ஜோக் இது:'.'ஏம்மா, இன்னிக்கு கறிகாயெல்லாம் ஏக விலை சொல்றே?'.'தெரியாதா சாமி, காலிலே ரஷ்யாவுக்கும் யூக்ரேனுக்கும் சண்டை ஆரம்பிச்சுடுத்தாமே..நம் ஊரில், தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதக் கூடிய எழுத்தாளர்கள் மிகச் சிலர்தான். அதுவும் இரண்டு மொழிகளிலும் நகைச்சுவையை வெகு யதார்த்தமாகக் கையாண்டு, படிக்கிறவர்களை வாய்விட்டு சிரிக்கவைக்கும் எழுத்தாளர்கள் மிக, மிக அபூர்வம். அத்தகைய வெகு சிலரில் குறிப்பிடத்தக்கவர் ஜே.எஸ்.ராகவன். ஆங்கிலத்தில் இவரது நகைச்சுவைக் கட்டுரைகள் ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா, ரீடர்ஸ் டைஜஸ்ட் போன்றவற்றில் பிரசுரமாகி உள்ளன. தமிழில் கல்கி, ஆனந்த விகடன், சாவி, அமுதசுரபி, கலைமகள் உள்ளிட்ட பல பத்திரிகைகளில் இவர் எழுதி இருக்கிறார். ஆனால், அவரது அசுர சாதனை என்பது மாம்பலம் டைம்ஸ், அண்ணாநகர் டைம்ஸ்களின் பல்வேறு பதிப்புகளில் அவர் எழுதிய "தமாஷா வரிகள்" என்ற நகைச்சுவை பத்திகள்தான். ஆயிரமாவது வாரத்தை நோக்கி வெற்றி நடை போட்டுக் கொண்டிருந்த வேளையில், ஆயிரத்தை தொட்டுவிட வேண்டும் என மிகுந்த ஆர்வமாக இருந்தார். நாம் கொடுத்து வைக்கவில்லை..அவரது தமாஷா வரிகள் 500 வது வாரங்கள் வெளியான நிலையில் மேற்கு மாம்பலத்திலேயே ஒரு மினி ஹாலில் சின்னதாக ஒரு பாராட்டுவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்ட அந்த ஆத்மார்த்தமான விழாவில் அவர் "தான் எழுதத் தொடங்கியது எப்படி" என்ற கதையைப் பகிர்ந்துகொண்டார். "அறுபதுகளில் கொல்கத்தாவில் இருந்த என்னுடைய மைத்துனர் கிருஷ்ணனுக்கு நான் நிறைய கடிதங்கள் எழுதுவேன். அவை வழக்கமான "நாங்கள் இங்கே நலம்; நீங்கள் நலமா?" ரகமாக இல்லாமல், சென்னையில் நடக்கும் விஷயங்கள், திரைப்படங்கள், கச்சேரிகள், இதர விஷயங்களைப் பற்றி என்னுடைய கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களாக இருக்கும். அதில் நகைச்சுவைக்கும் பஞ்சமிருக்காது. அவர், "உங்கள் கடிதங்களில் அன்புள்ள… இப்படிக்கு போன்ற வார்த்தைகளை எடுத்துவிட்டால், பத்திரிகையில் வெளியாகிற கட்டுரைகளைப் படிக்கும் உணர்வைக் கொடுக்கின்றது. உங்களுக்கு எதையும் சுவாரசியமாக எழுதத்தெரிகிறது. நீங்கள் ஏன் பத்திரிகைகளில் எழுதக்கூடாது?" என்று அடிக்கடி கேட்பார். அவர் கொடுத்த ஊக்கத்தினால் உந்தப்பட்டு, நானும் ஒரு நாள் ஒரு கட்டுரை எழுதி ஹிந்து பத்திரிகைக்கு அனுப்பி வைத்தேன். சுமார் ஒரு வாரம் கழித்து, ஒரு நாள் மதிய இடைவேளையின்போது, நான் வேலை பார்த்த அலுவலகத்தில் சக ஆங்கிலோ இந்திய ஊழியர்கள் சிலர் படித்து, ரசித்து, சிரித்துக் கொண்டிருந்தது ஹிந்துவில் வெளியான என் கட்டுரையைத்தான் என அறிந்தபோது எனக்கு ஒரே ஆச்சரியம்" என்று சொன்னார் ஜே.எஸ்.ஆர்..அந்தக் கட்டுரை வெளியான சில நாட்கள் கழித்து ராகவன் நேரே ஹிந்து அலுவலகத்துக்குச் சென்றார். ஆசிரியர் இலாக்காவில் கிருஷ்ணமூர்த்தி என்பவர், இவரை விசாரித்தார். இவர் அந்தக் குறிப்பிட்ட கட்டுரையைப் பற்றி சொன்னதும், "நீதான் அதை எழுதினியா?" என்று அவர் கேட்டார். ராகவன் பட்டென்று, " இல்லை" என்று சொன்னார். கிருஷ்ணமூர்த்திக்கு ஒன்றும் புரியவில்லை. சிரித்துக் கொண்டே, "நான் எழுதலை; டைப்ரைட்டரில் டைப் பண்ணினேன்" என்று ராகவன் சொன்னதும், அந்த ஸ்பாண்டேனியஸ் நகைச்சுவையை ரொம்ப ரசித்துவிட்டு, " நன்னா எழுதறே! நிறைய எழுது" என்று சொன்னார். கிருஷ்ணமூர்த்தியின் வாய் முகூர்த்தம் பலித்து, தமிழின் குறிப்பிடத்தக்க நகைச்சுவை எழுத்தாளர்களில் ஒருவரானார் ஜே.எஸ்.ராகவன்..ஒருமுறை அவரிடம், "எப்படி சார் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் உங்களால் இப்படி சரளமான நகைச்சுவையுடன் எழுத முடிகிறது?" என்று கேட்டபோது, அவர் சொன்னார்:."பூந்தமல்லியில்தான் என் பள்ளிப் படிப்பு. பள்ளிக்கூடத்தில் தமிழ் மீடியத்தில்தான் படித்தேன். ஸ்கூலில் படிக்கிற காலத்தில் என்னால் சேர்ந்தாற்போல இரண்டு வரிகள் ஆங்கிலத்தில் பேச முடியாது. ஆனாலும், நன்றாக இங்கிலீஷ் பேசவேண்டும் என்று எனக்கு ரொம்ப ஆசை. அதன், காரணமாக ஜேம்ஸ் ஹார்ட்லி சேஸ் நாவல்களைப் படிக்க ஆரம்பித்தேன். அதன்பின் பல ஆங்கில நாவலாசிரியர்களின் நாவல்களைப் படித்தேன். அதுதான் எனக்குள்ளே எழுதுகிற திறமைக்கு வித்திட்டது".அவர் தான் எழுதிய ஆங்கில நகைச்சுவைக் கட்டுரைகளைத் தொகுத்து தொகுத்து 'லாஃபிங் டேப்லட்ஸ்' என்று புத்தகமாக வெளியிட்டார். அது என்ன லாஃபிங் டேப்லட்ஸ்? தூக்கம் வராவிட்டால் தூக்க மாத்திரை போட்டுக் கொள்கிறோமில்லையா? அது ஸ்லீப்பிங் டேப்லட்ஸ். அதுபோல மனிதர்களுக்கு சிரிப்பு வரவழைக்கு நகைச்சுவைக் கட்டுரைகளின் தொகுப்புக்கு 'லாஃபிங் டேப்லட்ஸ்' என்று தலைப்பு வைத்தார். இதுவரை அந்தப் புத்தகம் எட்டாயிரம் பிரதிகளுக்கு மேல் விற்பனை ஆகி இருக்கிறது..நகைச்சுவை தவிர அவ்வப்போது சில சீரியஸ் கதைகளையும் எழுதி இருக்கிறார் ராகவன். ஆனால், அவருடைய நண்பர்களும், பத்திரிகை ஆசிரியர்களும் "சீரியஸ் கதைகள் எழுத நிறைய பேர் இருக்காங்க! நீ ஹியூமர் மட்டும் எழுது! அது உங்களுக்கு ரொம்ப நன்றாக வருது!" என்று சொல்ல, இவர் நகைச்சுவை எழுத்தில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார்..ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருந்தவர், தமிழுக்குப் பிரவேசித்த கதையும் சுவாரசியமானதுதான். ஒரு சமயம், இதுபற்றிக் கேட்டபோது, "ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருந்தாலும், தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு குறிப்பாக இலக்கிய சிந்தனைக் கூட்டங்களுக்கு தவறாமல் போவேன். அப்போது என்னை சந்தித்த பி.சு.கைலாசம் என் ஆங்கில எழுத்துக்களைப் பாராட்டியதோடு, "தமிழில் நீங்கள் ஏன் எழுதக்கூடாது?" என்று கேட்டார். "தமிழில் நிறைய பேர் ஹியூமர் எழுதுகிறார்கள்; அதுவுமில்லாமல், எனக்கு தமிழில் இலக்கண சுத்தமாக எழுதத் தெரியாது" என்றேன். "எழுதறது எப்படிங்கிறது உங்களுக்குத் தெரிஞ்சிருக்கு! உங்க தாய் மொழி தமிழ்தானே? அதுவுமில்லாம, நீங்க 'வெண்பாவா' எழுதப் போறீங்க? பேசறா மாதிரியே எழுதுங்க! அது ஒண்ணும் கஷ்டமில்லை! முயற்சி பண்ணுங்க!" என்றார். உடனே சுறுசுறுப்பாக உட்கார்ந்து நான் தமிழில் எழுதின கட்டுரைக்குத் தலைப்பு: ராகம்; தானம்; பல்வலி" இது நடந்தது 1980ல். கதை கல்கியில் வெளியானது.."மாம்பலம் டைம்ஸ் பத்திரிகையில் தமாஷா வரிகள் எழுத வாய்ப்பு கிடைத்தது பற்றி அடிக்கடி சிலாகித்து நினைவு கூறிருக்கிறார் ராகவன். ".ஆசிரியர் கே.எஸ்.ராமகிருஷ்ணன் என் ஆங்கில, தமிழ் எழுத்துக்களை ரசித்துப் படித்தவர். அவர், "மாம்பலம் டைம்சில் எழுத முடியுமா?" என்று கேட்டபோது, எனக்கு அது பெரிய சவாலாகப்பட்டது. "வாராவாரம் ஒரு குறிப்பிட்ட கெடுவுக்குள் நம்மால் எழுதுவது சாத்தியமா?" என்று தயங்கினேன். "எழுத ஆரம்பியுங்கள்! தானாக ஐடியா வரும்?" என்று சொன்னார். அவர் சொன்னது ரொம்ப வாஸ்தவமான வார்த்தை. ஆண்டவன் அருளால், இன்று வரை ஐடியாக்கள் ஊற்றாகப் பெருக்கெடுத்துக் கொண்டிருக்கின்றன. நாட்டு நடப்புகளை கூர்ந்து கவனித்து, அவற்றை நகைச்சுவைக் கண்ணோட்டத்தில் எழுதுவது இப்போது சுலபமாக இருக்கிறது. யார் மனமும் புண்படும்படியாக கேலி செய்து எழுதக் கூடாது. உடல் ஊனமுற்றவர்களை கிண்டல் செய்யக்கூடாது. அமங்கலமான "ஐயோ! எழவு, செத்தேன்" போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது. இப்படியாக எழுத்தில் எனக்கு நானே மூன்று கட்டுப்பாடுகள் விதித்துக் கொண்டிருக்கிறேன்." என்றார்..அவரது கட்டுரைகளுக்கு படம் போடுவதற்கு அவர் முதலில் ஹிந்து கார்டூனிஸ்ட் கேசவ்வைத்தான் அணுகினார். ஆனால், ஹிந்துவில் அதிகாரப்பூர்வமாக அனுமதி கிடைப்பதில் சில சிக்கல்கள் இருந்தது. அடுத்து ஓவியர் நடனத்தைக் கேட்டபோது அவர் சந்தோஷமாகச் சம்மதித்தார். நடனம் மறைவுக்குப் பின் ஓவியர் அரஸ் ஜமாய்த்துக் கொண்டிருந்தார்..அவ்வப்போது ராகவனை சந்திக்கும்போதெல்லாம், தனது எழுத்துக்கு வாசகர்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பு பற்றி சந்தோஷமான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வார். அவருடைய பழைய வீட்டை விற்றுவிட்டு, புது வீடு வாங்கினபோது, பத்திரப் பதிவுக்காக ரெஜிஸ்டிரார் அலுவலகத்துக்குச் சென்றாராம். அங்கே இருந்த ராகவனின் ரசிகரான அதிகாரி இவர் பெயரைக் கேட்டதும், பர்சனலாக அறிமுகமில்லாதவர் ஆனாலும், , "மாம்பலம் டைம்ஸில் எழுதுவது நீங்கள்தானே?" என்று கேட்டுவிட்டு, இவரது எழுத்தை பாராட்டி, உடனடியாக பதிவு வேலையை முடித்துக் கொடுத்தாராம்.."நான் கணக்கு வைத்திருக்கும் மாம்பலம் வங்கிக் கிளை ஒன்றுக்குச் சென்றிருந்தபோது, அங்கே சந்தித்த ஒரு பெண் வங்கி அதிகாரி தானே முன்வந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, என் கணவரை இழந்த சோகத்திலிருந்து மீள வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தபோது, எங்கள் கிளை மேனேஜர், உங்கள் புத்தகங்களைக் கொடுத்து என்னைப் படிக்கச் சொன்னார். உங்களின் நகைச்சுவை எழுத்துக்கள் என் சோகத்தின் பாரத்தை அகற்றிவிட்டன. துரதிருஷ்டவசமாக, என் மகளால் இன்னமும் சோகத்திலிருந்து மீள முடியவில்லை. காரணம் அவளுக்கு தமிழ் படிக்கத் தெரியாது" என்று நாத்தழுதழுக்க நன்றி கூறினார். அவருக்கு இப்படியும் ஒரு அனுபவம். இதுபோல நிறைய அனுபவங்களைச் சொல்லி இருக்கிறார்..அப்புசாமி சீதா பாட்டியை சிருஷ்டித்த பாக்கியம் ராமசாமி என்கிற ஜ.ர.சுந்தரேசன், ஜே.எஸ்.ராகவன். ராணி மைந்தன் மூவரும் முனைந்து செயல்பட்டு உருவாக்கிய "அக்கரை" அமைப்பின் கணக்கு வழக்குகளை கவனித்துக் கொண்டவர் ராகவன்தான்.."ஸார்! மேற்கு மாம்பலத்தில் வார்டு கவுன்சிலருக்கு நீங்க நின்னா, நிச்சயம் ஜெயிச்சிடுவீங்க! " என்று நான் ராகவனிடம் பல முறை சொல்லி இருக்கிறேன். அவர் அதனை ரசித்துச் சிரிப்பார்..(தொடரும்)