கவர் ஸ்டோரி. – எஸ்.சந்திரமௌலி.இந்த ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி முதல் 23ஆம் தேதிவரை 45வது சென்னை புத்தகக் கண்காட்சியை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. 6ஆம் தேதி துவக்கி வைக்க முதலமைச்சர் ஸ்டாலினும் ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால், மூன்றாவது பேரலையை எதிர்பார்த்து, அரசு விதித்த கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, கண்காட்சியைத் திட்டமிட்டபடி துவக்க முடியாமல் போனது. கடந்த நான்கைந்து ஆண்டுகளாகவே சென்னை புத்தகக் கண்காட்சியில் விற்பனை சரிவையே சந்தித்துக் கொண்டிருந்தது. இந்தச் சூழ்நிலையில் கொரோனா பொதுமுடக்கம், நாட்டின் பொருளாதார பாதிப்பு, அதனால் ஏற்பட்ட வாழ்வாதார பாதிப்புகள் காரணமாக, பதிப்புலகம் கடுமையான பாதிப்புக்குள்ளாகியது..இந்தச் சூழ்நிலையில், இந்த வருடத்திய புத்தகக் கண்காட்சி, பதிப்பாளர்கள் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு வழி செய்யும் என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. பல பதிப்பாளர்களும், புதிய புத்தகங்கள், மறுபதிப்புகள் ஆகியவற்றுக்காக முதலீடு செய்து விற்பனைக்குத் தயாரானார்கள். ஆனால், கொரோனா காரணமாக கண்காட்சியை திட்டமிட்டபடி துவக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் பதிப்பாளர்கள் மனமுடைந்து போனார்கள். ஆனாலும், கண்காட்சியை நடத்தும் பாபாசி அமைப்பின் நிர்வாகிகள், "மனம் தளர வேண்டாம்! சற்று தாமதமானாலும், கண்காட்சியை எப்படியும் நடத்திவிடலாம்! அரசாங்கமும் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது" என்று ஆறுதல் கூறினார்கள்..பாபாசி, சற்றே தாமதமானாலும், அரசின் ஆதரவுடன் பிப்ரவரி 16ஆம் தேதி ஜாம் ஜாம் என்று முதலமைச்சர் ஸ்டாலினை வைத்து கண்காட்சியை வெற்றிகரமாக துவக்கி விட்டார்கள். பதிப்பாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளோடு துவங்கி இருக்கும் புத்தகக் கண்காட்சி அவர்களுக்கு ஏற்றம் தருமா? ஏமாற்றம்தான் மிஞ்சுமா? கண்காட்சியில் வலம் வந்து பல்வேறு தரப்பினரிடமும் பேசினோம்..கடந்த வருடம் நடந்த புத்தகக் கண்காட்சிக்கு எட்டு லட்சம் பேர் வந்தார்கள் என்றும், எட்டு கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையானதாகவும் பாபாசி தரப்பில் சொன்னார்கள். இந்த வருடம், சென்னை நந்தனம் ஒய்.எம். சி. ஏ. மைதானத்தில் 790 அரங்குகளில் பதிப்பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் பங்கேற்க சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளன. இந்த ஆண்டு இன்னும் அதிக விற்பனை இருக்கும் என நிர்வாகிகளும், பதிப்பாளர்களும் நம்புகிறார்கள்..புத்தகக் கண்காட்சி துவங்கிய பின்னர், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் நல்ல கூட்டம். பலரும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு, குடும்பமாக வந்திருந்தனர். அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தாலும், சமூக இடைவெளி கடைபிடிக்கவில்லை. ஒற்றை ஸ்டால் மட்டும் எடுத்திருக்கும் சிறு, குறு பதிப்பாளர்களின் ஸ்டால்களில் கூட்டம் வெகு சொற்பம். பிரபலமான பதிப்பக ஸ்டால்களிலும், தினசரி, வார இதழ் நிறுவனங்களின் பதிப்பக ஸ்டால்களிலும் கூட்டம் அதிகம். அதே போல சிவப்பு, காவி, கறுப்பு, நீல வண்ண ஸ்டால்களிலும் பார்வையாளர்களைக் கணிசமாகக் காண முடிந்தது. வழக்கம்போல, கவனித்த இன்னொரு விஷயம்: வாசகர்கள் விரும்பிக் கேட்கும் பிரபல பதிப்பக வெளியீடுகள் ஏறத்தாழ எல்லா ஸ்டால்களிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.."புத்தகக் கண்காட்சிக்கான நுழைவுச் சீட்டுகள் ஆன்லைனிலும் விற்பனை செய்யப்பட்டது. இந்த வருடம் ஆன்லைனிலேயே ஒன்றரை லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை ஆனது என்பது இந்த வருடம் கண்காட்சி களைகட்டிவிடும் என்ற நம்பிக்கையை எங்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது. விற்பனையும் நன்றாக இருக்கிறது. வார நாட்களில் சற்று குறைந்தாலும், வார இறுதி நாட்களில் நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கும். பொது முடக்க காலத்தில் பெரும் பாதிப்புக்குள்ளான பதிப்பாளர்கள் இந்த தடவை மீண்டு எழுவதற்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன..எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்ட சூழ்நிலையில், எதிர்பாராதவிதமாக திட்டமிட்டபடி துவக்க முடியாமல் போய்விட்டது. மாநில அரசு, எங்களுடைய சிக்கலைப் புரிந்துகொண்டு கைகொடுக்கும் விதமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 75 லட்சம் ரூபாய்க்கு பதிலாக ஒன்றேகால் கோடி எங்களுக்கு வழங்குகிறது. எல்லா மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சி நடத்த உதவி செய்வதாகவும் முதல்வர் கூறி இருக்கிறார். பதிப்பாளர்கள், "சிரமங்களிலிருந்து மீண்டு விடுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது" என்று மகிழ்ச்சியோடு குறிப்பிட்டார் பாபாசி தலைவரான வைரவன்..'பொது முடக்கம் காரணமாக வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்துவிட்டோம்; குடும்பத்தோடு வெளியில் போய் வெகு நாட்களாகிவிட்டது. புத்தகக் கண்காட்சி சென்னை மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துவிட்டது. ஆகவேதான், குடும்பத்துடன் கண்காட்சிக்கு வருகிறார்கள்" என்கிறார் செண்பகா பதிப்பகம் சண்முகம்..புத்தகக் கண்காட்சிக்கு, அதிக அளவில் பார்வையாளர்கள் வருவதை வேறு ஒரு கோணத்தில் பார்க்கிறார் எழுத்தாளர் அஜயன் பாலா. "கொரோனா, பொது முடக்கம் போன்றவற்றால் மக்கள் பெரும் தாக்கத்துக்குள்ளாகி இருக்கிறார்கள். கையில் காசு இருந்தால் மக்கள் சினிமாவுக்கும், ஓட்டலுக்கும் சென்று ஜாலியாக செலவழித்துக் கொண்டிருப்பார்கள். இப்போது பணப்புழக்கம் குறைந்துள்ளது… எனவே, தங்கள் வாழ்க்கையைப் பற்றி சுயசிந்தனை செய்கிறார்கள். வாசிப்பின் மூலமாக வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள முயற்சிக்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் இங்கே கண்காட்சிக்கு வருகிறவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு" என்கிறார் அவர்.."இந்த வருட புத்தகக் கண்காட்சிக்கான தயாரிப்பில் பெரிய வரமாக வாய்த்திருப்பது "பி.ஓ.டி." எனப்படும் "பிரின்ட் ஆன் டிமாண்ட்" தொழில் நுட்பம்." முன்பெல்லாம் ஒரு புத்தகம் என்றால் ஆயிரம் பிரதிகள் அச்சிடவேண்டும்; பல்வேறு தலைப்புகள் என்றால் ஆயிரக்கணக்கில் புத்தகங்களை அச்சிட்டு, கொடோனில் வைத்திருக்க வேண்டும். அதற்கான அச்சிடும் செலவு மாதாமாதம் கொடோன் வாடகை என்று கணிசமாக செலவு இருக்கும். இந்த பி.ஓ.டி. தொழில்நுட்பத்தில் ஐம்பது பிரதிகள்கூட அச்சிட்டுக் கொள்ளலாம். அச்சிட்ட பிரதிகள் அன்றைய தினமே டெலிவரி செய்துவிடுகிறார்கள். செலவில் சிக்கனம் பிடிக்க முடிகிறது. இன்று பல பதிப்பகங்கள் இந்த முறையைத்தான் பின்பற்றுகிறார்கள்" என்று குறிப்பிடுகிறார்கள் செண்பகா சண்முகமும், பாரதி நிலையம் பழனியப்பனும்.."வாசகர்கள் இன்று தெளிவாக இருக்கிறார்கள். பொழுது போக்குக்காக என்பதைவிட 'படித்து பயனடையவேண்டும்' என்பதே அவர்களது விருப்பமாக உள்ளது. அவர்கள் சோஷியல் மீடிய உள்ளிட்ட பல்வேறு வழிகளில் புத்தகங்கள் பற்றித் தெரிந்துகொண்டு, ஸ்டாலுக்கு வந்து, குறிப்பிட்ட அந்தப் புத்தகம் இருக்கிறதா? என்றோ, எங்கே கிடைக்கும்? என்றோ கேட்கிறார்கள். அல்லது ஸ்டாலுக்கு வந்து, புத்தகங்களைப் புரட்டிப் பார்த்து, தேவையனாவற்றை வாங்கிச் செல்கிறார்கள்" என்று கூறுகிறார் ஜீரோ டிகிரி பதிப்பகத்தின் காயத்ரி..'வாசகர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கம் குறைந்துவருகிறது. போதாக்குறைக்கு கொரோனா, பொதுமுடக்கம், வேலை இழப்பு, சம்பளக் குறைப்பு போன்ற பல காரணங்களால், முன்பு போல மக்கள் புத்தகங்கள் வாங்க அதிகம் செலவு செய்வதில்லை என்று பொதுவாக பல்வேறு பதிப்பாளர்களும் சோக கீதம் இசைக்கிறார்கள். ஆனால், கிழக்கு பதிப்பகத்தின் பத்ரி சேஷாத்ரி, இதனை ஏற்க மறுக்கிறார். கொரோனா, பொதுமுடக்கம், வேலை இழப்பு, சம்பளக் குறைப்பு எல்லாம் இருக்கின்றன. பொது முடக்கம் காரணமாக, புத்தக விற்பனை ஒரு கட்டத்தில் ஸ்தம்பித்துப் போனது. நான் அதை மறுக்கவில்லை; ஆனால், அதனால் வாசிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது என்பதை மட்டும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். நம் பதிப்பகங்களின் முக்கியமான பிரச்னை என்னவென்றால் புத்தக வெளியீடு என்பதை பல்லாண்டுகளாக ஒரு குடிசைத் தொழில் போல நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தொழில்நுட்பத்திலோ, சப்ளை-செயின் நிர்வாகத்திலோ அவர்கள் கவனம் செலுத்துவதில்லை. பொது முடக்க காலத்தில், அமேசான், கிண்டில் போன்ற ஈ காமர்ஸ் தளங்களைப் பயன்படுத்தி எங்களின் "டயல் ஃபார் புக்ஸ்" மூலமாக மாதம் பத்து லட்சம், பதினைந்து லட்சம் அளவுக்கு விற்பனை செய்தோம். புத்தகங்களை விற்பனை செய்யும் நெட் ஒர்க் விரிவு படுத்தப்பட வேண்டும். புத்தகக் கடைகள், உள்ளூரில் தாங்கள் இருப்பதை விளம்பரப்படுத்த வேண்டும். உள்ளூரில் பிட் நோட்டீஸ் அடுத்து வினியோகித்தால் கூடப் போதும்!, மருந்துக் கடைகளில் 'ஹோம் டெலிவரி' போல புத்தகங்களை வாசகர்களின் வீடுகளுக்கே கொண்டு போய் சேர்க்க வேண்டும்; பதிப்பாளர்கள் தங்களுடைய விற்பனை முறைகளை மாற்றிக் கொள்ளாவிட்டால், புத்தகக் கடைகள் விளம்பரம் செய்துகொள்ளாவிட்டால் பதிப்பாளர்கள், தங்கள் முயற்சியின்மைக்கு "மக்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டது" என்று நொண்டிச் சாக்கு சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதுதான்" என்று காட்டமாகச் சொல்கிறார் பத்ரி..சிறந்த பதிப்பாளர் விருது
கவர் ஸ்டோரி. – எஸ்.சந்திரமௌலி.இந்த ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி முதல் 23ஆம் தேதிவரை 45வது சென்னை புத்தகக் கண்காட்சியை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. 6ஆம் தேதி துவக்கி வைக்க முதலமைச்சர் ஸ்டாலினும் ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால், மூன்றாவது பேரலையை எதிர்பார்த்து, அரசு விதித்த கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, கண்காட்சியைத் திட்டமிட்டபடி துவக்க முடியாமல் போனது. கடந்த நான்கைந்து ஆண்டுகளாகவே சென்னை புத்தகக் கண்காட்சியில் விற்பனை சரிவையே சந்தித்துக் கொண்டிருந்தது. இந்தச் சூழ்நிலையில் கொரோனா பொதுமுடக்கம், நாட்டின் பொருளாதார பாதிப்பு, அதனால் ஏற்பட்ட வாழ்வாதார பாதிப்புகள் காரணமாக, பதிப்புலகம் கடுமையான பாதிப்புக்குள்ளாகியது..இந்தச் சூழ்நிலையில், இந்த வருடத்திய புத்தகக் கண்காட்சி, பதிப்பாளர்கள் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு வழி செய்யும் என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. பல பதிப்பாளர்களும், புதிய புத்தகங்கள், மறுபதிப்புகள் ஆகியவற்றுக்காக முதலீடு செய்து விற்பனைக்குத் தயாரானார்கள். ஆனால், கொரோனா காரணமாக கண்காட்சியை திட்டமிட்டபடி துவக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் பதிப்பாளர்கள் மனமுடைந்து போனார்கள். ஆனாலும், கண்காட்சியை நடத்தும் பாபாசி அமைப்பின் நிர்வாகிகள், "மனம் தளர வேண்டாம்! சற்று தாமதமானாலும், கண்காட்சியை எப்படியும் நடத்திவிடலாம்! அரசாங்கமும் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது" என்று ஆறுதல் கூறினார்கள்..பாபாசி, சற்றே தாமதமானாலும், அரசின் ஆதரவுடன் பிப்ரவரி 16ஆம் தேதி ஜாம் ஜாம் என்று முதலமைச்சர் ஸ்டாலினை வைத்து கண்காட்சியை வெற்றிகரமாக துவக்கி விட்டார்கள். பதிப்பாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளோடு துவங்கி இருக்கும் புத்தகக் கண்காட்சி அவர்களுக்கு ஏற்றம் தருமா? ஏமாற்றம்தான் மிஞ்சுமா? கண்காட்சியில் வலம் வந்து பல்வேறு தரப்பினரிடமும் பேசினோம்..கடந்த வருடம் நடந்த புத்தகக் கண்காட்சிக்கு எட்டு லட்சம் பேர் வந்தார்கள் என்றும், எட்டு கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையானதாகவும் பாபாசி தரப்பில் சொன்னார்கள். இந்த வருடம், சென்னை நந்தனம் ஒய்.எம். சி. ஏ. மைதானத்தில் 790 அரங்குகளில் பதிப்பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் பங்கேற்க சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளன. இந்த ஆண்டு இன்னும் அதிக விற்பனை இருக்கும் என நிர்வாகிகளும், பதிப்பாளர்களும் நம்புகிறார்கள்..புத்தகக் கண்காட்சி துவங்கிய பின்னர், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் நல்ல கூட்டம். பலரும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு, குடும்பமாக வந்திருந்தனர். அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தாலும், சமூக இடைவெளி கடைபிடிக்கவில்லை. ஒற்றை ஸ்டால் மட்டும் எடுத்திருக்கும் சிறு, குறு பதிப்பாளர்களின் ஸ்டால்களில் கூட்டம் வெகு சொற்பம். பிரபலமான பதிப்பக ஸ்டால்களிலும், தினசரி, வார இதழ் நிறுவனங்களின் பதிப்பக ஸ்டால்களிலும் கூட்டம் அதிகம். அதே போல சிவப்பு, காவி, கறுப்பு, நீல வண்ண ஸ்டால்களிலும் பார்வையாளர்களைக் கணிசமாகக் காண முடிந்தது. வழக்கம்போல, கவனித்த இன்னொரு விஷயம்: வாசகர்கள் விரும்பிக் கேட்கும் பிரபல பதிப்பக வெளியீடுகள் ஏறத்தாழ எல்லா ஸ்டால்களிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.."புத்தகக் கண்காட்சிக்கான நுழைவுச் சீட்டுகள் ஆன்லைனிலும் விற்பனை செய்யப்பட்டது. இந்த வருடம் ஆன்லைனிலேயே ஒன்றரை லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை ஆனது என்பது இந்த வருடம் கண்காட்சி களைகட்டிவிடும் என்ற நம்பிக்கையை எங்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது. விற்பனையும் நன்றாக இருக்கிறது. வார நாட்களில் சற்று குறைந்தாலும், வார இறுதி நாட்களில் நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கும். பொது முடக்க காலத்தில் பெரும் பாதிப்புக்குள்ளான பதிப்பாளர்கள் இந்த தடவை மீண்டு எழுவதற்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன..எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்ட சூழ்நிலையில், எதிர்பாராதவிதமாக திட்டமிட்டபடி துவக்க முடியாமல் போய்விட்டது. மாநில அரசு, எங்களுடைய சிக்கலைப் புரிந்துகொண்டு கைகொடுக்கும் விதமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 75 லட்சம் ரூபாய்க்கு பதிலாக ஒன்றேகால் கோடி எங்களுக்கு வழங்குகிறது. எல்லா மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சி நடத்த உதவி செய்வதாகவும் முதல்வர் கூறி இருக்கிறார். பதிப்பாளர்கள், "சிரமங்களிலிருந்து மீண்டு விடுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது" என்று மகிழ்ச்சியோடு குறிப்பிட்டார் பாபாசி தலைவரான வைரவன்..'பொது முடக்கம் காரணமாக வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்துவிட்டோம்; குடும்பத்தோடு வெளியில் போய் வெகு நாட்களாகிவிட்டது. புத்தகக் கண்காட்சி சென்னை மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துவிட்டது. ஆகவேதான், குடும்பத்துடன் கண்காட்சிக்கு வருகிறார்கள்" என்கிறார் செண்பகா பதிப்பகம் சண்முகம்..புத்தகக் கண்காட்சிக்கு, அதிக அளவில் பார்வையாளர்கள் வருவதை வேறு ஒரு கோணத்தில் பார்க்கிறார் எழுத்தாளர் அஜயன் பாலா. "கொரோனா, பொது முடக்கம் போன்றவற்றால் மக்கள் பெரும் தாக்கத்துக்குள்ளாகி இருக்கிறார்கள். கையில் காசு இருந்தால் மக்கள் சினிமாவுக்கும், ஓட்டலுக்கும் சென்று ஜாலியாக செலவழித்துக் கொண்டிருப்பார்கள். இப்போது பணப்புழக்கம் குறைந்துள்ளது… எனவே, தங்கள் வாழ்க்கையைப் பற்றி சுயசிந்தனை செய்கிறார்கள். வாசிப்பின் மூலமாக வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள முயற்சிக்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் இங்கே கண்காட்சிக்கு வருகிறவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு" என்கிறார் அவர்.."இந்த வருட புத்தகக் கண்காட்சிக்கான தயாரிப்பில் பெரிய வரமாக வாய்த்திருப்பது "பி.ஓ.டி." எனப்படும் "பிரின்ட் ஆன் டிமாண்ட்" தொழில் நுட்பம்." முன்பெல்லாம் ஒரு புத்தகம் என்றால் ஆயிரம் பிரதிகள் அச்சிடவேண்டும்; பல்வேறு தலைப்புகள் என்றால் ஆயிரக்கணக்கில் புத்தகங்களை அச்சிட்டு, கொடோனில் வைத்திருக்க வேண்டும். அதற்கான அச்சிடும் செலவு மாதாமாதம் கொடோன் வாடகை என்று கணிசமாக செலவு இருக்கும். இந்த பி.ஓ.டி. தொழில்நுட்பத்தில் ஐம்பது பிரதிகள்கூட அச்சிட்டுக் கொள்ளலாம். அச்சிட்ட பிரதிகள் அன்றைய தினமே டெலிவரி செய்துவிடுகிறார்கள். செலவில் சிக்கனம் பிடிக்க முடிகிறது. இன்று பல பதிப்பகங்கள் இந்த முறையைத்தான் பின்பற்றுகிறார்கள்" என்று குறிப்பிடுகிறார்கள் செண்பகா சண்முகமும், பாரதி நிலையம் பழனியப்பனும்.."வாசகர்கள் இன்று தெளிவாக இருக்கிறார்கள். பொழுது போக்குக்காக என்பதைவிட 'படித்து பயனடையவேண்டும்' என்பதே அவர்களது விருப்பமாக உள்ளது. அவர்கள் சோஷியல் மீடிய உள்ளிட்ட பல்வேறு வழிகளில் புத்தகங்கள் பற்றித் தெரிந்துகொண்டு, ஸ்டாலுக்கு வந்து, குறிப்பிட்ட அந்தப் புத்தகம் இருக்கிறதா? என்றோ, எங்கே கிடைக்கும்? என்றோ கேட்கிறார்கள். அல்லது ஸ்டாலுக்கு வந்து, புத்தகங்களைப் புரட்டிப் பார்த்து, தேவையனாவற்றை வாங்கிச் செல்கிறார்கள்" என்று கூறுகிறார் ஜீரோ டிகிரி பதிப்பகத்தின் காயத்ரி..'வாசகர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கம் குறைந்துவருகிறது. போதாக்குறைக்கு கொரோனா, பொதுமுடக்கம், வேலை இழப்பு, சம்பளக் குறைப்பு போன்ற பல காரணங்களால், முன்பு போல மக்கள் புத்தகங்கள் வாங்க அதிகம் செலவு செய்வதில்லை என்று பொதுவாக பல்வேறு பதிப்பாளர்களும் சோக கீதம் இசைக்கிறார்கள். ஆனால், கிழக்கு பதிப்பகத்தின் பத்ரி சேஷாத்ரி, இதனை ஏற்க மறுக்கிறார். கொரோனா, பொதுமுடக்கம், வேலை இழப்பு, சம்பளக் குறைப்பு எல்லாம் இருக்கின்றன. பொது முடக்கம் காரணமாக, புத்தக விற்பனை ஒரு கட்டத்தில் ஸ்தம்பித்துப் போனது. நான் அதை மறுக்கவில்லை; ஆனால், அதனால் வாசிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது என்பதை மட்டும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். நம் பதிப்பகங்களின் முக்கியமான பிரச்னை என்னவென்றால் புத்தக வெளியீடு என்பதை பல்லாண்டுகளாக ஒரு குடிசைத் தொழில் போல நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தொழில்நுட்பத்திலோ, சப்ளை-செயின் நிர்வாகத்திலோ அவர்கள் கவனம் செலுத்துவதில்லை. பொது முடக்க காலத்தில், அமேசான், கிண்டில் போன்ற ஈ காமர்ஸ் தளங்களைப் பயன்படுத்தி எங்களின் "டயல் ஃபார் புக்ஸ்" மூலமாக மாதம் பத்து லட்சம், பதினைந்து லட்சம் அளவுக்கு விற்பனை செய்தோம். புத்தகங்களை விற்பனை செய்யும் நெட் ஒர்க் விரிவு படுத்தப்பட வேண்டும். புத்தகக் கடைகள், உள்ளூரில் தாங்கள் இருப்பதை விளம்பரப்படுத்த வேண்டும். உள்ளூரில் பிட் நோட்டீஸ் அடுத்து வினியோகித்தால் கூடப் போதும்!, மருந்துக் கடைகளில் 'ஹோம் டெலிவரி' போல புத்தகங்களை வாசகர்களின் வீடுகளுக்கே கொண்டு போய் சேர்க்க வேண்டும்; பதிப்பாளர்கள் தங்களுடைய விற்பனை முறைகளை மாற்றிக் கொள்ளாவிட்டால், புத்தகக் கடைகள் விளம்பரம் செய்துகொள்ளாவிட்டால் பதிப்பாளர்கள், தங்கள் முயற்சியின்மைக்கு "மக்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டது" என்று நொண்டிச் சாக்கு சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதுதான்" என்று காட்டமாகச் சொல்கிறார் பத்ரி..சிறந்த பதிப்பாளர் விருது