– ஹர்ஷா.மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் 2022-23 ஆம் ஆண்டில் இ-பாஸ்போர்ட் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தார்..இ-பாஸ்போர்ட் என்றால் என்ன? .பாஸ்போர்ட்டின் நம்பகத்தன்மையை அதிகரிக்க உலகின் பல நாடுகள்இ-பாஸ்போர்ட்டைப் பயன்படுத்துகின்றன. ICAO பாஸ்போர்ட்டில் உள்ள சிப்பை அதாவது, இ-பாஸ்போர்ட்டை கட்டாயமாக்கவில்லை. 100க்கும் மேற்பட்ட நாடுகள் தற்போது இ-பாஸ்போர்ட்டுகளை வழங்குவதாக ஐசிஏஓ கூறுகிறது. தற்போது உலகில் 45 கோடிக்கும் அதிகமான மக்கள் இ-பாஸ்போர்ட்டுகள் வைத்துள்ளதாக மற்றொரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளில்,இ-பாஸ்போர்ட் மட்டுமே நடைமுறையில் உள்ளது..இ-பாஸ்போர்ட்டின் அட்டைப் பக்கத்தில் ஒரு சிறிய மின்னணு சிப் உள்ளது. அது வெளியே தெரியவில்லை. அட்டைப் பக்கத்தைத் தவிர, உள் பக்கத்திலும் சாதாரண பாஸ்போர்ட் போல அனைத்துத் தகவல்களும் உள்ளன. .இ-பாஸ்போர்ட் சாதாரண பாஸ்போர்ட் போலவே இருந்தாலும், இதில் மின்னணு நுண்செயலி சிப் பயன்படுத்தப்படுகிறது. இது பாஸ்போர்ட்டின் அட்டை அல்லது உள் பக்கங்களில் பொருத்தப்பட்டிருக்கும். மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.முரளீதரன், "இ-பாஸ்போர்ட்டில் விண்ணப்பத்தாரர்களின் தகவல்கள் டிஜிட்டல் அடையாள வடிவில் உள்ள சிப்பில் பாதுகாக்கப்படும்" என்று தெரிவித்திருந்தார். அதில் பாஸ்போர்ட் வைத்திருப்பவர் தொடர்பான அனைத்து தகவல்களும் இருக்கும். இந்த சிப்பில் உள்ளிடப்பட்ட தகவலை மாற்ற முடியாது. சிப்பில் சேதம் ஏற்பட்டால் இ-பாஸ்போர்ட் செயலிழந்து விடும்..2008ஆம் ஆண்டில், வெளியுறவு அமைச்சகத்தின் மூலம் அரசு அதிகாரிகளுக்கு மட்டும் இ-பாஸ்போர்ட் வழங்குவதற்கான முன்னோடித் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், தூதரகப் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு சுமார் 20 ஆயிரம் இ-பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டன. இந்த அனுபவத்தின் அடிப்படையில், சாதாரண குடிமக்கள், அதிகாரிகள் மற்றும் தூதரகப் பிரதிநிதிகளுக்கும்இ-பாஸ்போர்ட்டை உருவாக்கி இப்போது செயல்படுத்தப் போகிறார்கள்..இந்த சிப்பில் என்ன இருக்கும்?.இ-பாஸ்போர்ட்டுக்கு பயோமெட்ரிக், செயற்கை நுண்ணறிவு, சாட்பாட்கள், ஆட்டோ ரெஸ்பான்ஸ் போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும். ஏற்கெனவே பாஸ்போர்ட்டில் கைரேகை பயன்படுத்தப்பட்டுள்ளது. கைரேகை மட்டுமின்றி கண் விழி ஸ்கேனும் இ-பாஸ்போர்ட்டில் இடம்பெறும். ஆதார் அட்டை தயாரிக்கும்போது விரல்கள் மற்றும் கருவிழிகளை ஸ்கேன் செய்வதுபோல, இந்தத் தகவல்கள் அனைத்தும் சிப்பில் சேமிக்கப்படும். குடிவரவு சரிபார்க்கும் இயந்திரம் சரியான நபரை அடையாளம் காண இது உதவும்..இதனால் வைத்திருப்பவர்களுக்கு என்ன பயன்? .சாதாரண பாஸ்போர்ட்டுடன் நீங்கள் ஒரு நாட்டிற்குச் செல்லும்போது, முதலில் நீங்கள் சம்பந்தப்பட்ட நாட்டின் விசாவைப் பெற வேண்டும். பாஸ்போர்ட்டில் விசா முத்திரையிடப்படுகிறது. குடிவரவுத் துறை அதிகாரிகள், பயணம் செய்வதற்கு முன் விமான நிலையத்தில் பாஸ்போர்ட் மற்றும் விசாக்களை சரிபார்க்கிறார்கள். இந்தக் கட்டத்தில், நீண்ட வரிசைகள் இருக்கும். மணிக்கணக்கில் காத்திருந்த பிறகுதான் அந்த நபரின் எண் வந்து பயண அனுமதி கிடைக்கிறது..இ-பாஸ்போர்ட்டில் இந்தக் கட்டத்தைக் கடக்க, பாஸ்போர்ட் மற்றும் விசாவை அதிகாரிகள் சரிபார்ப்பதில்லை. தானியங்கி இயந்திரம் சரிபார்க்கிறது. மெட்ரோவில் டோக்கன் போட்டவுடன் கேட் திறக்கப்படுவது போல, இமிக்ரேஷன் கேட்டில்இ-பாஸ்போர்ட்டை ஸ்கேன் செய்தால் கேட் திறக்கப்படுகிறது.
– ஹர்ஷா.மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் 2022-23 ஆம் ஆண்டில் இ-பாஸ்போர்ட் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தார்..இ-பாஸ்போர்ட் என்றால் என்ன? .பாஸ்போர்ட்டின் நம்பகத்தன்மையை அதிகரிக்க உலகின் பல நாடுகள்இ-பாஸ்போர்ட்டைப் பயன்படுத்துகின்றன. ICAO பாஸ்போர்ட்டில் உள்ள சிப்பை அதாவது, இ-பாஸ்போர்ட்டை கட்டாயமாக்கவில்லை. 100க்கும் மேற்பட்ட நாடுகள் தற்போது இ-பாஸ்போர்ட்டுகளை வழங்குவதாக ஐசிஏஓ கூறுகிறது. தற்போது உலகில் 45 கோடிக்கும் அதிகமான மக்கள் இ-பாஸ்போர்ட்டுகள் வைத்துள்ளதாக மற்றொரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளில்,இ-பாஸ்போர்ட் மட்டுமே நடைமுறையில் உள்ளது..இ-பாஸ்போர்ட்டின் அட்டைப் பக்கத்தில் ஒரு சிறிய மின்னணு சிப் உள்ளது. அது வெளியே தெரியவில்லை. அட்டைப் பக்கத்தைத் தவிர, உள் பக்கத்திலும் சாதாரண பாஸ்போர்ட் போல அனைத்துத் தகவல்களும் உள்ளன. .இ-பாஸ்போர்ட் சாதாரண பாஸ்போர்ட் போலவே இருந்தாலும், இதில் மின்னணு நுண்செயலி சிப் பயன்படுத்தப்படுகிறது. இது பாஸ்போர்ட்டின் அட்டை அல்லது உள் பக்கங்களில் பொருத்தப்பட்டிருக்கும். மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.முரளீதரன், "இ-பாஸ்போர்ட்டில் விண்ணப்பத்தாரர்களின் தகவல்கள் டிஜிட்டல் அடையாள வடிவில் உள்ள சிப்பில் பாதுகாக்கப்படும்" என்று தெரிவித்திருந்தார். அதில் பாஸ்போர்ட் வைத்திருப்பவர் தொடர்பான அனைத்து தகவல்களும் இருக்கும். இந்த சிப்பில் உள்ளிடப்பட்ட தகவலை மாற்ற முடியாது. சிப்பில் சேதம் ஏற்பட்டால் இ-பாஸ்போர்ட் செயலிழந்து விடும்..2008ஆம் ஆண்டில், வெளியுறவு அமைச்சகத்தின் மூலம் அரசு அதிகாரிகளுக்கு மட்டும் இ-பாஸ்போர்ட் வழங்குவதற்கான முன்னோடித் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், தூதரகப் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு சுமார் 20 ஆயிரம் இ-பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டன. இந்த அனுபவத்தின் அடிப்படையில், சாதாரண குடிமக்கள், அதிகாரிகள் மற்றும் தூதரகப் பிரதிநிதிகளுக்கும்இ-பாஸ்போர்ட்டை உருவாக்கி இப்போது செயல்படுத்தப் போகிறார்கள்..இந்த சிப்பில் என்ன இருக்கும்?.இ-பாஸ்போர்ட்டுக்கு பயோமெட்ரிக், செயற்கை நுண்ணறிவு, சாட்பாட்கள், ஆட்டோ ரெஸ்பான்ஸ் போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும். ஏற்கெனவே பாஸ்போர்ட்டில் கைரேகை பயன்படுத்தப்பட்டுள்ளது. கைரேகை மட்டுமின்றி கண் விழி ஸ்கேனும் இ-பாஸ்போர்ட்டில் இடம்பெறும். ஆதார் அட்டை தயாரிக்கும்போது விரல்கள் மற்றும் கருவிழிகளை ஸ்கேன் செய்வதுபோல, இந்தத் தகவல்கள் அனைத்தும் சிப்பில் சேமிக்கப்படும். குடிவரவு சரிபார்க்கும் இயந்திரம் சரியான நபரை அடையாளம் காண இது உதவும்..இதனால் வைத்திருப்பவர்களுக்கு என்ன பயன்? .சாதாரண பாஸ்போர்ட்டுடன் நீங்கள் ஒரு நாட்டிற்குச் செல்லும்போது, முதலில் நீங்கள் சம்பந்தப்பட்ட நாட்டின் விசாவைப் பெற வேண்டும். பாஸ்போர்ட்டில் விசா முத்திரையிடப்படுகிறது. குடிவரவுத் துறை அதிகாரிகள், பயணம் செய்வதற்கு முன் விமான நிலையத்தில் பாஸ்போர்ட் மற்றும் விசாக்களை சரிபார்க்கிறார்கள். இந்தக் கட்டத்தில், நீண்ட வரிசைகள் இருக்கும். மணிக்கணக்கில் காத்திருந்த பிறகுதான் அந்த நபரின் எண் வந்து பயண அனுமதி கிடைக்கிறது..இ-பாஸ்போர்ட்டில் இந்தக் கட்டத்தைக் கடக்க, பாஸ்போர்ட் மற்றும் விசாவை அதிகாரிகள் சரிபார்ப்பதில்லை. தானியங்கி இயந்திரம் சரிபார்க்கிறது. மெட்ரோவில் டோக்கன் போட்டவுடன் கேட் திறக்கப்படுவது போல, இமிக்ரேஷன் கேட்டில்இ-பாஸ்போர்ட்டை ஸ்கேன் செய்தால் கேட் திறக்கப்படுகிறது.