– தனுஜா ஜெயராமன்.போட்டிகளும், சவால்களும் நிறைந்த உலகத்தில் ஒரு பெண் தனியாக நின்று ஒரு துறையில் சாதிப்பதென்பது மிகப்பெரிய விஷயம். அதுவும் சிறிய நகர்புற பிண்ணனியில், அதுவும் நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்த ஒரு சாதாரண பெண் இன்று பல தடைகளை தாண்டி பெண் தொழில்முனைவோராய் உருவெடுத்திருக்கிறார் என்பது பெருமைகொள்ள வேண்டிய விஷயம். தனது ஆங்கில பயற்சி மையம் மூலம் பலரது வாழ்வை திசைமாற்றி வெற்றிகொள்ள வைத்திருக்கிறார். அத்தகைய பெருமைக்கு சொந்தக்காரரான KAIZEN ACADEMY நிறுவனத்தின் CEO மலர்விழி அவர்களை சந்தித்தபோது…..உங்க குடும்பப் பின்னணி குறித்து?.நான் பிறந்தது மதுரையாக இருந்தாலும் படித்தது வளர்ந்தது எல்லாமே இராஜபாளையம்தான். அங்கே P.A.C.R அம்மணியம்மாள் பள்ளியில் ப்ளஸ் டூ வரை படித்தேன். திடீரென எனது தந்தையாருக்கு ஏற்பட்ட உடல்நல குறைபாடுகளாலும் , பண சிக்கல்களாலும் என்னால் அதற்கு மேல் படிப்பை தொடர முடியவில்லை. வீட்டில் மூன்று பெண்களில் நான்தான் மூத்த பெண். என் குடும்ப சூழ்நிலை காரணமாக எனக்கு சீக்கிரமாக திருமணம் செய்துவிட முடிவெடுத்திருந்தனர் வீட்டு பெரியவர்கள்..எனக்கு வரப்போகும் கணவரிடம் நான் தொடர்ந்து படிக்கணும், வேலைக்கு போகணும், எனது குடும்பத்திற்கு பொருளாதார உதவிகள் செய்யணும் என்பதை வேண்டுகோளாக வைத்தே திருமணத்திற்கு சம்மதித்தேன். பிறகு பதினெட்டு வயதில் திருமணம், குழந்தை என வாழ்க்கை சுமுகமாகதான் போய்க்கொண்டிருந்து. ஆனாலும் மேற்படிப்பு படிக்காத ஏக்கம் என்னை வாட்டி எடுக்க அருகிலிருந்த பள்ளியில் ஆசிரியராக வேலைக்கு சேர்ந்தேன். நிறைய குழந்தைகளுக்கு ஆங்கில டியூஷன் சொல்லிக்கொடுத்தும் வந்தேன்..திருமணத்திற்கு பிறகு கல்வியை தொடர முடிந்ததா?.படிப்பை தொடர்ந்து தொலைதூர கல்வியில் MA ஆங்கிலம் முடித்துவிட்டேன். சென்னை பிரிட்டிஷ் கவுன்சில் மையத்தில் ஆங்கிலத்தில் சிறப்பு பயிற்சியும் பெற்றிருக்கிறேன்..உங்களுக்கு ஆங்கிலத்தின் மீது தனி ஆர்வம் ஏற்பட்டது எப்போது?.நான் படித்து முடித்ததும் ஒரு தனியார் பள்ளியில் பணியாற்றியபோது ஒரு ஆங்கிலோ இந்திய ஆசிரியர் ஒருவர் ஆங்கில வகுப்புகளை மிக அழகாக நேர்த்தியாக எடுத்துக்கொண்டிருந்தார். அவரைப்போல ஆங்கிலத்தை ஸ்பெஷ்டமாக உச்சரிக்க, படிக்க ஆசைப்பட்டேன். அவரை பார்த்தே எனக்கு ஆங்கிலம் மீது அதீத ஆர்வம் ஏற்பட்டது..ஆங்கிலம் கற்றுக்கொடுப்பதை முழு நேரத் தொழிலாக கையிலெடுத்தது எப்போது?.திருமணத்திற்கு பிறகு நான் ஒரு பள்ளியில் வேலை செய்து கொண்டிருந்த போது, தெரிந்த நண்பர் ஒருவர் நான் எடுக்கும் வகுப்புகளையும், சொல்லிக்கொடுக்கும் நேர்த்தியையும் கண்டு அவர் வைத்திருந்த ஆங்கில பயிற்சி நிறுவனத்தில் பகுதி நேர பணியில் சேரமுடியுமா? என கேட்டிருந்தார். எனக்கு குழந்தை பிறந்திருந்த காலகட்டம் அது. அப்போது எனக்கும் பல பொருளாதார சிக்கல்கள் எழ, 'சரி' என சம்மதித்தேன். நான் வகுப்பு எடுக்கும் நேர்த்தியில் கவரப்பட்ட எனது மாணவர்கள் அவர்களுடைய நண்பர்களையும் தெரிந்தவர்களையும் பயிற்சி மையத்தில் சேர்த்துவிட , நான் வேலை செய்த நிறுவனம் நன்றாக வளர்ந்துவிட்டது. என்னுடைய சொல்லிக்கொடுக்கும் திறனை அறிந்த நண்பரோ அப்போது என்னை அந்த நிறுவனத்தின் பார்ட்னராக சேருமாறு வலியுறுத்தினார். என் கையிலிருந்த நகைகளை விற்று குறிப்பிட்ட தொகையை செலுத்தி அங்கு பங்குதாரராய் சேர்ந்தேன். அந்த சென்டர் நன்றாக போனாலும், அவருடைய மற்ற சென்டர்கள் நஷ்டமடைய அந்த நண்பர் அந்த நஷ்டத்தை என் தலைமீது சுமத்தினார். அதற்காக எழுப்பிய கேள்விகளால் வேலையை விட்டும் அனுப்பப்பட்டேன்..தனி பயிற்சி மையம் எப்படி சாத்தியமானது?.முழுக்க முழுக்க என்மீது அன்புக்கொண்ட என்னிடம் படித்த மாணவர்களாலேயே சாத்தியமானது. பழைய பயிற்சி மையத்தை விட்டு வெளியேற்றப்பட்ட காலகட்டத்தில், என்னை வீட்டிலேயே பயிற்சி மையம் தொடங்க வைக்க காரணமானவர் அவர்களே. அவர்களின் வாய்மொழி விளம்பரத்தாலேயே மேலும் பலர் என்னிடம் பயிற்சிக்காக வந்தனர். அதன் பின்னர் அங்கு பயிற்சி பெறுபவர்களின் எண்ணிக்கை பெருகவே…அவர்களே ஒரு இடத்தை வாடகைக்கு வாங்க உதவிட , இப்படித்தான் பலரின் நன்முயற்சியால் இந்த பயிற்சி மையம் வளர்ந்து வந்தது..உங்கள் பயிற்சி மையம் ஆன்லைன் தொழில்நுட்பத்திற்கு மாற்றம் பெற்றது எப்படி?.அதற்கு கொஞ்சம் முன்பு என் கணவரின் உடல்நல குறைபாடு மற்றும் சொந்த வேலை பளுவால் எனது பயிற்சி மையத்தின் மாணவர்கள் எண்ணிக்கை குறையவே , அதை நிவர்த்தி செய்ய நண்பர்களின் ஆலோசனை பெயரில் அவர்களின் உதவியோடு youtubeல் ஆங்கில பயிற்சி வீடியோக்களை பதிவிட்டிருந்தேன். வீடியோ பதிவிட்ட இரு மாதத்தில் ஐநூறு சப்ஸ்கிரைபர்களை பெற்றுவிட்டேன். தற்போது எனது சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தொடப்போகிறது. வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகமாகவே தொடர்ந்து ஆன்லைன் வகுப்புக்களை தொடங்கினேன். தற்போது இதில் போதுமான வருமானமும், மனதில் தன்நிறைவும் பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது..உங்கள் பயிற்சி மையங்கள் எங்கெல்லாம் இருக்கிறது?.நேரிடையான பயிற்சி மையங்கள் சென்னை மற்றும் ராஜபாளையத்தில் நடைபெறுகிறது. ஆன்லைன் வகுப்புக்கள் மூலம் உலகெங்கும் மாணவச் செல்வங்களை பெற்றுள்ளேன்..உங்கள் தொழிலில் ஏற்பட்ட சிரமங்கள்… தடைகள்?.ஒரு பெண் தொழில்முனைவோராக மாற ஆண்களை விட பலமடங்கு பிரச்னைகளை சந்திக்க தான் வேண்டும். அதற்கெல்லாம் கலங்க தேவையில்லை. என் தொழிலிலும் தடைகள் ,துரோகங்கள், பிரச்னைகள், ஏமாற்றங்கள், நஷ்டங்கள் என என்னை கலங்கடிக்காமல் இல்லை. ஆனாலும் துணிவுடன் தனித்து நின்று பிரச்னைகளை சமாளித்துதான் வந்திருக்கிறேன். வலியின்றி வாழ்க்கை இல்லையே….யாரெல்லாம் உங்களிடம் பயிற்சிக்கு வருகிறார்கள்?.பள்ளி கல்லூரி மாணவ / மாணவிகள் , இல்லத்தரசிகள் , தொழில்துறையில் இருப்பவர்கள் , ஐடி துறையினர் என பலரும் வருகிறார்கள்..உங்கள் ஆங்கில பயிற்சியால் பயனடைத்தவர்கள் குறித்து?….ஒருவரா? இருவரா? எடுத்து சொல்ல…ஏராளமானோர் இதனால் பலனடைந்திருக்கிறார்கள். எத்தனையோ பேர் தொழில்நுட்ப அறிவு பெற்றிருந்தும் ஆங்கில அறிவு குறைவால் வேலை கிடைக்காமல் அவதிபட்டதுண்டு. அவர்களில் பலர் என்னிடம் பயிற்சி பெற்று இன்று மிகச்சிறந்த நிலைக்கு வந்திருக்கின்றனர். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் என் வாழ்க்கை அவர்களாலும் அவர்கள் வாழ்க்கை என்னாலும் பிரகாசமானது என்றால் மிகையில்லை..தங்களது எதிர்கால லட்சியங்கள் ?.என்னை போன்ற பயிற்சியாளர்களை உருவாக்கி, மேலும் பல கிளைகளை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது ஆசை கனவு லட்சியம். ஏற்கெனவே என்னிடம் படித்த பயிற்சிப்பெற்ற திறமையாளர்கள் பலர் எனது சென்னை மற்றும் இராஜபாளையம் கிளைகளில் தற்போது வேலை செய்கிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு. மேலும் சென்னையின் பல பகுதிகளில் கிளைகளை ஏற்படுத்த வேண்டும் என்பதும் எனது ஆசை..உங்கள் குடும்பம் தொழிலில் உங்களுக்கு உதவியாக இருக்கிறதா?.என் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோர், என் மகன் என அனைவருமே என் தொழிலுக்கு பெரிதும் உறுதுணையாக உள்ளனர். என் கணவர் ஆரம்பத்தில் என் வேண்டுகோளுக்கு செவி சாய்த்திருந்தாலும் போகப்போக பல பிரச்னைகள் உண்டானது. தற்போது கருத்து வேறுபாடுகள் காரணமாக தனியாக பிரிந்துவிட்டேன். என் தங்கைகளை நன்றாக படிக்கவைத்து திருமணமும் செய்து கொடுத்துவிட்டேன்..உங்களுக்கு கிடைத்த அங்கீகாரமாக எதை நினைக்கிறீர்கள்?.நிறைய பள்ளிகளில் , கல்லூரிகளில் எனது சுயமுன்னேற்ற கருத்துக்களை மேடையில் பேசி வருகிறேன். பிரபல பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியில் எனது பேட்டிகள் வந்துள்ளது. ஒரு தனியார் தொலைக்காட்சியில் இருவருடங்களாக கல்வி சம்பந்தமான நிகழ்ச்சியை வழங்கியிருக்கிறேன். ஒரு தனியார் நிறுவனத்திலிருந்து சாதனை பெண்கள் என்ற விருதையும் பெற்றுள்ளேன்..உங்களை போல சிறுநகரங்களில் கிராமங்களில் இருந்து தொழில்முனைவோராக விரும்பும் பெண்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவதென்ன?.பெண்கள் தங்களது குறுகிய வட்டத்தை விட்டு தைரியமாக வெளியே வரவேண்டும். தங்களது கம்பர்ட் ஜோனிலேயே இருந்து விடக்கூடாது. பரந்து விரிந்த உலகில் நமக்கான வாய்ப்புக்கள் எல்லா துறையிலும் கொட்டி கிடக்கிறது, தைரியமாக துணிந்து உங்கள் காலடிகளை எடுத்து வையுங்கள். நிச்சயம் வெற்றிபெறுவீர்கள்..இறுதியாக KAIZEN என்பதன் அர்த்தம் என்ன?.KAIZEN என்றால் தொடர் முன்னேற்றம் என்று பொருள் என்கிறார் மலர்விழி..அந்த நிறுவனத்திற்கும், அதில் பயிற்சி பெறுபவர்களுக்கும் தொடர் முன்னேற்றம் கிடைக்க மலர்விழி அவர்களை வாழ்த்திவிட்டு நன்றி சொல்லி விடைபெற்றோம்..அட்டையில் : மலர்விழி
– தனுஜா ஜெயராமன்.போட்டிகளும், சவால்களும் நிறைந்த உலகத்தில் ஒரு பெண் தனியாக நின்று ஒரு துறையில் சாதிப்பதென்பது மிகப்பெரிய விஷயம். அதுவும் சிறிய நகர்புற பிண்ணனியில், அதுவும் நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்த ஒரு சாதாரண பெண் இன்று பல தடைகளை தாண்டி பெண் தொழில்முனைவோராய் உருவெடுத்திருக்கிறார் என்பது பெருமைகொள்ள வேண்டிய விஷயம். தனது ஆங்கில பயற்சி மையம் மூலம் பலரது வாழ்வை திசைமாற்றி வெற்றிகொள்ள வைத்திருக்கிறார். அத்தகைய பெருமைக்கு சொந்தக்காரரான KAIZEN ACADEMY நிறுவனத்தின் CEO மலர்விழி அவர்களை சந்தித்தபோது…..உங்க குடும்பப் பின்னணி குறித்து?.நான் பிறந்தது மதுரையாக இருந்தாலும் படித்தது வளர்ந்தது எல்லாமே இராஜபாளையம்தான். அங்கே P.A.C.R அம்மணியம்மாள் பள்ளியில் ப்ளஸ் டூ வரை படித்தேன். திடீரென எனது தந்தையாருக்கு ஏற்பட்ட உடல்நல குறைபாடுகளாலும் , பண சிக்கல்களாலும் என்னால் அதற்கு மேல் படிப்பை தொடர முடியவில்லை. வீட்டில் மூன்று பெண்களில் நான்தான் மூத்த பெண். என் குடும்ப சூழ்நிலை காரணமாக எனக்கு சீக்கிரமாக திருமணம் செய்துவிட முடிவெடுத்திருந்தனர் வீட்டு பெரியவர்கள்..எனக்கு வரப்போகும் கணவரிடம் நான் தொடர்ந்து படிக்கணும், வேலைக்கு போகணும், எனது குடும்பத்திற்கு பொருளாதார உதவிகள் செய்யணும் என்பதை வேண்டுகோளாக வைத்தே திருமணத்திற்கு சம்மதித்தேன். பிறகு பதினெட்டு வயதில் திருமணம், குழந்தை என வாழ்க்கை சுமுகமாகதான் போய்க்கொண்டிருந்து. ஆனாலும் மேற்படிப்பு படிக்காத ஏக்கம் என்னை வாட்டி எடுக்க அருகிலிருந்த பள்ளியில் ஆசிரியராக வேலைக்கு சேர்ந்தேன். நிறைய குழந்தைகளுக்கு ஆங்கில டியூஷன் சொல்லிக்கொடுத்தும் வந்தேன்..திருமணத்திற்கு பிறகு கல்வியை தொடர முடிந்ததா?.படிப்பை தொடர்ந்து தொலைதூர கல்வியில் MA ஆங்கிலம் முடித்துவிட்டேன். சென்னை பிரிட்டிஷ் கவுன்சில் மையத்தில் ஆங்கிலத்தில் சிறப்பு பயிற்சியும் பெற்றிருக்கிறேன்..உங்களுக்கு ஆங்கிலத்தின் மீது தனி ஆர்வம் ஏற்பட்டது எப்போது?.நான் படித்து முடித்ததும் ஒரு தனியார் பள்ளியில் பணியாற்றியபோது ஒரு ஆங்கிலோ இந்திய ஆசிரியர் ஒருவர் ஆங்கில வகுப்புகளை மிக அழகாக நேர்த்தியாக எடுத்துக்கொண்டிருந்தார். அவரைப்போல ஆங்கிலத்தை ஸ்பெஷ்டமாக உச்சரிக்க, படிக்க ஆசைப்பட்டேன். அவரை பார்த்தே எனக்கு ஆங்கிலம் மீது அதீத ஆர்வம் ஏற்பட்டது..ஆங்கிலம் கற்றுக்கொடுப்பதை முழு நேரத் தொழிலாக கையிலெடுத்தது எப்போது?.திருமணத்திற்கு பிறகு நான் ஒரு பள்ளியில் வேலை செய்து கொண்டிருந்த போது, தெரிந்த நண்பர் ஒருவர் நான் எடுக்கும் வகுப்புகளையும், சொல்லிக்கொடுக்கும் நேர்த்தியையும் கண்டு அவர் வைத்திருந்த ஆங்கில பயிற்சி நிறுவனத்தில் பகுதி நேர பணியில் சேரமுடியுமா? என கேட்டிருந்தார். எனக்கு குழந்தை பிறந்திருந்த காலகட்டம் அது. அப்போது எனக்கும் பல பொருளாதார சிக்கல்கள் எழ, 'சரி' என சம்மதித்தேன். நான் வகுப்பு எடுக்கும் நேர்த்தியில் கவரப்பட்ட எனது மாணவர்கள் அவர்களுடைய நண்பர்களையும் தெரிந்தவர்களையும் பயிற்சி மையத்தில் சேர்த்துவிட , நான் வேலை செய்த நிறுவனம் நன்றாக வளர்ந்துவிட்டது. என்னுடைய சொல்லிக்கொடுக்கும் திறனை அறிந்த நண்பரோ அப்போது என்னை அந்த நிறுவனத்தின் பார்ட்னராக சேருமாறு வலியுறுத்தினார். என் கையிலிருந்த நகைகளை விற்று குறிப்பிட்ட தொகையை செலுத்தி அங்கு பங்குதாரராய் சேர்ந்தேன். அந்த சென்டர் நன்றாக போனாலும், அவருடைய மற்ற சென்டர்கள் நஷ்டமடைய அந்த நண்பர் அந்த நஷ்டத்தை என் தலைமீது சுமத்தினார். அதற்காக எழுப்பிய கேள்விகளால் வேலையை விட்டும் அனுப்பப்பட்டேன்..தனி பயிற்சி மையம் எப்படி சாத்தியமானது?.முழுக்க முழுக்க என்மீது அன்புக்கொண்ட என்னிடம் படித்த மாணவர்களாலேயே சாத்தியமானது. பழைய பயிற்சி மையத்தை விட்டு வெளியேற்றப்பட்ட காலகட்டத்தில், என்னை வீட்டிலேயே பயிற்சி மையம் தொடங்க வைக்க காரணமானவர் அவர்களே. அவர்களின் வாய்மொழி விளம்பரத்தாலேயே மேலும் பலர் என்னிடம் பயிற்சிக்காக வந்தனர். அதன் பின்னர் அங்கு பயிற்சி பெறுபவர்களின் எண்ணிக்கை பெருகவே…அவர்களே ஒரு இடத்தை வாடகைக்கு வாங்க உதவிட , இப்படித்தான் பலரின் நன்முயற்சியால் இந்த பயிற்சி மையம் வளர்ந்து வந்தது..உங்கள் பயிற்சி மையம் ஆன்லைன் தொழில்நுட்பத்திற்கு மாற்றம் பெற்றது எப்படி?.அதற்கு கொஞ்சம் முன்பு என் கணவரின் உடல்நல குறைபாடு மற்றும் சொந்த வேலை பளுவால் எனது பயிற்சி மையத்தின் மாணவர்கள் எண்ணிக்கை குறையவே , அதை நிவர்த்தி செய்ய நண்பர்களின் ஆலோசனை பெயரில் அவர்களின் உதவியோடு youtubeல் ஆங்கில பயிற்சி வீடியோக்களை பதிவிட்டிருந்தேன். வீடியோ பதிவிட்ட இரு மாதத்தில் ஐநூறு சப்ஸ்கிரைபர்களை பெற்றுவிட்டேன். தற்போது எனது சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தொடப்போகிறது. வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகமாகவே தொடர்ந்து ஆன்லைன் வகுப்புக்களை தொடங்கினேன். தற்போது இதில் போதுமான வருமானமும், மனதில் தன்நிறைவும் பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது..உங்கள் பயிற்சி மையங்கள் எங்கெல்லாம் இருக்கிறது?.நேரிடையான பயிற்சி மையங்கள் சென்னை மற்றும் ராஜபாளையத்தில் நடைபெறுகிறது. ஆன்லைன் வகுப்புக்கள் மூலம் உலகெங்கும் மாணவச் செல்வங்களை பெற்றுள்ளேன்..உங்கள் தொழிலில் ஏற்பட்ட சிரமங்கள்… தடைகள்?.ஒரு பெண் தொழில்முனைவோராக மாற ஆண்களை விட பலமடங்கு பிரச்னைகளை சந்திக்க தான் வேண்டும். அதற்கெல்லாம் கலங்க தேவையில்லை. என் தொழிலிலும் தடைகள் ,துரோகங்கள், பிரச்னைகள், ஏமாற்றங்கள், நஷ்டங்கள் என என்னை கலங்கடிக்காமல் இல்லை. ஆனாலும் துணிவுடன் தனித்து நின்று பிரச்னைகளை சமாளித்துதான் வந்திருக்கிறேன். வலியின்றி வாழ்க்கை இல்லையே….யாரெல்லாம் உங்களிடம் பயிற்சிக்கு வருகிறார்கள்?.பள்ளி கல்லூரி மாணவ / மாணவிகள் , இல்லத்தரசிகள் , தொழில்துறையில் இருப்பவர்கள் , ஐடி துறையினர் என பலரும் வருகிறார்கள்..உங்கள் ஆங்கில பயிற்சியால் பயனடைத்தவர்கள் குறித்து?….ஒருவரா? இருவரா? எடுத்து சொல்ல…ஏராளமானோர் இதனால் பலனடைந்திருக்கிறார்கள். எத்தனையோ பேர் தொழில்நுட்ப அறிவு பெற்றிருந்தும் ஆங்கில அறிவு குறைவால் வேலை கிடைக்காமல் அவதிபட்டதுண்டு. அவர்களில் பலர் என்னிடம் பயிற்சி பெற்று இன்று மிகச்சிறந்த நிலைக்கு வந்திருக்கின்றனர். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் என் வாழ்க்கை அவர்களாலும் அவர்கள் வாழ்க்கை என்னாலும் பிரகாசமானது என்றால் மிகையில்லை..தங்களது எதிர்கால லட்சியங்கள் ?.என்னை போன்ற பயிற்சியாளர்களை உருவாக்கி, மேலும் பல கிளைகளை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது ஆசை கனவு லட்சியம். ஏற்கெனவே என்னிடம் படித்த பயிற்சிப்பெற்ற திறமையாளர்கள் பலர் எனது சென்னை மற்றும் இராஜபாளையம் கிளைகளில் தற்போது வேலை செய்கிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு. மேலும் சென்னையின் பல பகுதிகளில் கிளைகளை ஏற்படுத்த வேண்டும் என்பதும் எனது ஆசை..உங்கள் குடும்பம் தொழிலில் உங்களுக்கு உதவியாக இருக்கிறதா?.என் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோர், என் மகன் என அனைவருமே என் தொழிலுக்கு பெரிதும் உறுதுணையாக உள்ளனர். என் கணவர் ஆரம்பத்தில் என் வேண்டுகோளுக்கு செவி சாய்த்திருந்தாலும் போகப்போக பல பிரச்னைகள் உண்டானது. தற்போது கருத்து வேறுபாடுகள் காரணமாக தனியாக பிரிந்துவிட்டேன். என் தங்கைகளை நன்றாக படிக்கவைத்து திருமணமும் செய்து கொடுத்துவிட்டேன்..உங்களுக்கு கிடைத்த அங்கீகாரமாக எதை நினைக்கிறீர்கள்?.நிறைய பள்ளிகளில் , கல்லூரிகளில் எனது சுயமுன்னேற்ற கருத்துக்களை மேடையில் பேசி வருகிறேன். பிரபல பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியில் எனது பேட்டிகள் வந்துள்ளது. ஒரு தனியார் தொலைக்காட்சியில் இருவருடங்களாக கல்வி சம்பந்தமான நிகழ்ச்சியை வழங்கியிருக்கிறேன். ஒரு தனியார் நிறுவனத்திலிருந்து சாதனை பெண்கள் என்ற விருதையும் பெற்றுள்ளேன்..உங்களை போல சிறுநகரங்களில் கிராமங்களில் இருந்து தொழில்முனைவோராக விரும்பும் பெண்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவதென்ன?.பெண்கள் தங்களது குறுகிய வட்டத்தை விட்டு தைரியமாக வெளியே வரவேண்டும். தங்களது கம்பர்ட் ஜோனிலேயே இருந்து விடக்கூடாது. பரந்து விரிந்த உலகில் நமக்கான வாய்ப்புக்கள் எல்லா துறையிலும் கொட்டி கிடக்கிறது, தைரியமாக துணிந்து உங்கள் காலடிகளை எடுத்து வையுங்கள். நிச்சயம் வெற்றிபெறுவீர்கள்..இறுதியாக KAIZEN என்பதன் அர்த்தம் என்ன?.KAIZEN என்றால் தொடர் முன்னேற்றம் என்று பொருள் என்கிறார் மலர்விழி..அந்த நிறுவனத்திற்கும், அதில் பயிற்சி பெறுபவர்களுக்கும் தொடர் முன்னேற்றம் கிடைக்க மலர்விழி அவர்களை வாழ்த்திவிட்டு நன்றி சொல்லி விடைபெற்றோம்..அட்டையில் : மலர்விழி