ஒரு நிருபரின் டைரி – 13.– எஸ். சந்திரமெளலி."1997ல் சென்னையில் மீனவர்கள் அமைப்பு நடத்திய ஒரு பொதுக் கூட்டத்தில் பூலான் தேவி கலந்துகொள்ள இருக்கிறார்" என்று சுவரொட்டியைப் பார்த்தேன். தி. நகர் பனகல் பார்க் பகுதியில் அந்தப் பொதுக்கூட்டம் நடக்கவிருந்தது. "பூலான் தேவியை பேட்டிக்கு முயற்சி செய்தால் என்ன-" என்று தோன்றியது. அன்று மாலை பனகல் பார்க் சென்றேன். பொதுக்கூட்ட மேடையில் பூலான் தேவி எம்.பி.யும், அவரது கணவரான உமர்சிங்கும் அமர்ந்து கொண்டிருந்தார்கள். நான் மேடையின் பின்புறம் சென்று, விசிடிங் கார்டில் 'கல்கி' என்ற பிரபல தமிழ் பத்திரிகைக்காக பேட்டிக்கு நேரம் வேண்டும்" என்று எழுதி மேடையில் நின்றுகொண்டிருந்த ஒருவர் மூலமாக பூலான் தேவியிடம் சேர்க்கும்படி கொடுத்தனுப்பினேன்.. சில நிமிடங்களில் தாடி வைத்த நபர் ஒருவர் என்னை நோக்கி வந்து "நான் பூலான்ஜியுடைய செகரட்டரி" என அறிமுகப்படுத்திக் கொண்டார். பேட்டிக்கு நேரம் கேட்டேன். "சோழா ஷெராட்டன் ஹோட்டலில்தான் தங்கி இருக்கிறார். இந்த மீட்டிங் முடிந்து ஹோட்டலுக்குத் திரும்புவதற்கு இரவு பத்து மணி ஆகிவிடும். சரியாக பத்து மணிக்கு ஹோட்டல் லாபியில் காத்திருங்கள்!" என்றார்..மேடையில் ஏகப்பட்ட பேச்சாளர்கள். ஆளாளுக்கு "வருங்கால உத்தர பிரதேச முதலமைச்சரே!", "நாளைய இந்தியப் பிரதமரே!" என்றெல்லாம் அவரை தமிழில் ஐஸ் மழை பொழிந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் பேச்சுக்களை கேட்கிற மூடில் நான் இல்லை. அந்த இடத்திலிருந்து ஜூட் விட்ட நான், பத்து மணிக்கு சோழா ஷெராட்டன் லாபியில் பூலான்ஜியின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்..அவர் ஹோட்டலுக்குத் திரும்பியபோது இரவு மணி பதினொன்றைத் தாண்டிவிட்டது. தாடிக்கார செகரட்டரி என்னை கவனித்ததும், அழைத்து, பூலான் தேவிக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவர்களுடன் ஹோட்டல் அறைக்குப் போனேன்..அறையில் பூலான் தேவி, அவரது கணவர், செகரட்டரி மற்றும் நான். பரபரவென்று இந்தியில் அவர் பேச ஆரம்பிக்க, நான் " ஜீ! எனக்கு இந்தி தெரியாது!" என்றேன். அவர் என்னை ஒரு அற்ப ஜந்துவைப் பார்ப்பது போலப் பார்த்தார். அவருடைய செகரட்டரியான தாடிக்காரருக்கு தமிழ் தெரிந்திருந்தது. எனவே, நான் தமிழில் கேள்வி கேட்க, அதை அவரது செகரட்டரி இந்தியில் மொழிபெயர்த்து பூலான் தேவியிடம் சொல்வார். அதற்கு பூலான் தேவி அளிக்கும் இந்தி பதில்களை அவர் தமிழில் மொழிபெயர்த்து எனக்குச் சொல்லுவார் என்று ஏற்பாடானது.மடமடவென்று நான் கேள்விகள் கேட்க அவரும் தயங்காமல் பதில்கள் சொன்னார். ரொம்பவும் வெளிப்படையான பதில்கள்..சம்பல் பள்ளத்தாக்கு வாழ்க்கையைப் பற்றிக் கேட்டபோது, ."காட்டில் கொள்ளைக்காரியாக வாழ்ந்த நாட்களில் எப்படியும் ஒரு நாள் போலிசில் மாட்டிக்கொண்டு விடுவோம்; அல்லது அவர்களுடனான மோதலில் துப்பாக்கி குண்டுக்கு பலியாகிவிடுவோம் என்றுதான் நினைத்தேன். அதன் பின் போலிசில் சரணடைந்து ஜெயிலில் அடைக்கப்பட்டபோது, என் ஆயுள் முழுக்க சிறையிலேயே கழிந்துவிடும் என்றுதான் நினைத்தேன். விடுதலை, அரசியல் பிரவேசம், எம்.பி. பதவி எல்லாம் நான் கனவிலும் நினைத்துப் பார்க்காதவை!" என்றார்..தன் சிறை வாழ்க்கையைப் பற்றி சொல்லும்போது,."ஒன்று, இரண்டில்லை; பதினோரு வருடம், மூன்று மாதங்கள் நான் ஜெயில் தண்டனை அனுபவித்திருக்கிறேன். ஜெயிலில் இருந்த ஒவ்வொரு நாளும், "நேற்று வரை என் வாழ்க்கை ஓடிவிட்டது; இன்று என்ன நடக்குமோ! என்ற ஒரு வித பயத்துடனேதான் காலையில் கண் விழிப்பேன். ஜெயிலுக்குள்ளே நான் ஒரு நடைபிணம் போல வாழ்ந்தேன் என்றால் துளியும் மிகையில்லை" என்றார்..பூலான் தேவியின் வாழ்க்கைக் கதையை பத்திரிகையாளர் மாலா சென் புத்தகமாக எழுதினார். அதைத்தான் சேகர் கபூர் 'பாண்டிட் குயின்" என்று திரைப்படமாக எடுத்தார். "உங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை புத்தகமாக வெளியாவதற்கு சம்மதம் அளித்ததன் காரணம் என்ன?" என்று கேட்டேன். படு சீரியசாக, "எனக்கு ஏற்பட்ட கொடுமைகள் வேறு ஒரு பெண்ணுக்கு ஏற்படக்கூடாது என்று நான் நினைத்தேன். எனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை, நான் அனுபவித்த சித்ரவதைகளை மக்கள் எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும்" என்று விரும்பினேன். எனவே, மாலா சென் என்னை அணுகியபோது, அவருக்கு ஒத்துழைப்புத் தர சம்மதித்தேன். என்னை ஜெயிலுக்கு வந்து சந்தித்து, பேட்டி கண்டு எல்லா தகவல்களையும் தெரிந்துக்கொண்டார். ஆனால். புத்தகமாக எழுதியபோது, தனது கற்பனையையும் சேர்த்து எழுதிவிட்டார். அதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவேதான் ஒரு பிரெஞ்ச் எழுத்தாளரின் உதவியுடன் என் உண்மையான வாழ்க்கை கதையை மக்களுக்கு சொல்ல முடிவு செய்தேன்" என பதில் சொன்னார்..ஷேகர் கபூரின் பாண்டிட் குயின் படத்தை வெளியிடக்கூடாது என்று முட்டுக்கட்டை போட்டார் பூலான் தேவி. என்ன காரணம்? "அந்தப் படத்தில் இடம் பெற்ற அனைத்துமே நான் என் வாழ்க்கையில் அனுபவித்தவைதான் என்றாலும், அந்த கொடூரமான சித்ரவதைகளை அப்பட்டமாக, சினிமாவில் காட்ட வேண்டும் என்று அவசியமில்லை என்று நான் நினைத்தேன். நாகரிகம் கருதி, சில காட்சிகளை திரையில் தவிர்த்திருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் படத்தை அப்படியே வெளியிடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தேன்" என்று விளக்கினார்..பூலான் தேவியின் அரசியல் பிரவேசத்துக்கு சிவப்புக் கம்பளம் விரித்தவர் சமாஜ்வாதி கட்சித் தலைவரான முலாயம் சிங் யாதவ்தான்! பூலான் தேவிக்கு பொது மன்னிப்பு வழங்கி, அவர் விடுதலைக்கு வழி செய்தவர் முலாயம். அவரை தன் கட்சியில் இழுத்துப் போட்டவரும் அவரே. பூலான் தேவி, ஒரு தனி மனுஷியாக வாழ்க்கையை ஓட்டுவதைவிட, அரசியல் பின்பலத்துடன் இருப்பது உத்தமம் என்று நினைத்து சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்துவிட்டார்.."பராளுமன்றத் தேர்தலின்போது, ஒரு வேட்பாளராக மக்களிடம் ஓட்டு கேட்கச் சென்றபோது, மக்களின் ரியாக் ஷன் எப்படி இருந்தது?" என்ற என் கேள்விக்கு அவர் சொன்ன பதில்: ."வேட்பு மனு தாக்கல் செய்த அன்றே நான் ஜெயிப்பது நிச்சயம் என்று எனக்குத் தெரிந்துவிட்டது! அதற்கு முதல் காரணம், நான் சுயேச்சை வேட்பாளராக இல்லாமல், உ.பி.யின் செல்வாக்கு மிகுந்த கட்சியின் வேட்பாளராக தேர்தல் களம் இறங்கினேன். உ.பி.யின் கிராமப்புற பெண்களுக்கு, நான் வாழ்க்கையில் எத்தனை சித்ரவதைகள், கொடுமைகள் அனுபவித்திருக்கிறேன் என்பது நன்றாகத் தெரியும். எனவே, அவர்கள் என் மீது கோபப்படவில்லை; அனுதாபம்தான் காட்டினார்கள். எனவே, சுலபமாக தேர்தலில் ஜெயித்து, பாராளுமன்றத்துக்குப் போனேன்" என்று சொன்னார்..'உங்களுடைய கடந்த காலத்தை நீங்கள் அசைபோடுவதுண்டா? இல்லை இருண்ட நாட்களாக நினைத்து மறக்க நினைக்கிறீர்களா?' என்ற கேள்விக்கு அவரது பதில் மூலமாக பூலான் தேவியின் மனத்தில் இன்னமும் ஆறாத வடுக்கள் ஏராளம் என்று புரிந்துகொள்ள முடிந்தது.."வாழ்க்கையில் நான் என்னென்ன கொடுமைகளை அனுபவிக்க நேர்ந்ததோ, எல்லாம் நடந்து முடிந்த கதை என்பது ஒரு விதத்தில் சரிதான். ஆனாலும் "கடவுளே! என்னை ஏன் இந்த பூமியில் பெண்ணாகப் பிறக்க வைத்தாய்? என்று நான் கதறிய நாட்கள் எத்தனை தெரியுமா? என்னைப் பெற்ற தாய், " என் பெண்ணை இத்தனை கொடுமைப்படுத்துகிறார்களே! இங்கே நடக்கிற அநியாயத்தைக் கேட்க ஆளில்லையா என்று கதறியது அன்று யார் காதிலும் ஏன் விழவில்லை? என்று நான் கடவுளை நோக்கி எத்தனை முறை கேட்டிருக்கிறேன் தெரியுமா?" என்று அவர் சொன்னபோது குரல் தளர்ந்தது. லேசாக கண் கலங்கிவிட்டார்..'கொள்ளைக்காரியாக இருந்து ஏராளமானவர்களை கொன்றிருக்கிறோமே என நீங்கள் எப்போதாவது வருத்தப்பட்டது உண்டா? என்று கேட்டவுடன், நான் எதிர்பாத்தது போலவே கொஞ்சம் கோபப்பட்டார்.."இல்லை; துளிக்கூட இல்லை; சொத்துக்கு ஆசைப்பட்டு நான் கொள்ளைக்காரி ஆகவில்லை. எனக்குக் கொடுமை இழைத்தவர்களைப் பழி வாங்கவேண்டும் என்ற நோக்கத்துடன்தான் துப்பாக்கி ஏந்தினேன். எனவே கொள்ளைக்காரியாக இருந்ததில் எனக்குத் துளியும் வருத்தமில்லை" என்றார்..அரசியல்வாதிகள் பற்றிய பூலான் தேவியின் நக்கலான கமெண்ட்:."காட்டில் இருக்கும்போது அடித்தால் 'கொள்ளை' என்கிறார்கள். நாட்டில் அதையே இவர்கள் செய்தால் 'ஊழல்' என்று சொல்லி விடுகிறார்கள். அவர்களுக்கு சட்டம், தண்டனை கொடுக்கிறது; ஆனால் இவர்களுக்கு?"."சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பற்றிக் கேள்விப்பட்டிருக் கிறீர்களா?" என்று கேட்டதும்,."ம்… தெரியும்" என்றார்..வீரப்பன் கூட, தன் மீதுள்ள வழக்குகள் எல்லாவற்றையும் வாபஸ் வாங்கி, தனக்கு பொது மன்னிப்பு தர வேண்டும் என்று கேட்கிறானே?" என்று சொன்னவுடன் பட்டென்று பூலான் தேவி, ."வீரப்பன் முதலில் சரணடையட்டும்! அதன் பிறகு பொது மன்னிப்பு பற்றிப் பேசட்டும்! " என்றார்..பேட்டியில் இடம்பெற்ற இந்த கடைசி கேள்விக்கு ஒரு சுவாரசியமான ஃபாலோ-அப் நிகழ்ந்தது. நக்கீரன் கோபால் காட்டுக்குள் சென்று வீரப்பனை சந்தித்தபோது, பூலான் தேவி அவனைப் பற்றி சொன்ன கமெண்டை வீரப்பனிடம் சொல்ல, அதற்கு வீரப்பனின் ரியாக்க்ஷன் என்ன தெரியுமா?."அவ இப்ப பாலிடிஷியன் இல்லையா? அப்படித்தான் பேசுவா!".(தொடரும்)
ஒரு நிருபரின் டைரி – 13.– எஸ். சந்திரமெளலி."1997ல் சென்னையில் மீனவர்கள் அமைப்பு நடத்திய ஒரு பொதுக் கூட்டத்தில் பூலான் தேவி கலந்துகொள்ள இருக்கிறார்" என்று சுவரொட்டியைப் பார்த்தேன். தி. நகர் பனகல் பார்க் பகுதியில் அந்தப் பொதுக்கூட்டம் நடக்கவிருந்தது. "பூலான் தேவியை பேட்டிக்கு முயற்சி செய்தால் என்ன-" என்று தோன்றியது. அன்று மாலை பனகல் பார்க் சென்றேன். பொதுக்கூட்ட மேடையில் பூலான் தேவி எம்.பி.யும், அவரது கணவரான உமர்சிங்கும் அமர்ந்து கொண்டிருந்தார்கள். நான் மேடையின் பின்புறம் சென்று, விசிடிங் கார்டில் 'கல்கி' என்ற பிரபல தமிழ் பத்திரிகைக்காக பேட்டிக்கு நேரம் வேண்டும்" என்று எழுதி மேடையில் நின்றுகொண்டிருந்த ஒருவர் மூலமாக பூலான் தேவியிடம் சேர்க்கும்படி கொடுத்தனுப்பினேன்.. சில நிமிடங்களில் தாடி வைத்த நபர் ஒருவர் என்னை நோக்கி வந்து "நான் பூலான்ஜியுடைய செகரட்டரி" என அறிமுகப்படுத்திக் கொண்டார். பேட்டிக்கு நேரம் கேட்டேன். "சோழா ஷெராட்டன் ஹோட்டலில்தான் தங்கி இருக்கிறார். இந்த மீட்டிங் முடிந்து ஹோட்டலுக்குத் திரும்புவதற்கு இரவு பத்து மணி ஆகிவிடும். சரியாக பத்து மணிக்கு ஹோட்டல் லாபியில் காத்திருங்கள்!" என்றார்..மேடையில் ஏகப்பட்ட பேச்சாளர்கள். ஆளாளுக்கு "வருங்கால உத்தர பிரதேச முதலமைச்சரே!", "நாளைய இந்தியப் பிரதமரே!" என்றெல்லாம் அவரை தமிழில் ஐஸ் மழை பொழிந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் பேச்சுக்களை கேட்கிற மூடில் நான் இல்லை. அந்த இடத்திலிருந்து ஜூட் விட்ட நான், பத்து மணிக்கு சோழா ஷெராட்டன் லாபியில் பூலான்ஜியின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்..அவர் ஹோட்டலுக்குத் திரும்பியபோது இரவு மணி பதினொன்றைத் தாண்டிவிட்டது. தாடிக்கார செகரட்டரி என்னை கவனித்ததும், அழைத்து, பூலான் தேவிக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவர்களுடன் ஹோட்டல் அறைக்குப் போனேன்..அறையில் பூலான் தேவி, அவரது கணவர், செகரட்டரி மற்றும் நான். பரபரவென்று இந்தியில் அவர் பேச ஆரம்பிக்க, நான் " ஜீ! எனக்கு இந்தி தெரியாது!" என்றேன். அவர் என்னை ஒரு அற்ப ஜந்துவைப் பார்ப்பது போலப் பார்த்தார். அவருடைய செகரட்டரியான தாடிக்காரருக்கு தமிழ் தெரிந்திருந்தது. எனவே, நான் தமிழில் கேள்வி கேட்க, அதை அவரது செகரட்டரி இந்தியில் மொழிபெயர்த்து பூலான் தேவியிடம் சொல்வார். அதற்கு பூலான் தேவி அளிக்கும் இந்தி பதில்களை அவர் தமிழில் மொழிபெயர்த்து எனக்குச் சொல்லுவார் என்று ஏற்பாடானது.மடமடவென்று நான் கேள்விகள் கேட்க அவரும் தயங்காமல் பதில்கள் சொன்னார். ரொம்பவும் வெளிப்படையான பதில்கள்..சம்பல் பள்ளத்தாக்கு வாழ்க்கையைப் பற்றிக் கேட்டபோது, ."காட்டில் கொள்ளைக்காரியாக வாழ்ந்த நாட்களில் எப்படியும் ஒரு நாள் போலிசில் மாட்டிக்கொண்டு விடுவோம்; அல்லது அவர்களுடனான மோதலில் துப்பாக்கி குண்டுக்கு பலியாகிவிடுவோம் என்றுதான் நினைத்தேன். அதன் பின் போலிசில் சரணடைந்து ஜெயிலில் அடைக்கப்பட்டபோது, என் ஆயுள் முழுக்க சிறையிலேயே கழிந்துவிடும் என்றுதான் நினைத்தேன். விடுதலை, அரசியல் பிரவேசம், எம்.பி. பதவி எல்லாம் நான் கனவிலும் நினைத்துப் பார்க்காதவை!" என்றார்..தன் சிறை வாழ்க்கையைப் பற்றி சொல்லும்போது,."ஒன்று, இரண்டில்லை; பதினோரு வருடம், மூன்று மாதங்கள் நான் ஜெயில் தண்டனை அனுபவித்திருக்கிறேன். ஜெயிலில் இருந்த ஒவ்வொரு நாளும், "நேற்று வரை என் வாழ்க்கை ஓடிவிட்டது; இன்று என்ன நடக்குமோ! என்ற ஒரு வித பயத்துடனேதான் காலையில் கண் விழிப்பேன். ஜெயிலுக்குள்ளே நான் ஒரு நடைபிணம் போல வாழ்ந்தேன் என்றால் துளியும் மிகையில்லை" என்றார்..பூலான் தேவியின் வாழ்க்கைக் கதையை பத்திரிகையாளர் மாலா சென் புத்தகமாக எழுதினார். அதைத்தான் சேகர் கபூர் 'பாண்டிட் குயின்" என்று திரைப்படமாக எடுத்தார். "உங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை புத்தகமாக வெளியாவதற்கு சம்மதம் அளித்ததன் காரணம் என்ன?" என்று கேட்டேன். படு சீரியசாக, "எனக்கு ஏற்பட்ட கொடுமைகள் வேறு ஒரு பெண்ணுக்கு ஏற்படக்கூடாது என்று நான் நினைத்தேன். எனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை, நான் அனுபவித்த சித்ரவதைகளை மக்கள் எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும்" என்று விரும்பினேன். எனவே, மாலா சென் என்னை அணுகியபோது, அவருக்கு ஒத்துழைப்புத் தர சம்மதித்தேன். என்னை ஜெயிலுக்கு வந்து சந்தித்து, பேட்டி கண்டு எல்லா தகவல்களையும் தெரிந்துக்கொண்டார். ஆனால். புத்தகமாக எழுதியபோது, தனது கற்பனையையும் சேர்த்து எழுதிவிட்டார். அதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவேதான் ஒரு பிரெஞ்ச் எழுத்தாளரின் உதவியுடன் என் உண்மையான வாழ்க்கை கதையை மக்களுக்கு சொல்ல முடிவு செய்தேன்" என பதில் சொன்னார்..ஷேகர் கபூரின் பாண்டிட் குயின் படத்தை வெளியிடக்கூடாது என்று முட்டுக்கட்டை போட்டார் பூலான் தேவி. என்ன காரணம்? "அந்தப் படத்தில் இடம் பெற்ற அனைத்துமே நான் என் வாழ்க்கையில் அனுபவித்தவைதான் என்றாலும், அந்த கொடூரமான சித்ரவதைகளை அப்பட்டமாக, சினிமாவில் காட்ட வேண்டும் என்று அவசியமில்லை என்று நான் நினைத்தேன். நாகரிகம் கருதி, சில காட்சிகளை திரையில் தவிர்த்திருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் படத்தை அப்படியே வெளியிடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தேன்" என்று விளக்கினார்..பூலான் தேவியின் அரசியல் பிரவேசத்துக்கு சிவப்புக் கம்பளம் விரித்தவர் சமாஜ்வாதி கட்சித் தலைவரான முலாயம் சிங் யாதவ்தான்! பூலான் தேவிக்கு பொது மன்னிப்பு வழங்கி, அவர் விடுதலைக்கு வழி செய்தவர் முலாயம். அவரை தன் கட்சியில் இழுத்துப் போட்டவரும் அவரே. பூலான் தேவி, ஒரு தனி மனுஷியாக வாழ்க்கையை ஓட்டுவதைவிட, அரசியல் பின்பலத்துடன் இருப்பது உத்தமம் என்று நினைத்து சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்துவிட்டார்.."பராளுமன்றத் தேர்தலின்போது, ஒரு வேட்பாளராக மக்களிடம் ஓட்டு கேட்கச் சென்றபோது, மக்களின் ரியாக் ஷன் எப்படி இருந்தது?" என்ற என் கேள்விக்கு அவர் சொன்ன பதில்: ."வேட்பு மனு தாக்கல் செய்த அன்றே நான் ஜெயிப்பது நிச்சயம் என்று எனக்குத் தெரிந்துவிட்டது! அதற்கு முதல் காரணம், நான் சுயேச்சை வேட்பாளராக இல்லாமல், உ.பி.யின் செல்வாக்கு மிகுந்த கட்சியின் வேட்பாளராக தேர்தல் களம் இறங்கினேன். உ.பி.யின் கிராமப்புற பெண்களுக்கு, நான் வாழ்க்கையில் எத்தனை சித்ரவதைகள், கொடுமைகள் அனுபவித்திருக்கிறேன் என்பது நன்றாகத் தெரியும். எனவே, அவர்கள் என் மீது கோபப்படவில்லை; அனுதாபம்தான் காட்டினார்கள். எனவே, சுலபமாக தேர்தலில் ஜெயித்து, பாராளுமன்றத்துக்குப் போனேன்" என்று சொன்னார்..'உங்களுடைய கடந்த காலத்தை நீங்கள் அசைபோடுவதுண்டா? இல்லை இருண்ட நாட்களாக நினைத்து மறக்க நினைக்கிறீர்களா?' என்ற கேள்விக்கு அவரது பதில் மூலமாக பூலான் தேவியின் மனத்தில் இன்னமும் ஆறாத வடுக்கள் ஏராளம் என்று புரிந்துகொள்ள முடிந்தது.."வாழ்க்கையில் நான் என்னென்ன கொடுமைகளை அனுபவிக்க நேர்ந்ததோ, எல்லாம் நடந்து முடிந்த கதை என்பது ஒரு விதத்தில் சரிதான். ஆனாலும் "கடவுளே! என்னை ஏன் இந்த பூமியில் பெண்ணாகப் பிறக்க வைத்தாய்? என்று நான் கதறிய நாட்கள் எத்தனை தெரியுமா? என்னைப் பெற்ற தாய், " என் பெண்ணை இத்தனை கொடுமைப்படுத்துகிறார்களே! இங்கே நடக்கிற அநியாயத்தைக் கேட்க ஆளில்லையா என்று கதறியது அன்று யார் காதிலும் ஏன் விழவில்லை? என்று நான் கடவுளை நோக்கி எத்தனை முறை கேட்டிருக்கிறேன் தெரியுமா?" என்று அவர் சொன்னபோது குரல் தளர்ந்தது. லேசாக கண் கலங்கிவிட்டார்..'கொள்ளைக்காரியாக இருந்து ஏராளமானவர்களை கொன்றிருக்கிறோமே என நீங்கள் எப்போதாவது வருத்தப்பட்டது உண்டா? என்று கேட்டவுடன், நான் எதிர்பாத்தது போலவே கொஞ்சம் கோபப்பட்டார்.."இல்லை; துளிக்கூட இல்லை; சொத்துக்கு ஆசைப்பட்டு நான் கொள்ளைக்காரி ஆகவில்லை. எனக்குக் கொடுமை இழைத்தவர்களைப் பழி வாங்கவேண்டும் என்ற நோக்கத்துடன்தான் துப்பாக்கி ஏந்தினேன். எனவே கொள்ளைக்காரியாக இருந்ததில் எனக்குத் துளியும் வருத்தமில்லை" என்றார்..அரசியல்வாதிகள் பற்றிய பூலான் தேவியின் நக்கலான கமெண்ட்:."காட்டில் இருக்கும்போது அடித்தால் 'கொள்ளை' என்கிறார்கள். நாட்டில் அதையே இவர்கள் செய்தால் 'ஊழல்' என்று சொல்லி விடுகிறார்கள். அவர்களுக்கு சட்டம், தண்டனை கொடுக்கிறது; ஆனால் இவர்களுக்கு?"."சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பற்றிக் கேள்விப்பட்டிருக் கிறீர்களா?" என்று கேட்டதும்,."ம்… தெரியும்" என்றார்..வீரப்பன் கூட, தன் மீதுள்ள வழக்குகள் எல்லாவற்றையும் வாபஸ் வாங்கி, தனக்கு பொது மன்னிப்பு தர வேண்டும் என்று கேட்கிறானே?" என்று சொன்னவுடன் பட்டென்று பூலான் தேவி, ."வீரப்பன் முதலில் சரணடையட்டும்! அதன் பிறகு பொது மன்னிப்பு பற்றிப் பேசட்டும்! " என்றார்..பேட்டியில் இடம்பெற்ற இந்த கடைசி கேள்விக்கு ஒரு சுவாரசியமான ஃபாலோ-அப் நிகழ்ந்தது. நக்கீரன் கோபால் காட்டுக்குள் சென்று வீரப்பனை சந்தித்தபோது, பூலான் தேவி அவனைப் பற்றி சொன்ன கமெண்டை வீரப்பனிடம் சொல்ல, அதற்கு வீரப்பனின் ரியாக்க்ஷன் என்ன தெரியுமா?."அவ இப்ப பாலிடிஷியன் இல்லையா? அப்படித்தான் பேசுவா!".(தொடரும்)