– ஆதித்யா.உக்ரமான போர்.கடந்த மூன்று வாரங்களாக உக்ரைனில் நடந்து வரும் போர் உலக நாடுகளை கவலைகொள்ளச் செய்திருக்கிறது. வலிமை வாய்ந்த ஆயுதங்களுடன் போரில் இறங்கி ரஷ்யா சில நாட்களில் உக்ரைனை வீழ்த்திவிடும் என்ற எண்ணம் தான் பரவலாகயிருந்தது. மாறாக உக்ரைனின் படைகள் மிகத்துணிவுடன் போரில் ரஷ்ய தாக்குதல்களைச் சந்தித்து கொண்டிருக்கிறது..உலக அளவில் பொருளாதார நெருக்கடிகள் ஒருபுறமும், உக்ரைன் போரில் எதிர்பார்த்த அளவுக்கு படைகளின் முன்னேற்றம் இல்லாதது இன்னொரு புறம் என நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் நிலையில், உள்நாட்டிலும் ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிரான அலை வீசுவது பெரும் வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது..அண்மையில் கட்சியின் உயர்மட்ட கூட்டம் ஒன்றில், உக்ரைன் போரை எதிர்த்து உள்நாட்டில் போராடுபவர்களைப் பற்றி அதிபர் புடின் குறிப்பிடுகையில், 'ரஷ்ய மக்கள் எப்போதுமே உண்மையான தேச பக்தர்களையும், துரோகிகளையும் வேறுப்படுத்தி பார்க்கத் தெரிந்தவர்கள். இந்த துரோகிகள் கொசுக்களைப் போன்றவர்கள். தவறுதலாக வாயில் புகுந்த இந்த கொசுக்களை ரஷ்ய மக்கள், போகிற போக்கில் ரோட்டில் துப்பி நசுக்கிவிடுவார்கள்,' என்றார். அரசுக்கு எதிராக போராடுபவர்களை மிரட்டும் தொனியில் அதிபர் புடின் பேசியிருப்பது அவரது மனநிலையைக் காட்டுகிறது.அணு ஆயுதப் போராக மாறிவிடுமா?.நீண்ட நாட்களுக்கு போர் நீடித்தால் ரஷ்யா அணு ஆயுதம் பயன்படுத்தும்: உக்ரைன் போர் நிலவரம் பற்றி அமெரிக்க ராணுவத்தின் உளவுத்துறை, ஒரு 67 பக்க அறிக்கையை பென்டகனில் சமர்ப்பித்துள்ளது. அதில், 'உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷ்ய படைகள் நீண்ட காலத்துக்கு ஆக்கிரமித்து இருந்தால் அதன் படைகள் சோர்வடையும். போரினால் அதன் நவீன ஆயுதங்கள் காலியாகி வருகின்றன. பொருளாதார தடைகள் காரணமாக இந்த ஆயுதங்களை அந்த நாட்டினால் உடனடியாக தயாரிக்க முடியாது. மேலும், உலக நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகள், உலகத்தில் இருந்து தனிமைப்படுத்தப்படுவது போன்றவை ரஷ்யாவுக்கு நீண்ட கால பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும். இது அந்த நாட்டுக்கு விரக்தியை ஏற்படுத்தும். எனவே, உக்ரைன் படைகளின் கடும் எதிர்ப்பால் நீண்ட நாட்களுக்கு போர் நீடித்தால், அதை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்தக் கூடும்,' என கூறப்பட்டுள்ளது..ஏன் இந்தியா அமைதி காக்கிறது?.உலகின் பல நாடுகள் போரில் ரஷ்யாவின் நிலையை கண்டித்து வருகின்றன. ஆனால் இந்தியா முதல் கட்டங்களில் எந்தவித நிலைப்பாட்டையும் அறிவிக்க வில்லை. இந்த அமைதியும் பல நாடுகளில் விமர்சனத்துக்குள்ளானது..உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைக் கண்டித்து, ஐக்கிய நாடுகள் பொது அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, வாக்கெடுப்பிலிருந்து விலகி நின்ற 35 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உக்ரைன் போர் தொடர்பாக 'ஐ.நா. பொது அவையைக் கூட்ட வேண்டும்' என்ற பாதுகாப்பு அவையின் வாக்கெடுப்பிலும் இந்தியா கலந்துகொள்ளவில்லை..நாம் வெறும் வாய்ப்பேச்சு வீரர்களா?.'உக்ரைன் மீதான குண்டுவீச்சுத் தாக்குதலை நிறுத்த வேண்டும்' என்று ரஷ்யாவை வற்புறுத்துமாறு காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்கள் மத்திய அரசைக் கேட்டுக்கொண்டதோடு, 'இந்தியா தனது வாய்ப்பேச்சு சமாதானங்களை நிறுத்திக்கொள்ள வேண்டும்' என்றும் விமர்சித்தனர். இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில், அயலுறவுத் துறை சார்ந்து எடுக்கப்படும் எந்தவொரு முடிவும் எதிர்க் கட்சிகளின் விமர்சனத்தையும் சந்தித்துதான் ஆக வேண்டும்..நான்கு மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றிபெற்றதை அடுத்து, கட்சித் தொண்டர்களுக்கிடையே பேசிய பிரதமர் மோடி, முதல் முறையாக வாய் திறந்தார். உக்ரைன் போர் குறித்துப் பேசும்போது, 'எப்போதும் அமைதியின் பக்கமே இந்தியா நிற்கிறது என்று குறிப்பிட்டிருப்பதோடு, அனைத்துச் சிக்கல்களும் பேச்சுவார்த்தைகளின் மூலமாகத் தீர்க்க முடியும்' என்ற நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார்..போருடன் தொடர்புடைய இரு நாடுகளுமே இந்தியாவுடன் பொருளாதாரம், பாதுகாப்பு, உயர்கல்வி, அரசியல் தொடர்புகளைக் கொண்டவையாக அமைந்துள்ளன என்பதையும் அவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்..போர் நடவடிக்கைக்கு எதிராகக் கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றுவதிலிருந்து இந்தியா விலகி நின்றதற்கு மற்ற நாடுகளைவிட அது எதிர்கொண்டிருந்த சவால்களே முக்கியமான காரணம்..ஆயிரக்கணக்கான மாணவர்கள் போர்ப் பதற்றம் நிறைந்த பகுதிகளில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த நிலையில், இந்தியாவின் ஒரே நோக்கம் 'அம்மாணவர்கள் பாதுகாப்புடன் நாடு திரும்ப வேண்டும்' என்பதாகவே இருந்தது. மாணவர்களைப் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வரும் பணியில் 50-க்கும் மேற்பட்ட ரஷ்ய மொழி பேசும் வெளியுறவுத் துறை அதிகாரிகளை ஈடுபடுத்தியதோடு சூழலுக்கேற்ப உடனடி முடிவுகளை எடுக்க வசதியாக வெளியுறவு இணைச்செயலர் தலைமையில் சிறப்புக் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது. நாடு திரும்ப விரும்பும் மாணவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்..இந்திய வல்லரசு.'இந்தியா வல்லரசாக வேண்டும்' என்ற விவாதம் வலுத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பெரும் வல்லரசுகள் மட்டும் இதுநாள் வரை செய்து வந்த ஒரு காரியத்தை இந்தப் போரில் இந்தியா செய்து காட்டியிருக்கிறது.."ரஷ்ய அதிபர் புடின், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இருவரோடும் ஒரே நாளில் அடுத்தடுத்து இந்தியப் பிரதமரால் தொலைபேசி வழியாக உரையாட முடிகிறது என்பதும் அமைதி குறித்த விருப்பத்தை அவர்களிடம் வெளிப்படுத்த முடிகிறது" என்பதும் வெளியுறவுத் துறையில் இந்தியாவின் நேர்த்தியான அணுகுமுறை..உக்ரைன் விவகாரத்தில் இந்தியா கடைப்பிடித்துவரும் நடுநிலைமைக்குப் பின்னால், வெளியுறவுத் துறையின் தொலைநோக்குப் பார்வையும் இருக்கிறது. இந்தியாவின் வெளியுறவு கொள்கைகளை இப்படி ஒரு தொலை நோக்குடன் வடிவமைத்த இந்தியாவின் முதல் பிதமர் ஜவஹர்லால் நேருவிற்கு அவர் மீது அனாவசியப் பழிகளைச் சுமத்தும் இந்த அரசு மட்டுமில்லை, இனி வரப்போகும் அரசுகளும் நன்றி சொல்ல வேண்டும். பிரதமர் மோடி அரசில்லாமல் வேறு அரசு ஆட்சியிலிருந்தாலும் இதைத்தான் செய்திருக்க முடியும்..வெளியுறவு விவகாரங்களில் இந்தியா தனது ஒவ்வொரு அடியையும் கவனத்தோடு எடுத்துவைத்துக் கொண்டிருக்கிறது. இன்றைய எதிர்கட்சிகள் சொல்வதைப் போல வெறும் வாய்ப்பேச்சுகள் இல்லை, வலிமையான பேச்சுக்கள் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
– ஆதித்யா.உக்ரமான போர்.கடந்த மூன்று வாரங்களாக உக்ரைனில் நடந்து வரும் போர் உலக நாடுகளை கவலைகொள்ளச் செய்திருக்கிறது. வலிமை வாய்ந்த ஆயுதங்களுடன் போரில் இறங்கி ரஷ்யா சில நாட்களில் உக்ரைனை வீழ்த்திவிடும் என்ற எண்ணம் தான் பரவலாகயிருந்தது. மாறாக உக்ரைனின் படைகள் மிகத்துணிவுடன் போரில் ரஷ்ய தாக்குதல்களைச் சந்தித்து கொண்டிருக்கிறது..உலக அளவில் பொருளாதார நெருக்கடிகள் ஒருபுறமும், உக்ரைன் போரில் எதிர்பார்த்த அளவுக்கு படைகளின் முன்னேற்றம் இல்லாதது இன்னொரு புறம் என நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் நிலையில், உள்நாட்டிலும் ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிரான அலை வீசுவது பெரும் வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது..அண்மையில் கட்சியின் உயர்மட்ட கூட்டம் ஒன்றில், உக்ரைன் போரை எதிர்த்து உள்நாட்டில் போராடுபவர்களைப் பற்றி அதிபர் புடின் குறிப்பிடுகையில், 'ரஷ்ய மக்கள் எப்போதுமே உண்மையான தேச பக்தர்களையும், துரோகிகளையும் வேறுப்படுத்தி பார்க்கத் தெரிந்தவர்கள். இந்த துரோகிகள் கொசுக்களைப் போன்றவர்கள். தவறுதலாக வாயில் புகுந்த இந்த கொசுக்களை ரஷ்ய மக்கள், போகிற போக்கில் ரோட்டில் துப்பி நசுக்கிவிடுவார்கள்,' என்றார். அரசுக்கு எதிராக போராடுபவர்களை மிரட்டும் தொனியில் அதிபர் புடின் பேசியிருப்பது அவரது மனநிலையைக் காட்டுகிறது.அணு ஆயுதப் போராக மாறிவிடுமா?.நீண்ட நாட்களுக்கு போர் நீடித்தால் ரஷ்யா அணு ஆயுதம் பயன்படுத்தும்: உக்ரைன் போர் நிலவரம் பற்றி அமெரிக்க ராணுவத்தின் உளவுத்துறை, ஒரு 67 பக்க அறிக்கையை பென்டகனில் சமர்ப்பித்துள்ளது. அதில், 'உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷ்ய படைகள் நீண்ட காலத்துக்கு ஆக்கிரமித்து இருந்தால் அதன் படைகள் சோர்வடையும். போரினால் அதன் நவீன ஆயுதங்கள் காலியாகி வருகின்றன. பொருளாதார தடைகள் காரணமாக இந்த ஆயுதங்களை அந்த நாட்டினால் உடனடியாக தயாரிக்க முடியாது. மேலும், உலக நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகள், உலகத்தில் இருந்து தனிமைப்படுத்தப்படுவது போன்றவை ரஷ்யாவுக்கு நீண்ட கால பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும். இது அந்த நாட்டுக்கு விரக்தியை ஏற்படுத்தும். எனவே, உக்ரைன் படைகளின் கடும் எதிர்ப்பால் நீண்ட நாட்களுக்கு போர் நீடித்தால், அதை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்தக் கூடும்,' என கூறப்பட்டுள்ளது..ஏன் இந்தியா அமைதி காக்கிறது?.உலகின் பல நாடுகள் போரில் ரஷ்யாவின் நிலையை கண்டித்து வருகின்றன. ஆனால் இந்தியா முதல் கட்டங்களில் எந்தவித நிலைப்பாட்டையும் அறிவிக்க வில்லை. இந்த அமைதியும் பல நாடுகளில் விமர்சனத்துக்குள்ளானது..உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைக் கண்டித்து, ஐக்கிய நாடுகள் பொது அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, வாக்கெடுப்பிலிருந்து விலகி நின்ற 35 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உக்ரைன் போர் தொடர்பாக 'ஐ.நா. பொது அவையைக் கூட்ட வேண்டும்' என்ற பாதுகாப்பு அவையின் வாக்கெடுப்பிலும் இந்தியா கலந்துகொள்ளவில்லை..நாம் வெறும் வாய்ப்பேச்சு வீரர்களா?.'உக்ரைன் மீதான குண்டுவீச்சுத் தாக்குதலை நிறுத்த வேண்டும்' என்று ரஷ்யாவை வற்புறுத்துமாறு காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்கள் மத்திய அரசைக் கேட்டுக்கொண்டதோடு, 'இந்தியா தனது வாய்ப்பேச்சு சமாதானங்களை நிறுத்திக்கொள்ள வேண்டும்' என்றும் விமர்சித்தனர். இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில், அயலுறவுத் துறை சார்ந்து எடுக்கப்படும் எந்தவொரு முடிவும் எதிர்க் கட்சிகளின் விமர்சனத்தையும் சந்தித்துதான் ஆக வேண்டும்..நான்கு மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றிபெற்றதை அடுத்து, கட்சித் தொண்டர்களுக்கிடையே பேசிய பிரதமர் மோடி, முதல் முறையாக வாய் திறந்தார். உக்ரைன் போர் குறித்துப் பேசும்போது, 'எப்போதும் அமைதியின் பக்கமே இந்தியா நிற்கிறது என்று குறிப்பிட்டிருப்பதோடு, அனைத்துச் சிக்கல்களும் பேச்சுவார்த்தைகளின் மூலமாகத் தீர்க்க முடியும்' என்ற நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார்..போருடன் தொடர்புடைய இரு நாடுகளுமே இந்தியாவுடன் பொருளாதாரம், பாதுகாப்பு, உயர்கல்வி, அரசியல் தொடர்புகளைக் கொண்டவையாக அமைந்துள்ளன என்பதையும் அவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்..போர் நடவடிக்கைக்கு எதிராகக் கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றுவதிலிருந்து இந்தியா விலகி நின்றதற்கு மற்ற நாடுகளைவிட அது எதிர்கொண்டிருந்த சவால்களே முக்கியமான காரணம்..ஆயிரக்கணக்கான மாணவர்கள் போர்ப் பதற்றம் நிறைந்த பகுதிகளில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த நிலையில், இந்தியாவின் ஒரே நோக்கம் 'அம்மாணவர்கள் பாதுகாப்புடன் நாடு திரும்ப வேண்டும்' என்பதாகவே இருந்தது. மாணவர்களைப் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வரும் பணியில் 50-க்கும் மேற்பட்ட ரஷ்ய மொழி பேசும் வெளியுறவுத் துறை அதிகாரிகளை ஈடுபடுத்தியதோடு சூழலுக்கேற்ப உடனடி முடிவுகளை எடுக்க வசதியாக வெளியுறவு இணைச்செயலர் தலைமையில் சிறப்புக் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது. நாடு திரும்ப விரும்பும் மாணவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்..இந்திய வல்லரசு.'இந்தியா வல்லரசாக வேண்டும்' என்ற விவாதம் வலுத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பெரும் வல்லரசுகள் மட்டும் இதுநாள் வரை செய்து வந்த ஒரு காரியத்தை இந்தப் போரில் இந்தியா செய்து காட்டியிருக்கிறது.."ரஷ்ய அதிபர் புடின், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இருவரோடும் ஒரே நாளில் அடுத்தடுத்து இந்தியப் பிரதமரால் தொலைபேசி வழியாக உரையாட முடிகிறது என்பதும் அமைதி குறித்த விருப்பத்தை அவர்களிடம் வெளிப்படுத்த முடிகிறது" என்பதும் வெளியுறவுத் துறையில் இந்தியாவின் நேர்த்தியான அணுகுமுறை..உக்ரைன் விவகாரத்தில் இந்தியா கடைப்பிடித்துவரும் நடுநிலைமைக்குப் பின்னால், வெளியுறவுத் துறையின் தொலைநோக்குப் பார்வையும் இருக்கிறது. இந்தியாவின் வெளியுறவு கொள்கைகளை இப்படி ஒரு தொலை நோக்குடன் வடிவமைத்த இந்தியாவின் முதல் பிதமர் ஜவஹர்லால் நேருவிற்கு அவர் மீது அனாவசியப் பழிகளைச் சுமத்தும் இந்த அரசு மட்டுமில்லை, இனி வரப்போகும் அரசுகளும் நன்றி சொல்ல வேண்டும். பிரதமர் மோடி அரசில்லாமல் வேறு அரசு ஆட்சியிலிருந்தாலும் இதைத்தான் செய்திருக்க முடியும்..வெளியுறவு விவகாரங்களில் இந்தியா தனது ஒவ்வொரு அடியையும் கவனத்தோடு எடுத்துவைத்துக் கொண்டிருக்கிறது. இன்றைய எதிர்கட்சிகள் சொல்வதைப் போல வெறும் வாய்ப்பேச்சுகள் இல்லை, வலிமையான பேச்சுக்கள் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.