"பாய்! பாய்! வந்தவாசி கோரைப் பாய் ஜோடி முன்னூறு ரூவா!" தொண்டை கிழிய கத்திக்கொண்டே சைக்கிளில் போனான் பாய் விற்பவன்.."வெயில் காலம் வந்துருச்சே! கீழே படுத்துக்க கோரைப்பாய் இருந்தா குளுமையா இருக்குமே!" என்று சொல்லிக் கொண்டே உள்ளேயிருந்து வாசலுக்கு வந்தாள் சீதா..தோட்டத்தில் பூச்செடிகளிலிருந்து இலைகளையெல்லாம் கழித்து, கீழே விழுந்து கிடக்கும் சருகுகளையெல்லாம் கூட்டி சுத்தம் செய்து கொண்டிருந்த அவள் கணவன் சங்கர், "அவனைக் கூப்பிடவா?" என்று கேட்டு தெருவுக்கு வந்து இரு கைகளையும் தட்டி "பாய்! பாய்!" என்று கூப்பிட்டான்.."மணி பன்னெண்டாகப் போறது. சாப்பிடற நேரமாச்சு. இந்த நேரத்தில் ஏன் இந்த வேலைய செய்யறீங்க?" என்று அவனை கடிந்து கொண்டபடி தெருவில் இறங்கிய சீதா எதிர்த் தெருவிலிருந்து சங்கர் குரல் கேட்டுத் திரும்பிய பாய்க்காரனைப் பார்த்து கைகளை ஆட்டி இந்தப் பக்கம் வரும்படி கூப்பிட்டாள்..சைக்கிளை ஓட்டிக் கொண்டு வந்த பாய்க்காரன் வாலிப வயதில்தான் இருந்தான்..வாசல் வராந்தாவில் பாய்க் கட்டை இறக்கி வைத்தான்.புதுப் பாயின் வாசம் அந்த இடம் முழுவதும் பரவிற்று.."எப்படிப்பா?" என்றாள் சீதா ஒரு பாயைத் தடவிப் பார்த்தபடியே.."இருங்கம்மா!" என்று பாயை முழுவதுமாக விரித்துக் காண்பித்தான் அந்தப் பையன். ஓரக்கால்களில் துணி வைத்து தைக்கப்பட்டிருந்தது.."ஜோடி முன்னூறு ரூவாதாம்மா! எத்தினி ஜோடி வேணும் ஒங்களுக்கு?"."நா என்ன ஊர் முழுசுக்குமா வாங்கப் போறேன்? எனக்கு மட்டும் தாம்ப்பா. ஒரு ஜோடி போதும். ஆனா… விலை தான் இடிக்குது. ரொம்ப ஜாஸ்தி சொல்றியே?" என்றாள் முகத்தை சுழித்தபடி.."இல்லம்மா. ஒரே விலைதாம்மா!" என்றான் பாய்க்காரன்.."இல்லையே! போன வாரம் கூட ஒரு பாய்க்காரர் போனாரே. அவரு ஜோடி இருநூறுதானே சொன்னார்?" என்றாள் சீதா தடாலடியாக..இப்போது பாய்க்காரன் குரல் தணிந்தது.."இந்த ஏரியாவுல வருஷக்கணக்கா வர்ற ஒரே பாய் விக்கற ஆள்நான்தாம்மா!" என்றான்.."கொஞ்ச நாள் முன்னால கூட சைக்கிள் பின்னாலேயே ஒரு அம்மாவும் நடந்து வருவாங்க. ஒரு பாய்க்காரர் போறதை நான் பார்த்திருக்கேனே?" என்றாள் சீதா பிடித்த பிடியை விடாமல்..பாய்க்காரன் சிரித்தான்.."அது நானும் என் சம்சாரமும்தாம்மா!" என்றான்.."இப்போ எங்கே அவுங்களைக் காணும்?"."அவுங்களுக்கு பிரசவமாயிருக்கு." பாய்க்காரன் முகத்தில் வெட்கத்தின் சாயல்.."அடடே! என்ன குழந்தை?" தனக்குக் குழந்தையில்லாத ஏக்கம் தன் குரலில் வெளிப்படுகிறதோ என்கிற சந்தேகத்தோடே தான் சீதா பேசினாள்.."பொண்ணும்மா!"."ரொம்ப சந்தோஷம்ப்பா! சரி! வெலையைச் சொல்லு! ஜோடி இருநூறு ரூவாக்குத் தருவியா?"."இருநூத்தி எழுபத்தஞ்சுக்கு வேணா குடுக்கறேன்"."இருநூத்தி இருபத்தைஞ்சு?"."இல்லேம்மா… கட்டுபடியாகாதும்மா!"."கடைசி விலை ….. இருநூத்தி ஐம்பதுன்னா வேணா பார்க்கலாம்…. இல்லேன்னா எடுத்துக்கிட்டுப் போய்கிட்டே இரு!" சீதா உள்ளே திரும்ப யத்தனித்தாள்.."வாங்கம்மா! காலையிலிருந்து போணியே ஆகல. நீங்க கேக்குற விலைக்கே எடுத்துக்கோங்கம்மா!"."அதுதான் சரியான விலையா இருக்கும். அதான் குடுக்கறேன்னு சொல்றே. இல்லேன்னா ஒத்துப்பியா?" சீதா விடாமல் வாதாடினாள்..'எதுக்கு இப்படி?' என்பதுபோல ஒரு பார்வை பார்த்தான் சங்கர் அவளை..பாய்க்காரப் பையன் பதிலே கூறாமல் பாய்க்கட்டிலிருந்து ரெண்டு பாய்களை உருவி அவளிடம் கொடுத்து விட்டு அப்படியே அசந்து போய் கீழே உட்கார்ந்தான். அதை ஏற இறங்க பார்த்தபடியே வாங்கிக் கொண்ட சீதா ஒரு நிமிடம் அவனை ஏறிட்டாள்.."ஏம்ப்பா? ஏதாவது சாப்ட்டியா? முகமே வாடிப்போயிருக்கு!" என்றாள் பரிவாக.."இனிமே தாம்மா ஏதாவது வாங்கி சாப்பிடணும்" என்றான் பையன்.."இரு! இரு! " என்று உள்ளே சென்றவள் ஒரு பாக்கு மட்டை தட்டில் சாதம் போட்டு குழம்பு ஊற்றி கொண்டு வந்தாள். மற்றொரு கையில் ஒரு சொம்பில் குடிக்க தண்ணீரும் இருந்தது. பாய்க்காரன் அதை ஆவலோடு பெற்றுக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தான்.."கொழந்த பொறந்திருக்குன்னு சொன்னியே, அதுக்கு ஏணை கட்டத் துணி ஏதாவது வேணுமா?" என்றாள்.."ஏதாச்சும் இருந்திச்சின்னா குடுங்கம்மா!".சீதா வேகமாக உள்ளே சென்று ஒரு காட்டன் புடைவையோடு திரும்பினாள்.."இது நல்ல மொரட்டு காட்டன் துணி. இதுல ஏணை கட்டிப் போடச் சொல்லு. நல்லா தாங்கும்" என்றவள், "ஒன் சம்சாரம் பழைய புடைவை குடுத்தா கட்டுவாங்களா?" என்று விசாரித்தாள்.."சந்தோஷமா கட்டிப்பாம்மா" என்ற பாய்க்காரனின் முகம் சந்தோஷத்தில் மலர்ந்தது..உள்ளேயிருந்து ரெண்டு வாயில் புடைவைகளும் அத்துடன் நாலஞ்சு ஜாக்கெட் துணிகளும் கொண்டு வந்து குடுத்தாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்த சங்கரிடம், "உங்க பழைய வேஷ்டி கிடக்குமே? ரெண்டு மூணு இருந்தா குடுங்களேன். குழந்தைய கீழே பாயில் போட்டா அது மேல விரிச்சா குழந்தைக்கு மெத்துன்னு இதமா இருக்கும்" என்றாள்..சங்கர் உள்ளேயிருந்து கை நிறைய நாலைந்து பழைய வேஷ்டிகளுடன் வர, முகம் மலர அதை வாங்கிக் கொண்ட சீதா,"இதையெல்லாம் போட ஒரு கட்டைப்பை கொண்டு வாங்களேன்" என்றாள்..சாப்பிட்டு முடித்து கை கழுவிக் கொண்டிருந்த பாய்க்காரனிடம், "உன் சம்சாரம் வீட்ல சாப்பிட்டிருப்பாங்களா?" என்று வினவினாள்.."நான் போய் தாம்மா அதுக்கு ஏதாச்சும் வாங்கிக் குடுக்கணும்" என்று பதிலளித்த பாய்க்காரன் கையில் சில விநாடிகளில் ஒரு ப்ளாஸ்டிக் டப்பாவில் சாம்பார் சாதம் போட்டுக் கொடுத்தாள். ஒரு விநாடி யோசித்து விட்டு திரும்ப உள்ளே சென்று வந்தவள் கையில் ஒரு முழு பிரட் பாக்கெட், நாலு வாழைப்பழங்கள் இருந்தன.."பிள்ளைப் பெத்தவ பட்டினியா இருக்கக்கூடாதுப்பா! பசிக்குறப்ப ரெண்டு பிரட் துண்டு சாப்பிடச் சொல்லு. சரியா?".பாய்க்காரன் எல்லாவற்றையும் அடுக்கி கட்டை பிடி போட்ட பையில் வைத்துக் கொண்டான்.."ரொம்ப நன்றிம்மா. நான் வரேம்மா!" என்று விடைபெற்றுக்கொள்ள,."அடடா! இந்தா. காசு வாங்காம போறியே?" சீதா அவன் கையில் பணத்தைக் கொடுத்தாள்.."பாவம்! பசியாயிருந்தான். நல்ல வேளை இன்னிக்கி சீக்கிரம் சமைச்சதால அவன் பசிக்கு ஏதோ கொடுக்க முடிஞ்சிது. நமக்கு சாதம் இனிமே தான் வைக்கணும். கொஞ்சம் இருங்க!" என்று சொல்லியபடி பரபரப்பாக சமையலறையில் நுழைந்தாள்..அடுப்பில் குக்கரை ஏற்றியவாறே சங்கரை பெருமிதமாக ஒரு பார்வை பார்த்தாள்.."பார்த்தீங்களா? எப்படி பேரம் பேசி ஐம்பது ரூவா கொறச்சு வாங்கினேன்னு? நீங்களா இருந்தா அவன் கேட்ட விலை அப்படியே கொடுத்து வாங்கியிருப்பீங்க! சரியான ஏமாந்தாங்குளி!" என்றாள் கேலியாக..சங்கர் வாயடைத்துப் போய் அவளையே பிரமிப்பாக பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.
"பாய்! பாய்! வந்தவாசி கோரைப் பாய் ஜோடி முன்னூறு ரூவா!" தொண்டை கிழிய கத்திக்கொண்டே சைக்கிளில் போனான் பாய் விற்பவன்.."வெயில் காலம் வந்துருச்சே! கீழே படுத்துக்க கோரைப்பாய் இருந்தா குளுமையா இருக்குமே!" என்று சொல்லிக் கொண்டே உள்ளேயிருந்து வாசலுக்கு வந்தாள் சீதா..தோட்டத்தில் பூச்செடிகளிலிருந்து இலைகளையெல்லாம் கழித்து, கீழே விழுந்து கிடக்கும் சருகுகளையெல்லாம் கூட்டி சுத்தம் செய்து கொண்டிருந்த அவள் கணவன் சங்கர், "அவனைக் கூப்பிடவா?" என்று கேட்டு தெருவுக்கு வந்து இரு கைகளையும் தட்டி "பாய்! பாய்!" என்று கூப்பிட்டான்.."மணி பன்னெண்டாகப் போறது. சாப்பிடற நேரமாச்சு. இந்த நேரத்தில் ஏன் இந்த வேலைய செய்யறீங்க?" என்று அவனை கடிந்து கொண்டபடி தெருவில் இறங்கிய சீதா எதிர்த் தெருவிலிருந்து சங்கர் குரல் கேட்டுத் திரும்பிய பாய்க்காரனைப் பார்த்து கைகளை ஆட்டி இந்தப் பக்கம் வரும்படி கூப்பிட்டாள்..சைக்கிளை ஓட்டிக் கொண்டு வந்த பாய்க்காரன் வாலிப வயதில்தான் இருந்தான்..வாசல் வராந்தாவில் பாய்க் கட்டை இறக்கி வைத்தான்.புதுப் பாயின் வாசம் அந்த இடம் முழுவதும் பரவிற்று.."எப்படிப்பா?" என்றாள் சீதா ஒரு பாயைத் தடவிப் பார்த்தபடியே.."இருங்கம்மா!" என்று பாயை முழுவதுமாக விரித்துக் காண்பித்தான் அந்தப் பையன். ஓரக்கால்களில் துணி வைத்து தைக்கப்பட்டிருந்தது.."ஜோடி முன்னூறு ரூவாதாம்மா! எத்தினி ஜோடி வேணும் ஒங்களுக்கு?"."நா என்ன ஊர் முழுசுக்குமா வாங்கப் போறேன்? எனக்கு மட்டும் தாம்ப்பா. ஒரு ஜோடி போதும். ஆனா… விலை தான் இடிக்குது. ரொம்ப ஜாஸ்தி சொல்றியே?" என்றாள் முகத்தை சுழித்தபடி.."இல்லம்மா. ஒரே விலைதாம்மா!" என்றான் பாய்க்காரன்.."இல்லையே! போன வாரம் கூட ஒரு பாய்க்காரர் போனாரே. அவரு ஜோடி இருநூறுதானே சொன்னார்?" என்றாள் சீதா தடாலடியாக..இப்போது பாய்க்காரன் குரல் தணிந்தது.."இந்த ஏரியாவுல வருஷக்கணக்கா வர்ற ஒரே பாய் விக்கற ஆள்நான்தாம்மா!" என்றான்.."கொஞ்ச நாள் முன்னால கூட சைக்கிள் பின்னாலேயே ஒரு அம்மாவும் நடந்து வருவாங்க. ஒரு பாய்க்காரர் போறதை நான் பார்த்திருக்கேனே?" என்றாள் சீதா பிடித்த பிடியை விடாமல்..பாய்க்காரன் சிரித்தான்.."அது நானும் என் சம்சாரமும்தாம்மா!" என்றான்.."இப்போ எங்கே அவுங்களைக் காணும்?"."அவுங்களுக்கு பிரசவமாயிருக்கு." பாய்க்காரன் முகத்தில் வெட்கத்தின் சாயல்.."அடடே! என்ன குழந்தை?" தனக்குக் குழந்தையில்லாத ஏக்கம் தன் குரலில் வெளிப்படுகிறதோ என்கிற சந்தேகத்தோடே தான் சீதா பேசினாள்.."பொண்ணும்மா!"."ரொம்ப சந்தோஷம்ப்பா! சரி! வெலையைச் சொல்லு! ஜோடி இருநூறு ரூவாக்குத் தருவியா?"."இருநூத்தி எழுபத்தஞ்சுக்கு வேணா குடுக்கறேன்"."இருநூத்தி இருபத்தைஞ்சு?"."இல்லேம்மா… கட்டுபடியாகாதும்மா!"."கடைசி விலை ….. இருநூத்தி ஐம்பதுன்னா வேணா பார்க்கலாம்…. இல்லேன்னா எடுத்துக்கிட்டுப் போய்கிட்டே இரு!" சீதா உள்ளே திரும்ப யத்தனித்தாள்.."வாங்கம்மா! காலையிலிருந்து போணியே ஆகல. நீங்க கேக்குற விலைக்கே எடுத்துக்கோங்கம்மா!"."அதுதான் சரியான விலையா இருக்கும். அதான் குடுக்கறேன்னு சொல்றே. இல்லேன்னா ஒத்துப்பியா?" சீதா விடாமல் வாதாடினாள்..'எதுக்கு இப்படி?' என்பதுபோல ஒரு பார்வை பார்த்தான் சங்கர் அவளை..பாய்க்காரப் பையன் பதிலே கூறாமல் பாய்க்கட்டிலிருந்து ரெண்டு பாய்களை உருவி அவளிடம் கொடுத்து விட்டு அப்படியே அசந்து போய் கீழே உட்கார்ந்தான். அதை ஏற இறங்க பார்த்தபடியே வாங்கிக் கொண்ட சீதா ஒரு நிமிடம் அவனை ஏறிட்டாள்.."ஏம்ப்பா? ஏதாவது சாப்ட்டியா? முகமே வாடிப்போயிருக்கு!" என்றாள் பரிவாக.."இனிமே தாம்மா ஏதாவது வாங்கி சாப்பிடணும்" என்றான் பையன்.."இரு! இரு! " என்று உள்ளே சென்றவள் ஒரு பாக்கு மட்டை தட்டில் சாதம் போட்டு குழம்பு ஊற்றி கொண்டு வந்தாள். மற்றொரு கையில் ஒரு சொம்பில் குடிக்க தண்ணீரும் இருந்தது. பாய்க்காரன் அதை ஆவலோடு பெற்றுக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தான்.."கொழந்த பொறந்திருக்குன்னு சொன்னியே, அதுக்கு ஏணை கட்டத் துணி ஏதாவது வேணுமா?" என்றாள்.."ஏதாச்சும் இருந்திச்சின்னா குடுங்கம்மா!".சீதா வேகமாக உள்ளே சென்று ஒரு காட்டன் புடைவையோடு திரும்பினாள்.."இது நல்ல மொரட்டு காட்டன் துணி. இதுல ஏணை கட்டிப் போடச் சொல்லு. நல்லா தாங்கும்" என்றவள், "ஒன் சம்சாரம் பழைய புடைவை குடுத்தா கட்டுவாங்களா?" என்று விசாரித்தாள்.."சந்தோஷமா கட்டிப்பாம்மா" என்ற பாய்க்காரனின் முகம் சந்தோஷத்தில் மலர்ந்தது..உள்ளேயிருந்து ரெண்டு வாயில் புடைவைகளும் அத்துடன் நாலஞ்சு ஜாக்கெட் துணிகளும் கொண்டு வந்து குடுத்தாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்த சங்கரிடம், "உங்க பழைய வேஷ்டி கிடக்குமே? ரெண்டு மூணு இருந்தா குடுங்களேன். குழந்தைய கீழே பாயில் போட்டா அது மேல விரிச்சா குழந்தைக்கு மெத்துன்னு இதமா இருக்கும்" என்றாள்..சங்கர் உள்ளேயிருந்து கை நிறைய நாலைந்து பழைய வேஷ்டிகளுடன் வர, முகம் மலர அதை வாங்கிக் கொண்ட சீதா,"இதையெல்லாம் போட ஒரு கட்டைப்பை கொண்டு வாங்களேன்" என்றாள்..சாப்பிட்டு முடித்து கை கழுவிக் கொண்டிருந்த பாய்க்காரனிடம், "உன் சம்சாரம் வீட்ல சாப்பிட்டிருப்பாங்களா?" என்று வினவினாள்.."நான் போய் தாம்மா அதுக்கு ஏதாச்சும் வாங்கிக் குடுக்கணும்" என்று பதிலளித்த பாய்க்காரன் கையில் சில விநாடிகளில் ஒரு ப்ளாஸ்டிக் டப்பாவில் சாம்பார் சாதம் போட்டுக் கொடுத்தாள். ஒரு விநாடி யோசித்து விட்டு திரும்ப உள்ளே சென்று வந்தவள் கையில் ஒரு முழு பிரட் பாக்கெட், நாலு வாழைப்பழங்கள் இருந்தன.."பிள்ளைப் பெத்தவ பட்டினியா இருக்கக்கூடாதுப்பா! பசிக்குறப்ப ரெண்டு பிரட் துண்டு சாப்பிடச் சொல்லு. சரியா?".பாய்க்காரன் எல்லாவற்றையும் அடுக்கி கட்டை பிடி போட்ட பையில் வைத்துக் கொண்டான்.."ரொம்ப நன்றிம்மா. நான் வரேம்மா!" என்று விடைபெற்றுக்கொள்ள,."அடடா! இந்தா. காசு வாங்காம போறியே?" சீதா அவன் கையில் பணத்தைக் கொடுத்தாள்.."பாவம்! பசியாயிருந்தான். நல்ல வேளை இன்னிக்கி சீக்கிரம் சமைச்சதால அவன் பசிக்கு ஏதோ கொடுக்க முடிஞ்சிது. நமக்கு சாதம் இனிமே தான் வைக்கணும். கொஞ்சம் இருங்க!" என்று சொல்லியபடி பரபரப்பாக சமையலறையில் நுழைந்தாள்..அடுப்பில் குக்கரை ஏற்றியவாறே சங்கரை பெருமிதமாக ஒரு பார்வை பார்த்தாள்.."பார்த்தீங்களா? எப்படி பேரம் பேசி ஐம்பது ரூவா கொறச்சு வாங்கினேன்னு? நீங்களா இருந்தா அவன் கேட்ட விலை அப்படியே கொடுத்து வாங்கியிருப்பீங்க! சரியான ஏமாந்தாங்குளி!" என்றாள் கேலியாக..சங்கர் வாயடைத்துப் போய் அவளையே பிரமிப்பாக பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.