ஒரு கலைஞனின் வாழ்க்கையில் – 22.மம்முட்டி. தமிழில் கே.வி.ஷைலஜா.நோன்பின் நினைவு.படப்பிடிப்பிற்காகத்தான் அந்த ஃபாக்டரிக்குப் போயிருந்தேன். ஷெட்டில் இரண்டு புதிய கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. என் மனதில் லேசான பொறாமை பொங்கி எழுந்தது. "எவன்டா இங்க ரெண்டு வெளிநாட்டுக் காரோட அலையறவன்?" என்ற தலைக்கனம் என்னிலிருந்து மேலெழும்பியது. நான் போய் வண்டியிலிருந்து இறங்கியவுடன் புரொடக்ஷக் ஆட்களும், அந்த நிறுவனப் பணியாட்களும் வந்தார்கள்.."எம்.டி.யோட அறையில் போய் உட்காரலாம். வாங்க" பணியாட்களில் ஒருவன் சொன்னான்.."வேண்டாம். நான் இங்கேயே உக்காந்துக்கறேன்".."இல்ல சார். எம்.டி.யும் உங்களைப் பார்க்கணும்னு சொன்னார்"..சட்டெனப் பொங்கி வந்த எரிச்சலை மறைத்தபடி சொன்னேன். "பாக்கலாமே"..எம்.டி.யிடம் காசிருந்தால் அது அவனுக்கு. எனக்கென்ன இருக்கிறது. சின்னச்சின்ன விஷயங்களுக்குக்கூட பொறாமைப்படும் காலமிது. எவ்வளவு பெரிய ஃபாக்டரி முதலாளியாக இருந்தாலும் அவரிடத்திற்குக் கூப்பிடாமல், இறங்கி வந்தால் என்ன என்றும் தோன்றியது. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டிருக்கும் மம்முட்டியைத்தான் தன் இடத்திற்குக் கூப்பிடுகிறார் என்பது அவருக்குப் புரியவில்லையா?.சிறிது நேரத்திற்குப் பிறகு முதலாளி மாடியிலிருந்து இறங்கி வந்தார். கதரில் வெள்ளை உடையணிந்த மிகவும் குண்டான மனிதர்.."என்னடா நான் கூப்பிட்டா வரமாட்டியா?".அவர் கேட்டவுடன் என் கோபம் உடல் முழுக்கப் பரவி தலைக்கேறி கண்கள் சிவந்தன. இவன் யார் என்னை வாடா போடா என்று பேச?."நீ பெரிய சினிமா நடிகன்தான். எனக்கும் தெரியும், ரொம்ப யோசிக்காம வாடா"."அப்புறம் வரேன்"..உரத்த குரலில் சொன்னேன்.."இவ்ளோ கௌரவத்தோட இருக்காத. நான் யார்னு உனக்குத் தெரியலதான?".இந்தக் கேள்வியில் இழையோடிய அடக்கத்தையும் பிரியத்தையும் நான் ஒருசேரக் கண்டுபிடித்துவிட்டேன்.."நான் பழைய குஞ்ஞுப்புடா".ஃப்ளாஷ்பேக் போல மனதில் இருபத்தைந்து வருடங்கள் பின்னால் ஓடின..என்னுடைய சொந்தக்காரரின் வீட்டு வராந்தாவில் நோன்பு நாட்களில் கண்களில் பசியையும் ஆவலையும் தேக்கிவைத்து, கஞ்சி வாங்கப் பாத்திரமுமாய் காத்து நின்றிருந்த பையனின் முகம் கால ஓட்டத்தின் கை அழிப்பில் மாறாமல் தெளிவாய் தெரிந்தது. நோன்பு நாட்களில் என் சொந்தக்காரர் வீட்டிற்கு நான் எப்போதும் போவேன். ஆனால், மசூதியில்தான் நான் அவனை முதல்முதலாகப் பார்த்தேன். மசூதியில் கடைசித் தொழுகையின்போது அவன் எப்போதுமிருப்பான். என்னிடம் மிகவும் மரியாதையோடு பேசுவான். எனக்குப் பத்து வயதே முடிந்திருந்தாலும் நான் பெரிய வீட்டுப்பையன் என்கிற கர்வத்தோடு அலைந்துக் கொண்டிருந்தேன். வீட்டுவாசலில் நோன்புக் கஞ்சிக்காகப் பாத்திரத்துடன் காத்திருக்கிற அந்தக்கூட்டத்தை மிகுந்த அலட்சியத்தோடும், புறந்தள்ளின பார்வையோடும் பார்த்துவிட்டு உள்ளே போவேன். கண்களில் பசியையும், ஆவலையும் தேக்கி வைத்திருந்த அந்த பையன் இதோ என் முன்னால் விஸ்வரூபமெடுத்து நிற்கிறான்..பிறகு அவர் தான் பட்ட கஷ்டங்களையும், தன் வளர்ச்சியையும் கடவுள் தன்மீது காட்டிய கருணையையும் என்னிடம் பகிர்ந்துக் கொண்டார். இப்போது அவரிடம் இது போன்ற ஐந்து ஃபாக்டரிகள் இருக்கிறது. தம்பிகளும் சில நிறுவனங்களைப் பார்த்துக் கொள்கிறார்கள். சகோதரிகளைப் பெரிய இடத்தில் கல்யாணம் செய்து கொடுத்திருக்கிறார். கற்பனைக்கும் எட்ட முடியாத அளவில் தன் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தி இருக்கிறார். பலமுறை உலக நாடுகளுக்குப் பயணித்திருக்கிறார். ஆனால் உடல் ரீதியாக சர்க்கரை, ரத்தஅழுத்தம், அல்சர் போன்ற வியாதிகள் இருப்பதால் விரும்பியதைச் சாப்பிட முடியவில்லை. டாக்டர்கள் அறிவுறுத்தும் காய்களும் ஒருபிடிச் சோறுமாய் வாழ்க்கை போகிறது. அன்று ஒரு வாய் கஞ்சிக்காகப் பல வீட்டு வாசலில் ஏறி இறங்கிய சிறுவன் இன்று நினைத்ததெல்லாம் கிடைக்கிற வாழ்விலும் பட்டினி கிடக்கிறான்..பழைய கஞ்சிக்கு வீடுவீடாய் பாத்திரம் தூக்கிக்கொண்டு அலையும் அந்தச் சிறுவன் யாரும் யோசிக்கவே முடியாத விதத்தில் இப்படி வளர்ந்து நிற்பதற்கு அவர் எடுத்துக் கொண்ட காலம் மிகக் குறைவானதே. ஒவ்வொரு கஷ்டத்தையும் மன உறுதி கொண்டு மட்டுமே கடந்து சென்ற அவர் உண்மையில் வாழ்க்கையோடு மல்லுக்கட்டி நின்றிருக்கிறார். இளமையில் பட்ட கஷ்டங்களையும் நொம்பலங்களையும் சமாளித்து வாழ்வின் வளர்ச்சியால் அதை ஈடுகட்டியிருக்கிறார். அவருடைய லட்சிய தாகம் ஒருபோதும் மாத சம்பளக்காரனாகவோ ஒரு சொந்த வீட்டைக் கட்டிப் பார்த்துவிடவேண்டும் என்பதிலோ அடங்குவதாய் இல்லை. நினைத்த ஒவ்வொரு விஷயத்தையும் சாதிக்கும் போதும் குஞ்ஞுப்பு தன் அடுத்த லட்சியத்தைக் கூடுதல் உயரத்துக்குத் தூக்கி வைத்தார். பிறகு பின்னாலேயே நூல் பிடித்துப் போய் அதைத் தன்வயப்படுத்தினார். மலை ஏறி உச்சியைத் தொட நினைக்கும் ஒருவன் எப்படி ஒவ்வொரு சிகரத்தை அடையும் போதும் அடுத்த சிகரத்திற்குப் போகக் கூடிய மன, உடல் தைரியத்தை எனக்குக் கொடு என்று பிரார்த்தனை செய்வானோ அந்த மனநிலையில் குஞ்ஞுப்பு இருந்ததாக எனக்குத் தோன்றியது..எம்.டி. வாசுதேவன் நாயரின் புதினங்களில் இப்படியான கதாபாத்திரங்களைப் பார்த்திருந்தாலும் வாழ்க்கையில், நேரில் ரத்தமும் சதையுமாய் அவரைப் பார்த்தபோது வெளிப்படுத்த முடியாத பக்திதான் அவர்மேல் ஏற்பட்டது. அவருடைய கஷ்டத்தை வேறு யாராவது பட்டிருந்தால் தகர்த்து தர்ப்பணமாகிப் போயிருப்பார்கள். பட்டினி கிடக்கும்போதும் குஞ்ஞுப்பு வளமான வாழ்க்கையைக் கனவு கண்டிருந்தார். அவற்றை அடையும் வழியைத் தன் அடங்காப் பசியினூடாகத் தேடிக் கொண்டேயிருந்தார்..இன்றைய குழந்தைகள் தேர்வில் மதிப்பெண் குறைந்தாலே தற்கொலையைப் பற்றி யோசிக்கிறார்கள். அவர்களுக்கு முன்னால் வாழ்வின் போராட்டத்தில் தோல்வியே இல்லை. பொறியியலும் மருத்துவமும் படிக்கும் நல்ல புத்திசாலிகள் என்று நாம் நினைக்கும் குழந்தைகள் கூடச் சின்னச்சின்ன தோல்விகளில் ஏமாற்றங்களில் துவண்டு போகிறார்கள். சாதாரணமாக வீட்டில் திட்டினால்கூட தற்கொலை செய்துகொள்ளும் பிள்ளைகளின் புகைப்படத்தைப் பத்திரிகையில் பார்க்கும்போது, 'இந்தத் தளிர்களுக்கு என்ன நேர்ந்தது?' என மனம் விம்மி வெடிக்கும். தன் மரணம் மூலம் ஊதி அணைப்பது எத்தனையோ பேருடைய கனவுகளை உள்ளடக்கிய வெளிச்சத்தின் திரிதான் என்பது இப்படித் தப்பித்துப் போய்க் கொண்டிருப்பவர்களுக்கு தெரியாது. தகர்த்தெரியப்படுவது பலரின் இதயம் என்பதும் அவர்களுக்குத் தெரியாது. இன்னும் சிலர் தங்களுடைய கோபத்தை, பெற்றோரோடும் சமுதாயத்தோடும் தீர்த்துக்கொள்ள போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதும், குற்றவாளிகளாக மாறவும் செய்கிறார்கள். போதைப் பழக்கத்திலிருந்து மீண்டு வந்த ஒரு இளைஞனின் முகம் என் நினைவில் வருகிறது. வாழ்வில் எல்லாவற்றையும் இழந்து தகர்ந்துபோன முகம். இக்கட்டுகளின் முன்னால் மெழுகுபோலக் கரைந்து ஒழுகுவது தங்களுடைய பெற்றோரின் முகம்தானே தவிர, தோல்விகளின் முகமல்ல என்பதைக் குழந்தைகள் உணர வேண்டும். குஞ்ஞுப்புவின் மன உறுதியின் வெதுவெதுப்பான ஒரு துளி கனப்பு இந்தக் குழந்தைகளுக்கு இருந்தால் அவர்கள் போதைக்குழிக்குள் புதைந்து போயிருக்க மாட்டார்கள்..என் சொந்த ஊர்க்காரனான இந்தப் பழைய பசி தின்னும் கண்களையுடைய பையன் வாழ்வின் கஷ்டங்களை, தன்னுடைய வளர்ச்சியின் சவாலாக ஏற்றுக் கொண்டவன். வரிசையாய் வந்த கஷ்டங்களை அதன் மீதேறி நின்று உதைத்துத் தள்ளி நீந்தி நீந்தி அவர் வெளியே வந்திருக்கிறார். ஏதோ ஒரு கவிஞன் சொன்னதை மனதில் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று நினைக்கிறேன்.."வாழ்க்கை தர மறுக்கும் எல்லாவற்றையும் வாழ்ந்துவாழ்விடமிருந்து நான் வாங்கிக் கொள்வேன்.".(தொடரும்)
ஒரு கலைஞனின் வாழ்க்கையில் – 22.மம்முட்டி. தமிழில் கே.வி.ஷைலஜா.நோன்பின் நினைவு.படப்பிடிப்பிற்காகத்தான் அந்த ஃபாக்டரிக்குப் போயிருந்தேன். ஷெட்டில் இரண்டு புதிய கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. என் மனதில் லேசான பொறாமை பொங்கி எழுந்தது. "எவன்டா இங்க ரெண்டு வெளிநாட்டுக் காரோட அலையறவன்?" என்ற தலைக்கனம் என்னிலிருந்து மேலெழும்பியது. நான் போய் வண்டியிலிருந்து இறங்கியவுடன் புரொடக்ஷக் ஆட்களும், அந்த நிறுவனப் பணியாட்களும் வந்தார்கள்.."எம்.டி.யோட அறையில் போய் உட்காரலாம். வாங்க" பணியாட்களில் ஒருவன் சொன்னான்.."வேண்டாம். நான் இங்கேயே உக்காந்துக்கறேன்".."இல்ல சார். எம்.டி.யும் உங்களைப் பார்க்கணும்னு சொன்னார்"..சட்டெனப் பொங்கி வந்த எரிச்சலை மறைத்தபடி சொன்னேன். "பாக்கலாமே"..எம்.டி.யிடம் காசிருந்தால் அது அவனுக்கு. எனக்கென்ன இருக்கிறது. சின்னச்சின்ன விஷயங்களுக்குக்கூட பொறாமைப்படும் காலமிது. எவ்வளவு பெரிய ஃபாக்டரி முதலாளியாக இருந்தாலும் அவரிடத்திற்குக் கூப்பிடாமல், இறங்கி வந்தால் என்ன என்றும் தோன்றியது. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டிருக்கும் மம்முட்டியைத்தான் தன் இடத்திற்குக் கூப்பிடுகிறார் என்பது அவருக்குப் புரியவில்லையா?.சிறிது நேரத்திற்குப் பிறகு முதலாளி மாடியிலிருந்து இறங்கி வந்தார். கதரில் வெள்ளை உடையணிந்த மிகவும் குண்டான மனிதர்.."என்னடா நான் கூப்பிட்டா வரமாட்டியா?".அவர் கேட்டவுடன் என் கோபம் உடல் முழுக்கப் பரவி தலைக்கேறி கண்கள் சிவந்தன. இவன் யார் என்னை வாடா போடா என்று பேச?."நீ பெரிய சினிமா நடிகன்தான். எனக்கும் தெரியும், ரொம்ப யோசிக்காம வாடா"."அப்புறம் வரேன்"..உரத்த குரலில் சொன்னேன்.."இவ்ளோ கௌரவத்தோட இருக்காத. நான் யார்னு உனக்குத் தெரியலதான?".இந்தக் கேள்வியில் இழையோடிய அடக்கத்தையும் பிரியத்தையும் நான் ஒருசேரக் கண்டுபிடித்துவிட்டேன்.."நான் பழைய குஞ்ஞுப்புடா".ஃப்ளாஷ்பேக் போல மனதில் இருபத்தைந்து வருடங்கள் பின்னால் ஓடின..என்னுடைய சொந்தக்காரரின் வீட்டு வராந்தாவில் நோன்பு நாட்களில் கண்களில் பசியையும் ஆவலையும் தேக்கிவைத்து, கஞ்சி வாங்கப் பாத்திரமுமாய் காத்து நின்றிருந்த பையனின் முகம் கால ஓட்டத்தின் கை அழிப்பில் மாறாமல் தெளிவாய் தெரிந்தது. நோன்பு நாட்களில் என் சொந்தக்காரர் வீட்டிற்கு நான் எப்போதும் போவேன். ஆனால், மசூதியில்தான் நான் அவனை முதல்முதலாகப் பார்த்தேன். மசூதியில் கடைசித் தொழுகையின்போது அவன் எப்போதுமிருப்பான். என்னிடம் மிகவும் மரியாதையோடு பேசுவான். எனக்குப் பத்து வயதே முடிந்திருந்தாலும் நான் பெரிய வீட்டுப்பையன் என்கிற கர்வத்தோடு அலைந்துக் கொண்டிருந்தேன். வீட்டுவாசலில் நோன்புக் கஞ்சிக்காகப் பாத்திரத்துடன் காத்திருக்கிற அந்தக்கூட்டத்தை மிகுந்த அலட்சியத்தோடும், புறந்தள்ளின பார்வையோடும் பார்த்துவிட்டு உள்ளே போவேன். கண்களில் பசியையும், ஆவலையும் தேக்கி வைத்திருந்த அந்த பையன் இதோ என் முன்னால் விஸ்வரூபமெடுத்து நிற்கிறான்..பிறகு அவர் தான் பட்ட கஷ்டங்களையும், தன் வளர்ச்சியையும் கடவுள் தன்மீது காட்டிய கருணையையும் என்னிடம் பகிர்ந்துக் கொண்டார். இப்போது அவரிடம் இது போன்ற ஐந்து ஃபாக்டரிகள் இருக்கிறது. தம்பிகளும் சில நிறுவனங்களைப் பார்த்துக் கொள்கிறார்கள். சகோதரிகளைப் பெரிய இடத்தில் கல்யாணம் செய்து கொடுத்திருக்கிறார். கற்பனைக்கும் எட்ட முடியாத அளவில் தன் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தி இருக்கிறார். பலமுறை உலக நாடுகளுக்குப் பயணித்திருக்கிறார். ஆனால் உடல் ரீதியாக சர்க்கரை, ரத்தஅழுத்தம், அல்சர் போன்ற வியாதிகள் இருப்பதால் விரும்பியதைச் சாப்பிட முடியவில்லை. டாக்டர்கள் அறிவுறுத்தும் காய்களும் ஒருபிடிச் சோறுமாய் வாழ்க்கை போகிறது. அன்று ஒரு வாய் கஞ்சிக்காகப் பல வீட்டு வாசலில் ஏறி இறங்கிய சிறுவன் இன்று நினைத்ததெல்லாம் கிடைக்கிற வாழ்விலும் பட்டினி கிடக்கிறான்..பழைய கஞ்சிக்கு வீடுவீடாய் பாத்திரம் தூக்கிக்கொண்டு அலையும் அந்தச் சிறுவன் யாரும் யோசிக்கவே முடியாத விதத்தில் இப்படி வளர்ந்து நிற்பதற்கு அவர் எடுத்துக் கொண்ட காலம் மிகக் குறைவானதே. ஒவ்வொரு கஷ்டத்தையும் மன உறுதி கொண்டு மட்டுமே கடந்து சென்ற அவர் உண்மையில் வாழ்க்கையோடு மல்லுக்கட்டி நின்றிருக்கிறார். இளமையில் பட்ட கஷ்டங்களையும் நொம்பலங்களையும் சமாளித்து வாழ்வின் வளர்ச்சியால் அதை ஈடுகட்டியிருக்கிறார். அவருடைய லட்சிய தாகம் ஒருபோதும் மாத சம்பளக்காரனாகவோ ஒரு சொந்த வீட்டைக் கட்டிப் பார்த்துவிடவேண்டும் என்பதிலோ அடங்குவதாய் இல்லை. நினைத்த ஒவ்வொரு விஷயத்தையும் சாதிக்கும் போதும் குஞ்ஞுப்பு தன் அடுத்த லட்சியத்தைக் கூடுதல் உயரத்துக்குத் தூக்கி வைத்தார். பிறகு பின்னாலேயே நூல் பிடித்துப் போய் அதைத் தன்வயப்படுத்தினார். மலை ஏறி உச்சியைத் தொட நினைக்கும் ஒருவன் எப்படி ஒவ்வொரு சிகரத்தை அடையும் போதும் அடுத்த சிகரத்திற்குப் போகக் கூடிய மன, உடல் தைரியத்தை எனக்குக் கொடு என்று பிரார்த்தனை செய்வானோ அந்த மனநிலையில் குஞ்ஞுப்பு இருந்ததாக எனக்குத் தோன்றியது..எம்.டி. வாசுதேவன் நாயரின் புதினங்களில் இப்படியான கதாபாத்திரங்களைப் பார்த்திருந்தாலும் வாழ்க்கையில், நேரில் ரத்தமும் சதையுமாய் அவரைப் பார்த்தபோது வெளிப்படுத்த முடியாத பக்திதான் அவர்மேல் ஏற்பட்டது. அவருடைய கஷ்டத்தை வேறு யாராவது பட்டிருந்தால் தகர்த்து தர்ப்பணமாகிப் போயிருப்பார்கள். பட்டினி கிடக்கும்போதும் குஞ்ஞுப்பு வளமான வாழ்க்கையைக் கனவு கண்டிருந்தார். அவற்றை அடையும் வழியைத் தன் அடங்காப் பசியினூடாகத் தேடிக் கொண்டேயிருந்தார்..இன்றைய குழந்தைகள் தேர்வில் மதிப்பெண் குறைந்தாலே தற்கொலையைப் பற்றி யோசிக்கிறார்கள். அவர்களுக்கு முன்னால் வாழ்வின் போராட்டத்தில் தோல்வியே இல்லை. பொறியியலும் மருத்துவமும் படிக்கும் நல்ல புத்திசாலிகள் என்று நாம் நினைக்கும் குழந்தைகள் கூடச் சின்னச்சின்ன தோல்விகளில் ஏமாற்றங்களில் துவண்டு போகிறார்கள். சாதாரணமாக வீட்டில் திட்டினால்கூட தற்கொலை செய்துகொள்ளும் பிள்ளைகளின் புகைப்படத்தைப் பத்திரிகையில் பார்க்கும்போது, 'இந்தத் தளிர்களுக்கு என்ன நேர்ந்தது?' என மனம் விம்மி வெடிக்கும். தன் மரணம் மூலம் ஊதி அணைப்பது எத்தனையோ பேருடைய கனவுகளை உள்ளடக்கிய வெளிச்சத்தின் திரிதான் என்பது இப்படித் தப்பித்துப் போய்க் கொண்டிருப்பவர்களுக்கு தெரியாது. தகர்த்தெரியப்படுவது பலரின் இதயம் என்பதும் அவர்களுக்குத் தெரியாது. இன்னும் சிலர் தங்களுடைய கோபத்தை, பெற்றோரோடும் சமுதாயத்தோடும் தீர்த்துக்கொள்ள போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதும், குற்றவாளிகளாக மாறவும் செய்கிறார்கள். போதைப் பழக்கத்திலிருந்து மீண்டு வந்த ஒரு இளைஞனின் முகம் என் நினைவில் வருகிறது. வாழ்வில் எல்லாவற்றையும் இழந்து தகர்ந்துபோன முகம். இக்கட்டுகளின் முன்னால் மெழுகுபோலக் கரைந்து ஒழுகுவது தங்களுடைய பெற்றோரின் முகம்தானே தவிர, தோல்விகளின் முகமல்ல என்பதைக் குழந்தைகள் உணர வேண்டும். குஞ்ஞுப்புவின் மன உறுதியின் வெதுவெதுப்பான ஒரு துளி கனப்பு இந்தக் குழந்தைகளுக்கு இருந்தால் அவர்கள் போதைக்குழிக்குள் புதைந்து போயிருக்க மாட்டார்கள்..என் சொந்த ஊர்க்காரனான இந்தப் பழைய பசி தின்னும் கண்களையுடைய பையன் வாழ்வின் கஷ்டங்களை, தன்னுடைய வளர்ச்சியின் சவாலாக ஏற்றுக் கொண்டவன். வரிசையாய் வந்த கஷ்டங்களை அதன் மீதேறி நின்று உதைத்துத் தள்ளி நீந்தி நீந்தி அவர் வெளியே வந்திருக்கிறார். ஏதோ ஒரு கவிஞன் சொன்னதை மனதில் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று நினைக்கிறேன்.."வாழ்க்கை தர மறுக்கும் எல்லாவற்றையும் வாழ்ந்துவாழ்விடமிருந்து நான் வாங்கிக் கொள்வேன்.".(தொடரும்)