ஜன்னலின் திரைச்சீலையை விலக்கி வெளியே பார்த்தேன்..'காலைப் பொழுதினிலே கண்விழித்து, மேனிலை மேல், மேலைச் சுடர்வானை நோக்கி நின்றோம் விண்ணகத்தே' என்ற பாரதியின் பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன..இரவில் பெய்த மழையில், வீதியில், ஆங்காங்கே தண்ணீர் தேங்கியிருந்தது. புதிதாக அலங்கரித்தது போல், மரங்களின் பசுமை சற்று தூக்கலாக தெரிந்தது. தங்கள் மீது படர்ந்த மழைத் துளிகளை வழியனுப்ப மனமின்றி, மரங்களின் இலைகள் அவைகளை, மகுடம் போல், நன்றியுடன் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தன..நீல வானத்தை, திரையிட்டு மறைத்திருந்த மேகக் கூட்டங்கள் மெல்ல விலகி, வேறு திசை நோக்கி செல்ல ஆரம்பித்திருந்தன..தாங்கி வந்த நீர்த்துளிகளை மழையாக பொழிந்து, பூமியை குளிரச் செய்து, தங்கள் பணி முடிந்த திருப்தியில், மேகக் கூட்டங்கள் மகிழ்ச்சியுடன் விடை பெற்று செல்வதாக, மனதிற்குள் கற்பனை ஓடியது..அது போன்ற கற்பனை எனக்கு ஒன்றும் புதிதல்ல..கற்பனை யூரென்ற நகருண்டாம் – அங்குகந்தர்வர் விளையாடுவராம்,சொப்பன நாடென்ற சுடர்நாடு – அங்குசூழ்ந்தவர் யாவருக்கும் பேருவுகை.என்ற பாரதியின் கவிதையை நவீனுடன் சேர்ந்து பலமுறை வாய்விட்டு பாடிய நினைவுகள், மேகக்கூட்டங்கள் போல் மனதில் மெல்ல நகர்ந்து, உவகை தூறலை உதிர்த்தன.."கற்பனை கிணற்றில் ஊற்றெடுக்கும் கனவுகள், சில சமயங்களில் நிஜமாவதுண்டு. அதற்கு, அந்த கற்பனையில் நேர்மறை எண்ணங்கள் நிறைந்திருக்க வேண்டும்" என்று நவீன் ஒரு முறை சொன்னது நினைவுக்கு வந்தது. நவீனின் அதுபோன்ற ஒரு கனவு, இன்று நிறைவேறப் போவதை நினைத்து, மனதில் ஓர் அமைதி தாண்டவமாடியது..அதுபோன்ற ஒரு கற்பனை கோட்டையில் வளர்ந்ததுதான், நவீனுடனான பரிச்சயம்.."கற்பனை கலப்பில்லாத வாழ்க்கை என்பது, சப்ஜி இல்லாத சப்பாத்தி போலத்தான் இருக்கும்" என்று தமாஷாக சொல்லுவான் நவீன்.."ஒத்த எண்ணங்களுடைய நவீனுடனான அறிமுகம், வாழ்க்கையில் நான் செய்த பெரும் பாக்கியம்" என்று நினைத்து அடிக்கடி பெருமிதம் கொண்டது உண்டு..அவனுடனான சந்திப்புகளை, நினைவுகளை, கதைபோல கோர்வையாக டைரியில் எழுதி வைத்திருந்த ஞாபகம் வர, அந்த டைரியை, செடியிலிருந்து மலரை பறிப்பது போல, புத்தக அலமாரியிலிருந்து மென்மையாக உருவி எடுத்தேன். எங்களிடையே நடைபெற்ற ஒவ்வொரு சந்திப்பு மற்றும் சம்பாஷணைகளின்போது, அவனுடைய எண்ண ஓட்டங்களையும், உணர்வுகளையும், என் மனத் திரையில் ஓடவிட்டு வடித்த அந்த கற்பனை கலந்த பதிவுகளை, மலரும் நினைவுகளாக புரட்டிப் பார்த்தேன்.."எதிர்பாராத முதல் சந்திப்பிலேயே, எங்களுக்கு ஒருவரையொருவர் பிடித்து விட்டது என்று நினைக்கத் தோன்றுகிறது…" என்று அந்த நினைவு குறிப்புகள் துவங்கி நகர்ந்தன..முதல் சந்திப்பிற்கு, வங்கி ஏ.டி.எம். பாலமாக அமைந்தது. வழக்கத்திற்கு மாறாக, அன்று ஏ.டி.எம்.மில் நீண்ட வரிசை..அந்த சமயத்தில், கருநீல செக்யூரிட்டி வேன் அங்கு வந்து நின்றது. அதே சமயத்தில், ஏ.டி.எம். ஷட்டர் கீழே இறக்கப்பட்டது.."கேஷ் நிரப்பிய பிறகுதான், திறப்பாங்க… இன்னும் இருபது நிமிடம் ஆகலாம்…" என்று அங்கிருந்த செக்யூரிட்டி, சொல்லிக் கொண்டிருந்தார்..ஆபரேஷனுக்கு ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருந்தவருக்கு உடனடியாக மருந்து வாங்க வேண்டியிருந்தது. அந்த மருந்து கிடைக்கும் பார்மசியில், கார்டு மிஷின் வேலை செய்யவில்லை என்பதால், அருகில் இருந்த ஏ.டி.எம்.மிற்கு வந்தேன்.."எக்ஸ்க்யூஸ் மீ…ஏதோ அவசரம் போலிருக்கு…" பின்னாலிருந்து வந்த அந்த குரலுக்கு உரியவரை திரும்பி பார்த்தேன்..மெல்லிய அரும்பு மீசையுடன், மிடுக்கான வாலிப தோற்றம். முகத்தில் ததும்பி வழியும் புன்னகை… ஊதா நிற டீ ஷர்ட்… முதுகில் பேக் பேக் சகிதம், அவன் நின்றிருந்தான். 'மே ஐ ஹெல்ப் யூ' என்ற வாசகம், டீ ஷர்ட்டில் மின்னியது. முதல் பார்வையிலேயே, ஒரு வித்தியாசமான மனிதரை சந்தித்துக் கொண்டிருக்கிறேன்…" என்ற உணர்வு, எனக்குள் பளிச்சிட்டது.."ஆமா… மருந்து வாங்க அர்ஜெண்ட்டா பணம் எடுக்கணும். இந்த சமயத்தில், ஷட்டரை போட்டுட்டாங்க…பக்கத்தில், வேற ஏ.டி.எம். எதுவும் இல்லை போலிருக்கு…"."எவ்வளவு தேவைப்படுது..?".வரிசையிலிருந்து சற்று விலகி நின்று, அவன் கேள்விக்கு பதில் சொல்லலாமா, வேண்டாமா என்று யோசித்தேன்.."தயங்காம சொல்லுங்க…" என்றான்.."நீங்க இந்த வங்கியின் CSOவா… அதாவது கஸ்டமர் சர்வீஸ் ஆபீஸரா..?" கேட்டவள், 'தவறாக கேட்டு விட்டோமோ' என்ற எண்ணத்தில், உதட்டை கடித்துக் கொண்டேன்.."இல்லை…HOPAD…"."அப்படின்னா…?" நான் குழப்பமடைந்ததை அவன் மனதிற்குள் வெகுவாக ரசித்திருக்க வேண்டும் என்பது அவனுடைய கேலிப் புன்னகையில் வெளிப்பட்டது.."பார்த்தா, மகாபுத்திசாலி மாதிரி தெரியுது…இது கூட யூகிக்க முடியலையா…?"."மற்ற சமயம்னா யோசிச்சு சொல்லிடுவேன்…இப்ப கவனம் முழுவதும், மருந்துக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கிற பேஷண்ட் மேல இருக்கு…"."உங்களை ரொம்ப டென்ஷன் ஆக்க விரும்பலை…நானே சொல்லிடறேன்…கூல்…!".கதை கேட்கும் குழந்தையை போல, கண்களை அகல விரித்து, நான் காத்திருந்தது, அவனுக்கு ரொம்ப பிடித்திருந்தது போல் தெரிந்தது.."ரெடி…ஒன்…டூ…த்ரீ…சொல்லிடறேன்…Help one person at least daily.. விளம்பரத்துக்காக சொல்லலை…விரிவாக்கத்துக்காக சொன்னேன்..!"."யாருக்கு உதவி தேவைப்படுதுன்னு, கண்ணாலேயே ஸ்கேன் பண்ணிடுவீங்க போலிருக்கு…"ஆச்சரியத்துடன் கேட்டேன்.."அப்படித்தான் வச்சுக்கோங்களேன்…இப்ப உங்களுக்கு எவ்வளவு தேவைப்படுது…?"."ஐந்தாயிரம்..".பர்சிலிருந்து ஐந்தாயிரத்தை எடுத்தான்.."கையில் இருக்கிற பணத்தை மிஷின்ல போடணுங்கறதுக்காகத்தான், வரிசையில் நின்றேன்….அவசர தேவைக்கு உதவாத பணம், பணமே இல்லை…இதை வச்சுக்குங்க. அப்புறம் திருப்பி கொடுங்க…!"."அறிமுகம் இல்லாத ஒருவர் நமக்கு ஏன் உதவி செய்ய முன் வருகிறார்" என்ற எண்ணத்தில், சற்று தயங்கினேன்.."செக்யூரிட்டி இல்லாம பணம் வாங்க தயக்கமா இருந்தா, உங்களுக்கு மிகவும் தேவைப்படற பொருள் எதையாவது அடமானமா கொடுங்க..!".அவன் சொன்னதை கேட்டு, அந்த சூழ்நிலையிலும் திடுக்கிட்டு, அதை மறைக்க லேசாக புன்னகைத்தேன்..ஸ்கூட்டர் சாவி மற்றும் கையில் வைத்திருந்த புத்தகத்தை தவிர, என்னிடம் அந்த சமயத்தில் வேறு எதுவும் இல்லை.."ஸ்கூட்டர் ஓடலைன்னா கூட நடந்து போயிடுவேன்… ஆனா, இது இல்லைன்னா, என்னால் வாழ்க்கையை ஓட்ட முடியாதுங்கற அளவுக்கு நெருக்கம். கல்லூரியில், பேச்சு போட்டியில் பரிசாக பெற்றது. அதனால், சென்டிமென்டல் அட்டாச்மென்ட் அதிகம்…" புத்தகத்தை பிரிய மனமின்றி, அவனிடம் கொடுத்தேன்.."அப்ப படிச்சதையே திருப்பி படிப்பீங்களா…யாருடைய நாவல்…?"."ஒரு தடவை படிச்சா, திருப்பி, திருப்பி படிக்கத் தோணும். ஆன்மீகம் முதல் அறிவியல் வரையிலான உலக விஷயங்களை உள்ளடக்கியது. பாரதியாரின் கவிதைகள்..!".ஆச்சரியத்தில், இப்பொழுது அவன் கண்கள் அகல விரிந்தன.."பாரதியாரின் ஒவ்வொரு கவிதையும், மன தளர்ச்சிக்கு மாமருந்து. இந்த மருந்து இல்லாமல், என்னால் இருக்க முடியாது. அதனால், உங்களிடம் அடகு வைக்கும் புத்தகத்தை உடனடியாக மீட்டுடுவேன்..!"."என் பணம் எனக்கு திரும்ப கிடைக்கும் என்ற தைரியம் வந்துடுச்சு.." புன்னகைத்தவன், என்னிடம் பணத்தை கொடுத்தான். செல் நம்பர் பரிமாற்றத்திற்கு பிறகு, அவசரமாக விடை பெற்றேன்..முதல் சந்திப்பில், பரிமாற்றம் கண்ட சில வார்த்தைகளும், பார்வையும், இருவருக்குமிடையே, இனம் புரியாத ஒரு புதிய பந்தத்தை உண்டு பண்ண முயற்சிப்பதாக, எனக்கு தோன்றியது..முதல் சந்திப்பில், அவசரமாக கிளம்பி சென்ற பிறகு, அவனுடைய எண்ண ஓட்டங்கள் எப்படி இருந்தது என்று மற்றுமொரு சந்திப்பில் அவனிடம் கேட்டேன்..அந்த அனுபவத்தைப் பகிர அவன் தயங்கவில்லை.."நீங்க என்னிடம் கொடுத்து சென்ற புத்தகத்தை முதலில் மேலோட்டமாக பார்த்தேன். பாரதியின் உருவம் வெளியே தெரியும்படி, நேர்த்தியாக அட்டை போடப்பட்டு, உள் அட்டையில், 'பிரியா' என்ற பெயர், முத்து முத்தான கையெழுத்தில் எழுதப்பட்டிருந்தது. கடைசியாக படித்த பக்கத்தில், அடையாள அட்டை வைக்கப்பட்டிருந்தது…".மனதிலுறுதி வேண்டும், வாக்கினி லேயினிமை வேண்டும்;நினைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைப்படவேண்டும்;கனவு மெய்ப்படவேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்;கண் திறந்திட வேண்டும், காரியத்தி லுறுதி வேண்டும்;பெண் விடுதலை வேண்டும், பெரிய கடவுள் காக்கவேண்டும்;மண் பயனுற வேண்டும்; உண்மை நின்றிடவேண்டும்;.என்ற வரிகள், அந்த பக்கத்தில், பென்சிலால் கோடிடப்பட்டிருந்தன. காலையில் எழுந்தவுடன், வாட்ஸ்அப் குழுவில், 'தினமும் ஒரு கவிதை' என்ற தலைப்பில் பகிரப்பட்ட இதே கவிதையை, ஒவ்வொரு வார்த்தையாக, அதிகாலையில் ரசித்து படித்து உள் வாங்கியது என் மனத்திரையில் வேகமாக ஓடியது.."ஆங்கிலத்தில் 'கோயின்சிடன்ஸ்' என்று சொல்வார்களே… அது இதுதானோ…" என்று நினைத்து ஆச்சரியப்பட்டேன்… ஒரு நல்ல சமுதாயத்திற்கு தேவையான 'விருப்பப் பட்டியலை உள்ளடக்கிய கவிதையை வடித்த , பாரதியின் தொலை நோக்கு பார்வையை நினைத்து வியந்து, அதை நட்சத்திர குறியிட்டு சேமித்தது நினைவுக்கு வந்ததது..அன்று முழுவதும் வந்த போன் அழைப்புகளில், ஏதாவது ஒன்றாவது பாரதி பிரியாவிடமிருந்து வராதா என்று ஆவலோடு காத்திருந்தேன்..என்னுடைய டெலிபோன் எண்ணை, அந்த பெயரில்தான் சேமித்திருந்தான் என்பது அவனே என்னிடம் ஒரு முறை சொல்லியிருக்கிறான்..மறுநாள் மாலை, நான் அவனை தொடர்பு கொண்டேன்.."சாரி சார்… பேஷன்ட்டை பக்கத்திலிருந்து அட்டெண்ட் பண்ண வேண்டியிருந்தது. அதான், கால் பண்றதுக்கு லேட் ஆயிடுச்சு…பணத்தை திருப்பிக் கொடுக்க எங்க சார் வரணும்…?"."அதே ஏ.டி.எம்.பக்கத்தில்…"."சமயத்துக்கு உதவினதுக்கு ரொம்ப தாங்கஸ்…எண்ணிக்கோங்க…" என்று சொல்லி பணத்தை அவனிடம் கொடுத்தேன்.."காலையிருலிருந்து எண்ணிக்கிட்டுதான் இருக்கேன்…உங்களை பற்றி…" அவன் சிலேடையாக பேசியது எனக்கு பிடித்திருந்தது.."உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா, ஒரு காப்பி சாப்பிடலாம்…" தயங்கியபடியே கேட்டான்..அவனுடைய அழைப்பை மறுக்க, எனக்கு ஏனோ மனம் வரவில்லை.."ரெண்டு சிக்னல் தாண்டியவுடன் ஒரு காப்பி ஷாப் இருக்கு… அங்கே சந்திக்கலாம்…" ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்து, கியர் மாற்றினேன்..அத்துடன் எங்களுக்கிடையே லேசாக படர்ந்திருந்த புரிதல் தளமும், அடுத்த கியருக்கு மாறியது.."நேற்று இருந்த அவசரத்தில் கேட்க முடியலை…யாருக்கு உடம்பு சரியில்லை…?"."நான் தங்கியிருக்கும் லேடீஸ் ஹாஸ்டலுக்கு எதிரில், ஒரு வயதான பெண்மணி திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க…அவங்களுக்கு தேவையான சிகிச்சை கொடுத்ததில், ஷி இஸ் ஆல் ரைட் நௌ."."ஏற்கெனவே தெரிஞ்சவங்களா…?"."அறிமுகமானவங்களுக்குத்தான் உதவி செய்யணும்னா, பல பேருக்கு நம்மால உதவி செய்ய முடியாம போயிடலாம்… நீங்க என்ன நினைக்கறீங்க HOPAD ….?" அப்படித்தான் அவன் பெயரை, நான் செல்லில் சேமித்திருந்தேன்..அவன் பதில் ஏதும் பேசாமல், என்னை பார்த்தான்..தேவையானவங்களுக்கு, அவுங்க கேட்காமலேயே தன்னிச்சையாக உதவி செய்யறதுதான் உண்மையான உதவி. உதவியை, எந்தவித விளம்பரமும் இல்லாமல் செய்யணும். அது மாதிரி எண்ணம் இருக்கறவங்க பெருகணும்… அதில, நீங்க ஒருத்தர். அறிமுகம் இல்லாத எனக்கு, கையிலிருந்த பணத்தை உடனடியாக கொடுத்ததன் மூலம், ஒரு உயிரை காப்பாற்றுவதற்கு உதவி செஞ்சிருக்கீங்க… கீப் இட் அப்…" அவனை நேருக்கு நேர் பார்த்து, நடு நடுவே, கப்பிலிருந்த காபியை தவணை முறையில் பருகி முடித்தவள், அவனிடம் அடமானம் வைத்திருந்த என் புத்தகத்தை திரும்ப பெற்றுக் கொண்டு கிளம்பினேன்..அடுத்தடுத்த சந்திப்புகளில், எங்களைப் பற்றிய தனிப்பட்ட விவரங்கள், தவணை முறையில் பரிமாறிக் கொள்ளப்பட்டன..நான் ஒரு தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியை. அவன் ஐ.டி. எனக்கு பெற்றோர் கிடையாது. கிராமத்திலிருக்கும் உறவினர்களை விட்டு, நகரத்தில் வேலை செய்ய, ஹாஸ்டலில் தங்கியிருப்பவள். அவன், சிறு வயது முதல், அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவன்..எந்த வித அத்துமீறல்களும் இன்றி, எங்களுடைய எண்ண பரிமாற்றங்கள் தொடர்ந்தன..அந்த பரிமாற்றங்களில், பாரதியிலிருந்து, ஷெல்லி, கீட்ஸ், ஜிப்ரான் வரையிலான கவிதைகள், ஒருவரிடமிருந்து மற்றவருக்கு இடம் பெயரும்.."பாரதியின் உணர்வு பூர்வமான கவிதைகளை வெல்ல இன்னொரு கவி பிறந்து வரவேண்டும்" என்று நான் ஒவ்வொரு முறையும் தீர்ப்பு சொல்வேன். பாரதியின் ஒவ்வொரு கவிதையும், ஆழ்மனதிலிருந்து, பிறந்தது… கலப்படமில்லாத தாய்யைப் போன்றது…" என்று சிலாகிப்பேன்.."ஓர் ஆங்கில ஆசிரியைக்கு, பாரதி மீது எப்படி இவ்வளவு பற்று..?" நவீன்ஒருமுறை வியப்பாக கேட்டான்.."பதினைந்துக்கும் மேற்பட்ட மொழிகள் தெரிந்த பாரதிக்கும், தமிழ் மீதுதான் அதிகப் பற்று. அதனால்தான், 'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்'னு பாடினார்…!" என்னுடைய பதிலை ஒப்புக்கொண்டதற்கு அடையாளமாக, சபாஷ் என்றான்..ஒவ்வொரு சந்திப்பிலும், இது போன்ற வியப்புகளை பரிமாறிக் கொள்ள, நாங்கள் தவறியதில்லை.."வியப்பில்தான், வாழ்க்கையின் சந்தோஷம் அடங்கியிருக்கிறது. மற்றவர்களின் செயலை பார்த்து நாம வியக்கணும்…இல்லைன்னா, நம்மை பார்த்து, மற்றவங்க வியக்கணும்…" என்பான்..விடுமுறை நாட்களில், ஏழைப் பெண்களுக்கு சானிடரி நாப்கின் வழங்குவதிலிருந்து, மாணவ மாணவிகளுக்கு இலவச ட்யூஷன் எடுப்பது வரையிலான என்னுடைய நடவடிக்கைகளைப் பற்றி, நான் அவனிடம் பெருமையாக சொன்னதில்லை..'தனி ஒருவனுக்கு உணவில்லையெனில், ஜகத்தினை அழித்திடுவோம்' என்ற பாரதியின் முழக்கம் தனக்கு மிகவும் பிடித்த ஒன்று என்று அவன் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஆனால், இரவு நேரங்களில்,, உணவின்றி, தெரு மேடைகளில் படுத்து தவிப்பவர்களுக்கு உணவு பொட்டலம் வழங்குவதிலிருந்து, ஆபத்து கட்டத்தில் இருப்பவர்களின் உயிரை காப்பாற்ற தேவையான ரத்த தானம் அளிப்பது வரையிலான, அவனுடைய மௌன நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை, அவன் என்னிடம் பகிர்ந்த தில்லை. சில பயனாளிகள், தற்செயலாக என்னிடம் பகிர்ந்த விஷயங்கள் அவை.."வருங்காலத்தில், யாரைப் போல் வாழ்க்கையில் உயர்வதற்கு ஆசை..?" என்ற என்னுடைய கேள்விக்கு, 'பில் கேட்ஸ்' என்று யோசிக்காமல் பதில் சொன்னான்.."பணக்காரனாக ஆசையா..?"."எல்லோருக்கும் உதவி செய்வதற்கு ஏராளமான பணம் தேவை. அனாதையான என்னை வளர்த்து, மனிதனாக்கிய இந்த சமூகத்திற்கு, மனிதத்தை அள்ளிக் கொடுக்க ஆசை. விளம்பரம் இன்றி, தேவையானவர்களுக்கு உதவி செய்யும் எண்ணம் நிறைந்த பத்து பேரையாவது உருவாக்க ஆசை.." என்று, தன் ஆசைகளை பட்டியலிட்டு, என்னை வியப்பில் ஆழ்த்தினான்..இந்த மாதிரி வியப்புகளின் தொகுப்பு, என் பார்வையில் அவனை ஒரு ஹீரோவாக உயர்த்திப் பிடிக்க துவங்கியதை உணர ஆரம்பித்தேன். அந்த வியப்பான உணர்வுகளைப் பற்றி, தக்க தருணத்தில், அவனிடம் விரிவாக பேச வேண்டும் என்று நினைத்து, அந்த தருணத்திற்காக காத்திருந்தேன்..அப்பொழுதுதான், எனக்கு அந்த டெலிபோன் அழைப்பு வந்தது..யாருக்கு என்ன உதவி தேவையோ என்ற நினைப்பில், அழைப்பு வந்த ஆஸ்பத்திரிக்கு விரைந்து, ரிசப்ஷனில் ஆஜரானேன்.."நவீன்ங்கறவரை உங்களுக்கு தெரியுமா..?"."ஆமா..அவருக்கு என்ன ஆச்சு..?"."ரோடு ஆக்ஸிடெண்டில், பலத்த காயம்..ஐ.சி.யுல இருக்கார். போன் லாக் ஆனதால, அவருடைய பர்சை திறந்து பார்க்க வேண்டியதாப் போச்சு. அதில, உங்க தொடர்பு விவரங்கள் இருந்தது. நீங்க அவருக்கு என்ன வேணும்…?" எமெர்ஜன்சி ஆபரேஷனுக்கு உடனடியா பணம் கட்டி, சம்மத கையெழுத்து போடணும்.."ஆஸ்பத்திரி பி.ஆர்.ஓ நிறுத்தாமல் பேசினார்..மனதிலுறுதி வேண்டும்..என்ற வரிகளை வாய், ஒரு பக்கம் முணுமுணுத்தது. கட்டணத்தை செலுத்துவதற்கு, வங்கி அட்டையை கொடுத்து, பின் நம்பரை அழுத்துவதிலும், ஒப்புதல் கையொப்பம் இடுவதிலும் கை மறுபக்கம் வேகமாக வேலை செய்தது..சில நாட்கள் காத்திருப்பிற்கு பிறகு, டாக்டரை சந்தித்தேன்.இதே ஆஸ்பத்திரியில், எமெர்ஜென்சியில இருக்கிற ஒரு பேஷண்டுக்கு ரத்தம் கொடுத்துட்டு, மெயின் ரோடுக்கு திரும்பும் போதுதான், இந்த ஆக்ஸிடென்ட் நடந்திருக்கு. எதிர் திசையில் வந்த லாரி சாலை தடுப்பில் மோதி, கண்ட்ரோல் இழந்து, இவர் மேல் மோதிடுச்சுன்னு, போலீஸ் விசாரிப்பில் தெரிய வந்திருக்கு.."."அவர் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் அதிசயம் இல்லை ..அதுக்காகவே பிறந்திருப்பவர் போலவே உதவிக்கு ஓடுவார்…அவர் உயிருக்கு ஒன்னும் ஆபத்து இல்லையே டாக்டர்..?" தழுதழுக்கும் குரலில் கேட்டேன்.."உயிர் பிழைச்சது அதிசயம்தான்..ஆனா.." என்று வார்த்தைகளை உள்ளிழுத்த டாக்டரை அடுத்து என்ன சொல்லப் போகிறார் என்று சற்று பதற்றத்துடன் கவனித்தேன்.."இந்த ஆபரேஷன், அவரை இல்லற வாழ்க்கைக்கு தகுதியில்லாதவரா ஆக்கிடுச்சு. வெளிப்படையா சொல்லணும்னா, ஒரு குழந்தைக்கு தகப்பனாகும் உடல் தகுதியை இழந்துட்டார். இதை அவரிடமே தெரிவிச்சுட்டோம்..இப்ப, சுய நினைவோட பேசறார்..நீங்க போய் பார்க்கலாம்..!" என்றார்..எதுவுமே நடவாதது போல், அதே புன் சிரிப்புடன், நவீன் என்னை வரவேற்றான்.."எனக்கு ஒன்னும் இல்ல..நாளு நாளில் வீட்டுக்கு போயிடலாம்னு டாக்டர் சொல்லிட்டார்…"."யார் வீட்டுக்கு போவீங்க..?' என்றேன்.."ஏன்..என் வீட்டுக்குத்தான்…"."நம்ம வீட்டுக்குன்னு சொல்லுங்க..…!'."நீங்களே தனியா இருக்கீங்க..என்னை எப்படி..?"."ஏன்..என் கூட தங்குவதற்கு பயமா. ஹாஸ்டலிலிருந்து வீட்டுக்கு மாறிட்டேன். .நான் உங்களை நல்லா கவனிச்சுக்குவேன் நவீன்.. " ஒன்றும் தெரியாதது போல் பேசினேன்.."ஒருத்தரை, கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ வேண்டிய பெண்..அதான் சொன்னேன்…"."ஏன்..என்னை கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்லையா..?"."உங்க வாழ்க்கையை பாலைவனமாக்க நான் விரும்பலை. குழந்தை குட்டியோட நீங்க சந்தோஷமா வாழனுங்கறதுதான் என் மனப்பூர்வமான ஆசை"அவனுடைய தைரியத்தை மீறி, அவன் கண்களிலிருந்து கண்ணீர் பெருகி வழிந்தது.."எல்லாவற்றையும் டாக்டர் சொல்லிட்டார் நவீன். 'அச்சமில்லை..அச்சமில்லை..அச்சமென்பதில்லையேன்னு ஒரு தடவை நாம ரெண்டு பேரும் சேர்ந்து பாடுவோம். மனசில் படிந்திருக்கிற அச்சமெல்லாம் பறந்து போகும். !".ஆழ் மனதிலிருந்து பாடினோம்.. அந்த வரிகளையே திரும்ப திரும்ப பாடினோம். அந்த ஒலி, மனதில் ஒரு உத்வேகத்தை உண்டு பண்ணியதை எங்களால் உணர முடிந்தது..அந்த சமயத்தில், தன்னுடன் அழைத்து வந்த ஒருவரை, டாக்டர் எங்களுக்கு அறிமுகப் படுத்தினார்..வந்தவர், .நவீனுடைய கைகளை, தன் இரு கைகளாலும் பற்றிக் கொண்டு 'உங்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கின என்னை மன்னிச்சுடுங்க' என்றார்..எதுவும் புரியாமல், நவீன் அவரை பார்த்தான்.."ஆக்ஸிடென்ட் பண்ணது, எனக்கு சொந்தமான லாரிகளில் ஒன்னுதான். என் ஒரே மகன், இந்த ஆஸ்பத்திரியில் சீரியஸ் கண்டிஷனில் இருந்தபோது, தக்க தருணத்தில், அரிய வகை ரத்தத்தை கொடுத்துட்டு வெளியே வந்தபோதுதான், உங்களுக்கு ஆக்ஸிடெண்ட் ஆகியிருக்கு. அவனுடைய உயிரை காப்பாற்றி இருக்கீங்க. இந்த ஆக்சிடெண்ட், உங்களுக்கு பெரிய பாதிப்பை உண்டு பண்ணிட்டுதுன்னு கேள்வி பட்டேன். பழுதான உடல் உறுப்புகளை என்னால் திருப்பிக் கொடுக்கமுடியாது. லாரியை கவனக்குறைவா ஓட்டிய டிரைவர், போலீஸில் சரண்டர் ஆயிட்டார். சட்ட செயல்பாட்டை தவிர, என்னுடைய மன திருப்திக்காக, இந்த தொகையை நீங்க மறுக்காமல் வாங்கிக்கணும்.." என்றவர், பெரும் தொகைக்கான செக்கை அவன் கையில், வலுக்கட்டாயமாக திணித்து, விடை பெற்றார்..உங்க கற்பனையில் உதித்த கனவுகள் நிறைவேறுவதற்கு, இந்த ஆக்சிடென்ட் உதவியிருக்குன்னு சந்தோஷப்படுங்க. வாழ்க்கையில், மனசுக்கு பிடிச்ச நல்ல காரியங்களை செய்வதன் மூலம், உடல் காயங்களை மறந்துடலாம். நீங்க கற்பனை செய்து வைத்திருந்த, அந்த பத்து நல்ல பிரஜைகளை உருவாக்குவதற்கு தேவையான செயல்பாடுகளை முன்னெடுத்து செல்வோம்…என்னுடைய நேர்மறை வார்த்தைகள், நவீனின் எண்ணங்களை உறுதிபடுத்தியிருக்க வேண்டும் என்பது, அவனுடைய தீர்க்கமான பார்வையிலிருந்து அறிய முடிந்தது.."இந்த பணத்தை பயன்படுத்தி, ஆதரவற்ற குழந்தைகளுக்காக, ஒரு இல்லம் தொடங்குவோம். அந்த குழந்தைகளுக்கு, மற்ற நல்ல குணங்களோடு, மற்றவர்களுக்கு உதவும் குணத்தையும் விதைத்து வளர்ப்போம். ஆல விழுதுகளாக, நம்ம பிள்ளைகள் மூலம், அந்த குணம் சமூகத்தில் பரவினால், அதைவிட மன சந்தோஷம் நமக்கு வேற என்னவாக இருக்க முடியும்…?".என் பேச்சை, நவீன் முழுவதும் ஏற்றுக் கொண்டான் என்பது, 'அப்ப இந்த செக்கை பாங்கில் போட்டுடுவோம்..' என்று சொன்னதிலிருந்து வெளிப்பட்ட து..இந்த நிலையில்தான், என் டைரி குறிப்பை நிறுத்தியிருந்தேன்..ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன பிறகு,சில மாதங்கள் ஓய்விலிருந்த நவீன், தன்னுடைய கனவுகளை செயல்படுத்துவதற்கான, அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டதன் பலனாக, ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லம் துவங்குவதற்கான அனுமதி கிடைத்தது,.நாங்கள் துவங்கி நடத்தப் போகும் 'பாரதி பாலர் இல்லம்' இன்று திறக்கப்படவிருக்கிறது. அது சம்பந்தப்பட்ட பணிகளை முன்னெடுத்து செல்வதற்கு, நவீன் விடியற்காலையிலேயே கிளம்பி, சென்று விட்டான்..பூமி மீது, தண்ணீரை பொழிவதற்கு, மேகக் கூட்டங்கள் ஒன்று சேர்வது போல், இரண்டற கலந்த எண்ணக் கூட்டங்கள் மூலம், சமூகத்துக்கு நல்லது செய்ய முயற்சிப்போம் என்ற நம்பிக்கை எங்களுக்குள் துளிர்த்து வளர துவங்கிவிட்டது என்பதை நினைத்தால், உள்ளத்தில் ஆனந்த களிப்பு மேலிடுகிறது..'நினைவு நல்லது வேண்டும்'..என்ற பாரதியின் வரிகளின் படி, நல்ல எண்ணங்கள் முழுவதும் நிறைவேற தடை எதுவும் இல்லைதானே?
ஜன்னலின் திரைச்சீலையை விலக்கி வெளியே பார்த்தேன்..'காலைப் பொழுதினிலே கண்விழித்து, மேனிலை மேல், மேலைச் சுடர்வானை நோக்கி நின்றோம் விண்ணகத்தே' என்ற பாரதியின் பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன..இரவில் பெய்த மழையில், வீதியில், ஆங்காங்கே தண்ணீர் தேங்கியிருந்தது. புதிதாக அலங்கரித்தது போல், மரங்களின் பசுமை சற்று தூக்கலாக தெரிந்தது. தங்கள் மீது படர்ந்த மழைத் துளிகளை வழியனுப்ப மனமின்றி, மரங்களின் இலைகள் அவைகளை, மகுடம் போல், நன்றியுடன் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தன..நீல வானத்தை, திரையிட்டு மறைத்திருந்த மேகக் கூட்டங்கள் மெல்ல விலகி, வேறு திசை நோக்கி செல்ல ஆரம்பித்திருந்தன..தாங்கி வந்த நீர்த்துளிகளை மழையாக பொழிந்து, பூமியை குளிரச் செய்து, தங்கள் பணி முடிந்த திருப்தியில், மேகக் கூட்டங்கள் மகிழ்ச்சியுடன் விடை பெற்று செல்வதாக, மனதிற்குள் கற்பனை ஓடியது..அது போன்ற கற்பனை எனக்கு ஒன்றும் புதிதல்ல..கற்பனை யூரென்ற நகருண்டாம் – அங்குகந்தர்வர் விளையாடுவராம்,சொப்பன நாடென்ற சுடர்நாடு – அங்குசூழ்ந்தவர் யாவருக்கும் பேருவுகை.என்ற பாரதியின் கவிதையை நவீனுடன் சேர்ந்து பலமுறை வாய்விட்டு பாடிய நினைவுகள், மேகக்கூட்டங்கள் போல் மனதில் மெல்ல நகர்ந்து, உவகை தூறலை உதிர்த்தன.."கற்பனை கிணற்றில் ஊற்றெடுக்கும் கனவுகள், சில சமயங்களில் நிஜமாவதுண்டு. அதற்கு, அந்த கற்பனையில் நேர்மறை எண்ணங்கள் நிறைந்திருக்க வேண்டும்" என்று நவீன் ஒரு முறை சொன்னது நினைவுக்கு வந்தது. நவீனின் அதுபோன்ற ஒரு கனவு, இன்று நிறைவேறப் போவதை நினைத்து, மனதில் ஓர் அமைதி தாண்டவமாடியது..அதுபோன்ற ஒரு கற்பனை கோட்டையில் வளர்ந்ததுதான், நவீனுடனான பரிச்சயம்.."கற்பனை கலப்பில்லாத வாழ்க்கை என்பது, சப்ஜி இல்லாத சப்பாத்தி போலத்தான் இருக்கும்" என்று தமாஷாக சொல்லுவான் நவீன்.."ஒத்த எண்ணங்களுடைய நவீனுடனான அறிமுகம், வாழ்க்கையில் நான் செய்த பெரும் பாக்கியம்" என்று நினைத்து அடிக்கடி பெருமிதம் கொண்டது உண்டு..அவனுடனான சந்திப்புகளை, நினைவுகளை, கதைபோல கோர்வையாக டைரியில் எழுதி வைத்திருந்த ஞாபகம் வர, அந்த டைரியை, செடியிலிருந்து மலரை பறிப்பது போல, புத்தக அலமாரியிலிருந்து மென்மையாக உருவி எடுத்தேன். எங்களிடையே நடைபெற்ற ஒவ்வொரு சந்திப்பு மற்றும் சம்பாஷணைகளின்போது, அவனுடைய எண்ண ஓட்டங்களையும், உணர்வுகளையும், என் மனத் திரையில் ஓடவிட்டு வடித்த அந்த கற்பனை கலந்த பதிவுகளை, மலரும் நினைவுகளாக புரட்டிப் பார்த்தேன்.."எதிர்பாராத முதல் சந்திப்பிலேயே, எங்களுக்கு ஒருவரையொருவர் பிடித்து விட்டது என்று நினைக்கத் தோன்றுகிறது…" என்று அந்த நினைவு குறிப்புகள் துவங்கி நகர்ந்தன..முதல் சந்திப்பிற்கு, வங்கி ஏ.டி.எம். பாலமாக அமைந்தது. வழக்கத்திற்கு மாறாக, அன்று ஏ.டி.எம்.மில் நீண்ட வரிசை..அந்த சமயத்தில், கருநீல செக்யூரிட்டி வேன் அங்கு வந்து நின்றது. அதே சமயத்தில், ஏ.டி.எம். ஷட்டர் கீழே இறக்கப்பட்டது.."கேஷ் நிரப்பிய பிறகுதான், திறப்பாங்க… இன்னும் இருபது நிமிடம் ஆகலாம்…" என்று அங்கிருந்த செக்யூரிட்டி, சொல்லிக் கொண்டிருந்தார்..ஆபரேஷனுக்கு ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருந்தவருக்கு உடனடியாக மருந்து வாங்க வேண்டியிருந்தது. அந்த மருந்து கிடைக்கும் பார்மசியில், கார்டு மிஷின் வேலை செய்யவில்லை என்பதால், அருகில் இருந்த ஏ.டி.எம்.மிற்கு வந்தேன்.."எக்ஸ்க்யூஸ் மீ…ஏதோ அவசரம் போலிருக்கு…" பின்னாலிருந்து வந்த அந்த குரலுக்கு உரியவரை திரும்பி பார்த்தேன்..மெல்லிய அரும்பு மீசையுடன், மிடுக்கான வாலிப தோற்றம். முகத்தில் ததும்பி வழியும் புன்னகை… ஊதா நிற டீ ஷர்ட்… முதுகில் பேக் பேக் சகிதம், அவன் நின்றிருந்தான். 'மே ஐ ஹெல்ப் யூ' என்ற வாசகம், டீ ஷர்ட்டில் மின்னியது. முதல் பார்வையிலேயே, ஒரு வித்தியாசமான மனிதரை சந்தித்துக் கொண்டிருக்கிறேன்…" என்ற உணர்வு, எனக்குள் பளிச்சிட்டது.."ஆமா… மருந்து வாங்க அர்ஜெண்ட்டா பணம் எடுக்கணும். இந்த சமயத்தில், ஷட்டரை போட்டுட்டாங்க…பக்கத்தில், வேற ஏ.டி.எம். எதுவும் இல்லை போலிருக்கு…"."எவ்வளவு தேவைப்படுது..?".வரிசையிலிருந்து சற்று விலகி நின்று, அவன் கேள்விக்கு பதில் சொல்லலாமா, வேண்டாமா என்று யோசித்தேன்.."தயங்காம சொல்லுங்க…" என்றான்.."நீங்க இந்த வங்கியின் CSOவா… அதாவது கஸ்டமர் சர்வீஸ் ஆபீஸரா..?" கேட்டவள், 'தவறாக கேட்டு விட்டோமோ' என்ற எண்ணத்தில், உதட்டை கடித்துக் கொண்டேன்.."இல்லை…HOPAD…"."அப்படின்னா…?" நான் குழப்பமடைந்ததை அவன் மனதிற்குள் வெகுவாக ரசித்திருக்க வேண்டும் என்பது அவனுடைய கேலிப் புன்னகையில் வெளிப்பட்டது.."பார்த்தா, மகாபுத்திசாலி மாதிரி தெரியுது…இது கூட யூகிக்க முடியலையா…?"."மற்ற சமயம்னா யோசிச்சு சொல்லிடுவேன்…இப்ப கவனம் முழுவதும், மருந்துக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கிற பேஷண்ட் மேல இருக்கு…"."உங்களை ரொம்ப டென்ஷன் ஆக்க விரும்பலை…நானே சொல்லிடறேன்…கூல்…!".கதை கேட்கும் குழந்தையை போல, கண்களை அகல விரித்து, நான் காத்திருந்தது, அவனுக்கு ரொம்ப பிடித்திருந்தது போல் தெரிந்தது.."ரெடி…ஒன்…டூ…த்ரீ…சொல்லிடறேன்…Help one person at least daily.. விளம்பரத்துக்காக சொல்லலை…விரிவாக்கத்துக்காக சொன்னேன்..!"."யாருக்கு உதவி தேவைப்படுதுன்னு, கண்ணாலேயே ஸ்கேன் பண்ணிடுவீங்க போலிருக்கு…"ஆச்சரியத்துடன் கேட்டேன்.."அப்படித்தான் வச்சுக்கோங்களேன்…இப்ப உங்களுக்கு எவ்வளவு தேவைப்படுது…?"."ஐந்தாயிரம்..".பர்சிலிருந்து ஐந்தாயிரத்தை எடுத்தான்.."கையில் இருக்கிற பணத்தை மிஷின்ல போடணுங்கறதுக்காகத்தான், வரிசையில் நின்றேன்….அவசர தேவைக்கு உதவாத பணம், பணமே இல்லை…இதை வச்சுக்குங்க. அப்புறம் திருப்பி கொடுங்க…!"."அறிமுகம் இல்லாத ஒருவர் நமக்கு ஏன் உதவி செய்ய முன் வருகிறார்" என்ற எண்ணத்தில், சற்று தயங்கினேன்.."செக்யூரிட்டி இல்லாம பணம் வாங்க தயக்கமா இருந்தா, உங்களுக்கு மிகவும் தேவைப்படற பொருள் எதையாவது அடமானமா கொடுங்க..!".அவன் சொன்னதை கேட்டு, அந்த சூழ்நிலையிலும் திடுக்கிட்டு, அதை மறைக்க லேசாக புன்னகைத்தேன்..ஸ்கூட்டர் சாவி மற்றும் கையில் வைத்திருந்த புத்தகத்தை தவிர, என்னிடம் அந்த சமயத்தில் வேறு எதுவும் இல்லை.."ஸ்கூட்டர் ஓடலைன்னா கூட நடந்து போயிடுவேன்… ஆனா, இது இல்லைன்னா, என்னால் வாழ்க்கையை ஓட்ட முடியாதுங்கற அளவுக்கு நெருக்கம். கல்லூரியில், பேச்சு போட்டியில் பரிசாக பெற்றது. அதனால், சென்டிமென்டல் அட்டாச்மென்ட் அதிகம்…" புத்தகத்தை பிரிய மனமின்றி, அவனிடம் கொடுத்தேன்.."அப்ப படிச்சதையே திருப்பி படிப்பீங்களா…யாருடைய நாவல்…?"."ஒரு தடவை படிச்சா, திருப்பி, திருப்பி படிக்கத் தோணும். ஆன்மீகம் முதல் அறிவியல் வரையிலான உலக விஷயங்களை உள்ளடக்கியது. பாரதியாரின் கவிதைகள்..!".ஆச்சரியத்தில், இப்பொழுது அவன் கண்கள் அகல விரிந்தன.."பாரதியாரின் ஒவ்வொரு கவிதையும், மன தளர்ச்சிக்கு மாமருந்து. இந்த மருந்து இல்லாமல், என்னால் இருக்க முடியாது. அதனால், உங்களிடம் அடகு வைக்கும் புத்தகத்தை உடனடியாக மீட்டுடுவேன்..!"."என் பணம் எனக்கு திரும்ப கிடைக்கும் என்ற தைரியம் வந்துடுச்சு.." புன்னகைத்தவன், என்னிடம் பணத்தை கொடுத்தான். செல் நம்பர் பரிமாற்றத்திற்கு பிறகு, அவசரமாக விடை பெற்றேன்..முதல் சந்திப்பில், பரிமாற்றம் கண்ட சில வார்த்தைகளும், பார்வையும், இருவருக்குமிடையே, இனம் புரியாத ஒரு புதிய பந்தத்தை உண்டு பண்ண முயற்சிப்பதாக, எனக்கு தோன்றியது..முதல் சந்திப்பில், அவசரமாக கிளம்பி சென்ற பிறகு, அவனுடைய எண்ண ஓட்டங்கள் எப்படி இருந்தது என்று மற்றுமொரு சந்திப்பில் அவனிடம் கேட்டேன்..அந்த அனுபவத்தைப் பகிர அவன் தயங்கவில்லை.."நீங்க என்னிடம் கொடுத்து சென்ற புத்தகத்தை முதலில் மேலோட்டமாக பார்த்தேன். பாரதியின் உருவம் வெளியே தெரியும்படி, நேர்த்தியாக அட்டை போடப்பட்டு, உள் அட்டையில், 'பிரியா' என்ற பெயர், முத்து முத்தான கையெழுத்தில் எழுதப்பட்டிருந்தது. கடைசியாக படித்த பக்கத்தில், அடையாள அட்டை வைக்கப்பட்டிருந்தது…".மனதிலுறுதி வேண்டும், வாக்கினி லேயினிமை வேண்டும்;நினைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைப்படவேண்டும்;கனவு மெய்ப்படவேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்;கண் திறந்திட வேண்டும், காரியத்தி லுறுதி வேண்டும்;பெண் விடுதலை வேண்டும், பெரிய கடவுள் காக்கவேண்டும்;மண் பயனுற வேண்டும்; உண்மை நின்றிடவேண்டும்;.என்ற வரிகள், அந்த பக்கத்தில், பென்சிலால் கோடிடப்பட்டிருந்தன. காலையில் எழுந்தவுடன், வாட்ஸ்அப் குழுவில், 'தினமும் ஒரு கவிதை' என்ற தலைப்பில் பகிரப்பட்ட இதே கவிதையை, ஒவ்வொரு வார்த்தையாக, அதிகாலையில் ரசித்து படித்து உள் வாங்கியது என் மனத்திரையில் வேகமாக ஓடியது.."ஆங்கிலத்தில் 'கோயின்சிடன்ஸ்' என்று சொல்வார்களே… அது இதுதானோ…" என்று நினைத்து ஆச்சரியப்பட்டேன்… ஒரு நல்ல சமுதாயத்திற்கு தேவையான 'விருப்பப் பட்டியலை உள்ளடக்கிய கவிதையை வடித்த , பாரதியின் தொலை நோக்கு பார்வையை நினைத்து வியந்து, அதை நட்சத்திர குறியிட்டு சேமித்தது நினைவுக்கு வந்ததது..அன்று முழுவதும் வந்த போன் அழைப்புகளில், ஏதாவது ஒன்றாவது பாரதி பிரியாவிடமிருந்து வராதா என்று ஆவலோடு காத்திருந்தேன்..என்னுடைய டெலிபோன் எண்ணை, அந்த பெயரில்தான் சேமித்திருந்தான் என்பது அவனே என்னிடம் ஒரு முறை சொல்லியிருக்கிறான்..மறுநாள் மாலை, நான் அவனை தொடர்பு கொண்டேன்.."சாரி சார்… பேஷன்ட்டை பக்கத்திலிருந்து அட்டெண்ட் பண்ண வேண்டியிருந்தது. அதான், கால் பண்றதுக்கு லேட் ஆயிடுச்சு…பணத்தை திருப்பிக் கொடுக்க எங்க சார் வரணும்…?"."அதே ஏ.டி.எம்.பக்கத்தில்…"."சமயத்துக்கு உதவினதுக்கு ரொம்ப தாங்கஸ்…எண்ணிக்கோங்க…" என்று சொல்லி பணத்தை அவனிடம் கொடுத்தேன்.."காலையிருலிருந்து எண்ணிக்கிட்டுதான் இருக்கேன்…உங்களை பற்றி…" அவன் சிலேடையாக பேசியது எனக்கு பிடித்திருந்தது.."உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா, ஒரு காப்பி சாப்பிடலாம்…" தயங்கியபடியே கேட்டான்..அவனுடைய அழைப்பை மறுக்க, எனக்கு ஏனோ மனம் வரவில்லை.."ரெண்டு சிக்னல் தாண்டியவுடன் ஒரு காப்பி ஷாப் இருக்கு… அங்கே சந்திக்கலாம்…" ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்து, கியர் மாற்றினேன்..அத்துடன் எங்களுக்கிடையே லேசாக படர்ந்திருந்த புரிதல் தளமும், அடுத்த கியருக்கு மாறியது.."நேற்று இருந்த அவசரத்தில் கேட்க முடியலை…யாருக்கு உடம்பு சரியில்லை…?"."நான் தங்கியிருக்கும் லேடீஸ் ஹாஸ்டலுக்கு எதிரில், ஒரு வயதான பெண்மணி திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க…அவங்களுக்கு தேவையான சிகிச்சை கொடுத்ததில், ஷி இஸ் ஆல் ரைட் நௌ."."ஏற்கெனவே தெரிஞ்சவங்களா…?"."அறிமுகமானவங்களுக்குத்தான் உதவி செய்யணும்னா, பல பேருக்கு நம்மால உதவி செய்ய முடியாம போயிடலாம்… நீங்க என்ன நினைக்கறீங்க HOPAD ….?" அப்படித்தான் அவன் பெயரை, நான் செல்லில் சேமித்திருந்தேன்..அவன் பதில் ஏதும் பேசாமல், என்னை பார்த்தான்..தேவையானவங்களுக்கு, அவுங்க கேட்காமலேயே தன்னிச்சையாக உதவி செய்யறதுதான் உண்மையான உதவி. உதவியை, எந்தவித விளம்பரமும் இல்லாமல் செய்யணும். அது மாதிரி எண்ணம் இருக்கறவங்க பெருகணும்… அதில, நீங்க ஒருத்தர். அறிமுகம் இல்லாத எனக்கு, கையிலிருந்த பணத்தை உடனடியாக கொடுத்ததன் மூலம், ஒரு உயிரை காப்பாற்றுவதற்கு உதவி செஞ்சிருக்கீங்க… கீப் இட் அப்…" அவனை நேருக்கு நேர் பார்த்து, நடு நடுவே, கப்பிலிருந்த காபியை தவணை முறையில் பருகி முடித்தவள், அவனிடம் அடமானம் வைத்திருந்த என் புத்தகத்தை திரும்ப பெற்றுக் கொண்டு கிளம்பினேன்..அடுத்தடுத்த சந்திப்புகளில், எங்களைப் பற்றிய தனிப்பட்ட விவரங்கள், தவணை முறையில் பரிமாறிக் கொள்ளப்பட்டன..நான் ஒரு தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியை. அவன் ஐ.டி. எனக்கு பெற்றோர் கிடையாது. கிராமத்திலிருக்கும் உறவினர்களை விட்டு, நகரத்தில் வேலை செய்ய, ஹாஸ்டலில் தங்கியிருப்பவள். அவன், சிறு வயது முதல், அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவன்..எந்த வித அத்துமீறல்களும் இன்றி, எங்களுடைய எண்ண பரிமாற்றங்கள் தொடர்ந்தன..அந்த பரிமாற்றங்களில், பாரதியிலிருந்து, ஷெல்லி, கீட்ஸ், ஜிப்ரான் வரையிலான கவிதைகள், ஒருவரிடமிருந்து மற்றவருக்கு இடம் பெயரும்.."பாரதியின் உணர்வு பூர்வமான கவிதைகளை வெல்ல இன்னொரு கவி பிறந்து வரவேண்டும்" என்று நான் ஒவ்வொரு முறையும் தீர்ப்பு சொல்வேன். பாரதியின் ஒவ்வொரு கவிதையும், ஆழ்மனதிலிருந்து, பிறந்தது… கலப்படமில்லாத தாய்யைப் போன்றது…" என்று சிலாகிப்பேன்.."ஓர் ஆங்கில ஆசிரியைக்கு, பாரதி மீது எப்படி இவ்வளவு பற்று..?" நவீன்ஒருமுறை வியப்பாக கேட்டான்.."பதினைந்துக்கும் மேற்பட்ட மொழிகள் தெரிந்த பாரதிக்கும், தமிழ் மீதுதான் அதிகப் பற்று. அதனால்தான், 'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்'னு பாடினார்…!" என்னுடைய பதிலை ஒப்புக்கொண்டதற்கு அடையாளமாக, சபாஷ் என்றான்..ஒவ்வொரு சந்திப்பிலும், இது போன்ற வியப்புகளை பரிமாறிக் கொள்ள, நாங்கள் தவறியதில்லை.."வியப்பில்தான், வாழ்க்கையின் சந்தோஷம் அடங்கியிருக்கிறது. மற்றவர்களின் செயலை பார்த்து நாம வியக்கணும்…இல்லைன்னா, நம்மை பார்த்து, மற்றவங்க வியக்கணும்…" என்பான்..விடுமுறை நாட்களில், ஏழைப் பெண்களுக்கு சானிடரி நாப்கின் வழங்குவதிலிருந்து, மாணவ மாணவிகளுக்கு இலவச ட்யூஷன் எடுப்பது வரையிலான என்னுடைய நடவடிக்கைகளைப் பற்றி, நான் அவனிடம் பெருமையாக சொன்னதில்லை..'தனி ஒருவனுக்கு உணவில்லையெனில், ஜகத்தினை அழித்திடுவோம்' என்ற பாரதியின் முழக்கம் தனக்கு மிகவும் பிடித்த ஒன்று என்று அவன் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஆனால், இரவு நேரங்களில்,, உணவின்றி, தெரு மேடைகளில் படுத்து தவிப்பவர்களுக்கு உணவு பொட்டலம் வழங்குவதிலிருந்து, ஆபத்து கட்டத்தில் இருப்பவர்களின் உயிரை காப்பாற்ற தேவையான ரத்த தானம் அளிப்பது வரையிலான, அவனுடைய மௌன நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை, அவன் என்னிடம் பகிர்ந்த தில்லை. சில பயனாளிகள், தற்செயலாக என்னிடம் பகிர்ந்த விஷயங்கள் அவை.."வருங்காலத்தில், யாரைப் போல் வாழ்க்கையில் உயர்வதற்கு ஆசை..?" என்ற என்னுடைய கேள்விக்கு, 'பில் கேட்ஸ்' என்று யோசிக்காமல் பதில் சொன்னான்.."பணக்காரனாக ஆசையா..?"."எல்லோருக்கும் உதவி செய்வதற்கு ஏராளமான பணம் தேவை. அனாதையான என்னை வளர்த்து, மனிதனாக்கிய இந்த சமூகத்திற்கு, மனிதத்தை அள்ளிக் கொடுக்க ஆசை. விளம்பரம் இன்றி, தேவையானவர்களுக்கு உதவி செய்யும் எண்ணம் நிறைந்த பத்து பேரையாவது உருவாக்க ஆசை.." என்று, தன் ஆசைகளை பட்டியலிட்டு, என்னை வியப்பில் ஆழ்த்தினான்..இந்த மாதிரி வியப்புகளின் தொகுப்பு, என் பார்வையில் அவனை ஒரு ஹீரோவாக உயர்த்திப் பிடிக்க துவங்கியதை உணர ஆரம்பித்தேன். அந்த வியப்பான உணர்வுகளைப் பற்றி, தக்க தருணத்தில், அவனிடம் விரிவாக பேச வேண்டும் என்று நினைத்து, அந்த தருணத்திற்காக காத்திருந்தேன்..அப்பொழுதுதான், எனக்கு அந்த டெலிபோன் அழைப்பு வந்தது..யாருக்கு என்ன உதவி தேவையோ என்ற நினைப்பில், அழைப்பு வந்த ஆஸ்பத்திரிக்கு விரைந்து, ரிசப்ஷனில் ஆஜரானேன்.."நவீன்ங்கறவரை உங்களுக்கு தெரியுமா..?"."ஆமா..அவருக்கு என்ன ஆச்சு..?"."ரோடு ஆக்ஸிடெண்டில், பலத்த காயம்..ஐ.சி.யுல இருக்கார். போன் லாக் ஆனதால, அவருடைய பர்சை திறந்து பார்க்க வேண்டியதாப் போச்சு. அதில, உங்க தொடர்பு விவரங்கள் இருந்தது. நீங்க அவருக்கு என்ன வேணும்…?" எமெர்ஜன்சி ஆபரேஷனுக்கு உடனடியா பணம் கட்டி, சம்மத கையெழுத்து போடணும்.."ஆஸ்பத்திரி பி.ஆர்.ஓ நிறுத்தாமல் பேசினார்..மனதிலுறுதி வேண்டும்..என்ற வரிகளை வாய், ஒரு பக்கம் முணுமுணுத்தது. கட்டணத்தை செலுத்துவதற்கு, வங்கி அட்டையை கொடுத்து, பின் நம்பரை அழுத்துவதிலும், ஒப்புதல் கையொப்பம் இடுவதிலும் கை மறுபக்கம் வேகமாக வேலை செய்தது..சில நாட்கள் காத்திருப்பிற்கு பிறகு, டாக்டரை சந்தித்தேன்.இதே ஆஸ்பத்திரியில், எமெர்ஜென்சியில இருக்கிற ஒரு பேஷண்டுக்கு ரத்தம் கொடுத்துட்டு, மெயின் ரோடுக்கு திரும்பும் போதுதான், இந்த ஆக்ஸிடென்ட் நடந்திருக்கு. எதிர் திசையில் வந்த லாரி சாலை தடுப்பில் மோதி, கண்ட்ரோல் இழந்து, இவர் மேல் மோதிடுச்சுன்னு, போலீஸ் விசாரிப்பில் தெரிய வந்திருக்கு.."."அவர் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் அதிசயம் இல்லை ..அதுக்காகவே பிறந்திருப்பவர் போலவே உதவிக்கு ஓடுவார்…அவர் உயிருக்கு ஒன்னும் ஆபத்து இல்லையே டாக்டர்..?" தழுதழுக்கும் குரலில் கேட்டேன்.."உயிர் பிழைச்சது அதிசயம்தான்..ஆனா.." என்று வார்த்தைகளை உள்ளிழுத்த டாக்டரை அடுத்து என்ன சொல்லப் போகிறார் என்று சற்று பதற்றத்துடன் கவனித்தேன்.."இந்த ஆபரேஷன், அவரை இல்லற வாழ்க்கைக்கு தகுதியில்லாதவரா ஆக்கிடுச்சு. வெளிப்படையா சொல்லணும்னா, ஒரு குழந்தைக்கு தகப்பனாகும் உடல் தகுதியை இழந்துட்டார். இதை அவரிடமே தெரிவிச்சுட்டோம்..இப்ப, சுய நினைவோட பேசறார்..நீங்க போய் பார்க்கலாம்..!" என்றார்..எதுவுமே நடவாதது போல், அதே புன் சிரிப்புடன், நவீன் என்னை வரவேற்றான்.."எனக்கு ஒன்னும் இல்ல..நாளு நாளில் வீட்டுக்கு போயிடலாம்னு டாக்டர் சொல்லிட்டார்…"."யார் வீட்டுக்கு போவீங்க..?' என்றேன்.."ஏன்..என் வீட்டுக்குத்தான்…"."நம்ம வீட்டுக்குன்னு சொல்லுங்க..…!'."நீங்களே தனியா இருக்கீங்க..என்னை எப்படி..?"."ஏன்..என் கூட தங்குவதற்கு பயமா. ஹாஸ்டலிலிருந்து வீட்டுக்கு மாறிட்டேன். .நான் உங்களை நல்லா கவனிச்சுக்குவேன் நவீன்.. " ஒன்றும் தெரியாதது போல் பேசினேன்.."ஒருத்தரை, கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ வேண்டிய பெண்..அதான் சொன்னேன்…"."ஏன்..என்னை கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்லையா..?"."உங்க வாழ்க்கையை பாலைவனமாக்க நான் விரும்பலை. குழந்தை குட்டியோட நீங்க சந்தோஷமா வாழனுங்கறதுதான் என் மனப்பூர்வமான ஆசை"அவனுடைய தைரியத்தை மீறி, அவன் கண்களிலிருந்து கண்ணீர் பெருகி வழிந்தது.."எல்லாவற்றையும் டாக்டர் சொல்லிட்டார் நவீன். 'அச்சமில்லை..அச்சமில்லை..அச்சமென்பதில்லையேன்னு ஒரு தடவை நாம ரெண்டு பேரும் சேர்ந்து பாடுவோம். மனசில் படிந்திருக்கிற அச்சமெல்லாம் பறந்து போகும். !".ஆழ் மனதிலிருந்து பாடினோம்.. அந்த வரிகளையே திரும்ப திரும்ப பாடினோம். அந்த ஒலி, மனதில் ஒரு உத்வேகத்தை உண்டு பண்ணியதை எங்களால் உணர முடிந்தது..அந்த சமயத்தில், தன்னுடன் அழைத்து வந்த ஒருவரை, டாக்டர் எங்களுக்கு அறிமுகப் படுத்தினார்..வந்தவர், .நவீனுடைய கைகளை, தன் இரு கைகளாலும் பற்றிக் கொண்டு 'உங்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கின என்னை மன்னிச்சுடுங்க' என்றார்..எதுவும் புரியாமல், நவீன் அவரை பார்த்தான்.."ஆக்ஸிடென்ட் பண்ணது, எனக்கு சொந்தமான லாரிகளில் ஒன்னுதான். என் ஒரே மகன், இந்த ஆஸ்பத்திரியில் சீரியஸ் கண்டிஷனில் இருந்தபோது, தக்க தருணத்தில், அரிய வகை ரத்தத்தை கொடுத்துட்டு வெளியே வந்தபோதுதான், உங்களுக்கு ஆக்ஸிடெண்ட் ஆகியிருக்கு. அவனுடைய உயிரை காப்பாற்றி இருக்கீங்க. இந்த ஆக்சிடெண்ட், உங்களுக்கு பெரிய பாதிப்பை உண்டு பண்ணிட்டுதுன்னு கேள்வி பட்டேன். பழுதான உடல் உறுப்புகளை என்னால் திருப்பிக் கொடுக்கமுடியாது. லாரியை கவனக்குறைவா ஓட்டிய டிரைவர், போலீஸில் சரண்டர் ஆயிட்டார். சட்ட செயல்பாட்டை தவிர, என்னுடைய மன திருப்திக்காக, இந்த தொகையை நீங்க மறுக்காமல் வாங்கிக்கணும்.." என்றவர், பெரும் தொகைக்கான செக்கை அவன் கையில், வலுக்கட்டாயமாக திணித்து, விடை பெற்றார்..உங்க கற்பனையில் உதித்த கனவுகள் நிறைவேறுவதற்கு, இந்த ஆக்சிடென்ட் உதவியிருக்குன்னு சந்தோஷப்படுங்க. வாழ்க்கையில், மனசுக்கு பிடிச்ச நல்ல காரியங்களை செய்வதன் மூலம், உடல் காயங்களை மறந்துடலாம். நீங்க கற்பனை செய்து வைத்திருந்த, அந்த பத்து நல்ல பிரஜைகளை உருவாக்குவதற்கு தேவையான செயல்பாடுகளை முன்னெடுத்து செல்வோம்…என்னுடைய நேர்மறை வார்த்தைகள், நவீனின் எண்ணங்களை உறுதிபடுத்தியிருக்க வேண்டும் என்பது, அவனுடைய தீர்க்கமான பார்வையிலிருந்து அறிய முடிந்தது.."இந்த பணத்தை பயன்படுத்தி, ஆதரவற்ற குழந்தைகளுக்காக, ஒரு இல்லம் தொடங்குவோம். அந்த குழந்தைகளுக்கு, மற்ற நல்ல குணங்களோடு, மற்றவர்களுக்கு உதவும் குணத்தையும் விதைத்து வளர்ப்போம். ஆல விழுதுகளாக, நம்ம பிள்ளைகள் மூலம், அந்த குணம் சமூகத்தில் பரவினால், அதைவிட மன சந்தோஷம் நமக்கு வேற என்னவாக இருக்க முடியும்…?".என் பேச்சை, நவீன் முழுவதும் ஏற்றுக் கொண்டான் என்பது, 'அப்ப இந்த செக்கை பாங்கில் போட்டுடுவோம்..' என்று சொன்னதிலிருந்து வெளிப்பட்ட து..இந்த நிலையில்தான், என் டைரி குறிப்பை நிறுத்தியிருந்தேன்..ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன பிறகு,சில மாதங்கள் ஓய்விலிருந்த நவீன், தன்னுடைய கனவுகளை செயல்படுத்துவதற்கான, அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டதன் பலனாக, ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லம் துவங்குவதற்கான அனுமதி கிடைத்தது,.நாங்கள் துவங்கி நடத்தப் போகும் 'பாரதி பாலர் இல்லம்' இன்று திறக்கப்படவிருக்கிறது. அது சம்பந்தப்பட்ட பணிகளை முன்னெடுத்து செல்வதற்கு, நவீன் விடியற்காலையிலேயே கிளம்பி, சென்று விட்டான்..பூமி மீது, தண்ணீரை பொழிவதற்கு, மேகக் கூட்டங்கள் ஒன்று சேர்வது போல், இரண்டற கலந்த எண்ணக் கூட்டங்கள் மூலம், சமூகத்துக்கு நல்லது செய்ய முயற்சிப்போம் என்ற நம்பிக்கை எங்களுக்குள் துளிர்த்து வளர துவங்கிவிட்டது என்பதை நினைத்தால், உள்ளத்தில் ஆனந்த களிப்பு மேலிடுகிறது..'நினைவு நல்லது வேண்டும்'..என்ற பாரதியின் வரிகளின் படி, நல்ல எண்ணங்கள் முழுவதும் நிறைவேற தடை எதுவும் இல்லைதானே?