உத்தவ கீதை – 22.– டி.வி. ராதாகிருஷ்ணன்.கண்ணா…இந்த யோகம் மனத்தைக் கட்டுப்படுத்த முடியாத சாதாரணமானவர்களுக்கு மிகவும் கடினமானது என எண்ணுகிறேன். மிகப்பெரிய யோகிகள் மனத்தை அடக்கும் முயற்சியில் தோல்வியை அடைகிறார்கள். ஆகையால், முக்தி அடைய எளிய மார்க்கத்தைத் தெரியப்படுத்துங்கள்..யோகிகள் உன் பாதங்களைச் சரணடைந்து இன்பத்தை அடைகிறார்கள்..உன்னால் ஏற்படுத்தப்பட்ட மாயையும்,கல்வி ஞானமும், யோக சித்தியும் அப்படிப்பட்டவர்களுக்குத் தொல்லை கொடுப்பதில்லை..அப்படிப்பட்ட பக்தர்களின் பக்தியில் கட்டுண்டு கிடக்கிறாய்..குரங்கு, கரடி (ஹனுமான், ஜாம்பவான்) போன்ற பிராணிகளிடமும் அன்புடன் நட்பு செலுத்துகிறாய். நீ எப்படிப்பட்டவன்? பிரம்மனே தன் தலையால் உன் பாதங்களில் பாதசேவை செய்கிறான்..வேண்டுபவர்களுக்கு வரமளிப்பவன் நீ. உனக்கு நாங்கள் என்ன கைம்மாறு செய்யமுடியும்? நீ வெளிப்புறத்தில் குருவாகவும், என்னுள்ளே ஆன்மாவாகவும் விளங்குகிறாய். நீயே விஷ்ணுவாகவும், பிரம்மாவாகவும், சிவனாகவும் விளங்குகிறாய். அவர்களின் மூலம் சத்துவ, ரஜோ, தமோ குணங்களின் தலைவனாயிருக்கிறாய்… உலகத்தை ஆட்டிப் படைக்கிறாய்….உத்தவருக்கு கண்ணன் சொல்லலானார்….உத்தவரே! எனக்குப் பிடித்தமான உன்னதமான வழியை உனக்கு உபதேசிக்கிறேன்.இதை நீ அறிந்தால் வெல்ல முடியாத மரணத்தையும் வெல்லலாம்..மனத்தையும், புத்தியையும் எனக்கு அர்ப்பணித்து, மனமும், ஆன்மாவும் எனக்கு பிரியமான கர்மாக்களைச் செய்ய , எல்லா செயல்களையும் எனக்குப் பணித்து விடு..புனிதர்கள் வாழும் பூமியில் வாழ்ந்து, என் பக்தர்களின் வழியையே பின்பற்று..தனியாக, அல்லது பலருடன் சேர்ந்து புண்ணிய நாட்களில் ஆராதனை செய்..தூயமனத்துடன் எல்லா உயிர்களும் என் உருவங்கள் என்று உணர்ந்து, ஆத்மா என்பது உள்ளும் புறமும் ஆகாயத்தைப் போல பரவியுள்ளது என்பதை உணர வேண்டும்..சுத்தமான ஞானமடைந்து, எதிரில் காணப்படும் சண்டாளனையும், பிராமணனையும் ஒரே நிலையில் பார்க்கும் மனநிலை உண்டாக வேண்டும். அதேபோல… திருடனையும், நல்ல மனமுடையவனையும், சிறு நெருப்பையும், சூரியனையும், முரடனையும், நல்ல குணமுடையவனையும் நேசித்துப் பார்க்கும் மனநிலை ஏற்பட வேண்டும். போட்டி, பொறாமை, ஏளனம் செய்தல், அகங்காரம் ஆகியவைகள் என்னை நினைப்பவனிடம் இருந்து விலகிவிடும்..மற்றவர்களின் ஏளனம் போன்றவற்றை பொருட்படுத்தாமல், மான, அவமானம் கருதாமல் உலகில் படைக்கப்பட்ட சண்டாளன் முதல், நாய், கழுதை போன்றவற்றின் முன்னாலும் உடல் கீழே விழுந்து வணங்கும் மனப்பான்மை வேண்டும்..எண்ணம், வார்த்தைகள், சொற்கள், செயல் எல்லாவற்றையும் கடவுளின் அம்சமாக எண்ண வேண்டும்..அப்படிப்பட்டவனுக்கு, ஞானத்தால் எல்லாமே பிரம்மமாகும். எல்லாவற்றிலும் ஆன்மாவே ஒளிருவதைக் காண்பான். அவன் மனதில் எந்த சந்தேகமும் எழாது. அப்படிப்பட்டவன் எல்லாவற்றையும் இறைவனிடம் அர்ப்பணிப்பான். தானாகச் செயல்கள் நின்றுவிடும்..உத்தவரே! இதுவே சிறந்த மதமாகும். காரணம் எல்லா ஆசைகளும் நசித்துப் போகின்றன. முக்குணங்களின் செயல்களும் செயலற்றுப் போகின்றன. செயல்கள் செய்யப்பட்டாலும் சுயலாபமில்லாததால் அவை எனக்கே அர்ப்பணிக்கப்பட்டவை..அப்படிப்பட்ட ஞானமுள்ளவன் என்றும்… எப்போதும் நிலைத்து நிற்கும் அன்னை அடைகிறான்..உத்தவரே! சிறுசிறு தெய்வங்களுக்குக் கூட புலப்படாத பிரம்மத்தைப் பற்றிய ஞானத்தை உமக்கு அளித்தேன்..பகுத்தறிவின் அடிப்படையில் பிரம்ம ஞானத்தைப் பற்றிபலமுறை உமக்கு விளக்கியுள்ளேன்..இவற்றை அறிந்து மனதின் சந்தேகங்களும்,சஞ்சலங்களும் நீங்கி மனிதன் முக்தி அடைகிறான்..உத்தவரே! நீர் கேட்ட கேள்விகளையும், நான் கூறிய பதில்களையும் கேட்டு அறிந்தவன் பிரம்மத்தை அடைகிறான். இதுவே வேதங்களின் முடிவு..இதை, எனது பக்தர்களுக்கு அர்ப்பணிக்கிறேன். காரணம், இது தூய்மையான ஞானமாகும்..புனிதமானதும், சுத்தப்படுத்துவதுமான இதைத் தினம் படிப்பவன்,பிறர்க்குத் தூய ஞானம் அளிப்பதால் தூய்மை அடைவான்..இதைத் தினமும் நம்பிக்கையுடன், கவனத்துடன் கேட்டு… என்னிடம் பக்தி கொள்பவன், கர்மங்களில் கட்டுப்பட்டவனில்லை..உத்தவரே! என் அன்பு நண்பரே! பிரம்மத்தையப் பற்றி நன்றாக புரிந்து கொண்டீரே… இப்போது உங்களின் மனத்திலுள்ள மயக்கமும், கவலைகளும் தீர்ந்துவிட்டனவா?.நீங்கள் இந்த அறிவுரையை நம்பிக்கையில்லாதவர்களுக்கும், மோசடி செய்பவர்களுக்கும், கேட்கப் பிரியமில்லாதவர்களுக்கும், பக்தியில்லாதவர்களுக்கும் தெரியப்படுத்தக் கூடாது..குற்றமற்ற, என் மீது பக்தியுள்ள நல்லவர்களிடமும்…பெண்களிடமும் எடுத்துச் சொல்லுங்கள்..எப்படி அமிர்தத்தைச் சாப்பிட்டபின், மற்ற எந்தப் பானத்தையும் யாரும் உண்ணமாட்டார்களோ, அதுபோல, இதையறிந்தபின், அறிய வேண்டியது உலகில் வேறொன்றுமில்லை..உமக்கு, அறம், பொருள், இன்பம், மோட்சம் என்றவற்றையெல்லாம் கொடுக்கும் சிறந்த வழியைக் கூறினேன்..எல்லாக் கர்மங்களையும் துறந்து, என்னைச் சரணடைகிறவன், முக்தி நிலையை அடைந்து என்னில் கலக்கிறான்..இவையெல்லாம், காது குளிரக் கேட்டு, கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கி, மனதில் ஆனந்த பரவசம் மேலிட கைகளை கூப்பி, பின்பு, கண்ணனின் பொற்பாதங்களில் சரணம் செய்து உத்தவர் கூறினார்….பிரம்மத்தின் திருவுருவே! என் மனத்தில் இருந்த கர்மங்கள் எல்லாம் நீங்கின. நெருப்பின் அருகில் இருந்தால் இருட்டும், குளிரும், பயமும் என்ன செய்ய முடியும்?.உமது சேவகனுக்கு, அறிவென்னும் விளக்கை ஏற்றி வைத்தாய். உன் பெருமையை உணர்ந்தவர்கள், உன் பாதங்களை விட்டு வேறு ஏதாவது ஒன்றை நாடுவார்களா?.உம்மை வணங்குகிறேன். உம்மை சரணடைகிறேன்… உம் மீது இடையறா பக்தி அடைய நான் செய்ய வேண்டும்?.இதற்கு கிருஷ்ணன் சொன்னது…..எனது உத்தரவின் பேரில் எனது ஆஸ்ரமாகிய "பத்ரிகாஸ்ரமம்" செல்லுங்கள். எனது பாதத்திலிருந்து உண்டான "அலக்நந்தா" நதி அங்கேயுள்ளது. அதனால் உமது பாவங்கள் யாவையும் நீங்கிவிடும். நீரும் புனிதமடைவீர்..பின்பு, மரவுரி தரித்து… கிடைக்கும் கிழங்குகளையும், பழங்களையும் உண்டு, ஏற்படும் துன்பங்களையெல்லாம் மனத்தில் தாங்கி, இன்பங்களை ஏற்று, திடமான மனதுடன், மனதை ஒருமைப்படுத்தி, நான் கூறியவற்றை நினைத்து, என்னையே தியானிப்பீராக..இதனால்… முக்குணங்களின் பிடியிலிருந்து விடுபட்டு என்னை அடைவீர்கள்..பின், உத்தவர், கிருஷ்ணனை கைகளைக் கூப்பி வலம் வந்து, தன் தலையைக் கண்ணனின் பாதங்களை அமர்த்தி பாத சேவை செய்து, கண்ணிரால் கழுவி, இன்பம்… துன்பம் எனும் இரண்டிலிருந்து விடுபட்டு, கண்ணனிடம் இருந்து பிரிய வேண்டும் என்று தீர்மானித்து, மனத்தில் துயரத்துடன்… கிருஷ்ணனின் காலடிகளைத் தன் தலைமீது வைத்து வணங்கி, பின்பு கிருஷ்ணனின் உருவத்தை மனத்தில் இருத்தி இறைவனின் கட்டளைப்படி பத்ரிநாத் பயணமானார்..உத்தவருக்குப் பகவான் கிருஷ்ணனால் அளிக்கப்பட்ட அறிவுரையை நம்பிக்கையுடன் கேட்டவர்கள், படித்தவர்கள், யோகத்தின் பலனை அடைந்து பக்தியால்… ஆனந்தமெய்தி, உலகத்திலிருந்து விடுபட்டு முக்தி அடைவார்கள். வேதங்களால் விவரிக்கப்பட்ட முதற்பொருள், பிறவியினின்று விடுதலையளிப்பவன் அவனே! எப்படித் தேனீ, தேன் எடுக்கிறதோ… அதுபோல வேதங்களின் சாரத்தை எடுத்து, பாற்கடலிலிருந்து அமிர்தம் எடுத்தது போல எடுத்து, தன் அடியார்களுக்கு ஞானம் வழங்கும், முதற் பொருளான அவனை… அத்தகைய குற்றமற்றவனாகிய கிருஷ்ணனை வணங்குவோம்!.(தொடரும்)
உத்தவ கீதை – 22.– டி.வி. ராதாகிருஷ்ணன்.கண்ணா…இந்த யோகம் மனத்தைக் கட்டுப்படுத்த முடியாத சாதாரணமானவர்களுக்கு மிகவும் கடினமானது என எண்ணுகிறேன். மிகப்பெரிய யோகிகள் மனத்தை அடக்கும் முயற்சியில் தோல்வியை அடைகிறார்கள். ஆகையால், முக்தி அடைய எளிய மார்க்கத்தைத் தெரியப்படுத்துங்கள்..யோகிகள் உன் பாதங்களைச் சரணடைந்து இன்பத்தை அடைகிறார்கள்..உன்னால் ஏற்படுத்தப்பட்ட மாயையும்,கல்வி ஞானமும், யோக சித்தியும் அப்படிப்பட்டவர்களுக்குத் தொல்லை கொடுப்பதில்லை..அப்படிப்பட்ட பக்தர்களின் பக்தியில் கட்டுண்டு கிடக்கிறாய்..குரங்கு, கரடி (ஹனுமான், ஜாம்பவான்) போன்ற பிராணிகளிடமும் அன்புடன் நட்பு செலுத்துகிறாய். நீ எப்படிப்பட்டவன்? பிரம்மனே தன் தலையால் உன் பாதங்களில் பாதசேவை செய்கிறான்..வேண்டுபவர்களுக்கு வரமளிப்பவன் நீ. உனக்கு நாங்கள் என்ன கைம்மாறு செய்யமுடியும்? நீ வெளிப்புறத்தில் குருவாகவும், என்னுள்ளே ஆன்மாவாகவும் விளங்குகிறாய். நீயே விஷ்ணுவாகவும், பிரம்மாவாகவும், சிவனாகவும் விளங்குகிறாய். அவர்களின் மூலம் சத்துவ, ரஜோ, தமோ குணங்களின் தலைவனாயிருக்கிறாய்… உலகத்தை ஆட்டிப் படைக்கிறாய்….உத்தவருக்கு கண்ணன் சொல்லலானார்….உத்தவரே! எனக்குப் பிடித்தமான உன்னதமான வழியை உனக்கு உபதேசிக்கிறேன்.இதை நீ அறிந்தால் வெல்ல முடியாத மரணத்தையும் வெல்லலாம்..மனத்தையும், புத்தியையும் எனக்கு அர்ப்பணித்து, மனமும், ஆன்மாவும் எனக்கு பிரியமான கர்மாக்களைச் செய்ய , எல்லா செயல்களையும் எனக்குப் பணித்து விடு..புனிதர்கள் வாழும் பூமியில் வாழ்ந்து, என் பக்தர்களின் வழியையே பின்பற்று..தனியாக, அல்லது பலருடன் சேர்ந்து புண்ணிய நாட்களில் ஆராதனை செய்..தூயமனத்துடன் எல்லா உயிர்களும் என் உருவங்கள் என்று உணர்ந்து, ஆத்மா என்பது உள்ளும் புறமும் ஆகாயத்தைப் போல பரவியுள்ளது என்பதை உணர வேண்டும்..சுத்தமான ஞானமடைந்து, எதிரில் காணப்படும் சண்டாளனையும், பிராமணனையும் ஒரே நிலையில் பார்க்கும் மனநிலை உண்டாக வேண்டும். அதேபோல… திருடனையும், நல்ல மனமுடையவனையும், சிறு நெருப்பையும், சூரியனையும், முரடனையும், நல்ல குணமுடையவனையும் நேசித்துப் பார்க்கும் மனநிலை ஏற்பட வேண்டும். போட்டி, பொறாமை, ஏளனம் செய்தல், அகங்காரம் ஆகியவைகள் என்னை நினைப்பவனிடம் இருந்து விலகிவிடும்..மற்றவர்களின் ஏளனம் போன்றவற்றை பொருட்படுத்தாமல், மான, அவமானம் கருதாமல் உலகில் படைக்கப்பட்ட சண்டாளன் முதல், நாய், கழுதை போன்றவற்றின் முன்னாலும் உடல் கீழே விழுந்து வணங்கும் மனப்பான்மை வேண்டும்..எண்ணம், வார்த்தைகள், சொற்கள், செயல் எல்லாவற்றையும் கடவுளின் அம்சமாக எண்ண வேண்டும்..அப்படிப்பட்டவனுக்கு, ஞானத்தால் எல்லாமே பிரம்மமாகும். எல்லாவற்றிலும் ஆன்மாவே ஒளிருவதைக் காண்பான். அவன் மனதில் எந்த சந்தேகமும் எழாது. அப்படிப்பட்டவன் எல்லாவற்றையும் இறைவனிடம் அர்ப்பணிப்பான். தானாகச் செயல்கள் நின்றுவிடும்..உத்தவரே! இதுவே சிறந்த மதமாகும். காரணம் எல்லா ஆசைகளும் நசித்துப் போகின்றன. முக்குணங்களின் செயல்களும் செயலற்றுப் போகின்றன. செயல்கள் செய்யப்பட்டாலும் சுயலாபமில்லாததால் அவை எனக்கே அர்ப்பணிக்கப்பட்டவை..அப்படிப்பட்ட ஞானமுள்ளவன் என்றும்… எப்போதும் நிலைத்து நிற்கும் அன்னை அடைகிறான்..உத்தவரே! சிறுசிறு தெய்வங்களுக்குக் கூட புலப்படாத பிரம்மத்தைப் பற்றிய ஞானத்தை உமக்கு அளித்தேன்..பகுத்தறிவின் அடிப்படையில் பிரம்ம ஞானத்தைப் பற்றிபலமுறை உமக்கு விளக்கியுள்ளேன்..இவற்றை அறிந்து மனதின் சந்தேகங்களும்,சஞ்சலங்களும் நீங்கி மனிதன் முக்தி அடைகிறான்..உத்தவரே! நீர் கேட்ட கேள்விகளையும், நான் கூறிய பதில்களையும் கேட்டு அறிந்தவன் பிரம்மத்தை அடைகிறான். இதுவே வேதங்களின் முடிவு..இதை, எனது பக்தர்களுக்கு அர்ப்பணிக்கிறேன். காரணம், இது தூய்மையான ஞானமாகும்..புனிதமானதும், சுத்தப்படுத்துவதுமான இதைத் தினம் படிப்பவன்,பிறர்க்குத் தூய ஞானம் அளிப்பதால் தூய்மை அடைவான்..இதைத் தினமும் நம்பிக்கையுடன், கவனத்துடன் கேட்டு… என்னிடம் பக்தி கொள்பவன், கர்மங்களில் கட்டுப்பட்டவனில்லை..உத்தவரே! என் அன்பு நண்பரே! பிரம்மத்தையப் பற்றி நன்றாக புரிந்து கொண்டீரே… இப்போது உங்களின் மனத்திலுள்ள மயக்கமும், கவலைகளும் தீர்ந்துவிட்டனவா?.நீங்கள் இந்த அறிவுரையை நம்பிக்கையில்லாதவர்களுக்கும், மோசடி செய்பவர்களுக்கும், கேட்கப் பிரியமில்லாதவர்களுக்கும், பக்தியில்லாதவர்களுக்கும் தெரியப்படுத்தக் கூடாது..குற்றமற்ற, என் மீது பக்தியுள்ள நல்லவர்களிடமும்…பெண்களிடமும் எடுத்துச் சொல்லுங்கள்..எப்படி அமிர்தத்தைச் சாப்பிட்டபின், மற்ற எந்தப் பானத்தையும் யாரும் உண்ணமாட்டார்களோ, அதுபோல, இதையறிந்தபின், அறிய வேண்டியது உலகில் வேறொன்றுமில்லை..உமக்கு, அறம், பொருள், இன்பம், மோட்சம் என்றவற்றையெல்லாம் கொடுக்கும் சிறந்த வழியைக் கூறினேன்..எல்லாக் கர்மங்களையும் துறந்து, என்னைச் சரணடைகிறவன், முக்தி நிலையை அடைந்து என்னில் கலக்கிறான்..இவையெல்லாம், காது குளிரக் கேட்டு, கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கி, மனதில் ஆனந்த பரவசம் மேலிட கைகளை கூப்பி, பின்பு, கண்ணனின் பொற்பாதங்களில் சரணம் செய்து உத்தவர் கூறினார்….பிரம்மத்தின் திருவுருவே! என் மனத்தில் இருந்த கர்மங்கள் எல்லாம் நீங்கின. நெருப்பின் அருகில் இருந்தால் இருட்டும், குளிரும், பயமும் என்ன செய்ய முடியும்?.உமது சேவகனுக்கு, அறிவென்னும் விளக்கை ஏற்றி வைத்தாய். உன் பெருமையை உணர்ந்தவர்கள், உன் பாதங்களை விட்டு வேறு ஏதாவது ஒன்றை நாடுவார்களா?.உம்மை வணங்குகிறேன். உம்மை சரணடைகிறேன்… உம் மீது இடையறா பக்தி அடைய நான் செய்ய வேண்டும்?.இதற்கு கிருஷ்ணன் சொன்னது…..எனது உத்தரவின் பேரில் எனது ஆஸ்ரமாகிய "பத்ரிகாஸ்ரமம்" செல்லுங்கள். எனது பாதத்திலிருந்து உண்டான "அலக்நந்தா" நதி அங்கேயுள்ளது. அதனால் உமது பாவங்கள் யாவையும் நீங்கிவிடும். நீரும் புனிதமடைவீர்..பின்பு, மரவுரி தரித்து… கிடைக்கும் கிழங்குகளையும், பழங்களையும் உண்டு, ஏற்படும் துன்பங்களையெல்லாம் மனத்தில் தாங்கி, இன்பங்களை ஏற்று, திடமான மனதுடன், மனதை ஒருமைப்படுத்தி, நான் கூறியவற்றை நினைத்து, என்னையே தியானிப்பீராக..இதனால்… முக்குணங்களின் பிடியிலிருந்து விடுபட்டு என்னை அடைவீர்கள்..பின், உத்தவர், கிருஷ்ணனை கைகளைக் கூப்பி வலம் வந்து, தன் தலையைக் கண்ணனின் பாதங்களை அமர்த்தி பாத சேவை செய்து, கண்ணிரால் கழுவி, இன்பம்… துன்பம் எனும் இரண்டிலிருந்து விடுபட்டு, கண்ணனிடம் இருந்து பிரிய வேண்டும் என்று தீர்மானித்து, மனத்தில் துயரத்துடன்… கிருஷ்ணனின் காலடிகளைத் தன் தலைமீது வைத்து வணங்கி, பின்பு கிருஷ்ணனின் உருவத்தை மனத்தில் இருத்தி இறைவனின் கட்டளைப்படி பத்ரிநாத் பயணமானார்..உத்தவருக்குப் பகவான் கிருஷ்ணனால் அளிக்கப்பட்ட அறிவுரையை நம்பிக்கையுடன் கேட்டவர்கள், படித்தவர்கள், யோகத்தின் பலனை அடைந்து பக்தியால்… ஆனந்தமெய்தி, உலகத்திலிருந்து விடுபட்டு முக்தி அடைவார்கள். வேதங்களால் விவரிக்கப்பட்ட முதற்பொருள், பிறவியினின்று விடுதலையளிப்பவன் அவனே! எப்படித் தேனீ, தேன் எடுக்கிறதோ… அதுபோல வேதங்களின் சாரத்தை எடுத்து, பாற்கடலிலிருந்து அமிர்தம் எடுத்தது போல எடுத்து, தன் அடியார்களுக்கு ஞானம் வழங்கும், முதற் பொருளான அவனை… அத்தகைய குற்றமற்றவனாகிய கிருஷ்ணனை வணங்குவோம்!.(தொடரும்)