'பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு(EWS) 10% இடஒதுக்கீடு செல்லும்" - தீர்ப்பு வந்தது, அடுத்தது என்ன?

'பொருளாதாரத்தில் பின்தங்கிய   உயர் வகுப்பினருக்கு(EWS) 10% இடஒதுக்கீடு செல்லும்" - தீர்ப்பு வந்தது, அடுத்தது என்ன?

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் விளைவுகள் என்னவாக இருக்கும்?எதிர்ப்பாளர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

ஒரு பார்வை

ல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித் அடங்கிய 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில் 3:2 என்ற விகிதத்தில் வெளியாகியுள்ள இந்த தீர்ப்பின் மூலம், பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்கு வழிவகுத்த 103ஆவது அரசியல் சாசன திருத்தச் சட்டம் செல்லும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கு முன்பாக மத்திய அரசு இந்தத் திருத்தத்தைக் கொண்டுவந்தது. இந்தச் சட்டத்தை எதிர்த்து பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கில்தான் இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

எதிர்பார்த்ததைப் போலவே, தமிழ்நாட்டில் இந்தத் தீர்ப்புக்கு பரவலான எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.

தீர்ப்பு வெளிவந்தவுடன் இது குறித்து அறிக்கை வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "இந்த வழக்கில் இன்று வெளியாகியுள்ள தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என்றே கருத வேண்டியுள்ளது. எனினும், தீர்ப்பினை முழுமையாக ஆராய்ந்து சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து, சமூகநீதிக்கு எதிரானதான முன்னேறிய வகுப்பினருக்கான இந்த இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான நமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும்," என்று கூறியிருக்கிறார்.

இந்தத் தீர்ப்பைப் பொறுத்தவரை, அதனை ஏற்காதவர்கள் சீராய்வு மனுத் தாக்கல் செய்யலாம். ஆனால், அதில் தீர்ப்பு மாறி வருவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. 'சீராய்வு' என்று சென்றாலும் இதே தீர்ப்புதான் வர வாய்ப்புள்ளது. என்கிறார் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கருணாநிதி.

இந்திய பிற்படுத்தப்பட்டோர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கருணாநிதி
இந்திய பிற்படுத்தப்பட்டோர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கருணாநிதி

ஆனால், இந்த பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு தொடரும்பட்சத்தில், 50 சதவீத இட ஒதுக்கீடுதான் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு போய்விடும். மாநில அரசுகள் தங்கள் விருப்பப்படி, இட ஒதுக்கீட்டு விகிதத்தை மாற்றி அமைத்துக்கொள்ள முடியும். முடிவில் விகிதாச்சார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை நோக்கி நகரலாம். ஆனால், அதற்கான அழுத்தம் வெளியிலிருந்து வரவேண்டும்" என்கிறார் கருணாநிதி.

தற்போது தமிழ்நாட்டு அரசு வழங்கும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு கிடையாது. இந்தத் தீர்ப்பு இதைக் கட்டாயப்படுத்துகிறதா? என்று கேட்டபோது, "இல்லை. பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு அளிப்பது செல்லும் என்றுதான் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ஆனால், ஒரு அரசு அதைச் செயல்படுத்தியே ஆகவேணடுமெனச் சொல்லவில்லை. ஆகவே, மாநிலங்கள் கொடுத்து ஆக வேண்டும் என்று சொல்ல முடியாது" என்கிறார் கருணாநிதி.

இதற்கிடையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுவைத் தாக்கல் செய்யப்போவதாகச் சொல்லியிருக்கிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. விடுதலை சிறுத்தைகள் கட்சி தாக்கல் செய்யும். இந்த வழக்கில் மனு தாக்கல் செய்த தி.மு.க. உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தனி நபர்களும் இத்தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வர் என நம்புகிறோம்" என திருமாவளவன் கூறியிருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com