மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்த தமிழர்கள்…

மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்த தமிழர்கள்…

சுதந்திர இந்தியாவில் இதுவரை ஆறு தமிழர்கள் மத்திய நிதி அமைச்சர்களாக இருந்து மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர்.

1947ஆம் ஆண்டு இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுதலை அடைந்து, அதிலிருந்து இன்றுவரை 73 முறை முழுமையான பட்ஜெட்டுக்கள் தாக்கல் செய்யப் பட்டுள்ளன. இடைக்கால பட்ஜெட் 14 முறை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 4 முறை சிறப்பு பட்ஜெட்டுகள் தாக்கல் செய்யப்பட்டன.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஆறு பேர் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, முதல் முதலில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தவரும் தமிழர்தான் என்பது பெருமைக்குரியது.

ஆர். கே. சண்முகம் செட்டியார்

1947ஆம் ஆண்டு இந்திய சுதந்திரத்துக்குப் பின் முதன் முதலில் மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தவர் ஆர். கே. சண்முகம் செட்டியார். கோயம் புத்தூரில் செல்வச் செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்தவர்.  மற்றும் இந்திய நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் சபாநாயகர் என்ற பல பெருமைகளை உடையவர்.

டி. டி. கிருஷ்ணமாச்சாரி

1957,1958,1964,1965 ஆகிய நான்கு ஆண்டுகள் மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தவர் டி. டி. கிருஷ்ணமாச்சாரி. இவர் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். சென்னை கிறிஸ்துவக்கல்லுரியில் படித்துப் பட்டம் பெற்றவர். அக்கல்லூரியின் பொருளியல் துறையில் வருகை தரும் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். 

சி. சுப்பிரமணியம்

1975 முதல் 1977 வரை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த சி. சுப்பிரமணியம் தமிழ்நாட்டின் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர். இந்திரா காந்தி அமைச்சரவையில் நிதி அமைச்சராக பணியாற்றினார். பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இந்திய திட்டக் கமிசனின் துணைத்தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

ஆர். வெங்கட்ராமன்

மிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர். வெங்கட்ராமன் 1980, 1981ஆம் ஆண்டுகளில் மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இந்திய அரசின் எட்டாவது குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தவர். பல அமைச்சர் பதவிகளையும் வகித்து இருக்கின்றார்.

ப. சிதம்பரம்

1997ஆம் ஆண்டு முதல் முறை நிதியமைச்சரானார் ப. சிதம்பரம். தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர் களில் அதிக முறை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தவர் இவர்தான். 9 முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார். உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

நிர்மலா சீதாராமன்

2019ஆம் ஆண்டு அருண் ஜேட்லி மறைவைத் தொடர்ந்து நிதி அமைச்சராக பதவியேற்றவர் நிர்மலா சீதாராமன். நாட்டின் முதல் பெண் நிதி அமைச்சர் என்ற பெருமை இவருக்கு உண்டு. இவர் 2019ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த ஆண்டும் தனது ஐந்தாவது பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com