? ‘ரமோன் மகசேசே’ விருதை ஏற்க கேரள முன்னாள் அமைச்சர் ஷைலஜா மறுப்பு தெரிவித்துள்ளாரே?- உஷா மதுரை ."தனிப்பட்ட திறனுக்காக இதை நான் பெற விரும்பவில்லை. நான் செய்த சேவையெல்லாம் கூட்டு முயற்சி. அதைத் தனிப்பட்ட முறையில் நான் பெறுவது சரியாக இருக்காது" என ஷைலஜா டிச்சர் தெரிவித்திருக்கிறார்.ஆனால், பிலிப்பைன்ஸ் நாட்டில் கம்யூனிஸ்டுகளை ஒடுக்கியவர் ‘ரமோன் மகசேசே’ என்பதால், அவரது பெயரால் வழங்கப்படுகிற விருதினை ஷைலஜா நிராகரிக்க அவரது கட்சி அப்படி கட்டளையிட்டிருப்பதே உண்மையான காரணம். ? பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமர் போட்டியில் தோற்று விட்டாரே?- வண்ணை கனேசன், சென்னை.கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்களில் கிட்டத்தட்ட 97 சதவீதம் பேர் வெள்ளையர்கள், 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஆண்கள். மொத்த உறுப்பினர்களில் 44 சதவீதம் பேர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள். கட்சியின் இளைய தலைமுறையினர் ரிஷிக்கு ஆதரவாக இருந்தாலும் மூத்த உறுப்பினர்கள் லிஸ் டிரஸ் பக்கம் சாய்ந்துள்ளனர். கடந்த மாதம், சில பழைய உறுப்பினர்கள் சிலர் ரிஷியை அவர்கள் விரும்பினாலும், அவர்களின் வாக்கு லிஸ் டிரஸுக்குத் தான் என்று அறிவித்திருந்தனர். சுருக்கமாகச் சொல்லுவதானால் வெள்ளையர் அல்லாதவரை பிரதமராக ஏற்கும் மனபக்குவம் கன்சர்வேட் கட்சியினரிடமில்லை. ? தமிழ்நாட்டில் நீட் தேர்ச்சி விகிதம் குறைந்தது எதை உணர்த்துகிறது?- மனோகரன், சிவகாசி. ! தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. ஆனால் தேர்ச்சி விகிதம் சற்று குறைந்துள்ளது2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 8,800 பேர் இந்த ஆண்டு கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட சுமார் 43 ஆயிரம் மாணவர்கள், கூடுதலாக நீட் தேர்வு எழுதியும் 51.28 சதவீத மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதற்கு முக்கிய காரணமாக தமிழக கல்வியாளார்கள் சொல்லுவது , "கடந்தாண்டை விட கேள்வித்தாள் இந்தாண்டு சற்று சவாலாகவே இருந்த்து. பெரும்பாலும் என்சிஇஆர்டி பாடத்திட்டம் அடிப்படையில்தான் கேள்விகள் கேட்கப்பட்டன. நீட் தேர்வுக்கு 12ஆம் வகுப்பு பாட திட்டங்கள் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு 11 ஆம் வகுப்பு பாட திட்டமும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆனால், கொரோனா குழப்பத்தால் பல பள்ளிகளில் 11ம் வகுப்பு பாடங்கள் சரிவர நடத்தப்படவில்லை. தேர்வும் நடத்தப்படவில்லை. 50 சதவீத பாட திட்டத்தைப் படிக்க முடியாமல், 12ஆம் வகுப்பை மட்டும் அடிப்படையாகக் கொண்டுதான் பெரும்பாலான மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதின் விளைவு இது. ? நிதிஷ்குமார் எதிர்கட்சிகளின் பிரதம வேட்பாளராக ஆவாரா?- பி.எஸ்.ராஜா, சென்னை.! பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் உறவை முறித்துக் கொண்டது. இந்தி பேசும் மாநிலங்களில் முதன்முறையாக மோடிக்கு எதிரான வியூகம் அவர் தலைமையில் எழும் வாய்ப்பு அதிகம். ‘2024 தேர்தலின் போது மம்தா பானர்ஜியை விட, ஒன்றுபட்ட எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக நிதிஷ் குமார் இருப்பதற்கான் சாத்தியங்களும் அதிகம். ? உலகம் உள்ளங்கையில்...' என்பதில் எந்தளவு உண்மை?- நெல்லை, குரலோன்.! உள்ளங்கையிலிருந்து விரல் நுனியில் விரியும் உலகமாகி நீண்ட நாட்களாகிவிட்டதே.? ரிக்கார்டு புத்தகங்களில் இடம்பெற சாதனைகள் செய்பவர்கள் பற்றி...!- வாசுதேவன், பெங்களூரு! “சாதனைகள் என்பது சாதித்தவரை ஊக்கப்படுத்தவும், பிறருக்கு இதுபோல் சாதிக்க வேண்டும்” என்ற உத்வேகத்தை உண்டாக்கவும் பதிவு செய்யபட்டு வந்தன. ஆனால், இப்போது சாதனைப் புத்தகத்தில் பதிவு பெற வேண்டுமென்ற ஒரே நோக்கிற்காகவும் விளம்பரத்துக்காகவும் சாதனைகளாக வர்ணிக்கப்படுவதைச் செய்கிறார்கள். 1000 அடி நீளக் கொடி போன்ற சில சாதனைகள் அபத்தமானவை. ? நாடு முழுவதும் "பி.எம். ஸ்ரீ "...பள்ளிகள் உருவாக்கும் மத்திய அரசின் திட்டம் பற்றி?- கே.ஆர்.ஜி.ஶ்ரீராமன், பெங்களூரு.! எதிர்காலத்துக்கு மாணவர்களை முழுமையாக தயார்படுத்தும் விதமாக ‘பி.எம். ஸ்ரீ பள்ளிகள்’அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இந்த அதிநவீன பள்ளிகள் தேசிய கல்விக் கொள்கை 2020 திட்டத்தின் ஆய்வகமாக இருக்கும் என்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருக்கிறார். இப்போதிருக்கும் கேந்திரிய வித்யாலயா, நவயோதையா பள்ளிகளை என்ன செய்யப் போகிறார்கள்?மத்திய கல்விக்கொள்கையை எதிர்க்கும் மாநிலங்களில் இந்தப் பள்ளிகள் எப்படி இயங்கும்? இருக்கும் விஷயத்தையே வேறு பெயரில் அறிமுகம் செய்வது மோடி அரசின் ஸ்டைல். தேசிய கல்விக்கொள்கையை நாடு முழுவதும் அறிமுகம் செய்ய இது ஆய்வகம் என்றால் அந்த மாணவர்கள் பலியாடுகளா? ? குலாம்நபி ஆசாத் புதிய கட்சி தொடங்கப் போகிறாராமே? ...- கண்ணகி, திண்டுகல்.! கட்சி ஆரம்பிக்க காரணம் “காங்கிரஸ் கட்சியின் தலைமை தன்னை மதிக்க வில்லை” என்று சொல்லியிருக்கிறார். அவருடைய நாடாளுமன்ற கடைசி நாளில் பிரதமரின் உணர்ச்சி பெருக்கான உரை, பத்ம பூஷன் விருது எல்லாம் அவருடைய புதிய கட்சி ஒரு பெரிய தேசியக் கட்சியுடன் கூட்டணியிலிருக்கப்போகிறது என்பதன் அடையாளங்கள்.? அ.தி.மு.க.வின் இரண்டு அணிகளும் இணையாமலிருப்பதினால் யாருக்கு லாபம்?- எம். இராஜேந்திரன், திருவண்ணாமலை! அரசியல் கட்சிகளுக்கு லாபமோ... இல்லையோ... சானல்களுக்கு ‘விவாதம்’ என்ற பெயரில் அரைக்க மாவு இருந்துகொண்டேயிருக்கும். ? யூ.எஸ்.ஓப்பன் போட்டிகளில் ஜோகோவிச் விளையாட அனுமதிக்கப்படாதது சரியா?- சுப்ரமணி, சாத்தூர்.! கொரோனா தடுப்புசி போட்டுக்கொள்ள மாட்டேன் என்று அவர் பிடிவாதமாக இருப்பது போல் தனி நபருக்காக விதிகளை தளர்த்த முடியாது என்ற அமைப்பும் பிடிவாதமாகயிருக்கிறது. நஷ்டம் ஜோகோவிச்சுக்கும், டென்னிஸ் ரசிகர்களுக்கும் தான்.? மதியம் மாத்திரை சாப்பிட மறந்து விடும் அம்மா 10 வருடங்களாக வெளிநாட்டில் வாழும் என்னை மறப்பதில்லையே?- சண்முக லட்சுமி சன்னிவேல் (அமெரிக்கா)! அருகில் இருப்பதை மறப்பதும் அருகாமையில் இல்லாததை நினைப்பதும் மனித இயல்பு. ஆனால், மகளை மட்டும் நினைவு வைத்துக்கொண்டு மாத்திரைகளை மறப்பது அவருக்கு நல்லதில்லை என்பதை நீங்கள் நினைவூட்டிக்கொண்டேயிருங்கள்.
? ‘ரமோன் மகசேசே’ விருதை ஏற்க கேரள முன்னாள் அமைச்சர் ஷைலஜா மறுப்பு தெரிவித்துள்ளாரே?- உஷா மதுரை ."தனிப்பட்ட திறனுக்காக இதை நான் பெற விரும்பவில்லை. நான் செய்த சேவையெல்லாம் கூட்டு முயற்சி. அதைத் தனிப்பட்ட முறையில் நான் பெறுவது சரியாக இருக்காது" என ஷைலஜா டிச்சர் தெரிவித்திருக்கிறார்.ஆனால், பிலிப்பைன்ஸ் நாட்டில் கம்யூனிஸ்டுகளை ஒடுக்கியவர் ‘ரமோன் மகசேசே’ என்பதால், அவரது பெயரால் வழங்கப்படுகிற விருதினை ஷைலஜா நிராகரிக்க அவரது கட்சி அப்படி கட்டளையிட்டிருப்பதே உண்மையான காரணம். ? பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமர் போட்டியில் தோற்று விட்டாரே?- வண்ணை கனேசன், சென்னை.கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்களில் கிட்டத்தட்ட 97 சதவீதம் பேர் வெள்ளையர்கள், 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஆண்கள். மொத்த உறுப்பினர்களில் 44 சதவீதம் பேர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள். கட்சியின் இளைய தலைமுறையினர் ரிஷிக்கு ஆதரவாக இருந்தாலும் மூத்த உறுப்பினர்கள் லிஸ் டிரஸ் பக்கம் சாய்ந்துள்ளனர். கடந்த மாதம், சில பழைய உறுப்பினர்கள் சிலர் ரிஷியை அவர்கள் விரும்பினாலும், அவர்களின் வாக்கு லிஸ் டிரஸுக்குத் தான் என்று அறிவித்திருந்தனர். சுருக்கமாகச் சொல்லுவதானால் வெள்ளையர் அல்லாதவரை பிரதமராக ஏற்கும் மனபக்குவம் கன்சர்வேட் கட்சியினரிடமில்லை. ? தமிழ்நாட்டில் நீட் தேர்ச்சி விகிதம் குறைந்தது எதை உணர்த்துகிறது?- மனோகரன், சிவகாசி. ! தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. ஆனால் தேர்ச்சி விகிதம் சற்று குறைந்துள்ளது2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 8,800 பேர் இந்த ஆண்டு கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட சுமார் 43 ஆயிரம் மாணவர்கள், கூடுதலாக நீட் தேர்வு எழுதியும் 51.28 சதவீத மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதற்கு முக்கிய காரணமாக தமிழக கல்வியாளார்கள் சொல்லுவது , "கடந்தாண்டை விட கேள்வித்தாள் இந்தாண்டு சற்று சவாலாகவே இருந்த்து. பெரும்பாலும் என்சிஇஆர்டி பாடத்திட்டம் அடிப்படையில்தான் கேள்விகள் கேட்கப்பட்டன. நீட் தேர்வுக்கு 12ஆம் வகுப்பு பாட திட்டங்கள் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு 11 ஆம் வகுப்பு பாட திட்டமும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆனால், கொரோனா குழப்பத்தால் பல பள்ளிகளில் 11ம் வகுப்பு பாடங்கள் சரிவர நடத்தப்படவில்லை. தேர்வும் நடத்தப்படவில்லை. 50 சதவீத பாட திட்டத்தைப் படிக்க முடியாமல், 12ஆம் வகுப்பை மட்டும் அடிப்படையாகக் கொண்டுதான் பெரும்பாலான மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதின் விளைவு இது. ? நிதிஷ்குமார் எதிர்கட்சிகளின் பிரதம வேட்பாளராக ஆவாரா?- பி.எஸ்.ராஜா, சென்னை.! பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் உறவை முறித்துக் கொண்டது. இந்தி பேசும் மாநிலங்களில் முதன்முறையாக மோடிக்கு எதிரான வியூகம் அவர் தலைமையில் எழும் வாய்ப்பு அதிகம். ‘2024 தேர்தலின் போது மம்தா பானர்ஜியை விட, ஒன்றுபட்ட எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக நிதிஷ் குமார் இருப்பதற்கான் சாத்தியங்களும் அதிகம். ? உலகம் உள்ளங்கையில்...' என்பதில் எந்தளவு உண்மை?- நெல்லை, குரலோன்.! உள்ளங்கையிலிருந்து விரல் நுனியில் விரியும் உலகமாகி நீண்ட நாட்களாகிவிட்டதே.? ரிக்கார்டு புத்தகங்களில் இடம்பெற சாதனைகள் செய்பவர்கள் பற்றி...!- வாசுதேவன், பெங்களூரு! “சாதனைகள் என்பது சாதித்தவரை ஊக்கப்படுத்தவும், பிறருக்கு இதுபோல் சாதிக்க வேண்டும்” என்ற உத்வேகத்தை உண்டாக்கவும் பதிவு செய்யபட்டு வந்தன. ஆனால், இப்போது சாதனைப் புத்தகத்தில் பதிவு பெற வேண்டுமென்ற ஒரே நோக்கிற்காகவும் விளம்பரத்துக்காகவும் சாதனைகளாக வர்ணிக்கப்படுவதைச் செய்கிறார்கள். 1000 அடி நீளக் கொடி போன்ற சில சாதனைகள் அபத்தமானவை. ? நாடு முழுவதும் "பி.எம். ஸ்ரீ "...பள்ளிகள் உருவாக்கும் மத்திய அரசின் திட்டம் பற்றி?- கே.ஆர்.ஜி.ஶ்ரீராமன், பெங்களூரு.! எதிர்காலத்துக்கு மாணவர்களை முழுமையாக தயார்படுத்தும் விதமாக ‘பி.எம். ஸ்ரீ பள்ளிகள்’அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இந்த அதிநவீன பள்ளிகள் தேசிய கல்விக் கொள்கை 2020 திட்டத்தின் ஆய்வகமாக இருக்கும் என்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருக்கிறார். இப்போதிருக்கும் கேந்திரிய வித்யாலயா, நவயோதையா பள்ளிகளை என்ன செய்யப் போகிறார்கள்?மத்திய கல்விக்கொள்கையை எதிர்க்கும் மாநிலங்களில் இந்தப் பள்ளிகள் எப்படி இயங்கும்? இருக்கும் விஷயத்தையே வேறு பெயரில் அறிமுகம் செய்வது மோடி அரசின் ஸ்டைல். தேசிய கல்விக்கொள்கையை நாடு முழுவதும் அறிமுகம் செய்ய இது ஆய்வகம் என்றால் அந்த மாணவர்கள் பலியாடுகளா? ? குலாம்நபி ஆசாத் புதிய கட்சி தொடங்கப் போகிறாராமே? ...- கண்ணகி, திண்டுகல்.! கட்சி ஆரம்பிக்க காரணம் “காங்கிரஸ் கட்சியின் தலைமை தன்னை மதிக்க வில்லை” என்று சொல்லியிருக்கிறார். அவருடைய நாடாளுமன்ற கடைசி நாளில் பிரதமரின் உணர்ச்சி பெருக்கான உரை, பத்ம பூஷன் விருது எல்லாம் அவருடைய புதிய கட்சி ஒரு பெரிய தேசியக் கட்சியுடன் கூட்டணியிலிருக்கப்போகிறது என்பதன் அடையாளங்கள்.? அ.தி.மு.க.வின் இரண்டு அணிகளும் இணையாமலிருப்பதினால் யாருக்கு லாபம்?- எம். இராஜேந்திரன், திருவண்ணாமலை! அரசியல் கட்சிகளுக்கு லாபமோ... இல்லையோ... சானல்களுக்கு ‘விவாதம்’ என்ற பெயரில் அரைக்க மாவு இருந்துகொண்டேயிருக்கும். ? யூ.எஸ்.ஓப்பன் போட்டிகளில் ஜோகோவிச் விளையாட அனுமதிக்கப்படாதது சரியா?- சுப்ரமணி, சாத்தூர்.! கொரோனா தடுப்புசி போட்டுக்கொள்ள மாட்டேன் என்று அவர் பிடிவாதமாக இருப்பது போல் தனி நபருக்காக விதிகளை தளர்த்த முடியாது என்ற அமைப்பும் பிடிவாதமாகயிருக்கிறது. நஷ்டம் ஜோகோவிச்சுக்கும், டென்னிஸ் ரசிகர்களுக்கும் தான்.? மதியம் மாத்திரை சாப்பிட மறந்து விடும் அம்மா 10 வருடங்களாக வெளிநாட்டில் வாழும் என்னை மறப்பதில்லையே?- சண்முக லட்சுமி சன்னிவேல் (அமெரிக்கா)! அருகில் இருப்பதை மறப்பதும் அருகாமையில் இல்லாததை நினைப்பதும் மனித இயல்பு. ஆனால், மகளை மட்டும் நினைவு வைத்துக்கொண்டு மாத்திரைகளை மறப்பது அவருக்கு நல்லதில்லை என்பதை நீங்கள் நினைவூட்டிக்கொண்டேயிருங்கள்.