மகான் கபீர்தாஸரின் வாக்குகள் தீர்த்தங்களில் சென்று நீராடினால் வாழ்க்கை புனிதமாகி விடாது. மனம்தான் சிறந்த தீர்த்தம். ஆடம்பரமான வாழ்க்கை நமக்கு செல்வம் ஆகாது.ஞானம் ஒன்றுதான் சிறந்த செல்வம். எளிமையான உண்மை அன்புதான் - தூய பக்திதான் இறைவனுக்குச் செய்யும் உயர்ந்த பூஜை.மனதை இறைவனிடம் வைக்காமல் நீ ஜபம் செய்து என்ன பயன்? கண்கள் வேறொன்றைப் பார்க்க மனம் லயிக்காத அந்த பிரார்த்தனைக்கு ஜபமாலை உருவாகாது. வெறும் ஜபமாலையை உருட்டுவதால் இறைவனின் அருள் கிடைக்கும் என்பது அறியாமை. ஏ மனிதனே! உன் மனதையே நீ ஜபமாலையாக்கிப் பிரார்த்தனை செய்.துன்பம் வரும்போது இறைவனை நினைக்கும் மனம், சுகம் வரும் போது அவனை நினைப்பதில்லையே. சுகம் வந்தபோதும் இறைவனை நினைத்திருக்கும் மனம்தான் இறைவன் குடியிருக்கும் ஆலயம்.மிகவும் ஆடம்பரமான வாழ்க்கையால் ஒரு பயனும் இல்லை. பிறருக்கு உதவாத செல்வம் இருந்தும் பயனில்லை. பேரீச்சம் மரம் மிகவும் உயரமாகத்தான் வளர்ந்திருக்கிறது. அதனால் நிழல்தரும் வாய்ப்பு இல்லை. பழத்தையும் எளிதில் பறித்து சாப்பிட முடியாதிருக்கிறதே.ஆன்மிக அனுபவம் கிடைப்பதற்குத் தாமதமானால் அது இறைவனுடைய அல்லது அவனது திருநாமத்தினுடைய குறை அன்று. அதற்குக் காரணம் நம்முடைய மனதில் உள்ள எண்ணற்ற ஆசைகளும், வாசனைகளும்தான். இதனால்தான் ஆன்மிகத் தகுதியை நாம் இன்னமும் அடையாதவர்களாக இருக்கிறோம். இறைவன் உள்ளத்தில் மறைந்தும், வெளியில் வெளிப்படையாகவும் இருக்கிறான்.- சுவாமி மாதவானந்தர்
மகான் கபீர்தாஸரின் வாக்குகள் தீர்த்தங்களில் சென்று நீராடினால் வாழ்க்கை புனிதமாகி விடாது. மனம்தான் சிறந்த தீர்த்தம். ஆடம்பரமான வாழ்க்கை நமக்கு செல்வம் ஆகாது.ஞானம் ஒன்றுதான் சிறந்த செல்வம். எளிமையான உண்மை அன்புதான் - தூய பக்திதான் இறைவனுக்குச் செய்யும் உயர்ந்த பூஜை.மனதை இறைவனிடம் வைக்காமல் நீ ஜபம் செய்து என்ன பயன்? கண்கள் வேறொன்றைப் பார்க்க மனம் லயிக்காத அந்த பிரார்த்தனைக்கு ஜபமாலை உருவாகாது. வெறும் ஜபமாலையை உருட்டுவதால் இறைவனின் அருள் கிடைக்கும் என்பது அறியாமை. ஏ மனிதனே! உன் மனதையே நீ ஜபமாலையாக்கிப் பிரார்த்தனை செய்.துன்பம் வரும்போது இறைவனை நினைக்கும் மனம், சுகம் வரும் போது அவனை நினைப்பதில்லையே. சுகம் வந்தபோதும் இறைவனை நினைத்திருக்கும் மனம்தான் இறைவன் குடியிருக்கும் ஆலயம்.மிகவும் ஆடம்பரமான வாழ்க்கையால் ஒரு பயனும் இல்லை. பிறருக்கு உதவாத செல்வம் இருந்தும் பயனில்லை. பேரீச்சம் மரம் மிகவும் உயரமாகத்தான் வளர்ந்திருக்கிறது. அதனால் நிழல்தரும் வாய்ப்பு இல்லை. பழத்தையும் எளிதில் பறித்து சாப்பிட முடியாதிருக்கிறதே.ஆன்மிக அனுபவம் கிடைப்பதற்குத் தாமதமானால் அது இறைவனுடைய அல்லது அவனது திருநாமத்தினுடைய குறை அன்று. அதற்குக் காரணம் நம்முடைய மனதில் உள்ள எண்ணற்ற ஆசைகளும், வாசனைகளும்தான். இதனால்தான் ஆன்மிகத் தகுதியை நாம் இன்னமும் அடையாதவர்களாக இருக்கிறோம். இறைவன் உள்ளத்தில் மறைந்தும், வெளியில் வெளிப்படையாகவும் இருக்கிறான்.- சுவாமி மாதவானந்தர்