மத்தியப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது உஜ்ஜயினி. 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான இங்குதான் உலகப் புகழ்பெற்ற மகா காளேஸ்வரர் கோயில் அமைந்திருக்கிறது.பாற்கடலைக் கடைந்து அமுதம் கிடைத்ததும், அதைப் பறிக்க வந்த அசுரர்களிடமிருந்து குரு, சந்திர, சூரியர்கள் கலசத்தைக் காத்து, மாற்றி மாற்றி எடுத்துச் செல்கையில் ஹரித்வார், நாசிக், ப்ரயாக், உஜ்ஜயினி ஆகிய இடங்களில் அமிர்தம் தளும்பிச் சிதறியது. அவ்வாறு அமிழ்தம் சிதறிய இடங்களில் உள்ள நதிகளில் நீராடினால் புண்ணியம் கிடைக்கும் என்றும் அதிலும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளாவின் போது புனித நீராடுவது சிறப்பு என்றும் நம்மப்படுகிறது. அவ்வாறு உஜ்ஜயினியிலும் கும்பமேளா சிறப்பாகக் கொண்டாடப்படும். இங்கு நடைபெறும் கும்பமேளாவுக்கு 'ஸிம்ஹத் மேளா’ என்று பெயர். இந்தத் தலத்துக்கு “சப்த மோட்சபுரி” என்றும் பெயர் உண்டு. 51 சக்தி பீடங்களுள் ஒன்றான இந்தத் தலத்தை “அவந்தி” என்றும் அழைப்பார்கள். குப்தர்கள் மற்றும் மௌரியர்களின் தலைநகராகத் திகழ்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமும்கூட. இங்கு மூவாயிரம் ஆண்டுப் பழைமையான ஓவியங்கள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இங்குதான் சாந்தீபனி முனிவரின் ஆஸ்ரமம் அமைந்திருந்ததாகத் தலபுராணம் சொல்கிறது. ஸ்ரீகிருஷ்ணர், பலராமர் ஆகியோர் இங்கு கல்வி பயின்றனர் என்பது இந்த ஆஸ்ரமத்தின் சிறப்பு. .முன்னொரு காலத்தில் இந்தத் தலத்தில் வேத ப்ரியன் என்பவன் வாழ்ந்து வந்தான். எப்போதும் நல்லொழுக்கங்களோடு வாழ்ந்துவந்த அவன் மீது மக்கள் நன் மதிப்பு கொண்டு விளங்கினர். அங்கு அருகே இருக்கும் ரத்னமாலா பர்வதத்தில் ‘தூஷணன்’ என்னும் அசுரன் வாழ்ந்துவந்தான். அவன் மக்களுக்கும் ரிஷிகளும் பெரும் கொடுமைகளைச் செய்துவந்தான். அதைத் தாங்க முடியாத மக்கள் வேதப்ரியனிடம் வந்து முறையிட்டனர். வேதப்ரியனோ, ‘சிவனைத் தவிர நம்மைக் காக்கும் தெய்வம் இல்லை’ என்று சொல்லி ஓரிடத்தில் அமர்ந்து ஊராரோடு சேர்ந்து பூஜை செய்யத் தொடங்கினார். இதை அறிந்த தூஷணன் அங்கு வந்து அவர்களின் வழிபாட்டை சிதைக்கத் தொடங்கினான். எல்லோரும், `சிவனே!' என்று அலற, சிவன் அங்கு ஜோதி ரூபமாய்த் தோன்றி தூஷணனை அழித்தார். தேவர்களும் முனிவர்களும் மக்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்தத் தலத்திலேயே எழுந்தருளி அனைவருக்கும் அருள் பாலிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர். சிவ பெருமானும் அதற்கு இணங்கி, ‘மகாகாளர்’ என்னும் திருநாமத்தோடு அங்கு எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார் என்கிறது இந்த தலத்தின் புராணம். அங்கு எழுப்பப்பட்டிருக்கும் புராணச் சிறப்பும் பழைமையும் வாய்ந்த இந்தக் கோயிலில் பல்வேறு மன்னர்கள் உஜ்ஜயினி கோயிலில் வழிபாடு செய்து அந்தத் தலத்துக்குத் திருப்பணி செய்துள்ளனர். அதனால் இத்தலம் செல்வச் செழிப்போடு விளங்கியது. 13ம் நூற்றாண்டில் அந்நியர் படையெடுப்பினால் இந்த ஆலயம் தரைமட்டமாக்கப்பட்டது. அதன்பின் 500 ஆண்டுகள் கழித்து, ‘ரானோஜி சிந்த்யா’ என்னும் மராட்டிய மன்னன் இந்தக் கோயிலைப் புதுப்பித்தான். என்கிறாது வரலாறு. இந்த திருத்தலத்தைப் புதுப்பிக்கத் திட்டம் தீட்டப்பட்டு ரூ. 316 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அடுத்தபடியாக மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இங்கு வேலைப்பாடுகள் நிறைந்த 108 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிவபுராணக் காட்சிகளை உணர்த்தும் 93 சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன. .இதை வெறும் கோயில் திருப்பணியாக இல்லாமல் பிரம்மாண்டமான வளாகமாக அமைக்க திட்டமிடப்பட்டது. திட்டத்தின் முதல் கட்டமாக மஹாகாளேஸ்வர் கோயில் வளாகம், ருத்ரசாகர் ஏரி சுத்திகரிக்கப்பட்டு அதன் கரைகள் மேம்படுத்தப் பட்டுள்ளன. அழகிய பாலம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. மேலும், அன்னச்சத்திரம், பிரசங்க மண்டபம், தாமரைக் குளம் ஆகியனவும் கட்டப்பட்டுள்ளன. முதற்கட்டப் பணிகள் முடிந்து இப்போது மகாகாளேஸ்வரர் கோயில் வளாகம் எழில் கொஞ்சத் திகழ்கிறது சுமார் ரூ.316 கோடி செலவில் இந்த கோவிலின் முதற்கட்ட பணிகளைத்தான் அண்மையில் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது உஜ்ஜயினி. 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான இங்குதான் உலகப் புகழ்பெற்ற மகா காளேஸ்வரர் கோயில் அமைந்திருக்கிறது.பாற்கடலைக் கடைந்து அமுதம் கிடைத்ததும், அதைப் பறிக்க வந்த அசுரர்களிடமிருந்து குரு, சந்திர, சூரியர்கள் கலசத்தைக் காத்து, மாற்றி மாற்றி எடுத்துச் செல்கையில் ஹரித்வார், நாசிக், ப்ரயாக், உஜ்ஜயினி ஆகிய இடங்களில் அமிர்தம் தளும்பிச் சிதறியது. அவ்வாறு அமிழ்தம் சிதறிய இடங்களில் உள்ள நதிகளில் நீராடினால் புண்ணியம் கிடைக்கும் என்றும் அதிலும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளாவின் போது புனித நீராடுவது சிறப்பு என்றும் நம்மப்படுகிறது. அவ்வாறு உஜ்ஜயினியிலும் கும்பமேளா சிறப்பாகக் கொண்டாடப்படும். இங்கு நடைபெறும் கும்பமேளாவுக்கு 'ஸிம்ஹத் மேளா’ என்று பெயர். இந்தத் தலத்துக்கு “சப்த மோட்சபுரி” என்றும் பெயர் உண்டு. 51 சக்தி பீடங்களுள் ஒன்றான இந்தத் தலத்தை “அவந்தி” என்றும் அழைப்பார்கள். குப்தர்கள் மற்றும் மௌரியர்களின் தலைநகராகத் திகழ்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமும்கூட. இங்கு மூவாயிரம் ஆண்டுப் பழைமையான ஓவியங்கள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இங்குதான் சாந்தீபனி முனிவரின் ஆஸ்ரமம் அமைந்திருந்ததாகத் தலபுராணம் சொல்கிறது. ஸ்ரீகிருஷ்ணர், பலராமர் ஆகியோர் இங்கு கல்வி பயின்றனர் என்பது இந்த ஆஸ்ரமத்தின் சிறப்பு. .முன்னொரு காலத்தில் இந்தத் தலத்தில் வேத ப்ரியன் என்பவன் வாழ்ந்து வந்தான். எப்போதும் நல்லொழுக்கங்களோடு வாழ்ந்துவந்த அவன் மீது மக்கள் நன் மதிப்பு கொண்டு விளங்கினர். அங்கு அருகே இருக்கும் ரத்னமாலா பர்வதத்தில் ‘தூஷணன்’ என்னும் அசுரன் வாழ்ந்துவந்தான். அவன் மக்களுக்கும் ரிஷிகளும் பெரும் கொடுமைகளைச் செய்துவந்தான். அதைத் தாங்க முடியாத மக்கள் வேதப்ரியனிடம் வந்து முறையிட்டனர். வேதப்ரியனோ, ‘சிவனைத் தவிர நம்மைக் காக்கும் தெய்வம் இல்லை’ என்று சொல்லி ஓரிடத்தில் அமர்ந்து ஊராரோடு சேர்ந்து பூஜை செய்யத் தொடங்கினார். இதை அறிந்த தூஷணன் அங்கு வந்து அவர்களின் வழிபாட்டை சிதைக்கத் தொடங்கினான். எல்லோரும், `சிவனே!' என்று அலற, சிவன் அங்கு ஜோதி ரூபமாய்த் தோன்றி தூஷணனை அழித்தார். தேவர்களும் முனிவர்களும் மக்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்தத் தலத்திலேயே எழுந்தருளி அனைவருக்கும் அருள் பாலிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர். சிவ பெருமானும் அதற்கு இணங்கி, ‘மகாகாளர்’ என்னும் திருநாமத்தோடு அங்கு எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார் என்கிறது இந்த தலத்தின் புராணம். அங்கு எழுப்பப்பட்டிருக்கும் புராணச் சிறப்பும் பழைமையும் வாய்ந்த இந்தக் கோயிலில் பல்வேறு மன்னர்கள் உஜ்ஜயினி கோயிலில் வழிபாடு செய்து அந்தத் தலத்துக்குத் திருப்பணி செய்துள்ளனர். அதனால் இத்தலம் செல்வச் செழிப்போடு விளங்கியது. 13ம் நூற்றாண்டில் அந்நியர் படையெடுப்பினால் இந்த ஆலயம் தரைமட்டமாக்கப்பட்டது. அதன்பின் 500 ஆண்டுகள் கழித்து, ‘ரானோஜி சிந்த்யா’ என்னும் மராட்டிய மன்னன் இந்தக் கோயிலைப் புதுப்பித்தான். என்கிறாது வரலாறு. இந்த திருத்தலத்தைப் புதுப்பிக்கத் திட்டம் தீட்டப்பட்டு ரூ. 316 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அடுத்தபடியாக மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இங்கு வேலைப்பாடுகள் நிறைந்த 108 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிவபுராணக் காட்சிகளை உணர்த்தும் 93 சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன. .இதை வெறும் கோயில் திருப்பணியாக இல்லாமல் பிரம்மாண்டமான வளாகமாக அமைக்க திட்டமிடப்பட்டது. திட்டத்தின் முதல் கட்டமாக மஹாகாளேஸ்வர் கோயில் வளாகம், ருத்ரசாகர் ஏரி சுத்திகரிக்கப்பட்டு அதன் கரைகள் மேம்படுத்தப் பட்டுள்ளன. அழகிய பாலம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. மேலும், அன்னச்சத்திரம், பிரசங்க மண்டபம், தாமரைக் குளம் ஆகியனவும் கட்டப்பட்டுள்ளன. முதற்கட்டப் பணிகள் முடிந்து இப்போது மகாகாளேஸ்வரர் கோயில் வளாகம் எழில் கொஞ்சத் திகழ்கிறது சுமார் ரூ.316 கோடி செலவில் இந்த கோவிலின் முதற்கட்ட பணிகளைத்தான் அண்மையில் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.