பெங்களூருவிலிருந்து பிரசன்னா. பஞ்சு போன்ற இட்லியை சாம்பார், சட்னியில் குழைத்து சாப்பிட்டால் அதன் சுவையே தனி. இப்போது, ஒரு ஸ்டார்ட்அப் கம்பெனி, தானியங்கி இட்லி தயாரிக்கும் இயந்திரத்தை பெங்களூருவில் நிறுவியுள்ளது. சினிமா பார்த்துவிட்டு வீட்டுக்குப்போகும் போது “ATM மில் 4 இட்லி சாப்பிட்டு விட்டு போகலாமா” என்று கணவன்மார்கள் மனைவியைக் கேட்கும் காலம் வந்து விட்டது. ஆம் பெங்களூருவில் ‘இட்லி ATM’ மூலம் 24 மணி நேரமும் இட்லிகளை விற்பனை செய்யும் ATM நிறுவப்பட்டிருக்கிறது .பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர்களான ஷரன் ஹிரேமத், சுரேஷ் சந்திரசேகரன் ஆகியோரால் நிறுவப்பட்ட “ப்ரெஷப் ரோபோட்டிக்ஸ்” என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தால் இந்த இயந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இயங்கும் இது, 12 நிமிடங்களில் 72 இட்லிகளை சுடச்சுட தயாரிக்கிறது. இயந்திரத்தில் இட்லிக்கு தேவையான பொடி, சட்னிகளை தேர்வு செய்து கொள்ளலாம்.எப்படி இந்த இயந்திரம் செயல்படுகிறது. முதலில் உங்கள் செல் போனில் மிஷினுடய க்யூஆர் கோடை காப்பி செய்து கொள்ள வேண்டும். பின் அதை அழுத்தி காட்டும் மெனுவில் எத்தனை இட்லி, சட்னி வேண்டுமா? மிளகாய்ப்பொடி வேண்டுமா? என்று தீர்மானித்து ஆர்டர் செய்து ஆன் லைனில் பணம் செலுத்த வேண்டும். உங்கள் ரசீது க்யூஆர் குறியீடாக வரும். அதை ஸ்கேன் செய்தால் , ஒரு நிமிடத்துக்குள் சுடச்சுட இட்லி கிடைக்கும். காசு போட்டால் கோக் பெப்ஸி வரும் வெண்டிங் மிஷின் சிஸ்டத்தில் வருகிறதில்லையா? அது போலதான் இதன் சிஸ்டம் . இதற்கு, பெங்களூருவில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது..தற்போது, இந்த இட்லி ஏடிஎம் பெங்களூருவில் 2 இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களுக்கும் இது விரைவில் விரிவுப்படுத்தப்படும் என்றும், வடை. பொங்க: போன்ற வேறு உணவுகளையும் ஏடிஎம்.மில் வழங்க திட்டமிட்டு இருப்பதாகவும் ஹிரேமத் தெரிவித்தார் இந்த ATM க்காக தனியாக விளம்பரங்கள் செய்யவில்லை. தன் குடும்பத்தினரில் ஒருவர் இந்த மிஷினை இயக்கி இட்லி சாப்பிட்ட வீடியோவை டிவிட்டரில் பதிவிட்டார். ஒரு மணிக்குள் பல லட்சம் ஹிட்களைத் தொட்ட அது வைரலானது. 2016ம் ஆண்டில், தனது மகள் காய்ச்சலாக இருந்ஹ போது , இரண்டு இட்லி வாங்குவதற்காக இரவில் அலைந்தேன், . ஆனால், எங்கும் கிடைக்கவில்லை. இதன் தாக்கத்தால்தான் எழுந்தது தான் இந்த ATM இட்லி இயந்திரம் என்கிறார் ஹிரேமத்.
பெங்களூருவிலிருந்து பிரசன்னா. பஞ்சு போன்ற இட்லியை சாம்பார், சட்னியில் குழைத்து சாப்பிட்டால் அதன் சுவையே தனி. இப்போது, ஒரு ஸ்டார்ட்அப் கம்பெனி, தானியங்கி இட்லி தயாரிக்கும் இயந்திரத்தை பெங்களூருவில் நிறுவியுள்ளது. சினிமா பார்த்துவிட்டு வீட்டுக்குப்போகும் போது “ATM மில் 4 இட்லி சாப்பிட்டு விட்டு போகலாமா” என்று கணவன்மார்கள் மனைவியைக் கேட்கும் காலம் வந்து விட்டது. ஆம் பெங்களூருவில் ‘இட்லி ATM’ மூலம் 24 மணி நேரமும் இட்லிகளை விற்பனை செய்யும் ATM நிறுவப்பட்டிருக்கிறது .பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர்களான ஷரன் ஹிரேமத், சுரேஷ் சந்திரசேகரன் ஆகியோரால் நிறுவப்பட்ட “ப்ரெஷப் ரோபோட்டிக்ஸ்” என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தால் இந்த இயந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இயங்கும் இது, 12 நிமிடங்களில் 72 இட்லிகளை சுடச்சுட தயாரிக்கிறது. இயந்திரத்தில் இட்லிக்கு தேவையான பொடி, சட்னிகளை தேர்வு செய்து கொள்ளலாம்.எப்படி இந்த இயந்திரம் செயல்படுகிறது. முதலில் உங்கள் செல் போனில் மிஷினுடய க்யூஆர் கோடை காப்பி செய்து கொள்ள வேண்டும். பின் அதை அழுத்தி காட்டும் மெனுவில் எத்தனை இட்லி, சட்னி வேண்டுமா? மிளகாய்ப்பொடி வேண்டுமா? என்று தீர்மானித்து ஆர்டர் செய்து ஆன் லைனில் பணம் செலுத்த வேண்டும். உங்கள் ரசீது க்யூஆர் குறியீடாக வரும். அதை ஸ்கேன் செய்தால் , ஒரு நிமிடத்துக்குள் சுடச்சுட இட்லி கிடைக்கும். காசு போட்டால் கோக் பெப்ஸி வரும் வெண்டிங் மிஷின் சிஸ்டத்தில் வருகிறதில்லையா? அது போலதான் இதன் சிஸ்டம் . இதற்கு, பெங்களூருவில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது..தற்போது, இந்த இட்லி ஏடிஎம் பெங்களூருவில் 2 இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களுக்கும் இது விரைவில் விரிவுப்படுத்தப்படும் என்றும், வடை. பொங்க: போன்ற வேறு உணவுகளையும் ஏடிஎம்.மில் வழங்க திட்டமிட்டு இருப்பதாகவும் ஹிரேமத் தெரிவித்தார் இந்த ATM க்காக தனியாக விளம்பரங்கள் செய்யவில்லை. தன் குடும்பத்தினரில் ஒருவர் இந்த மிஷினை இயக்கி இட்லி சாப்பிட்ட வீடியோவை டிவிட்டரில் பதிவிட்டார். ஒரு மணிக்குள் பல லட்சம் ஹிட்களைத் தொட்ட அது வைரலானது. 2016ம் ஆண்டில், தனது மகள் காய்ச்சலாக இருந்ஹ போது , இரண்டு இட்லி வாங்குவதற்காக இரவில் அலைந்தேன், . ஆனால், எங்கும் கிடைக்கவில்லை. இதன் தாக்கத்தால்தான் எழுந்தது தான் இந்த ATM இட்லி இயந்திரம் என்கிறார் ஹிரேமத்.