2014ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்றதிலிருந்து நரேந்திர மோதி தனது பிறந்த நாளை (செப்டெம்பர் 17) குஜராத்தில் கொண்டாடுவது வழக்கம். தனது பிறந்த நாளன்று அவர் பெரும்பாலும் தனது தாயாரைச் சந்திப்பார். கடந்த ஆண்டுகளில் இதே நாளில் அவர் சர்தார் சரோவர் அணை போன்ற முக்கியமான இடங்களைப் பார்வையிட்டுள்ளார். 1965 இல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போர் குறித்த போர்க் கண்காட்சியை திறந்துவைத்துள்ளார். தூய்மை தினத்தை துவக்கி வைத்துள்ளார் அல்லது பள்ளி மாணவர்களுடன் தனது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார்..இந்த ஆண்டு இந்தியாவுக்கு நமீபியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட ‘சீட்டா’ என்ற அரிய வகை சிறுத்தைகளை சரணாலயத்தில் திறந்து விட்டுக்கொண்டாடினார்.இதற்காக மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசியப் பூங்காவின் மையத்தில் உள்ள ஒரு பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாறியுள்ளது.200 மீட்டர் தொலைவில், 150 மீட்டர் சுற்றளவுள்ள தனிமைப்படுத்தப்பட்ட மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது. நமீபியாவிலிருந்து எட்டு சிவிங்கிப் புலிகள் இந்த கட்டுப்பாட்டு பகுதிக்கு கொண்டுவரப்பட்டன..சிறுத்தைகளில் பல வகையுண்டு. ‘சீட்டா’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த வகை சிறுத்தைகளை தமிழில் ‘சிவிங்கப் புலிகள்’ என்று அழைக்கிறார்கள் வல்லுனர்கள். முக்கியமான வேறுபாடு சிறுத்தைகளின் உடலில் உள்ள புள்ளிகள் வட்ட வட்டமாக இருக்கும். இந்த வகை சிவிங்கப் புலிகளின் புள்ளிகள் ஒரு ஒழுங்கில் இல்லாத வடிவங்களில் இருக்கும். 1950களில் இந்தியா, சிவிங்கிப் புலியை அழிந்துவிட்ட இனமாக அறிவித்தது. நாட்டில் ஒரு சிவிங்கிப்புலிகூட அப்போது இருக்கவில்லை.உலகில் தற்போது சுமார் 7,000 சிவிங்கிப் புலிகள் உள்ளன. அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை தென்னாப்ரிக்கா, நமீபியா மற்றும் போட்ஸ்வானாவில் உள்ளன. இந்தியாவில் சிறுத்தை இனம் அழிந்து 74 ஆண்டுகள் ஆகும் நிலையில், நமீபியாவில் இருந்து மத்தியப் பிரதேசத்தின் குனோ-பால்பூர் தேசிய பூங்காவிற்கு 8 சிறுத்தைகள் விமானம் மூலம் கொண்டுவரப்பட்டு இந்தியாவில் மீண்டும் சிறுத்தைகள் எண்ணிக்கையை உயர்த்துவது திட்டம். இதற்காக கொண்டுவரப்பட்ட சிறுத்தைகள் இவை. ஒரு கண்டத்தில் இருந்து மற்றொரு கண்டத்தின் காடுகளுக்கு இவ்வளவு பெரிய மாமிசப் பிராணி கொண்டுவரப்படுவது இதுவே முதல் முறை..நீண்ட பயணம்இந்தியாவிற்கு வந்திருக்கும் இந்த சிவிங்கிப் புலிகள் சரணாலயங்களில் சிறந்த முறையில் பிறந்து வளர்ந்தவை. தென்னாப்ரிக்காவில் இதுபோன்ற 50 சரணாலயங்கள் உள்ளன. அவற்றில் வயது வந்த 500 சிவிங்கிப் புலிகள் உள்ளன. ‘‘சீட்டா கன்சர்வேஷன் ஃபண்ட்’’ என்ற புகழ்பெற்ற சர்வதேச அமைப்பின் இயக்குநர் லாரி மார்க்கர், மற்றும் அவரது குழுவினர் "இந்த திட்டத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள். பாதுகாப்பான பயண திட்டம். பின்னர் அவைகள் புதுச் சூழலை உணர்ந்து வாழ சில நாட்கள் தனிமைப்படுத்தி வைப்பது, பின்னர் ஒலிகளின் மூலம் பயிற்சியளிப்பது போன்றவற்றையும் திட்டமிட்டவர்கள் இவர்கள். இந்த சிறுத்தைகளில் ரேடியோ காலர்கள் பொருத்தப்பட்டிருப்பதால் அவற்றின் நடமாட்டத்தை எளிதாக கண்காணிக்க முடியும். இதைத் தவிர இவற்றை கண்காணிக்க தனி டிரோன் கேமிராக்கள் செயல்படுகின்றன..சிறுத்தைகளை கொண்டுவர ஒரு சரக்கு விமானம் மாறுதல்களுடன் தயாரிக்கபட்டது. இந்த விமானத்தின் முகப்பில் சிறுத்தையின் முகம் வரையப்பட்டிருந்தது. வின்ட்ஹோக்கிலிருந்து (நமீபியாவின் தலைநகர்) ஜெய்ப்பூருக்கு 16 மணி நேரம் 40 நிமிடங்கள் பயணம். அங்கிருந்து குனோ வனவிலங்கு பூங்காவிற்கு ஹெலிகாப்டரில் ஒரு மணி நேரப் பயணம்.முன்னெச்சரிக்கையாக, பயணத்தைத் தொடங்கும் முன்னதாக ‘சிறுத்தைகளின் வயிறு காலியாக இருக்க வேண்டியது கட்டாயம்’ என்று வல்லுனர்களின் ஆலோசனைப்படி நமீபியாவில் இருந்து ஜெய்ப்பூர் மற்றும் தேசிய பூங்காவிற்கு செல்லும் வழியிலும் சிறுத்தைகளுக்கு உணவு எதுவும் வழங்கப்படவில்லை. மருந்து செலுத்தி தூங்க வைக்கப்பட்டிருந்தன. பாவம் பட்டினியுடன் இந்தியாவிற்கு வந்து சேர்ந்தன இந்த வெளிநாட்டு விருந்தாளிகள். இந்த காட்டுப்பகுதியில் இந்த ஹெலிகாப்டர் இறங்குவதற்காக புதிய ஹெலி பாட் உருவாக்கப்பட்டது. அதே ஹெலி பாடில்தான் பிரதமரும் தன் ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார். பிரதமர் நரேந்திர மோதி இந்த ஹெலிபேடில் தரையிறங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு இந்த சிவிங்கிப் புலிகள் இங்கு வந்து சேர்ந்தன. பிரதமர் வந்தவுடன் இரும்பு லீவரை இழுத்து, அவற்றின் கூண்டுகளிலிருந்து மூன்று சிவிங்கிப் புலிகள் தனிமைப்படுத்தப்பட்ட மண்டலத்திற்குள் விடுவித்தார். தன்னுடைய கேமிராவில் படங்களும் எடுத்தார். அரசியல்1952 ல் இந்தியாவிலிருந்து சிறுத்தைகள் அழிந்துபோன போதும் கடந்த 70 ஆண்டுகளாக அவற்றுக்கு மறுவாழ்வு அளிக்க அர்த்தமுள்ள எந்த முயற்சியும் எடுக்கப்பட வில்லை. சுதந்திரத்தின் 75 -ஆவது ஆண்டுப் பெருவிழாவில் புதிய உத்வேகத்துடன் இந்தியா சிறுத்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கத் தொடங்கியிருக்கிறது என்று சிறுத்தைகளை விடுவித்தவுடன் நடந்த விழாவில் பேசியிருந்தார்..உடனே முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ரமேஷ் ஜெயராம் இந்தியாவிற்கு இந்த சிறுத்தைகளை கொண்டு வரும் திட்டத்திற்கு, கடந்த 2008-09ம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் முற்றிலும் அழிந்துவிட்ட சிறுத்தையை, 70 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கொண்டுவர ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, நமீபியாவுடன் ஓர் ஒப்பந்தமும் செய்யப்பட்டிருக்கிறது. தொடர்ந்து வந்த உச்ச நீதிமன்ற ஆணைகளினால் சிறுத்தைகளை கொண்டுவர முடியவில்லை. இப்போது உச்ச நீதிமன்றம் வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்து அனுமதித்தவுடன் சிறுத்தைகளை கொண்டுவந்திருக்கிறது.“வழக்கம்போல காங்கிரஸ் ஆட்சியில் உருவான திட்டத்தை தன்னுடையதாக அறிவிக்கிறார் பிரதமர்” என்று தன் டீவிட்டரில் படத்துடன் தெரிவித்திருக்கிறார். நாம் பார்க்க முடியுமா?வனவிலங்கு பூங்காக்களில் பாதுகாப்பான பயணங்களுடன் மிருகங்களை மக்கள் பார்க்கும் வசதிகள் உண்டு. ஆனால், இந்த சீட்டாக்களை உடனே இப்போது பார்க்க முடியாது. “நாட்டு மக்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும். குனோ தேசியப் பூங்காவில் விடுவிக்கப்பட்ட சிறுத்தைகளை மக்கள் காண்பதற்கு சில மாதங்கள் காத்திருக்க வேண்டும். இந்தச் சிறுத்தைகள் இங்கே விருந்தினர்களாக வந்துள்ளன. இந்தப் பகுதியை பற்றி அவற்றுக்கு ஏதும் தெரியாது. குனோ தேசியப் பூங்கா தங்களின் தாய் வீடு என்பதை உணர்வதற்கு சில மாத காலத்தை அவற்றுக்கு நாம் வழங்க வேண்டும். சர்வதேச விதிமுறைகளின்படி இந்தச் சிறுத்தைகளைப் பாதுகாக்க அனைத்தையும் சிறப்பாக செய்துக் கொண்டிருக்கிறோம். நமது முயற்சிகள் வீணாக நாம் அனுமதித்துவிடக் கூடாது" என்று அறிவித்திருக்கிறார். வனவிலங்கு சரணாலயத்தின் தலைமை காப்பாளர்.
2014ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்றதிலிருந்து நரேந்திர மோதி தனது பிறந்த நாளை (செப்டெம்பர் 17) குஜராத்தில் கொண்டாடுவது வழக்கம். தனது பிறந்த நாளன்று அவர் பெரும்பாலும் தனது தாயாரைச் சந்திப்பார். கடந்த ஆண்டுகளில் இதே நாளில் அவர் சர்தார் சரோவர் அணை போன்ற முக்கியமான இடங்களைப் பார்வையிட்டுள்ளார். 1965 இல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போர் குறித்த போர்க் கண்காட்சியை திறந்துவைத்துள்ளார். தூய்மை தினத்தை துவக்கி வைத்துள்ளார் அல்லது பள்ளி மாணவர்களுடன் தனது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார்..இந்த ஆண்டு இந்தியாவுக்கு நமீபியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட ‘சீட்டா’ என்ற அரிய வகை சிறுத்தைகளை சரணாலயத்தில் திறந்து விட்டுக்கொண்டாடினார்.இதற்காக மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசியப் பூங்காவின் மையத்தில் உள்ள ஒரு பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாறியுள்ளது.200 மீட்டர் தொலைவில், 150 மீட்டர் சுற்றளவுள்ள தனிமைப்படுத்தப்பட்ட மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது. நமீபியாவிலிருந்து எட்டு சிவிங்கிப் புலிகள் இந்த கட்டுப்பாட்டு பகுதிக்கு கொண்டுவரப்பட்டன..சிறுத்தைகளில் பல வகையுண்டு. ‘சீட்டா’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த வகை சிறுத்தைகளை தமிழில் ‘சிவிங்கப் புலிகள்’ என்று அழைக்கிறார்கள் வல்லுனர்கள். முக்கியமான வேறுபாடு சிறுத்தைகளின் உடலில் உள்ள புள்ளிகள் வட்ட வட்டமாக இருக்கும். இந்த வகை சிவிங்கப் புலிகளின் புள்ளிகள் ஒரு ஒழுங்கில் இல்லாத வடிவங்களில் இருக்கும். 1950களில் இந்தியா, சிவிங்கிப் புலியை அழிந்துவிட்ட இனமாக அறிவித்தது. நாட்டில் ஒரு சிவிங்கிப்புலிகூட அப்போது இருக்கவில்லை.உலகில் தற்போது சுமார் 7,000 சிவிங்கிப் புலிகள் உள்ளன. அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை தென்னாப்ரிக்கா, நமீபியா மற்றும் போட்ஸ்வானாவில் உள்ளன. இந்தியாவில் சிறுத்தை இனம் அழிந்து 74 ஆண்டுகள் ஆகும் நிலையில், நமீபியாவில் இருந்து மத்தியப் பிரதேசத்தின் குனோ-பால்பூர் தேசிய பூங்காவிற்கு 8 சிறுத்தைகள் விமானம் மூலம் கொண்டுவரப்பட்டு இந்தியாவில் மீண்டும் சிறுத்தைகள் எண்ணிக்கையை உயர்த்துவது திட்டம். இதற்காக கொண்டுவரப்பட்ட சிறுத்தைகள் இவை. ஒரு கண்டத்தில் இருந்து மற்றொரு கண்டத்தின் காடுகளுக்கு இவ்வளவு பெரிய மாமிசப் பிராணி கொண்டுவரப்படுவது இதுவே முதல் முறை..நீண்ட பயணம்இந்தியாவிற்கு வந்திருக்கும் இந்த சிவிங்கிப் புலிகள் சரணாலயங்களில் சிறந்த முறையில் பிறந்து வளர்ந்தவை. தென்னாப்ரிக்காவில் இதுபோன்ற 50 சரணாலயங்கள் உள்ளன. அவற்றில் வயது வந்த 500 சிவிங்கிப் புலிகள் உள்ளன. ‘‘சீட்டா கன்சர்வேஷன் ஃபண்ட்’’ என்ற புகழ்பெற்ற சர்வதேச அமைப்பின் இயக்குநர் லாரி மார்க்கர், மற்றும் அவரது குழுவினர் "இந்த திட்டத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள். பாதுகாப்பான பயண திட்டம். பின்னர் அவைகள் புதுச் சூழலை உணர்ந்து வாழ சில நாட்கள் தனிமைப்படுத்தி வைப்பது, பின்னர் ஒலிகளின் மூலம் பயிற்சியளிப்பது போன்றவற்றையும் திட்டமிட்டவர்கள் இவர்கள். இந்த சிறுத்தைகளில் ரேடியோ காலர்கள் பொருத்தப்பட்டிருப்பதால் அவற்றின் நடமாட்டத்தை எளிதாக கண்காணிக்க முடியும். இதைத் தவிர இவற்றை கண்காணிக்க தனி டிரோன் கேமிராக்கள் செயல்படுகின்றன..சிறுத்தைகளை கொண்டுவர ஒரு சரக்கு விமானம் மாறுதல்களுடன் தயாரிக்கபட்டது. இந்த விமானத்தின் முகப்பில் சிறுத்தையின் முகம் வரையப்பட்டிருந்தது. வின்ட்ஹோக்கிலிருந்து (நமீபியாவின் தலைநகர்) ஜெய்ப்பூருக்கு 16 மணி நேரம் 40 நிமிடங்கள் பயணம். அங்கிருந்து குனோ வனவிலங்கு பூங்காவிற்கு ஹெலிகாப்டரில் ஒரு மணி நேரப் பயணம்.முன்னெச்சரிக்கையாக, பயணத்தைத் தொடங்கும் முன்னதாக ‘சிறுத்தைகளின் வயிறு காலியாக இருக்க வேண்டியது கட்டாயம்’ என்று வல்லுனர்களின் ஆலோசனைப்படி நமீபியாவில் இருந்து ஜெய்ப்பூர் மற்றும் தேசிய பூங்காவிற்கு செல்லும் வழியிலும் சிறுத்தைகளுக்கு உணவு எதுவும் வழங்கப்படவில்லை. மருந்து செலுத்தி தூங்க வைக்கப்பட்டிருந்தன. பாவம் பட்டினியுடன் இந்தியாவிற்கு வந்து சேர்ந்தன இந்த வெளிநாட்டு விருந்தாளிகள். இந்த காட்டுப்பகுதியில் இந்த ஹெலிகாப்டர் இறங்குவதற்காக புதிய ஹெலி பாட் உருவாக்கப்பட்டது. அதே ஹெலி பாடில்தான் பிரதமரும் தன் ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார். பிரதமர் நரேந்திர மோதி இந்த ஹெலிபேடில் தரையிறங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு இந்த சிவிங்கிப் புலிகள் இங்கு வந்து சேர்ந்தன. பிரதமர் வந்தவுடன் இரும்பு லீவரை இழுத்து, அவற்றின் கூண்டுகளிலிருந்து மூன்று சிவிங்கிப் புலிகள் தனிமைப்படுத்தப்பட்ட மண்டலத்திற்குள் விடுவித்தார். தன்னுடைய கேமிராவில் படங்களும் எடுத்தார். அரசியல்1952 ல் இந்தியாவிலிருந்து சிறுத்தைகள் அழிந்துபோன போதும் கடந்த 70 ஆண்டுகளாக அவற்றுக்கு மறுவாழ்வு அளிக்க அர்த்தமுள்ள எந்த முயற்சியும் எடுக்கப்பட வில்லை. சுதந்திரத்தின் 75 -ஆவது ஆண்டுப் பெருவிழாவில் புதிய உத்வேகத்துடன் இந்தியா சிறுத்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கத் தொடங்கியிருக்கிறது என்று சிறுத்தைகளை விடுவித்தவுடன் நடந்த விழாவில் பேசியிருந்தார்..உடனே முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ரமேஷ் ஜெயராம் இந்தியாவிற்கு இந்த சிறுத்தைகளை கொண்டு வரும் திட்டத்திற்கு, கடந்த 2008-09ம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் முற்றிலும் அழிந்துவிட்ட சிறுத்தையை, 70 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கொண்டுவர ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, நமீபியாவுடன் ஓர் ஒப்பந்தமும் செய்யப்பட்டிருக்கிறது. தொடர்ந்து வந்த உச்ச நீதிமன்ற ஆணைகளினால் சிறுத்தைகளை கொண்டுவர முடியவில்லை. இப்போது உச்ச நீதிமன்றம் வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்து அனுமதித்தவுடன் சிறுத்தைகளை கொண்டுவந்திருக்கிறது.“வழக்கம்போல காங்கிரஸ் ஆட்சியில் உருவான திட்டத்தை தன்னுடையதாக அறிவிக்கிறார் பிரதமர்” என்று தன் டீவிட்டரில் படத்துடன் தெரிவித்திருக்கிறார். நாம் பார்க்க முடியுமா?வனவிலங்கு பூங்காக்களில் பாதுகாப்பான பயணங்களுடன் மிருகங்களை மக்கள் பார்க்கும் வசதிகள் உண்டு. ஆனால், இந்த சீட்டாக்களை உடனே இப்போது பார்க்க முடியாது. “நாட்டு மக்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும். குனோ தேசியப் பூங்காவில் விடுவிக்கப்பட்ட சிறுத்தைகளை மக்கள் காண்பதற்கு சில மாதங்கள் காத்திருக்க வேண்டும். இந்தச் சிறுத்தைகள் இங்கே விருந்தினர்களாக வந்துள்ளன. இந்தப் பகுதியை பற்றி அவற்றுக்கு ஏதும் தெரியாது. குனோ தேசியப் பூங்கா தங்களின் தாய் வீடு என்பதை உணர்வதற்கு சில மாத காலத்தை அவற்றுக்கு நாம் வழங்க வேண்டும். சர்வதேச விதிமுறைகளின்படி இந்தச் சிறுத்தைகளைப் பாதுகாக்க அனைத்தையும் சிறப்பாக செய்துக் கொண்டிருக்கிறோம். நமது முயற்சிகள் வீணாக நாம் அனுமதித்துவிடக் கூடாது" என்று அறிவித்திருக்கிறார். வனவிலங்கு சரணாலயத்தின் தலைமை காப்பாளர்.