அரசியல் கட்சிகள் இலவசங்கள் வழங்குவதை இந்திய தேர்தல் ஆணையம் தடுக்க முடியுமா?“தேர்தல் வாக்குறுதியாக வழங்கப்படும் இலவசங்களுக்கான நிதி விவரங்களை இனி இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் அளிக்க வேண்டும்” என்ற திட்டத்தை அக்கட்சிகளுக்கு எழுதிய கடிதத்தில் தேர்தல் ஆணையம் முன்மொழிந்துள்ளது. அக்கடிதத்தில், “அரசியல் கட்சிகள் அளிக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் அறிவிக்கப்படும் இலவச திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் நிதி பற்றிய விவரங்கள் முழுமையாக அளிக்கப்படுவதில்லை” என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், தேர்தல் வாக்குறுதிகளை அளிப்பது அரசியல் கட்சிகளின் தனிப்பட்ட உரிமை என்றாலும், “இத்தகைய வாக்குறுதிகளால் வாக்காளர்கள் மத்தியில் ஏற்படும் தாக்கத்தை தேர்தல் ஆணையம் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது” என்று தெரிவித்துள்ளது. இந்த முன்மொழிவு குறித்து அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துகளை வரும் அக்டோபர் 19ஆம் தேதிக்குள் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சில மாதங்கள் முன், “இலவசங்கள் வழங்கும் கலாசாரம் நாட்டின் வளர்ச்சிக்கு ஆபத்தானவை என்றும், இந்திய மக்கள் குறிப்பாக, இளைஞர்கள் இந்த இலவசங்கள் வழங்கும் கலாசாரம் பற்றி கவனமாக இருக்க வேண்டும்” என்றும் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, “மாநில கட்சிகள் வழங்குவது இலவசங்களா அல்லது நலத்திட்டங்களா” என்ற விவாதங்கள் எழுந்தன. “அரசியல் கட்சிகள் இலவசங்கள் வழங்கப்படுவது குறித்த வாக்குறுதி கொடுக்க தடை விதிக்க வேண்டும்” என்று பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அஸ்வினி குமார் உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றையும் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது இலவசங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. . “இவ்வாறான அறிவிப்புகளை கட்டுப்படுத்த முடியவில்லையென்றால் தேர்தல் ஆணையம் எதற்கு” என்று உச்ச நீதிமன்றம் காட்டமாகக் கருத்து தெரிவித்திருந்தது. அத்துடன் இது குறித்து விவாதிக்க ஒரு குழுவையும் அமைக்க வேண்டுமென உத்தரவிட்டது. ஆனால், தேர்தல் ஆணையம் அரசமைப்பு சட்டத்தால் நிறுவப்பட்ட ஓர் அமைப்பு என்றும், அதனால் இத்தகைய குழுவில் தங்களால் ஈடுபட முடியாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதற்கு மாறாக, இந்த முன்மொழிவை அளித்துள்ளது."" இந்த அறிவிப்பு அரசியல் கட்சிகள் இடையே விவாதங்களை எழுப்பியுள்ளது. .ஆம் ஆத்மி கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் முன்மொழிவை நிராகரித்துள்ளன. தி.மு.க. வன்மையாகக் கண்டிக்கிறது. அ.தி.மு.க. இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சி, தலைவர் தேர்தலில் பிஸியாக் இருப்பதால் இது குறித்து விவாதிக்கவில்லை. பா.ஜ.க. இது குறித்து இன்னும் பேசவில்லை. ஆனால், இந்த விவாதமே பிரதமர் பேசியதின் விளைவுதான் என்பதால் அவர்கள் நிலை நம்மால் புரிந்துகொள்ளக்கூடியதுதான். இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கையில், அரசியல் கட்சிகளின் கொள்கைகளில் தலையிட தேர்தல் ஆணையத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை. இத்தகைய முன்மொழிவு, அரசியலமைப்பை அவமதிக்கும் செயல் என்றும், அரசியல் கட்சிகளின் உரிமைகளை ஒடுக்கும் செயல் என்றும் தெரிவித்துள்ளது."அரசியல் கட்சிகள் என்ன செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூற வேண்டியதில்லை. இதுபோன்ற முன்மொழிவுகளை அளிப்பதற்கு முன், இதற்கு முன் நடந்த தேர்தலில், 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவதாகவும், ஒவ்வொரு குடிமகனுக்கும் 15 லட்சம் தருவதாகவும் தேர்தல் வாக்குறுதி அளித்த பிரதமர் நரேந்திர மோதியிடம் கேள்வி கேட்க வேண்டும்," என்கிறார்..இந்திய கம்னியூஸ்ட் கட்சி தலைவர் டி. ராஜா சுதந்திரமாக மற்றும் நேர்மையாக தேர்தல் நடத்துவதும், அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் சமயத்தில் சமவாய்ப்பை அளிப்பதையும் உறுதி செய்வதும்தான் தேர்தல் ஆணையத்தின் பணி என்று அரசியலமைப்புசட்டத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டிருப்பதால் தேர்தல் குறித்த கொள்கைகள் ஏதேனும் வரையறுக்கப்பட்டால், அது நாடாளுமன்றத்தின் மூலமாகத்தான் செய்யமுடியுமே. தவிர, தேர்தல் ஆணையத்தின் வழிமுறைகளால் செய்ய முடியாது. "
அரசியல் கட்சிகள் இலவசங்கள் வழங்குவதை இந்திய தேர்தல் ஆணையம் தடுக்க முடியுமா?“தேர்தல் வாக்குறுதியாக வழங்கப்படும் இலவசங்களுக்கான நிதி விவரங்களை இனி இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் அளிக்க வேண்டும்” என்ற திட்டத்தை அக்கட்சிகளுக்கு எழுதிய கடிதத்தில் தேர்தல் ஆணையம் முன்மொழிந்துள்ளது. அக்கடிதத்தில், “அரசியல் கட்சிகள் அளிக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் அறிவிக்கப்படும் இலவச திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் நிதி பற்றிய விவரங்கள் முழுமையாக அளிக்கப்படுவதில்லை” என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், தேர்தல் வாக்குறுதிகளை அளிப்பது அரசியல் கட்சிகளின் தனிப்பட்ட உரிமை என்றாலும், “இத்தகைய வாக்குறுதிகளால் வாக்காளர்கள் மத்தியில் ஏற்படும் தாக்கத்தை தேர்தல் ஆணையம் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது” என்று தெரிவித்துள்ளது. இந்த முன்மொழிவு குறித்து அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துகளை வரும் அக்டோபர் 19ஆம் தேதிக்குள் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சில மாதங்கள் முன், “இலவசங்கள் வழங்கும் கலாசாரம் நாட்டின் வளர்ச்சிக்கு ஆபத்தானவை என்றும், இந்திய மக்கள் குறிப்பாக, இளைஞர்கள் இந்த இலவசங்கள் வழங்கும் கலாசாரம் பற்றி கவனமாக இருக்க வேண்டும்” என்றும் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, “மாநில கட்சிகள் வழங்குவது இலவசங்களா அல்லது நலத்திட்டங்களா” என்ற விவாதங்கள் எழுந்தன. “அரசியல் கட்சிகள் இலவசங்கள் வழங்கப்படுவது குறித்த வாக்குறுதி கொடுக்க தடை விதிக்க வேண்டும்” என்று பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அஸ்வினி குமார் உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றையும் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது இலவசங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. . “இவ்வாறான அறிவிப்புகளை கட்டுப்படுத்த முடியவில்லையென்றால் தேர்தல் ஆணையம் எதற்கு” என்று உச்ச நீதிமன்றம் காட்டமாகக் கருத்து தெரிவித்திருந்தது. அத்துடன் இது குறித்து விவாதிக்க ஒரு குழுவையும் அமைக்க வேண்டுமென உத்தரவிட்டது. ஆனால், தேர்தல் ஆணையம் அரசமைப்பு சட்டத்தால் நிறுவப்பட்ட ஓர் அமைப்பு என்றும், அதனால் இத்தகைய குழுவில் தங்களால் ஈடுபட முடியாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதற்கு மாறாக, இந்த முன்மொழிவை அளித்துள்ளது."" இந்த அறிவிப்பு அரசியல் கட்சிகள் இடையே விவாதங்களை எழுப்பியுள்ளது. .ஆம் ஆத்மி கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் முன்மொழிவை நிராகரித்துள்ளன. தி.மு.க. வன்மையாகக் கண்டிக்கிறது. அ.தி.மு.க. இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சி, தலைவர் தேர்தலில் பிஸியாக் இருப்பதால் இது குறித்து விவாதிக்கவில்லை. பா.ஜ.க. இது குறித்து இன்னும் பேசவில்லை. ஆனால், இந்த விவாதமே பிரதமர் பேசியதின் விளைவுதான் என்பதால் அவர்கள் நிலை நம்மால் புரிந்துகொள்ளக்கூடியதுதான். இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கையில், அரசியல் கட்சிகளின் கொள்கைகளில் தலையிட தேர்தல் ஆணையத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை. இத்தகைய முன்மொழிவு, அரசியலமைப்பை அவமதிக்கும் செயல் என்றும், அரசியல் கட்சிகளின் உரிமைகளை ஒடுக்கும் செயல் என்றும் தெரிவித்துள்ளது."அரசியல் கட்சிகள் என்ன செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூற வேண்டியதில்லை. இதுபோன்ற முன்மொழிவுகளை அளிப்பதற்கு முன், இதற்கு முன் நடந்த தேர்தலில், 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவதாகவும், ஒவ்வொரு குடிமகனுக்கும் 15 லட்சம் தருவதாகவும் தேர்தல் வாக்குறுதி அளித்த பிரதமர் நரேந்திர மோதியிடம் கேள்வி கேட்க வேண்டும்," என்கிறார்..இந்திய கம்னியூஸ்ட் கட்சி தலைவர் டி. ராஜா சுதந்திரமாக மற்றும் நேர்மையாக தேர்தல் நடத்துவதும், அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் சமயத்தில் சமவாய்ப்பை அளிப்பதையும் உறுதி செய்வதும்தான் தேர்தல் ஆணையத்தின் பணி என்று அரசியலமைப்புசட்டத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டிருப்பதால் தேர்தல் குறித்த கொள்கைகள் ஏதேனும் வரையறுக்கப்பட்டால், அது நாடாளுமன்றத்தின் மூலமாகத்தான் செய்யமுடியுமே. தவிர, தேர்தல் ஆணையத்தின் வழிமுறைகளால் செய்ய முடியாது. "