“நான் இந்த விழாவில் ஓர் அமைச்சராக பங்கேற்கவில்லை. அமரர் கல்கியின் பல லட்சக்கணக்கான வாசகர்களில் ஒருவனாகப் பங்கேற்கிறேன். அவர் படைப்பை போற்ற கல்கி குழுமம் எடுத்திருக்கும் புதிய முயற்சியில் பங்குகொள்ள எனக்கும் ஒரு வாய்ப்பளித்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தனது உரையில் குறிப்பிட்டார் தமிழக அரசின் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு. .1950-ல் அமரர் கல்கியின் பேனா நிப்-பின் நுனியிலிருந்து சிறு துளியாக புறப்பட்ட சோழ காவியம் பொன்னியின் செல்வன், வெவ்வேறு காலக்கட்டங்களில் கல்கி வார இதழில் தொடராக வந்திருந்தாலும், பல பதிப்பகங்களால் புத்தகமாக பதிப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சென்னை புத்தகக் கண்காட்சியில் விற்பனையில் முதலிடம் பெறுகிறது. “மணிரத்னம் பொன்னியின் செல்வனைப் பிரம்மாண்டமான திரைப்படமாக தயாரிக்கப் போவதாக அறிவித்தது முதல் அது ஒரு சுனாமியாக நாட்டை தாக்கிக்கொண்டிருந்தது. பலராலும் பொன்னியின் செல்வன் பேசப்பட்டான்.”.இந்த நிலையில் நமது கல்கி குழுமத்திலிருந்து “பொன்னியின் செல்வனுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்” என்று எண்ணியபோது எழுந்ததுதான் இந்தப் பயணமும், ஆவணப்படமும், யோசனையும்...“பெரும் பொருட்செலவையும் ஒரு பெரிய குழுவின் உழைப்பையும் கோரும் இதை நம்மால் செய்ய முடியுமா?” என்ற கேள்வியும் மனதில் எழுந்தது. அப்போது ஒருநாள் விடியற்காலை நேரத்தில் “எல்லாம் தாமாகவே நடக்கும், நன்றாகவே நடக்கும் என்று என் பாட்டனார் கல்கி அவர்களின் குரல் காதில் ஒலித்தது. உடனே செயல்படுத்த திட்டமிட்டேன்...” என்று இந்த திட்டத்தின் கரு உதயமானதையும் தொடர்ந்து புரவலர்களின் உதவியுடன் திட்டம் உருவானதை அவர்களுக்கு நன்றியுடன் தன் வரவேற்புரையில் சொன்னார் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி லஷ்மி நடராஜன். இந்தப் பயணத்துக்கான ஆய்வுகள் செய்து காணொளியில் களத்திலிருந்து காட்சியின் பின்னணிகளை விளக்கியிருக்கும் காலசக்கரம் நரசிம்மனின் அறிமுக உரையில் “பழையாறை சோழன் மாளிகையில் ‘பொன்னியின் செல்வன் கோட்டம்’ என்கிற பெயரில், சோழர்களுக்கு ஒரு நினைவகம் அமைக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டதை அமைச்சர் குறிப்பெடுத்துக்கொண்டார்..தொடர்ந்து 24.09.2022 முதல் 16 நாட்களுக்கு, ஒவ்வொரு நாளும் ஒரு பகுதியாக, ‘கல்கி ஆன்லைன் யூடியூப் சேனல்’ மற்றும் ‘ஜீ நியூஸ்’ ஆன்லைனில் இரவு 8 மணிக்கு ஔிபரப்பாகும் இந்த காணொளி தொடரின் முதல் பகுதியை திரையிட்டார். காணொளியைக் கண்ட பார்வையாளர்களும் விருந்தினர்களும் பிரமித்துப்போனார்கள் என்பதை அவர்களது நீண்ட கர ஒலியில் புரிந்துகொள்ள முடிந்தது.திரையிடலுக்குப் பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு நிகழ்த்திய உரையைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் “அருமை”. .அமைச்சர் தங்கம் தென்னரசு நிறையப் படிப்பவர். அரசியலுக்கு அப்பால் இலக்கிய வட்டத்திலும் நிறைய நண்பர்கள். கல்கியின் நீண்ட நாள் வாசகர். அவ்வப்போது கல்கி தலையங்கம், கேள்வி பதில்கள் குறித்து தன் கருத்தை தயங்காமல் போனில் சொல்லுபவர்.“35 வருடங்களுக்கு முன்னரே தன் கல்லூரி வாழ்க்கையில் கல்கியின் பொன்னியின் செல்வனைப் படித்தபின் அந்த பாதையைத்தேடி இப்படி ஒரு பயணத்தை தான் செய்ததையும், பழையாறையில் தேடிப்போன சோழ மாளிகை இல்லாத ஏமாற்றத்தையும் சொன்னார். ஆனால், தமிழ் தாத்தா உ.வே.ச. தன் சரித்திரத்தில் அந்த அரண்மனையின் மதிற்சுவரைப் பார்த்ததாக எழுதியிருக்கிறார். அப்படியானால் அந்த மாளிகை அதற்குப் பின்னர்தான் அழிந்திருக்க வேண்டும் என்று அவர் சொன்னபோது அவருடைய வாசிப்பின் ஆர்வமும் ஆழமும் தெரிந்தது. “கல்கியின் வந்தியத்தேவனைப் பற்றிய கல்வெட்டு ஏதாவது இருக்கிறதா” என்று தேடிப்போனபோது தஞ்சைக்கோவிலில் ஒரு தமிழ் கல்வெட்டில் அந்தப்பெயர் மட்டும் கிரந்த எழுத்துகளில் ஓரிடத்தில் ஒரு முறைமட்டுமே வருகிறது. அவனைக் கண்டுபிடித்து கதாநாயகனாக்கியிருக்கிறார் கல்கி” என்றார்.பொன்னியின் செல்வனில் அமரர் கல்கி எழுதியிருக்கும் சின்ன சின்ன விஷயங்களைக் கூட நினைவு கூர்ந்தார். (உரையாடல்களை அப்படியே சொல்லுகிறார்) கல்கி தன் காவியத்தில் கோடியக்கரை அருகிலிருக்கும் குழகர் கோவிலில் சம்பந்தர், கடிதாய்க் கடற்காற்று வந்தெற்றக் கரைமேற்குடிதான் அயலேஇருந் தாற்குற்ற மாமோகொடியேன் கண்கள்கண் டனகோடிக் குழகீர்அடிகேள் உமக்கார் துணையாக இருந்தீரே.என்று பாடியதுபோல், ‘இன்னமும் அப்படியே தனியாகத்தான் இருக்கிறார்’ என்று எழுதியிருக்கிறார். ‘தான் சென்று பார்த்தபோதும் தனியாகத்தான் இருந்தார்’ என்று சொல்லி அந்தத் தேவாரப்பாடலை அடி பிறழாமல் சொன்னபோது அவையில் ஆச்சரியப்படாதவர்கள் ஒரு சிலரே. பொன்னியின் செல்வன் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இணையத்தில் நடத்தப்பட்ட வினாடி வினாவில் வென்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் இரண்டு பரிசுகள் தவிர கடுமையான சுற்றுகளைத்தாண்டி இறுதித் தேர்வு வரை வென்று வந்த அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டதை அமைச்சர் பாராட்டினார். காணொளி தயாரிப்பு குழுவினர் கெளரவிக்கப்பட்டனர். கடம்பூர், திருச்சி, தஞ்சை போன்ற இடங்களிலிருந்து, இளைய தலைமுறையினர் பலர் நிகழ்வில் கலந்து கொண்டது மகிழ்ச்சியாயிருந்தது. தனிப்பட்ட ஒரு மனிதர், கடந்த எழுபது வருடங்களாக தமிழகத்தைத் தன் எழுத்தால் மக்களைப் பேச வைத்துக்கொண்டிருக்கிறார். இன்றும், பொன்னியின் செல்வன் ஒரு கற்பனை, வெறும் புதினம் மேட்டுக்குடி வாசகர்களுக்காக எழுதப்பட்டது என்று ஆற்றாமையால் கூறுபவர்களுக்கு பதிலடியாக அது எப்படி சோழ சரித்திரத்தை சாமானியனுக்குச் சொல்லும் ஒரு காவியம் இது என்றும் சமூக ஊடகங்களில் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. .இந்த நேரத்தில், “இப்படி ஒரு காணொளிப் பயணத்தின் மூலம் அமரர் கல்கியின் முயற்சி எத்தனை மகத்தானது” என்பதை வரும் தலைமுறையினருக்குக் கடத்த ஒரு நல்ல வழி செய்திருக்கிறது கல்கி குழுமம். படங்கள் ஶ்ரீஹரி
“நான் இந்த விழாவில் ஓர் அமைச்சராக பங்கேற்கவில்லை. அமரர் கல்கியின் பல லட்சக்கணக்கான வாசகர்களில் ஒருவனாகப் பங்கேற்கிறேன். அவர் படைப்பை போற்ற கல்கி குழுமம் எடுத்திருக்கும் புதிய முயற்சியில் பங்குகொள்ள எனக்கும் ஒரு வாய்ப்பளித்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தனது உரையில் குறிப்பிட்டார் தமிழக அரசின் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு. .1950-ல் அமரர் கல்கியின் பேனா நிப்-பின் நுனியிலிருந்து சிறு துளியாக புறப்பட்ட சோழ காவியம் பொன்னியின் செல்வன், வெவ்வேறு காலக்கட்டங்களில் கல்கி வார இதழில் தொடராக வந்திருந்தாலும், பல பதிப்பகங்களால் புத்தகமாக பதிப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சென்னை புத்தகக் கண்காட்சியில் விற்பனையில் முதலிடம் பெறுகிறது. “மணிரத்னம் பொன்னியின் செல்வனைப் பிரம்மாண்டமான திரைப்படமாக தயாரிக்கப் போவதாக அறிவித்தது முதல் அது ஒரு சுனாமியாக நாட்டை தாக்கிக்கொண்டிருந்தது. பலராலும் பொன்னியின் செல்வன் பேசப்பட்டான்.”.இந்த நிலையில் நமது கல்கி குழுமத்திலிருந்து “பொன்னியின் செல்வனுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்” என்று எண்ணியபோது எழுந்ததுதான் இந்தப் பயணமும், ஆவணப்படமும், யோசனையும்...“பெரும் பொருட்செலவையும் ஒரு பெரிய குழுவின் உழைப்பையும் கோரும் இதை நம்மால் செய்ய முடியுமா?” என்ற கேள்வியும் மனதில் எழுந்தது. அப்போது ஒருநாள் விடியற்காலை நேரத்தில் “எல்லாம் தாமாகவே நடக்கும், நன்றாகவே நடக்கும் என்று என் பாட்டனார் கல்கி அவர்களின் குரல் காதில் ஒலித்தது. உடனே செயல்படுத்த திட்டமிட்டேன்...” என்று இந்த திட்டத்தின் கரு உதயமானதையும் தொடர்ந்து புரவலர்களின் உதவியுடன் திட்டம் உருவானதை அவர்களுக்கு நன்றியுடன் தன் வரவேற்புரையில் சொன்னார் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி லஷ்மி நடராஜன். இந்தப் பயணத்துக்கான ஆய்வுகள் செய்து காணொளியில் களத்திலிருந்து காட்சியின் பின்னணிகளை விளக்கியிருக்கும் காலசக்கரம் நரசிம்மனின் அறிமுக உரையில் “பழையாறை சோழன் மாளிகையில் ‘பொன்னியின் செல்வன் கோட்டம்’ என்கிற பெயரில், சோழர்களுக்கு ஒரு நினைவகம் அமைக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டதை அமைச்சர் குறிப்பெடுத்துக்கொண்டார்..தொடர்ந்து 24.09.2022 முதல் 16 நாட்களுக்கு, ஒவ்வொரு நாளும் ஒரு பகுதியாக, ‘கல்கி ஆன்லைன் யூடியூப் சேனல்’ மற்றும் ‘ஜீ நியூஸ்’ ஆன்லைனில் இரவு 8 மணிக்கு ஔிபரப்பாகும் இந்த காணொளி தொடரின் முதல் பகுதியை திரையிட்டார். காணொளியைக் கண்ட பார்வையாளர்களும் விருந்தினர்களும் பிரமித்துப்போனார்கள் என்பதை அவர்களது நீண்ட கர ஒலியில் புரிந்துகொள்ள முடிந்தது.திரையிடலுக்குப் பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு நிகழ்த்திய உரையைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் “அருமை”. .அமைச்சர் தங்கம் தென்னரசு நிறையப் படிப்பவர். அரசியலுக்கு அப்பால் இலக்கிய வட்டத்திலும் நிறைய நண்பர்கள். கல்கியின் நீண்ட நாள் வாசகர். அவ்வப்போது கல்கி தலையங்கம், கேள்வி பதில்கள் குறித்து தன் கருத்தை தயங்காமல் போனில் சொல்லுபவர்.“35 வருடங்களுக்கு முன்னரே தன் கல்லூரி வாழ்க்கையில் கல்கியின் பொன்னியின் செல்வனைப் படித்தபின் அந்த பாதையைத்தேடி இப்படி ஒரு பயணத்தை தான் செய்ததையும், பழையாறையில் தேடிப்போன சோழ மாளிகை இல்லாத ஏமாற்றத்தையும் சொன்னார். ஆனால், தமிழ் தாத்தா உ.வே.ச. தன் சரித்திரத்தில் அந்த அரண்மனையின் மதிற்சுவரைப் பார்த்ததாக எழுதியிருக்கிறார். அப்படியானால் அந்த மாளிகை அதற்குப் பின்னர்தான் அழிந்திருக்க வேண்டும் என்று அவர் சொன்னபோது அவருடைய வாசிப்பின் ஆர்வமும் ஆழமும் தெரிந்தது. “கல்கியின் வந்தியத்தேவனைப் பற்றிய கல்வெட்டு ஏதாவது இருக்கிறதா” என்று தேடிப்போனபோது தஞ்சைக்கோவிலில் ஒரு தமிழ் கல்வெட்டில் அந்தப்பெயர் மட்டும் கிரந்த எழுத்துகளில் ஓரிடத்தில் ஒரு முறைமட்டுமே வருகிறது. அவனைக் கண்டுபிடித்து கதாநாயகனாக்கியிருக்கிறார் கல்கி” என்றார்.பொன்னியின் செல்வனில் அமரர் கல்கி எழுதியிருக்கும் சின்ன சின்ன விஷயங்களைக் கூட நினைவு கூர்ந்தார். (உரையாடல்களை அப்படியே சொல்லுகிறார்) கல்கி தன் காவியத்தில் கோடியக்கரை அருகிலிருக்கும் குழகர் கோவிலில் சம்பந்தர், கடிதாய்க் கடற்காற்று வந்தெற்றக் கரைமேற்குடிதான் அயலேஇருந் தாற்குற்ற மாமோகொடியேன் கண்கள்கண் டனகோடிக் குழகீர்அடிகேள் உமக்கார் துணையாக இருந்தீரே.என்று பாடியதுபோல், ‘இன்னமும் அப்படியே தனியாகத்தான் இருக்கிறார்’ என்று எழுதியிருக்கிறார். ‘தான் சென்று பார்த்தபோதும் தனியாகத்தான் இருந்தார்’ என்று சொல்லி அந்தத் தேவாரப்பாடலை அடி பிறழாமல் சொன்னபோது அவையில் ஆச்சரியப்படாதவர்கள் ஒரு சிலரே. பொன்னியின் செல்வன் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இணையத்தில் நடத்தப்பட்ட வினாடி வினாவில் வென்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் இரண்டு பரிசுகள் தவிர கடுமையான சுற்றுகளைத்தாண்டி இறுதித் தேர்வு வரை வென்று வந்த அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டதை அமைச்சர் பாராட்டினார். காணொளி தயாரிப்பு குழுவினர் கெளரவிக்கப்பட்டனர். கடம்பூர், திருச்சி, தஞ்சை போன்ற இடங்களிலிருந்து, இளைய தலைமுறையினர் பலர் நிகழ்வில் கலந்து கொண்டது மகிழ்ச்சியாயிருந்தது. தனிப்பட்ட ஒரு மனிதர், கடந்த எழுபது வருடங்களாக தமிழகத்தைத் தன் எழுத்தால் மக்களைப் பேச வைத்துக்கொண்டிருக்கிறார். இன்றும், பொன்னியின் செல்வன் ஒரு கற்பனை, வெறும் புதினம் மேட்டுக்குடி வாசகர்களுக்காக எழுதப்பட்டது என்று ஆற்றாமையால் கூறுபவர்களுக்கு பதிலடியாக அது எப்படி சோழ சரித்திரத்தை சாமானியனுக்குச் சொல்லும் ஒரு காவியம் இது என்றும் சமூக ஊடகங்களில் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. .இந்த நேரத்தில், “இப்படி ஒரு காணொளிப் பயணத்தின் மூலம் அமரர் கல்கியின் முயற்சி எத்தனை மகத்தானது” என்பதை வரும் தலைமுறையினருக்குக் கடத்த ஒரு நல்ல வழி செய்திருக்கிறது கல்கி குழுமம். படங்கள் ஶ்ரீஹரி