ஆதித்யாஇந்த பொன்னியன் செல்வன் சீசனில் எழுந்திருக்கும் ஒரு விவாதம் : “ராஜராஜ சோழன் இந்து மன்னனா..? தமிழ் மன்னனா ?” என்பது. அண்மையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் எம்.பி-யின் 60-வது பிறந்தநாளை முன்னிட்டு குறும்பட, ஆவணப்பட கலை விழா சென்னையில் நடைபெற்றது. .அந்த நிகழ்ச்சியில் பேசியபோது திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன், “சினிமாவை அரசியல் மயப்படுத்துவது மிகவும் முக்கியம். திராவிட இயக்கம் சினிமாவைக் கையிலெடுத்தபோது, ‘கலை கலைக்காக’ என்று பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால், மக்களைப் பிரதிபலிப்பதுதான் கலை.நம்முடைய அடையாளங்களை நம்மிடமிருந்து தொடர்ந்து எடுத்துக் கொண்டிருக் கிறார்கள். திருவள்ளுவருக்கு காவி உடை கொடுக்கிறார்கள். “ராஜராஜ சோழன் ஒரு இந்து அரசன்” என்கிறார்கள். சினிமாவிலும் இது நடந்துவிடும். எனவே, நம் அடையாளங்கள் நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்” என்று வெற்றிமாறன் சொன்னார். வெற்றிமாறன் பேசிய கருத்து சர்ச்சையாக மாறியது. ‘ராஜராஜ சோழன் இந்து மன்னன்தான்’ என்று ஒரு தரப்பினரும், ‘அவர் தமிழ் மன்னன்’ என்று மற்றொரு தரப்பினரும் சொல்ல ஆரம்பித்தார்கள்.. “தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்றால், யாருமே இந்து இல்லை. ஆயிரம் ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் சிவாலயத்தை கட்டிய ராஜராஜ சோழனை இந்து இல்லை என்பதா?” என்கிறார் பா.ஜ.க-வின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன். “இந்து மதம் என்பது ராஜராஜ சோழன் காலத்தில் கிடையாது. வைணவம் என இருந்தது. சைவம் என இருந்தது. சமணம் என்ன இருந்ததே தவிர இந்து மதம்ன்னு வெள்ளைக்காரங்க நமக்கு வைத்த பெயர். நம்மை என்ன சொல்வது என தெரியாமல் அவர்கள் வைத்த பெயர் ராஜராஜன் இந்து அல்ல” என்று கமலஹாசன் வெற்றிமாறன் கருத்தை ஆதரித்து பேட்டிகள் கொடுத்தார். .சோழர் ஆட்சிக்காலத்தில் எல்லாம் இந்து என்கிற மதமே இல்லை. ஆனால், சைவமும் வைணவமும் ஒரு மதத்தின் இரு கிளைகளாகப் பார்க்கப்பட்டன. சைவர்களும் வைணவர்களும் சமணத்தையும் பௌத்தத்தையும் வேறு மதங்களாகத்தான் பார்த்தார்கள். ராஜராஜ சோழன் சைவத்தைப் பின்பற்றிய மன்னன். அந்த வகையில், இன்றைய காலத்தில் அவரை ‘இந்து’ என்று சொல்வதில் தவறொன்றும் கிடையாது. ஆனால், “முகலாய மன்னனுக்குப் பதிலாக வேறு இந்து மன்னர்களை முன்னிறுத்த வேண்டும்” என்ற பார்வை இந்துத்துவவாதிகளிடம் வந்திருக்கிறது. அதனால், “ராஜராஜ சோழனை இந்து மன்னன்” என்று சொல்லி நிலைநாட்ட அவர்கள் ஆசைப்படுகிறார்கள். இந்துத்துவா அரசியல் இருக்கும்போது இந்துத்துவா சினிமா, இந்துத்துவா இலக்கியம் , இந்துத்துவா உணவு என எல்லாவற்றையும் இந்துத்துவாவாகக் கொண்டுவர வேண்டுமென்று நினைக்கிறார்கள் அது தவறு என்கிறார் எழுத்தாளர் இரா.முருகவேள்.ஆறு தெய்வங்களை முன்னிறுத்திய தனித்தனி வழிபாட்டு முறைகளை ஒருங்கிணைத்து ‘ஷன்மதம்’ என்ற ஒற்றை மதத்தை நிறுவியவர் ஆதி சங்கரர். அதுதான் இன்று ‘இந்துமதம்’ என்றழைக்கப்படுகிறது. சிவனை முழுமுதற்கடவுளாகக் கருதிய சைவம், திருமாலை முதற்கடவுளாகக் கருதிய வைணவம், சக்தியை வழிபட்ட சாக்தம், குமரனைக் கும்பிட்ட கெளமாரம், கணபதியை வழிபட்ட காணபத்தியம், சூரியனை வணங்கிய செளரம் ஆகிய ஆறு மதங்களை ஆதி சங்கரர் ஒன்றிணைத்ததைக் குறிக்கும் வகையில் காலடியில் ஒரு ஸ்தம்பம் (tower) ஒன்றைக் காஞ்சி மடம் நிறுவியிருக்கிறது.“ஆதி சங்கரரின் காலம் ஏழாம் நூற்றாண்டின் இறுதி” என்று கருதப்படுகிறது. அதைக் குறித்த பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்திய அறிஞர்கள் மட்டுமின்றி ஜப்பானிய அறிஞர் Hajime Nakamura (A History of Vedanta Philosophy) Allen Wright Thrasher (The Advaita Vedanta of Brahma-siddhi ) என்பவர்கள் விவாதிக்கிறார்கள். இந்து மத நூல்களிலிருந்து மட்டுமின்றி சமண, பெளத்த நூல்களையும் வைத்துக்கொண்டு ஆராய்கிறார்கள். சிலர் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு என்கிறார்கள். எப்படியிருந்தாலும் அதிகபட்சமாக யாரும் ஒன்பதாம் நூற்றாண்டைத் தாண்டவில்லை..ராஜராஜனுடைய காலம் கி.பி. 985-1014. இதை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம் ராஜராஜனுக்கு முன்பே இங்கு சைவம் உள்ளிட்ட ஆறு வழிபாட்டு முறைகளும் இணைந்து ஒரு மதமாகிவிட்டது. இதற்கு இன்னொரு சான்று 'கணபதி என்னும் களிறு; என்று ஏழாம் நூற்றாண்டு அப்பர் தேவாரத்தில் குறிப்பிடுவது. சங்கரரைப் போற்றும் ஜய ஜய சங்கர கோஷத்தைத் தன் பாடலில் அப்பர் குறித்திருக்கிறார். இதையெல்லாம் வாசித்திருந்தால் அல்லது பாரதி சொல்வது போல 'மோந்து பார்த்திருந்தால்' கூட “இந்து” என்றொரு மதம் இருந்ததா, “ராஜராஜன் இந்துவா” என்றெல்லாம் தொலைக்காட்சிகள் விவாதித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். இன்னொரு நாள் கிறிஸ்துவத்தில் உள்ள பிரிவுகளைக் கருத்தில் கொண்டு அது ஒற்றை மதமா என விவாதித்து கேளிக்கை ஊட்டுவார்களோ என்னவோ? என்கிறார் எழுத்தாளர் மாலன். இந்த விவாதங்களைப் பார்க்கும்போது நமது மனத்தில் எழும் கேள்வி “தமிழர்கள் என்பது ஒரு இனம் - இந்து என்பது ஒரு மதப்பிரிவு என்ற கோட்பாடு தவறா? ஒரு தமிழன் இந்துவாக இருக்க முடியதா?”
ஆதித்யாஇந்த பொன்னியன் செல்வன் சீசனில் எழுந்திருக்கும் ஒரு விவாதம் : “ராஜராஜ சோழன் இந்து மன்னனா..? தமிழ் மன்னனா ?” என்பது. அண்மையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் எம்.பி-யின் 60-வது பிறந்தநாளை முன்னிட்டு குறும்பட, ஆவணப்பட கலை விழா சென்னையில் நடைபெற்றது. .அந்த நிகழ்ச்சியில் பேசியபோது திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன், “சினிமாவை அரசியல் மயப்படுத்துவது மிகவும் முக்கியம். திராவிட இயக்கம் சினிமாவைக் கையிலெடுத்தபோது, ‘கலை கலைக்காக’ என்று பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால், மக்களைப் பிரதிபலிப்பதுதான் கலை.நம்முடைய அடையாளங்களை நம்மிடமிருந்து தொடர்ந்து எடுத்துக் கொண்டிருக் கிறார்கள். திருவள்ளுவருக்கு காவி உடை கொடுக்கிறார்கள். “ராஜராஜ சோழன் ஒரு இந்து அரசன்” என்கிறார்கள். சினிமாவிலும் இது நடந்துவிடும். எனவே, நம் அடையாளங்கள் நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்” என்று வெற்றிமாறன் சொன்னார். வெற்றிமாறன் பேசிய கருத்து சர்ச்சையாக மாறியது. ‘ராஜராஜ சோழன் இந்து மன்னன்தான்’ என்று ஒரு தரப்பினரும், ‘அவர் தமிழ் மன்னன்’ என்று மற்றொரு தரப்பினரும் சொல்ல ஆரம்பித்தார்கள்.. “தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்றால், யாருமே இந்து இல்லை. ஆயிரம் ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் சிவாலயத்தை கட்டிய ராஜராஜ சோழனை இந்து இல்லை என்பதா?” என்கிறார் பா.ஜ.க-வின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன். “இந்து மதம் என்பது ராஜராஜ சோழன் காலத்தில் கிடையாது. வைணவம் என இருந்தது. சைவம் என இருந்தது. சமணம் என்ன இருந்ததே தவிர இந்து மதம்ன்னு வெள்ளைக்காரங்க நமக்கு வைத்த பெயர். நம்மை என்ன சொல்வது என தெரியாமல் அவர்கள் வைத்த பெயர் ராஜராஜன் இந்து அல்ல” என்று கமலஹாசன் வெற்றிமாறன் கருத்தை ஆதரித்து பேட்டிகள் கொடுத்தார். .சோழர் ஆட்சிக்காலத்தில் எல்லாம் இந்து என்கிற மதமே இல்லை. ஆனால், சைவமும் வைணவமும் ஒரு மதத்தின் இரு கிளைகளாகப் பார்க்கப்பட்டன. சைவர்களும் வைணவர்களும் சமணத்தையும் பௌத்தத்தையும் வேறு மதங்களாகத்தான் பார்த்தார்கள். ராஜராஜ சோழன் சைவத்தைப் பின்பற்றிய மன்னன். அந்த வகையில், இன்றைய காலத்தில் அவரை ‘இந்து’ என்று சொல்வதில் தவறொன்றும் கிடையாது. ஆனால், “முகலாய மன்னனுக்குப் பதிலாக வேறு இந்து மன்னர்களை முன்னிறுத்த வேண்டும்” என்ற பார்வை இந்துத்துவவாதிகளிடம் வந்திருக்கிறது. அதனால், “ராஜராஜ சோழனை இந்து மன்னன்” என்று சொல்லி நிலைநாட்ட அவர்கள் ஆசைப்படுகிறார்கள். இந்துத்துவா அரசியல் இருக்கும்போது இந்துத்துவா சினிமா, இந்துத்துவா இலக்கியம் , இந்துத்துவா உணவு என எல்லாவற்றையும் இந்துத்துவாவாகக் கொண்டுவர வேண்டுமென்று நினைக்கிறார்கள் அது தவறு என்கிறார் எழுத்தாளர் இரா.முருகவேள்.ஆறு தெய்வங்களை முன்னிறுத்திய தனித்தனி வழிபாட்டு முறைகளை ஒருங்கிணைத்து ‘ஷன்மதம்’ என்ற ஒற்றை மதத்தை நிறுவியவர் ஆதி சங்கரர். அதுதான் இன்று ‘இந்துமதம்’ என்றழைக்கப்படுகிறது. சிவனை முழுமுதற்கடவுளாகக் கருதிய சைவம், திருமாலை முதற்கடவுளாகக் கருதிய வைணவம், சக்தியை வழிபட்ட சாக்தம், குமரனைக் கும்பிட்ட கெளமாரம், கணபதியை வழிபட்ட காணபத்தியம், சூரியனை வணங்கிய செளரம் ஆகிய ஆறு மதங்களை ஆதி சங்கரர் ஒன்றிணைத்ததைக் குறிக்கும் வகையில் காலடியில் ஒரு ஸ்தம்பம் (tower) ஒன்றைக் காஞ்சி மடம் நிறுவியிருக்கிறது.“ஆதி சங்கரரின் காலம் ஏழாம் நூற்றாண்டின் இறுதி” என்று கருதப்படுகிறது. அதைக் குறித்த பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்திய அறிஞர்கள் மட்டுமின்றி ஜப்பானிய அறிஞர் Hajime Nakamura (A History of Vedanta Philosophy) Allen Wright Thrasher (The Advaita Vedanta of Brahma-siddhi ) என்பவர்கள் விவாதிக்கிறார்கள். இந்து மத நூல்களிலிருந்து மட்டுமின்றி சமண, பெளத்த நூல்களையும் வைத்துக்கொண்டு ஆராய்கிறார்கள். சிலர் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு என்கிறார்கள். எப்படியிருந்தாலும் அதிகபட்சமாக யாரும் ஒன்பதாம் நூற்றாண்டைத் தாண்டவில்லை..ராஜராஜனுடைய காலம் கி.பி. 985-1014. இதை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம் ராஜராஜனுக்கு முன்பே இங்கு சைவம் உள்ளிட்ட ஆறு வழிபாட்டு முறைகளும் இணைந்து ஒரு மதமாகிவிட்டது. இதற்கு இன்னொரு சான்று 'கணபதி என்னும் களிறு; என்று ஏழாம் நூற்றாண்டு அப்பர் தேவாரத்தில் குறிப்பிடுவது. சங்கரரைப் போற்றும் ஜய ஜய சங்கர கோஷத்தைத் தன் பாடலில் அப்பர் குறித்திருக்கிறார். இதையெல்லாம் வாசித்திருந்தால் அல்லது பாரதி சொல்வது போல 'மோந்து பார்த்திருந்தால்' கூட “இந்து” என்றொரு மதம் இருந்ததா, “ராஜராஜன் இந்துவா” என்றெல்லாம் தொலைக்காட்சிகள் விவாதித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். இன்னொரு நாள் கிறிஸ்துவத்தில் உள்ள பிரிவுகளைக் கருத்தில் கொண்டு அது ஒற்றை மதமா என விவாதித்து கேளிக்கை ஊட்டுவார்களோ என்னவோ? என்கிறார் எழுத்தாளர் மாலன். இந்த விவாதங்களைப் பார்க்கும்போது நமது மனத்தில் எழும் கேள்வி “தமிழர்கள் என்பது ஒரு இனம் - இந்து என்பது ஒரு மதப்பிரிவு என்ற கோட்பாடு தவறா? ஒரு தமிழன் இந்துவாக இருக்க முடியதா?”