மெரினாக் கடற்கரை ஞாயிற்றுக்கிழமை மாலையானாதால் மக்கள் கூட்டங்களால் நிறைந்திருந்தது. அத்தனை மனிதத் தலைகளை பார்த்ததாலோ என்னவோ கடல் அலை ஆர்ப்பரித்து வந்து கரையை அரித்து உள்வாங்கிக் கொண்டிருந்தது.மக்கள் கூட்டத்தில் இருந்து ஒதுங்கி தனியாக உடைந்த படகொன்றின் மேல் அமர்ந்து கடலை ரசித்துக் கொண்டிருந்தேன். கரிய நிறம் பூசி கடல் இருளை உள்வாங்கிக் கொண்டிருந்தது. எவ்வளவு நேரம் கழிந்ததோ தெரியவில்லை! மனம் சரியில்லாதபோது கடல் காற்றை சுவாசித்து மனதிற்கு கொஞ்சம் புத்துணர்ச்சியை ஏற்றிக் கொள்வது என் வழக்கம். அலைபாய்ந்த மனது தெளிந்தாற்போல தோன்ற கரையை நோக்கி நடக்கத் தொடங்கினேன். நிறைந்து கிடந்த கடற்கரையில் பாதி காணாமல் போயிருந்தது. மெல்ல டூ வீலர் பார்க்கிங் அருகே வந்து என் வண்டியை சாவி போட்டுத் திருகிய சமயம் பக்கத்தில் வந்து நின்ற வண்டியில் இருந்து அவள் இறங்கினாள். சுடிதார் துப்பட்டாவால் முகம் முழுவதும் மறைத்து நின்றாலும் என்னால் அவளை அடையாளம் காண முடிந்தது. தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்து இருந்தாலும் முதல் படத்திலேயே இளசுகளின் மனதை கொள்ளையடித்துச் சென்றவள் அவள். அடுத்தடுத்து சில படங்கள் தோல்விப் படமாக போனாலும் இயக்குனர் ஒருவரின் படத்தில் நடித்தபோது அவரோடு காதல் வயப்பட்டு பின்னர் அவரையே மணம் புரிந்துகொண்டாள். சொல்லப்போனால் அந்த காதலுக்கு தூது போனவனே நான்தான்! நான் அந்த இயக்குனரின் உதவி இயக்குனராக பணிபுரிந்தபோது நடந்தது அது. அவர்கள் சந்தித்து பேச எல்லாம் இடம் பார்த்துக் கொடுத்து இருக்கிறேன். பிழைப்புக்கு பத்திரிக்கையொன்றில் ப்ரிலான்ஸராகவும் இருந்ததால் இந்த காதல் விவகாரங்களை கிசுகிசுக்களாக எழுதி பரபரக்க வைத்ததிலும் எனது பங்கு அதிகம்.நான் அவளையே பார்ப்பதை கவனித்தவள் “ஹாய் நவீன்! எப்படியிருக்கே?” என்றாள்.பார்த்தும் பார்க்காததுமாய் சென்று விடுவாள் என்று நினைத்தேன். என்னை நியாபகம் வைத்து விசாரித்த போது இவள் வித்தியாசமானவள் என்று தோன்றியது. “பைன் மேடம்! நல்லா இருக்கேன்! நீங்க?” என்று இழுத்தேன். “ நல்லா இருக்கேன்!” என்று அவள் சொன்னபோது சுரத்தில்லை.சமீபத்தில்தான் அவளது டைரக்டர் கணவனும் அவளும் பரஸ்பர விவாகரத்து கேட்டு மனு செய்திருந்தார்கள். அதன் வலி இன்னும் இருக்கும். “தனியாத்தான் வந்திருக்கீங்களா?” என்று கேட்டபோது அவள் “க்ளுக்” என்று சிரித்தாள் ”வேணும்னா! யார் பெயரையாவது என்னோட சேர்த்து எழுதி பிரஸ்ஸுக்கு கொடேன்! உன் செலவுக்கு ஆகும்” என்றாள். “ஸா.. ஸாரி மேடம்” நான் கிளம்பறேன்!” “ எதுவும் அர்ஜெண்ட் ஒர்க் இருக்கா? நான் தனியாத்தான் வந்திருக்கேன்! கொஞ்சம் கம்பெனி கொடேன்!” “சார் வ.. வரலையா?” இழுத்தேன்...“ எல்லாம் தெரிஞ்சும் தெரியாத மாதிரி நடிக்காதே நவீன்! நாங்க இப்ப ஒண்ணா இல்லே! பிரிஞ்சிட்டோம்! இது எல்லா மீடியாவுலும் வந்து பேஸ் புக், டிவிட்டர்ல எல்லாம் விவாதம் நடந்துகிட்டு இருக்கு! உனக்கு எதுவுமே தெரியாத போல நடிக்காதே!” “அதான் ஏன் மேடம்?” ”நான் தீபா சந்திரனா இருக்கிறது மகிக்கு பிடிக்கலை” “ என்ன சொல்றீங்க? புரியலை!” “ நடந்துகிட்டே பேசுவோமா? மனசுலே இருக்கிறதை யாருகிட்டேயாவது கொட்டினா கொஞ்சம் நிம்மதி கிடைக்கும்! நான் மட்டும் இல்லே! எல்லா பிரபல நடிகைகளும் இப்படி ஒரு ஆள் கிடைக்காமத்தான் எதுக்கோ அடிமையாகி அப்புறம் வாழ்க்கையை இழந்துடறாங்க!”அந்த இருட்டு வேலையிலும் அவளை அடையாளம் கண்டுகொண்டு ஒரு கும்பல் “ தீபாடா!” என்று நெருங்கி வர முகத்தை மூடிக்கொண்டு அவசரமாக நடக்க “வேற ஆளை செட் பண்ணிட்டியா? என்று குரல் விட்டார்கள்.”ஹேய்! மைண்ட் யுவர் வேர்ட்ஸ்!” எதுக்கு? எதுக்குங்கறேன்! நீதான் பப்ளிக் ப்ளேஸ்ல அன் டீசண்டா பிஹேவ் பண்ணிக்கிட்டு இருக்கே? கேட்டா என்னையே மூடச்சொல்றியா? ஒருவன் எகிற கும்பல் கூடியது. போலீஸ் வேன் ஒன்று சைரன் அடித்து வந்ததும் கூட்டம் கலைந்தது. அதில் இருந்து இறங்கிய ஓர் அதிகாரி “மேடம் நீங்க இப்படி தனியா இங்க வரது சரியில்லை! உடனே கிளம்புங்க! ”“ என் டூ விலர் அங்க இருக்கு”“ மை காட்! டூ வீலர்லேயே வந்தீங்க? ஆனாலும் ரொம்ப அசட்டுத் துணிச்சல் உங்களுக்கு? சார் யாரு? “ அந்த அதிகாரி என்னைப் பார்த்த பார்வையில் சந்தேகத்தோடு கொஞ்சம் பொறாமையும் கலந்திருந்தது. “ இவர் சாரோட அஸிஸ்டெண்ட்! எனக்கு தெரிஞ்சவர்தான்! ஜஸ்ட் இங்கதான் மீட் பண்ணோம்!” நாங்க போயிடறோம்!” “ என்னய்யா! மேடத்தை பத்திரமா கூட்டிட்டு போயிருவியா?” அவர் பேச்சில் கேலி துளிர்த்தது. சில நிமிடங்களில் கார் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து கோபத்துடன் மகி இறங்கினான். “ உன்னை யார் தனியா இங்கே எல்லாம் வரச்சொன்னது!? வீட்ல சும்மாத்தான் இருக்கேன் என்னை கூட்டி வந்திருக்கலாம் இல்லையா? என்று அவளிடம் கத்தியவன் என்னை விரோதமாக பார்த்தான். “ஓ நீ இங்கதான் இருக்கியா?” என்றான். சில காந்தி நோட்டுகள் கைமாற தீபா மகியின் காரில் ஏறி அமர்ந்து கை அசைத்தாள். போன் செய்கிறேன் என்று சைகை செய்தாள். அவளின் டூ வீலரை ஒரு கான்ஸ்டபிள் கொண்டு செல்ல என் டூ விலரில் நான் என் வீடு வந்து சேர்ந்தேன்.தீபா சந்திரன்! எவ்வளவு பெரிய நடிகை தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்களை கட்டிப் போட்டவள். நல்ல இயக்குனர் கையால் அறிமுகம் ஆனவள் செய்த தவறு அடுத்தடுத்து சில பொம்மை வேடங்களில் நடித்து பெயரைக் கெடுத்துக் கொண்டாள்.அப்புறம் மகியின் படத்தில் புக்கானபோதுதான் எனக்கு பழக்கம். மகி அப்போது ஒன்றிரண்டு படங்களை இயக்கி இளைய தலைமுறை ஹீரோவை வைத்து புது படம் ஒன்றை இயக்கிக் கொண்டிருந்தான். நாங்கள் ஒரே செட்! பல ஊர்களில் இருந்து வந்து பல இயக்குனர்களிடம் உதவியாக க்ளாப் பாயாக இருந்து பாடம் படித்து ஒரு இயக்குனரிடம் உதவி இயக்குனராக சேர்ந்து நாலைந்து படம் வேலை செய்ய மகிக்கு படம் கிடைத்து இயக்குனர் ஆகிவிட்டான். அவனுக்கு இப்போது உதவி இயக்குனர் தேவைப்பட்டது. நானும் இன்னும் சிலரும்.தீபாவின் முதல் படம் வரும்போதே மகி புலம்பித் தீர்த்தான். அவ தான் என் ட்ரீம் கேர்ள்! அவளைத்தான் கட்டணும் என்றெல்லாம் புலம்புவான். அவனது அதிர்ஷ்டம் அவனுடைய ஹீரோயினாக தீபா வந்ததும் ரொம்பவும் சிலாகித்துப் போனான். பார்த்து பார்த்து கவனித்தான். நாங்களும் அவ்வப்போது கொளுத்திப் போட காதல் பத்திக் கொண்டது. திரையுலகில் பொறாமையாக கூட பார்த்தார்கள். பத்திரிக்கைகளுக்கு நிறைய தீனி கிடைத்தது. படம் முடியும் போது இருவரும் கை பிடித்தார்கள். தீபா நடிப்புக்கு முழுக்கு போட்டாள். செல்போன் அடித்தது. நள்ளிரவு பன்னிரண்டை தாண்டி இருந்தது. இவ்வளவு நேரம் தூங்காமல் இருக்கிறேனா? எடுத்தேன். ”ஹலோ! நான் தீபா பேசறேன்!” “ சொல்லுங்க!” என்றேன் “ நீங்களும் தூங்கலயா?” என்றாள்.“ப்ச்” மகியும் நீங்களும் ஆதர்ச தம்பதிகளா இருப்பீங்கன்னு நினைச்சேன்! திடீர்னு பிரிஞ்சிட்டீங்களே! பழைய நினைவுகள் தூக்கம் வரலை…!” “ எங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சதிலே உங்க பங்கு நிறையன்னு எனக்கும் தெரியும்! பேசனும் உங்க கூட பேசணும் நாளைக்கு ஹோட்டல் சவேரா வந்திருங்க! ஈவ்னிங் ஆறு மணிக்கு! பேசலாம்! குட்நைட் !” வைத்துவிட்டாள். ஒரு பிரபல நடிகை! பிரபல இயக்குனரின் மனைவி அழைக்கிறாள் என்பதை நம்ப முடியவில்லை! நான் ஒரு சாதாரண உதவி இயக்குனன். காசுக்கு பத்திரிக்கைகளில் கிசு கிசு பரப்புபவன் என்னை நம்பி அழைக்கிறாளே!••• ••• ••• மறுநாள் மாலை ஆறுமணி சவேராவில் என் டூ விலரை பார்க் செய்த போது செல் அடித்தது. வந்துட்டீங்களா? ரெஸ்ட்டாரண்ட் வந்துடுங்க! என்றாள். உள்ளே நுழைந்ததும் கை அசைத்தாள். சென்று எதிரில் அமர்ந்தேன்! “ என்ன சாப்பிடறீங்க?” எது வேணா சொல்லுங்க? ஆனா மகிக்கும் உங்களுக்கும் என்னதான் பிரச்னை? அவன் உங்களை ட்ரீம் கேர்ளா நினைச்சுக்கிட்டு இருந்தான். புன்னகைத்தாள். வெயிட்டரிடம் ரெண்டு நான், சென்னா மசாலா! அப்புறம் காபி! என்று ஆர்டர் செய்தவள் அவன் அகன்றதும் “ நான் ட்ரீம் கேர்ளா இருக்கிறதுதான் அவரோட பிரச்னை!” என்றாள். “ என்ன சொல்றீங்க?” “நான் நடிக்க வந்தபோதே நிறைய பேருக்கு ட்ரீம் கேர்ள் ஆயிட்டேன்! ஆனா, இவர் என்னை மேரேஜ் பண்ணிக்கிட்டதும் படம் பண்ணக் கூடாதுன்னு சொல்லிட்டார்! ஒத்துக்கிட்டேன்!”அப்புறம் ஒன்னு ரெண்டு படம் நல்ல கேரக்டர் வந்துச்சு பண்ணேன்! அது அவருக்கு பிடிக்கலை! அவருக்கு அவரோட மனைவி நடிக்க கூடாது. வீட்டுல குடும்பப் பெண்ணா இருக்கணும். குழந்தை குட்டி பெத்துக்கணும். அவங்க அப்பா அம்மாவை பார்த்துக்கணும்... ஒரு இருட்டான அறையில சிறையில என்னை தள்ளிட்டாரு. “ டைரக்ஷன் அவரோட ப்ரொபஷன் என்கிற மாதிரி ஆக்டிங் என்னோட ப்ரொபஷன்! நான் ஏன் என் கெரியரை விட்டுத் தரணும். நான் வெளிச்சத்துக்கு வரதை அவர் விரும்பவே இல்லை! அதுக்கும் மேல என்னோட மதம், கேஸ்ட்! எல்லாமே அவங்களுக்கு பிடிக்கவே இல்லை! என்னை கட்டாயப்படுத்தி மாறச் சொல்றாங்க!” “ நான் ஏன் மாறணும்? நான் மாறிட்டா எல்லாமே மாறிடுமா? இல்லை எனக்காக அவர் மாறக் கூடாதா? நானே எல்லாத்தையும் விட்டுக்கொடுத்து போகணும்னு சொல்லுவார்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை! நல்ல வேளை குழந்தை எதுவும் பிறக்கலை! பிறந்திருந்தா பாவம் அதுவும் எங்க சண்டையிலே கஷ்டப்பட்டு இருக்கணும்.” “இதையெல்லாம் நீங்க முதல்லேயே யோசிச்சு இருக்க வேண்டாமா?”“எங்க யோசிக்க விட்டீங்க? நீங்க பாட்டுக்கு கோசிப்ஸ் எழுதி குவிச்சிட்டீங்க! அவரும் கொஞ்சம் கூட யோசிக்க விடாம என்னை துளைச்சு எடுத்தாரு! எங்க வீட்டுல என்னை ஒரு பணம் காய்ச்சியா நினைச்சாங்க! இதுல இருந்து எப்படி தப்பிக்கலாம்னு ஆத்துல விழுந்தவ எழுந்து திரும்பவும் கிணத்துல விழுந்துட்டேன்!” ”நவீன்! நாங்கல்லாம் வெளிச்சத்துல வாழற விட்டில் பூச்சிகள்! வெளிச்சம் எங்க மேல பட்டுக்கிட்டே இருந்தாத்தான் உயிர் வாழ முடியும்! வெளிச்சம் இல்லாதபோது உயிர் இருக்காது. எப்பவும் வெளிச்சத்தை விளக்கை தேடிக்கிட்டே இருப்போம்! அந்த விளக்கு எங்களை அழிக்குதுன்னு தெரிஞ்சாலும் அதனோட ஒளி எங்களை ஈர்க்குது! அதனோட அழகு எங்களை சாய்க்குது! ஒளி வட்டத்துலேயே வாழ பழகிட்ட எங்களுக்கு அதை விட்டு இருட்டான இடத்திலே வாழப் பிடிக்காது!” ” நான் ஆயிரம் குறை மகி மேல சொன்னாலும் இதான் உண்மை! வெளிச்சம் என்னை கூப்பிடுது! மகி அங்கே போகாதேங்கிறார்! என்னால போகாமா இருக்க முடியலை! எனக்கு வெளிச்சம் வேணும்! புகழ் வேணும்! ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காதுன்னு சொல்லுவாங்க! என்னால சும்மா இருக்க முடியலை! ” “ என்னை இருட்டறையில வச்சு மகி எவ்வளதான் தாங்கினாலும் வெளியே லேம்ப் போஸ்ட்கிட்ட இருக்கிற வெளிச்சம்தான் எனக்கு பெரிசா தெரியுது! ஸோ! பேரர் வைத்த நான் ஆறிப் போய் இருந்தது! ஒரு நடிகையின் குடும்ப வாழ்க்கையும் இப்படி ஆறிப் போய்விட்டதே! என்று மனம் கனக்க அதை உண்ண ஆரம்பித்தேன். பேரரிடம் பில் செட்டில் செய்துவிட்டு என்னிடம் விடைபெற்றார் தீபா. அந்த ஓட்டலின் விளக்குகள் உயிர் பெற்று ஒளிர வெளிச்சத்தை விரும்பிய தீபா இருட்டான பகுதியில் நடந்து மறைந்தாள்.
மெரினாக் கடற்கரை ஞாயிற்றுக்கிழமை மாலையானாதால் மக்கள் கூட்டங்களால் நிறைந்திருந்தது. அத்தனை மனிதத் தலைகளை பார்த்ததாலோ என்னவோ கடல் அலை ஆர்ப்பரித்து வந்து கரையை அரித்து உள்வாங்கிக் கொண்டிருந்தது.மக்கள் கூட்டத்தில் இருந்து ஒதுங்கி தனியாக உடைந்த படகொன்றின் மேல் அமர்ந்து கடலை ரசித்துக் கொண்டிருந்தேன். கரிய நிறம் பூசி கடல் இருளை உள்வாங்கிக் கொண்டிருந்தது. எவ்வளவு நேரம் கழிந்ததோ தெரியவில்லை! மனம் சரியில்லாதபோது கடல் காற்றை சுவாசித்து மனதிற்கு கொஞ்சம் புத்துணர்ச்சியை ஏற்றிக் கொள்வது என் வழக்கம். அலைபாய்ந்த மனது தெளிந்தாற்போல தோன்ற கரையை நோக்கி நடக்கத் தொடங்கினேன். நிறைந்து கிடந்த கடற்கரையில் பாதி காணாமல் போயிருந்தது. மெல்ல டூ வீலர் பார்க்கிங் அருகே வந்து என் வண்டியை சாவி போட்டுத் திருகிய சமயம் பக்கத்தில் வந்து நின்ற வண்டியில் இருந்து அவள் இறங்கினாள். சுடிதார் துப்பட்டாவால் முகம் முழுவதும் மறைத்து நின்றாலும் என்னால் அவளை அடையாளம் காண முடிந்தது. தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்து இருந்தாலும் முதல் படத்திலேயே இளசுகளின் மனதை கொள்ளையடித்துச் சென்றவள் அவள். அடுத்தடுத்து சில படங்கள் தோல்விப் படமாக போனாலும் இயக்குனர் ஒருவரின் படத்தில் நடித்தபோது அவரோடு காதல் வயப்பட்டு பின்னர் அவரையே மணம் புரிந்துகொண்டாள். சொல்லப்போனால் அந்த காதலுக்கு தூது போனவனே நான்தான்! நான் அந்த இயக்குனரின் உதவி இயக்குனராக பணிபுரிந்தபோது நடந்தது அது. அவர்கள் சந்தித்து பேச எல்லாம் இடம் பார்த்துக் கொடுத்து இருக்கிறேன். பிழைப்புக்கு பத்திரிக்கையொன்றில் ப்ரிலான்ஸராகவும் இருந்ததால் இந்த காதல் விவகாரங்களை கிசுகிசுக்களாக எழுதி பரபரக்க வைத்ததிலும் எனது பங்கு அதிகம்.நான் அவளையே பார்ப்பதை கவனித்தவள் “ஹாய் நவீன்! எப்படியிருக்கே?” என்றாள்.பார்த்தும் பார்க்காததுமாய் சென்று விடுவாள் என்று நினைத்தேன். என்னை நியாபகம் வைத்து விசாரித்த போது இவள் வித்தியாசமானவள் என்று தோன்றியது. “பைன் மேடம்! நல்லா இருக்கேன்! நீங்க?” என்று இழுத்தேன். “ நல்லா இருக்கேன்!” என்று அவள் சொன்னபோது சுரத்தில்லை.சமீபத்தில்தான் அவளது டைரக்டர் கணவனும் அவளும் பரஸ்பர விவாகரத்து கேட்டு மனு செய்திருந்தார்கள். அதன் வலி இன்னும் இருக்கும். “தனியாத்தான் வந்திருக்கீங்களா?” என்று கேட்டபோது அவள் “க்ளுக்” என்று சிரித்தாள் ”வேணும்னா! யார் பெயரையாவது என்னோட சேர்த்து எழுதி பிரஸ்ஸுக்கு கொடேன்! உன் செலவுக்கு ஆகும்” என்றாள். “ஸா.. ஸாரி மேடம்” நான் கிளம்பறேன்!” “ எதுவும் அர்ஜெண்ட் ஒர்க் இருக்கா? நான் தனியாத்தான் வந்திருக்கேன்! கொஞ்சம் கம்பெனி கொடேன்!” “சார் வ.. வரலையா?” இழுத்தேன்...“ எல்லாம் தெரிஞ்சும் தெரியாத மாதிரி நடிக்காதே நவீன்! நாங்க இப்ப ஒண்ணா இல்லே! பிரிஞ்சிட்டோம்! இது எல்லா மீடியாவுலும் வந்து பேஸ் புக், டிவிட்டர்ல எல்லாம் விவாதம் நடந்துகிட்டு இருக்கு! உனக்கு எதுவுமே தெரியாத போல நடிக்காதே!” “அதான் ஏன் மேடம்?” ”நான் தீபா சந்திரனா இருக்கிறது மகிக்கு பிடிக்கலை” “ என்ன சொல்றீங்க? புரியலை!” “ நடந்துகிட்டே பேசுவோமா? மனசுலே இருக்கிறதை யாருகிட்டேயாவது கொட்டினா கொஞ்சம் நிம்மதி கிடைக்கும்! நான் மட்டும் இல்லே! எல்லா பிரபல நடிகைகளும் இப்படி ஒரு ஆள் கிடைக்காமத்தான் எதுக்கோ அடிமையாகி அப்புறம் வாழ்க்கையை இழந்துடறாங்க!”அந்த இருட்டு வேலையிலும் அவளை அடையாளம் கண்டுகொண்டு ஒரு கும்பல் “ தீபாடா!” என்று நெருங்கி வர முகத்தை மூடிக்கொண்டு அவசரமாக நடக்க “வேற ஆளை செட் பண்ணிட்டியா? என்று குரல் விட்டார்கள்.”ஹேய்! மைண்ட் யுவர் வேர்ட்ஸ்!” எதுக்கு? எதுக்குங்கறேன்! நீதான் பப்ளிக் ப்ளேஸ்ல அன் டீசண்டா பிஹேவ் பண்ணிக்கிட்டு இருக்கே? கேட்டா என்னையே மூடச்சொல்றியா? ஒருவன் எகிற கும்பல் கூடியது. போலீஸ் வேன் ஒன்று சைரன் அடித்து வந்ததும் கூட்டம் கலைந்தது. அதில் இருந்து இறங்கிய ஓர் அதிகாரி “மேடம் நீங்க இப்படி தனியா இங்க வரது சரியில்லை! உடனே கிளம்புங்க! ”“ என் டூ விலர் அங்க இருக்கு”“ மை காட்! டூ வீலர்லேயே வந்தீங்க? ஆனாலும் ரொம்ப அசட்டுத் துணிச்சல் உங்களுக்கு? சார் யாரு? “ அந்த அதிகாரி என்னைப் பார்த்த பார்வையில் சந்தேகத்தோடு கொஞ்சம் பொறாமையும் கலந்திருந்தது. “ இவர் சாரோட அஸிஸ்டெண்ட்! எனக்கு தெரிஞ்சவர்தான்! ஜஸ்ட் இங்கதான் மீட் பண்ணோம்!” நாங்க போயிடறோம்!” “ என்னய்யா! மேடத்தை பத்திரமா கூட்டிட்டு போயிருவியா?” அவர் பேச்சில் கேலி துளிர்த்தது. சில நிமிடங்களில் கார் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து கோபத்துடன் மகி இறங்கினான். “ உன்னை யார் தனியா இங்கே எல்லாம் வரச்சொன்னது!? வீட்ல சும்மாத்தான் இருக்கேன் என்னை கூட்டி வந்திருக்கலாம் இல்லையா? என்று அவளிடம் கத்தியவன் என்னை விரோதமாக பார்த்தான். “ஓ நீ இங்கதான் இருக்கியா?” என்றான். சில காந்தி நோட்டுகள் கைமாற தீபா மகியின் காரில் ஏறி அமர்ந்து கை அசைத்தாள். போன் செய்கிறேன் என்று சைகை செய்தாள். அவளின் டூ வீலரை ஒரு கான்ஸ்டபிள் கொண்டு செல்ல என் டூ விலரில் நான் என் வீடு வந்து சேர்ந்தேன்.தீபா சந்திரன்! எவ்வளவு பெரிய நடிகை தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்களை கட்டிப் போட்டவள். நல்ல இயக்குனர் கையால் அறிமுகம் ஆனவள் செய்த தவறு அடுத்தடுத்து சில பொம்மை வேடங்களில் நடித்து பெயரைக் கெடுத்துக் கொண்டாள்.அப்புறம் மகியின் படத்தில் புக்கானபோதுதான் எனக்கு பழக்கம். மகி அப்போது ஒன்றிரண்டு படங்களை இயக்கி இளைய தலைமுறை ஹீரோவை வைத்து புது படம் ஒன்றை இயக்கிக் கொண்டிருந்தான். நாங்கள் ஒரே செட்! பல ஊர்களில் இருந்து வந்து பல இயக்குனர்களிடம் உதவியாக க்ளாப் பாயாக இருந்து பாடம் படித்து ஒரு இயக்குனரிடம் உதவி இயக்குனராக சேர்ந்து நாலைந்து படம் வேலை செய்ய மகிக்கு படம் கிடைத்து இயக்குனர் ஆகிவிட்டான். அவனுக்கு இப்போது உதவி இயக்குனர் தேவைப்பட்டது. நானும் இன்னும் சிலரும்.தீபாவின் முதல் படம் வரும்போதே மகி புலம்பித் தீர்த்தான். அவ தான் என் ட்ரீம் கேர்ள்! அவளைத்தான் கட்டணும் என்றெல்லாம் புலம்புவான். அவனது அதிர்ஷ்டம் அவனுடைய ஹீரோயினாக தீபா வந்ததும் ரொம்பவும் சிலாகித்துப் போனான். பார்த்து பார்த்து கவனித்தான். நாங்களும் அவ்வப்போது கொளுத்திப் போட காதல் பத்திக் கொண்டது. திரையுலகில் பொறாமையாக கூட பார்த்தார்கள். பத்திரிக்கைகளுக்கு நிறைய தீனி கிடைத்தது. படம் முடியும் போது இருவரும் கை பிடித்தார்கள். தீபா நடிப்புக்கு முழுக்கு போட்டாள். செல்போன் அடித்தது. நள்ளிரவு பன்னிரண்டை தாண்டி இருந்தது. இவ்வளவு நேரம் தூங்காமல் இருக்கிறேனா? எடுத்தேன். ”ஹலோ! நான் தீபா பேசறேன்!” “ சொல்லுங்க!” என்றேன் “ நீங்களும் தூங்கலயா?” என்றாள்.“ப்ச்” மகியும் நீங்களும் ஆதர்ச தம்பதிகளா இருப்பீங்கன்னு நினைச்சேன்! திடீர்னு பிரிஞ்சிட்டீங்களே! பழைய நினைவுகள் தூக்கம் வரலை…!” “ எங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சதிலே உங்க பங்கு நிறையன்னு எனக்கும் தெரியும்! பேசனும் உங்க கூட பேசணும் நாளைக்கு ஹோட்டல் சவேரா வந்திருங்க! ஈவ்னிங் ஆறு மணிக்கு! பேசலாம்! குட்நைட் !” வைத்துவிட்டாள். ஒரு பிரபல நடிகை! பிரபல இயக்குனரின் மனைவி அழைக்கிறாள் என்பதை நம்ப முடியவில்லை! நான் ஒரு சாதாரண உதவி இயக்குனன். காசுக்கு பத்திரிக்கைகளில் கிசு கிசு பரப்புபவன் என்னை நம்பி அழைக்கிறாளே!••• ••• ••• மறுநாள் மாலை ஆறுமணி சவேராவில் என் டூ விலரை பார்க் செய்த போது செல் அடித்தது. வந்துட்டீங்களா? ரெஸ்ட்டாரண்ட் வந்துடுங்க! என்றாள். உள்ளே நுழைந்ததும் கை அசைத்தாள். சென்று எதிரில் அமர்ந்தேன்! “ என்ன சாப்பிடறீங்க?” எது வேணா சொல்லுங்க? ஆனா மகிக்கும் உங்களுக்கும் என்னதான் பிரச்னை? அவன் உங்களை ட்ரீம் கேர்ளா நினைச்சுக்கிட்டு இருந்தான். புன்னகைத்தாள். வெயிட்டரிடம் ரெண்டு நான், சென்னா மசாலா! அப்புறம் காபி! என்று ஆர்டர் செய்தவள் அவன் அகன்றதும் “ நான் ட்ரீம் கேர்ளா இருக்கிறதுதான் அவரோட பிரச்னை!” என்றாள். “ என்ன சொல்றீங்க?” “நான் நடிக்க வந்தபோதே நிறைய பேருக்கு ட்ரீம் கேர்ள் ஆயிட்டேன்! ஆனா, இவர் என்னை மேரேஜ் பண்ணிக்கிட்டதும் படம் பண்ணக் கூடாதுன்னு சொல்லிட்டார்! ஒத்துக்கிட்டேன்!”அப்புறம் ஒன்னு ரெண்டு படம் நல்ல கேரக்டர் வந்துச்சு பண்ணேன்! அது அவருக்கு பிடிக்கலை! அவருக்கு அவரோட மனைவி நடிக்க கூடாது. வீட்டுல குடும்பப் பெண்ணா இருக்கணும். குழந்தை குட்டி பெத்துக்கணும். அவங்க அப்பா அம்மாவை பார்த்துக்கணும்... ஒரு இருட்டான அறையில சிறையில என்னை தள்ளிட்டாரு. “ டைரக்ஷன் அவரோட ப்ரொபஷன் என்கிற மாதிரி ஆக்டிங் என்னோட ப்ரொபஷன்! நான் ஏன் என் கெரியரை விட்டுத் தரணும். நான் வெளிச்சத்துக்கு வரதை அவர் விரும்பவே இல்லை! அதுக்கும் மேல என்னோட மதம், கேஸ்ட்! எல்லாமே அவங்களுக்கு பிடிக்கவே இல்லை! என்னை கட்டாயப்படுத்தி மாறச் சொல்றாங்க!” “ நான் ஏன் மாறணும்? நான் மாறிட்டா எல்லாமே மாறிடுமா? இல்லை எனக்காக அவர் மாறக் கூடாதா? நானே எல்லாத்தையும் விட்டுக்கொடுத்து போகணும்னு சொல்லுவார்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை! நல்ல வேளை குழந்தை எதுவும் பிறக்கலை! பிறந்திருந்தா பாவம் அதுவும் எங்க சண்டையிலே கஷ்டப்பட்டு இருக்கணும்.” “இதையெல்லாம் நீங்க முதல்லேயே யோசிச்சு இருக்க வேண்டாமா?”“எங்க யோசிக்க விட்டீங்க? நீங்க பாட்டுக்கு கோசிப்ஸ் எழுதி குவிச்சிட்டீங்க! அவரும் கொஞ்சம் கூட யோசிக்க விடாம என்னை துளைச்சு எடுத்தாரு! எங்க வீட்டுல என்னை ஒரு பணம் காய்ச்சியா நினைச்சாங்க! இதுல இருந்து எப்படி தப்பிக்கலாம்னு ஆத்துல விழுந்தவ எழுந்து திரும்பவும் கிணத்துல விழுந்துட்டேன்!” ”நவீன்! நாங்கல்லாம் வெளிச்சத்துல வாழற விட்டில் பூச்சிகள்! வெளிச்சம் எங்க மேல பட்டுக்கிட்டே இருந்தாத்தான் உயிர் வாழ முடியும்! வெளிச்சம் இல்லாதபோது உயிர் இருக்காது. எப்பவும் வெளிச்சத்தை விளக்கை தேடிக்கிட்டே இருப்போம்! அந்த விளக்கு எங்களை அழிக்குதுன்னு தெரிஞ்சாலும் அதனோட ஒளி எங்களை ஈர்க்குது! அதனோட அழகு எங்களை சாய்க்குது! ஒளி வட்டத்துலேயே வாழ பழகிட்ட எங்களுக்கு அதை விட்டு இருட்டான இடத்திலே வாழப் பிடிக்காது!” ” நான் ஆயிரம் குறை மகி மேல சொன்னாலும் இதான் உண்மை! வெளிச்சம் என்னை கூப்பிடுது! மகி அங்கே போகாதேங்கிறார்! என்னால போகாமா இருக்க முடியலை! எனக்கு வெளிச்சம் வேணும்! புகழ் வேணும்! ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காதுன்னு சொல்லுவாங்க! என்னால சும்மா இருக்க முடியலை! ” “ என்னை இருட்டறையில வச்சு மகி எவ்வளதான் தாங்கினாலும் வெளியே லேம்ப் போஸ்ட்கிட்ட இருக்கிற வெளிச்சம்தான் எனக்கு பெரிசா தெரியுது! ஸோ! பேரர் வைத்த நான் ஆறிப் போய் இருந்தது! ஒரு நடிகையின் குடும்ப வாழ்க்கையும் இப்படி ஆறிப் போய்விட்டதே! என்று மனம் கனக்க அதை உண்ண ஆரம்பித்தேன். பேரரிடம் பில் செட்டில் செய்துவிட்டு என்னிடம் விடைபெற்றார் தீபா. அந்த ஓட்டலின் விளக்குகள் உயிர் பெற்று ஒளிர வெளிச்சத்தை விரும்பிய தீபா இருட்டான பகுதியில் நடந்து மறைந்தாள்.