‘வெந்து தணிந்தது காடு’ சினிமா விமர்சனம் தெற்கத்திச் சீமையில் முள்ளை வெட்டிப் பிழைப்பு நடத்தும் சிம்பு, மும்பைக்குப் போய் தலைகளை வெட்டிப் பிழைப்பு நடத்தும் டான் ஆகும் பரிணாம வளர்ச்சிதான் கதை.ஆரம்பத்திலேயே காடு ஒன்று வெந்து தணிந்துவிடுகிறது. அதன் பிறகு படம் முழுக்கத் துப்பாகி சூடுதான் இடம்பெற்றிருக்கிறது.கதையின்படி சிம்புவுக்கு வயது 21தான் ஆகிறதாம். ஏறக்குறைய பார்ப்பதற்கும் அப்படித்தான் இருக்கிறார். படம் முழுக்கத் திருநெல்வேலிப் பேச்சு வழக்கைப் பார்த்துப் பார்த்துப் பதிவு செய்திருக்கிறார்கள். சபாஷ்!அதைப் போலவே மும்பையின் சந்து பொந்துகளையும் விஸ்தாரமாகக் காண்பித்திருக்கிறார்கள்.ராதிகாவின் நடிப்புப் பாத்திரத்துடன் அப்படியே பொருந்திப் போகிறது.சிம்பு சட்டை போட்டுக்கொண்டிருக்கும்போது முதுகெங்கும் முள் தைக்கிறது. சரிதான். சட்டையைக் கழற்றியப் பிறகு முட்களும் விழுந்திருக்கும்தானே? அதுதான் இல்லை. அவரது வெற்று முதுகில் இருந்து கொத்துக் கொத்தாக முட்களை ராதிகா பிடுங்கிப் போடுகிறார். அது என்ன விசித்திர முள்ளோ தெரியவில்லை.படம் நெடுக அடிதடி, குத்து வெட்டு. அந்தத் தாக்குதல்களுக்குக் கொஞ்சம் இடைவெளி விட்டுப் பாட்டுகளைப் போட்டுத் தாக்குகிறார்கள்.ஓரிடத்தில் அடியாள் ஒருவர் சொல்வார்: “நாம எதுக்காகச் சண்டைப்போடுறோம்னே தெரியாது.” படம் முடிந்த பிறகும் நமக்கும் அதே கேள்விதான் எழுகிறது.ஏறக்குறையப் படம் முடிந்துவிட்டது என நாற்காலியை விட்டு எழுந்திரிக்க நினைத்தால், மீண்டும் உட்கார வைத்து ‘5 ஆண்டுகளுக்குப் பிறகு’ என்று தாடி வைத்த சிம்புவைக் காண்பித்து, அடுத்த பாகமும் உண்டு என்று நம்மை மிரள வைக்கிறார்கள்.படத்தில்தான் தமிழ் கேங்குக்கும் மலையாள கேங்குக்கும் சண்டை என்று பார்த்தால் உக்கிரமான ஓர் அடிதடிக் காட்சியில் மலையாளப் பாடல் ஒலிப்பது ஏன் என்று பெருங்குழப்பமாகத்தான் இருக்கிறது.கூலிப்படையினர் வாழும் வாழ்க்கை முறையைத் துல்லியமாகப் பதிவுசெய்திருக்கிறார்கள். அதிலும் உணவகத்தில் வாழ்வோரது அன்றாட நடவடிக்கைகள் அழுத்தமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. பாராட்டுகள்.பொதுவாகக் காதலர்கள் பாட்டுப் பாடுவது தமிழ்த் திரையுலகில் சகஜம்தான், ஆனால், இந்தப் படத்தில் மாலை மாற்றிக்கொள்ளும்போதும், தாலி கட்டிக்கொள்ளும்போதுகூடப் பாடுகிறார்கள். பார்க்க தமாஷாக இருக்கிறது.சிம்பு தன் காதலியைப் பார்க்க மும்பையின் ஒண்டுக் குடித்தனம் ஒன்றுக்குள் வருகிறார். அவர்கள் ஏதோ தனியறையில் இருப்பதைப் போல நெருக்கமாக இருக்கிறார்கள். அந்தப் பரபரப்பான பின்னணியில் ஓர் ஈ, காக்கைகூட இல்லாமல் இருப்பது வேடிக்கைதான்.படத்தின் ஆரம்பத்தில் மலையாளி ஒருவரை சிம்பு சந்திப்பார். அவரிடம் விலாசம் கேட்பதோடு சரி. ஆனால் கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் அவரைச் சந்திக்கும்போது ‘ஸ்ரீதரன்’ என்று அவரைப் பெயர் சொல்லி அழைக்கிறார். அந்தப் பெயர் சிம்புவுக்கு எப்படித் தெரிந்தது என்பது இயக்குநருக்கே வெளிச்சம்.இஷ்டத்துக்கு டஜன் கணக்கில் கொலைகள் விழுகின்றன. ஆனால், போலீஸ்காரர்கள் அதிலெல்லாம் தலையிடுவதில்லை. ஒப்புக்கு ஓரிரு காட்சிகளில் வந்து ஒன்றும் செய்யாமலே போய்விடுகிறார்கள்.சிம்புவை சதித் திட்டத்தில் வீழ்த்தப் பயன்படுத்தும் காட்சிகள் திறமையாகப் படமாக்கப்பட்டுள்ளன.மொத்தத்தில் வெந்து தணிந்தது காடு = சரியாக வேகவில்லை!
‘வெந்து தணிந்தது காடு’ சினிமா விமர்சனம் தெற்கத்திச் சீமையில் முள்ளை வெட்டிப் பிழைப்பு நடத்தும் சிம்பு, மும்பைக்குப் போய் தலைகளை வெட்டிப் பிழைப்பு நடத்தும் டான் ஆகும் பரிணாம வளர்ச்சிதான் கதை.ஆரம்பத்திலேயே காடு ஒன்று வெந்து தணிந்துவிடுகிறது. அதன் பிறகு படம் முழுக்கத் துப்பாகி சூடுதான் இடம்பெற்றிருக்கிறது.கதையின்படி சிம்புவுக்கு வயது 21தான் ஆகிறதாம். ஏறக்குறைய பார்ப்பதற்கும் அப்படித்தான் இருக்கிறார். படம் முழுக்கத் திருநெல்வேலிப் பேச்சு வழக்கைப் பார்த்துப் பார்த்துப் பதிவு செய்திருக்கிறார்கள். சபாஷ்!அதைப் போலவே மும்பையின் சந்து பொந்துகளையும் விஸ்தாரமாகக் காண்பித்திருக்கிறார்கள்.ராதிகாவின் நடிப்புப் பாத்திரத்துடன் அப்படியே பொருந்திப் போகிறது.சிம்பு சட்டை போட்டுக்கொண்டிருக்கும்போது முதுகெங்கும் முள் தைக்கிறது. சரிதான். சட்டையைக் கழற்றியப் பிறகு முட்களும் விழுந்திருக்கும்தானே? அதுதான் இல்லை. அவரது வெற்று முதுகில் இருந்து கொத்துக் கொத்தாக முட்களை ராதிகா பிடுங்கிப் போடுகிறார். அது என்ன விசித்திர முள்ளோ தெரியவில்லை.படம் நெடுக அடிதடி, குத்து வெட்டு. அந்தத் தாக்குதல்களுக்குக் கொஞ்சம் இடைவெளி விட்டுப் பாட்டுகளைப் போட்டுத் தாக்குகிறார்கள்.ஓரிடத்தில் அடியாள் ஒருவர் சொல்வார்: “நாம எதுக்காகச் சண்டைப்போடுறோம்னே தெரியாது.” படம் முடிந்த பிறகும் நமக்கும் அதே கேள்விதான் எழுகிறது.ஏறக்குறையப் படம் முடிந்துவிட்டது என நாற்காலியை விட்டு எழுந்திரிக்க நினைத்தால், மீண்டும் உட்கார வைத்து ‘5 ஆண்டுகளுக்குப் பிறகு’ என்று தாடி வைத்த சிம்புவைக் காண்பித்து, அடுத்த பாகமும் உண்டு என்று நம்மை மிரள வைக்கிறார்கள்.படத்தில்தான் தமிழ் கேங்குக்கும் மலையாள கேங்குக்கும் சண்டை என்று பார்த்தால் உக்கிரமான ஓர் அடிதடிக் காட்சியில் மலையாளப் பாடல் ஒலிப்பது ஏன் என்று பெருங்குழப்பமாகத்தான் இருக்கிறது.கூலிப்படையினர் வாழும் வாழ்க்கை முறையைத் துல்லியமாகப் பதிவுசெய்திருக்கிறார்கள். அதிலும் உணவகத்தில் வாழ்வோரது அன்றாட நடவடிக்கைகள் அழுத்தமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. பாராட்டுகள்.பொதுவாகக் காதலர்கள் பாட்டுப் பாடுவது தமிழ்த் திரையுலகில் சகஜம்தான், ஆனால், இந்தப் படத்தில் மாலை மாற்றிக்கொள்ளும்போதும், தாலி கட்டிக்கொள்ளும்போதுகூடப் பாடுகிறார்கள். பார்க்க தமாஷாக இருக்கிறது.சிம்பு தன் காதலியைப் பார்க்க மும்பையின் ஒண்டுக் குடித்தனம் ஒன்றுக்குள் வருகிறார். அவர்கள் ஏதோ தனியறையில் இருப்பதைப் போல நெருக்கமாக இருக்கிறார்கள். அந்தப் பரபரப்பான பின்னணியில் ஓர் ஈ, காக்கைகூட இல்லாமல் இருப்பது வேடிக்கைதான்.படத்தின் ஆரம்பத்தில் மலையாளி ஒருவரை சிம்பு சந்திப்பார். அவரிடம் விலாசம் கேட்பதோடு சரி. ஆனால் கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் அவரைச் சந்திக்கும்போது ‘ஸ்ரீதரன்’ என்று அவரைப் பெயர் சொல்லி அழைக்கிறார். அந்தப் பெயர் சிம்புவுக்கு எப்படித் தெரிந்தது என்பது இயக்குநருக்கே வெளிச்சம்.இஷ்டத்துக்கு டஜன் கணக்கில் கொலைகள் விழுகின்றன. ஆனால், போலீஸ்காரர்கள் அதிலெல்லாம் தலையிடுவதில்லை. ஒப்புக்கு ஓரிரு காட்சிகளில் வந்து ஒன்றும் செய்யாமலே போய்விடுகிறார்கள்.சிம்புவை சதித் திட்டத்தில் வீழ்த்தப் பயன்படுத்தும் காட்சிகள் திறமையாகப் படமாக்கப்பட்டுள்ளன.மொத்தத்தில் வெந்து தணிந்தது காடு = சரியாக வேகவில்லை!