‘ஆதார்’ சினிமா விமர்சனம் சாதாரண மனிதனின் அடையாளம் எந்த அளவுக்கு அதிகார மற்றும் மேல்தட்டு வர்க்கங்களால் நசுக்கப்படுகிறது என்பதைச் சிறப்பாக விளக்கியிருக்கிறது படம்.கட்டிடத் தொழிலாகியான கருணாஸின் மனைவி காணாமல்போக அவரைக் கண்டுபிடித்துக் கொடுக்கும்படி காவல்துறையை அணுகும் கருணாஸுக்கு ஏற்படும் அனுபவங்கள் விபரீதமானவை. மனைவி மாற்றானுடன் உடன்போக்கு நிகழ்த்திவிட்டதாகவே கதைகட்டப்படுகிறது. கருணாஸ் மனைவியைக் கண்டுபிடித்தாரா என்பதுதான் கதை.‘அட… நம்ம லொடுக்குப் பாண்டியா நடிப்பில் இந்தப் போடு போடுகிறார்?’ என ஆச்சரியப்படவைக்கும் அளவுக்குத் தேர்ந்த நடிப்பைக் கருணாஸ் கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தில் நடித்ததற்கான விருது நிச்சயம் இவருக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.பாத்திரங்கள் மெதுவாக நடப்பது மட்டுமல்ல… காட்சிகளும் பல இடங்களில் மெதுவாக நடைபோடுகின்றன. கதை நகர்வு லேசாகத் தொய்வைத் தருவதையும் சொல்லியாக வேண்டும்.இது போன்ற திரைப்படங்களில் பின்னணி இசை, ‘திடும் திடும்’ எனக் காதுகளைக் கூசவைக்கும். ஆனால் படத்துக்குத் தேவையான அளவே ஒலி மற்றும் ஒளிச் சேர்க்கைகள் உள்ளன. ஒளிப்பதிவு செய்திருக்கும் மகேஷ் முத்துசாமிக்கும், இசையமைத்திருக்கும் ஸ்ரீகாந்த் தேவாவுக்கும் சிறப்பு சபாஷ்!குறிப்பாக இரவு நேரக் காட்சிகளில் ஒளி ஓவியம் மனதில் பதிகிறது. எழுதி இயக்கியிருக்கும் ராம்நாத் பழனிக்குமாருக்கும் பாராட்டுகள் உரித்தாகுக.கிழிந்த பனியனோடும், அழுக்கடைந்த லுங்கியோடும் வளையவரும் கட்டிடத் தொழிலாளி வேடத்துக்குக் கருணாஸின் கரடுமுரடு முகம் அச்சு அசலாய்ப் பொருந்திப்போகிறது. கட்டிடத் தொழிலாளி பச்சமுத்துவாகவேதான் அவர் தெரிகிறார். நடிப்பும் பிரம்மாதம். மனைவியைப் பிரிந்த சோகம், குழந்தையின் மீது பாசம், அதிகார வர்க்கத்தை எதிர்க்க முடியாத ஆற்றாமை கலந்த தன்னிரக்கம் எனப் பல உணர்வுகளையும் கொட்டி நடித்திருக்கிறார்.என்னதான் அழகைக் குறைக்க ஒப்பனை செய்யப்பட்டிருந்தாலும், அதையும் மீறி மூக்கும் முழியுமாக ரித்விகா தோன்றுகிறார். நடிப்பிலும் சோடைபோகவில்லை.மனைவி காணாமல்போனதால் புகார் கொடுக்கக் காவல் நிலையம் செல்லும் கருணாஸ், மனைவியின் ஆதார் அட்டையைக் காண்பிக்கப் படத்தின் டைட்டில் நியாயப்படுத்தப்பட்டுவிடுகிறது.காவல் துறையிலும் பலதரப்பட்ட குணம் கொண்டவர்கள் இருக்கிறார்கள் என்பதைத் தலைமைக் காவலர் அருண் பாண்டியன், ஆய்வாளர் பிரபாகர் மற்றும் உயர் அதிகாரி உமா ரியாஸ் பாத்திரங்களின் மூலம் அழுத்தமாக இயக்குநர் பதிவுசெய்திருக்கிறார்.பொதுவாக இதுபோன்ற படங்களில் அடுத்தடுத்து வரும் காட்சிகளை எளிதில் அனுமானித்துவிடலாம்; ஆனால் இந்தப் படத்தில் எதிர்பார்ப்புக்கும் அப்பாற்பட்டுக் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.பணமும் அதிகாரமும் இருந்தால் போதும் அவை சாமானியர்களின் நியாயத்தை எப்படிப் பொடிப் பொடியாக்குகின்றன என்பதை மிகையின்றிச் சொல்லியிருக்கிறார்கள்.படத்தின் உச்சகட்டக் காட்சி இன்னும்கூடச் சற்றுக் கூடுதல் தெளிவுடன் விளக்கப்பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது.நல்ல படமாக இருந்தாலும், சில திரையரங்குகளில் மட்டுமே - அதுவும் இரவுக் காட்சியாக மட்டுமே - திரையிடப்படுவதுதான் சற்று நெருடலாக இருக்கிறது.மொத்தத்தில் ஆதார்: சிறப்பான படத்துக்கான அடையாளம்! அட்டைப்படம்: இனியா
‘ஆதார்’ சினிமா விமர்சனம் சாதாரண மனிதனின் அடையாளம் எந்த அளவுக்கு அதிகார மற்றும் மேல்தட்டு வர்க்கங்களால் நசுக்கப்படுகிறது என்பதைச் சிறப்பாக விளக்கியிருக்கிறது படம்.கட்டிடத் தொழிலாகியான கருணாஸின் மனைவி காணாமல்போக அவரைக் கண்டுபிடித்துக் கொடுக்கும்படி காவல்துறையை அணுகும் கருணாஸுக்கு ஏற்படும் அனுபவங்கள் விபரீதமானவை. மனைவி மாற்றானுடன் உடன்போக்கு நிகழ்த்திவிட்டதாகவே கதைகட்டப்படுகிறது. கருணாஸ் மனைவியைக் கண்டுபிடித்தாரா என்பதுதான் கதை.‘அட… நம்ம லொடுக்குப் பாண்டியா நடிப்பில் இந்தப் போடு போடுகிறார்?’ என ஆச்சரியப்படவைக்கும் அளவுக்குத் தேர்ந்த நடிப்பைக் கருணாஸ் கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தில் நடித்ததற்கான விருது நிச்சயம் இவருக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.பாத்திரங்கள் மெதுவாக நடப்பது மட்டுமல்ல… காட்சிகளும் பல இடங்களில் மெதுவாக நடைபோடுகின்றன. கதை நகர்வு லேசாகத் தொய்வைத் தருவதையும் சொல்லியாக வேண்டும்.இது போன்ற திரைப்படங்களில் பின்னணி இசை, ‘திடும் திடும்’ எனக் காதுகளைக் கூசவைக்கும். ஆனால் படத்துக்குத் தேவையான அளவே ஒலி மற்றும் ஒளிச் சேர்க்கைகள் உள்ளன. ஒளிப்பதிவு செய்திருக்கும் மகேஷ் முத்துசாமிக்கும், இசையமைத்திருக்கும் ஸ்ரீகாந்த் தேவாவுக்கும் சிறப்பு சபாஷ்!குறிப்பாக இரவு நேரக் காட்சிகளில் ஒளி ஓவியம் மனதில் பதிகிறது. எழுதி இயக்கியிருக்கும் ராம்நாத் பழனிக்குமாருக்கும் பாராட்டுகள் உரித்தாகுக.கிழிந்த பனியனோடும், அழுக்கடைந்த லுங்கியோடும் வளையவரும் கட்டிடத் தொழிலாளி வேடத்துக்குக் கருணாஸின் கரடுமுரடு முகம் அச்சு அசலாய்ப் பொருந்திப்போகிறது. கட்டிடத் தொழிலாளி பச்சமுத்துவாகவேதான் அவர் தெரிகிறார். நடிப்பும் பிரம்மாதம். மனைவியைப் பிரிந்த சோகம், குழந்தையின் மீது பாசம், அதிகார வர்க்கத்தை எதிர்க்க முடியாத ஆற்றாமை கலந்த தன்னிரக்கம் எனப் பல உணர்வுகளையும் கொட்டி நடித்திருக்கிறார்.என்னதான் அழகைக் குறைக்க ஒப்பனை செய்யப்பட்டிருந்தாலும், அதையும் மீறி மூக்கும் முழியுமாக ரித்விகா தோன்றுகிறார். நடிப்பிலும் சோடைபோகவில்லை.மனைவி காணாமல்போனதால் புகார் கொடுக்கக் காவல் நிலையம் செல்லும் கருணாஸ், மனைவியின் ஆதார் அட்டையைக் காண்பிக்கப் படத்தின் டைட்டில் நியாயப்படுத்தப்பட்டுவிடுகிறது.காவல் துறையிலும் பலதரப்பட்ட குணம் கொண்டவர்கள் இருக்கிறார்கள் என்பதைத் தலைமைக் காவலர் அருண் பாண்டியன், ஆய்வாளர் பிரபாகர் மற்றும் உயர் அதிகாரி உமா ரியாஸ் பாத்திரங்களின் மூலம் அழுத்தமாக இயக்குநர் பதிவுசெய்திருக்கிறார்.பொதுவாக இதுபோன்ற படங்களில் அடுத்தடுத்து வரும் காட்சிகளை எளிதில் அனுமானித்துவிடலாம்; ஆனால் இந்தப் படத்தில் எதிர்பார்ப்புக்கும் அப்பாற்பட்டுக் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.பணமும் அதிகாரமும் இருந்தால் போதும் அவை சாமானியர்களின் நியாயத்தை எப்படிப் பொடிப் பொடியாக்குகின்றன என்பதை மிகையின்றிச் சொல்லியிருக்கிறார்கள்.படத்தின் உச்சகட்டக் காட்சி இன்னும்கூடச் சற்றுக் கூடுதல் தெளிவுடன் விளக்கப்பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது.நல்ல படமாக இருந்தாலும், சில திரையரங்குகளில் மட்டுமே - அதுவும் இரவுக் காட்சியாக மட்டுமே - திரையிடப்படுவதுதான் சற்று நெருடலாக இருக்கிறது.மொத்தத்தில் ஆதார்: சிறப்பான படத்துக்கான அடையாளம்! அட்டைப்படம்: இனியா