“பார் கவுண்டரில் நிரப்பப்பட்டு வெளி வந்துகொண்டிருந்த பெக்குகளையும் பியர் பாட்டில்களையும் மனக்கணக்குப் போட்டு இரண்டு அல்லது மூன்று மாதம் சம்பளம் இப்பவே காலியாகிவிடும். பிறகு பார்ட்டிக்கு இன்னும் எத்தனை மாதம் சம்பளம் போகுமோ” என்று பெரும் கவலையுடன் பேஸ்து அடித்து உட்கார்ந்திருந்த என் முதுகை மறுபடியும் தட்டி “வருந்தாதே மகனே… இந்தச் செலவை எல்லாம் தம்பிஸார் பார்த்துக் கொள்வார்” என்று நைனன் என் செவியில் தேன் பாய்ச்சியவுடன் மகிழ்ச்சி என்னையும் தொற்றிக் கொண்டுவிட்டது. பார்ட்டியும் களை கட்டியது என்று சொல்லவா வேண்டும்?என் முதல் விமானப் பயணத்தின் பைலட் கேப்டன் ஜனார்த்தனன். என்னை அவரே விமானத்துக்கு நடத்திச் சென்று ஹேர் ஹோஸ்டஸ் ஜ்யோத்ஸ்னா முகர்ஜி என்ற வங்காள அழகியிடம், “இவர் கோபாலன், என் விருந்தினர், ஸ்பெஷலாக கவனித்துக்கொள்” என்று சொல்லவும், செயற்கையாக குனிந்து முகமன் கூறிய அந்தப் பெண்மணி, என்னை அழைத்துக்கொண்டுபோய் இருக்கையில் அமர வைத்தார். இருவரும் எனக்கு ஏற்கெனவே பரிச்சயமானவர்கள். அதிலும் இந்தப் பெண்மணியின் பெயரை சரியாக உச்சரிக்கும் ஒரே நபர் அங்கே நான்தான் என்பதால் என்னிடம் எப்போதும் அன்பாகவும் பழகுவார்.விமானம் 13,000 அடி உயரம் (அதற்கு மேல் போகாது) அடைந்ததும் கேப்டன் அழைக்கிறார் என்று ஜ்யோத்ஸ்னா வந்து கூட்டிச் சென்றார். கேப்டன் திரும்பிப் பார்த்து, “உன் முதல் விமானப் பயணம் எப்படி இருக்கிறது? ஜோஸ்னாவை உனக்கு விசேஷமாக காபி கொடுக்க சொல்லி இருக்கிறேன். இங்கு நின்று என்னிடம் பேசியவாறே நீ அதைக் குடிக்கலாம்” என்றார். ஸ்டைலாக என்னிடம் நீட்டப்பட்ட அந்த காப்பியை வாங்கிச் சுவைத்ததும் என் முகம் அஷ்ட கோணலாகிப் போன போக்கைக் கண்டு இருவரும் சிரி சிரியென்று சிரித்து மகிழ்ந்தார்கள். காபியில் சர்க்கரைக்குப் பதிலாக உப்புப் போட்டிருந்தது ! நல்ல வேளையாக சென்னையில் இருந்து ஹைதராபாத் செல்லும் புதிய போயிங் விமானத்தில் என் முதல் பயணம் இந்த ராகிங் ஏதும் இல்லாமல் நன்றாகவே இருந்தது..ஹைதராபாத் பேகம்பெட் விமான நிலையத்தின் ஒரு கரையில் எங்கள் வகுப்புகளும் மறுகரையில் பைலட்டுகளுக்குப் பறக்கும் ட்ரைனிங் கொடுக்கும் சிமுலேட்டர் கட்டிடமும் இருந்தது. நடுவில் ரன்வேயைக் குறுக்கே தாண்டி அங்கே போகும் பிரைவேட் சாலையில் ரயில்வே கேட் மாதிரி வைத்திருப்பார்கள் விமானம் ஏறும் போதும் இறங்கும் போதும் இந்த கேட் மூடப்பட்டிருக்கும். இந்தியன் ஏர்லைன்ஸ் பணியாளர்களின் வண்டிகள் மட்டும் பயன்படுத்திக் கொண்டிருந்ததால் எல்லாம் பாதுகாப்பாகவே நடந்து கொண்டிருந்தன..இந்தப்புறம் மெயின் ரோட்டுக்குப் பக்கத்திலேயே பயணிகள் விமான நிலையம் போகும் வழியில் இருந்த எங்கள் கட்டிடத்தின் மாடியிலேயே பைலட்டுகளுக்கும் தியரி வகுப்புகள் இருந்ததால் அங்கிருந்து அவர்கள் சிமுலேட்டர் போகும்போது நானும் அவர்களுடன் தொற்றிக்கொண்டு போவதை வழக்கமாக வைத்திருந்தேன். எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஏகப்பட்ட ஆர்வம் இருந்தது. மற்றவர்கள் வகுப்பு முடிந்ததும் சார்மினார், சவ் மஹல்லா பேலஸ் என்று சுற்றிக் கொண்டிருக்க, நான் சிமுலேட்டர் காம்ப்ளக்ஸை வலம் வந்து கொண்டிருப்பேன். அப்போது நிறைய பைலட்டுகள் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்ததால் சிமுலேட்டர் இடைவிடாமல் ஓடிக்கொண்டிருந்தது..சிமுலேட்டருக்கு உள்ளே அமர்ந்தால் நிஜமான விமானம் ஓட்டுவது போலவே இருக்கும். முன்னால் ஜன்னலில் பைலட்டுகளுக்குத் தெரியும் காட்சிகள் கூட கம்ப்யூட்டர் உதவியுடன் அப்படியே நிஜம் போலக் காட்டும். கீழே இருக்கும் ஹைட்ராலிக் கால்கள் தகுந்தபடி உயர்ந்து தாழ்வதால் விமானம் ஏறுவதும் இறங்குவதும் மற்ற எல்லா அசைவுகளும் தத்ரூபமாகவே இருக்கும். எஞ்சின் இயங்கும் சப்தங்களும் சக்கரங்கள் இறங்கும் சப்தங்களும் கூட அப்படியே கொடுத்திருப்பார்கள்.என் விடாமுயற்சியினால் ஆவ்ரோ சிமுலேட்டரைப் பார்க்க வாய்ப்பு கிடைத்தபோது அதனைப் பராமரிக்கும் மெயின்டனன்ஸ் இன்ஜினீயர்கள் உதவியுடன் சகலத்தையும் ஓரிரு முறை பார்த்துத் தெரிந்து கொண்டேன். இதெல்லாம் ஒன்றுமே இல்லை. போயிங் சிமுலேட்டர்கள் தொழில்நுட்பத்தில் பல மடங்கு உயர்ந்தவை. அதில்தான் விமானம் ஓட்டுவதின் பல நுட்பமான விஷயங்களை உணர முடியும் என்று சொல்லி என் ஆசையைத் தூண்டி விட்டார்கள். எனவே, ஆவ்ரோ பார்த்ததில் திருப்தியடையாத நான் புத்தம் புதிய போயிங் சிமுலேட்டரைப் பார்க்காமல் விடக்கூடாது என்று தினமும் காவடி எடுத்தும் அந்த சிமுலேட்டர் இரவு பகலாக ட்ரெய்னிங் செஷனில் இருந்ததால் அது மாத்திரம் நடக்கவில்லை..தன் முயற்சியில் மனம் தளராத நான் அன்றும் வழக்கம்போல ஓடி பைலட்கள் போகும் வண்டிக்குப் போனதும் இங்கே இன்று இடமில்லை. பின்னாடியே டைரக்டர் கார் வருகிறது அதில் வந்துவிடு என்று சொல்லிப் போனார் டிரைவர். ட்ரைனிங் டைரக்டர் காரும் வரவே நான் லிஃப்ட் கேட்டு ஏறப் போனதும் டிரைவர் சீட்டில் இருந்தவரிடம் இருந்து முன்னால் வா யங் மேன் என்று தோரணையான குரல் கேட்டதும்தான் கவனித்தேன் காரை ஓட்டி வந்தது ட்ரைவர் இல்லை. டைரக்டரேதான். சாரி சார் கவனிக்கவில்லை என்று முன்னால் ஏறிய எனக்குக் கை கொடுத்து ஐ அம் கேப்டன் டிரைவர் என்றார் அவர்.(தொடரும்)
“பார் கவுண்டரில் நிரப்பப்பட்டு வெளி வந்துகொண்டிருந்த பெக்குகளையும் பியர் பாட்டில்களையும் மனக்கணக்குப் போட்டு இரண்டு அல்லது மூன்று மாதம் சம்பளம் இப்பவே காலியாகிவிடும். பிறகு பார்ட்டிக்கு இன்னும் எத்தனை மாதம் சம்பளம் போகுமோ” என்று பெரும் கவலையுடன் பேஸ்து அடித்து உட்கார்ந்திருந்த என் முதுகை மறுபடியும் தட்டி “வருந்தாதே மகனே… இந்தச் செலவை எல்லாம் தம்பிஸார் பார்த்துக் கொள்வார்” என்று நைனன் என் செவியில் தேன் பாய்ச்சியவுடன் மகிழ்ச்சி என்னையும் தொற்றிக் கொண்டுவிட்டது. பார்ட்டியும் களை கட்டியது என்று சொல்லவா வேண்டும்?என் முதல் விமானப் பயணத்தின் பைலட் கேப்டன் ஜனார்த்தனன். என்னை அவரே விமானத்துக்கு நடத்திச் சென்று ஹேர் ஹோஸ்டஸ் ஜ்யோத்ஸ்னா முகர்ஜி என்ற வங்காள அழகியிடம், “இவர் கோபாலன், என் விருந்தினர், ஸ்பெஷலாக கவனித்துக்கொள்” என்று சொல்லவும், செயற்கையாக குனிந்து முகமன் கூறிய அந்தப் பெண்மணி, என்னை அழைத்துக்கொண்டுபோய் இருக்கையில் அமர வைத்தார். இருவரும் எனக்கு ஏற்கெனவே பரிச்சயமானவர்கள். அதிலும் இந்தப் பெண்மணியின் பெயரை சரியாக உச்சரிக்கும் ஒரே நபர் அங்கே நான்தான் என்பதால் என்னிடம் எப்போதும் அன்பாகவும் பழகுவார்.விமானம் 13,000 அடி உயரம் (அதற்கு மேல் போகாது) அடைந்ததும் கேப்டன் அழைக்கிறார் என்று ஜ்யோத்ஸ்னா வந்து கூட்டிச் சென்றார். கேப்டன் திரும்பிப் பார்த்து, “உன் முதல் விமானப் பயணம் எப்படி இருக்கிறது? ஜோஸ்னாவை உனக்கு விசேஷமாக காபி கொடுக்க சொல்லி இருக்கிறேன். இங்கு நின்று என்னிடம் பேசியவாறே நீ அதைக் குடிக்கலாம்” என்றார். ஸ்டைலாக என்னிடம் நீட்டப்பட்ட அந்த காப்பியை வாங்கிச் சுவைத்ததும் என் முகம் அஷ்ட கோணலாகிப் போன போக்கைக் கண்டு இருவரும் சிரி சிரியென்று சிரித்து மகிழ்ந்தார்கள். காபியில் சர்க்கரைக்குப் பதிலாக உப்புப் போட்டிருந்தது ! நல்ல வேளையாக சென்னையில் இருந்து ஹைதராபாத் செல்லும் புதிய போயிங் விமானத்தில் என் முதல் பயணம் இந்த ராகிங் ஏதும் இல்லாமல் நன்றாகவே இருந்தது..ஹைதராபாத் பேகம்பெட் விமான நிலையத்தின் ஒரு கரையில் எங்கள் வகுப்புகளும் மறுகரையில் பைலட்டுகளுக்குப் பறக்கும் ட்ரைனிங் கொடுக்கும் சிமுலேட்டர் கட்டிடமும் இருந்தது. நடுவில் ரன்வேயைக் குறுக்கே தாண்டி அங்கே போகும் பிரைவேட் சாலையில் ரயில்வே கேட் மாதிரி வைத்திருப்பார்கள் விமானம் ஏறும் போதும் இறங்கும் போதும் இந்த கேட் மூடப்பட்டிருக்கும். இந்தியன் ஏர்லைன்ஸ் பணியாளர்களின் வண்டிகள் மட்டும் பயன்படுத்திக் கொண்டிருந்ததால் எல்லாம் பாதுகாப்பாகவே நடந்து கொண்டிருந்தன..இந்தப்புறம் மெயின் ரோட்டுக்குப் பக்கத்திலேயே பயணிகள் விமான நிலையம் போகும் வழியில் இருந்த எங்கள் கட்டிடத்தின் மாடியிலேயே பைலட்டுகளுக்கும் தியரி வகுப்புகள் இருந்ததால் அங்கிருந்து அவர்கள் சிமுலேட்டர் போகும்போது நானும் அவர்களுடன் தொற்றிக்கொண்டு போவதை வழக்கமாக வைத்திருந்தேன். எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஏகப்பட்ட ஆர்வம் இருந்தது. மற்றவர்கள் வகுப்பு முடிந்ததும் சார்மினார், சவ் மஹல்லா பேலஸ் என்று சுற்றிக் கொண்டிருக்க, நான் சிமுலேட்டர் காம்ப்ளக்ஸை வலம் வந்து கொண்டிருப்பேன். அப்போது நிறைய பைலட்டுகள் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்ததால் சிமுலேட்டர் இடைவிடாமல் ஓடிக்கொண்டிருந்தது..சிமுலேட்டருக்கு உள்ளே அமர்ந்தால் நிஜமான விமானம் ஓட்டுவது போலவே இருக்கும். முன்னால் ஜன்னலில் பைலட்டுகளுக்குத் தெரியும் காட்சிகள் கூட கம்ப்யூட்டர் உதவியுடன் அப்படியே நிஜம் போலக் காட்டும். கீழே இருக்கும் ஹைட்ராலிக் கால்கள் தகுந்தபடி உயர்ந்து தாழ்வதால் விமானம் ஏறுவதும் இறங்குவதும் மற்ற எல்லா அசைவுகளும் தத்ரூபமாகவே இருக்கும். எஞ்சின் இயங்கும் சப்தங்களும் சக்கரங்கள் இறங்கும் சப்தங்களும் கூட அப்படியே கொடுத்திருப்பார்கள்.என் விடாமுயற்சியினால் ஆவ்ரோ சிமுலேட்டரைப் பார்க்க வாய்ப்பு கிடைத்தபோது அதனைப் பராமரிக்கும் மெயின்டனன்ஸ் இன்ஜினீயர்கள் உதவியுடன் சகலத்தையும் ஓரிரு முறை பார்த்துத் தெரிந்து கொண்டேன். இதெல்லாம் ஒன்றுமே இல்லை. போயிங் சிமுலேட்டர்கள் தொழில்நுட்பத்தில் பல மடங்கு உயர்ந்தவை. அதில்தான் விமானம் ஓட்டுவதின் பல நுட்பமான விஷயங்களை உணர முடியும் என்று சொல்லி என் ஆசையைத் தூண்டி விட்டார்கள். எனவே, ஆவ்ரோ பார்த்ததில் திருப்தியடையாத நான் புத்தம் புதிய போயிங் சிமுலேட்டரைப் பார்க்காமல் விடக்கூடாது என்று தினமும் காவடி எடுத்தும் அந்த சிமுலேட்டர் இரவு பகலாக ட்ரெய்னிங் செஷனில் இருந்ததால் அது மாத்திரம் நடக்கவில்லை..தன் முயற்சியில் மனம் தளராத நான் அன்றும் வழக்கம்போல ஓடி பைலட்கள் போகும் வண்டிக்குப் போனதும் இங்கே இன்று இடமில்லை. பின்னாடியே டைரக்டர் கார் வருகிறது அதில் வந்துவிடு என்று சொல்லிப் போனார் டிரைவர். ட்ரைனிங் டைரக்டர் காரும் வரவே நான் லிஃப்ட் கேட்டு ஏறப் போனதும் டிரைவர் சீட்டில் இருந்தவரிடம் இருந்து முன்னால் வா யங் மேன் என்று தோரணையான குரல் கேட்டதும்தான் கவனித்தேன் காரை ஓட்டி வந்தது ட்ரைவர் இல்லை. டைரக்டரேதான். சாரி சார் கவனிக்கவில்லை என்று முன்னால் ஏறிய எனக்குக் கை கொடுத்து ஐ அம் கேப்டன் டிரைவர் என்றார் அவர்.(தொடரும்)