பொன் மழை பொழிந்த சங்கரர் எட்டு வயதிற்குள் படிப்பை முடித்தார். கல்வியை முடித்த பின்னர் சங்கரர் குருகுலத்திலிருந்து திரும்பி வீட்டிற்கு வந்து தாயாருடன் இருந்து வந்தார். ஒருநாள் ஆர்யாம்பாள் உடல் நலமில்லாது சோர்ந்து போய் காணப்பட்டார். ஆயினும், வழக்கப்படி விடியலில் எழுந்து சிறிது தொலைவில் இருந்த ஆற்றில் குளிக்கச் சென்றார். திரும்பி வரும்போது மயக்கம் வந்து விழுந்து விட்டார். இதைக் கேள்விப்பட்ட சங்கரர், ஓடிப்போய் தாயாரை வீட்டிற்குக் கொண்டுவந்து சேர்த்தார். அவ்வாறு மீண்டும் ஆகக்கூடாது என நினைத்து "சூர்ணா" என்ற பெயருடைய அந்த ஆறு தன் போக்கை மாற்றிக் கொண்டு தங்கள் வீட்டிற்கு அருகில் ஓட வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார். அடுத்த நாள் காலை அந்த அற்புதம் நிகழ்ந்து விட்டது. இந்நிகழ்வு சங்கரரின் திறத்தில் இருந்த ஆழ்ந்த மனிதப் பண்பாட்டைக் காட்டுகிறது. அவர், பிற்காலத்தில் எழுதிய நூல்களிலும் தாய்மையின் பெருமையைப் போற்றிய இயல்பு புலப்படுகிறது. "ப்ருஹதாரண்யகம்" எனும் உபநிடத்திற்கு அவர் எழுதியுள்ள பேருரையில் ஒருவனுக்குத் தாய் தான் சிறந்த ஆசிரியர் என்பதை விளக்கியுள்ளார். மகனுக்கு நல்ல காப்பாளன் அவனது தாய் தான் என்பது அவர் வாக்கு. சங்கரருக்கு எட்டு வயது நிறைந்த போது சில யோகிகள் அவரது வீட்டிற்கு வந்தனர். அவர்களை சங்கரரும் அவரது தாயாரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். வந்தவர்கள், எட்டு வயது சங்கரரிடம் பொலிந்த தெய்வீகமான உயர்வுகளை கண்டு…மகிழ்ந்து…அவரது தாயாரிடம்...சங்கரர் தெய்வ சங்கல்பத்திற்கு ஏற்ப எட்டு ஆண்டுகள் தான் மண்ணுலகில் வாழ்வார் என்றும், ஆனால், இப்போது அது இரண்டு மடங்கு ஆக ஆசி கூறினர். தன் மகன் பதினாறு வயதுதான் வாழ்வான் என்பதை அறிந்து தாய் வருந்தினார். "நமது அறியாமையுடன் உணரும் இந்த அனுபவ வடிவான வாழ்க்கை வெறும் தோற்றமே தவிர, நிஜமானது அன்று" என்று கூறி தாயாரின் துயரத்தை அகற்ற சங்கரர் முனைந்தார். ஆத்மாக்கள் பல்வேறு வகையான உறவுகளுடன், தாய், தந்தை, அண்ணன், தம்பி போன்ற உறவுகளுடன் ஒன்று சேர்ந்து, பயணம் செய்பவர்கள் உறவு கொள்வதைப் போன்றது என எடுத்துக் கூறினார். தன் மகனிடம் ஒரு துறவிக்கான இயல்புகள் தென்படுவதைக் கண்ட ஆர்யாம்பாள்... தன் மகனை இழக்க மனமின்றி அவருக்கு ஒரு திருமணம் செய்து வைக்க முயன்றார். ஆனால்... சங்கரருக்கு உலகத்தின் சாதாரண வழக்கமும்… பழக்கமும் பிடிக்கவில்லை. வாழ்க்கையில் பெரியதாய் ஒன்றை சாதிக்கும் லட்சியத்துடன் வந்தவர் அந்தப் பிள்ளை. தன்னை ஒத்த சிறுவர்கள் தமது விளையாட்டுப் பண்டங்களைக்கூட விட்டுப் பிரிய முடியாத, அந்த இளம் பருவத்திலேயே அவர் குடும்ப வாழ்க்கையைத் துறக்க விரும்பினார். ஆனால்… அதற்கு அவரது தாயார் சம்மதிக்கவில்லை. ஆகவே, ஒரு தெய்வீக அற்புதம் நிகழ வேண்டிய அவசியம் நேர்ந்தது. ஒருநாள், சங்கரர் தன் வீட்டிற்கு அருகில் ஓடிய ஆற்றில் குளிக்கச் சென்று... தண்ணீரில் இறங்கினார். அப்போது ஒரு முதலை அவர் காலைப் பிடித்து இழுக்கத் தொடங்கியது..அவர் உடனே, "அம்மா… அம்மா"எனக் கதறினார். ஓடி வந்த ஆர்யாம்பாள்… நடந்ததைக் கண்டு மிகவும் கவலையுடன் பதறினாள். தன் மகன் முதலையின் பிடியிலிருந்து தன்னை விடுவிக்க போராடியதைக் கண்டாள். இந்நிலையில் தன்னால் இனி பிழைக்க முடியாது என அறிந்த சங்கரர், தான் துறவு போக அனுமதிக்கும்படி தாயாரிடம் கேட்டுக் கொண்டார். ‘உயிர் போய் விடும்’ என்று தெரிந்த நிலையில்...அதுபோல ஆபத் சந்நியாசம் ஏற்பது என்பது வழக்கம் உண்டு. தன் தாயிடம், சங்கரர் மன்றாடிக் கேட்டபோது, அதை மறுக்க இயலாமல் தாயாரும் அனுமதித்தார். துறவு என்பது புதிய பிறவி. அதனால் அந்த ஆபத்து உயிருக்குக் கேடில்லாமல் போக வாய்ப்புண்டு. அதனால், "மகனே! நீ எப்படியும் உயிர் வாழ வேண்டும். சந்நியாசம் வாங்கிக் கொள்வது… உன் உயிரைக் காக்குமானால் எனக்கு அதனால் மகிழ்ச்சியே" என்று கண்ணீருடன் அவருக்கு அனுமதி அளித்தார். உடன் சங்கரர், தன் உள்ளத்தால் உலக வாழ்வினைத் துறந்த துறவி ஆனார்… முதலையும் அவரது காலை விட்டது. அந்த முதலை ஒரு சாபத்தால் தோன்றிய ஒன்று. ஆகவே, அதற்கான சாப விமோசனம் கிடைத்தது. தண்ணீரில் இருந்து உயிருடன் கரையேறிய சிறுவன், ஒரே இடத்தில் தங்காமல் ஊர்… ஊராய்… தேசம்…தேசமாகத் திரியும் "பரிவ்ராஜகர்" எனும் துறவியாக வாழ்வதாக உறுதி பூண்டான். ஆனால், சங்கரன் பழையபடி தன் மகனாக இருப்பான் என நினைத்த தாய்க்கு தன் புதிய நிலையை உணர்த்தினார் சங்கரர். "அம்மா...இனி எனக்கு பிக்ஷை இடும் பெண்மணிகள் அனைவரும் எனக்குத் தாயார் ஆவர். எனக்கு ஞானோபதேசம் செய்யும் குருமார்கள் அனைவரும் தந்தையர் ஆவர். என்னிடம் உபதேசம் பெற வரும் சிஷ்யர்கள் எனக்கு தனையர்கள். அதுபோல எனக்கு இனிமேல் வீடு இந்த காலடியில் உள்ள வீடு இல்லை. இந்த உலகம் முழுதுமே என் வீடாகும்" அடுத்து, சங்கரர் காலடியை விட்டுப் புறப்பட்டு… துறவரத்துக்குரிய ஆடை முதலியவற்றைத் தந்து அருளுதற்குரிய குருவை நாடி புறப்பட்டார். கிளம்பும் முன் தன் தாயாரைப் பாதுகாக்க உரிய ஏற்பாடுகளை செய்தார். பின், தன்னைத் தன் தாயார் பார்க்க விரும்பும்போது மீண்டும் வருவதாகவும், அவர் இறந்தால் அவருக்கு ஈமச்சடங்கு முதலியவற்றைத் தானே செய்வதாகவும் உறுதி அளித்து கிளம்பினார். (தொடரும்)
பொன் மழை பொழிந்த சங்கரர் எட்டு வயதிற்குள் படிப்பை முடித்தார். கல்வியை முடித்த பின்னர் சங்கரர் குருகுலத்திலிருந்து திரும்பி வீட்டிற்கு வந்து தாயாருடன் இருந்து வந்தார். ஒருநாள் ஆர்யாம்பாள் உடல் நலமில்லாது சோர்ந்து போய் காணப்பட்டார். ஆயினும், வழக்கப்படி விடியலில் எழுந்து சிறிது தொலைவில் இருந்த ஆற்றில் குளிக்கச் சென்றார். திரும்பி வரும்போது மயக்கம் வந்து விழுந்து விட்டார். இதைக் கேள்விப்பட்ட சங்கரர், ஓடிப்போய் தாயாரை வீட்டிற்குக் கொண்டுவந்து சேர்த்தார். அவ்வாறு மீண்டும் ஆகக்கூடாது என நினைத்து "சூர்ணா" என்ற பெயருடைய அந்த ஆறு தன் போக்கை மாற்றிக் கொண்டு தங்கள் வீட்டிற்கு அருகில் ஓட வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார். அடுத்த நாள் காலை அந்த அற்புதம் நிகழ்ந்து விட்டது. இந்நிகழ்வு சங்கரரின் திறத்தில் இருந்த ஆழ்ந்த மனிதப் பண்பாட்டைக் காட்டுகிறது. அவர், பிற்காலத்தில் எழுதிய நூல்களிலும் தாய்மையின் பெருமையைப் போற்றிய இயல்பு புலப்படுகிறது. "ப்ருஹதாரண்யகம்" எனும் உபநிடத்திற்கு அவர் எழுதியுள்ள பேருரையில் ஒருவனுக்குத் தாய் தான் சிறந்த ஆசிரியர் என்பதை விளக்கியுள்ளார். மகனுக்கு நல்ல காப்பாளன் அவனது தாய் தான் என்பது அவர் வாக்கு. சங்கரருக்கு எட்டு வயது நிறைந்த போது சில யோகிகள் அவரது வீட்டிற்கு வந்தனர். அவர்களை சங்கரரும் அவரது தாயாரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். வந்தவர்கள், எட்டு வயது சங்கரரிடம் பொலிந்த தெய்வீகமான உயர்வுகளை கண்டு…மகிழ்ந்து…அவரது தாயாரிடம்...சங்கரர் தெய்வ சங்கல்பத்திற்கு ஏற்ப எட்டு ஆண்டுகள் தான் மண்ணுலகில் வாழ்வார் என்றும், ஆனால், இப்போது அது இரண்டு மடங்கு ஆக ஆசி கூறினர். தன் மகன் பதினாறு வயதுதான் வாழ்வான் என்பதை அறிந்து தாய் வருந்தினார். "நமது அறியாமையுடன் உணரும் இந்த அனுபவ வடிவான வாழ்க்கை வெறும் தோற்றமே தவிர, நிஜமானது அன்று" என்று கூறி தாயாரின் துயரத்தை அகற்ற சங்கரர் முனைந்தார். ஆத்மாக்கள் பல்வேறு வகையான உறவுகளுடன், தாய், தந்தை, அண்ணன், தம்பி போன்ற உறவுகளுடன் ஒன்று சேர்ந்து, பயணம் செய்பவர்கள் உறவு கொள்வதைப் போன்றது என எடுத்துக் கூறினார். தன் மகனிடம் ஒரு துறவிக்கான இயல்புகள் தென்படுவதைக் கண்ட ஆர்யாம்பாள்... தன் மகனை இழக்க மனமின்றி அவருக்கு ஒரு திருமணம் செய்து வைக்க முயன்றார். ஆனால்... சங்கரருக்கு உலகத்தின் சாதாரண வழக்கமும்… பழக்கமும் பிடிக்கவில்லை. வாழ்க்கையில் பெரியதாய் ஒன்றை சாதிக்கும் லட்சியத்துடன் வந்தவர் அந்தப் பிள்ளை. தன்னை ஒத்த சிறுவர்கள் தமது விளையாட்டுப் பண்டங்களைக்கூட விட்டுப் பிரிய முடியாத, அந்த இளம் பருவத்திலேயே அவர் குடும்ப வாழ்க்கையைத் துறக்க விரும்பினார். ஆனால்… அதற்கு அவரது தாயார் சம்மதிக்கவில்லை. ஆகவே, ஒரு தெய்வீக அற்புதம் நிகழ வேண்டிய அவசியம் நேர்ந்தது. ஒருநாள், சங்கரர் தன் வீட்டிற்கு அருகில் ஓடிய ஆற்றில் குளிக்கச் சென்று... தண்ணீரில் இறங்கினார். அப்போது ஒரு முதலை அவர் காலைப் பிடித்து இழுக்கத் தொடங்கியது..அவர் உடனே, "அம்மா… அம்மா"எனக் கதறினார். ஓடி வந்த ஆர்யாம்பாள்… நடந்ததைக் கண்டு மிகவும் கவலையுடன் பதறினாள். தன் மகன் முதலையின் பிடியிலிருந்து தன்னை விடுவிக்க போராடியதைக் கண்டாள். இந்நிலையில் தன்னால் இனி பிழைக்க முடியாது என அறிந்த சங்கரர், தான் துறவு போக அனுமதிக்கும்படி தாயாரிடம் கேட்டுக் கொண்டார். ‘உயிர் போய் விடும்’ என்று தெரிந்த நிலையில்...அதுபோல ஆபத் சந்நியாசம் ஏற்பது என்பது வழக்கம் உண்டு. தன் தாயிடம், சங்கரர் மன்றாடிக் கேட்டபோது, அதை மறுக்க இயலாமல் தாயாரும் அனுமதித்தார். துறவு என்பது புதிய பிறவி. அதனால் அந்த ஆபத்து உயிருக்குக் கேடில்லாமல் போக வாய்ப்புண்டு. அதனால், "மகனே! நீ எப்படியும் உயிர் வாழ வேண்டும். சந்நியாசம் வாங்கிக் கொள்வது… உன் உயிரைக் காக்குமானால் எனக்கு அதனால் மகிழ்ச்சியே" என்று கண்ணீருடன் அவருக்கு அனுமதி அளித்தார். உடன் சங்கரர், தன் உள்ளத்தால் உலக வாழ்வினைத் துறந்த துறவி ஆனார்… முதலையும் அவரது காலை விட்டது. அந்த முதலை ஒரு சாபத்தால் தோன்றிய ஒன்று. ஆகவே, அதற்கான சாப விமோசனம் கிடைத்தது. தண்ணீரில் இருந்து உயிருடன் கரையேறிய சிறுவன், ஒரே இடத்தில் தங்காமல் ஊர்… ஊராய்… தேசம்…தேசமாகத் திரியும் "பரிவ்ராஜகர்" எனும் துறவியாக வாழ்வதாக உறுதி பூண்டான். ஆனால், சங்கரன் பழையபடி தன் மகனாக இருப்பான் என நினைத்த தாய்க்கு தன் புதிய நிலையை உணர்த்தினார் சங்கரர். "அம்மா...இனி எனக்கு பிக்ஷை இடும் பெண்மணிகள் அனைவரும் எனக்குத் தாயார் ஆவர். எனக்கு ஞானோபதேசம் செய்யும் குருமார்கள் அனைவரும் தந்தையர் ஆவர். என்னிடம் உபதேசம் பெற வரும் சிஷ்யர்கள் எனக்கு தனையர்கள். அதுபோல எனக்கு இனிமேல் வீடு இந்த காலடியில் உள்ள வீடு இல்லை. இந்த உலகம் முழுதுமே என் வீடாகும்" அடுத்து, சங்கரர் காலடியை விட்டுப் புறப்பட்டு… துறவரத்துக்குரிய ஆடை முதலியவற்றைத் தந்து அருளுதற்குரிய குருவை நாடி புறப்பட்டார். கிளம்பும் முன் தன் தாயாரைப் பாதுகாக்க உரிய ஏற்பாடுகளை செய்தார். பின், தன்னைத் தன் தாயார் பார்க்க விரும்பும்போது மீண்டும் வருவதாகவும், அவர் இறந்தால் அவருக்கு ஈமச்சடங்கு முதலியவற்றைத் தானே செய்வதாகவும் உறுதி அளித்து கிளம்பினார். (தொடரும்)