இளமை காக்கும் இலந்தை!

இளமை காக்கும் இலந்தை!

  • இலந்தைப் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும்.

  • பெண்களுக்கு மாதாமாதம் உருவாகும் மாதவிடாய் காலத்தில் சிலருக்கு அதிகமான ரத்தப்போக்கு இருக்கும். இந்த சமயத்தில் பெண்கள் இலந்தை பழத்தை சாப்பிட்டு வந்தால் அதிக ரத்தப்போக்கு ஏற்படுவதை கட்டுப்படுத்தும்.

  • பேருந்தில் பயணம் செய்யும்போது சிலருக்கு வாந்தி, தலைச்சுற்றல் உண்டாகும். இவர்கள் இலந்தைப் பழத்தை சாப்பிட்டு வந்தால் தலைச்சுற்றல், வாந்தி ஏற்படாது.

  • 40 வயதைத் தாண்டியவர்களுக்கு ஏற்படும் உடல்வலியைப் போக்கி உடலைத் தெம்பாக்க இலந்தைப் பழம் நல்ல மருந்தாகும்.

  • இலந்தை மர இலைகளை நன்றாக அரைத்து காயங்கள் மீது தடவி வந்தால் விரைவில் குணமாகும்.

  • இலந்தை மர இலை சாறெடுத்து வழுக்கை உள்ள இடத்தில் தடவி வந்தால் முடி வளரும்.

  • கை, கால்களில் புண் இருப்பவர்கள், வாய் வீக்கம் இருப்பவர்கள் இலந்தை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புண்கள் ஆறிவிடும். பல் ஈறுகளில் இரத்த கசிவு, உதடு, வாயில் புண் போன்றவைகள் எது இருந்தாலும் இப்பழம் குணமாக்கும்.

  • இலந்தைப் பழம் கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும். பற்களும் உறுதிபெறும்.

  • இலந்தை மர இலையை அரைத்து புளித்த மோரில் சிறிதளவு கலந்து குடித்தால் மூலக்கடுப்பு நீங்கும்.

  • இலந்தை இலைகளை வேகவைத்து அதனை அடிவயிற்றில் தடவினால் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் வலி மற்றும் சிறுநீர் கழிக்க முடியாமல் அவதி போன்றவைகள் குணமாகும்.

  • இலந்தை பழ கொட்டையை நன்றாக உலர்த்தி இடித்து மாவாக்கிக் கொள்ள வேண்டும். அந்த பொடியினை தினமும் 2 அல்லது 3 தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் உடல் வலுவும், அழகும் பெறும்.

  • இலந்தைப் பழத்தின் விதையை நீக்கிவிட்டு பழச் சதையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி எடுத்துக்கொண்டு காலையும், மாலையும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி, நன்கு பசியை உண்டாக்கும்.

  • மூளையைத் தூண்டும் பாஸ்பரஸ் உப்புடன் ஜியூடாமிக் என்ற அமிலமும் இலந்தைப் பழத்தில் இருப்பதால் அவை ரத்தத்தில் கலந்து மூளை நன்றாக செயல்பட உதவுகிறது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com