– ஆதினமிளகி, வீரசிகாமணி.'கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே' என்பது கீதையில் ஓர் உபதேசத் தொடர். 'பலனை எதிர்பார்க்காமல் எப்படிக் கடமையைச் செய்வது?' என்று நினைக்கவும், கேட்கவும் தோன்றும். அதன் விளக்கம் அதுவல்ல!.'கர்மண்யே வாதி காரஸ்த்தே மா பலேஷீ கதாதன:' இது கீதையில் ஸ்ரீ கிருஷ்ணன் சொன்னது.."உனக்கு உன் கர்மம்… உன்னுடைய வேலை… உன்னிடைய தொழில் என நீ செய்கிறாயே! அதில்தான் உனக்கு அதிகாரம். எப்போதும் அதனுடைய பலனில் உனக்கு அதிகாரம் இல்லை' என்பதுதான் அதன் பொருள்..ஒருவன் அலுவலகத்தில் வேலை செய்கிறான். சம்பளத்திற்காகவே வேலை செய்தானானால், 'ஏதோ செய்ய வேண்டிய கடமை' என்று பற்று இல்லாமல் செய்வான். வேலை ஒழுங்காக இருக்காது. 'வேலையை ஒழுங்காகச் செய்வோம்' என்று அதிலேயே அவன் எண்ணம் இருந்தால், அவன் செய்யும் தொழில், வேலை சரியாக இருக்கும். அதற்கு வேண்டிய சம்பளமும் கிடைக்கும்! பலனை எதிர்பார்க்காமல் கர்மத்தைச் செய்வது என்பது இதுதான்..இதற்கு எடுத்துக்காட்டாக, புராணத்தில் பல நிகழ்ச்சிகள் கூறப்பட்டுள்ளன..ஒரு நாள் ஸ்ரீ கிருஷ்ணர், ருக்மிணியிடம் பிரசாதத்தைக் கொடுத்து அதை அக்கரையில் இருக்கும் துர்வாச முனிவரிடம் தரும்படிச் சொன்னார். நதியில் ஒரே வெள்ளம்! கடக்கவே முடியாத நிலை! 'நான் எப்படிப் போகப் போகிறேன்' என்று ஐயுற்றாள் ருக்மிணி. ஸ்ரீ கிருஷ்ணர், 'நதியிடம் கிருஷ்ணர் நித்திய பிரம்மச்சாரியாக இருந்தால் நீ வழி விடு' என்று சொல்லும்படி கூறுகிறார். ருக்மிணிக்கு ஒன்றும் புரியவில்லை. 'என்னடா! தன்னோடு குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த மனுஷன் நித்திய பிரம்மச்சாரி என்று சொல்கிறாரே!' என நினைத்தாள். அவர் சொன்னதை நதியிடம் போய்ச் சொல்கிறாள். அந்த நதியும் விலகி அவளுக்கு வழி விடுகிறது! அதன் வழியே போய் துர்வாசரிடம் பிரசாதத்தைக் கொடுக்கிறாள். அவர் வாங்கி அதை நன்றாகச் சாப்பிடுகிறார்! சாப்பிட்டு முடித்த பின், "சரி! போய் வா" என்கிறார்..மறுபடியும் வெள்ளம் நதியில் பெருக்கெடுத்து ஓடியது. அவள் வந்த வழி மூடிக் கொண்டு விட்டது. துர்வாசரிடம், ''எப்படிப் போவது" என்று கேட்கிறாள். அவர், 'துர்வாசன் நித்திய உபவாசியாக இருந்தால் வழியை விடு' என்று சொல்லச் சொல்கிறார்! அவளுக்கு ஒரே குழப்பம்… 'என்னடா! இந்த மனுஷன் இப்பத்தான் நன்றாகச் சாப்பிட்டிருக்கிறார்! சாப்பிட்டுவிட்டு நித்திய உபவாசம் என்கிறார். என்ன உபவாசம் வேண்டிக் கிடக்கிறது. சரி! அவர் சொன்னபடியே நதியிடம் போய்ச் சொல்வோம்' என நினைத்து, நதியிடம் சென்று சொல்ல, நதியும் வழியை விட்டது..திரும்பி வந்தவுடன் ஸ்ரீ கிருஷ்ணரிடம், "நீங்கள் நித்திய பிரம்மச்சாரி என்கிறீர்! நதி வழியை விட்டது. துர்வாசர் நன்றாகச் சாப்பிட்டுவிட்டு நித்திய உபவாசி என்கிறார். நதி வழி விட்டது. இதற்கு என்னதான் பொருள்?" எனக் கேட்கிறாள்..அதற்கு ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறார்: "நாங்கள் எதிலும் பற்று வைப்பதில்லை. நாங்கள் எங்களுக்காக, ருசிக்காக, பசிக்காக, ஆசைக்காக, இன்பத்திற்காக நானும் துர்வாசரும் எதுவும் செய்வதில்லை. அதனால் இந்த விஷயங்கள் எல்லாம் எங்களைப் பாதிக்கவே பாதிக்காது! கடமையைச் செய்! பலனை எதிர்பார்க்காதே! (நிஷ்காமிய கர்மா) என்பது இதுதான்" எனக் கூறுகிறார்.
– ஆதினமிளகி, வீரசிகாமணி.'கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே' என்பது கீதையில் ஓர் உபதேசத் தொடர். 'பலனை எதிர்பார்க்காமல் எப்படிக் கடமையைச் செய்வது?' என்று நினைக்கவும், கேட்கவும் தோன்றும். அதன் விளக்கம் அதுவல்ல!.'கர்மண்யே வாதி காரஸ்த்தே மா பலேஷீ கதாதன:' இது கீதையில் ஸ்ரீ கிருஷ்ணன் சொன்னது.."உனக்கு உன் கர்மம்… உன்னுடைய வேலை… உன்னிடைய தொழில் என நீ செய்கிறாயே! அதில்தான் உனக்கு அதிகாரம். எப்போதும் அதனுடைய பலனில் உனக்கு அதிகாரம் இல்லை' என்பதுதான் அதன் பொருள்..ஒருவன் அலுவலகத்தில் வேலை செய்கிறான். சம்பளத்திற்காகவே வேலை செய்தானானால், 'ஏதோ செய்ய வேண்டிய கடமை' என்று பற்று இல்லாமல் செய்வான். வேலை ஒழுங்காக இருக்காது. 'வேலையை ஒழுங்காகச் செய்வோம்' என்று அதிலேயே அவன் எண்ணம் இருந்தால், அவன் செய்யும் தொழில், வேலை சரியாக இருக்கும். அதற்கு வேண்டிய சம்பளமும் கிடைக்கும்! பலனை எதிர்பார்க்காமல் கர்மத்தைச் செய்வது என்பது இதுதான்..இதற்கு எடுத்துக்காட்டாக, புராணத்தில் பல நிகழ்ச்சிகள் கூறப்பட்டுள்ளன..ஒரு நாள் ஸ்ரீ கிருஷ்ணர், ருக்மிணியிடம் பிரசாதத்தைக் கொடுத்து அதை அக்கரையில் இருக்கும் துர்வாச முனிவரிடம் தரும்படிச் சொன்னார். நதியில் ஒரே வெள்ளம்! கடக்கவே முடியாத நிலை! 'நான் எப்படிப் போகப் போகிறேன்' என்று ஐயுற்றாள் ருக்மிணி. ஸ்ரீ கிருஷ்ணர், 'நதியிடம் கிருஷ்ணர் நித்திய பிரம்மச்சாரியாக இருந்தால் நீ வழி விடு' என்று சொல்லும்படி கூறுகிறார். ருக்மிணிக்கு ஒன்றும் புரியவில்லை. 'என்னடா! தன்னோடு குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த மனுஷன் நித்திய பிரம்மச்சாரி என்று சொல்கிறாரே!' என நினைத்தாள். அவர் சொன்னதை நதியிடம் போய்ச் சொல்கிறாள். அந்த நதியும் விலகி அவளுக்கு வழி விடுகிறது! அதன் வழியே போய் துர்வாசரிடம் பிரசாதத்தைக் கொடுக்கிறாள். அவர் வாங்கி அதை நன்றாகச் சாப்பிடுகிறார்! சாப்பிட்டு முடித்த பின், "சரி! போய் வா" என்கிறார்..மறுபடியும் வெள்ளம் நதியில் பெருக்கெடுத்து ஓடியது. அவள் வந்த வழி மூடிக் கொண்டு விட்டது. துர்வாசரிடம், ''எப்படிப் போவது" என்று கேட்கிறாள். அவர், 'துர்வாசன் நித்திய உபவாசியாக இருந்தால் வழியை விடு' என்று சொல்லச் சொல்கிறார்! அவளுக்கு ஒரே குழப்பம்… 'என்னடா! இந்த மனுஷன் இப்பத்தான் நன்றாகச் சாப்பிட்டிருக்கிறார்! சாப்பிட்டுவிட்டு நித்திய உபவாசம் என்கிறார். என்ன உபவாசம் வேண்டிக் கிடக்கிறது. சரி! அவர் சொன்னபடியே நதியிடம் போய்ச் சொல்வோம்' என நினைத்து, நதியிடம் சென்று சொல்ல, நதியும் வழியை விட்டது..திரும்பி வந்தவுடன் ஸ்ரீ கிருஷ்ணரிடம், "நீங்கள் நித்திய பிரம்மச்சாரி என்கிறீர்! நதி வழியை விட்டது. துர்வாசர் நன்றாகச் சாப்பிட்டுவிட்டு நித்திய உபவாசி என்கிறார். நதி வழி விட்டது. இதற்கு என்னதான் பொருள்?" எனக் கேட்கிறாள்..அதற்கு ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறார்: "நாங்கள் எதிலும் பற்று வைப்பதில்லை. நாங்கள் எங்களுக்காக, ருசிக்காக, பசிக்காக, ஆசைக்காக, இன்பத்திற்காக நானும் துர்வாசரும் எதுவும் செய்வதில்லை. அதனால் இந்த விஷயங்கள் எல்லாம் எங்களைப் பாதிக்கவே பாதிக்காது! கடமையைச் செய்! பலனை எதிர்பார்க்காதே! (நிஷ்காமிய கர்மா) என்பது இதுதான்" எனக் கூறுகிறார்.