– ச.தண்டபாணி.ஒரு பண்டிகை அல்லது விசேஷம் என்றால் தாய், தந்தையருக்கும் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் காலில் விழுந்து நமஸ்காரம் செய்வது இந்துக்களுடைய வழக்கம். இந்த நமஸ்காரத்தை ஏன் நாம் செய்ய வேண்டும்? பெரியவர்களிடத்தில் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்வதற்காக நமஸ்காரம் செய்கிறோம் என்பது பொதுவான ஒரு கருத்து. இதைத் தவிர, பெற்றோர்களுக்கு நமஸ்காரம் செய்வதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. இந்த பூமியில் நாம் பிறந்ததற்குக் காரணமாய் இருந்தவர்கள் நமது பெற்றோர்கள் என்பதனால் அவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக அவர்களுக்கு நமஸ்காரம் செய்கிறோம் என்று இன்னொரு கருத்தும் உண்டு..அதைப்போலவே, ஆலயங்களுக்குச் சென்றால் அனைவரும் கடவுளுக்கு நமஸ்காரம் செய்கிறோம். நாம் இறைவனிடத்தில் சரணடைந்து, 'கடவுளே நீதான் என்னை காலமெல்லாம் காப்பாற்ற வேண்டும்' என்று வேண்டிக்கொண்டு நமஸ்காரம் செய்கிறோம். இது ஒரு பொதுவான விளக்கம். இதைத்தாண்டி இன்னொரு பொருளும் காரணமும் உண்டு. பொதுவாக, ஆலயங்களில் தெய்வ சக்தி மிகுந்திருக்கும். நாம் நமஸ்காரம் செய்யும்போது நம்முடைய அங்கம் ஆலய பூமியில் படுவதனால் அங்கு இருக்கக்கூடிய சக்தி நமக்குக் கொஞ்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகவும் ஐதீகமாகவும் இருந்து வருகிறது. அதனால்தான் வீட்டில் உள்ள பெரியவர்கள் கோயிலுக்குச் சென்றால், 'சிறிது நேரம் கோயிலில் அமர்ந்து விட்டு வாருங்கள்' என்று சொல்வார்கள். அப்படி ஆலயங்களில் இருக்கக்கூடிய சக்தியை பலர் உணர்ந்தும் ஈர்க்கப்பட்டும் இருப்பார்கள்..இந்த நமஸ்காரங்களில் பல வகைகள் உண்டு. குறிப்பாக, ஐந்து விதமான நமஸ்காரங்கள் உண்டு. அவை: ஓரங்க நமஸ்காரம், மூன்றங்க நமஸ்காரம், ஐந்தங்க நமஸ்காரம், எட்டங்க நமஸ்காரம் மற்றும் தண்டகார நமஸ்காரம்..ஓரங்க நமஸ்காரம் : தலையை மட்டும் குனிந்து செய்யக்கூடிய நமஸ்காரத்துக்கு ஓரங்க நமஸ்காரம் என்று பெயர். இதை, 'ஏகாங்க நமஸ்காரம்' என்றும் கூறுவர்..மூன்றங்க நமஸ்காரம் : இரண்டு கைகளை மட்டும் தலைக்கு மேல் கூப்பி செய்யக்கூடிய இந்த நமஸ்காரத்துக்கு மூன்றங்க நமஸ்காரம் என்று பெயர். இதற்கு, 'திரியங்க நமஸ்காரம்' என்றும் பெயர் உண்டு..ஐந்தங்க நமஸ்காரம் : நம் உடம்பில் இருக்கக்கூடிய ஐந்து அங்கங்கள் மட்டும் பூமியில் படுமாறு செய்யக்கூடிய நமஸ்காரத்துக்கு ஐந்தங்க நமஸ்காரம் என்று பெயர். இரண்டு முழந்தாள்கள், இரண்டு கைகள் மற்றும் தலை ஆகிய ஐந்து அங்கங்கள் மட்டும் பூமியில் படுமாறு செய்யக்கூடிய முறை இதுவாகும். இதை, 'பஞ்சங்க நமஸ்காரம்' என்றும் அழைப்பர்..எட்டங்க நமஸ்காரம் : நமது உடலின் எட்டு அங்கங்கள் முறையே இரண்டு முழந்தாள்கள், இரண்டு கைகள், மார்பு, இரண்டு செவிகள் மற்றும் தலை ஆகிய எட்டு அங்கங்களும் பூமியில் படுமாறு செய்யக்கூடிய நமஸ்காரத்துக்கு எட்டங்க நமஸ்காரம் என்று பெயர். இந்த நமஸ்காரத்தைப் பொதுவாக ஆண்கள் மட்டும்தான் பின்பற்றுவர்..தண்டகார நமஸ்காரம் : இந்த நமஸ்காரத்தில் ஏறத்தாழ நம் உடம்பிலுள்ள அனைத்து பாகங்களும் முறையே இரண்டு முழந்தாள்கள், இரண்டு கைகள், மார்பு மற்றும் தலை ஆகியவை தரையில் படுமாறு செய்யக்கூடிய நமஸ்காரத்துக்கு தண்டகார நமஸ்காரம் என்று பெயர். இதை, 'சாஷ்டாங்க நமஸ்காரம்' என்றும் கூறுவர்..இறைவனிடம் நாம் சரணாகதி அடைந்து, 'கடவுளே உன்னை விட இந்த உலகத்தில் உயர்ந்தவரும், சக்தி வாய்ந்தவரும் யாருமில்லை. எனவே, நீதான் எங்களைக் காப்பாற்ற வேண்டும்' என்று செய்யக்கூடிய நமஸ்காரம் இதுவாகும். இந்த முறையை, 'தண்டகார நமஸ்காரம்' என்று சொல்வதற்குக் காரணம், 'தண்டம்' என்றால் ஒரு பிரம்பு அல்லது குச்சி என்று பொருள். நாம் இரண்டு கைகளையும் நீட்டி ஒரு பிரம்பை போல தரையில் நமஸ்கரிப்பதனால், இதற்கு தண்டகார நமஸ்காரம் என்று பெயர் வந்தது. ஏனெனில், ஒரு பிரம்பை தரையில் போட்டால், அது எதற்குமே உபயோகம் இல்லாமல் இருக்கும். 'அதுபோல நான் இருக்கிறேன்; இறைவா நீதான் என்னைக் காப்பாற்ற வேண்டும்' என்று நாம் கடவுளை சரணடைந்து செய்யக்கூடிய நமஸ்கார முறை இது..பஞ்ச நமஸ்கார முறைகளில் அங்கங்கள் பூமியில் படக்கூடிய நமஸ்காரங்கள் பஞ்சங்க, அஷ்டாங்க மற்றும் சாஷ்டாங்க நமஸ்காரங்கள் ஆகும். இதில் பெண்கள் வெறும் பஞ்சங்க நமஸ்காரத்தை மட்டும்தான் செய்ய வேண்டும். ஏனென்றால், 'பெண்களின் கர்ப்பப்பை ஒரு உயிரை வயிற்றில் சுமப்பதினாலும், பெண்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டக்கூடிய மார்பகங்கள் ஆகிய இரண்டும் புனிதமானது என்பதனால் அவை பூமியில் படக்கூடாது' என சாஸ்திரம் சொல்கிறது. எனவேதான் பெண்கள் அஷ்டங்க மற்றும் சாஷ்டாங்க நமஸ்காரத்தை செய்யக்கூடாது. ஆகவேதான் பொதுவாக, 'பெண்கள் அங்கப்பிரதட்சணம் செய்யக் கூடாது' எனவும் பெரியோர்கள் கூறுவர்..ஆலயங்களுக்குச் செல்லும்போது அங்கு நாம் காணும் யோகிகள் மற்றும் ஆச்சாரியார்களுக்கு நமஸ்காரம் செய்யக்கூடாது. ஆலயங்களுக்கு வெளியே அவர்களுக்கு நமஸ்காரம் செய்து ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளலாம். ஆலயங்களில் கடவுளைத் தவிர, வேறு யாருக்கும் நமஸ்காரம் செய்யக்கூடாது என்பது விதி. மேலும், ஆலயங்களில் அனைத்து இடங்களிலும் நமஸ்காரம் செய்யக்கூடாது. ஆலயத்தின் கொடிமரத்துக்கு முன்புதான் நமஸ்காரம் செய்ய வேண்டும். பல ஆலயங்களில் நமஸ்கரிப்பதற்கு ஏதுவாக கொடிமரத்திற்கு முன் ஒரு படமே வரைந்து வைத்திருப்பார்கள். கொடிமரம் இல்லாத ஆலயங்களில், நம்முடைய தலை வடக்கு நோக்கியோ அல்லது கிழக்கு நோக்கியோதான் நமஸ்காரம் செய்ய வேண்டும். வீட்டில் நமஸ்காரம் செய்யும்போதும் இந்த முறை பொருந்தும்.
– ச.தண்டபாணி.ஒரு பண்டிகை அல்லது விசேஷம் என்றால் தாய், தந்தையருக்கும் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் காலில் விழுந்து நமஸ்காரம் செய்வது இந்துக்களுடைய வழக்கம். இந்த நமஸ்காரத்தை ஏன் நாம் செய்ய வேண்டும்? பெரியவர்களிடத்தில் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்வதற்காக நமஸ்காரம் செய்கிறோம் என்பது பொதுவான ஒரு கருத்து. இதைத் தவிர, பெற்றோர்களுக்கு நமஸ்காரம் செய்வதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. இந்த பூமியில் நாம் பிறந்ததற்குக் காரணமாய் இருந்தவர்கள் நமது பெற்றோர்கள் என்பதனால் அவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக அவர்களுக்கு நமஸ்காரம் செய்கிறோம் என்று இன்னொரு கருத்தும் உண்டு..அதைப்போலவே, ஆலயங்களுக்குச் சென்றால் அனைவரும் கடவுளுக்கு நமஸ்காரம் செய்கிறோம். நாம் இறைவனிடத்தில் சரணடைந்து, 'கடவுளே நீதான் என்னை காலமெல்லாம் காப்பாற்ற வேண்டும்' என்று வேண்டிக்கொண்டு நமஸ்காரம் செய்கிறோம். இது ஒரு பொதுவான விளக்கம். இதைத்தாண்டி இன்னொரு பொருளும் காரணமும் உண்டு. பொதுவாக, ஆலயங்களில் தெய்வ சக்தி மிகுந்திருக்கும். நாம் நமஸ்காரம் செய்யும்போது நம்முடைய அங்கம் ஆலய பூமியில் படுவதனால் அங்கு இருக்கக்கூடிய சக்தி நமக்குக் கொஞ்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகவும் ஐதீகமாகவும் இருந்து வருகிறது. அதனால்தான் வீட்டில் உள்ள பெரியவர்கள் கோயிலுக்குச் சென்றால், 'சிறிது நேரம் கோயிலில் அமர்ந்து விட்டு வாருங்கள்' என்று சொல்வார்கள். அப்படி ஆலயங்களில் இருக்கக்கூடிய சக்தியை பலர் உணர்ந்தும் ஈர்க்கப்பட்டும் இருப்பார்கள்..இந்த நமஸ்காரங்களில் பல வகைகள் உண்டு. குறிப்பாக, ஐந்து விதமான நமஸ்காரங்கள் உண்டு. அவை: ஓரங்க நமஸ்காரம், மூன்றங்க நமஸ்காரம், ஐந்தங்க நமஸ்காரம், எட்டங்க நமஸ்காரம் மற்றும் தண்டகார நமஸ்காரம்..ஓரங்க நமஸ்காரம் : தலையை மட்டும் குனிந்து செய்யக்கூடிய நமஸ்காரத்துக்கு ஓரங்க நமஸ்காரம் என்று பெயர். இதை, 'ஏகாங்க நமஸ்காரம்' என்றும் கூறுவர்..மூன்றங்க நமஸ்காரம் : இரண்டு கைகளை மட்டும் தலைக்கு மேல் கூப்பி செய்யக்கூடிய இந்த நமஸ்காரத்துக்கு மூன்றங்க நமஸ்காரம் என்று பெயர். இதற்கு, 'திரியங்க நமஸ்காரம்' என்றும் பெயர் உண்டு..ஐந்தங்க நமஸ்காரம் : நம் உடம்பில் இருக்கக்கூடிய ஐந்து அங்கங்கள் மட்டும் பூமியில் படுமாறு செய்யக்கூடிய நமஸ்காரத்துக்கு ஐந்தங்க நமஸ்காரம் என்று பெயர். இரண்டு முழந்தாள்கள், இரண்டு கைகள் மற்றும் தலை ஆகிய ஐந்து அங்கங்கள் மட்டும் பூமியில் படுமாறு செய்யக்கூடிய முறை இதுவாகும். இதை, 'பஞ்சங்க நமஸ்காரம்' என்றும் அழைப்பர்..எட்டங்க நமஸ்காரம் : நமது உடலின் எட்டு அங்கங்கள் முறையே இரண்டு முழந்தாள்கள், இரண்டு கைகள், மார்பு, இரண்டு செவிகள் மற்றும் தலை ஆகிய எட்டு அங்கங்களும் பூமியில் படுமாறு செய்யக்கூடிய நமஸ்காரத்துக்கு எட்டங்க நமஸ்காரம் என்று பெயர். இந்த நமஸ்காரத்தைப் பொதுவாக ஆண்கள் மட்டும்தான் பின்பற்றுவர்..தண்டகார நமஸ்காரம் : இந்த நமஸ்காரத்தில் ஏறத்தாழ நம் உடம்பிலுள்ள அனைத்து பாகங்களும் முறையே இரண்டு முழந்தாள்கள், இரண்டு கைகள், மார்பு மற்றும் தலை ஆகியவை தரையில் படுமாறு செய்யக்கூடிய நமஸ்காரத்துக்கு தண்டகார நமஸ்காரம் என்று பெயர். இதை, 'சாஷ்டாங்க நமஸ்காரம்' என்றும் கூறுவர்..இறைவனிடம் நாம் சரணாகதி அடைந்து, 'கடவுளே உன்னை விட இந்த உலகத்தில் உயர்ந்தவரும், சக்தி வாய்ந்தவரும் யாருமில்லை. எனவே, நீதான் எங்களைக் காப்பாற்ற வேண்டும்' என்று செய்யக்கூடிய நமஸ்காரம் இதுவாகும். இந்த முறையை, 'தண்டகார நமஸ்காரம்' என்று சொல்வதற்குக் காரணம், 'தண்டம்' என்றால் ஒரு பிரம்பு அல்லது குச்சி என்று பொருள். நாம் இரண்டு கைகளையும் நீட்டி ஒரு பிரம்பை போல தரையில் நமஸ்கரிப்பதனால், இதற்கு தண்டகார நமஸ்காரம் என்று பெயர் வந்தது. ஏனெனில், ஒரு பிரம்பை தரையில் போட்டால், அது எதற்குமே உபயோகம் இல்லாமல் இருக்கும். 'அதுபோல நான் இருக்கிறேன்; இறைவா நீதான் என்னைக் காப்பாற்ற வேண்டும்' என்று நாம் கடவுளை சரணடைந்து செய்யக்கூடிய நமஸ்கார முறை இது..பஞ்ச நமஸ்கார முறைகளில் அங்கங்கள் பூமியில் படக்கூடிய நமஸ்காரங்கள் பஞ்சங்க, அஷ்டாங்க மற்றும் சாஷ்டாங்க நமஸ்காரங்கள் ஆகும். இதில் பெண்கள் வெறும் பஞ்சங்க நமஸ்காரத்தை மட்டும்தான் செய்ய வேண்டும். ஏனென்றால், 'பெண்களின் கர்ப்பப்பை ஒரு உயிரை வயிற்றில் சுமப்பதினாலும், பெண்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டக்கூடிய மார்பகங்கள் ஆகிய இரண்டும் புனிதமானது என்பதனால் அவை பூமியில் படக்கூடாது' என சாஸ்திரம் சொல்கிறது. எனவேதான் பெண்கள் அஷ்டங்க மற்றும் சாஷ்டாங்க நமஸ்காரத்தை செய்யக்கூடாது. ஆகவேதான் பொதுவாக, 'பெண்கள் அங்கப்பிரதட்சணம் செய்யக் கூடாது' எனவும் பெரியோர்கள் கூறுவர்..ஆலயங்களுக்குச் செல்லும்போது அங்கு நாம் காணும் யோகிகள் மற்றும் ஆச்சாரியார்களுக்கு நமஸ்காரம் செய்யக்கூடாது. ஆலயங்களுக்கு வெளியே அவர்களுக்கு நமஸ்காரம் செய்து ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளலாம். ஆலயங்களில் கடவுளைத் தவிர, வேறு யாருக்கும் நமஸ்காரம் செய்யக்கூடாது என்பது விதி. மேலும், ஆலயங்களில் அனைத்து இடங்களிலும் நமஸ்காரம் செய்யக்கூடாது. ஆலயத்தின் கொடிமரத்துக்கு முன்புதான் நமஸ்காரம் செய்ய வேண்டும். பல ஆலயங்களில் நமஸ்கரிப்பதற்கு ஏதுவாக கொடிமரத்திற்கு முன் ஒரு படமே வரைந்து வைத்திருப்பார்கள். கொடிமரம் இல்லாத ஆலயங்களில், நம்முடைய தலை வடக்கு நோக்கியோ அல்லது கிழக்கு நோக்கியோதான் நமஸ்காரம் செய்ய வேண்டும். வீட்டில் நமஸ்காரம் செய்யும்போதும் இந்த முறை பொருந்தும்.