– மாலதி சந்திரசேகரன்.நவராத்திரி என்றாலே பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் உண்டான பண்டிகையாகத்தான் கொண்டாடப்படுகிறது. நாள், கிழமை என வந்து விட்டாலே, பூஜை பரபரப்பு பெண்களுக்குத் தலைக்கேறிவிடும். அதுவும் கோலம், நைவேத்தியம் இத்யாதிகளும் சேர்ந்து படாதபாடு படுத்திவிடும். சாதாரணமாக ஒரு நாள் விசேஷம் என்றாலே பெரும் கூத்தாகிவிடும். ஒன்பது நாட்கள் விசேஷம் என்றால் கேட்கவும் வேண்டுமா?.நவராத்திரி பண்டிகை நாட்களில் என்னென்ன செய்யலாம் என்பதை முன்கூட்டியே தீர்மானம் செய்து கொண்டாலே பாதி டென்ஷன் தீர்ந்துவிடும்; வேலையும் சுலபமானது போல் மனதிற்குத் தோன்றும். துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி தேவியரை முதல் நாளிலிருந்து வரிசையாக எப்படி ஆராதிக்கலாம் என்பதைக் காணலாம்!.முதலில், 1.சைலபுத்ரி, 2.பிரம்மசாரிணி, 3.சந்த்ரகண்டா, 4.கூஷ்மாண்டா, 5.ஸ்கந்தமாதா, 6.காத்யாயனி, 7.காலராத்ரி, 8.மஹாகெளரீ, 9.ஸித்திதாத்ரி என நவ தேவியரை வரிசைப்படுத்திக் கொள்ளலாம்..இனி, நவராத்திரியின் ஒன்பது நாட்களும் போட வேண்டிய கோலங்கள் குறித்துக் காண்போம். முதல் நாள் – அரிசி மாவினால் பொட்டு கோலம். இரண்டாம் நாள் – கோதுமை மாவினால் கட்டம் போட்ட கோலம். மூன்றாம் நாள் – முத்துக்களால் மலர் போன்ற கோலம். நான்காம் நாள் – அட்சதையினால் படிக்கட்டு போன்ற கோலம். ஐந்தாம் நாள் – கடலையினால் பறவையினம் போன்ற கோலம். ஆறாம் நாள் – பருப்பு கொண்டு தேவியின் நாமம் எழுதுதல். ஏழாம் நாள் – திட்டாணி, வெள்ளை மலர்களால் ஆன கோலம். எட்டாம் நாள் – காசு பத்மம் (தாமரைக் கோலம்), ஒன்பதாம் நாள் – கற்பூரம் ஆயுதம் (வாசனைப் பொடிகளைக் கலந்து கோலமிடுவது சிறப்பு),.பாட்டு மற்றும் இசைக்கருவிகளைத் இசைக்கத் தெரிந்தவர்கள் அம்பாளுக்கு ஒன்பது நாட்களும் பாட, இசைக்க வேண்டிய ராகங்களை அறிவோம்.முதல் நாள் – தோடி, இரண்டாம் நாள் – கல்யாணி, மூன்றாம் நாள் – காம்போதி, கௌளை, நான்காம் நாள் – பைரவி, ஐந்தாம் நாள் – பந்துவராளி,ஆறாம் நாள் – நீலாம்பரி, ஏழாம் நாள் – பிலஹரி, எட்டாம் நாள் – புன்னாகவராளி, ஒன்பதாம் நாள் – வஸந்தா போன்றவையாகும்..நவராத்திரியில் அம்பாளை பூக்களால் அலங்காரம் மற்றும் அர்ச்சனை செய்து பார்க்க விரும்பினால், ஒன்பது நாட்களும் எடுத்துக்கொள்ள வேண்டிய மலர்கள்: முதல் நாள் – மல்லிகை, இரண்டாம் நாள் – முல்லை, மூன்றாம் நாள் – செண்பகம், மரு, நான்காம் நாள் – ஜாதிமல்லி, ஐந்தாம் நாள் – பாரிஜாதம் அல்லது வாசனை மலர்கள், ஆறாம் நாள் – செம்பருத்தி, ஏழாம் நாள் – தாழம்பூ, பாரிஜாதம், விபூதிப்பச்சிலை, எட்டாம் நாள் – சம்பங்கி, மருதாணிப்பூ, ஒன்பதாம் நாள் – தாமரை, மரிக்கொழுந்து ஆகியவையாகும்..நவராத்திரி ஒன்பது நாளும் கொலுவைக் காண வருகை தரும் விருந்தினருக்கு வெற்றிலைப் பாக்கு, மங்கலப் பொருட்களுடன் கொடுக்க வேண்டிய பழங்கள்: முதல் நாள் – வாழைப்பழம், இரண்டாம் நாள் – மாம்பழம், மூன்றாம் நாள் – பலாப்பழம், நான்காம் நாள் – கொய்யாப்பழம், ஐந்தாம் நாள் – மாதுளை, ஆறாம் நாள் – ஆரஞ்சு, ஏழாம் நாள் – பேரிச்சம்பழம், எட்டாம் நாள் – திராட்சை, ஒன்பதாம் நாள் – நாவல் பழம் ஆகும்..நவராத்திரி ஒன்பது நாட்களும் முப்பெரும் தேவியருக்கு நிவேதனம் செய்ய வேண்டிய பிரசாதங்கள்: முதல் நாள் – சுண்டல், வெண்பொங்கல், இரண்டாம் நாள் – புளியோதரை, மூன்றாம் நாள் – சர்க்கரைப் பொங்கல், நான்காம் நாள் – கதம்பம் (காய்கறிகள் கலந்த கதம்ப சாதம்), ஐந்தாம் நாள் – தயிர்சாதம், பொங்கல், ஆறாம் நாள் – தேங்காய் சாதம், ஏழாம் நாள் – எலுமிச்சை சாதம், எட்டாம் நாள் – பாயஸன்னம் (பால் சாதம்), ஒன்பதாம் நாள் – அக்கார அடிசில் (பச்சரிசி, பால், சர்க்கரை கலந்த பால் பாயசம்), சர்க்கரைப் பொங்கல் ஆகும். இவற்றை மனதில் கொண்டு, அன்றைய பூஜைக்கு ஏற்பாடாக முன்கூட்டியே தயார் செய்து கொள்ளலாம்..பார்வதி தேவியை முதல் மூன்று நாட்களில் துர்கை வடிவினில் வழிபடுகிறோம். துர்கையை வழிபடுவதால் மனதில் உள்ள தீய சக்திகள் அகன்று, நல்ல எண்ணங்கள் உண்டாகும். அடுத்த மூன்று நாட்களில் லக்ஷ்மி தேவியை வழிபடுகிறோம். லக்ஷ்மி தேவியை வழிபடுவதால், செல்வம், கருணை, மனித நேயம் நிரம்பப் பெறலாம். அடுத்த மூன்று நாட்களில் சரஸ்வதி தேவியை வழிபடுகிறோம். இதனால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவதோடு, அனைத்துவித கலைகளிலும் தேர்ச்சி பெறலாம். பத்தாம் நாள் தசமி திதி. அன்று மூன்று சக்திகளும் ஒருங்கே இணைந்து மகிஷாசுரனை வதம் செய்த மகிஷாசுரமர்த்தினி வடிவில் விஜய சாமுண்டேஸ்வரியாக வணங்குகிறோம்..நவராத்திரியின் ஒன்பது நாட்களுமே சிறப்பு வாய்ந்தவைதான் என்றாலும் சப்தமி, அஷ்டமி, நவமி ஆகிய கடைசி மூன்று திதிகள் அன்று, விரதம் இருந்து வழிபட்டால் ஒன்பது நாட்களுமே செய்த பூஜையின் பலன் கிடைக்கும் என்று ஆன்றோர்கள் கூறுகிறார்கள். இந்நாட்களில் அஷ்ட லக்ஷ்மி ஸ்தோத்திரம், தேவி பாகவதம், மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம், லக்ஷ்மி சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம் ஆகிய ஸ்தோத்திரங்களைக் கூறுவதுடன், தேவியின் நாமங்களை நேரம் கிடைக்கும்போதெல்லாம் கூறி வருதல் மிகுந்த பலனைத் தரும். அநேக வீடுகளில், பூஜை விஷயத்தில்தான் அது சரியில்லை, இது சரியில்லை என்று கருத்து வேறுபாடு வந்து விடுகிறது. நல்ல நாட்களில் தெய்வ வழிபாட்டினை முழுமனதுடன், ஈடுபாட்டுடன் செய்வோம். தேவியின் அருள் கடாட்சத்தை அனைவரும் பெறுவோம்.
– மாலதி சந்திரசேகரன்.நவராத்திரி என்றாலே பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் உண்டான பண்டிகையாகத்தான் கொண்டாடப்படுகிறது. நாள், கிழமை என வந்து விட்டாலே, பூஜை பரபரப்பு பெண்களுக்குத் தலைக்கேறிவிடும். அதுவும் கோலம், நைவேத்தியம் இத்யாதிகளும் சேர்ந்து படாதபாடு படுத்திவிடும். சாதாரணமாக ஒரு நாள் விசேஷம் என்றாலே பெரும் கூத்தாகிவிடும். ஒன்பது நாட்கள் விசேஷம் என்றால் கேட்கவும் வேண்டுமா?.நவராத்திரி பண்டிகை நாட்களில் என்னென்ன செய்யலாம் என்பதை முன்கூட்டியே தீர்மானம் செய்து கொண்டாலே பாதி டென்ஷன் தீர்ந்துவிடும்; வேலையும் சுலபமானது போல் மனதிற்குத் தோன்றும். துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி தேவியரை முதல் நாளிலிருந்து வரிசையாக எப்படி ஆராதிக்கலாம் என்பதைக் காணலாம்!.முதலில், 1.சைலபுத்ரி, 2.பிரம்மசாரிணி, 3.சந்த்ரகண்டா, 4.கூஷ்மாண்டா, 5.ஸ்கந்தமாதா, 6.காத்யாயனி, 7.காலராத்ரி, 8.மஹாகெளரீ, 9.ஸித்திதாத்ரி என நவ தேவியரை வரிசைப்படுத்திக் கொள்ளலாம்..இனி, நவராத்திரியின் ஒன்பது நாட்களும் போட வேண்டிய கோலங்கள் குறித்துக் காண்போம். முதல் நாள் – அரிசி மாவினால் பொட்டு கோலம். இரண்டாம் நாள் – கோதுமை மாவினால் கட்டம் போட்ட கோலம். மூன்றாம் நாள் – முத்துக்களால் மலர் போன்ற கோலம். நான்காம் நாள் – அட்சதையினால் படிக்கட்டு போன்ற கோலம். ஐந்தாம் நாள் – கடலையினால் பறவையினம் போன்ற கோலம். ஆறாம் நாள் – பருப்பு கொண்டு தேவியின் நாமம் எழுதுதல். ஏழாம் நாள் – திட்டாணி, வெள்ளை மலர்களால் ஆன கோலம். எட்டாம் நாள் – காசு பத்மம் (தாமரைக் கோலம்), ஒன்பதாம் நாள் – கற்பூரம் ஆயுதம் (வாசனைப் பொடிகளைக் கலந்து கோலமிடுவது சிறப்பு),.பாட்டு மற்றும் இசைக்கருவிகளைத் இசைக்கத் தெரிந்தவர்கள் அம்பாளுக்கு ஒன்பது நாட்களும் பாட, இசைக்க வேண்டிய ராகங்களை அறிவோம்.முதல் நாள் – தோடி, இரண்டாம் நாள் – கல்யாணி, மூன்றாம் நாள் – காம்போதி, கௌளை, நான்காம் நாள் – பைரவி, ஐந்தாம் நாள் – பந்துவராளி,ஆறாம் நாள் – நீலாம்பரி, ஏழாம் நாள் – பிலஹரி, எட்டாம் நாள் – புன்னாகவராளி, ஒன்பதாம் நாள் – வஸந்தா போன்றவையாகும்..நவராத்திரியில் அம்பாளை பூக்களால் அலங்காரம் மற்றும் அர்ச்சனை செய்து பார்க்க விரும்பினால், ஒன்பது நாட்களும் எடுத்துக்கொள்ள வேண்டிய மலர்கள்: முதல் நாள் – மல்லிகை, இரண்டாம் நாள் – முல்லை, மூன்றாம் நாள் – செண்பகம், மரு, நான்காம் நாள் – ஜாதிமல்லி, ஐந்தாம் நாள் – பாரிஜாதம் அல்லது வாசனை மலர்கள், ஆறாம் நாள் – செம்பருத்தி, ஏழாம் நாள் – தாழம்பூ, பாரிஜாதம், விபூதிப்பச்சிலை, எட்டாம் நாள் – சம்பங்கி, மருதாணிப்பூ, ஒன்பதாம் நாள் – தாமரை, மரிக்கொழுந்து ஆகியவையாகும்..நவராத்திரி ஒன்பது நாளும் கொலுவைக் காண வருகை தரும் விருந்தினருக்கு வெற்றிலைப் பாக்கு, மங்கலப் பொருட்களுடன் கொடுக்க வேண்டிய பழங்கள்: முதல் நாள் – வாழைப்பழம், இரண்டாம் நாள் – மாம்பழம், மூன்றாம் நாள் – பலாப்பழம், நான்காம் நாள் – கொய்யாப்பழம், ஐந்தாம் நாள் – மாதுளை, ஆறாம் நாள் – ஆரஞ்சு, ஏழாம் நாள் – பேரிச்சம்பழம், எட்டாம் நாள் – திராட்சை, ஒன்பதாம் நாள் – நாவல் பழம் ஆகும்..நவராத்திரி ஒன்பது நாட்களும் முப்பெரும் தேவியருக்கு நிவேதனம் செய்ய வேண்டிய பிரசாதங்கள்: முதல் நாள் – சுண்டல், வெண்பொங்கல், இரண்டாம் நாள் – புளியோதரை, மூன்றாம் நாள் – சர்க்கரைப் பொங்கல், நான்காம் நாள் – கதம்பம் (காய்கறிகள் கலந்த கதம்ப சாதம்), ஐந்தாம் நாள் – தயிர்சாதம், பொங்கல், ஆறாம் நாள் – தேங்காய் சாதம், ஏழாம் நாள் – எலுமிச்சை சாதம், எட்டாம் நாள் – பாயஸன்னம் (பால் சாதம்), ஒன்பதாம் நாள் – அக்கார அடிசில் (பச்சரிசி, பால், சர்க்கரை கலந்த பால் பாயசம்), சர்க்கரைப் பொங்கல் ஆகும். இவற்றை மனதில் கொண்டு, அன்றைய பூஜைக்கு ஏற்பாடாக முன்கூட்டியே தயார் செய்து கொள்ளலாம்..பார்வதி தேவியை முதல் மூன்று நாட்களில் துர்கை வடிவினில் வழிபடுகிறோம். துர்கையை வழிபடுவதால் மனதில் உள்ள தீய சக்திகள் அகன்று, நல்ல எண்ணங்கள் உண்டாகும். அடுத்த மூன்று நாட்களில் லக்ஷ்மி தேவியை வழிபடுகிறோம். லக்ஷ்மி தேவியை வழிபடுவதால், செல்வம், கருணை, மனித நேயம் நிரம்பப் பெறலாம். அடுத்த மூன்று நாட்களில் சரஸ்வதி தேவியை வழிபடுகிறோம். இதனால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவதோடு, அனைத்துவித கலைகளிலும் தேர்ச்சி பெறலாம். பத்தாம் நாள் தசமி திதி. அன்று மூன்று சக்திகளும் ஒருங்கே இணைந்து மகிஷாசுரனை வதம் செய்த மகிஷாசுரமர்த்தினி வடிவில் விஜய சாமுண்டேஸ்வரியாக வணங்குகிறோம்..நவராத்திரியின் ஒன்பது நாட்களுமே சிறப்பு வாய்ந்தவைதான் என்றாலும் சப்தமி, அஷ்டமி, நவமி ஆகிய கடைசி மூன்று திதிகள் அன்று, விரதம் இருந்து வழிபட்டால் ஒன்பது நாட்களுமே செய்த பூஜையின் பலன் கிடைக்கும் என்று ஆன்றோர்கள் கூறுகிறார்கள். இந்நாட்களில் அஷ்ட லக்ஷ்மி ஸ்தோத்திரம், தேவி பாகவதம், மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம், லக்ஷ்மி சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம் ஆகிய ஸ்தோத்திரங்களைக் கூறுவதுடன், தேவியின் நாமங்களை நேரம் கிடைக்கும்போதெல்லாம் கூறி வருதல் மிகுந்த பலனைத் தரும். அநேக வீடுகளில், பூஜை விஷயத்தில்தான் அது சரியில்லை, இது சரியில்லை என்று கருத்து வேறுபாடு வந்து விடுகிறது. நல்ல நாட்களில் தெய்வ வழிபாட்டினை முழுமனதுடன், ஈடுபாட்டுடன் செய்வோம். தேவியின் அருள் கடாட்சத்தை அனைவரும் பெறுவோம்.