– தனுஜா ஜெயராமன்.உலகத்தில் தென்னை பயிரிடும் நாடுகள் அனைத்தும் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 2ஆம் தேதியை உலக தேங்காய் தினமாக கொண்டாடி வருகிறது. தென்னை மர உற்பத்தியில் விவசாயிகளுக்கு தென்னை மரத்தினால் கிடைக்கக்கூடிய பலன்களை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த தேங்காய் தினம் அனுசரிக்கப்படுகிறது.தேங்காயின் உலக உற்பத்தியில் 34% இந்தியாவில் பயிராகிறது..தேங்காயிலிருந்து எண்ணெய், சோப், தேங்காய் சிரட்டையால் செய்த பொருட்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வருகிறது..தேங்காயில் உயர்கொழுப்பு மற்றும் பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன. இதில் மனித உடலுக்கு தேவையான அனைத்து வகையான சத்துக்களும் உள்ளன. தேங்காயில் உள்ள கொலஸ்ட்ராலை நல்ல கொலஸ்ட்ரால் என்கிறார்கள். தேங்காய் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. அதே போன்று இளநீரிலும் பல்வேறு சத்துக்கள் உள்ளன..தேங்காயிலிருந்து பிரித்தெடுக்கப்படும் தேங்காய் எண்ணெய் பல்வேறு பயன்களை தரக்கூடியது. தேங்காய் எண்ணெயில் பல்வேறு கொழுப்பமிலங்களும் ஏராளமான மினரல்களும் உண்டு. தோலை மினுமினுப்பாக்குவதில் தேங்காய் எண்ணெயக்கு மிஞ்சியது ஏதும் உலகில் கிடையாது. சரும பராமரிப்பு மற்றும் தலைமுடி பராமரிப்பிலும் முக்கிய பங்கு வகிப்பது தேங்காய் எண்ணெய் என்றால் மிகையில்லை. தோலில் ஏற்படும் கொம்புளங்கள், கட்டிகள் , வீக்கங்கள் ஆகியவற்றிற்கு தேங்காய் எண்ணெய் மிக சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது. தீப்புண்கள் வேனல்கட்டிகள் என பலவற்றிற்கும் தேங்காய் எண்ணெயே மருந்தாக பயன்படுகிறது. தோல் சம்பந்தமான பல்வேறு நோய்களுக்கும் தேங்காய் எண்ணெய் சிறந்த பலன்களை தரவல்லது. அதே போன்று உணவுக்காகவும் தேங்காய் எண்ணெய் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெய் போன்றே தேங்காய் பாலும் பல்வேறு பயன்களை கொண்டவை எனலாம்..தேங்காய் பாலின் நன்மைகள்.தேங்காய் பாலில் ஏராளமான உயிர் சத்துக்கள் அடங்கியுள்ளன. இதில் மங்கனீஸ், செலினியம், கால்ஷியம் , பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. தேங்காய் பால் குடல்புண்ணை ஆற்றும் எலும்புகளை பலப்படுத்தும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் உடல் உறுப்புக்களை உறுதிபடுத்தும். தேங்காய் பாலை நாம் அதிகம் உணவில் சேர்ப்பதால் நமது உடலில் பல்வேறு நல்ல மாற்றங்கள் ஏற்படும்..மாதத்திற்கு ஒரு முறை உணவு ஏதும் சாப்பிடாமல் ஒரு நாள் தேங்காய் பாலை மட்டும் அருந்தினால் உடலிலுள்ள நச்சு பொருட்கள் அனைத்தும் வெளியேறி உடல் உறுப்புகள் சுத்தமாகும்..நீரிழிவு நோயாளிகள் தேங்காய் பால் சாப்பிடலாமா? தாராளமாக சாப்பிடலாம். தேங்காய் பாலில் மங்கனீசு சத்து நீரழிவு நோயாளிக்கு நன்மை பயக்கிறது..தேங்காய் பாலை தொடர்ந்து சாப்பிட்டு வர தோலின் பளபளப்பு தன்மை அதிகரித்து தோல் சுருக்கங்கள் நீங்கி இளமையான அழகிய தோற்றத்தை பெறலாம்..தேங்காய் பாலிலுள்ள கால்ஷியம் பாஸ்பரஸ் ஆகிய இரண்டு சத்துக்களுமே உடலிலுள்ள எலும்புகளை உறுதியாக்குவதோடு எலும்பு முறிவு ஏற்படுவதையும் தடுக்கிறது. மேலும் இதிலுள்ள செலினியம் சத்து கீல்வாத நோயை கட்டுப்படுத்துகிறது..காலையில் வெறும் வயிற்றில் தேங்காய் பாலை அருந்தி வர அது குடல் புண், வயிற்று புண் மற்றும் வாய்ப்புண்களை குணப்படுத்தும்.
– தனுஜா ஜெயராமன்.உலகத்தில் தென்னை பயிரிடும் நாடுகள் அனைத்தும் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 2ஆம் தேதியை உலக தேங்காய் தினமாக கொண்டாடி வருகிறது. தென்னை மர உற்பத்தியில் விவசாயிகளுக்கு தென்னை மரத்தினால் கிடைக்கக்கூடிய பலன்களை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த தேங்காய் தினம் அனுசரிக்கப்படுகிறது.தேங்காயின் உலக உற்பத்தியில் 34% இந்தியாவில் பயிராகிறது..தேங்காயிலிருந்து எண்ணெய், சோப், தேங்காய் சிரட்டையால் செய்த பொருட்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வருகிறது..தேங்காயில் உயர்கொழுப்பு மற்றும் பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன. இதில் மனித உடலுக்கு தேவையான அனைத்து வகையான சத்துக்களும் உள்ளன. தேங்காயில் உள்ள கொலஸ்ட்ராலை நல்ல கொலஸ்ட்ரால் என்கிறார்கள். தேங்காய் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. அதே போன்று இளநீரிலும் பல்வேறு சத்துக்கள் உள்ளன..தேங்காயிலிருந்து பிரித்தெடுக்கப்படும் தேங்காய் எண்ணெய் பல்வேறு பயன்களை தரக்கூடியது. தேங்காய் எண்ணெயில் பல்வேறு கொழுப்பமிலங்களும் ஏராளமான மினரல்களும் உண்டு. தோலை மினுமினுப்பாக்குவதில் தேங்காய் எண்ணெயக்கு மிஞ்சியது ஏதும் உலகில் கிடையாது. சரும பராமரிப்பு மற்றும் தலைமுடி பராமரிப்பிலும் முக்கிய பங்கு வகிப்பது தேங்காய் எண்ணெய் என்றால் மிகையில்லை. தோலில் ஏற்படும் கொம்புளங்கள், கட்டிகள் , வீக்கங்கள் ஆகியவற்றிற்கு தேங்காய் எண்ணெய் மிக சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது. தீப்புண்கள் வேனல்கட்டிகள் என பலவற்றிற்கும் தேங்காய் எண்ணெயே மருந்தாக பயன்படுகிறது. தோல் சம்பந்தமான பல்வேறு நோய்களுக்கும் தேங்காய் எண்ணெய் சிறந்த பலன்களை தரவல்லது. அதே போன்று உணவுக்காகவும் தேங்காய் எண்ணெய் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெய் போன்றே தேங்காய் பாலும் பல்வேறு பயன்களை கொண்டவை எனலாம்..தேங்காய் பாலின் நன்மைகள்.தேங்காய் பாலில் ஏராளமான உயிர் சத்துக்கள் அடங்கியுள்ளன. இதில் மங்கனீஸ், செலினியம், கால்ஷியம் , பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. தேங்காய் பால் குடல்புண்ணை ஆற்றும் எலும்புகளை பலப்படுத்தும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் உடல் உறுப்புக்களை உறுதிபடுத்தும். தேங்காய் பாலை நாம் அதிகம் உணவில் சேர்ப்பதால் நமது உடலில் பல்வேறு நல்ல மாற்றங்கள் ஏற்படும்..மாதத்திற்கு ஒரு முறை உணவு ஏதும் சாப்பிடாமல் ஒரு நாள் தேங்காய் பாலை மட்டும் அருந்தினால் உடலிலுள்ள நச்சு பொருட்கள் அனைத்தும் வெளியேறி உடல் உறுப்புகள் சுத்தமாகும்..நீரிழிவு நோயாளிகள் தேங்காய் பால் சாப்பிடலாமா? தாராளமாக சாப்பிடலாம். தேங்காய் பாலில் மங்கனீசு சத்து நீரழிவு நோயாளிக்கு நன்மை பயக்கிறது..தேங்காய் பாலை தொடர்ந்து சாப்பிட்டு வர தோலின் பளபளப்பு தன்மை அதிகரித்து தோல் சுருக்கங்கள் நீங்கி இளமையான அழகிய தோற்றத்தை பெறலாம்..தேங்காய் பாலிலுள்ள கால்ஷியம் பாஸ்பரஸ் ஆகிய இரண்டு சத்துக்களுமே உடலிலுள்ள எலும்புகளை உறுதியாக்குவதோடு எலும்பு முறிவு ஏற்படுவதையும் தடுக்கிறது. மேலும் இதிலுள்ள செலினியம் சத்து கீல்வாத நோயை கட்டுப்படுத்துகிறது..காலையில் வெறும் வயிற்றில் தேங்காய் பாலை அருந்தி வர அது குடல் புண், வயிற்று புண் மற்றும் வாய்ப்புண்களை குணப்படுத்தும்.