உலகக் குடிமகன் – 35.நா.கண்ணன்.ஏதோ திருப்பூவணம் எனும் பழைய இராமநாதபுரம் கிராமத்தில் பிறந்த நான் இவ்வாறு உலகு சுற்றுவேன் என நினைக்கவில்லை. ஐந்து கண்டங்களிலும் கால் வைத்துள்ளேன். ஆஸ்திரேலியா போயிருக்கிறேன். ஆப்பிரிக்காவில் எகிப்து போயிருக்கிறேன். ஆசியாவில் ஜப்பான், கொரியா, சீனா, ஹாங்காங், தைவான், வியட்நாம், கம்போடியா, தாய்லாந்து, பிலிபைன்ஸ், இந்தோனீசியா, மலேசியா, சிங்கப்பூர், நேபாள், இந்தியாவெனவும்; மத்திய கிழக்கில் ஓமன், அமீரகம், கத்தார், பெஃரேன் எனவும்; ஐரோப்பாவில் துருக்கி, இத்தாலி, பிரான்சு, போர்ச்சுகல், ஸ்விட்சர்லாந்து, ஆஸ்ட்ரியா, போலந்து, ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க், ஸ்வீடன், பின்லாந்து எனவும்; வட அமெரிக்காவில் கனடா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் எனவும்; தென் அமெரிக்காவில் பெரு நாட்டிற்கும் போய் வந்துள்ளேன். இந்த அனுபவமே என்னை உலகக்குடி எனச் சொல்ல வைக்கிறது. பரந்து பட்டு சுற்றும் போது எல்லோரும் சுற்றம் எனும் உணர்வே வருகிறது..மதுரையிலிருந்து கிளம்பும் போது, ஜப்பானுக்கா போகிறாய், அங்கு எல்லோரும் ஒரே மாதிரி இருப்பார்களே! எனச் சொன்னவர்கள் அதிகம். ஆனால், அங்கு போனால்தான் தெரிகிறது மற்ற எல்லா நாடுகள் போல் மக்கள் வேறுபட்டுதான் இருக்கிறார்கள். சீனாவின் இனக்குழுக்களும், வேறுபாடும் இந்தியாபோல் அதீதமானது. எல்லோரும் கொஞ்சம் வெளுப்பாக அல்லது மஞ்சள் நிறம் என்றிருந்தாலும் கோடை காலத்தில் கருத்து வடகிழக்கு இந்தியர்கள் போலோ நேபாளி, திபத்தியன் போலோ ஆகிவிடுவதுதான் உண்மை. ஆசியாவிற்கு நடுவே பப்புவா நியூகினி எனும் நாடு முழுக்க, முழுக்க கருப்பர்களைக் கொண்ட நாடு. அந்தமான், நிக்கோபர், மலேசிய, தைவானிஸ், பிலிபைன்ஸ் பழங்குடிகள் கருப்பர்கள்தான். சீனாவும், இந்தியாவும் கலக்கும்போது தென்னாசிய முகமும் நிறமும் வந்து சேர்கிறது. அதனால்தான் கம்போடியாவை இந்தோசைனா என்கிறார்கள். பழகும்போது எல்லா நாட்டினரும் இனிமையாகவே உள்ளனர். பாகிஸ்தானும் இந்தியாவும் உள்நாட்டில் பகை என்றாலும் ஜெர்மனியில் சுமுகமாகவே உள்ளனர். பேசினாலொழிய எவ்வித வேறுபாடும் தெரியாது. ஜெர்மனியில் எனது வீட்டிலேயே பாகிஸ்தான் இசைக்கலைஞர்களை அழைத்து அடிக்கடி விருந்து கொடுத்திருக்கிறேன். இந்தோ-ஜெர்மன் கழகத்தின் துணைத்தலைவராக இருந்தபோது எத்தனையோ இந்தியக் கலைஞர்களை சந்தித்துள்ளேன். அந்த அனுபவங்களையெல்லாம் நான் கோமலின் சுபமங்களாவில் எழுதியிருக்கிறேன்..இடம் பெயர்தல் எளிதல்ல. பழக்கப்பட்ட இடத்தைவிட்டு, உணவை விட்டு, பண்பாட்டை விட்டு வெளியே போவது எளிதல்ல. ஆயினும் சங்கம் தொட்டு தமிழன் கிழக்கும் மேற்கும் பயணப்பட்டுக் கொண்டே இருக்கிறான். இல்லையெனில் மகிபாலன்பட்டியில் பிறந்த கணியன் பூங்குன்றன் "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" எனச் சொல்வாரா? சிலம்பு சொல்வதுபோல் வையை எனும் நதி "பொய்யாக் குலக்குடியாக" இருந்து வந்த காலத்தில் பூங்குன்றன் பல்வேறு இன மக்களைக் கண்டு பழகியிருப்பார். இங்கும், அங்கும் போய் வரும் வியாபாரிகள் சொல்லும் அயலகக் கதைகள் கேட்டிருப்பார். எனவேதான் எல்லோரையும் கேளிர் (உறவு) எனக் கண்டிருக்கிறார்..நானும் பல நாடுகள் சென்று வந்தபின், இதே முடிவிற்கே வருகிறேன். அமெரிக்கன் கல்லூரி தமிழாசிரியர் பொன்.தினகரன் என்னை 'ஜப்பானிய இளவரசே' என்பார். அவருக்கு நான் ஜப்பானிய இளவலாகத் தோன்றியிருக்கிறேன். எலிசபெத் பானு எனும் பிரெஞ்சு மாது என்னை அடிக்கடி நீ பிரஞ்சுக்காரன் போலவே இருக்கிறாய் என்பார். என்னை ஆப்பிரிக்க லிபியன் எனச் சொன்னோர் உண்டு. கீல் நகரில் அமர்ந்து பனிக்கூழ் சாப்பிட்ட என்னைப் பார்த்து நான் பெரு நாட்டைச் சேர்ந்தவனா? எனக் கேட்கப்பட்டிருக்கிறேன். பெரு நாட்டின் ஆதிக்குடிகள் அப்படியே இந்தியர்கள் போலுள்ளது தற்செயல் அல்ல. எனது நண்பர் கணினி விற்பன்னர் முரசு நெடுமாறன் என்னை மலேய்காரன் எனச் சொன்ன அனுபவமுண்டு. ஆக, யாவரும் கேளிர் எனக் காண்பதுண்டு. நானே யாதும் ஊராய் இருப்பதும் உண்டு என உணர்ந்துள்ளேன்..சூழலியல் கற்ற பின் மானுடம் ஒன்று, உலக உயிர்கள் அனைத்தும் ஒன்று என்பதை அறிந்துள்ளேன். வரப்பு போட்டுப் பிரித்தாலும் உலகம் ஒரே அலகாய்தான் இயங்குகிறது. நாம்தான் அறியாமையால் பேதமை கொண்டு (கொன்று) வாழ்கிறோம். உலகின் ஒருங்கமைவு தெரியாமல் சூழலை மாசு செய்கிறோம். நம் தலையில் நாமே மண்ணை வாரிப் போட்டுக் கொள்கிறோம். எனது அயலக வாழ்வு தந்த அனுபவங்களை எனது நூல்களான, உதிர் இலை காலம், நிழல்வெளி மாந்தர், விலை போகும் நினைவுகள், தூரத்து மணியோசை, மலேசிய நினைவுகள், வேர் கொண்டு விண்ணெழுதல், எண் பின் எழுத்து, திக்கெட்டும் தமிழ், உலகு படைத்தல் எனும் நூல்களில் சொல்லியுள்ளேன். கொரியாவில் எட்டு வருடங்கள் வாழ்ந்த பின் கொரியாவிற்கும் தமிழுக்குமான தொடர்புகள் குறித்து, "கொரியாவில் தமிழ் ராணி" எனும் நூலொன்றும் எழுதியுள்ளேன். அந்த நூல் ஆங்கில வடிவிலும், ஹங்குல் எனும் கொரிய மொழி வடிவிலும் விரைவில் வெளிவர உள்ளது..எனது அயலக அனுபவங்களை கல்கியில் எழுத வேண்டுமெனப் பணித்த கல்கி ஆசிரியர் ரமணன் அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளேன். தனி மனிதன் என்றேதும் கிடையாது. நாம் நம் குடும்பத்தோடு, சமூகத்தோடு, உலகோடு இணைந்தே செயல்படுகிறோம். அந்த உறவைப் புரிந்து கொண்டால் எங்கும் செல்லலாம். எம்மொழியிலும் பேசலாம். எல்லோரோடும் உறவு கொள்ளலாம். ஒரு கிராமத்துப் பையனுக்கு கனவுகள் தந்தது கல்வி. உதவியது சமூகம். உலகு என்னையும் அரவணைத்துக் கொண்டது. அணைக்கும் கரத்தை வெறுக்காமல், அஞ்சாமல் ஏற்றுக்கொள்ளும் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். என் குழந்தைகள் ஜெர்மனியில் வளர்ந்த போது ஜெர்மானிய நண்பர்கள் உறவுபோல்தான் நடத்தினர். வெள்ளைக் குழந்தைகள் எங்கள் வீட்டில் வந்து தங்குவதும், என் பெண், பையன் அங்கு சென்று தங்குவதும் சகஜமாக நடந்தது. ஒரு இந்தோனீசிய மாதுதான் என் பெண்ணை ஜப்பானில் பார்த்துக் கொண்டாள். மாலை வேளைகளில் என் பெண் ஜப்பானியர் வீட்டில்தான் இருப்பாள். உலகம் ஒன்றுதான். அன்பிற்கு அடைக்கும் தாழ் என்று உலகில் எங்கும் நான் கண்டதில்லை. ஒருமுறை இத்தாலிய விருந்தொன்றில் ஒரு மாது என்னிடம் சொன்னாள், "உலகின் இதயம் இந்தியா" என்று. எத்தனை அழகிய அணுகுமுறை. நாமெல்லோரும் வாசுதேவ குடும்பம் என்றுதான் நம் பண்பாடு செப்புகிறது. இதை சமகால சூழலியல் பரிபாஷையில் சொல்வதானால் "நெக்ஸஸ் அப்ரோச்" எனலாம். அதாவது உலகும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டும், ஒன்றையொன்று சார்ந்துமே இயங்குகிறது. இதை நெக்ஸஸ் என்போம். இதுதான் அன்று தமிழன் கண்ட ஐந்திணை மரபும். "மாயோன் மேய காடுறை உலகு" எனும் போது கடவுளும் இயற்கையின் அங்கமாகவே இருப்பதைத் தமிழன் அறிந்துள்ளான். முல்லை பேசும் பதினான்கு கருப்பொருளில் கடவுளும் ஒன்று. இது எத்தகைய புரிதல்! ஆனால் திருவாய்மொழி சொல்வது போல், வணங்கும் துறைகள் பலப்பல, பிணக்குறும் சமயங்கள் பலப்பல! ஆயின் இவற்றுள் ஒற்றுமை காணும் இயல்புடையோன் இறைதரிசனம் பெற்றவன் ஆகிறான்..சமகாலத் தொழில்நுட்பம் கைப்பிடித்தொலைவில் உலகைக் காண்பித்து எல்லோரையும் உலகக் குடிமகனாக மாற்றியிருக்கிறது. நம் மனது திறக்கும் போது உலகின் கதவு திறக்கிறது. இந்தத் தொடர் இத்துடன் முடிவுறுகிறது. இத்தொடர் வளரும் இந்தியாவைக் காட்டியிருக்கிறது. தமிழகத்தில் அறிவியல் வளர்ச்சி எத்தனை சிக்கல்களுக்கிடையில் உயிர் பெற்று நிற்கிறது எனக் காட்டியுள்ளது, முனைவர் பட்டம் பெறுதல் என்பது இன்றளவும் பிரம்மப் பிரயர்த்தனமாகவே உள்ளது. எனது அனுபவம் அதைப் படம் போட்டுக் காட்டியிருக்கிறது. வாழ்வு என்பது ஓர் எதிர்நீச்சல் என்பதை என் வாழ்வு சித்தரித்திருக்கிறது. சவாலே! சமாளி! எனும் மனத்திடம் இல்லையெனில் புரியாத மொழி பேசும் நாட்டில், புரியாத கலாசாரமுள்ள நாட்டில் குப்பை கொட்ட முடியாது. இது வெறும் பயணக் கட்டுரையல்ல. அயலக வாழ்வியல். இதை ஒரு நூலாக்கி அளிக்கும்போது நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது தெளிவாக விளங்கும். அது கல்கி வெளியீடாக வந்தால் அது என் பாக்கியம். சிறுவனாக இருந்த காலத்திலிருந்து குடும்ப இதழாக வளைய வந்தது கல்கி. அதில் என் எழுத்தும் பதிந்துள்ளது என்பது எத்தனை ஆச்சர்யம். இதுகூட தற்செயல் அல்ல!.(முற்றும்)
உலகக் குடிமகன் – 35.நா.கண்ணன்.ஏதோ திருப்பூவணம் எனும் பழைய இராமநாதபுரம் கிராமத்தில் பிறந்த நான் இவ்வாறு உலகு சுற்றுவேன் என நினைக்கவில்லை. ஐந்து கண்டங்களிலும் கால் வைத்துள்ளேன். ஆஸ்திரேலியா போயிருக்கிறேன். ஆப்பிரிக்காவில் எகிப்து போயிருக்கிறேன். ஆசியாவில் ஜப்பான், கொரியா, சீனா, ஹாங்காங், தைவான், வியட்நாம், கம்போடியா, தாய்லாந்து, பிலிபைன்ஸ், இந்தோனீசியா, மலேசியா, சிங்கப்பூர், நேபாள், இந்தியாவெனவும்; மத்திய கிழக்கில் ஓமன், அமீரகம், கத்தார், பெஃரேன் எனவும்; ஐரோப்பாவில் துருக்கி, இத்தாலி, பிரான்சு, போர்ச்சுகல், ஸ்விட்சர்லாந்து, ஆஸ்ட்ரியா, போலந்து, ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க், ஸ்வீடன், பின்லாந்து எனவும்; வட அமெரிக்காவில் கனடா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் எனவும்; தென் அமெரிக்காவில் பெரு நாட்டிற்கும் போய் வந்துள்ளேன். இந்த அனுபவமே என்னை உலகக்குடி எனச் சொல்ல வைக்கிறது. பரந்து பட்டு சுற்றும் போது எல்லோரும் சுற்றம் எனும் உணர்வே வருகிறது..மதுரையிலிருந்து கிளம்பும் போது, ஜப்பானுக்கா போகிறாய், அங்கு எல்லோரும் ஒரே மாதிரி இருப்பார்களே! எனச் சொன்னவர்கள் அதிகம். ஆனால், அங்கு போனால்தான் தெரிகிறது மற்ற எல்லா நாடுகள் போல் மக்கள் வேறுபட்டுதான் இருக்கிறார்கள். சீனாவின் இனக்குழுக்களும், வேறுபாடும் இந்தியாபோல் அதீதமானது. எல்லோரும் கொஞ்சம் வெளுப்பாக அல்லது மஞ்சள் நிறம் என்றிருந்தாலும் கோடை காலத்தில் கருத்து வடகிழக்கு இந்தியர்கள் போலோ நேபாளி, திபத்தியன் போலோ ஆகிவிடுவதுதான் உண்மை. ஆசியாவிற்கு நடுவே பப்புவா நியூகினி எனும் நாடு முழுக்க, முழுக்க கருப்பர்களைக் கொண்ட நாடு. அந்தமான், நிக்கோபர், மலேசிய, தைவானிஸ், பிலிபைன்ஸ் பழங்குடிகள் கருப்பர்கள்தான். சீனாவும், இந்தியாவும் கலக்கும்போது தென்னாசிய முகமும் நிறமும் வந்து சேர்கிறது. அதனால்தான் கம்போடியாவை இந்தோசைனா என்கிறார்கள். பழகும்போது எல்லா நாட்டினரும் இனிமையாகவே உள்ளனர். பாகிஸ்தானும் இந்தியாவும் உள்நாட்டில் பகை என்றாலும் ஜெர்மனியில் சுமுகமாகவே உள்ளனர். பேசினாலொழிய எவ்வித வேறுபாடும் தெரியாது. ஜெர்மனியில் எனது வீட்டிலேயே பாகிஸ்தான் இசைக்கலைஞர்களை அழைத்து அடிக்கடி விருந்து கொடுத்திருக்கிறேன். இந்தோ-ஜெர்மன் கழகத்தின் துணைத்தலைவராக இருந்தபோது எத்தனையோ இந்தியக் கலைஞர்களை சந்தித்துள்ளேன். அந்த அனுபவங்களையெல்லாம் நான் கோமலின் சுபமங்களாவில் எழுதியிருக்கிறேன்..இடம் பெயர்தல் எளிதல்ல. பழக்கப்பட்ட இடத்தைவிட்டு, உணவை விட்டு, பண்பாட்டை விட்டு வெளியே போவது எளிதல்ல. ஆயினும் சங்கம் தொட்டு தமிழன் கிழக்கும் மேற்கும் பயணப்பட்டுக் கொண்டே இருக்கிறான். இல்லையெனில் மகிபாலன்பட்டியில் பிறந்த கணியன் பூங்குன்றன் "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" எனச் சொல்வாரா? சிலம்பு சொல்வதுபோல் வையை எனும் நதி "பொய்யாக் குலக்குடியாக" இருந்து வந்த காலத்தில் பூங்குன்றன் பல்வேறு இன மக்களைக் கண்டு பழகியிருப்பார். இங்கும், அங்கும் போய் வரும் வியாபாரிகள் சொல்லும் அயலகக் கதைகள் கேட்டிருப்பார். எனவேதான் எல்லோரையும் கேளிர் (உறவு) எனக் கண்டிருக்கிறார்..நானும் பல நாடுகள் சென்று வந்தபின், இதே முடிவிற்கே வருகிறேன். அமெரிக்கன் கல்லூரி தமிழாசிரியர் பொன்.தினகரன் என்னை 'ஜப்பானிய இளவரசே' என்பார். அவருக்கு நான் ஜப்பானிய இளவலாகத் தோன்றியிருக்கிறேன். எலிசபெத் பானு எனும் பிரெஞ்சு மாது என்னை அடிக்கடி நீ பிரஞ்சுக்காரன் போலவே இருக்கிறாய் என்பார். என்னை ஆப்பிரிக்க லிபியன் எனச் சொன்னோர் உண்டு. கீல் நகரில் அமர்ந்து பனிக்கூழ் சாப்பிட்ட என்னைப் பார்த்து நான் பெரு நாட்டைச் சேர்ந்தவனா? எனக் கேட்கப்பட்டிருக்கிறேன். பெரு நாட்டின் ஆதிக்குடிகள் அப்படியே இந்தியர்கள் போலுள்ளது தற்செயல் அல்ல. எனது நண்பர் கணினி விற்பன்னர் முரசு நெடுமாறன் என்னை மலேய்காரன் எனச் சொன்ன அனுபவமுண்டு. ஆக, யாவரும் கேளிர் எனக் காண்பதுண்டு. நானே யாதும் ஊராய் இருப்பதும் உண்டு என உணர்ந்துள்ளேன்..சூழலியல் கற்ற பின் மானுடம் ஒன்று, உலக உயிர்கள் அனைத்தும் ஒன்று என்பதை அறிந்துள்ளேன். வரப்பு போட்டுப் பிரித்தாலும் உலகம் ஒரே அலகாய்தான் இயங்குகிறது. நாம்தான் அறியாமையால் பேதமை கொண்டு (கொன்று) வாழ்கிறோம். உலகின் ஒருங்கமைவு தெரியாமல் சூழலை மாசு செய்கிறோம். நம் தலையில் நாமே மண்ணை வாரிப் போட்டுக் கொள்கிறோம். எனது அயலக வாழ்வு தந்த அனுபவங்களை எனது நூல்களான, உதிர் இலை காலம், நிழல்வெளி மாந்தர், விலை போகும் நினைவுகள், தூரத்து மணியோசை, மலேசிய நினைவுகள், வேர் கொண்டு விண்ணெழுதல், எண் பின் எழுத்து, திக்கெட்டும் தமிழ், உலகு படைத்தல் எனும் நூல்களில் சொல்லியுள்ளேன். கொரியாவில் எட்டு வருடங்கள் வாழ்ந்த பின் கொரியாவிற்கும் தமிழுக்குமான தொடர்புகள் குறித்து, "கொரியாவில் தமிழ் ராணி" எனும் நூலொன்றும் எழுதியுள்ளேன். அந்த நூல் ஆங்கில வடிவிலும், ஹங்குல் எனும் கொரிய மொழி வடிவிலும் விரைவில் வெளிவர உள்ளது..எனது அயலக அனுபவங்களை கல்கியில் எழுத வேண்டுமெனப் பணித்த கல்கி ஆசிரியர் ரமணன் அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளேன். தனி மனிதன் என்றேதும் கிடையாது. நாம் நம் குடும்பத்தோடு, சமூகத்தோடு, உலகோடு இணைந்தே செயல்படுகிறோம். அந்த உறவைப் புரிந்து கொண்டால் எங்கும் செல்லலாம். எம்மொழியிலும் பேசலாம். எல்லோரோடும் உறவு கொள்ளலாம். ஒரு கிராமத்துப் பையனுக்கு கனவுகள் தந்தது கல்வி. உதவியது சமூகம். உலகு என்னையும் அரவணைத்துக் கொண்டது. அணைக்கும் கரத்தை வெறுக்காமல், அஞ்சாமல் ஏற்றுக்கொள்ளும் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். என் குழந்தைகள் ஜெர்மனியில் வளர்ந்த போது ஜெர்மானிய நண்பர்கள் உறவுபோல்தான் நடத்தினர். வெள்ளைக் குழந்தைகள் எங்கள் வீட்டில் வந்து தங்குவதும், என் பெண், பையன் அங்கு சென்று தங்குவதும் சகஜமாக நடந்தது. ஒரு இந்தோனீசிய மாதுதான் என் பெண்ணை ஜப்பானில் பார்த்துக் கொண்டாள். மாலை வேளைகளில் என் பெண் ஜப்பானியர் வீட்டில்தான் இருப்பாள். உலகம் ஒன்றுதான். அன்பிற்கு அடைக்கும் தாழ் என்று உலகில் எங்கும் நான் கண்டதில்லை. ஒருமுறை இத்தாலிய விருந்தொன்றில் ஒரு மாது என்னிடம் சொன்னாள், "உலகின் இதயம் இந்தியா" என்று. எத்தனை அழகிய அணுகுமுறை. நாமெல்லோரும் வாசுதேவ குடும்பம் என்றுதான் நம் பண்பாடு செப்புகிறது. இதை சமகால சூழலியல் பரிபாஷையில் சொல்வதானால் "நெக்ஸஸ் அப்ரோச்" எனலாம். அதாவது உலகும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டும், ஒன்றையொன்று சார்ந்துமே இயங்குகிறது. இதை நெக்ஸஸ் என்போம். இதுதான் அன்று தமிழன் கண்ட ஐந்திணை மரபும். "மாயோன் மேய காடுறை உலகு" எனும் போது கடவுளும் இயற்கையின் அங்கமாகவே இருப்பதைத் தமிழன் அறிந்துள்ளான். முல்லை பேசும் பதினான்கு கருப்பொருளில் கடவுளும் ஒன்று. இது எத்தகைய புரிதல்! ஆனால் திருவாய்மொழி சொல்வது போல், வணங்கும் துறைகள் பலப்பல, பிணக்குறும் சமயங்கள் பலப்பல! ஆயின் இவற்றுள் ஒற்றுமை காணும் இயல்புடையோன் இறைதரிசனம் பெற்றவன் ஆகிறான்..சமகாலத் தொழில்நுட்பம் கைப்பிடித்தொலைவில் உலகைக் காண்பித்து எல்லோரையும் உலகக் குடிமகனாக மாற்றியிருக்கிறது. நம் மனது திறக்கும் போது உலகின் கதவு திறக்கிறது. இந்தத் தொடர் இத்துடன் முடிவுறுகிறது. இத்தொடர் வளரும் இந்தியாவைக் காட்டியிருக்கிறது. தமிழகத்தில் அறிவியல் வளர்ச்சி எத்தனை சிக்கல்களுக்கிடையில் உயிர் பெற்று நிற்கிறது எனக் காட்டியுள்ளது, முனைவர் பட்டம் பெறுதல் என்பது இன்றளவும் பிரம்மப் பிரயர்த்தனமாகவே உள்ளது. எனது அனுபவம் அதைப் படம் போட்டுக் காட்டியிருக்கிறது. வாழ்வு என்பது ஓர் எதிர்நீச்சல் என்பதை என் வாழ்வு சித்தரித்திருக்கிறது. சவாலே! சமாளி! எனும் மனத்திடம் இல்லையெனில் புரியாத மொழி பேசும் நாட்டில், புரியாத கலாசாரமுள்ள நாட்டில் குப்பை கொட்ட முடியாது. இது வெறும் பயணக் கட்டுரையல்ல. அயலக வாழ்வியல். இதை ஒரு நூலாக்கி அளிக்கும்போது நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது தெளிவாக விளங்கும். அது கல்கி வெளியீடாக வந்தால் அது என் பாக்கியம். சிறுவனாக இருந்த காலத்திலிருந்து குடும்ப இதழாக வளைய வந்தது கல்கி. அதில் என் எழுத்தும் பதிந்துள்ளது என்பது எத்தனை ஆச்சர்யம். இதுகூட தற்செயல் அல்ல!.(முற்றும்)