– வினோத்.முத்தையா இயக்கி உள்ள 'விருமன்' படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அவரது நடிப்பு மற்றும் நடனத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் முதல் படம் திரைக்கு வருவதற்கு முன்பே சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன்' படத்திலும் கமிட்டாகி விட்டார். இதையடுத்து இயக்குனர் ஷங்கரின் மகள் என்பதால்தான் அதிதி ஷங்கருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்து வருவதாக சோசியல் மீடியாவில் எழுதித்தள்ளுகிறார்கள்..இது குறித்து அதிதி ஷங்கர்… "முத்தையா இயக்கத்தில் நான் நடித்துள்ள 'விருமன்' பட வாய்ப்பு எனது அப்பாவினால்தான் கிடைத்தது. ஆனால், அதன்பிறகு விருமன் படத்தில் எனது நடிப்பு குறித்து சினிமா வட்டாரங்களில் செய்திகள் வெளியான பிறகுதான் 'மாவீரன்' படத்திற்கு என்னை ஒப்பந்தம் செய்தார்கள். முக்கியமாக எனக்கான சினிமா கதவுகள் எனது தந்தையால் திறந்து விடப்பட்டு இருக்கலாம். ஆனால், என்னிடம் திறமை இருந்தால் மட்டுமே சினிமாவில் ஜெயிக்க முடியும். "வாரிசு நடிகை" என்ற ஒன்றை மட்டுமே வைத்து சினிமாவில் யாருமே வெற்றி பெற முடியாது.".இவரது சினிமா வருகை பற்றி பாரதி ராஜா சொன்னது… "ஷங்கரின் மகள் எம்.பி.பி.எஸ். படித்த ஒரு டாக்டர். அவர் சினிமாவில் நடிக்க சங்கர் சம்மதிப்பார் என நான் எதிர்பார்க்கவில்லை.. செய்தி தெரிந்து ஆச்சரியப்பட்டேன். "ஹோம்லியான முகம், சிறப்பாக நடனம் ஆடுகிறார். அவருக்கு மிகப்பிரமாதமான எதிர்காலம் காத்திருக்கிறது. "அதிதி நீ தமிழ் நாட்டின் ஏஞ்சலாக வருவாய்" என்றார்.
– வினோத்.முத்தையா இயக்கி உள்ள 'விருமன்' படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அவரது நடிப்பு மற்றும் நடனத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் முதல் படம் திரைக்கு வருவதற்கு முன்பே சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன்' படத்திலும் கமிட்டாகி விட்டார். இதையடுத்து இயக்குனர் ஷங்கரின் மகள் என்பதால்தான் அதிதி ஷங்கருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்து வருவதாக சோசியல் மீடியாவில் எழுதித்தள்ளுகிறார்கள்..இது குறித்து அதிதி ஷங்கர்… "முத்தையா இயக்கத்தில் நான் நடித்துள்ள 'விருமன்' பட வாய்ப்பு எனது அப்பாவினால்தான் கிடைத்தது. ஆனால், அதன்பிறகு விருமன் படத்தில் எனது நடிப்பு குறித்து சினிமா வட்டாரங்களில் செய்திகள் வெளியான பிறகுதான் 'மாவீரன்' படத்திற்கு என்னை ஒப்பந்தம் செய்தார்கள். முக்கியமாக எனக்கான சினிமா கதவுகள் எனது தந்தையால் திறந்து விடப்பட்டு இருக்கலாம். ஆனால், என்னிடம் திறமை இருந்தால் மட்டுமே சினிமாவில் ஜெயிக்க முடியும். "வாரிசு நடிகை" என்ற ஒன்றை மட்டுமே வைத்து சினிமாவில் யாருமே வெற்றி பெற முடியாது.".இவரது சினிமா வருகை பற்றி பாரதி ராஜா சொன்னது… "ஷங்கரின் மகள் எம்.பி.பி.எஸ். படித்த ஒரு டாக்டர். அவர் சினிமாவில் நடிக்க சங்கர் சம்மதிப்பார் என நான் எதிர்பார்க்கவில்லை.. செய்தி தெரிந்து ஆச்சரியப்பட்டேன். "ஹோம்லியான முகம், சிறப்பாக நடனம் ஆடுகிறார். அவருக்கு மிகப்பிரமாதமான எதிர்காலம் காத்திருக்கிறது. "அதிதி நீ தமிழ் நாட்டின் ஏஞ்சலாக வருவாய்" என்றார்.