வித்யா சுப்ரமணியம்.அவள் கோபப்பட்டதும், சிறிய மௌனத்திற்குப்பின் அக்கா பேசினாள்.."நீ கவலைப்படும் அளவுக்கெல்லாம் ஒன்றுமில்லை மைதிலி."."அப்புறம் எதுக்கு எங்கிட்ட மறைக்கறீங்க?"."சரி சொல்றேன். அப்பாக்கு தெரிந்த ஒருவர் அவசரமா பணம் கடனா வேணும்னு கேக்கறாராம். அவர் கேட்கும் தொகையோ அதிகம். இல்லன்னு சொல்லவும் முடியல. கொடுப்பதும் கஷ்டம் என்கிற நிலையில் அப்பாவுக்கு ஒரு டென்ஷன். அதான். வேற ஒண்ணுமில்லை."."முடியாதுன்னா முடியாதுன்னு சொல்ல வேண்டியதுதானே? எதுக்கு தயவு தாட்சண்யம்?"."அப்பாவைப் பத்தி உனக்குத் தெரியாதா? அவர் யாரையும் மணம் நோக பேசறவர் கிடையாது."."அதுக்காக? நம்மால முடியாத விஷயத்தை செய்ய முடியுமா?"."அதெல்லாம் அப்பா சமாளிச்சுக்குவார். நீ மேற்கொண்டு இதைப்பத்தி அவர்கிட்ட கேட்கக்கூடாது சரியா? அப்பறம் ஏன் சொன்னன்னு எனக்குதான் திட்டு விழும்."."நா ஏன் கேட்கப்போறேன்?" மைதிலி போனை வைத்தாள்.."ஒருமாதம் கழித்து நல்லநாள் பார்த்து அவளைப் புகுந்த வீட்டில் கொண்டு வந்து விட்டார்கள். அந்த ஒருமாதத்தில் ஒருநாள் கூட அவளைப் பார்க்க வரவில்லை ஆனந்தன். ஒரு போன்கூட செய்து பேசவில்லை. இவள் போன் செய்த போதும், "நான் பிஸியா இருக்கேன்னு உனக்குத் தெரியாதா" என்று எரிந்து விழுந்தான்..அவளைக் கொண்டுவிட்ட அன்றுகூட ஆனந்தன் வீட்டில் இல்லை. அண்ணிகள்தான் அப்பா – அம்மாவை அன்போடு உபசரித்தார்கள். அவர்களுக்காக விருந்து தயாரித்திருந்தார்கள்.."ஐந்தாம் மாசம் வளைகாப்பு நடத்திடலாமா?" அப்பா அவள் மாமனாரிடம் கேட்டார்.."தாராளமா"."நல்ல நாள் குறிச்சுட்டு மண்டபம் புக் பண்ணிடறேன்"."எதுக்கு மண்டபம் எல்லாம்? இங்க நம்ம வீடே வசதியாதானே இருக்கு. இங்கயே வெச்சுக்குவோம்."."அதுக்கில்ல… இது நாங்க செய்ய வேண்டிய விசேஷம்."."அட.. நீங்க வேற! இன்னும் உங்க செலவு எங்க செலவுன்னு சொல்லிக்கிட்டு! ஒண்ணுக்குள்ள ஒண்ணாயிட்டோம். யார் செய்தா என்ன? நீங்க நாள் மட்டும் பாருங்க. இங்கேயே கிராண்டா நடத்திடுவோம்.".அப்பா மறுக்கவில்லை. சம்பந்தியின் பெருந்தன்மையில் நெகிழ்ந்து போனார்..அடுத்த வாரமே நல்ல நாள் பார்த்து சொன்னார்..புகுந்த வீட்டினர் எல்லா ஏற்பாடும் செய்தார்கள். மல்லிகை பூச்சரம், ரோஜாப்பூ மாலைகளுக்கு சொல்லி, விருந்து சமைப்பவர்களை ஏற்பாடு செய்து, மளிகை சாமான்களுக்கு சொல்லி, என்று அண்ணிகளும், ஆனந்தனின் சகோதரர்களும் ஆளுக்கொரு பொறுப்பை ஏற்க, அண்ணிகள் அவளை அழைத்துக்கொண்டு சென்று அழகான விலை உயர்ந்த பட்டுப்புடவை வாங்கினார்கள். ஆனந்தன் எதிலும் பட்டுக்கொள்ளவில்லை. அவனது பங்காக செலவுக்கு ஒற்றை ரூபாய் கூட கொடுக்கவில்லை. இது அவனது குழந்தையின் பொருட்டு நடக்கும் விசேஷம் என்கிற உணர்வுகூட இன்றி ஓடிக்கொண்டிருந்தான்..?ஏம்பா ஆனந்த், உன் மனைவிக்கு இன்னும் நாலு நாட்களில் வளைகாப்பு. அதற்காவது வீட்டில் இருப்பாயா எப்டி?" மாமனார் அவனிடம் கேட்டுவிட்டார்.."எவ்ளோ நேரம் நடக்கும்? ஏன்னா படத்தை முடிக்கற சமயம். எனக்கு நிற்க நேரமில்லை"."அப்போ நாங்க மட்டும் வேலை வெட்டியில்லாம சும்மாவா இருக்கோம்?".பெரியண்ணன் கேட்டதும், "நா அப்டி சொல்லலையே. நீங்கதான் பார்த்துக்கிட்டு இருக்கீங்கல்ல? சினிமா எடுக்கற கஷ்டம் தெரியாதா உங்களுக்கு?"."வருஷத்துக்கு நாலஞ்சு படம் எடுத்து ரிலீஸ் பண்ணின எங்கப்பாவே வீட்டுல நடக்கற விசேஷங்களை ஒருபோதும் விட்டுக் கொடுத்ததில்லை. இது உன்னோட விசேஷம் சொல்லிட்டேன்."."சரிப்பா வளைகாப்பு முடியும்வரை நான் இருக்கேன் போதுமா?".அதேபோல வளைகாப்பன்று வீட்டில் இருந்தான். எல்லோரிடமும் சகஜமாகப் பேசினான். வந்தவர்களை வரவேற்றான். வளைகாப்பு கனஜோராக நடந்தது. சம்பந்தி வீட்டினரின் பெருந்தன்மையான குணத்திற்காகவே அப்பா மிகவும் சந்தோஷத்தோடு பெட்டி பெட்டியாக கண்ணாடி வளையல்களும் இதர சீர் வரிசைகளும் குறைவின்றி செய்தார். ஆறு சவரனில் காத்திரமாக அவளுக்கு ஒரு ஜோடி அழகான தங்க வளையலும் வாங்கியிருந்தார். அக்காக்கள் ஆசை ஆசையாக தங்கள் வகையாகவும் ஏதேதோ வாங்கி வந்திருந்தனர். எல்லோர் முகத்திலும் பூரிப்பு. கடவுளே.. என்னைச்சுற்றி எல்லோரும் எத்தனை நல்லவர்கள்! மைதிலி மனம் நெகிழ்ந்து உருகினாள்..வளைகாப்பு முடிந்த சிறிது நேரத்திலேயே, "நா போய்ட்டு வந்து சாப்பிட்டுக்கறேன்" என்று கிளம்பிச் சென்றுவிட்டான் ஆனந்த்..அதோடு நள்ளிரவுதான் திரும்பினான். நன்கு குடித்திருந்தான்..••• ••• •••.ஏப்ரல் 1985.பிரசவ வலியெடுத்ததும் அப்பா அவளை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு சம்பந்தி வீட்டிற்கு போன் செய்து விஷயத்தைச் சொன்னதுமே அண்ணிகள் ஓடிவந்துவிட்டார்கள்..ரோஜா நிறத்தில் பஞ்சுப்பொதியாக மாயா குட்டி பிறந்தாள். பிறந்த குழந்தையப் பார்க்க வரவும் நேரமில்லை ஆனந்தனுக்கு. "சில சந்தோஷங்கள் திரும்பக் கிடைக்காது" என்று ஏனோ அவனுக்குப் புரியவில்லை. 'போஸ்ட் புரொடக்க்ஷன் வேலைகள்' என்று ஒருவாரம் கழித்துதான் வந்து குழந்தையைப் பார்த்தான்..மாயாக்குட்டி பிறந்த இரண்டாவது மாதம் ஆனந்தனின் படம் தியேட்டர்களில் ரிலீஸாயிற்று. அதற்கு சில தினங்கள் முன்பு வீட்டினர் எல்லோரும் பிரிவியூ தியேட்டரில் படம் பார்க்க ஏற்பாடு செய்தான். மைதிலியையும் அவளது பிறந்த வீட்டிலிருந்து அழைத்துச்சென்றான். அம்மாவிடம் குழந்தையை விட்டுவிட்டு மைதிலி அவனோடு சென்றாள்.."அப்பா அம்மாவையும் கூப்பிட்டிருக்கலாமே."."நாளை மறுநாள் உங்க குடும்பம் முழுக்க படம் பார்க்க ஏற்பாடு செய்யறேன். இப்போ அவங்களைக் கூப்பிட்டா குழந்தையை யார் பார்த்துக்கொள்வது?".அவள் பதில் பேசவில்லை..படம் வீட்டினர் எல்லோருக்கும் பிடித்திருந்தது. பிரிவியூ காட்சிக்கு வந்திருந்த பல்வேறு பிரபலங்களும் ஆனந்தனின் கரம் குலுக்கி பாராட்டிச்சென்றனர்..தியேட்டர்களிலிருந்து நல்ல தகவல்கள் வந்தன..நாலா பக்கமிருந்தும் நல்ல வரவேற்பு. "மினிமம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட தரமான படம்" என்று பத்திரிகைகளில் நல்ல விமர்சனம் எழுதி பாராட்டினர். ஆனந்த் நல்ல தயாரிப்பாளரோடு நல்ல இயக்குனராகவும் அவதரித்திருப்பதாகவும், பலரும் கொம்பு சீவி விட ஆனந்தனைக் கையிலேயே பிடிக்க முடியவில்லை. அவனது போன் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது..மூன்றாம் மாதம் குழந்தைக்கு தங்கத்தில் செயின், வளையல், அரைஞாண் எல்லாம் போட்டு இனிப்புகள் செய்து எடுத்துக்கொண்டு அவளையும், குழந்தையையும் சீர் வரிசைகளோடு புகுந்த வீட்டில் கொண்டு வந்து விட்டார்கள் அப்பாவும் அம்மாவும்..அதன் பிறகு ஒருநாள் குடும்பத்தினர் அனைவரையும் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் விருந்துக்கு அழைத்துச் சென்றான். மாயாக்குட்டியை கையில் வைத்துக்கொண்டு ஆசைதீரக் கொஞ்சினான். "என பெண் பிறந்த நேரம் நான் ஜெயிச்சுட்டேன்" என்று மகிழ்ந்தான். ரொம்பநாள் கழித்து சந்தோஷமாக உணவை ரசித்து உண்டான்..வீட்டிற்கு திரும்பி வருகையில் அவனிடம் அவன் அப்பா கேட்டார்.."இந்த படத்திற்காக மொத்தமா வாங்கிய கடன் எவ்ளோ ஆனந்த்?"."நீங்க கொடுத்தது போக சிறுகச் சிறுக வாங்கினது பத்துகோடிவரை இருக்கும்."."படம் நல்லா வந்திருக்கு. சந்தோஷம். படத்தில் வேலை செய்தவர்கள் எல்லோருக்கும் ஊதியம் செட்டில் செய்து விட்டாயா?"."எல்லார்க்கும் பைசா பாக்கியில்லாம கொடுத்துட்டேன்பா"."முதல் வார வசூலிலேயே நீ போட்ட பணம் வந்திருக்கும். இனி வருவதெல்லாம் லாபம்தானே? உன்னுடைய கடன்களை முதலில் அடைத்துவிடு. இல்லன்னா வட்டி ஆளை முழுங்கிடும். சரியா?"."சரிப்பா."."முதன்முறை வெற்றியை ருசி காண்பவன் அந்த ருசிக்கு அடிமையாய்டுவான். இன்னும் பல வெற்றிகளுக்கு ஆசைப்படுவான். அதில் தவறில்லை. ஆனால், எப்பவும் அகலக்கால் வைக்காதே. உன் சக்திக்கேற்ப செலவுகளைச் செய்ய பழக்கிக்கொள். உன் தாத்தாவின் வெற்றிக்கு இதுவே காரணம். அதேநேரம் வெற்றியும் சரி, தோல்வியும் சரி நிரந்தரமில்லை. தொடர்ந்து வெற்றிகளைக் கண்டவர்தான் எங்கப்பா. ஆனாலும் கால மாற்றங்கள், ரசனை மாற்றங்கள், முதுமை எல்லாமா சேர்ந்து அவரையும் இந்தத் துறையிலிருந்து விலகி ஓய்வுபெற வைத்தது. கடைசியாக அவர் எடுத்த இரண்டு படங்களும் தோல்வியடைந்ததுமே, ''இனி படம் எடுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார். இதுவரை சம்பாதித்த புகழ், பணம், சொத்துக்கள் இவற்றைக் காப்பாற்றிக் கொள்வதே புத்திசாலித்தனம்" என எண்ணினார். அப்படியொரு முடிவை எடுத்ததால்தான் இன்று நாம நன்றாக இருக்கிறோம். இதையெல்லாம் எதுக்கு சொல்றேன்னா இனி நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் மிகவும் ஜாக்கிரதையாக எடுத்து வைக்க வேண்டும் என்பதற்காகத்தான். உன் செயல்களால் உன் குடும்பம் ஒருபோதும் பாதிக்கப்படக் கூடாது. புரிந்ததா?".ஆனந்த் அனிச்சையாகத் தலையசைத்தான். "சந்தோஷமான ஒரு மனநிலையில் இருக்கும்போது எதற்கு இத்தனை நீண்டதொரு அறிவுரை" என்ற சலிப்பேற்பட்டது. "கடன்களை அடைத்துவிடு" என்று சொன்னது அவர் கொடுத்த பணத்திற்கும் சேர்த்துதானா? அதற்குத்தான் இத்தனை பெரிய உபதேசமா? அவன் தன் கோபத்தை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டான்.."எரிகிற தீயில் எண்ணெய் விடுவதுபோல் இரவு படுக்கையில் அதே விஷயத்தை அவனிடம் பேசினாள் மைதிலி."."மாமா சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மை. வாங்கின கடன்களை முதலில் அடைச்சுட்டாலே பாதி நிம்மதி ஆகிடுவோம். நானும் படித்தவள்தான். நா வேணா உங்க கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொள்ளட்டுமா?"."நான் உங்கிட்ட ஏதாவது அட்வைஸ் கேட்டேனா? மனைவியா லட்சணமா வீட்டையும் குழந்தையையும் நீ ஒழுங்கா பாத்துக்கிட்டாலே போதும். கணக்கு வழக்கைப்பற்றி நீ ஒண்ணும் கவலைப்பட வேணாம் சரியா?"."அதுக்கில்ல.. எனக்கும் பொழுது போகுமேன்னுதான்"."பொழுது போவலன்னா அண்ணிங்க கூட உக்காந்து தாயக்கட்டம் விளையாடு. இனிமே கணக்கு வழக்குன்னு ஆரம்பிச்ச.. கெட்ட கோபம் வரும். யார் இப்டியெல்லாம் உங்கிட்ட தூண்டி விடறது? உங்கப்பாவா?"."அப்பாவை ஏன் இதுல இழுக்கறீங்க?"."இழுக்காம பின்ன? அவருக்கு பயம்.."."என்ன பயம்?"."அ……அதெல்லாம் ஒண்ணுமில்ல. ஏதோ பயம். யாருக்கு தெரியும்? எனக்கு தூக்கம் வருது." அவன் திரும்பிப் படுத்தான்..மைதிலி அவனையே வெறித்துப் பார்த்தாள். "உன் அப்பாவுக்கு பயம்" என்று ஏன் சொன்னான்? அது வாய் தவறி வந்த வார்த்தையாகத் தெரியவில்லையே..அவள் புரண்டு புரண்டு படுத்தாள்..(தொடரும்)
வித்யா சுப்ரமணியம்.அவள் கோபப்பட்டதும், சிறிய மௌனத்திற்குப்பின் அக்கா பேசினாள்.."நீ கவலைப்படும் அளவுக்கெல்லாம் ஒன்றுமில்லை மைதிலி."."அப்புறம் எதுக்கு எங்கிட்ட மறைக்கறீங்க?"."சரி சொல்றேன். அப்பாக்கு தெரிந்த ஒருவர் அவசரமா பணம் கடனா வேணும்னு கேக்கறாராம். அவர் கேட்கும் தொகையோ அதிகம். இல்லன்னு சொல்லவும் முடியல. கொடுப்பதும் கஷ்டம் என்கிற நிலையில் அப்பாவுக்கு ஒரு டென்ஷன். அதான். வேற ஒண்ணுமில்லை."."முடியாதுன்னா முடியாதுன்னு சொல்ல வேண்டியதுதானே? எதுக்கு தயவு தாட்சண்யம்?"."அப்பாவைப் பத்தி உனக்குத் தெரியாதா? அவர் யாரையும் மணம் நோக பேசறவர் கிடையாது."."அதுக்காக? நம்மால முடியாத விஷயத்தை செய்ய முடியுமா?"."அதெல்லாம் அப்பா சமாளிச்சுக்குவார். நீ மேற்கொண்டு இதைப்பத்தி அவர்கிட்ட கேட்கக்கூடாது சரியா? அப்பறம் ஏன் சொன்னன்னு எனக்குதான் திட்டு விழும்."."நா ஏன் கேட்கப்போறேன்?" மைதிலி போனை வைத்தாள்.."ஒருமாதம் கழித்து நல்லநாள் பார்த்து அவளைப் புகுந்த வீட்டில் கொண்டு வந்து விட்டார்கள். அந்த ஒருமாதத்தில் ஒருநாள் கூட அவளைப் பார்க்க வரவில்லை ஆனந்தன். ஒரு போன்கூட செய்து பேசவில்லை. இவள் போன் செய்த போதும், "நான் பிஸியா இருக்கேன்னு உனக்குத் தெரியாதா" என்று எரிந்து விழுந்தான்..அவளைக் கொண்டுவிட்ட அன்றுகூட ஆனந்தன் வீட்டில் இல்லை. அண்ணிகள்தான் அப்பா – அம்மாவை அன்போடு உபசரித்தார்கள். அவர்களுக்காக விருந்து தயாரித்திருந்தார்கள்.."ஐந்தாம் மாசம் வளைகாப்பு நடத்திடலாமா?" அப்பா அவள் மாமனாரிடம் கேட்டார்.."தாராளமா"."நல்ல நாள் குறிச்சுட்டு மண்டபம் புக் பண்ணிடறேன்"."எதுக்கு மண்டபம் எல்லாம்? இங்க நம்ம வீடே வசதியாதானே இருக்கு. இங்கயே வெச்சுக்குவோம்."."அதுக்கில்ல… இது நாங்க செய்ய வேண்டிய விசேஷம்."."அட.. நீங்க வேற! இன்னும் உங்க செலவு எங்க செலவுன்னு சொல்லிக்கிட்டு! ஒண்ணுக்குள்ள ஒண்ணாயிட்டோம். யார் செய்தா என்ன? நீங்க நாள் மட்டும் பாருங்க. இங்கேயே கிராண்டா நடத்திடுவோம்.".அப்பா மறுக்கவில்லை. சம்பந்தியின் பெருந்தன்மையில் நெகிழ்ந்து போனார்..அடுத்த வாரமே நல்ல நாள் பார்த்து சொன்னார்..புகுந்த வீட்டினர் எல்லா ஏற்பாடும் செய்தார்கள். மல்லிகை பூச்சரம், ரோஜாப்பூ மாலைகளுக்கு சொல்லி, விருந்து சமைப்பவர்களை ஏற்பாடு செய்து, மளிகை சாமான்களுக்கு சொல்லி, என்று அண்ணிகளும், ஆனந்தனின் சகோதரர்களும் ஆளுக்கொரு பொறுப்பை ஏற்க, அண்ணிகள் அவளை அழைத்துக்கொண்டு சென்று அழகான விலை உயர்ந்த பட்டுப்புடவை வாங்கினார்கள். ஆனந்தன் எதிலும் பட்டுக்கொள்ளவில்லை. அவனது பங்காக செலவுக்கு ஒற்றை ரூபாய் கூட கொடுக்கவில்லை. இது அவனது குழந்தையின் பொருட்டு நடக்கும் விசேஷம் என்கிற உணர்வுகூட இன்றி ஓடிக்கொண்டிருந்தான்..?ஏம்பா ஆனந்த், உன் மனைவிக்கு இன்னும் நாலு நாட்களில் வளைகாப்பு. அதற்காவது வீட்டில் இருப்பாயா எப்டி?" மாமனார் அவனிடம் கேட்டுவிட்டார்.."எவ்ளோ நேரம் நடக்கும்? ஏன்னா படத்தை முடிக்கற சமயம். எனக்கு நிற்க நேரமில்லை"."அப்போ நாங்க மட்டும் வேலை வெட்டியில்லாம சும்மாவா இருக்கோம்?".பெரியண்ணன் கேட்டதும், "நா அப்டி சொல்லலையே. நீங்கதான் பார்த்துக்கிட்டு இருக்கீங்கல்ல? சினிமா எடுக்கற கஷ்டம் தெரியாதா உங்களுக்கு?"."வருஷத்துக்கு நாலஞ்சு படம் எடுத்து ரிலீஸ் பண்ணின எங்கப்பாவே வீட்டுல நடக்கற விசேஷங்களை ஒருபோதும் விட்டுக் கொடுத்ததில்லை. இது உன்னோட விசேஷம் சொல்லிட்டேன்."."சரிப்பா வளைகாப்பு முடியும்வரை நான் இருக்கேன் போதுமா?".அதேபோல வளைகாப்பன்று வீட்டில் இருந்தான். எல்லோரிடமும் சகஜமாகப் பேசினான். வந்தவர்களை வரவேற்றான். வளைகாப்பு கனஜோராக நடந்தது. சம்பந்தி வீட்டினரின் பெருந்தன்மையான குணத்திற்காகவே அப்பா மிகவும் சந்தோஷத்தோடு பெட்டி பெட்டியாக கண்ணாடி வளையல்களும் இதர சீர் வரிசைகளும் குறைவின்றி செய்தார். ஆறு சவரனில் காத்திரமாக அவளுக்கு ஒரு ஜோடி அழகான தங்க வளையலும் வாங்கியிருந்தார். அக்காக்கள் ஆசை ஆசையாக தங்கள் வகையாகவும் ஏதேதோ வாங்கி வந்திருந்தனர். எல்லோர் முகத்திலும் பூரிப்பு. கடவுளே.. என்னைச்சுற்றி எல்லோரும் எத்தனை நல்லவர்கள்! மைதிலி மனம் நெகிழ்ந்து உருகினாள்..வளைகாப்பு முடிந்த சிறிது நேரத்திலேயே, "நா போய்ட்டு வந்து சாப்பிட்டுக்கறேன்" என்று கிளம்பிச் சென்றுவிட்டான் ஆனந்த்..அதோடு நள்ளிரவுதான் திரும்பினான். நன்கு குடித்திருந்தான்..••• ••• •••.ஏப்ரல் 1985.பிரசவ வலியெடுத்ததும் அப்பா அவளை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு சம்பந்தி வீட்டிற்கு போன் செய்து விஷயத்தைச் சொன்னதுமே அண்ணிகள் ஓடிவந்துவிட்டார்கள்..ரோஜா நிறத்தில் பஞ்சுப்பொதியாக மாயா குட்டி பிறந்தாள். பிறந்த குழந்தையப் பார்க்க வரவும் நேரமில்லை ஆனந்தனுக்கு. "சில சந்தோஷங்கள் திரும்பக் கிடைக்காது" என்று ஏனோ அவனுக்குப் புரியவில்லை. 'போஸ்ட் புரொடக்க்ஷன் வேலைகள்' என்று ஒருவாரம் கழித்துதான் வந்து குழந்தையைப் பார்த்தான்..மாயாக்குட்டி பிறந்த இரண்டாவது மாதம் ஆனந்தனின் படம் தியேட்டர்களில் ரிலீஸாயிற்று. அதற்கு சில தினங்கள் முன்பு வீட்டினர் எல்லோரும் பிரிவியூ தியேட்டரில் படம் பார்க்க ஏற்பாடு செய்தான். மைதிலியையும் அவளது பிறந்த வீட்டிலிருந்து அழைத்துச்சென்றான். அம்மாவிடம் குழந்தையை விட்டுவிட்டு மைதிலி அவனோடு சென்றாள்.."அப்பா அம்மாவையும் கூப்பிட்டிருக்கலாமே."."நாளை மறுநாள் உங்க குடும்பம் முழுக்க படம் பார்க்க ஏற்பாடு செய்யறேன். இப்போ அவங்களைக் கூப்பிட்டா குழந்தையை யார் பார்த்துக்கொள்வது?".அவள் பதில் பேசவில்லை..படம் வீட்டினர் எல்லோருக்கும் பிடித்திருந்தது. பிரிவியூ காட்சிக்கு வந்திருந்த பல்வேறு பிரபலங்களும் ஆனந்தனின் கரம் குலுக்கி பாராட்டிச்சென்றனர்..தியேட்டர்களிலிருந்து நல்ல தகவல்கள் வந்தன..நாலா பக்கமிருந்தும் நல்ல வரவேற்பு. "மினிமம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட தரமான படம்" என்று பத்திரிகைகளில் நல்ல விமர்சனம் எழுதி பாராட்டினர். ஆனந்த் நல்ல தயாரிப்பாளரோடு நல்ல இயக்குனராகவும் அவதரித்திருப்பதாகவும், பலரும் கொம்பு சீவி விட ஆனந்தனைக் கையிலேயே பிடிக்க முடியவில்லை. அவனது போன் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது..மூன்றாம் மாதம் குழந்தைக்கு தங்கத்தில் செயின், வளையல், அரைஞாண் எல்லாம் போட்டு இனிப்புகள் செய்து எடுத்துக்கொண்டு அவளையும், குழந்தையையும் சீர் வரிசைகளோடு புகுந்த வீட்டில் கொண்டு வந்து விட்டார்கள் அப்பாவும் அம்மாவும்..அதன் பிறகு ஒருநாள் குடும்பத்தினர் அனைவரையும் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் விருந்துக்கு அழைத்துச் சென்றான். மாயாக்குட்டியை கையில் வைத்துக்கொண்டு ஆசைதீரக் கொஞ்சினான். "என பெண் பிறந்த நேரம் நான் ஜெயிச்சுட்டேன்" என்று மகிழ்ந்தான். ரொம்பநாள் கழித்து சந்தோஷமாக உணவை ரசித்து உண்டான்..வீட்டிற்கு திரும்பி வருகையில் அவனிடம் அவன் அப்பா கேட்டார்.."இந்த படத்திற்காக மொத்தமா வாங்கிய கடன் எவ்ளோ ஆனந்த்?"."நீங்க கொடுத்தது போக சிறுகச் சிறுக வாங்கினது பத்துகோடிவரை இருக்கும்."."படம் நல்லா வந்திருக்கு. சந்தோஷம். படத்தில் வேலை செய்தவர்கள் எல்லோருக்கும் ஊதியம் செட்டில் செய்து விட்டாயா?"."எல்லார்க்கும் பைசா பாக்கியில்லாம கொடுத்துட்டேன்பா"."முதல் வார வசூலிலேயே நீ போட்ட பணம் வந்திருக்கும். இனி வருவதெல்லாம் லாபம்தானே? உன்னுடைய கடன்களை முதலில் அடைத்துவிடு. இல்லன்னா வட்டி ஆளை முழுங்கிடும். சரியா?"."சரிப்பா."."முதன்முறை வெற்றியை ருசி காண்பவன் அந்த ருசிக்கு அடிமையாய்டுவான். இன்னும் பல வெற்றிகளுக்கு ஆசைப்படுவான். அதில் தவறில்லை. ஆனால், எப்பவும் அகலக்கால் வைக்காதே. உன் சக்திக்கேற்ப செலவுகளைச் செய்ய பழக்கிக்கொள். உன் தாத்தாவின் வெற்றிக்கு இதுவே காரணம். அதேநேரம் வெற்றியும் சரி, தோல்வியும் சரி நிரந்தரமில்லை. தொடர்ந்து வெற்றிகளைக் கண்டவர்தான் எங்கப்பா. ஆனாலும் கால மாற்றங்கள், ரசனை மாற்றங்கள், முதுமை எல்லாமா சேர்ந்து அவரையும் இந்தத் துறையிலிருந்து விலகி ஓய்வுபெற வைத்தது. கடைசியாக அவர் எடுத்த இரண்டு படங்களும் தோல்வியடைந்ததுமே, ''இனி படம் எடுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார். இதுவரை சம்பாதித்த புகழ், பணம், சொத்துக்கள் இவற்றைக் காப்பாற்றிக் கொள்வதே புத்திசாலித்தனம்" என எண்ணினார். அப்படியொரு முடிவை எடுத்ததால்தான் இன்று நாம நன்றாக இருக்கிறோம். இதையெல்லாம் எதுக்கு சொல்றேன்னா இனி நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் மிகவும் ஜாக்கிரதையாக எடுத்து வைக்க வேண்டும் என்பதற்காகத்தான். உன் செயல்களால் உன் குடும்பம் ஒருபோதும் பாதிக்கப்படக் கூடாது. புரிந்ததா?".ஆனந்த் அனிச்சையாகத் தலையசைத்தான். "சந்தோஷமான ஒரு மனநிலையில் இருக்கும்போது எதற்கு இத்தனை நீண்டதொரு அறிவுரை" என்ற சலிப்பேற்பட்டது. "கடன்களை அடைத்துவிடு" என்று சொன்னது அவர் கொடுத்த பணத்திற்கும் சேர்த்துதானா? அதற்குத்தான் இத்தனை பெரிய உபதேசமா? அவன் தன் கோபத்தை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டான்.."எரிகிற தீயில் எண்ணெய் விடுவதுபோல் இரவு படுக்கையில் அதே விஷயத்தை அவனிடம் பேசினாள் மைதிலி."."மாமா சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மை. வாங்கின கடன்களை முதலில் அடைச்சுட்டாலே பாதி நிம்மதி ஆகிடுவோம். நானும் படித்தவள்தான். நா வேணா உங்க கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொள்ளட்டுமா?"."நான் உங்கிட்ட ஏதாவது அட்வைஸ் கேட்டேனா? மனைவியா லட்சணமா வீட்டையும் குழந்தையையும் நீ ஒழுங்கா பாத்துக்கிட்டாலே போதும். கணக்கு வழக்கைப்பற்றி நீ ஒண்ணும் கவலைப்பட வேணாம் சரியா?"."அதுக்கில்ல.. எனக்கும் பொழுது போகுமேன்னுதான்"."பொழுது போவலன்னா அண்ணிங்க கூட உக்காந்து தாயக்கட்டம் விளையாடு. இனிமே கணக்கு வழக்குன்னு ஆரம்பிச்ச.. கெட்ட கோபம் வரும். யார் இப்டியெல்லாம் உங்கிட்ட தூண்டி விடறது? உங்கப்பாவா?"."அப்பாவை ஏன் இதுல இழுக்கறீங்க?"."இழுக்காம பின்ன? அவருக்கு பயம்.."."என்ன பயம்?"."அ……அதெல்லாம் ஒண்ணுமில்ல. ஏதோ பயம். யாருக்கு தெரியும்? எனக்கு தூக்கம் வருது." அவன் திரும்பிப் படுத்தான்..மைதிலி அவனையே வெறித்துப் பார்த்தாள். "உன் அப்பாவுக்கு பயம்" என்று ஏன் சொன்னான்? அது வாய் தவறி வந்த வார்த்தையாகத் தெரியவில்லையே..அவள் புரண்டு புரண்டு படுத்தாள்..(தொடரும்)