– எஸ். சந்திரமௌலி.இந்திய சுதந்திரத்தின் 75ஆம் ஆண்டு அமுதத் திருவிழாவின் ஓர் அங்கமாக இந்தியக் குடிமக்கள் தங்கள் வீடுகளில் நமது மூவர்ணக் கொடியேற்றி சுதந்திர தினத்தை கோலாகலமாகக் கொண்டாடும்படிக் கேட்டுக் கொண்டது மத்திய அரசு. அப்படிக் கொடியேற்றிக் கொண்டாடுவதை செல்ஃபி எடுத்து இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யலாம். இதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு. ஏராளமானவர்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியினை ஏற்றி, புகைப்படம் எடுத்து, அதனை அதற்கான இணைய தளத்தில் பதிவேற்றம் செய்தார்கள். ஆகஸ்ட் 15ஆம் தேதிக் கணக்குப்படி இந்தியர்கள் ஐந்து கோடி பேர்கள் இதில் பங்கேற்றிருப்பது தெரியவந்தது. அடுத்தநாள் இது ஆறு கோடியைத் தாண்டியது. இவர்கள் எல்லோரும், இந்திய சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவையொட்டி தங்கள் வீடுகளில் ஓரிரு நாட்களுக்கு தேசியக் கொடியை ஏற்றினார்கள். ஆனால், சென்னை மைலாப்பூர், ராதா கிருஷ்ணன் சாலையில் வசிக்கும் சுரானா குடும்பத்தினர் தேசியக் கொடியை வீடுகளில் பறக்கவிடுவதற்குரிய விதிமுறைகளைப் பின்பற்றி 2009ஆம் வருடத்திலிருந்து தினமும் தங்கள் வீட்டு மொட்டை மாடியில் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வருகிறார்கள். இது பற்றி சுரானா குடும்பத்தைச் சேர்ந்த வினோத் சுரானாவை சந்தித்தபோது மிகுந்த உற்சாகத்துடன் பேசினார். அவர் கூரிய விஷயங்களின் தொகுப்பு:."ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த எங்களுக்கு பூர்வீகம் ராஜஸ்தான். ஆனால், என் தாய் வழி முன்னோர்கள் சுமார் 125 வருடங்களுக்கு முன் சென்னைக்கு வந்தவர்கள். தந்தை வழி முன்னோர்கள் சுமார் 70 வருடங்களுக்கு முன்னால் சென்னை வந்தவர்கள். எங்கள் அப்பா பி.எஸ். சுரானா, சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஆக விரும்பினார். ஆனால், டெல்லியில் அவர் சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகி, பரிட்சை எழுதவேண்டிய சமயத்தில் அவருக்கு டைபாய்டு, மஞ்சள்காமாலை இரண்டும் வந்து, அவர் படுத்த படுக்கையானார். அவரால் பரிட்சை எழுத முடியவில்லை. சட்டம் படித்திருந்த அவர் சிவில் சர்வீஸ் தேர்வுக்காக இன்னும் ஒருவருடத்தை வீணாக்க விரும்பாமல், சென்னை திரும்பி, வக்கீலாக பிராக்டீஸ் செய்யத்துவங்கினார்..சிறுவயது முதலே எனக்கு இந்திய விமானப்படையில் சேரவேண்டும் என்று ஆசை. ஆனால், என் கண்ணுக்கு கண்ணாடி போடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால், என் கனவும் நிறைவேறாமல் போய்விட்டது. ஆனாலும், எங்கள் குடும்பத்தில் தேச பக்தி ரத்தத்தில் ஊறிப்போன விஷயம். 2009ஆம் வருடம் மைலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் எங்கள் வீடு, அலுவலகம் அனைத்துக்குமாக ஒரு ஐரோப்பிய ஸ்டைல் கட்டிடம் கட்டி முடித்து அங்கே இடம்பெயர்ந்தோம்..2004ல், இந்தியக் குடிமக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றுவதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டன. அதுவரை, எங்கள் அலுவலக மேஜைகளில் சிறிய சைஸ் தேசியக் கொடி வைத்துக் கொண்டிருந்த நாங்கள், எங்கள் மொட்டை மாடியில் கொடிக்கம்பத்தை நிறுவினோம். 2009ல் இருந்து தினமும் நாங்கள் தேசியக் கொடியை ஏற்றுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்".சரியாக தினமும் காலை ஒன்பது மணியளவில் கொடியை ஏற்றி, மாலையில் ஆறு மணியளவில் கொடியை இறக்குவது எங்கள் வழக்கம். காதி கிராஃப்ட்டில் இருந்து வாங்கிய கதர் துணியிலான தேசியக்கொடியைத்தான் நாங்கள் வழக்கமாகப் பயன்படுத்துவோம். இரண்டு, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை புதிய கொடியைப் பயன்படுத்துவோம்; இப்போது 24 மணிநேரமும் கொடியைப் பறக்கவிட அனுமதிக்கப்பட்டிருப்பதால், ஃபோக்கஸ் லைட் பொருத்தி, இரவிலும் பீச் காற்றில் தேசியக் கொடி கம்பீரமாகப் பறப்பதைக் காணலாம்..பலர், மேலே தேசியக் கொடி பறப்பதால், எங்கள் கட்டிடம் ஏதோ ஒரு அரசாங்க அலுவலகம் என நினைத்துக் கொள்வார்கள். தினமும் இங்கே தேசியக் கொடி ஏற்றும் எங்களை கௌரவிக்கும் வகையில் சில சர்வதேச விருந்தினர்களும் வருகை தந்திருக்கிறார்கள். உருகுவே நாட்டின் துணை ஜனாதிபதி, அர்ஜென்டினாவின் முன்னாள் ஜனாதிபதி, பல நீதிபதிகள், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள் என பலரும் அதில் அடங்குவார்கள்.
– எஸ். சந்திரமௌலி.இந்திய சுதந்திரத்தின் 75ஆம் ஆண்டு அமுதத் திருவிழாவின் ஓர் அங்கமாக இந்தியக் குடிமக்கள் தங்கள் வீடுகளில் நமது மூவர்ணக் கொடியேற்றி சுதந்திர தினத்தை கோலாகலமாகக் கொண்டாடும்படிக் கேட்டுக் கொண்டது மத்திய அரசு. அப்படிக் கொடியேற்றிக் கொண்டாடுவதை செல்ஃபி எடுத்து இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யலாம். இதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு. ஏராளமானவர்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியினை ஏற்றி, புகைப்படம் எடுத்து, அதனை அதற்கான இணைய தளத்தில் பதிவேற்றம் செய்தார்கள். ஆகஸ்ட் 15ஆம் தேதிக் கணக்குப்படி இந்தியர்கள் ஐந்து கோடி பேர்கள் இதில் பங்கேற்றிருப்பது தெரியவந்தது. அடுத்தநாள் இது ஆறு கோடியைத் தாண்டியது. இவர்கள் எல்லோரும், இந்திய சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவையொட்டி தங்கள் வீடுகளில் ஓரிரு நாட்களுக்கு தேசியக் கொடியை ஏற்றினார்கள். ஆனால், சென்னை மைலாப்பூர், ராதா கிருஷ்ணன் சாலையில் வசிக்கும் சுரானா குடும்பத்தினர் தேசியக் கொடியை வீடுகளில் பறக்கவிடுவதற்குரிய விதிமுறைகளைப் பின்பற்றி 2009ஆம் வருடத்திலிருந்து தினமும் தங்கள் வீட்டு மொட்டை மாடியில் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வருகிறார்கள். இது பற்றி சுரானா குடும்பத்தைச் சேர்ந்த வினோத் சுரானாவை சந்தித்தபோது மிகுந்த உற்சாகத்துடன் பேசினார். அவர் கூரிய விஷயங்களின் தொகுப்பு:."ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த எங்களுக்கு பூர்வீகம் ராஜஸ்தான். ஆனால், என் தாய் வழி முன்னோர்கள் சுமார் 125 வருடங்களுக்கு முன் சென்னைக்கு வந்தவர்கள். தந்தை வழி முன்னோர்கள் சுமார் 70 வருடங்களுக்கு முன்னால் சென்னை வந்தவர்கள். எங்கள் அப்பா பி.எஸ். சுரானா, சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஆக விரும்பினார். ஆனால், டெல்லியில் அவர் சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகி, பரிட்சை எழுதவேண்டிய சமயத்தில் அவருக்கு டைபாய்டு, மஞ்சள்காமாலை இரண்டும் வந்து, அவர் படுத்த படுக்கையானார். அவரால் பரிட்சை எழுத முடியவில்லை. சட்டம் படித்திருந்த அவர் சிவில் சர்வீஸ் தேர்வுக்காக இன்னும் ஒருவருடத்தை வீணாக்க விரும்பாமல், சென்னை திரும்பி, வக்கீலாக பிராக்டீஸ் செய்யத்துவங்கினார்..சிறுவயது முதலே எனக்கு இந்திய விமானப்படையில் சேரவேண்டும் என்று ஆசை. ஆனால், என் கண்ணுக்கு கண்ணாடி போடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால், என் கனவும் நிறைவேறாமல் போய்விட்டது. ஆனாலும், எங்கள் குடும்பத்தில் தேச பக்தி ரத்தத்தில் ஊறிப்போன விஷயம். 2009ஆம் வருடம் மைலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் எங்கள் வீடு, அலுவலகம் அனைத்துக்குமாக ஒரு ஐரோப்பிய ஸ்டைல் கட்டிடம் கட்டி முடித்து அங்கே இடம்பெயர்ந்தோம்..2004ல், இந்தியக் குடிமக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றுவதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டன. அதுவரை, எங்கள் அலுவலக மேஜைகளில் சிறிய சைஸ் தேசியக் கொடி வைத்துக் கொண்டிருந்த நாங்கள், எங்கள் மொட்டை மாடியில் கொடிக்கம்பத்தை நிறுவினோம். 2009ல் இருந்து தினமும் நாங்கள் தேசியக் கொடியை ஏற்றுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்".சரியாக தினமும் காலை ஒன்பது மணியளவில் கொடியை ஏற்றி, மாலையில் ஆறு மணியளவில் கொடியை இறக்குவது எங்கள் வழக்கம். காதி கிராஃப்ட்டில் இருந்து வாங்கிய கதர் துணியிலான தேசியக்கொடியைத்தான் நாங்கள் வழக்கமாகப் பயன்படுத்துவோம். இரண்டு, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை புதிய கொடியைப் பயன்படுத்துவோம்; இப்போது 24 மணிநேரமும் கொடியைப் பறக்கவிட அனுமதிக்கப்பட்டிருப்பதால், ஃபோக்கஸ் லைட் பொருத்தி, இரவிலும் பீச் காற்றில் தேசியக் கொடி கம்பீரமாகப் பறப்பதைக் காணலாம்..பலர், மேலே தேசியக் கொடி பறப்பதால், எங்கள் கட்டிடம் ஏதோ ஒரு அரசாங்க அலுவலகம் என நினைத்துக் கொள்வார்கள். தினமும் இங்கே தேசியக் கொடி ஏற்றும் எங்களை கௌரவிக்கும் வகையில் சில சர்வதேச விருந்தினர்களும் வருகை தந்திருக்கிறார்கள். உருகுவே நாட்டின் துணை ஜனாதிபதி, அர்ஜென்டினாவின் முன்னாள் ஜனாதிபதி, பல நீதிபதிகள், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள் என பலரும் அதில் அடங்குவார்கள்.