? இந்த சுதந்திர நாளில் உங்களைக் கவர்ந்த காட்சி ?– நந்தினி, சேலம்.இந்த ஆண்டு அமிர்த சுதந்திர விழாவிற்காக ஒரு தனியார் அமைப்பு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ஒரு நடைப்பயணத்துக்கு அழைந்திருந்தது. அதில் கலந்துகொள்ள வந்தவர்களில் தன் பாட்டியுடன் வந்திருந்த இந்தக் குழந்தைதான்..? மதுரையில் அமைச்சர பழனிவேல் ராஜன் காரின் மீது செருப்பு எறியபட்டிருக்கிறதே?– பள்ளிப்பாளையம், ரஞ்சினிப் பிரியன்.மிக அநாகரிகமான செயல். முகம் சுளிக்க வைத்தது. அதைவிட அநாகரிமானது தமிழக பா.ஜ.க. தலைவர் அதைக் கண்டித்து அறிக்கை விட்டு அவரைக் கட்சியிலிருந்து நீக்காதது. சிண்ட்ரெல்லா கதையை நினைவூட்டி, "வீசப்பட்ட செருப்பு பத்திரமாக இருக்கிறது, வந்து பெற்று செல்லலாம்" என்ற அமைச்சரின் பதிலடி ரசிக்கவைத்தது..சிண்ட்ரெல்லா கதை தெரியாதவர்களுக்காக..ஒருநாள் அந்த நாட்டின் இளவரசன் நாட்டியத்துக்கு அழைப்பு விடுக்கிறான். 'நாட்டியமாட வருகிறவர்களில் யாரைத் தனக்குப் பிடிக்குமோ அவளைத் திருமணம் செய்வேன்' என்கிறான். கிட்டத்தட்ட சுயம்வரம் போல. அதற்கு போக முடியாத நிலையில் இருக்கும் சிண்ட்ரெல்லாவுக்கு ஒரு தேவதை உதவ முன் வருகிறது. அவளுக்கு அழகான ஆடைகளைக் கொடுத்து, அலங்காரம் செய்வித்து, அழகான தேரையும் கொடுத்து அனுப்புகிறது தேவதை. ஆனால், 'நள்ளிரவுக்குள் வந்துவிட வேண்டும், அதுவரைதான் மந்திரசக்தி தாங்கும்' என்று சொல்கிறது தேவதை..சிண்ட்ரெல்லா போகிறாள். இளவரசனுடன் நடனமாடுகிறாள். அவனுக்கும் அவளைப் பிடித்துப்போகிறது. தன்னிலை மறந்து போகிறார்கள். அப்போதுதான், 'நள்ளிரவுக்குள் திரும்ப வேண்டும்' என்கிற நினைவு வருகிறது சிண்ட்ரெல்லாவுக்கு. அவசர அவசரமாகப் போகும்போது, அவளுடைய ஒரு செருப்பைத் தவறவிட்டு விடுகிறாள்..சிண்ட்ரெல்லா விட்டுவிட்டுப்போன செருப்பைக் கொடுத்து, இளவரசன் தன் ஆட்களை அனுப்பி வீடுவீடாகத் தேடச் சொல்கிறான். 'இந்தச் செருப்பு யார் காலுக்குப் பொருந்துகிறது' என்று கண்டுபிடித்து அழைத்துவரச் சொல்கிறான்..சிண்ட்ரெல்லா வீட்டுக்கும் வருகிறார்கள். செருப்பு அவளுக்குப் பொருந்துகிறது. அவள் தன்னிடமிருந்த மற்றொரு செருப்பையும் காட்டுகிறாள். அவள்தான் சிண்ட்ரெல்லா எனக் கண்டுபிடித்த காவலர்கள் அவளை மன்னனிடம் அழைத்துச் செல்லுகிறார்கள்..பிரதமரின் சுதந்திர தின உரை எப்படி?– எம்.சண்முகம், சேலம்.புதிதாக எதுவுமில்லை. நாட்டுமக்கள் பின்பற்ற வேண்டிய ஐந்து கொள்கைகளை சொல்லியிருப்பதைப் பாருங்கள். அனைத்தும் பலமுறை பேசப்பட்ட, பேசிக்கொண்டிருக்கும் விஷயங்கள் . தன் கட்சி கூட்டம் போல "குடும்ப ஆட்சி ஒழிக்கப்படவேண்டும், ஊழல் ஒழிக்கப்படவேண்டும்" என்ற கோஷங்கள் எழுப்பினார். பொருளாதார சரிவினால் தவித்துக் கொண்டிருக்கும் தேசத்தை காப்பாற்ற எடுக்கப்பட்டிருக்கும் முயற்சிகளை விளக்கி அதற்கு மக்கள் ஒத்துழைப்பைக் கோரும் உத்வேகமான பேச்சைக் கேட்க காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றம். புதிதான ஒரே விஷயம் ஆண்டுதோறும் புதிய டிசைன் உடையில் வரும் அவர் இந்த ஆண்டு அணிந்திருந்த தேசிய கொடிகள் அச்சிடப்பட்டிருந்த ராஜஸ்தானி தலைப்பாகைதான். நம் தேசியக் கொடியை உடையாக உடையின் டிசைனில் பயன்படுத்தக்கூடாது (உடையில் கொடியைப் பொருத்திக் கொள்ளலாம், உடையாக அணியக்கூடாது) என்கிறது கொடிச் சட்டம். அதிலிருந்து அவருக்கு அவரே விலக்கு அளித்துக்கொண்டுவிட்டார் போலும்!."தகைசால் தமிழர்" விருதுக்கு கொடுக்கப்பட்ட பரிசுத் தொகை ரூபாய் பத்து லட்சத்தையும், மேற்கொண்டு ஐந்தாயிரம் ரூபாயும் சேர்த்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளாரே தோழர் நல்லகண்ணு ?– ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்.தகைசால் விருதுக்கு தகுதியானவர் என்பதை மீண்டும் ஒருமுறை நமக்கு உணர்த்தியிருக்கிறார்..? சீன உளவுக் கப்பலை இலங்கை அனுமதித்தது எதைக் காட்டுகிறது?– எ.எஸ். இராஜேந்திரன், வெள்ளூர்.சீனாவிடம் இலங்கைக்கு இருக்கும் அச்சத்தை, இடுக்கண் வந்தபோது உடன் வந்து உதவிய இந்தியாவை மதிக்காதை..சீன கப்பல் இலங்கை வருவதற்கு இந்தியா கடுமையாக ஆட்சேபம் தெரிவித்தது. இந்திய வெளியுறவுத்துறை, பாதுகாப்புப்படை அதிகாரிகள், இலங்கை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு 'சீனாவின் செயற்கைக்கோள் கப்பலால் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவலாம்' என்ற தங்களுடைய கவலையை பகிர்ந்து கொண்டனர். ஆனாலும் இலங்கை அரசு ஒத்துழைக்கவில்லை. "ஆட்சியில் எவர் அமர்ந்தாலும் எண்ணங்கள் மாறவில்லை" என்பதைக் காட்டுகிறது.? கம்பீரமாக குதிரை மேல் அமர்ந்து இருக்கும் மன்றோ சிலையை காணும் பொழுது…!– மஞ்சு வாசுதேவன், பெங்களூரு.காண்பவர் எவரையும் வசிகரிக்கும் அந்தச் சிலையில் அமர்ந்திருப்பவர் கால்களை நுழைத்துக்கொள்ள வசதியில்லாத அமைப்பைப் பற்றிய பலர் அறிந்த கதைகள் உண்டு. ஆனால், தாமஸ் மன்றோ குறித்து பலர் அறியாத செய்தி அவர் 1820ல் சென்னை, கவர்னராக நியமிக்கப்பட்டபோது அவரால் நிறுவப்பட்ட வருவாய் மதிப்பீடு மற்றும் நிர்வாகத்தின் அமைப்புகள்தான் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளன. லஞ்சம் வாங்கும் ஊழல் செய்யும் அதிகாரிகளை தண்டிக்க தனி சட்டம் கொண்டுவந்தவரும் அவரே.. அழுகை எப்போது அழகாகிறது சார்?– நெல்லை குரலோன்.கண்களில் கண்ணீரோடு அழுது கொண்டிருக்கும் ஒரு சின்னஞ்சிறிய குழந்தை தாயின் அரவணைப்பில் அரை வினாடியில் முகம் மலர கண்களில் மகிழ்ச்சி பொங்க சிரிக்கும் பாருங்கள் – அதுதான் அழகான அழுகை.."இலவசங்களும் சமூக நலத் திட்டங்களும் வெவ்வேறானவை" என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறியுள்ளாரே ?– ஆர். ஹரிகோபி, புது டெல்லி.இதைத்தானே அரசியல் கட்சிக்களும் சொல்லிக்கொண்டிருக்கின்றன. எது எவருக்கு இலவசம் இல்லை என்று தீர்மானிக்க வேண்டியது நிதிமன்றத்தின் பணி இல்லை. தேர்தல் கமிஷன் அறிவிக்க வேண்டிய விஷயம். இது. டி.என். சேஷன் போன்ற ஒரு தேர்தல் கமிஷனர் இப்போது இருந்திருந்தால் செய்திருப்பார்.. "கருப்புச் சட்டை அணிந்தவர்கள் ஒருபோதும் மக்களின் நம்பிக்கையைப் பெற மாட்டார்கள்" என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி…– எம். நிர்மலா, வாணரப்பேட்டை, புதுச்சேரி .வாழ் நாள்முழுவதும் கருப்பு சட்டை அணிந்த ஒருவர்தான் தமிழ் நாட்டில் புதிய நம்பிக்கைகளை விதைத்து வளர்த்தவர் என்று அவருக்குத்தெரியாது..பீகாரில் பா.ஜ.க. கூட்டணியை முதல்வர் நிதிஷ்குமார் முறித்து கொண்டது இதற்கு காரணம், "மஹாராஷ்டராவில் ஏற்பட்ட நிலை தன் கட்சிக்கு வந்துவிடக் கூடாது" என்று நிதிஷ்குமார் கணக்கிட்டததுதான் காரணமா…?– கே.ஆர் .ஶ்ரீ ராமன், பெங்களூரு.ஆம். அதை முன்கூட்டியே கணித்துவிட்டார் நிதிஷ். ஆனாலும் பா.ஜ.க.விற்கு இன்னும் சில வாய்ப்புகள் இருக்கின்றன..? ரஜினியை ஒரு கருவியாக வைத்து பாஜக காலூன்ற நினைப்பதாக திருமாவளவன் கூறியிருக்கிறாரே…?– இரா. அமிர்தவர்ஷினி, வாணரப்பேட்டை.காலூன்றி நிற்க நினைப்பவன் ஒரு நல்ல பலமான மூங்கில் ஊன்றுகோலை பற்றிக்கொள்ள வேண்டும். வாழை மட்டையை அல்ல..இப்போது இந்திய தேசிய கொடியை,…தூக்கி பிடித்து அரசியல் செய்யும் பா.ஜ.க,… ஆர்.எஸ்.எஸ்.,…இவை இரண்டும் இந்திய சுதந்திர போரில் கலந்து கொள்ளாதவர்கள் …என்று. காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறுவது பற்றி?– கே. பாலமுருகன், பெருநாழி.தேசியக்கொடிக்கு மரியாதை செய்யும் உரிமை காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் சொந்தமானது இல்லை. ஆனால், நாட்டு விடுதலைக்குப்பிறகு 2002 வரை ஆர்எஸ்எஸ் தேசியக் கொடியை அவர்கள் அலுவலகங்களில் ஏற்றாமல் இருந்தது. காரணம், சட்டமோ விதிகளோ அல்ல. தேசியக்கொடியை ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவர்கள் மதிப்பதும் இல்லை, மதித்ததும் இல்லை. இப்போது அதை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்பதைத்தான் அவர் சொல்லுகிறார்..? கர்நாடக அரசின் சுதந்திரதின விளம்பரத்தில் இடம் பெற்றிருக்கும் தலைவர்களின் படங்களில் நேருவின் படம் இடம் பெறவில்லையே?– அ.ச. நாரயணன், பாளையங்கோட்டை.விடுபட்டுபோய்விட வில்லை. இந்தியாவை பிரித்தது அவர்தான் என்பதால் தான் அவர் படம் இடம் பெறவில்லை என்று விளக்கம் வேறு கொடுத்திருக்கிறார்கள்.."பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்" என்பது பாரதியின் கவிதை. பாஞ்சாலி சபதம் காவியத்தில் பாஞ்சாலியை அரசவைக்கு இழுத்து வந்து துகிலுரிந்த கட்டத்தில், என்னை சூது வைத்து இழக்க என் கணவனுக்கேது உரிமை என்று அவள் கேட்கிறாள். அவையில் கூடியிருக்கும் ஆச்சாரியர்கள் எல்லாரும் நீ கேட்கிற நியாயம் எல்லாம் பழங்காலத்தில் இருந்தது. இப்போது இதுதான் நீதி; இதுதான் நியாயம்; இதுதான் சட்டம் என்று சொல்லிவிடுகிறார்கள். அந்த இடத்தில்தான் பாரதி இந்த சொற்றொடரைப் பிரயோகிக்கிறான். 'பேய் அரசுசெய்தால், பிணம் தின்னும் சாத்திரங்கள்.'.அதிகாரம் உள்ளவர் சொல்கிறபடி அதிகாரிகள் நடப்பார்கள். அதிகாரம் உள்ளவர் விரும்புகிற மாதிரி அதிகாரிகள் நடப்பார்கள் . இதைத்தான் இன்று நாடு முழுவதும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பார்க்கிறோம்..இப்போது 'டாக்டர் பட்டம்' என்ற கெளரவம் சர்வ சாதாரணமாக பலருக்கும் வழங்கப்படுகிறதே?– உஷா மஹாதேவன், சென்னை.கல்வித் தகுதிகளைத் தாண்டி துறை சார்ந்த வல்லுனர்களுக்கு இப்படி ஒரு கெளரவ டாக்டர் பட்டம் பல்கலைகழகங்களால் வழங்கப்படுவது மரபு. நிகர் நிலை பல்கலைகழகங்கள் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்தே இது தொடங்கிவிட்டது. பின்னர் பல்கலைக்கழகங்கள் அல்லாத கல்வி நிலையங்களும் வழங்க ஆரம்பித்தன். இப்போது விலைக்கே வாங்கலாம். இந்த விளம்பரத்தைப் பாருங்கள்.
? இந்த சுதந்திர நாளில் உங்களைக் கவர்ந்த காட்சி ?– நந்தினி, சேலம்.இந்த ஆண்டு அமிர்த சுதந்திர விழாவிற்காக ஒரு தனியார் அமைப்பு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ஒரு நடைப்பயணத்துக்கு அழைந்திருந்தது. அதில் கலந்துகொள்ள வந்தவர்களில் தன் பாட்டியுடன் வந்திருந்த இந்தக் குழந்தைதான்..? மதுரையில் அமைச்சர பழனிவேல் ராஜன் காரின் மீது செருப்பு எறியபட்டிருக்கிறதே?– பள்ளிப்பாளையம், ரஞ்சினிப் பிரியன்.மிக அநாகரிகமான செயல். முகம் சுளிக்க வைத்தது. அதைவிட அநாகரிமானது தமிழக பா.ஜ.க. தலைவர் அதைக் கண்டித்து அறிக்கை விட்டு அவரைக் கட்சியிலிருந்து நீக்காதது. சிண்ட்ரெல்லா கதையை நினைவூட்டி, "வீசப்பட்ட செருப்பு பத்திரமாக இருக்கிறது, வந்து பெற்று செல்லலாம்" என்ற அமைச்சரின் பதிலடி ரசிக்கவைத்தது..சிண்ட்ரெல்லா கதை தெரியாதவர்களுக்காக..ஒருநாள் அந்த நாட்டின் இளவரசன் நாட்டியத்துக்கு அழைப்பு விடுக்கிறான். 'நாட்டியமாட வருகிறவர்களில் யாரைத் தனக்குப் பிடிக்குமோ அவளைத் திருமணம் செய்வேன்' என்கிறான். கிட்டத்தட்ட சுயம்வரம் போல. அதற்கு போக முடியாத நிலையில் இருக்கும் சிண்ட்ரெல்லாவுக்கு ஒரு தேவதை உதவ முன் வருகிறது. அவளுக்கு அழகான ஆடைகளைக் கொடுத்து, அலங்காரம் செய்வித்து, அழகான தேரையும் கொடுத்து அனுப்புகிறது தேவதை. ஆனால், 'நள்ளிரவுக்குள் வந்துவிட வேண்டும், அதுவரைதான் மந்திரசக்தி தாங்கும்' என்று சொல்கிறது தேவதை..சிண்ட்ரெல்லா போகிறாள். இளவரசனுடன் நடனமாடுகிறாள். அவனுக்கும் அவளைப் பிடித்துப்போகிறது. தன்னிலை மறந்து போகிறார்கள். அப்போதுதான், 'நள்ளிரவுக்குள் திரும்ப வேண்டும்' என்கிற நினைவு வருகிறது சிண்ட்ரெல்லாவுக்கு. அவசர அவசரமாகப் போகும்போது, அவளுடைய ஒரு செருப்பைத் தவறவிட்டு விடுகிறாள்..சிண்ட்ரெல்லா விட்டுவிட்டுப்போன செருப்பைக் கொடுத்து, இளவரசன் தன் ஆட்களை அனுப்பி வீடுவீடாகத் தேடச் சொல்கிறான். 'இந்தச் செருப்பு யார் காலுக்குப் பொருந்துகிறது' என்று கண்டுபிடித்து அழைத்துவரச் சொல்கிறான்..சிண்ட்ரெல்லா வீட்டுக்கும் வருகிறார்கள். செருப்பு அவளுக்குப் பொருந்துகிறது. அவள் தன்னிடமிருந்த மற்றொரு செருப்பையும் காட்டுகிறாள். அவள்தான் சிண்ட்ரெல்லா எனக் கண்டுபிடித்த காவலர்கள் அவளை மன்னனிடம் அழைத்துச் செல்லுகிறார்கள்..பிரதமரின் சுதந்திர தின உரை எப்படி?– எம்.சண்முகம், சேலம்.புதிதாக எதுவுமில்லை. நாட்டுமக்கள் பின்பற்ற வேண்டிய ஐந்து கொள்கைகளை சொல்லியிருப்பதைப் பாருங்கள். அனைத்தும் பலமுறை பேசப்பட்ட, பேசிக்கொண்டிருக்கும் விஷயங்கள் . தன் கட்சி கூட்டம் போல "குடும்ப ஆட்சி ஒழிக்கப்படவேண்டும், ஊழல் ஒழிக்கப்படவேண்டும்" என்ற கோஷங்கள் எழுப்பினார். பொருளாதார சரிவினால் தவித்துக் கொண்டிருக்கும் தேசத்தை காப்பாற்ற எடுக்கப்பட்டிருக்கும் முயற்சிகளை விளக்கி அதற்கு மக்கள் ஒத்துழைப்பைக் கோரும் உத்வேகமான பேச்சைக் கேட்க காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றம். புதிதான ஒரே விஷயம் ஆண்டுதோறும் புதிய டிசைன் உடையில் வரும் அவர் இந்த ஆண்டு அணிந்திருந்த தேசிய கொடிகள் அச்சிடப்பட்டிருந்த ராஜஸ்தானி தலைப்பாகைதான். நம் தேசியக் கொடியை உடையாக உடையின் டிசைனில் பயன்படுத்தக்கூடாது (உடையில் கொடியைப் பொருத்திக் கொள்ளலாம், உடையாக அணியக்கூடாது) என்கிறது கொடிச் சட்டம். அதிலிருந்து அவருக்கு அவரே விலக்கு அளித்துக்கொண்டுவிட்டார் போலும்!."தகைசால் தமிழர்" விருதுக்கு கொடுக்கப்பட்ட பரிசுத் தொகை ரூபாய் பத்து லட்சத்தையும், மேற்கொண்டு ஐந்தாயிரம் ரூபாயும் சேர்த்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளாரே தோழர் நல்லகண்ணு ?– ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்.தகைசால் விருதுக்கு தகுதியானவர் என்பதை மீண்டும் ஒருமுறை நமக்கு உணர்த்தியிருக்கிறார்..? சீன உளவுக் கப்பலை இலங்கை அனுமதித்தது எதைக் காட்டுகிறது?– எ.எஸ். இராஜேந்திரன், வெள்ளூர்.சீனாவிடம் இலங்கைக்கு இருக்கும் அச்சத்தை, இடுக்கண் வந்தபோது உடன் வந்து உதவிய இந்தியாவை மதிக்காதை..சீன கப்பல் இலங்கை வருவதற்கு இந்தியா கடுமையாக ஆட்சேபம் தெரிவித்தது. இந்திய வெளியுறவுத்துறை, பாதுகாப்புப்படை அதிகாரிகள், இலங்கை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு 'சீனாவின் செயற்கைக்கோள் கப்பலால் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவலாம்' என்ற தங்களுடைய கவலையை பகிர்ந்து கொண்டனர். ஆனாலும் இலங்கை அரசு ஒத்துழைக்கவில்லை. "ஆட்சியில் எவர் அமர்ந்தாலும் எண்ணங்கள் மாறவில்லை" என்பதைக் காட்டுகிறது.? கம்பீரமாக குதிரை மேல் அமர்ந்து இருக்கும் மன்றோ சிலையை காணும் பொழுது…!– மஞ்சு வாசுதேவன், பெங்களூரு.காண்பவர் எவரையும் வசிகரிக்கும் அந்தச் சிலையில் அமர்ந்திருப்பவர் கால்களை நுழைத்துக்கொள்ள வசதியில்லாத அமைப்பைப் பற்றிய பலர் அறிந்த கதைகள் உண்டு. ஆனால், தாமஸ் மன்றோ குறித்து பலர் அறியாத செய்தி அவர் 1820ல் சென்னை, கவர்னராக நியமிக்கப்பட்டபோது அவரால் நிறுவப்பட்ட வருவாய் மதிப்பீடு மற்றும் நிர்வாகத்தின் அமைப்புகள்தான் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளன. லஞ்சம் வாங்கும் ஊழல் செய்யும் அதிகாரிகளை தண்டிக்க தனி சட்டம் கொண்டுவந்தவரும் அவரே.. அழுகை எப்போது அழகாகிறது சார்?– நெல்லை குரலோன்.கண்களில் கண்ணீரோடு அழுது கொண்டிருக்கும் ஒரு சின்னஞ்சிறிய குழந்தை தாயின் அரவணைப்பில் அரை வினாடியில் முகம் மலர கண்களில் மகிழ்ச்சி பொங்க சிரிக்கும் பாருங்கள் – அதுதான் அழகான அழுகை.."இலவசங்களும் சமூக நலத் திட்டங்களும் வெவ்வேறானவை" என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறியுள்ளாரே ?– ஆர். ஹரிகோபி, புது டெல்லி.இதைத்தானே அரசியல் கட்சிக்களும் சொல்லிக்கொண்டிருக்கின்றன. எது எவருக்கு இலவசம் இல்லை என்று தீர்மானிக்க வேண்டியது நிதிமன்றத்தின் பணி இல்லை. தேர்தல் கமிஷன் அறிவிக்க வேண்டிய விஷயம். இது. டி.என். சேஷன் போன்ற ஒரு தேர்தல் கமிஷனர் இப்போது இருந்திருந்தால் செய்திருப்பார்.. "கருப்புச் சட்டை அணிந்தவர்கள் ஒருபோதும் மக்களின் நம்பிக்கையைப் பெற மாட்டார்கள்" என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி…– எம். நிர்மலா, வாணரப்பேட்டை, புதுச்சேரி .வாழ் நாள்முழுவதும் கருப்பு சட்டை அணிந்த ஒருவர்தான் தமிழ் நாட்டில் புதிய நம்பிக்கைகளை விதைத்து வளர்த்தவர் என்று அவருக்குத்தெரியாது..பீகாரில் பா.ஜ.க. கூட்டணியை முதல்வர் நிதிஷ்குமார் முறித்து கொண்டது இதற்கு காரணம், "மஹாராஷ்டராவில் ஏற்பட்ட நிலை தன் கட்சிக்கு வந்துவிடக் கூடாது" என்று நிதிஷ்குமார் கணக்கிட்டததுதான் காரணமா…?– கே.ஆர் .ஶ்ரீ ராமன், பெங்களூரு.ஆம். அதை முன்கூட்டியே கணித்துவிட்டார் நிதிஷ். ஆனாலும் பா.ஜ.க.விற்கு இன்னும் சில வாய்ப்புகள் இருக்கின்றன..? ரஜினியை ஒரு கருவியாக வைத்து பாஜக காலூன்ற நினைப்பதாக திருமாவளவன் கூறியிருக்கிறாரே…?– இரா. அமிர்தவர்ஷினி, வாணரப்பேட்டை.காலூன்றி நிற்க நினைப்பவன் ஒரு நல்ல பலமான மூங்கில் ஊன்றுகோலை பற்றிக்கொள்ள வேண்டும். வாழை மட்டையை அல்ல..இப்போது இந்திய தேசிய கொடியை,…தூக்கி பிடித்து அரசியல் செய்யும் பா.ஜ.க,… ஆர்.எஸ்.எஸ்.,…இவை இரண்டும் இந்திய சுதந்திர போரில் கலந்து கொள்ளாதவர்கள் …என்று. காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறுவது பற்றி?– கே. பாலமுருகன், பெருநாழி.தேசியக்கொடிக்கு மரியாதை செய்யும் உரிமை காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் சொந்தமானது இல்லை. ஆனால், நாட்டு விடுதலைக்குப்பிறகு 2002 வரை ஆர்எஸ்எஸ் தேசியக் கொடியை அவர்கள் அலுவலகங்களில் ஏற்றாமல் இருந்தது. காரணம், சட்டமோ விதிகளோ அல்ல. தேசியக்கொடியை ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவர்கள் மதிப்பதும் இல்லை, மதித்ததும் இல்லை. இப்போது அதை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்பதைத்தான் அவர் சொல்லுகிறார்..? கர்நாடக அரசின் சுதந்திரதின விளம்பரத்தில் இடம் பெற்றிருக்கும் தலைவர்களின் படங்களில் நேருவின் படம் இடம் பெறவில்லையே?– அ.ச. நாரயணன், பாளையங்கோட்டை.விடுபட்டுபோய்விட வில்லை. இந்தியாவை பிரித்தது அவர்தான் என்பதால் தான் அவர் படம் இடம் பெறவில்லை என்று விளக்கம் வேறு கொடுத்திருக்கிறார்கள்.."பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்" என்பது பாரதியின் கவிதை. பாஞ்சாலி சபதம் காவியத்தில் பாஞ்சாலியை அரசவைக்கு இழுத்து வந்து துகிலுரிந்த கட்டத்தில், என்னை சூது வைத்து இழக்க என் கணவனுக்கேது உரிமை என்று அவள் கேட்கிறாள். அவையில் கூடியிருக்கும் ஆச்சாரியர்கள் எல்லாரும் நீ கேட்கிற நியாயம் எல்லாம் பழங்காலத்தில் இருந்தது. இப்போது இதுதான் நீதி; இதுதான் நியாயம்; இதுதான் சட்டம் என்று சொல்லிவிடுகிறார்கள். அந்த இடத்தில்தான் பாரதி இந்த சொற்றொடரைப் பிரயோகிக்கிறான். 'பேய் அரசுசெய்தால், பிணம் தின்னும் சாத்திரங்கள்.'.அதிகாரம் உள்ளவர் சொல்கிறபடி அதிகாரிகள் நடப்பார்கள். அதிகாரம் உள்ளவர் விரும்புகிற மாதிரி அதிகாரிகள் நடப்பார்கள் . இதைத்தான் இன்று நாடு முழுவதும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பார்க்கிறோம்..இப்போது 'டாக்டர் பட்டம்' என்ற கெளரவம் சர்வ சாதாரணமாக பலருக்கும் வழங்கப்படுகிறதே?– உஷா மஹாதேவன், சென்னை.கல்வித் தகுதிகளைத் தாண்டி துறை சார்ந்த வல்லுனர்களுக்கு இப்படி ஒரு கெளரவ டாக்டர் பட்டம் பல்கலைகழகங்களால் வழங்கப்படுவது மரபு. நிகர் நிலை பல்கலைகழகங்கள் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்தே இது தொடங்கிவிட்டது. பின்னர் பல்கலைக்கழகங்கள் அல்லாத கல்வி நிலையங்களும் வழங்க ஆரம்பித்தன். இப்போது விலைக்கே வாங்கலாம். இந்த விளம்பரத்தைப் பாருங்கள்.