கா.சு.வேலாயுதன்.எது மாதிரியும் இல்லாத புதுமாதிரியான வரலாறு.பால் வடியும் முகம், நடுவகிடு, நம்ம ஊர் பங்க் கட்டிங்போல் இருபுறமும் காதுகளை ஒட்டித் தவழும் சுருண்ட முடி. நீள்மூக்கு மீசை, தாடி இல்லை. வட்டக்கழுத்து ஜிப்பா. அது கைதியின் வெள்ளுடையாக இருக்கலாம். புகைப்படத்தில் பார்க்கும்போது கூட அந்தச் சிறுவன் அப்படியொரு காரியத்தை செய்திருப்பான் என்று நம்ப முடிவதில்லை. அவன் தன் 18 வயதில் தூக்குக் கயிறை முத்தமிட்டு தியாக மரணம் எய்தியிருக்கிறான்..அவன் பெயர் குதிராம்போஸ். அவன் தூக்குக் கயிற்றில் தொங்கிச் சாகும் முன்பு உச்சரித்த கோஷம் வந்தேமாதரம். கையில் வைத்திருந்தது பகவத் கீதை என்பதை எத்தனை பேருக்குத் தெரியும். அந்த சிறுவனின் உருவத்தை புகைப்படத்தில் பார்க்கும்போதும், வரலாற்றை சிறுகுறிப்பாகப் படிக்கும்போதும் மனதை சோகமும் சங்கடமும் ஒருங்கே கவ்விக் கொள்கிறது..'இவர் வங்காளப் புரட்சியாளர். பிரிட்டீஸ் மாஜிஸ்ட்ரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவரை கொல்ல வெடிகுண்டு வீசியிருக்கிறார். அதில் அந்த மாஜிஸ்ட்ரேட் தப்பி விட்டார். இருந்தாலும் விடாது மூலைமுடுக்கில் உள்ள காவல் நிலையங்கள் மீதெல்லாம் இவரும், இவர் குழுவினரும் வெடி குண்டுகள் வீசித் தகர்த்துள்ளார்கள். போலீஸின் பிடியில் அகப்பட்டபின்பு இவர் கொடுத்த வாக்குமூலம்: 'அந்த வெள்ளைக்கார மாஜிஸ்ட்ரேட் சுதந்திரப் போராளிகளுக்கு கடுமையான தண்டனைகள் கொடுத்தார். பலரை தூக்கில் போட்டார். அதனால் அவரைக் குண்டுவீசிக் கொல்ல முயற்சி செய்தேன். அதில் அவர் தப்பி விட்டார். என் குடும்பத்தை சார்ந்தவர்கள் இறந்து விட்டனர்!' அதைப் பார்த்து பிரிட்டீஸ் அதிகாரிகளே மிரண்டு போய் விட்டனர். இந்த சிறுவனா இந்தச் செயல் செய்து நமக்குத் தண்ணி காட்டியவன்? அவர்கள் வியப்புக்கு பரிசாக சிறையில் அடைத்துத் தூக்குக்கயிற்றில் ஏற்றி விட்டனர்..என்ன வீரம்? என்னே துணிச்சல். வரலாற்றுக் குறிப்பை வாசிக்கும்போதே சம்பவம் இப்போது நடந்தது போல் மெய்சிலிர்க்கிறது..இப்படி பிரேமிட்ட பெரிய புகைப்படம், கீழே சம்பந்தப்பட்டவரைப் பற்றி வரலாற்றுக்குறிப்பு. இப்படியே சித்தரஞ்சன்தாஸ், மோதிலால் நேரு, கமலா நேரு, குயிலி, சின்னமருது, பெரிய சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், தீரன் சின்னமலை என 150 தியாகிகளின் வரலாற்றை புகைப்படங்கள் மற்றும் வரலாற்றுக்குறிப்புகளாக ஆவணமாக்கி உள்ளனர். இதை ஒரு செங்கோட்டை வடிவில் ஒரு பிரம்மாண்ட கட்டடத்தை நிறுவி அதற்குள் வைத்துள்ளார்கள். இதற்கு "தேசபக்திக் கோட்டை" என்று பெயரிட்டு பள்ளி, கல்லூரி மாணவ / மாணவியர், பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைத்தும் உள்ளார்கள். இந்த அரும்பணியைச் செய்திருப்பவர்கள் 'ஜெய்ஹிந்த் பவுண்டேஷன்' என்ற அமைப்பினர்..எழில் கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளினூடே ஊடுருவும் கோவை -பாலக்காடு சாலை. இங்கு மதுக்கரை, க.க.சாவடிக்கு முன்பு இடதுபுறம் திரும்பும் மண் சாலை. அதில் சுமார் ஒரு பர்லாங் தூரம் சென்றால் புத்தம் புதிதாய் கட்டப்பட்டிருக்கும் பிரம்மாண்ட மதில் சுவர். பெயிண்ட் செய்யப்படாத நிலையில் காடுகள், மலைகளுக்குள் ஊடாடி நிற்கிறது பிரம்மாண்ட மதில்சுவர்கள் கொண்ட காவி நிறத்திலான கோட்டை..அந்தக் கட்டிடத்தினுள்ளே நூற்றுக்கணக்கான சிறு சிறு மண்டபங்கள். இந்த மண்டபங்களில்தான் பூலித்தேவன் முதற்கொண்டு பகத்சிங் வரை சுதந்திர போராட்ட தியாகிகளின் படங்களை வைத்து, அவர்களின் வரலாற்றுக் குறிப்பையும் அதன் கீழே பொறித்திருந்தார்கள்..நாம் போனபோது சிலர் தம் குழந்தைகளுடன் தியாகிகள் படங்களைப் பார்வையிட்டு, குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்தபடி இருந்தனர். ஒரு சிலர் கோட்டையுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தனர். சில இஸ்லாம் பெரியவர்கள் தியாகிகளின் படங்கள் முன்பு அங்கியை விரித்து தொழுகை நடத்துவதையும் காண முடிந்தது. அதே நேரம் கோவை பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரும், ஜெர்மனுக்கு புலம் பெயர்ந்த இந்திய வம்சாவழி கபில் என்பவருடன் தேசபக்திக் கோட்டையை பார்வையிட்டுக் கொண்டிருந்தார்..மருதாசல அடிகளாரிடம் பேசினோம். ''கேரளாவுக்கு செல்ல சோழர்கள் பயன்படுத்திய ராஜகேசரிப்பெருவழியின் ஓர் எல்லையில் இந்தக் கோட்டை அமைந்திருப்பது இன்னமும் பெருமைக்குரியது. மொத்தத்தில் நாட்டில் எங்கும் எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரியான அம்சம். எத்தனையோ கோட்டைகள் போராட்டத்தின் போதும், அந்நியப் படையெடுப்பின் போதும் அழிக்கப்பட்டன. அப்படியிருக்க போராட்டத்தின் நினைவாக அமைக்கப்பட்ட ஒரே கோட்டை இதுதான. நம் கோவை மாவட்டம் மதநல்லிணக்கத்தில் முன்னோடி மாவட்டமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. நல்லிணக்கம் பேணுவதில் அனைத்து சமய பெரியார்களும் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். நவமணிமாலையை இணைப்பதற்கு எப்படி உள்ளே ஒரு சங்கிலி வேண்டுமோ, அதுபோல ஒவ்வொரு சமயத்தையும் இணைக்கும் விதமாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர் வழக்கறிஞர் நந்தகுமார்..அவர் நண்பர்கள் துணையுடன் உருவாக்கிய கோட்டை இது கோவைக்கே பெருமை சேர்ப்பது. அவருடன் நாங்களும் இணைந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம். சுதந்திரப் போராட்ட காலத்தில் பேரூரில்தான் கோவை சிறையிலிருந்து வெளியே வந்த வ.உ.சி தங்கி அறவாழ்வு வாழ்ந்திருக்கிறார். ஆதீனம் நடத்திய விழாக்களில் கலந்து கொண்டிருக்கிறார். 'கல்கி'யின் 'மகுடபதி' நாவலில் வரும் கதாநாயகன் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுகிறார். தலைமறைவு வாழ்க்கை நடத்தும் நிலையில் காவல்துறை தேடும்போது பேரூர் ஆதீனத்தில் நடந்த பெரிய விழாவில் கலந்து கொள்கிறார் மகுடபதி. அந்த பெருங்கூட்டத்தில் அவரைக் கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை திரும்புகிறது. இப்படியெல்லாம் வரலாற்றுச் செய்திகள் சொல்லும் பேரூர் ஆதீனத்தின் வரலாற்றுக் குறிப்புகளையும் கூட இந்தக் கோட்டையில் வைத்து மக்களிடம் கொண்டு செல்ல ஆலோசித்து வருகிறோம்!''.சரண்யா என்பவர் தன் குழந்தையைக்கூட்டிக் கொண்டு தியாகிகள் வரலாற்றை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். ''பக்கத்தில்தான் எங்க வீடு இருக்கு. தினம்தோறும் வருகிறாம். எப்போது இந்தக் கோட்டை திறக்கும்ன்னு எதிர்பார்த்துட்டிருந்தோம். திறந்தபின்பு பார்க்கும்போது மனசுக்கு மகிழ்ச்சியா இருக்கு. இங்கே உள்ள தியாகிகள் படத்தின் கீழ் உள்ள குறிப்புகள் எல்லாமே தமிழில் இருக்கு. எளிமையா படிச்சு குழந்தைக்கு சொல்லிக் கொடுக்கவும் முடியுது!'' என்றார்..இந்தக் கோட்டையை நண்பர்கள் துணையுடன் உருவாக்கிய வக்கீல் நந்தகுமாருடன் பேசினோம்..'சின்ன வயசிலேயே எனக்கு வரலாறு ரொம்ப இஷ்டம். அதுக்காக நண்பர்களோட சேர்ந்து சுதந்திர நாளில் சின்ன அளவுல விழாக்களை நடத்தியிருக்கேன். 2014 ஆம் வருஷம் ஆகஸ்ட் 14 தேதி ரேஸ்கோர்ஸ் ரோட்டில் மூன்றரை கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை முழுக்க தேசியக் கொடியால் மறைத்து சுதந்திர தின விழிப்புணர்வு நிகழ்ச்சியை செய்தேன். எட்டடி உயரத்தில் மூன்றரை கிலோமீட்டர் தூரத்திற்கான அந்த தேசியக் கொடி எட்டு மணிநேரம் ரேஸ்கோர்ஸ் சாலையை ஒட்டி நின்றது. அதற்கடுத்தநாள் நாள் ஆகஸ்ட் 15 அன்னெய்க்கு அதே ரேஸ் கோர்ஸ் ரோட்டில் 126 சுதந்திரப் போராட்ட தியாகிகள் படங்களை முக்கியஸ்தர்களை வைத்து திறந்து வைத்தோம். 2015 ஆம் ஆண்டு சுதந்திர நாளன்னைக்கும் 136 சுதந்திரப் போராட்டத்தியாகிகள் படங்களை வைத்து மரியாதை செய்தோம். 2016 இல் அதே வேலையை அங்கேயே செஞ்சோம்..அப்ப அங்கே வந்த பெரியவங்க கூட எங்கிட்ட வந்து, 'எங்களுக்கு இதுல காந்தி, நேரு, பாரதின்னு பத்து இருபது பேருக்கு மேலே அடையாளம் தெரியவேயில்லை!' ன்னு சொன்னாங்க. அது என் மனசை ரொம்பவும் பாதிச்சிடுச்சு. இங்கே அத்தனை தியாகிகளை மட்டுமல்ல, அவங்க செஞ்ச தியாகங்களை கூட மக்கள் மத்தியில உணர்வுப்பூர்வமா ஆழப்பதிவிடணும்; அதை நிரந்தரமாவே செஞ்சா என்னன்னு தோணுச்சு. அதனாலதான் என் சொந்த நிலத்துலயே (எட்டரை ஏக்கர்) இப்படி தேச பக்தி கோட்டைகட்டற எண்ணம் உருவாச்சு. முதல்ல என் சொந்த செலவுலதான் வேலைய ஆரம்பிச்சேன். இதைப் பார்த்தும், கேள்விப்பட்டும் சில நெருக்கமான நண்பர்கள் உதவ ஆரம்பிச்சாங்க. அதில் இஸ்லாம், கிறித்துவ சமயத்தினரும் உள்ளார்கள். சுமார் ஏழு வருஷம் நடந்த பணி இது!'' என்று சொல்லி விடை கொடுத்தார் நந்தகுமார்.
கா.சு.வேலாயுதன்.எது மாதிரியும் இல்லாத புதுமாதிரியான வரலாறு.பால் வடியும் முகம், நடுவகிடு, நம்ம ஊர் பங்க் கட்டிங்போல் இருபுறமும் காதுகளை ஒட்டித் தவழும் சுருண்ட முடி. நீள்மூக்கு மீசை, தாடி இல்லை. வட்டக்கழுத்து ஜிப்பா. அது கைதியின் வெள்ளுடையாக இருக்கலாம். புகைப்படத்தில் பார்க்கும்போது கூட அந்தச் சிறுவன் அப்படியொரு காரியத்தை செய்திருப்பான் என்று நம்ப முடிவதில்லை. அவன் தன் 18 வயதில் தூக்குக் கயிறை முத்தமிட்டு தியாக மரணம் எய்தியிருக்கிறான்..அவன் பெயர் குதிராம்போஸ். அவன் தூக்குக் கயிற்றில் தொங்கிச் சாகும் முன்பு உச்சரித்த கோஷம் வந்தேமாதரம். கையில் வைத்திருந்தது பகவத் கீதை என்பதை எத்தனை பேருக்குத் தெரியும். அந்த சிறுவனின் உருவத்தை புகைப்படத்தில் பார்க்கும்போதும், வரலாற்றை சிறுகுறிப்பாகப் படிக்கும்போதும் மனதை சோகமும் சங்கடமும் ஒருங்கே கவ்விக் கொள்கிறது..'இவர் வங்காளப் புரட்சியாளர். பிரிட்டீஸ் மாஜிஸ்ட்ரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவரை கொல்ல வெடிகுண்டு வீசியிருக்கிறார். அதில் அந்த மாஜிஸ்ட்ரேட் தப்பி விட்டார். இருந்தாலும் விடாது மூலைமுடுக்கில் உள்ள காவல் நிலையங்கள் மீதெல்லாம் இவரும், இவர் குழுவினரும் வெடி குண்டுகள் வீசித் தகர்த்துள்ளார்கள். போலீஸின் பிடியில் அகப்பட்டபின்பு இவர் கொடுத்த வாக்குமூலம்: 'அந்த வெள்ளைக்கார மாஜிஸ்ட்ரேட் சுதந்திரப் போராளிகளுக்கு கடுமையான தண்டனைகள் கொடுத்தார். பலரை தூக்கில் போட்டார். அதனால் அவரைக் குண்டுவீசிக் கொல்ல முயற்சி செய்தேன். அதில் அவர் தப்பி விட்டார். என் குடும்பத்தை சார்ந்தவர்கள் இறந்து விட்டனர்!' அதைப் பார்த்து பிரிட்டீஸ் அதிகாரிகளே மிரண்டு போய் விட்டனர். இந்த சிறுவனா இந்தச் செயல் செய்து நமக்குத் தண்ணி காட்டியவன்? அவர்கள் வியப்புக்கு பரிசாக சிறையில் அடைத்துத் தூக்குக்கயிற்றில் ஏற்றி விட்டனர்..என்ன வீரம்? என்னே துணிச்சல். வரலாற்றுக் குறிப்பை வாசிக்கும்போதே சம்பவம் இப்போது நடந்தது போல் மெய்சிலிர்க்கிறது..இப்படி பிரேமிட்ட பெரிய புகைப்படம், கீழே சம்பந்தப்பட்டவரைப் பற்றி வரலாற்றுக்குறிப்பு. இப்படியே சித்தரஞ்சன்தாஸ், மோதிலால் நேரு, கமலா நேரு, குயிலி, சின்னமருது, பெரிய சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், தீரன் சின்னமலை என 150 தியாகிகளின் வரலாற்றை புகைப்படங்கள் மற்றும் வரலாற்றுக்குறிப்புகளாக ஆவணமாக்கி உள்ளனர். இதை ஒரு செங்கோட்டை வடிவில் ஒரு பிரம்மாண்ட கட்டடத்தை நிறுவி அதற்குள் வைத்துள்ளார்கள். இதற்கு "தேசபக்திக் கோட்டை" என்று பெயரிட்டு பள்ளி, கல்லூரி மாணவ / மாணவியர், பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைத்தும் உள்ளார்கள். இந்த அரும்பணியைச் செய்திருப்பவர்கள் 'ஜெய்ஹிந்த் பவுண்டேஷன்' என்ற அமைப்பினர்..எழில் கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளினூடே ஊடுருவும் கோவை -பாலக்காடு சாலை. இங்கு மதுக்கரை, க.க.சாவடிக்கு முன்பு இடதுபுறம் திரும்பும் மண் சாலை. அதில் சுமார் ஒரு பர்லாங் தூரம் சென்றால் புத்தம் புதிதாய் கட்டப்பட்டிருக்கும் பிரம்மாண்ட மதில் சுவர். பெயிண்ட் செய்யப்படாத நிலையில் காடுகள், மலைகளுக்குள் ஊடாடி நிற்கிறது பிரம்மாண்ட மதில்சுவர்கள் கொண்ட காவி நிறத்திலான கோட்டை..அந்தக் கட்டிடத்தினுள்ளே நூற்றுக்கணக்கான சிறு சிறு மண்டபங்கள். இந்த மண்டபங்களில்தான் பூலித்தேவன் முதற்கொண்டு பகத்சிங் வரை சுதந்திர போராட்ட தியாகிகளின் படங்களை வைத்து, அவர்களின் வரலாற்றுக் குறிப்பையும் அதன் கீழே பொறித்திருந்தார்கள்..நாம் போனபோது சிலர் தம் குழந்தைகளுடன் தியாகிகள் படங்களைப் பார்வையிட்டு, குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்தபடி இருந்தனர். ஒரு சிலர் கோட்டையுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தனர். சில இஸ்லாம் பெரியவர்கள் தியாகிகளின் படங்கள் முன்பு அங்கியை விரித்து தொழுகை நடத்துவதையும் காண முடிந்தது. அதே நேரம் கோவை பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரும், ஜெர்மனுக்கு புலம் பெயர்ந்த இந்திய வம்சாவழி கபில் என்பவருடன் தேசபக்திக் கோட்டையை பார்வையிட்டுக் கொண்டிருந்தார்..மருதாசல அடிகளாரிடம் பேசினோம். ''கேரளாவுக்கு செல்ல சோழர்கள் பயன்படுத்திய ராஜகேசரிப்பெருவழியின் ஓர் எல்லையில் இந்தக் கோட்டை அமைந்திருப்பது இன்னமும் பெருமைக்குரியது. மொத்தத்தில் நாட்டில் எங்கும் எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரியான அம்சம். எத்தனையோ கோட்டைகள் போராட்டத்தின் போதும், அந்நியப் படையெடுப்பின் போதும் அழிக்கப்பட்டன. அப்படியிருக்க போராட்டத்தின் நினைவாக அமைக்கப்பட்ட ஒரே கோட்டை இதுதான. நம் கோவை மாவட்டம் மதநல்லிணக்கத்தில் முன்னோடி மாவட்டமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. நல்லிணக்கம் பேணுவதில் அனைத்து சமய பெரியார்களும் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். நவமணிமாலையை இணைப்பதற்கு எப்படி உள்ளே ஒரு சங்கிலி வேண்டுமோ, அதுபோல ஒவ்வொரு சமயத்தையும் இணைக்கும் விதமாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர் வழக்கறிஞர் நந்தகுமார்..அவர் நண்பர்கள் துணையுடன் உருவாக்கிய கோட்டை இது கோவைக்கே பெருமை சேர்ப்பது. அவருடன் நாங்களும் இணைந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம். சுதந்திரப் போராட்ட காலத்தில் பேரூரில்தான் கோவை சிறையிலிருந்து வெளியே வந்த வ.உ.சி தங்கி அறவாழ்வு வாழ்ந்திருக்கிறார். ஆதீனம் நடத்திய விழாக்களில் கலந்து கொண்டிருக்கிறார். 'கல்கி'யின் 'மகுடபதி' நாவலில் வரும் கதாநாயகன் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுகிறார். தலைமறைவு வாழ்க்கை நடத்தும் நிலையில் காவல்துறை தேடும்போது பேரூர் ஆதீனத்தில் நடந்த பெரிய விழாவில் கலந்து கொள்கிறார் மகுடபதி. அந்த பெருங்கூட்டத்தில் அவரைக் கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை திரும்புகிறது. இப்படியெல்லாம் வரலாற்றுச் செய்திகள் சொல்லும் பேரூர் ஆதீனத்தின் வரலாற்றுக் குறிப்புகளையும் கூட இந்தக் கோட்டையில் வைத்து மக்களிடம் கொண்டு செல்ல ஆலோசித்து வருகிறோம்!''.சரண்யா என்பவர் தன் குழந்தையைக்கூட்டிக் கொண்டு தியாகிகள் வரலாற்றை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். ''பக்கத்தில்தான் எங்க வீடு இருக்கு. தினம்தோறும் வருகிறாம். எப்போது இந்தக் கோட்டை திறக்கும்ன்னு எதிர்பார்த்துட்டிருந்தோம். திறந்தபின்பு பார்க்கும்போது மனசுக்கு மகிழ்ச்சியா இருக்கு. இங்கே உள்ள தியாகிகள் படத்தின் கீழ் உள்ள குறிப்புகள் எல்லாமே தமிழில் இருக்கு. எளிமையா படிச்சு குழந்தைக்கு சொல்லிக் கொடுக்கவும் முடியுது!'' என்றார்..இந்தக் கோட்டையை நண்பர்கள் துணையுடன் உருவாக்கிய வக்கீல் நந்தகுமாருடன் பேசினோம்..'சின்ன வயசிலேயே எனக்கு வரலாறு ரொம்ப இஷ்டம். அதுக்காக நண்பர்களோட சேர்ந்து சுதந்திர நாளில் சின்ன அளவுல விழாக்களை நடத்தியிருக்கேன். 2014 ஆம் வருஷம் ஆகஸ்ட் 14 தேதி ரேஸ்கோர்ஸ் ரோட்டில் மூன்றரை கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை முழுக்க தேசியக் கொடியால் மறைத்து சுதந்திர தின விழிப்புணர்வு நிகழ்ச்சியை செய்தேன். எட்டடி உயரத்தில் மூன்றரை கிலோமீட்டர் தூரத்திற்கான அந்த தேசியக் கொடி எட்டு மணிநேரம் ரேஸ்கோர்ஸ் சாலையை ஒட்டி நின்றது. அதற்கடுத்தநாள் நாள் ஆகஸ்ட் 15 அன்னெய்க்கு அதே ரேஸ் கோர்ஸ் ரோட்டில் 126 சுதந்திரப் போராட்ட தியாகிகள் படங்களை முக்கியஸ்தர்களை வைத்து திறந்து வைத்தோம். 2015 ஆம் ஆண்டு சுதந்திர நாளன்னைக்கும் 136 சுதந்திரப் போராட்டத்தியாகிகள் படங்களை வைத்து மரியாதை செய்தோம். 2016 இல் அதே வேலையை அங்கேயே செஞ்சோம்..அப்ப அங்கே வந்த பெரியவங்க கூட எங்கிட்ட வந்து, 'எங்களுக்கு இதுல காந்தி, நேரு, பாரதின்னு பத்து இருபது பேருக்கு மேலே அடையாளம் தெரியவேயில்லை!' ன்னு சொன்னாங்க. அது என் மனசை ரொம்பவும் பாதிச்சிடுச்சு. இங்கே அத்தனை தியாகிகளை மட்டுமல்ல, அவங்க செஞ்ச தியாகங்களை கூட மக்கள் மத்தியில உணர்வுப்பூர்வமா ஆழப்பதிவிடணும்; அதை நிரந்தரமாவே செஞ்சா என்னன்னு தோணுச்சு. அதனாலதான் என் சொந்த நிலத்துலயே (எட்டரை ஏக்கர்) இப்படி தேச பக்தி கோட்டைகட்டற எண்ணம் உருவாச்சு. முதல்ல என் சொந்த செலவுலதான் வேலைய ஆரம்பிச்சேன். இதைப் பார்த்தும், கேள்விப்பட்டும் சில நெருக்கமான நண்பர்கள் உதவ ஆரம்பிச்சாங்க. அதில் இஸ்லாம், கிறித்துவ சமயத்தினரும் உள்ளார்கள். சுமார் ஏழு வருஷம் நடந்த பணி இது!'' என்று சொல்லி விடை கொடுத்தார் நந்தகுமார்.