சினிமா விமர்சனம்.– லதானந்த்.பெயரைப் பார்த்ததும் ஏதோ பக்திப் படம் என்று நினைத்துவிடாதீர்கள். படத்தில் தனுஷின் பெயர்தான் அது. அதைச் சுருக்கி எல்லோரும் அவரைப் 'பழம்' என்று அழைக்கிறார்கள். நியாயப்படி, 'பலம்' என்றுதானே கூப்பிட்டிருக்கவேண்டும்? சரி… இப்ப அதுவா முக்கியம்? படம் எப்படி இருக்கிறது. வாருங்கள். விமர்சனத்துக்குள்ளே போவோம்..தனுஷின் அப்பாவும் காவல்துறை அதிகாரியுமான பிரகாஷ்ராஜ் கவனக் குறைவாகக் கார் ஓட்டி, விபத்து ஏற்படுத்தி, தனுஷின் அம்மா மற்றும் தங்கை ஆகியோரின் மரணத்துக்குக் காரணமாகிவிடுகிறார். அப்போதிருந்து அவர் மேல் தனுஷுக்கு வெறுப்பு..இப்பொழுதுதானே அப்பா, மகன் கோபதாபம் மற்றும் ஒன்றிணையும் சென்டிமென்டை விருமனில் பார்த்தோம்? இந்தப் படமும் அப்பா மகன் பந்தத்தை அடிநாதமாகக் கொண்டதுதான்..தனுஷின் தாத்தா பாரதிராஜா, அப்பா – மகன் இருவருக்கும் இடையில் பாலம் போலச் செயல்பட்டு, இடைவெளியைக் குறைக்க முயல்கிறார். இந்த ட்ராக் ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்க, தனுஷின் வாழ்வில் மூன்று பெண்கள் குறுக்கிடுகிறார்கள். அவர்களுக்கும் தனுஷுக்கும் இடையில் ஏற்படும் Flirt, Acquaintance மற்றும் love தான் மிச்சக் கதை..அதிகத் திருப்பம் இல்லாமல் நேர்கோட்டில் ஆற்றொழுக்கு போலக் கதை பயணிக்கிறது..சின்னச் சின்ன சந்தோஷங்கள், ஏமாற்றங்கள், சோகம் எல்லாவற்றையும் அனாயசியமாக தனுஷ் வெளிப்படுத்துகிறார். பிரகாஷ்ராஜும் பாரதிராஜாவும் நினைவில் நிற்கிற அப்பா மற்றும் தாத்தா..தனுஷ் குரலில் ஒலிக்கும் 'தாய்க் கிழவி' பாடலின்போது திரையரங்கில் விசில் சத்தம் தூக்கலாக ஒலிக்கிறது..கோழையாக இருக்கும் தனுஷ், வீரனாக மாறுவதற்கென்றே ரவுடி ஒருவரின் பாத்திரம் வலுக்கட்டாயமாக நுழைக்கப்பட்டதைப் போலிருக்கிறது..கதாநாயகி மூவரில் நித்யா மேனன் பாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. சுருட்டை முடியோடு தெலுங்கு பேசும் பெண்ணாக அவர் ஏற்றிருக்கும் பாத்திரத்தைச் செம்மையாகவும் செய்திருக்கிறார்..ராஷி கன்னா மற்றும் ப்ரியா பவானிசங்கர் இருவரின் பாத்திரங்களும் சற்று அழுத்தக் குறைவாகவே தென்படுகின்றன..தனுஷ், ராஷ்மிகா மற்றும் நித்யா மேனன் ஆடும் காட்சிகளின் நடன அசைவுகள் வித்தியாசமாகவும் ரசிக்கும்படியும் உள்ளன.."உன் மேல ஆச.அதை எப்படிப் பேச.எக்ஸ்ட்ட்ராவா மொளைக்குது மீச.கல்யாணத்துக்கப்புறம் பூச".என்ற வைர வரிகளில் தனுஷ் காதலை பிரபோஸ் செய்யும் காட்சியில் ஒரே சிரிப்பலை!.இன்றைய இளசுகளின் பார்வையில் பல உணர்வுகளும் மிக லேசாக எடுத்துக்கொள்வதைப் போகிறபோக்கில் பல இடங்களில் படம் சுட்டுகிறது. ஆனாலும் அப்பா மற்றும் தாத்தாவை அவன், இவன் என்று ஏகவசனத்தில் தனுஷ் பேசுவது சற்றே நெருடலாகத்தான் இருக்கிறது. தாத்தாவும் பேரனும் ஒன்றாகப் பல இடங்களில் மது அருந்துவதைப் போல வரும் காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம். ஒரு காட்சியில் நித்யா தனுஷைப் பார்த்து, "ஓட்டலில் வேலை செய்யறவன் மாதிரி ட்ரஸ் பண்ணியிருக்க" என்பார். குறிப்பிட்ட தொழில் செய்வோரைக் கிண்டல் செய்யும் அந்தக் காட்சியும் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.."எனக்கு சண்டைன்னாலே கொஞ்சம் பயம்தான்; நான் அவாய்ட் செஞ்சிடுவேன்" என்று தனுஷ் சொல்லும்போது அவரது தீவிர ரசிகர்களுக்குக் கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்திருக்கும்.."பாரத்தை சுமக்கிறது ஒரு காலத்தில் சுகம்; பாரமாயிருப்பதே ஒரு சமயத்தில சுகம்" என பாரதிராஜா சொல்வது சிறப்பு..நுணுக்கமான எடிட்டிங்கும் ரசிக்க வைக்கிறது..ஒரு காட்சியில் கணப் பொழுது இரு வெள்ளாடுகள் காண்பிக்கப்பட்டு, அடுத்த நிமிடம் பந்தியில் சாப்பிடும் காட்சி வைக்கப்பட்டிருப்பதை ஓர் உதாரணமாகச் சொல்லலாம்..மொத்தத்தில்: திருச்சிற்றம்பலம் = தனுஷின் பலம்!
சினிமா விமர்சனம்.– லதானந்த்.பெயரைப் பார்த்ததும் ஏதோ பக்திப் படம் என்று நினைத்துவிடாதீர்கள். படத்தில் தனுஷின் பெயர்தான் அது. அதைச் சுருக்கி எல்லோரும் அவரைப் 'பழம்' என்று அழைக்கிறார்கள். நியாயப்படி, 'பலம்' என்றுதானே கூப்பிட்டிருக்கவேண்டும்? சரி… இப்ப அதுவா முக்கியம்? படம் எப்படி இருக்கிறது. வாருங்கள். விமர்சனத்துக்குள்ளே போவோம்..தனுஷின் அப்பாவும் காவல்துறை அதிகாரியுமான பிரகாஷ்ராஜ் கவனக் குறைவாகக் கார் ஓட்டி, விபத்து ஏற்படுத்தி, தனுஷின் அம்மா மற்றும் தங்கை ஆகியோரின் மரணத்துக்குக் காரணமாகிவிடுகிறார். அப்போதிருந்து அவர் மேல் தனுஷுக்கு வெறுப்பு..இப்பொழுதுதானே அப்பா, மகன் கோபதாபம் மற்றும் ஒன்றிணையும் சென்டிமென்டை விருமனில் பார்த்தோம்? இந்தப் படமும் அப்பா மகன் பந்தத்தை அடிநாதமாகக் கொண்டதுதான்..தனுஷின் தாத்தா பாரதிராஜா, அப்பா – மகன் இருவருக்கும் இடையில் பாலம் போலச் செயல்பட்டு, இடைவெளியைக் குறைக்க முயல்கிறார். இந்த ட்ராக் ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்க, தனுஷின் வாழ்வில் மூன்று பெண்கள் குறுக்கிடுகிறார்கள். அவர்களுக்கும் தனுஷுக்கும் இடையில் ஏற்படும் Flirt, Acquaintance மற்றும் love தான் மிச்சக் கதை..அதிகத் திருப்பம் இல்லாமல் நேர்கோட்டில் ஆற்றொழுக்கு போலக் கதை பயணிக்கிறது..சின்னச் சின்ன சந்தோஷங்கள், ஏமாற்றங்கள், சோகம் எல்லாவற்றையும் அனாயசியமாக தனுஷ் வெளிப்படுத்துகிறார். பிரகாஷ்ராஜும் பாரதிராஜாவும் நினைவில் நிற்கிற அப்பா மற்றும் தாத்தா..தனுஷ் குரலில் ஒலிக்கும் 'தாய்க் கிழவி' பாடலின்போது திரையரங்கில் விசில் சத்தம் தூக்கலாக ஒலிக்கிறது..கோழையாக இருக்கும் தனுஷ், வீரனாக மாறுவதற்கென்றே ரவுடி ஒருவரின் பாத்திரம் வலுக்கட்டாயமாக நுழைக்கப்பட்டதைப் போலிருக்கிறது..கதாநாயகி மூவரில் நித்யா மேனன் பாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. சுருட்டை முடியோடு தெலுங்கு பேசும் பெண்ணாக அவர் ஏற்றிருக்கும் பாத்திரத்தைச் செம்மையாகவும் செய்திருக்கிறார்..ராஷி கன்னா மற்றும் ப்ரியா பவானிசங்கர் இருவரின் பாத்திரங்களும் சற்று அழுத்தக் குறைவாகவே தென்படுகின்றன..தனுஷ், ராஷ்மிகா மற்றும் நித்யா மேனன் ஆடும் காட்சிகளின் நடன அசைவுகள் வித்தியாசமாகவும் ரசிக்கும்படியும் உள்ளன.."உன் மேல ஆச.அதை எப்படிப் பேச.எக்ஸ்ட்ட்ராவா மொளைக்குது மீச.கல்யாணத்துக்கப்புறம் பூச".என்ற வைர வரிகளில் தனுஷ் காதலை பிரபோஸ் செய்யும் காட்சியில் ஒரே சிரிப்பலை!.இன்றைய இளசுகளின் பார்வையில் பல உணர்வுகளும் மிக லேசாக எடுத்துக்கொள்வதைப் போகிறபோக்கில் பல இடங்களில் படம் சுட்டுகிறது. ஆனாலும் அப்பா மற்றும் தாத்தாவை அவன், இவன் என்று ஏகவசனத்தில் தனுஷ் பேசுவது சற்றே நெருடலாகத்தான் இருக்கிறது. தாத்தாவும் பேரனும் ஒன்றாகப் பல இடங்களில் மது அருந்துவதைப் போல வரும் காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம். ஒரு காட்சியில் நித்யா தனுஷைப் பார்த்து, "ஓட்டலில் வேலை செய்யறவன் மாதிரி ட்ரஸ் பண்ணியிருக்க" என்பார். குறிப்பிட்ட தொழில் செய்வோரைக் கிண்டல் செய்யும் அந்தக் காட்சியும் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.."எனக்கு சண்டைன்னாலே கொஞ்சம் பயம்தான்; நான் அவாய்ட் செஞ்சிடுவேன்" என்று தனுஷ் சொல்லும்போது அவரது தீவிர ரசிகர்களுக்குக் கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்திருக்கும்.."பாரத்தை சுமக்கிறது ஒரு காலத்தில் சுகம்; பாரமாயிருப்பதே ஒரு சமயத்தில சுகம்" என பாரதிராஜா சொல்வது சிறப்பு..நுணுக்கமான எடிட்டிங்கும் ரசிக்க வைக்கிறது..ஒரு காட்சியில் கணப் பொழுது இரு வெள்ளாடுகள் காண்பிக்கப்பட்டு, அடுத்த நிமிடம் பந்தியில் சாப்பிடும் காட்சி வைக்கப்பட்டிருப்பதை ஓர் உதாரணமாகச் சொல்லலாம்..மொத்தத்தில்: திருச்சிற்றம்பலம் = தனுஷின் பலம்!