சுமதிஶ்ரீ முகநூல் பக்கத்திலிருந்து….எட்டு வயதில் தொடங்கியது என் பேச்சுப் பயணம்..பெண்கள் சத்தம் போட்டு, சிரிக்கக் கூடாது / முடியாது, என்றிருந்த குடும்ப சூழலில் , உரக்க ஒலித்த முதல் பெண் குரல் என்னுடையதுதான். அதனாலேயே,மேடையில் பேசுவதை, நான் பெரிதும் விரும்பினேன்..என் ஆறாம் வகுப்பு ஆசிரியை Jeya Pious,i,ஒன்பதாம் வகுப்புத் தோழிகள் Sangeetha Karthikeyan,sheela Josephine, பதினொன்றாம் வகுப்புத் தோழி jajitha அறிவார்கள்,தேர்வுகளைக் கூட புறக்கணித்து விட்டு,பேச்சுப் போட்டி தான் முக்கியம் என்று திரிந்த சுமதிஸ்ரீயை..பள்ளிகள்,கல்லூரிகள்,லயன்ஸ் சங்கம்,ரோட்டரி சங்கம்,கோயில்கள், இலக்கிய அமைப்புகள்,தமிழ் சங்கங்கள், புத்தகத் திருவிழாக்கள்,திருமண நிகழ்வுகள், காதணி விழா,கிரகப் பிரவேச விழா…என பல நிகழ்வுகளில் பேசிக் கொண்டிருக்கிறேன்.(கருமாதி வீட்டில் கூட "வாலி மோட்சம்" குறித்து பேசி இருக்கிறேன்.. ).என் பெற்றோரிடமும்,உறவினர்களிடமும் நான் அதிகம் எதிர்கொண்ட ஒரே கேள்வி "உன் பேச்சு தான் உனக்கு சோறு போடப் போகுதா?".பி.எஸ்ஸி முடித்து விட்டு,எம்.ஏ.தமிழ் சேர்ந்த போது, இன்ஜினீயரிங் படித்த உறவுக்கார பிள்ளைகள் அத்தனை பேரும் என்னைக் கேலி செய்தார்கள்…ஐய்ய….தமிழா படிக்கிற என. இன்ஜினீயரிங் படித்த அவர்கள் எல்லோரும், அமெரிக்காவில்,வேலைக்காகத் தான் சென்றார்கள். தமிழ் படித்த நான், சிறப்பு விருந்தினராக சென்றேன்… எத்தனையோ பொறியியல் கல்லூரி நிகழ்வுகளிலும், பட்டமளிப்பு விழாக்களிலும் பேசியிருக்கிறேன்..பத்தாம் வகுப்பு படித்தபோது,தமிழ்நாடு சுற்றுலாத் துறை நடத்திய மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்றதால், அதற்குப் பரிசாக சென்னை முதல் கன்னியாகுமரி வரை எனக்கு சுற்றுலா செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. என் அப்பா என்னை சுற்றுலாவிற்கு அனுமதிக்கவே இல்ல…பொம்பளப் புள்ளக்கி என்ன ஊர் சுத்துற பழக்கம் என்றார்…இப்போது நான் உலகம் சுற்றிக் கொண்டிருக்கிறேன்..ஜாம்பியா தமிழ் சங்கத்தில் நான் பேசிய போது, தமிழே தெரியாத எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பெண் அதிகாரிக்கு, நான் பேசிய விதமும்,பார்வையாளர்கள் எழுந்து நின்று என் பேச்சுக்குக் கை தட்டியதும் என்ன உணர்த்தியதோ தெரியவில்லை, என்னை இறுக அணைத்து, சிறப்பாக பேசிய இந்த பெண், இந்தியாவிற்கு திரும்பிப் போகும் போது, எங்கள் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸில்,பிசினஸ் க்ளாஸில் பயணம் செய்யலாம் என்றார். …என் வாழ்வில் எல்லா உயர்வுகளையும் என் பேச்சின் மூலமே பெற்றிருக்கிறேன். ஜாம்பியா,உகாண்டா ஆகிய ஆப்ரிக்க நாடுகளுக்கு சொற்பொழிவிற்காக அழைக்கப்பட்ட முதல் பெண் பேச்சாளர் நான்தான் என்பதை மிக அழுத்தமாக இங்கே பதிவு செய்கிறேன்..என் முதல் விமான பயணம்,முதல் வெளிநாட்டு பயணம்,முதல் புத்தகம்,முதல் திரைப்பட பாடல் வாய்ப்பு,முதல் பேட்டி,முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி அனைத்தையும் என் பேச்சின் மூலமே பெற்றேன்..முதன் முதலாக என்னை மேடையில் பேச வைத்த எத்திலின் சிஸ்டரை தினமும் நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்..இரண்டு மணி நேரம் பார்வையாளர்களுக்கு சோர்வு ஏற்படுத்தாமல், பேசுவது அத்தனை எளிதல்ல…(முகநூலில் சிலர்,மேடையில் பேசுறதெல்லாம் பெரிய விசயமா…என கமெண்ட் போட்டால், ஆரம்பத்தில் மிக வருத்தமாக இருக்கும். இப்போதெல்லாம், ஒரு புன்னகையோடு அதைக் கடந்து செல்லும் ஜென் நிலைக்கு வந்து விட்டேன்…).ஒவ்வொரு முறையும் பேச்சுப் போட்டிக்கு போய்விட்டு வந்து, பேச்சுதான் உனக்கு சோறு போட போகுதா என, என் அப்பாவிடம் பெல்ட் அடி வாங்கும் போதெல்லாம், அவரை எதிர்த்துப் பேச திராணியற்று, கையது கொண்டு, வாயது பொத்தி,மௌனமாகத் தேம்பி, தேம்பி அழுதிருக்கிறேன்..பேச்சுதான் வாழ்க்கை என்றாகிவிட்ட இந்நாளில், மிக சத்தமாக எனக்கு இதை சொல்லத் தோன்றுகிறது…."ஆமா…என் பேச்சுதான் எனக்கு சோறு போடுது."
சுமதிஶ்ரீ முகநூல் பக்கத்திலிருந்து….எட்டு வயதில் தொடங்கியது என் பேச்சுப் பயணம்..பெண்கள் சத்தம் போட்டு, சிரிக்கக் கூடாது / முடியாது, என்றிருந்த குடும்ப சூழலில் , உரக்க ஒலித்த முதல் பெண் குரல் என்னுடையதுதான். அதனாலேயே,மேடையில் பேசுவதை, நான் பெரிதும் விரும்பினேன்..என் ஆறாம் வகுப்பு ஆசிரியை Jeya Pious,i,ஒன்பதாம் வகுப்புத் தோழிகள் Sangeetha Karthikeyan,sheela Josephine, பதினொன்றாம் வகுப்புத் தோழி jajitha அறிவார்கள்,தேர்வுகளைக் கூட புறக்கணித்து விட்டு,பேச்சுப் போட்டி தான் முக்கியம் என்று திரிந்த சுமதிஸ்ரீயை..பள்ளிகள்,கல்லூரிகள்,லயன்ஸ் சங்கம்,ரோட்டரி சங்கம்,கோயில்கள், இலக்கிய அமைப்புகள்,தமிழ் சங்கங்கள், புத்தகத் திருவிழாக்கள்,திருமண நிகழ்வுகள், காதணி விழா,கிரகப் பிரவேச விழா…என பல நிகழ்வுகளில் பேசிக் கொண்டிருக்கிறேன்.(கருமாதி வீட்டில் கூட "வாலி மோட்சம்" குறித்து பேசி இருக்கிறேன்.. ).என் பெற்றோரிடமும்,உறவினர்களிடமும் நான் அதிகம் எதிர்கொண்ட ஒரே கேள்வி "உன் பேச்சு தான் உனக்கு சோறு போடப் போகுதா?".பி.எஸ்ஸி முடித்து விட்டு,எம்.ஏ.தமிழ் சேர்ந்த போது, இன்ஜினீயரிங் படித்த உறவுக்கார பிள்ளைகள் அத்தனை பேரும் என்னைக் கேலி செய்தார்கள்…ஐய்ய….தமிழா படிக்கிற என. இன்ஜினீயரிங் படித்த அவர்கள் எல்லோரும், அமெரிக்காவில்,வேலைக்காகத் தான் சென்றார்கள். தமிழ் படித்த நான், சிறப்பு விருந்தினராக சென்றேன்… எத்தனையோ பொறியியல் கல்லூரி நிகழ்வுகளிலும், பட்டமளிப்பு விழாக்களிலும் பேசியிருக்கிறேன்..பத்தாம் வகுப்பு படித்தபோது,தமிழ்நாடு சுற்றுலாத் துறை நடத்திய மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்றதால், அதற்குப் பரிசாக சென்னை முதல் கன்னியாகுமரி வரை எனக்கு சுற்றுலா செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. என் அப்பா என்னை சுற்றுலாவிற்கு அனுமதிக்கவே இல்ல…பொம்பளப் புள்ளக்கி என்ன ஊர் சுத்துற பழக்கம் என்றார்…இப்போது நான் உலகம் சுற்றிக் கொண்டிருக்கிறேன்..ஜாம்பியா தமிழ் சங்கத்தில் நான் பேசிய போது, தமிழே தெரியாத எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பெண் அதிகாரிக்கு, நான் பேசிய விதமும்,பார்வையாளர்கள் எழுந்து நின்று என் பேச்சுக்குக் கை தட்டியதும் என்ன உணர்த்தியதோ தெரியவில்லை, என்னை இறுக அணைத்து, சிறப்பாக பேசிய இந்த பெண், இந்தியாவிற்கு திரும்பிப் போகும் போது, எங்கள் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸில்,பிசினஸ் க்ளாஸில் பயணம் செய்யலாம் என்றார். …என் வாழ்வில் எல்லா உயர்வுகளையும் என் பேச்சின் மூலமே பெற்றிருக்கிறேன். ஜாம்பியா,உகாண்டா ஆகிய ஆப்ரிக்க நாடுகளுக்கு சொற்பொழிவிற்காக அழைக்கப்பட்ட முதல் பெண் பேச்சாளர் நான்தான் என்பதை மிக அழுத்தமாக இங்கே பதிவு செய்கிறேன்..என் முதல் விமான பயணம்,முதல் வெளிநாட்டு பயணம்,முதல் புத்தகம்,முதல் திரைப்பட பாடல் வாய்ப்பு,முதல் பேட்டி,முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி அனைத்தையும் என் பேச்சின் மூலமே பெற்றேன்..முதன் முதலாக என்னை மேடையில் பேச வைத்த எத்திலின் சிஸ்டரை தினமும் நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்..இரண்டு மணி நேரம் பார்வையாளர்களுக்கு சோர்வு ஏற்படுத்தாமல், பேசுவது அத்தனை எளிதல்ல…(முகநூலில் சிலர்,மேடையில் பேசுறதெல்லாம் பெரிய விசயமா…என கமெண்ட் போட்டால், ஆரம்பத்தில் மிக வருத்தமாக இருக்கும். இப்போதெல்லாம், ஒரு புன்னகையோடு அதைக் கடந்து செல்லும் ஜென் நிலைக்கு வந்து விட்டேன்…).ஒவ்வொரு முறையும் பேச்சுப் போட்டிக்கு போய்விட்டு வந்து, பேச்சுதான் உனக்கு சோறு போட போகுதா என, என் அப்பாவிடம் பெல்ட் அடி வாங்கும் போதெல்லாம், அவரை எதிர்த்துப் பேச திராணியற்று, கையது கொண்டு, வாயது பொத்தி,மௌனமாகத் தேம்பி, தேம்பி அழுதிருக்கிறேன்..பேச்சுதான் வாழ்க்கை என்றாகிவிட்ட இந்நாளில், மிக சத்தமாக எனக்கு இதை சொல்லத் தோன்றுகிறது…."ஆமா…என் பேச்சுதான் எனக்கு சோறு போடுது."