"ஏங்க!..இன்னைக்கு கோயிலுக்கு போறப்ப ஐயர்கிட்ட விசாரிச்சுட்டு வந்துருங்களேன்…கிரிதர் வேற இன்னைக்கு நைட் போன் பண்ணுவான். நாம கரெக்டா சொன்னாத்தானே அவனால் டிக்கெட் போட முடியும்…"."சரி பார்வதி… இன்னைக்கு நிச்சயம் கேட்டுட்டு வரேன்…" என்றார் சீதாபதி..சித்ரா வேற ஆஸ்திரேலியாவிலிருந்து "வரணுமே!… அவளும் முன்னேற்பாடு செய்யணுமில்லையா?"."வாஸ்தவந்தான்!… கேட்டு சொல்லிடுறேன்.".சீதாபதிக்கு அடுத்த மாதத்தோடு அறுபது வயது பூர்த்தியாகிறது. மகன், மகள் என இருவரையும் படிக்க வைத்து கல்யாணம் செய்து தனது பெற்ற கடனை செவ்வனே நிறைவேற்றி விட்டார். பாரத ஸ்டேட் வங்கி மேலாளராக இருந்து இரு வருடங்களுக்கு முன் தான் ரிடையர் ஆகியிருந்தார். பிள்ளைகள் இருவரும் வெளிநாட்டில் கைநிறைய சம்பாதிக்கிறார்கள். பெற்றவர்களின் சஷ்டியப்த பூர்த்தியை சிறப்பாக கொண்டாட நினைப்பதில் வியப்பேதுமில்லை..••• ••• •••."பார்வதி!… சிம்பிளா செய்தா போறாதா? ஏன் விமரிசையா செய்யணும்னு நினைக்குற…"."நான் ஏங்க அப்படி நினைக்கபோறேன்… பசங்க ரொம்ப விருப்பப்படுறாங்க. அவங்களுக்காகதானே… எனக்கு ஒண்ணுமில்லைங்க…"."என்னவோ போங்க… எனக்கு இதிலெல்லாம் அவ்வளவு ஆர்வமில்லை பார்வதி…" என்றபடி எழுந்து போனார்..••• ••• •••."சிவ சிவ" என்ற வாசகத்தை அண்ணாந்து பார்த்து பக்தியுடன் கன்னத்தில் போட்டுகொண்டே கோயிலினுள் நுழைந்தவரின் கண்களில் சர்வ அலங்காரத்துடன் "காசி விஸ்வநாதர்" தெரிய கைதூக்கி வணங்கியபடி கண்களால் ஐயரை தேடினார்….என்ன சீதாபதி!…எப்படி இருக்கீங்க?.. பார்த்து நாளாச்சே…என்றபடி கற்பூர ஆரத்தியை ஈஸ்வரனுக்கு காட்டிவிட்டு தட்டை எடுத்து கொண்டு வெளியே வந்தவர், விரல்களுக்கிடையே சிறிது விபூதியை எடுத்து நீட்டுகிறார்.."நல்லா இருக்கேன் ஐயரே!…ஒரு சமாசாரம் கேட்கணும் உங்ககிட்ட…."."சொல்லுங்கோ…"."அடுத்த மாசம் எனக்கு அறுபது வயசு பூர்த்தியாகுது"."அடடே!…நல்ல விஷயம் தானே"."பிள்ளைங்க சஷ்டியப்த பூர்த்தி பண்ணணும்னு ஆசைப்படறாங்க…அதான்."."அதுக்கென்ன பேஷா பண்ணிடலாம்."."என்னோட நட்சத்திரம் சொல்றேன் நாள் குறித்து தாங்களேன்."."பேஷா சொல்லுங்க."."திருவாதிரை"."இந்த நட்சத்திரத்துக்கு இருபதாம் தேதி வர்றது. அன்னைக்கே அமோகமா பண்ணிடலாம்."."நீங்களே பண்ணுவீங்களா?"."எனக்கு அன்னைக்கு கோயில்ல பூஜை இருக்கு. உங்களுக்கு வேணும்னா என் ஃப்ரெண்டு ஒருத்தர் நம்பர் தரேன். அவர் இந்த மாதிரி விஷேசத்தை நன்னா பண்ணி தருவார்."."எவ்வளவு செலவாகும்ன்னு சொல்லமுடியுமா?"."உங்க பட்ஜெட் என்ன சொல்லுங்க. ஐயாயிரத்துலயும் பண்ணலாம்… ஐம்பதாயிரத்துலயும்… ஏன் ஐந்து லட்சத்திலும் கூட பண்ணலாம். அது உங்க வசதியை பொறுத்தது…"."பணத்தை பத்தி பிரச்னை இல்லீங்க ஐயரே! பசங்க வெளிநாட்ல இருக்காங்க… வீட்டுக்கு வந்து பலவருஷமாச்சு… அவங்க இங்க வர்றத்துக்காகவே இதை நான் ஒத்துகிட்டேன். பிள்ளைங்களும் ஆசைப்படுறாங்க. எதுக்கும் வீட்ல ஒரு வார்த்தை கேட்டு சொல்றேனே. நாளைக்கு வரேன்…"."ஓ…தாராளமா நாளைக்கே சொல்லுங்கோ. ஜோரா பண்ணிடலாம்."."சரி… வரேன்ங்க ஐயரே…!" என விடைபெற்று வீடு வந்தார் சீதாபதி..••• ••• •••."ஏங்க!… ஐயரிடம் விசாரிச்சிங்களா"? என வந்ததும் துளைத்தாள் பார்வதி.."கேட்டாச்சிம்மா" என ஐயரிடம் பேசியதை ஒன்று விடாமல் சொன்னார்.."சரி! நைட்டு கிரிதர் பேசுவான். அவன்கிட்டேயும் சித்ராகிட்டேயும் ஒரு வார்த்தை கேட்டு முடிவு பண்ணிக்கலாம்.".ஐயர் சொன்ன தகவல்களை ஒன்றுவிடாமல் போனில் மகனிடம் ஒப்பித்து கொண்டிருந்தாள் பார்வதி.."அம்மா! பணத்தை பத்தி எதையும் யோசிக்காதீங்க… நல்லா விமரிசையா நடத்திடலாம். நான் பாத்துக்கறேன். வெளிநாட்டில் வந்து சம்பாதித்து பெத்தவங்களுக்கு இதைகூட செய்யலன்னா ஊரு உலகம் என்னை பத்தி என்ன நினைக்கும்."."சரிப்பா கிரிதர்… உங்க இஷ்டமாவே பண்ணிடலாம்பா…" என்றாள் மகிழ்வுடன்..பார்வதிக்கும், சீதாபதிக்கும் இந்த சஷ்டியப்த பூர்த்தியை சாக்காக வைத்து அனைவரையும் ஒருசேர பார்க்கப்போகிறோம் என்பதை நினைக்கும்போதே மனம் குதுகலித்தது. பேரப்பிள்ளைகளை பார்க்க இப்போதே மனம் பரபரத்தது.."ஏங்க!… கோயில்ல ஐயரை பாத்து நாளைக்கு பேசிடுங்க… நல்லா விமரிசையாக பண்ணிடலாம்கிறாங்க பசங்க…ஏற்பாடு பண்ண சொல்லுங்க… செலவை பத்தி கவலைப்படவேண்டாம்னுட்டான் கிரிதர்"..எதுவும் பேசாமல்…'ம்'….என தலையாட்டி வைத்தார்..••• ••• •••.மறுநாள் கோயிலுக்கு செல்லுகையில் ஐயர் பூஜையில் இருந்தார். வரிசையில் நான்கைந்து பேர் ஆரத்திக்காக காத்திருக்க கோயிலைச் சுற்றி வந்து ஓரமாக அமர்ந்து கொண்டார் சீதாபதி..ஆரத்தி காட்டி விட்டு ஐயர் சீதாபதியை நோக்கி வர அவசரமாக "சாமி" என ஒடி வந்தவளுக்கு ஐம்பது வயது இருக்கலாம். உழைத்து தேய்ந்த ஒல்லியான தேகம்… நரைமுடி… முகத்தில் கவலை … நெற்றியில் இருந்த வெறும் விபூதி கீற்று அவளது கணவனின் மறைவை சொல்லாமல் சொல்லியது. கூடவே ஒரு இளம்வயது பெண். ஏழ்மையிலும் களையாக லட்சணமாக இருந்தாள்.."வா கமலா…! உங்களைப் பத்திதான் யோசிச்சிக்கிட்டிருந்தேன்…"."சாமி… நான் உங்களைதான் மலைபோல நம்பியிருக்கேன்…" என்றாள் ஆர்வமுடன்.."நான் சங்கத்துல பேசியிருக்கேன். நிச்சயம் கிடைச்சிடும். கவலைப்படாதேள்", என குங்குமத்தை அந்த இளம்பெண்ணிடம்நீட்டி "நல்லாயிருடி கொழந்தே"…என ஆசிர்வதித்தார்..உடனே அந்த அம்மாள், "கல்யாணத்துக்கு இன்னும் ஒரு மாசந்தான் இருக்கு சாமி"…என்றாள் கவலையுடன்."அதுக்கென்ன பேஷா நடத்திடலாம்"…."இவளுக்கு ஒரு வழி பண்ணிட்டா கிருஷ்ணா ராமான்னு நான் கிளம்பிடுவேன்…"."பகவான் இருக்கார், கவலைப்படாம போங்கோ"… என ஆறுதல் சொல்லியனுப்பிவர் சீதாபதியை நோக்கி வந்தார்.."என்ன முடிவு பண்ணியிருக்கேள் சீதாபதி..வீட்ல பேசிட்டேளா"?…என கேட்டார்.."அதெல்லாம் பேசிட்டேன்…ஆமா…யாரு இந்த அம்மா…என்ன விஷயம்"? என ஆர்வம் தாங்காமல் கேட்டார் சீதாபதி.."அவங்களா..கோயிலை கூட்டி பெருக்கி சுத்தம் பண்றது…பிரசாத பாத்திரங்களை தேய்க்கிறது… என இங்கேயே பல வருஷமா வேலை பாக்குறா… வசதி இல்லாதவா…கணவரும் இல்லை… பாவம். 'ஒத்த பொண்ணை கரை சேக்கணுமே' என்ற கவலை அவாளுக்கு. கூட இருந்தாளே அவதான் அவங்க பொண்ணு… அவளுக்கு கல்யாணம் நிச்சயமாகியிருக்கு. மடத்துல சங்கத்துலன்னு ஏதாவது உதவி கிடைக்குமான்னு கேட்டிண்டிருக்கா… நானும் என்னாலானத செய்யலாம்னு முயற்சி பண்றேன்…எல்லாம் பகவான் விட்ட வழி…என்று புலம்பியவாறு…நீங்க சொல்லுங்கோ"?…என்றார்..சற்று யோசித்தவராக…"சிம்பிளா பண்ணிடலாம்னு ஒரு யோசனை"… என இழுத்தவரிடம்,."நல்லது… நான் என் நண்பர்ட்ட பேசிட்டேன். நம்பர் தரேன்…நீங்களும் சித்த பேசிடுங்கோ."."ம்' என்றவர் சட்டென "ஐயரே! அந்த பொண்ணுக்கு கல்யாண செலவுக்கு நீங்க எங்கேயும் அலைய வேணாம்…நான் ஒரு தொகையை தரேன்…பத்தலைன்னா மீதியை ஏற்பாடு பண்ணிக்கங்க…"."ரொம்ப சந்தோஷம் சீதாபதி…பகவான்தான் உங்க ரூபத்தில் வந்து அந்த அம்மாளுக்கு உதவி செய்யறார்…"என்றார் உணர்ச்சி வசப்பட்டவராக…."பெரிய வார்த்தையெல்லாம் பேசாதீங்க… நான் வெறும் கருவிதான்… அந்த ஈஸ்வரன் தான் இதை நடத்தி வைக்கிறார். இல்லைன்னா அந்த அம்மா ஏன் என் கண்ணில் படணும்… ஆக்சுவலா என் பையன் சஷ்டியப்தபூர்த்தியை விமர்சையாக பண்ணனும்னுதான் ஆசைப்படறான். எங்களுக்கென்ன… நாங்க ஆண்டு அனுபவிச்சவங்க… அது வாழ வேண்டிய குழந்தை… அவளுக்கு கல்யாணத்துக்கு உதவினா எங்க சந்ததியினருக்கு அந்த புண்ணியம் வந்து சேரட்டுமே… என்ற ஒரு சின்ன சுயநலந்தான்ன்னு வைச்சிகங்களேன். இது இந்த நிமிஷம் என் மனைவி பசங்களை கூட கலந்துக்காம எடுத்த முடிவு… ஆனா சரியான முடிவு. எங்க வீட்லயும் புரிந்துகொள்ளுவாங்கன்னு நினைக்கிறேன். அவ்வளவுதான்" என்று சாதாரணமாக சொல்லியவரை…."நீங்களும் உங்க குடும்பமும் நல்லாயிருப்பேள்னு" மனசார வாழ்த்தி குங்குமத்தை நீட்டினார் ஐயர்..அதை வாங்கி நெற்றியில் தீட்டியவர், அந்த அலங்கார பூஷனாய் இருந்த விஸ்வநாதரை கைதூக்கி வணங்க… "கிண் கிண்" என்ற மணியோசை தெய்வீகமாய் ஒலிக்க… காசி விஸ்வநாதர் கம்பீரமாய் புன்னகையுடன் வீற்றிருந்தார்.
"ஏங்க!..இன்னைக்கு கோயிலுக்கு போறப்ப ஐயர்கிட்ட விசாரிச்சுட்டு வந்துருங்களேன்…கிரிதர் வேற இன்னைக்கு நைட் போன் பண்ணுவான். நாம கரெக்டா சொன்னாத்தானே அவனால் டிக்கெட் போட முடியும்…"."சரி பார்வதி… இன்னைக்கு நிச்சயம் கேட்டுட்டு வரேன்…" என்றார் சீதாபதி..சித்ரா வேற ஆஸ்திரேலியாவிலிருந்து "வரணுமே!… அவளும் முன்னேற்பாடு செய்யணுமில்லையா?"."வாஸ்தவந்தான்!… கேட்டு சொல்லிடுறேன்.".சீதாபதிக்கு அடுத்த மாதத்தோடு அறுபது வயது பூர்த்தியாகிறது. மகன், மகள் என இருவரையும் படிக்க வைத்து கல்யாணம் செய்து தனது பெற்ற கடனை செவ்வனே நிறைவேற்றி விட்டார். பாரத ஸ்டேட் வங்கி மேலாளராக இருந்து இரு வருடங்களுக்கு முன் தான் ரிடையர் ஆகியிருந்தார். பிள்ளைகள் இருவரும் வெளிநாட்டில் கைநிறைய சம்பாதிக்கிறார்கள். பெற்றவர்களின் சஷ்டியப்த பூர்த்தியை சிறப்பாக கொண்டாட நினைப்பதில் வியப்பேதுமில்லை..••• ••• •••."பார்வதி!… சிம்பிளா செய்தா போறாதா? ஏன் விமரிசையா செய்யணும்னு நினைக்குற…"."நான் ஏங்க அப்படி நினைக்கபோறேன்… பசங்க ரொம்ப விருப்பப்படுறாங்க. அவங்களுக்காகதானே… எனக்கு ஒண்ணுமில்லைங்க…"."என்னவோ போங்க… எனக்கு இதிலெல்லாம் அவ்வளவு ஆர்வமில்லை பார்வதி…" என்றபடி எழுந்து போனார்..••• ••• •••."சிவ சிவ" என்ற வாசகத்தை அண்ணாந்து பார்த்து பக்தியுடன் கன்னத்தில் போட்டுகொண்டே கோயிலினுள் நுழைந்தவரின் கண்களில் சர்வ அலங்காரத்துடன் "காசி விஸ்வநாதர்" தெரிய கைதூக்கி வணங்கியபடி கண்களால் ஐயரை தேடினார்….என்ன சீதாபதி!…எப்படி இருக்கீங்க?.. பார்த்து நாளாச்சே…என்றபடி கற்பூர ஆரத்தியை ஈஸ்வரனுக்கு காட்டிவிட்டு தட்டை எடுத்து கொண்டு வெளியே வந்தவர், விரல்களுக்கிடையே சிறிது விபூதியை எடுத்து நீட்டுகிறார்.."நல்லா இருக்கேன் ஐயரே!…ஒரு சமாசாரம் கேட்கணும் உங்ககிட்ட…."."சொல்லுங்கோ…"."அடுத்த மாசம் எனக்கு அறுபது வயசு பூர்த்தியாகுது"."அடடே!…நல்ல விஷயம் தானே"."பிள்ளைங்க சஷ்டியப்த பூர்த்தி பண்ணணும்னு ஆசைப்படறாங்க…அதான்."."அதுக்கென்ன பேஷா பண்ணிடலாம்."."என்னோட நட்சத்திரம் சொல்றேன் நாள் குறித்து தாங்களேன்."."பேஷா சொல்லுங்க."."திருவாதிரை"."இந்த நட்சத்திரத்துக்கு இருபதாம் தேதி வர்றது. அன்னைக்கே அமோகமா பண்ணிடலாம்."."நீங்களே பண்ணுவீங்களா?"."எனக்கு அன்னைக்கு கோயில்ல பூஜை இருக்கு. உங்களுக்கு வேணும்னா என் ஃப்ரெண்டு ஒருத்தர் நம்பர் தரேன். அவர் இந்த மாதிரி விஷேசத்தை நன்னா பண்ணி தருவார்."."எவ்வளவு செலவாகும்ன்னு சொல்லமுடியுமா?"."உங்க பட்ஜெட் என்ன சொல்லுங்க. ஐயாயிரத்துலயும் பண்ணலாம்… ஐம்பதாயிரத்துலயும்… ஏன் ஐந்து லட்சத்திலும் கூட பண்ணலாம். அது உங்க வசதியை பொறுத்தது…"."பணத்தை பத்தி பிரச்னை இல்லீங்க ஐயரே! பசங்க வெளிநாட்ல இருக்காங்க… வீட்டுக்கு வந்து பலவருஷமாச்சு… அவங்க இங்க வர்றத்துக்காகவே இதை நான் ஒத்துகிட்டேன். பிள்ளைங்களும் ஆசைப்படுறாங்க. எதுக்கும் வீட்ல ஒரு வார்த்தை கேட்டு சொல்றேனே. நாளைக்கு வரேன்…"."ஓ…தாராளமா நாளைக்கே சொல்லுங்கோ. ஜோரா பண்ணிடலாம்."."சரி… வரேன்ங்க ஐயரே…!" என விடைபெற்று வீடு வந்தார் சீதாபதி..••• ••• •••."ஏங்க!… ஐயரிடம் விசாரிச்சிங்களா"? என வந்ததும் துளைத்தாள் பார்வதி.."கேட்டாச்சிம்மா" என ஐயரிடம் பேசியதை ஒன்று விடாமல் சொன்னார்.."சரி! நைட்டு கிரிதர் பேசுவான். அவன்கிட்டேயும் சித்ராகிட்டேயும் ஒரு வார்த்தை கேட்டு முடிவு பண்ணிக்கலாம்.".ஐயர் சொன்ன தகவல்களை ஒன்றுவிடாமல் போனில் மகனிடம் ஒப்பித்து கொண்டிருந்தாள் பார்வதி.."அம்மா! பணத்தை பத்தி எதையும் யோசிக்காதீங்க… நல்லா விமரிசையா நடத்திடலாம். நான் பாத்துக்கறேன். வெளிநாட்டில் வந்து சம்பாதித்து பெத்தவங்களுக்கு இதைகூட செய்யலன்னா ஊரு உலகம் என்னை பத்தி என்ன நினைக்கும்."."சரிப்பா கிரிதர்… உங்க இஷ்டமாவே பண்ணிடலாம்பா…" என்றாள் மகிழ்வுடன்..பார்வதிக்கும், சீதாபதிக்கும் இந்த சஷ்டியப்த பூர்த்தியை சாக்காக வைத்து அனைவரையும் ஒருசேர பார்க்கப்போகிறோம் என்பதை நினைக்கும்போதே மனம் குதுகலித்தது. பேரப்பிள்ளைகளை பார்க்க இப்போதே மனம் பரபரத்தது.."ஏங்க!… கோயில்ல ஐயரை பாத்து நாளைக்கு பேசிடுங்க… நல்லா விமரிசையாக பண்ணிடலாம்கிறாங்க பசங்க…ஏற்பாடு பண்ண சொல்லுங்க… செலவை பத்தி கவலைப்படவேண்டாம்னுட்டான் கிரிதர்"..எதுவும் பேசாமல்…'ம்'….என தலையாட்டி வைத்தார்..••• ••• •••.மறுநாள் கோயிலுக்கு செல்லுகையில் ஐயர் பூஜையில் இருந்தார். வரிசையில் நான்கைந்து பேர் ஆரத்திக்காக காத்திருக்க கோயிலைச் சுற்றி வந்து ஓரமாக அமர்ந்து கொண்டார் சீதாபதி..ஆரத்தி காட்டி விட்டு ஐயர் சீதாபதியை நோக்கி வர அவசரமாக "சாமி" என ஒடி வந்தவளுக்கு ஐம்பது வயது இருக்கலாம். உழைத்து தேய்ந்த ஒல்லியான தேகம்… நரைமுடி… முகத்தில் கவலை … நெற்றியில் இருந்த வெறும் விபூதி கீற்று அவளது கணவனின் மறைவை சொல்லாமல் சொல்லியது. கூடவே ஒரு இளம்வயது பெண். ஏழ்மையிலும் களையாக லட்சணமாக இருந்தாள்.."வா கமலா…! உங்களைப் பத்திதான் யோசிச்சிக்கிட்டிருந்தேன்…"."சாமி… நான் உங்களைதான் மலைபோல நம்பியிருக்கேன்…" என்றாள் ஆர்வமுடன்.."நான் சங்கத்துல பேசியிருக்கேன். நிச்சயம் கிடைச்சிடும். கவலைப்படாதேள்", என குங்குமத்தை அந்த இளம்பெண்ணிடம்நீட்டி "நல்லாயிருடி கொழந்தே"…என ஆசிர்வதித்தார்..உடனே அந்த அம்மாள், "கல்யாணத்துக்கு இன்னும் ஒரு மாசந்தான் இருக்கு சாமி"…என்றாள் கவலையுடன்."அதுக்கென்ன பேஷா நடத்திடலாம்"…."இவளுக்கு ஒரு வழி பண்ணிட்டா கிருஷ்ணா ராமான்னு நான் கிளம்பிடுவேன்…"."பகவான் இருக்கார், கவலைப்படாம போங்கோ"… என ஆறுதல் சொல்லியனுப்பிவர் சீதாபதியை நோக்கி வந்தார்.."என்ன முடிவு பண்ணியிருக்கேள் சீதாபதி..வீட்ல பேசிட்டேளா"?…என கேட்டார்.."அதெல்லாம் பேசிட்டேன்…ஆமா…யாரு இந்த அம்மா…என்ன விஷயம்"? என ஆர்வம் தாங்காமல் கேட்டார் சீதாபதி.."அவங்களா..கோயிலை கூட்டி பெருக்கி சுத்தம் பண்றது…பிரசாத பாத்திரங்களை தேய்க்கிறது… என இங்கேயே பல வருஷமா வேலை பாக்குறா… வசதி இல்லாதவா…கணவரும் இல்லை… பாவம். 'ஒத்த பொண்ணை கரை சேக்கணுமே' என்ற கவலை அவாளுக்கு. கூட இருந்தாளே அவதான் அவங்க பொண்ணு… அவளுக்கு கல்யாணம் நிச்சயமாகியிருக்கு. மடத்துல சங்கத்துலன்னு ஏதாவது உதவி கிடைக்குமான்னு கேட்டிண்டிருக்கா… நானும் என்னாலானத செய்யலாம்னு முயற்சி பண்றேன்…எல்லாம் பகவான் விட்ட வழி…என்று புலம்பியவாறு…நீங்க சொல்லுங்கோ"?…என்றார்..சற்று யோசித்தவராக…"சிம்பிளா பண்ணிடலாம்னு ஒரு யோசனை"… என இழுத்தவரிடம்,."நல்லது… நான் என் நண்பர்ட்ட பேசிட்டேன். நம்பர் தரேன்…நீங்களும் சித்த பேசிடுங்கோ."."ம்' என்றவர் சட்டென "ஐயரே! அந்த பொண்ணுக்கு கல்யாண செலவுக்கு நீங்க எங்கேயும் அலைய வேணாம்…நான் ஒரு தொகையை தரேன்…பத்தலைன்னா மீதியை ஏற்பாடு பண்ணிக்கங்க…"."ரொம்ப சந்தோஷம் சீதாபதி…பகவான்தான் உங்க ரூபத்தில் வந்து அந்த அம்மாளுக்கு உதவி செய்யறார்…"என்றார் உணர்ச்சி வசப்பட்டவராக…."பெரிய வார்த்தையெல்லாம் பேசாதீங்க… நான் வெறும் கருவிதான்… அந்த ஈஸ்வரன் தான் இதை நடத்தி வைக்கிறார். இல்லைன்னா அந்த அம்மா ஏன் என் கண்ணில் படணும்… ஆக்சுவலா என் பையன் சஷ்டியப்தபூர்த்தியை விமர்சையாக பண்ணனும்னுதான் ஆசைப்படறான். எங்களுக்கென்ன… நாங்க ஆண்டு அனுபவிச்சவங்க… அது வாழ வேண்டிய குழந்தை… அவளுக்கு கல்யாணத்துக்கு உதவினா எங்க சந்ததியினருக்கு அந்த புண்ணியம் வந்து சேரட்டுமே… என்ற ஒரு சின்ன சுயநலந்தான்ன்னு வைச்சிகங்களேன். இது இந்த நிமிஷம் என் மனைவி பசங்களை கூட கலந்துக்காம எடுத்த முடிவு… ஆனா சரியான முடிவு. எங்க வீட்லயும் புரிந்துகொள்ளுவாங்கன்னு நினைக்கிறேன். அவ்வளவுதான்" என்று சாதாரணமாக சொல்லியவரை…."நீங்களும் உங்க குடும்பமும் நல்லாயிருப்பேள்னு" மனசார வாழ்த்தி குங்குமத்தை நீட்டினார் ஐயர்..அதை வாங்கி நெற்றியில் தீட்டியவர், அந்த அலங்கார பூஷனாய் இருந்த விஸ்வநாதரை கைதூக்கி வணங்க… "கிண் கிண்" என்ற மணியோசை தெய்வீகமாய் ஒலிக்க… காசி விஸ்வநாதர் கம்பீரமாய் புன்னகையுடன் வீற்றிருந்தார்.