வித்யா சுப்ரமணியம்.ஏப்ரல் 1991.உணவுக்கூடத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு உதவி புரிந்து கொண்டிருந்த மைதிலியை சாரதம்மா அழைப்பதாக ஒருவர் வந்து சொல்ல, மைதிலி தன் கையிலிருந்த துடைப்பானை ஓர் ஓரமாக சாய்த்து வைத்துவிட்டு, சாரதாம்மாவின் அறை நோக்கிச் சென்று, அறைக்குள் நுழைந்ததும் ஒரு வினாடி திகைத்து நின்றாள். சாரதாம்மாவுக்கு எதிரே அமர்ந்திருந்தது பெரியக்கா சாவித்திரி."அக்கா……!".அக்கா திரும்பினாள். உடனே எழுந்து வந்து அவளை அணைத்துக் கொண்டாள்.."உன்னை தொந்தரவு பண்ண வரல. உன் பேருக்கு ஒரு போஸ்ட் கவர் வந்தது, அதை உன்கிட்ட கொடுத்துட்டு போகலாம்னு வந்தேன்."."என்னக்கா அது?".அக்கா தன் கைப்பையைத் திறந்து கவர் ஒன்றை எடுத்து அவளிடம் நீட்டினாள். கவரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் முத்திரை இடப்பட்டிருந்தது. அதைப் பார்த்ததுமே மைதிலியின் முகம் மலர்ந்தது..அக்காவின் காலைத் தொட்டு வணங்கியபின் அதை உடனே பிரித்தாள். மிகப்பெரிய வங்கி ஒன்றில் அவளுக்கு பணி நியமனம் செய்யப்பட்டிருந்த ஆணை. கும்பகோணம் கிளையில் அவளைப் பணியில் சேரும்படி கூறியிருந்தார்கள்..கண்கள் கலங்க அக்காவின் தோளில் சாய்ந்தாள்.."தேங்க்யூக்கா"."இதுக்கெல்லாம் எதுக்கு நன்றி? நீ சொன்னாற்போல் என் வீட்டுக்கு வந்துது. உனக்கு போன் பண்ணலாம்னுதான் நினைச்சேன். ஆனா உன்னை நேரில் பார்த்தாப்போலவும் இருக்கும், அப்படியே இதை உங்கிட்ட கொடுத்துடலாம்னுதான் நானே கிளம்பி வந்துட்டேன். நல்லகாலம் தமிழ் நாட்டிற்குள்ளேயே போஸ்டிங் போட்டிருக்கு. அதுவும் கும்பகோணத்தில் போட்டது நல்லதாகப் போச்சு. என கணவரோட பாட்டி வீடு அங்க சும்மா பூட்டிதான் வெச்சிருக்கு. உன்னை அந்த வீட்டில் குடி வெச்சுட்டு உன்னோட இரண்டு நாள் இருந்துட்டு போகலாம்னுதான் நானே காரை எடுத்துக்கிட்டு நேரா வந்தேன். நான் மேடமிடம் பேசிட்டேன். நீ எல்லாவற்றையும் எடுத்து வைத்துக்கொள். நாலு மணிவாக்கில் நாம கிளம்பலாம்.".மைதிலியால் நம்பவே முடியவில்லை. இதெல்லாம் கனவா நனவா என்று வியந்தாள். கடவுள் மனது வைத்தால், ஒரு நொடியில் காட்சிகள் மாறும் போலும். 'கண்டிப்பாக வங்கித் தேர்வில் தான் தேர்ச்சி பெற்றுவிடுவோம்' என்று அவள் சந்தேகமின்றி நம்பினாள். அதுவும் கோயில் நகரமான கும்பகோணத்தில் பணியிடம் கிடைத்தது கொடுப்பினை என்றுதான் சொல்ல வேண்டும்..மைதிலி சாரதாம்மாவிடம் பணியிட ஆணையைக் கொடுத்து வணங்கினாள்.."ரொம்ப சந்தோஷம் மைதிலி. எங்க இருந்தாலும் நல்லாயிரு"."அய்யா இப்போ வீட்டில் இருப்பாரா?"."நீ முதலில் உன் பொருட்களை எடுத்து வைத்துக்கொள். மதிய உணவு ரெடியாகிடும். எல்லாரும் இருந்து சாப்பிட்டுவிட்டே கிளம்பலாம். அதுக்குப்பிறகு ஐயாவைப் பார்த்து பேசிட்டு அவரது ஆசியோடு நீங்க கிளம்பலாம்.".சாரதாம்மா வெளியில் செல்ல, மைதிலி, அக்காவை அழைத்துக்கொண்டு தனது இருப்பிடத்திற்கு வந்தாள்.."எந்த ஒரு திட்டமிடலும் இல்லாமதான் நான் வீட்டைவிட்டுக் கிளம்பினேன். ஆனால் தெய்வம் என்னை மிகவும் பாதுகாப்பான இடத்தில் கொண்டு சேர்த்தது. பிறந்த வீட்டிலிருப்பது போல ஒரு பாதுகாப்பான உணர்வை இந்த இல்லம் எனக்குத் தந்தது. அம்மா அப்பா எப்படியிருக்காங்க அக்கா? நீ இங்க வந்திருப்பது…….?"."யாருக்கும் தெரியாது. நீ கும்பகோணம் வீட்டில் தங்கப்போவதும் யாருக்கும் தெரியாது" அக்கா தூங்கிக் கொண்டிருந்த குழந்தை ரிஷியை அன்போடு பார்த்தாள். பிறகு மைதிலிக்கு துணிமணிகளை மடித்து வைப்பதில் உதவினாள்.."அம்மா அப்பாவுக்கு என் மேல கோபம் இருக்குதானே?"."கோபமில்லை. வருத்தம். எந்தவொரு தாய் தந்தைக்கும் ஏற்படும் அதிர்ச்சியும் வருத்தமும்தான் அது. நீ ஒரு முறைகூட எங்கள் யாரிடமும் உன் கணவனைப் பற்றி ஒரு சிறிய குறைகூட சொன்னதில்லை. நீ கஷ்டப்படுவதாகவும் காட்டிக்கொண்டதில்லை. இருந்தாலும் நீ அவரோடு நிம்மதியாக இல்லை என்பதை சில விஷயங்களைக் கொண்டு நாங்களாகவே புரிந்துகொள்ளத்தான் செய்தோம். ஆனால், எந்தவிதத்தில் உனக்கு உதவ முடியுமென்றுதான் எங்களுக்குப் புரியவில்லை. இதை வெறும் கணவன் – மனைவி பிரச்னைதான், விரைவில் தானாக சரியாகிவிடுமென்று எடுத்துக்கொள்வதா? நீ எதுவும் சொல்லாத நிலையில், அதற்குள் நாங்கள் மூக்கை நுழைப்பது சரியாக இருக்குமா என்ற தயக்கத்திலேயே நாங்களும் இருந்துவிட்டோம். இப்பவும் நீ வீட்டைவிட்டு யாருக்கும் தெரியாமல் கிளம்பும் அளவுக்கு என்ன நடந்தது, உங்கள் இருவருக்குமிடையில் என்ன பிரச்சனை என்று எங்களுக்கு சரியாகத் தெரியவில்லை. ஆனாலும் உன் நன்மைக்காக எதுவும் செய்யக் காத்திருக்கோம் மைதிலி.".மைதிலி கண்ணீரை அடக்கிக்கொள்ள பிரயத்தனப்பட்டாள். கண்கள் பளபளக்க அக்காவைப் பார்த்து புன்னகைத்தாள்.."பாதை தெரியாத கானகத்தில் தன்னந்தனியே சிக்கிக்கொண்ட ஒருத்தி யாருடைய தயவுமின்றிதான் அதிலிருந்து வெளியேற முயற்சிப்பாள். அதைத்தான் நானும் செய்தேன். எனக்காக யாரும் மனதால் வருந்தக்கூடாதுன்னும் நினைச்சேன். இருந்தாலும் நீங்க போலீஸ் அது இதுன்னு போய்டக் கூடாதுன்னுதான் உனக்கு மட்டும் ஒரு கடிதம் எழுதினேன். மத்தவங்களை நீ சமாளித்துக் கொள்வாய் என்று எனக்குத் தெரியும்"."அப்பா ரொம்பவே பயந்துதான் போயிட்டார். உன் மாமனார் வீட்டில் எல்லாரும் ரொம்பவே நல்லவங்கதான் என்பதாலும், அவங்களுக்கும் இதைப்பற்றி எதுவும் சரியாகத் தெரியவில்லை என்பதாலும் போலீசுக்குப் போகவும் முடியாத நிலை. அப்பாக்கு ஆனந்தன் போன் செய்து "உங்க பொண்ணு அங்க வந்திருக்காளா" என்று கேட்ட பிறகுதான் எங்களுக்குத்நீ வீட்டைவிட்டுப் போன விஷயமே தெரியும். ஆனந்தனிடம் கேட்டால், உங்க பெண் ஏன் போனா எங்க போனான்னு எனக்கென்ன தெரியும்னு பதில் சொன்னார். நல்லகாலம் எனக்கு உன் கடிதம் வந்துது. அதை அப்பாவிடமும் உங்க அண்ணியிடமும் சொன்னேன். ஏதோவொரு இடத்தில் நீ நல்லாயிருக்கன்னு தெரிஞ்சதும் அவங்க சமாதானமாயிட்டாங்க. எல்லார்க்கும் ஆனந்தின் மேலதான் கோபம்.".சாப்பாட்டு மணி அடிக்க, மைதிலி சாவித்திரியக்காவை அழைத்துக்கொண்டு உணவுக்கூடம் நோக்கிச்சென்றாள். அக்காவை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தினாள்..மூன்றுமணிவாக்கில் மாயாக்குட்டியும் வந்துவிட, பெரியம்மாவைப் பார்த்ததும் ஓடிப்போய் கட்டிக் கொண்டது குழந்தை..பிறகு அக்காவின் காரிலேயே ஜம்புலிங்கம் அய்யாவின் வீட்டிற்குச் சென்றார்கள். பணி நியமன உத்தரவை அவரிடம் கொடுத்து காலில் விழுந்து வணங்கினாள்.."ரொம்ப சந்தோஷம்மா. நல்லார்க்கணும். நேரம் கிடைக்கும்போது வந்துட்டு போ. முடியறப்போ போன் பண்ணு."."தெய்வம் மாதிரி வந்து என் தங்கைக்கு அடைக்கலம் கொடுத்து பார்த்துக்கிட்டீங்கய்யா… உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியலை.".அவர் வானை நோக்கி கையைக்காட்டி "எல்லாம் அவன் செயல்" என்றார். குழந்தைகள் இருவருக்கும் அழகான பொம்மைகள் கொடுத்து அசீர்வாதித்தார்.."என்னுடைய முதல் மாத ஊதியம் இந்த வரலக்ஷ்மி சேவா இல்லத்திற்குதான் அய்யா. இது எனக்கு இன்னொரு தாய் வீடாகிவிட்டது. அந்த மழைநாளில் பஸ்ஸில் உங்களை சந்தித்ததும், ஒரு தகப்பனின் பரிவோடு நீங்கள் எனக்கு உதவியதையும், உங்கள் சேவா இல்லத்திலேயே எங்களைத் தங்க வைத்து வயிறு நிறைய அன்னமிட்டு பாதுகாப்பும் அளித்ததையும் என் வாழ்நாள் முழுக்க மறக்கமாட்டேன்." மைதிலி குரல் நெகிழ நன்றி தெரிவித்தாள்..அய்யா வாசல்வரை வந்து வழியனுப்பினார். வரும் வழியில் இனிப்புக்கடை ஒன்றில் சேவா இல்லத்தில் இருப்பவர்களுக்குக் கொடுப்பதற்காக இரண்டு கிலோ இனிப்பும், இரண்டு கிலோ மிக்ஸரும் வாங்கிக் கொண்டாள் அக்கா.."கிளம்பறயாமே மைதிலி. நீ இங்க இருந்தவரை தினம் எனக்கு முதுகுல எண்ணெய் தேய்ச்சு இதமா உருவி விட்டதை மறக்க மாட்டேன்" – ஒரு முதியவள் அவள் கன்னத்தை வழித்து நெற்றியில் சொடக்கிட்டுக் கொண்டாள்.."மைதிலி உன்கிட்ட கொஞ்சம் பேசணும்" மீனாக்ஷியம்மா தயங்கித் தயங்கி கேட்டாள்.."சொல்லுங்கம்மா…" அவளை சற்று தள்ளி அழைத்துச் சென்றாள் மைதிலி..வாழ்க்கை விசித்திரமானது. உறவுகள் என்பது வெறும் இரத்த பந்தத்தைக் கொண்டு மட்டும் ஏற்படுவதில்லை. மலையில் உற்பத்தியாகும் நதி எங்கெங்கோ பயணித்து விழுந்து புரண்டு எங்கோ இருக்கும் கடலோடு சங்கமிக்கிறது. கடலில் தோன்றும் முத்துக்கள் ஏதோ ஒரு பதக்கத்தில் பதிக்கப்பட்டு தெய்வத்திற்கோ மனிதர்களுக்கோ அணிகலனாகிறது. வாழ்வின் பாதைகள் எப்படிச்செல்ல வேண்டுமென்று யாரும் முடிவு செய்வதில்லை. அது போகிறபோக்கில்தான் மனிதன் பயணிக்கிறான் என்றுதான் தோன்றியது மைதிலிக்கு. இரத்த உறவுகள் சுயநலமாய் மாறும்போது, அன்பைத் தேடியலையும் மனசு மற்ற யாரையோ உறவாக்கிக் கொள்கிறது..மீனாக்ஷியம்மாவின் மனசும் அன்பைத் தேடித்தான் அலைந்தது.."நான் வரமுடியாதுன்னு சொல்லியும் பையன் விடமாட்டேன்றான். அடுத்தவாரம் அவன் வந்து கூட்டிட்டு போறானாம். எனக்குப் போகப்பிடிக்கல. செலவுக்கு பயந்து 'அம்மா' என்கிற உரிமையில், தாய்மையைக்கூட மிஸ்யூஸ் செய்ய நினைப்பவனை என்ன சொல்ல? சம்பளமில்லாத ஒரு ஆயாவாத்தான் என்னைக் கூட்டிட்டு போகப்போறான். மொழி தெரியாத ஊரில், அவன் வீட்டுக்குள் அவங்களுக்கு சமைச்சுப்போட்டு, வீட்டுக்காரியங்கள் செய்துகொண்டு, குழந்தையைப் பார்த்துக்கொண்டு ஒரு கொத்தடிமை மாதிரியிருக்க எனக்குப் பிடிக்கலை. என் உயிர் போனா இந்த மண்ணில்தான் போகணும். எனக்கு விருப்பமில்லை நீ இங்க வராதேன்னு நான் எவ்ளோ சொல்லியும் கேக்காம கிளம்பி வரான் என் பையன். அவன் வரும் சமயம் நான் இங்க இருக்க விரும்பலை. நீ ஒருவார்த்தை சரின்னு சொன்னால் நான் உன்னோடு வரத்தயாராயிருக்கேன். உன் குழந்தைகளை என் சொந்த பேரக்குழந்தைகளா நினைச்சு தங்கம்போலப் பார்த்துக்கொள்கிறேன். நிச்சயம் உனக்கு எந்தவிதத்திலும் நான் பாரமாக இருக்கமாட்டேன். புது வீடும், அக்கம்பக்கமுள்ள மனிதர்களும் உனக்கு பழகும்வரை உங்களுக்குத் துணையாக ஒரு ஐந்தாறு மாசம் இருக்கேன். என்னைக் காணாமல் என் பையன் திரும்பிப் போனபிறகு மறுபடியும் இங்கேயே திரும்பி வந்துடறேன். இதுகுறித்து ஜம்புலிங்கத்திடமும், சாரதாம்மாவிடமும் சொல்லிட்டேன். அவங்களும் கொஞ்சநாளாவது உனக்கொரு துணை தேவைன்னுதான் நினைக்கறாங்க. மைதிலி விரும்பினா போய்ட்டு வாங்க, உங்க பிள்ளை வந்தா நாங்க பாத்துக்கறோம்னு சொல்றாங்க. நீ என்ன சொல்ற மைதிலி?".மைதிலி நெகிழ்ச்சியோடு மீனாக்ஷியம்மாவை அணைத்துக்கொண்டாள். "நான் செய்த பாக்கியம் அம்மா. அஞ்சாறு மாசமென்ன. நீங்க விரும்பும்வரை இருங்க.".அடுத்த அரைமணி நேரத்தில் சாவித்திரியக்காவின் கார் அவர்களை ஏற்றிக்கொண்டு கும்பகோணம் நோக்கிச்சென்றது..(தொடரும்)
வித்யா சுப்ரமணியம்.ஏப்ரல் 1991.உணவுக்கூடத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு உதவி புரிந்து கொண்டிருந்த மைதிலியை சாரதம்மா அழைப்பதாக ஒருவர் வந்து சொல்ல, மைதிலி தன் கையிலிருந்த துடைப்பானை ஓர் ஓரமாக சாய்த்து வைத்துவிட்டு, சாரதாம்மாவின் அறை நோக்கிச் சென்று, அறைக்குள் நுழைந்ததும் ஒரு வினாடி திகைத்து நின்றாள். சாரதாம்மாவுக்கு எதிரே அமர்ந்திருந்தது பெரியக்கா சாவித்திரி."அக்கா……!".அக்கா திரும்பினாள். உடனே எழுந்து வந்து அவளை அணைத்துக் கொண்டாள்.."உன்னை தொந்தரவு பண்ண வரல. உன் பேருக்கு ஒரு போஸ்ட் கவர் வந்தது, அதை உன்கிட்ட கொடுத்துட்டு போகலாம்னு வந்தேன்."."என்னக்கா அது?".அக்கா தன் கைப்பையைத் திறந்து கவர் ஒன்றை எடுத்து அவளிடம் நீட்டினாள். கவரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் முத்திரை இடப்பட்டிருந்தது. அதைப் பார்த்ததுமே மைதிலியின் முகம் மலர்ந்தது..அக்காவின் காலைத் தொட்டு வணங்கியபின் அதை உடனே பிரித்தாள். மிகப்பெரிய வங்கி ஒன்றில் அவளுக்கு பணி நியமனம் செய்யப்பட்டிருந்த ஆணை. கும்பகோணம் கிளையில் அவளைப் பணியில் சேரும்படி கூறியிருந்தார்கள்..கண்கள் கலங்க அக்காவின் தோளில் சாய்ந்தாள்.."தேங்க்யூக்கா"."இதுக்கெல்லாம் எதுக்கு நன்றி? நீ சொன்னாற்போல் என் வீட்டுக்கு வந்துது. உனக்கு போன் பண்ணலாம்னுதான் நினைச்சேன். ஆனா உன்னை நேரில் பார்த்தாப்போலவும் இருக்கும், அப்படியே இதை உங்கிட்ட கொடுத்துடலாம்னுதான் நானே கிளம்பி வந்துட்டேன். நல்லகாலம் தமிழ் நாட்டிற்குள்ளேயே போஸ்டிங் போட்டிருக்கு. அதுவும் கும்பகோணத்தில் போட்டது நல்லதாகப் போச்சு. என கணவரோட பாட்டி வீடு அங்க சும்மா பூட்டிதான் வெச்சிருக்கு. உன்னை அந்த வீட்டில் குடி வெச்சுட்டு உன்னோட இரண்டு நாள் இருந்துட்டு போகலாம்னுதான் நானே காரை எடுத்துக்கிட்டு நேரா வந்தேன். நான் மேடமிடம் பேசிட்டேன். நீ எல்லாவற்றையும் எடுத்து வைத்துக்கொள். நாலு மணிவாக்கில் நாம கிளம்பலாம்.".மைதிலியால் நம்பவே முடியவில்லை. இதெல்லாம் கனவா நனவா என்று வியந்தாள். கடவுள் மனது வைத்தால், ஒரு நொடியில் காட்சிகள் மாறும் போலும். 'கண்டிப்பாக வங்கித் தேர்வில் தான் தேர்ச்சி பெற்றுவிடுவோம்' என்று அவள் சந்தேகமின்றி நம்பினாள். அதுவும் கோயில் நகரமான கும்பகோணத்தில் பணியிடம் கிடைத்தது கொடுப்பினை என்றுதான் சொல்ல வேண்டும்..மைதிலி சாரதாம்மாவிடம் பணியிட ஆணையைக் கொடுத்து வணங்கினாள்.."ரொம்ப சந்தோஷம் மைதிலி. எங்க இருந்தாலும் நல்லாயிரு"."அய்யா இப்போ வீட்டில் இருப்பாரா?"."நீ முதலில் உன் பொருட்களை எடுத்து வைத்துக்கொள். மதிய உணவு ரெடியாகிடும். எல்லாரும் இருந்து சாப்பிட்டுவிட்டே கிளம்பலாம். அதுக்குப்பிறகு ஐயாவைப் பார்த்து பேசிட்டு அவரது ஆசியோடு நீங்க கிளம்பலாம்.".சாரதாம்மா வெளியில் செல்ல, மைதிலி, அக்காவை அழைத்துக்கொண்டு தனது இருப்பிடத்திற்கு வந்தாள்.."எந்த ஒரு திட்டமிடலும் இல்லாமதான் நான் வீட்டைவிட்டுக் கிளம்பினேன். ஆனால் தெய்வம் என்னை மிகவும் பாதுகாப்பான இடத்தில் கொண்டு சேர்த்தது. பிறந்த வீட்டிலிருப்பது போல ஒரு பாதுகாப்பான உணர்வை இந்த இல்லம் எனக்குத் தந்தது. அம்மா அப்பா எப்படியிருக்காங்க அக்கா? நீ இங்க வந்திருப்பது…….?"."யாருக்கும் தெரியாது. நீ கும்பகோணம் வீட்டில் தங்கப்போவதும் யாருக்கும் தெரியாது" அக்கா தூங்கிக் கொண்டிருந்த குழந்தை ரிஷியை அன்போடு பார்த்தாள். பிறகு மைதிலிக்கு துணிமணிகளை மடித்து வைப்பதில் உதவினாள்.."அம்மா அப்பாவுக்கு என் மேல கோபம் இருக்குதானே?"."கோபமில்லை. வருத்தம். எந்தவொரு தாய் தந்தைக்கும் ஏற்படும் அதிர்ச்சியும் வருத்தமும்தான் அது. நீ ஒரு முறைகூட எங்கள் யாரிடமும் உன் கணவனைப் பற்றி ஒரு சிறிய குறைகூட சொன்னதில்லை. நீ கஷ்டப்படுவதாகவும் காட்டிக்கொண்டதில்லை. இருந்தாலும் நீ அவரோடு நிம்மதியாக இல்லை என்பதை சில விஷயங்களைக் கொண்டு நாங்களாகவே புரிந்துகொள்ளத்தான் செய்தோம். ஆனால், எந்தவிதத்தில் உனக்கு உதவ முடியுமென்றுதான் எங்களுக்குப் புரியவில்லை. இதை வெறும் கணவன் – மனைவி பிரச்னைதான், விரைவில் தானாக சரியாகிவிடுமென்று எடுத்துக்கொள்வதா? நீ எதுவும் சொல்லாத நிலையில், அதற்குள் நாங்கள் மூக்கை நுழைப்பது சரியாக இருக்குமா என்ற தயக்கத்திலேயே நாங்களும் இருந்துவிட்டோம். இப்பவும் நீ வீட்டைவிட்டு யாருக்கும் தெரியாமல் கிளம்பும் அளவுக்கு என்ன நடந்தது, உங்கள் இருவருக்குமிடையில் என்ன பிரச்சனை என்று எங்களுக்கு சரியாகத் தெரியவில்லை. ஆனாலும் உன் நன்மைக்காக எதுவும் செய்யக் காத்திருக்கோம் மைதிலி.".மைதிலி கண்ணீரை அடக்கிக்கொள்ள பிரயத்தனப்பட்டாள். கண்கள் பளபளக்க அக்காவைப் பார்த்து புன்னகைத்தாள்.."பாதை தெரியாத கானகத்தில் தன்னந்தனியே சிக்கிக்கொண்ட ஒருத்தி யாருடைய தயவுமின்றிதான் அதிலிருந்து வெளியேற முயற்சிப்பாள். அதைத்தான் நானும் செய்தேன். எனக்காக யாரும் மனதால் வருந்தக்கூடாதுன்னும் நினைச்சேன். இருந்தாலும் நீங்க போலீஸ் அது இதுன்னு போய்டக் கூடாதுன்னுதான் உனக்கு மட்டும் ஒரு கடிதம் எழுதினேன். மத்தவங்களை நீ சமாளித்துக் கொள்வாய் என்று எனக்குத் தெரியும்"."அப்பா ரொம்பவே பயந்துதான் போயிட்டார். உன் மாமனார் வீட்டில் எல்லாரும் ரொம்பவே நல்லவங்கதான் என்பதாலும், அவங்களுக்கும் இதைப்பற்றி எதுவும் சரியாகத் தெரியவில்லை என்பதாலும் போலீசுக்குப் போகவும் முடியாத நிலை. அப்பாக்கு ஆனந்தன் போன் செய்து "உங்க பொண்ணு அங்க வந்திருக்காளா" என்று கேட்ட பிறகுதான் எங்களுக்குத்நீ வீட்டைவிட்டுப் போன விஷயமே தெரியும். ஆனந்தனிடம் கேட்டால், உங்க பெண் ஏன் போனா எங்க போனான்னு எனக்கென்ன தெரியும்னு பதில் சொன்னார். நல்லகாலம் எனக்கு உன் கடிதம் வந்துது. அதை அப்பாவிடமும் உங்க அண்ணியிடமும் சொன்னேன். ஏதோவொரு இடத்தில் நீ நல்லாயிருக்கன்னு தெரிஞ்சதும் அவங்க சமாதானமாயிட்டாங்க. எல்லார்க்கும் ஆனந்தின் மேலதான் கோபம்.".சாப்பாட்டு மணி அடிக்க, மைதிலி சாவித்திரியக்காவை அழைத்துக்கொண்டு உணவுக்கூடம் நோக்கிச்சென்றாள். அக்காவை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தினாள்..மூன்றுமணிவாக்கில் மாயாக்குட்டியும் வந்துவிட, பெரியம்மாவைப் பார்த்ததும் ஓடிப்போய் கட்டிக் கொண்டது குழந்தை..பிறகு அக்காவின் காரிலேயே ஜம்புலிங்கம் அய்யாவின் வீட்டிற்குச் சென்றார்கள். பணி நியமன உத்தரவை அவரிடம் கொடுத்து காலில் விழுந்து வணங்கினாள்.."ரொம்ப சந்தோஷம்மா. நல்லார்க்கணும். நேரம் கிடைக்கும்போது வந்துட்டு போ. முடியறப்போ போன் பண்ணு."."தெய்வம் மாதிரி வந்து என் தங்கைக்கு அடைக்கலம் கொடுத்து பார்த்துக்கிட்டீங்கய்யா… உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியலை.".அவர் வானை நோக்கி கையைக்காட்டி "எல்லாம் அவன் செயல்" என்றார். குழந்தைகள் இருவருக்கும் அழகான பொம்மைகள் கொடுத்து அசீர்வாதித்தார்.."என்னுடைய முதல் மாத ஊதியம் இந்த வரலக்ஷ்மி சேவா இல்லத்திற்குதான் அய்யா. இது எனக்கு இன்னொரு தாய் வீடாகிவிட்டது. அந்த மழைநாளில் பஸ்ஸில் உங்களை சந்தித்ததும், ஒரு தகப்பனின் பரிவோடு நீங்கள் எனக்கு உதவியதையும், உங்கள் சேவா இல்லத்திலேயே எங்களைத் தங்க வைத்து வயிறு நிறைய அன்னமிட்டு பாதுகாப்பும் அளித்ததையும் என் வாழ்நாள் முழுக்க மறக்கமாட்டேன்." மைதிலி குரல் நெகிழ நன்றி தெரிவித்தாள்..அய்யா வாசல்வரை வந்து வழியனுப்பினார். வரும் வழியில் இனிப்புக்கடை ஒன்றில் சேவா இல்லத்தில் இருப்பவர்களுக்குக் கொடுப்பதற்காக இரண்டு கிலோ இனிப்பும், இரண்டு கிலோ மிக்ஸரும் வாங்கிக் கொண்டாள் அக்கா.."கிளம்பறயாமே மைதிலி. நீ இங்க இருந்தவரை தினம் எனக்கு முதுகுல எண்ணெய் தேய்ச்சு இதமா உருவி விட்டதை மறக்க மாட்டேன்" – ஒரு முதியவள் அவள் கன்னத்தை வழித்து நெற்றியில் சொடக்கிட்டுக் கொண்டாள்.."மைதிலி உன்கிட்ட கொஞ்சம் பேசணும்" மீனாக்ஷியம்மா தயங்கித் தயங்கி கேட்டாள்.."சொல்லுங்கம்மா…" அவளை சற்று தள்ளி அழைத்துச் சென்றாள் மைதிலி..வாழ்க்கை விசித்திரமானது. உறவுகள் என்பது வெறும் இரத்த பந்தத்தைக் கொண்டு மட்டும் ஏற்படுவதில்லை. மலையில் உற்பத்தியாகும் நதி எங்கெங்கோ பயணித்து விழுந்து புரண்டு எங்கோ இருக்கும் கடலோடு சங்கமிக்கிறது. கடலில் தோன்றும் முத்துக்கள் ஏதோ ஒரு பதக்கத்தில் பதிக்கப்பட்டு தெய்வத்திற்கோ மனிதர்களுக்கோ அணிகலனாகிறது. வாழ்வின் பாதைகள் எப்படிச்செல்ல வேண்டுமென்று யாரும் முடிவு செய்வதில்லை. அது போகிறபோக்கில்தான் மனிதன் பயணிக்கிறான் என்றுதான் தோன்றியது மைதிலிக்கு. இரத்த உறவுகள் சுயநலமாய் மாறும்போது, அன்பைத் தேடியலையும் மனசு மற்ற யாரையோ உறவாக்கிக் கொள்கிறது..மீனாக்ஷியம்மாவின் மனசும் அன்பைத் தேடித்தான் அலைந்தது.."நான் வரமுடியாதுன்னு சொல்லியும் பையன் விடமாட்டேன்றான். அடுத்தவாரம் அவன் வந்து கூட்டிட்டு போறானாம். எனக்குப் போகப்பிடிக்கல. செலவுக்கு பயந்து 'அம்மா' என்கிற உரிமையில், தாய்மையைக்கூட மிஸ்யூஸ் செய்ய நினைப்பவனை என்ன சொல்ல? சம்பளமில்லாத ஒரு ஆயாவாத்தான் என்னைக் கூட்டிட்டு போகப்போறான். மொழி தெரியாத ஊரில், அவன் வீட்டுக்குள் அவங்களுக்கு சமைச்சுப்போட்டு, வீட்டுக்காரியங்கள் செய்துகொண்டு, குழந்தையைப் பார்த்துக்கொண்டு ஒரு கொத்தடிமை மாதிரியிருக்க எனக்குப் பிடிக்கலை. என் உயிர் போனா இந்த மண்ணில்தான் போகணும். எனக்கு விருப்பமில்லை நீ இங்க வராதேன்னு நான் எவ்ளோ சொல்லியும் கேக்காம கிளம்பி வரான் என் பையன். அவன் வரும் சமயம் நான் இங்க இருக்க விரும்பலை. நீ ஒருவார்த்தை சரின்னு சொன்னால் நான் உன்னோடு வரத்தயாராயிருக்கேன். உன் குழந்தைகளை என் சொந்த பேரக்குழந்தைகளா நினைச்சு தங்கம்போலப் பார்த்துக்கொள்கிறேன். நிச்சயம் உனக்கு எந்தவிதத்திலும் நான் பாரமாக இருக்கமாட்டேன். புது வீடும், அக்கம்பக்கமுள்ள மனிதர்களும் உனக்கு பழகும்வரை உங்களுக்குத் துணையாக ஒரு ஐந்தாறு மாசம் இருக்கேன். என்னைக் காணாமல் என் பையன் திரும்பிப் போனபிறகு மறுபடியும் இங்கேயே திரும்பி வந்துடறேன். இதுகுறித்து ஜம்புலிங்கத்திடமும், சாரதாம்மாவிடமும் சொல்லிட்டேன். அவங்களும் கொஞ்சநாளாவது உனக்கொரு துணை தேவைன்னுதான் நினைக்கறாங்க. மைதிலி விரும்பினா போய்ட்டு வாங்க, உங்க பிள்ளை வந்தா நாங்க பாத்துக்கறோம்னு சொல்றாங்க. நீ என்ன சொல்ற மைதிலி?".மைதிலி நெகிழ்ச்சியோடு மீனாக்ஷியம்மாவை அணைத்துக்கொண்டாள். "நான் செய்த பாக்கியம் அம்மா. அஞ்சாறு மாசமென்ன. நீங்க விரும்பும்வரை இருங்க.".அடுத்த அரைமணி நேரத்தில் சாவித்திரியக்காவின் கார் அவர்களை ஏற்றிக்கொண்டு கும்பகோணம் நோக்கிச்சென்றது..(தொடரும்)