மகேஷ் குமார்.ஊரின் நடுவே பிரதான சாலையில் ஒரு முச்சந்தியில் அமைந்திருக்கும் நூலகத்தில் உள்ளே நுழைந்ததும் வருகையாளர் பதிவேட்டில் பெயர் எழுதி விட்டுத் தாண்டினால் வலதுபக்கம் பெரிய மேசைக்குப் பின்னே நாற்காலியில் பெருமிதத்துடன் வீற்றிருப்பார் லைப்ரேரியன் ராதாமணி. ஒரு சீருடைப் போல பெரும்பாலும் வெளிர்ப் பச்சை அல்லது வெளிர் மஞ்சள் வண்ணத்தில் புடைவை. பளீரென்ற பற்கள் தெரிய மலர்ந்த புன்னகை. அருகில் போனால் எப்போதும் மெலிதான யூகலிப்டஸ் தைல வாசனை..மேசை மேல் ஒருபுறம் அன்று திருப்பப்பட்ட நூல்கள், இன்னும் பட்டியலிடப்படாத சில புதிய நூல்கள், நூல்கள் எடுத்துச் சென்றிருக்கும் உறுப்பினர் அட்டைகள் என்று எல்லாம் அதனதன் இடத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.."வா… மகேஸ்… என்ன இந்த வாரம் ஆளைக் காணோம்? அம்மா நல்லாருக்காங்களா? பள்ளிக்கூடம் போகும்போது வரும்போது பார்த்துச் சிரிக்கறதோட சரி… நின்னு பேச முடியல… அவங்க என்ன பண்ணுவாங்க… நாலரை மணிக்குத்தான் பைப்ல தண்ணி விடறாங்க. வீட்டுக்குச் சட்டுனு போனாத்தான் தண்ணி புடிச்சு வெக்க முடியும்?" நூலகம் என்பதால் சத்தமாகப் பேசாமல் மிக மென்மையாகப் பேசுவார்..சிரித்தபடி தலையாட்டிவிட்டு சென்ற முறை கொண்டு போயிருந்த நூல்களைக் கொடுத்தால், அட்டையினுள் ஒட்டியிருக்கும் சிறு தாளில் உறுப்பினர் எண், எடுத்த தேதி, திருப்பும் தேதியைச் சரிபார்ப்பார். பிறகு எண் வரிசையில் அடுக்கி வைத்திருக்கும் உறுப்பினர் அட்டைகளில் நம்முடையதைத் தேடி எடுத்துக் கொடுப்பார்.."நீ போன தடவை கேட்ட 'கதைக் களஞ்சியம்' புத்தகம் வந்துடுச்சு. ஆறாவது ரேக்ல, 3வது பலகைல பாரு" என்று தன் குறிப்புப் புத்தகத்தைப் பார்த்தவாறே சொல்லுவார்.."அப்புறம்…. இந்த மாச 'மஞ்சரி' இப்பதான் வந்தது. நீதான் முதல். படிச்சுட்டு ரேக்குல வெச்சுரு. ஜீ.டி.நாயுடு பத்தி ஒரு கட்டுரை நல்லா இருக்கு. 'கலைக்கதிர்' கூட வந்துருச்சு. நான் படிச்சுட்டு நாளைக்குத் தரேன் ".நூலகத்திற்கு வழக்கமாக வருபவர்கள் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைத்து அவர்களின் விருப்பமும் தெரிந்து பரிந்துரைப்பார். பெரும்பாலும் தினமும் வரும் மூத்த வாசகர்களுக்காக தமிழ், ஆங்கிலச் செய்தித்தாள்களை முதல் மேசையிலேயே அழகாக விரித்து வைத்து ஒவ்வொன்றின் மேலும் கூழாங்கற்களை வைப்பார். உள்ளூர் பிரமுகர்களிடம் விண்ணப்பித்து நூலகத்தில் மின்விசிறிகள் பொருத்தப்பட்டபின் இது ஒரு கூடுதல் வேலையாகப் போனது. கடந்த இரண்டு நாள் செய்தித்தாள்கள், இரண்டு இதழ்கள் எல்லாம் சுவற்றில் வரிசையாகக் கட்டப்பட்ட சணல் கயிறுகளில் தொங்க விடுவார்..உள்ளே நீண்ட கூடத்தில் ஒருபுறம் பெரிய பெரிய மேசைகளும் அமர்ந்து படிக்க வசதியாக நாற்காலிகளும் பெஞ்சிகளும். மறுபுறம் வரிசையாக நீண்ட அலமாரிகளில் நூல்கள். அட்டைகளில் நூல் வகைகள் பெரிதாக எழுதப்பட்டு அகரவரிசைப்படி அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். சுவற்றில் ஆங்காங்கே வாசித்தல் பற்றிய தலைவர்கள் அல்லது மூத்த எழுத்தாளர்களின் கருத்துகள் எழுதிய அட்டைகள். எல்லாமே ராதாமணியம்மா கைப்பட எழுதிய குண்டு குண்டான அழகான கையெழுத்தில்.."நம்ம லைப்ரரி முதல்ல தென்னமரத்து வீதில ஒரு சந்துலதான் இருந்துச்சு. நான் அங்கதான் டூட்டி ஜாயின் பண்ணினேன். அது இருக்கற இடமே பலருக்குத் தெரியாது. அப்பிடி ஒளிச்சு வெச்சா லைப்ரரிக்கு யாரு வருவாங்க? நான் டிஸ்டிரிக்ட் லைப்ரெரியன்கிட்ட சொல்லிச் சொல்லி அழுது அப்புறம் முனிசிபாலிகிட்ட சொல்லி இந்த இடத்தை வாடகை குறைச்சுக் கேட்டு இங்க வந்தோம். 4000 புத்தகத்துக்கு நாலு ரேக்கு. எப்படி வெக்கறது? சிக்கந்தர் பங்க், மணி பங்க், எல்.ஐ.சி.ன்னு அங்கங்க சொல்லிக் கேட்டு இந்த இரும்பு ரேக்கெல்லாம் பண்ண வெச்சேன். நம்ம சாரதா ப்ரஸ்லதான் சகாயமாக் கேட்டு அத்தனை புக்கையும் கார்னர் பைண்டிங் பண்ணி… அப்பிடியும் பாரு மூலையெல்லாம் நாய் காது மாதிரி தொங்குது. புக்குல உங்கக் குறிப்பெல்லாம் எழுதாதீங்க, பக்கத்தைக் கிழிக்காதீங்கன்னா கேக்கறாங்களா…ம்ம்ம்…".ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஒரு வாரம் நூலகத்தை மூடிவைத்து பராமரிப்பு உதவிகளுக்கு 10 வாசகர்களை அழைப்பார். ஒட்டடை அடித்தல், புதிய அட்டைகள் எழுதுதல், அலமாரிகள் மற்றும் நூல்களை சுத்தம் செய்தல், வாசகர்கள் அறவே கண்டுகொள்ளாத நூல்களைப் பட்டியலிடுதல், கிழிந் துபோனவற்றை பைண்டு செய்தல், எலிகள் வரும் வழிகளை அடைத்து எலி மருந்து வைத்தல் என்று பரபரப்பாக வேலை நடக்கும்.."சென்டர்ல ஃபண்டு குடுக்கறாங்கதான். ஆனா அது நம்ம 4 தடவை அப்ளை பண்ணி, 40 தடவை தபால் போட்டு அவங்க அலாட் பண்றதுக்குள்ள உம்பாடு எம்பாடுன்னு ஆயிடும். அப்புறம் பாதி புக்கை பெருச்சாளிகதான் படிக்கும். கோயமுத்தூர்ல இருந்து வருசத்துக்கு ஒரு தடவை இன்ஸ்பெக்சனுக்கே அய்யா அம்மான்னு கெஞ்சிக் கூத்தாடணும். என்ன பண்றது? உங்களை மாதிரி வாலண்டியர்களாலதான் லைப்ரரி இந்த மட்டுமாவது ஓடுது" என்று அவரளவில் டீயும் வடையும் கொடுத்து நன்றி கூறுவார்..ஆறு மாதப் பராமரிப்பு முடிந்த கையோடு மறுநாளே எங்கள் பள்ளிகளுக்குப் போய் தலைமையாசிரியரிடம் எங்களைப் பற்றிச் சிலாகித்துச் சொல்லி காலை இறைவணக்க நேரத்தில் எங்கள் பெயர்களை ஒலிபெருக்கியில் சொல்ல வைப்பார். மாலை வேளையில் ஒரு மணி நேரம் அமர்ந்து புதிய உறுப்பினர்களைச் சேர்த்துக்கொள்வார். கிராமங்களிலிருந்து வரும் மாணவர்களுக்குத் தங்கள் பெயர் எழுதப்பட்ட அட்டைகளைப் பெற்றுக் கொள்வதில் ஒரு பெருமை இருக்குமாறு பார்த்து க்கொள்வார்..மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை பெரிய கூடைகள் இரண்டில் சில நூல்களை எடுத்துக்கொண்டு பக்கத்துக் கிராமங்களில் உள்ள பள்ளிகளில் அமர்ந்து நூல்கள் வாசித்தல், கொடுத்தல், திருப்புதல் என்று அது வேறு.."சனிக்கிழமை காலைல வா மகேஸ். போன வாரம் வருடாந்திர நூலகர்கள் சந்திப்புக்கு மெட்ராஸ் போனேன். ஆனது ஆச்சு… அவங்க குடுக்கறப்ப குடுக்கட்டும்னு மூர் மார்க்கெட் போய் 100 ரூபாய்க்கு புக்ஸ் வாங்கிட்டேன். புதுசா அலாட் ஆன புக்ஸ் வேற இருக்கு. லேபிள் ஒட்டி, பேரெழுதி பட்டியல் போடணும். வேலையிருக்கு. ஒத்தாசையா இருக்கும்…".நூலகத்திற்கு வரும் புத்தகங்களின் முதல் வாசகன் என்ற தூண்டில் வலுவாக இழுக்கும். இந்திய மசிப் பேனாவால் பெயர் எழுதி, ஒட்டி, ரப்பர் ஸ்டாம்பில் சக்கரம் சுற்றி தேதி மாற்றி 'அறிமுக நாள்' என்ற இடத்தில் ஒரு அச்சடிப்பது ஒரு சுகம் என்றால், புத்தம்புது நூலாக இருந்தால் அதைப் பிரித்துப் பிரித்து மூக்கருகே வைத்து அந்த அச்சு மை வாசனையை முகர்வது பரம சுகம். மூர் மார்கெட்டில் வாங்கிய பழையப் புத்தகங்களிலோ ஏதேதோ பில்கள், கடிதங்கள் என்று முகம் தெரியாத பலரின் அந்தரங்கங்கள் தெரியவரும்..பள்ளி வாசம் முடிந்து பாலிடெக்னிக் போனபின் நூலகம் போவது அரிதாகிப் போனது.."வாப்பா… வழி மறந்து போச்சா? இப்பவாவது வந்தியே. அடுத்த மாசம் ரிடையர்மெண்ட். அவ்வளவுதான். இனிமே தேவையில்லைன்னு சொல்லிட்டாங்க" என்று சிரித்தபடி சொன்னாலும் அதன் பின்னே இருந்த சோகம் வெளிப்படையாகவே தெரிந்தது.."ஏங்க? நீட்டிப்பெல்லாம் குடுக்க மாட்டங்களா? அப்ப அடுத்தது யாரு?"."அதெல்லாம் வேண்டாம்பா. கிடைக்காது. பழம் தித்திப்புப் பழந்தான். இந்த நரிக்குத்தான் கால்ல தெம்பு இல்ல" மறுபடி சிரிப்பு..அதன் பிறகு வாழ்க்கை எங்கெங்கோ எப்படியெப்படியோ போனபின் நூலகமும், ராதாமணியம்மாவும் இன்றுவரை நினைவில் மட்டுமே..(தொடரும்).ஓவியம்: ராஜன்
மகேஷ் குமார்.ஊரின் நடுவே பிரதான சாலையில் ஒரு முச்சந்தியில் அமைந்திருக்கும் நூலகத்தில் உள்ளே நுழைந்ததும் வருகையாளர் பதிவேட்டில் பெயர் எழுதி விட்டுத் தாண்டினால் வலதுபக்கம் பெரிய மேசைக்குப் பின்னே நாற்காலியில் பெருமிதத்துடன் வீற்றிருப்பார் லைப்ரேரியன் ராதாமணி. ஒரு சீருடைப் போல பெரும்பாலும் வெளிர்ப் பச்சை அல்லது வெளிர் மஞ்சள் வண்ணத்தில் புடைவை. பளீரென்ற பற்கள் தெரிய மலர்ந்த புன்னகை. அருகில் போனால் எப்போதும் மெலிதான யூகலிப்டஸ் தைல வாசனை..மேசை மேல் ஒருபுறம் அன்று திருப்பப்பட்ட நூல்கள், இன்னும் பட்டியலிடப்படாத சில புதிய நூல்கள், நூல்கள் எடுத்துச் சென்றிருக்கும் உறுப்பினர் அட்டைகள் என்று எல்லாம் அதனதன் இடத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.."வா… மகேஸ்… என்ன இந்த வாரம் ஆளைக் காணோம்? அம்மா நல்லாருக்காங்களா? பள்ளிக்கூடம் போகும்போது வரும்போது பார்த்துச் சிரிக்கறதோட சரி… நின்னு பேச முடியல… அவங்க என்ன பண்ணுவாங்க… நாலரை மணிக்குத்தான் பைப்ல தண்ணி விடறாங்க. வீட்டுக்குச் சட்டுனு போனாத்தான் தண்ணி புடிச்சு வெக்க முடியும்?" நூலகம் என்பதால் சத்தமாகப் பேசாமல் மிக மென்மையாகப் பேசுவார்..சிரித்தபடி தலையாட்டிவிட்டு சென்ற முறை கொண்டு போயிருந்த நூல்களைக் கொடுத்தால், அட்டையினுள் ஒட்டியிருக்கும் சிறு தாளில் உறுப்பினர் எண், எடுத்த தேதி, திருப்பும் தேதியைச் சரிபார்ப்பார். பிறகு எண் வரிசையில் அடுக்கி வைத்திருக்கும் உறுப்பினர் அட்டைகளில் நம்முடையதைத் தேடி எடுத்துக் கொடுப்பார்.."நீ போன தடவை கேட்ட 'கதைக் களஞ்சியம்' புத்தகம் வந்துடுச்சு. ஆறாவது ரேக்ல, 3வது பலகைல பாரு" என்று தன் குறிப்புப் புத்தகத்தைப் பார்த்தவாறே சொல்லுவார்.."அப்புறம்…. இந்த மாச 'மஞ்சரி' இப்பதான் வந்தது. நீதான் முதல். படிச்சுட்டு ரேக்குல வெச்சுரு. ஜீ.டி.நாயுடு பத்தி ஒரு கட்டுரை நல்லா இருக்கு. 'கலைக்கதிர்' கூட வந்துருச்சு. நான் படிச்சுட்டு நாளைக்குத் தரேன் ".நூலகத்திற்கு வழக்கமாக வருபவர்கள் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைத்து அவர்களின் விருப்பமும் தெரிந்து பரிந்துரைப்பார். பெரும்பாலும் தினமும் வரும் மூத்த வாசகர்களுக்காக தமிழ், ஆங்கிலச் செய்தித்தாள்களை முதல் மேசையிலேயே அழகாக விரித்து வைத்து ஒவ்வொன்றின் மேலும் கூழாங்கற்களை வைப்பார். உள்ளூர் பிரமுகர்களிடம் விண்ணப்பித்து நூலகத்தில் மின்விசிறிகள் பொருத்தப்பட்டபின் இது ஒரு கூடுதல் வேலையாகப் போனது. கடந்த இரண்டு நாள் செய்தித்தாள்கள், இரண்டு இதழ்கள் எல்லாம் சுவற்றில் வரிசையாகக் கட்டப்பட்ட சணல் கயிறுகளில் தொங்க விடுவார்..உள்ளே நீண்ட கூடத்தில் ஒருபுறம் பெரிய பெரிய மேசைகளும் அமர்ந்து படிக்க வசதியாக நாற்காலிகளும் பெஞ்சிகளும். மறுபுறம் வரிசையாக நீண்ட அலமாரிகளில் நூல்கள். அட்டைகளில் நூல் வகைகள் பெரிதாக எழுதப்பட்டு அகரவரிசைப்படி அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். சுவற்றில் ஆங்காங்கே வாசித்தல் பற்றிய தலைவர்கள் அல்லது மூத்த எழுத்தாளர்களின் கருத்துகள் எழுதிய அட்டைகள். எல்லாமே ராதாமணியம்மா கைப்பட எழுதிய குண்டு குண்டான அழகான கையெழுத்தில்.."நம்ம லைப்ரரி முதல்ல தென்னமரத்து வீதில ஒரு சந்துலதான் இருந்துச்சு. நான் அங்கதான் டூட்டி ஜாயின் பண்ணினேன். அது இருக்கற இடமே பலருக்குத் தெரியாது. அப்பிடி ஒளிச்சு வெச்சா லைப்ரரிக்கு யாரு வருவாங்க? நான் டிஸ்டிரிக்ட் லைப்ரெரியன்கிட்ட சொல்லிச் சொல்லி அழுது அப்புறம் முனிசிபாலிகிட்ட சொல்லி இந்த இடத்தை வாடகை குறைச்சுக் கேட்டு இங்க வந்தோம். 4000 புத்தகத்துக்கு நாலு ரேக்கு. எப்படி வெக்கறது? சிக்கந்தர் பங்க், மணி பங்க், எல்.ஐ.சி.ன்னு அங்கங்க சொல்லிக் கேட்டு இந்த இரும்பு ரேக்கெல்லாம் பண்ண வெச்சேன். நம்ம சாரதா ப்ரஸ்லதான் சகாயமாக் கேட்டு அத்தனை புக்கையும் கார்னர் பைண்டிங் பண்ணி… அப்பிடியும் பாரு மூலையெல்லாம் நாய் காது மாதிரி தொங்குது. புக்குல உங்கக் குறிப்பெல்லாம் எழுதாதீங்க, பக்கத்தைக் கிழிக்காதீங்கன்னா கேக்கறாங்களா…ம்ம்ம்…".ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஒரு வாரம் நூலகத்தை மூடிவைத்து பராமரிப்பு உதவிகளுக்கு 10 வாசகர்களை அழைப்பார். ஒட்டடை அடித்தல், புதிய அட்டைகள் எழுதுதல், அலமாரிகள் மற்றும் நூல்களை சுத்தம் செய்தல், வாசகர்கள் அறவே கண்டுகொள்ளாத நூல்களைப் பட்டியலிடுதல், கிழிந் துபோனவற்றை பைண்டு செய்தல், எலிகள் வரும் வழிகளை அடைத்து எலி மருந்து வைத்தல் என்று பரபரப்பாக வேலை நடக்கும்.."சென்டர்ல ஃபண்டு குடுக்கறாங்கதான். ஆனா அது நம்ம 4 தடவை அப்ளை பண்ணி, 40 தடவை தபால் போட்டு அவங்க அலாட் பண்றதுக்குள்ள உம்பாடு எம்பாடுன்னு ஆயிடும். அப்புறம் பாதி புக்கை பெருச்சாளிகதான் படிக்கும். கோயமுத்தூர்ல இருந்து வருசத்துக்கு ஒரு தடவை இன்ஸ்பெக்சனுக்கே அய்யா அம்மான்னு கெஞ்சிக் கூத்தாடணும். என்ன பண்றது? உங்களை மாதிரி வாலண்டியர்களாலதான் லைப்ரரி இந்த மட்டுமாவது ஓடுது" என்று அவரளவில் டீயும் வடையும் கொடுத்து நன்றி கூறுவார்..ஆறு மாதப் பராமரிப்பு முடிந்த கையோடு மறுநாளே எங்கள் பள்ளிகளுக்குப் போய் தலைமையாசிரியரிடம் எங்களைப் பற்றிச் சிலாகித்துச் சொல்லி காலை இறைவணக்க நேரத்தில் எங்கள் பெயர்களை ஒலிபெருக்கியில் சொல்ல வைப்பார். மாலை வேளையில் ஒரு மணி நேரம் அமர்ந்து புதிய உறுப்பினர்களைச் சேர்த்துக்கொள்வார். கிராமங்களிலிருந்து வரும் மாணவர்களுக்குத் தங்கள் பெயர் எழுதப்பட்ட அட்டைகளைப் பெற்றுக் கொள்வதில் ஒரு பெருமை இருக்குமாறு பார்த்து க்கொள்வார்..மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை பெரிய கூடைகள் இரண்டில் சில நூல்களை எடுத்துக்கொண்டு பக்கத்துக் கிராமங்களில் உள்ள பள்ளிகளில் அமர்ந்து நூல்கள் வாசித்தல், கொடுத்தல், திருப்புதல் என்று அது வேறு.."சனிக்கிழமை காலைல வா மகேஸ். போன வாரம் வருடாந்திர நூலகர்கள் சந்திப்புக்கு மெட்ராஸ் போனேன். ஆனது ஆச்சு… அவங்க குடுக்கறப்ப குடுக்கட்டும்னு மூர் மார்க்கெட் போய் 100 ரூபாய்க்கு புக்ஸ் வாங்கிட்டேன். புதுசா அலாட் ஆன புக்ஸ் வேற இருக்கு. லேபிள் ஒட்டி, பேரெழுதி பட்டியல் போடணும். வேலையிருக்கு. ஒத்தாசையா இருக்கும்…".நூலகத்திற்கு வரும் புத்தகங்களின் முதல் வாசகன் என்ற தூண்டில் வலுவாக இழுக்கும். இந்திய மசிப் பேனாவால் பெயர் எழுதி, ஒட்டி, ரப்பர் ஸ்டாம்பில் சக்கரம் சுற்றி தேதி மாற்றி 'அறிமுக நாள்' என்ற இடத்தில் ஒரு அச்சடிப்பது ஒரு சுகம் என்றால், புத்தம்புது நூலாக இருந்தால் அதைப் பிரித்துப் பிரித்து மூக்கருகே வைத்து அந்த அச்சு மை வாசனையை முகர்வது பரம சுகம். மூர் மார்கெட்டில் வாங்கிய பழையப் புத்தகங்களிலோ ஏதேதோ பில்கள், கடிதங்கள் என்று முகம் தெரியாத பலரின் அந்தரங்கங்கள் தெரியவரும்..பள்ளி வாசம் முடிந்து பாலிடெக்னிக் போனபின் நூலகம் போவது அரிதாகிப் போனது.."வாப்பா… வழி மறந்து போச்சா? இப்பவாவது வந்தியே. அடுத்த மாசம் ரிடையர்மெண்ட். அவ்வளவுதான். இனிமே தேவையில்லைன்னு சொல்லிட்டாங்க" என்று சிரித்தபடி சொன்னாலும் அதன் பின்னே இருந்த சோகம் வெளிப்படையாகவே தெரிந்தது.."ஏங்க? நீட்டிப்பெல்லாம் குடுக்க மாட்டங்களா? அப்ப அடுத்தது யாரு?"."அதெல்லாம் வேண்டாம்பா. கிடைக்காது. பழம் தித்திப்புப் பழந்தான். இந்த நரிக்குத்தான் கால்ல தெம்பு இல்ல" மறுபடி சிரிப்பு..அதன் பிறகு வாழ்க்கை எங்கெங்கோ எப்படியெப்படியோ போனபின் நூலகமும், ராதாமணியம்மாவும் இன்றுவரை நினைவில் மட்டுமே..(தொடரும்).ஓவியம்: ராஜன்